New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


7ba.jpg

Image may contain: 2 people, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


 
 
No automatic alt text available.
कराथे वेंकटेशन्
1 hr · 
 

#தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்

தினசரி காலண்டரில் " இன்று " #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? 
ஏதேனும் விசேட நாளா?

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்..

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்

அதாவது

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??

எனவே

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்

எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்

நாம் இது பற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்

கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்து கொள்ள 
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்

புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!

ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாள் தமிழா

நன்றி: பார்த்திபன் கிருஷ்ணசாமி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 1 person, smiling, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: text

Image may contain: one or more people and text

Image may contain: 4 people, text

Image may contain: 4 people, people smiling, text

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 7 people, meme and text

 

Image may contain: 2 people, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 1 person, meme and text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 4 people, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 4 people, people smiling



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 2 people



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைரமுத்து பத்தாயிரம் முறை யோசித்திருக்க வேண்டும்!

வைரமுத்து பத்தாயிரம் முறை யோசித்திருக்க வேண்டும்!

ஆண்டாள் பற்றிக் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கருத்துக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் இந்த விவகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜனவரி 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தைப் பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும்” என்று வைரமுத்துவுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்.

தினமணி நாளிதழில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் அவர் குறிப்பிட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், “எழுதிய கட்டுரையின் தலைப்புக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கட்டுரையில் ஆண்டாளின் சிறப்புகளைப் பற்றி அடுக்கிக்கொண்டு வரும் கவிஞர் வைரமுத்து இடையிடையே சில வினாக்களைத் தொடுத்து, அதற்கு பதிலளிப்பதாகக் கூறி ஆண்டாளைக் குலமறியா பெண்ணாக சித்தரிக்க முயன்றிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

“அதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து,‘‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆண்டாளை வணங்குபவர்களையும், அவரது பாடல்களை நேசிப்பவர்களையும் காயப்படுத்தியிருக்கிறார்.

இது சர்ச்சையான பிறகு தமக்கு எதிரான கொந்தளிப்பைக் குறைக்கும் வகையில் தமது வரிகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கம் காயப்பட்ட மனங்களுக்கு எந்த வகையிலும் மருந்தாக அமையாது’’ என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்டாளைப் பற்றி அறியப்படாத நாட்டில் ஆய்வு என்ற பெயரில் அவரைப் பற்றி எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிப் பட்டம் பெற்றுச் செல்லலாம் என்று கூறியுள்ள ராமதாஸ், “ஆனால், ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தைப் பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும்” என்று சொல்லியுள்ளார்.

மேலும், “இந்தக் கருத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வைரமுத்து குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, இப்படி ஒரு சர்ச்சை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது என்கிறார் ராமதாஸ். ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

“எங்கோ இண்டியானா பல்கலைக்கழக நூலில் இடம்பெற்றுள்ள கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞருக்கு ஆண்டாள் பாசுரத்தில் இடம் பெற்றுள்ள அவரது அடையாளங்கள் தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானதுதான்” என்று சொல்லும் ராமதாஸ், “கவிஞர் வைரமுத்து தமிழுக்குக் கிடைத்த தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுவரை வேறு எவரும் சாதிக்காத வகையில் குடியரசுத் தலைவர் விருதை 6 முறையும், குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றவர் அவர். ஆண்டாளை நன்கு அறிந்த அவர் இப்படி ஓர் ஆராய்ச்சியில் இறங்கியிருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

77a.jpg

“காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு

ஆண்டாள்,  செண்டலங்கார ஜீயர் சுவாமி, கவிஞர் வைரமுத்து, வைணவர்கள் ,  பூமாதேவி, ஸ்ரீதேவி, கண்ணன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், நாச்சியார் திருமொழி, வர்க்க பேதம், ஜாதிபேதம், பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ,
Colors:
 

 

சென்னை:‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 

அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.


வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:

* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார். 

பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள். 

நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை. 

*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது. 

*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா? 

*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


சிலப்பதிகாரம் 30 வரந்தரு காதை விளக்கம் தொடுப்பு 

வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக” என,
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 80 -85 

மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்ட - மாலதி எனப்படுவாளோர் பார்ப்பனி தன் மாற்றாளுடைய குழவிக்குத் தன் முலை பால் ஊறப்பெற்று அருத்த, பழவினை உருத்துக் கூற்றுயிர்கொள்ள - அக்காலை முன்னைத் தீவினை தோன்றலானே பால் விக்க அது காரணமாக அக்குழவியின் உயிரைக் கூற்றுவன் கவர்ந்து செல்ல, குழவிக்கு இரங்கி ஆற்றாத்தன்மையள் ஆர்அஞர் எய்திப் பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு - அங்ஙனம் இறந்த குழவியின்பொருட்டு வருந்தி அதனைப் பொறாத இயல்பினளாய் மிக்க துன்பமுற்றுப் பாசண் டச்சாத்தனிடத்து வரங் கிடந்தாளுக்கு, ஆசுஇல் குழவி அதன் வடிவு ஆகி வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிகென - அன்னையே நீ மிக்க துயரொழிக வென்று கூறிக் குற்றமற்ற அக்குழவியின் உருக்கொடு வந்து, செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி - அருளை விரும்பிய சாத்தன் அவள் துன்பத்தினைப்போக்கி, பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால் காப்பியத் தொல் குடி கவின் பெற வளர்ந்து-மாலதியோடே அவள் மாற்றாளாகிய தாயிடத்தே பழைய காப்பியக் குடியிலே அழகுபெற வளர்ந்து, தேவந்திகையைத் தீவலம் செய்து - தேவந்தியை மணந்து, நால் ஈராண்டு நடந்ததன் பின்னர் - எட்டியாண்டுகள் கழிந்த பின்னர், மூவா இளநலங் காட்டி என் கோட்டத்து நீவா என்றே நீங்கிய சாத்தன் - என்றும் அழியாத தன் இளமையின் அழகினைத் தோற்றுவித்து என் கோயிற்கண் நீ வருவாய் எனக் கூறி அவளிற் பிரிந்த சாத்தனாகிய அவன் ;

http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=3200&subid=320009



-- Edited by Admin on Thursday 11th of January 2018 12:53:53 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


 

எழுதாக்கற்பின் (1)
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும் - குறு 156/5


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே 
# பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?

குறுந்தொகை



-- Edited by Admin on Thursday 11th of January 2018 01:02:16 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழை இழிவு செய்த தெருப்பாடலாசிரியன் வைரமுத்து
Permalink  
 


 வைரமுத்து சர்ச்சை : மறக்க கூடாத பாடங்கள்
வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டார் .தினமணியின் வலைத்தளத்தில் அந்த கட்டுரை இப்போது இல்லை .இருப்பினும் இந்த விவகாரம் குறித்து கீழ்கண்ட விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
1) ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு யாரை உரையாற்ற அழைப்பது என்பதை குறித்து நாம் மிகவு கவனமாக இருக்க வேண்டும் .தமிழக ஊர்களில் ஆன்மீக நிகழ்வுகள் அதிகம் நடக்கும் இடம் ராஜபாளையம் .தினமணி ஒரு பாரம்பரியமான நாளிதழ் .ஆனால் கோதை நாச்சியாரை போற்றி உரையாற்ற வைரமுத்துவை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ? அவர் வைணவரும் இல்லை வைணவ ஆய்வாளரும் இல்லை .சினிமா வெளிச்சம் ,அடிக்குரல் ஒலி ,அரைக்குறை எதுகை மோனகை சொல்லாடல்கள் ஆகியவற்றை கண்டு மதி மயங்கி இத்தகைய நபர்களை அழைத்தால் இது தான் நடக்கும் .ஒரு சமயம் குறித்து சமய அரங்கில் பேச அச்சமயத்தை பின்பற்றும் நபர்களை அழையுங்கள் .எதாவது ஜீயரையோ ,பாரம்பரிய வித்வான்களையோ அழைத்திருக்கலாமே .அது இல்லை எனில்,ராஜபாளையத்தில் இல்லாத வைணவர்களா ? ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லாத வைணவர்களா ?நண்பர் ஜகந்நாதரை போன்ற தீக்ஷை பெற்ற ராமானுஜ வைணவரை அழைக்க ஏன் தோன்றவில்லை ? பிரபலங்களை வைத்து சர்க்கஸ் செய்ய நினைத்தால் பாபம் தான் மிஞ்சும் .ஒரு சமயத்திற்கு சம்மந்தம் இல்லாத பிரபலங்கள் ,தின்றது செரிக்கபெரும் பணம் பெற்று பேசும் பள்ளி /கல்லூரி வாத்தியார்கள் ,அற்ப சொல்லாடல்களை கைக்கொள்பவர்கள் போன்றோரை எக்காலத்திலும் ஆன்மீக மேடைகளில் பேச அழைக்க கூடாது .ஒரு வேலை "ராஜ " பாளையம் என்பதால் "ராஜ" தாகம் "ராஜ " மோகம் கவிஞரை அழைத்துவிட்டார்களோ என்னவோ .அவர் பேசிய தலைப்பான "ஆண்டாள் ,தமிழை ஆண்டாள் " என்பது கூட அவர் சிந்தனையில் உதித்த தலைப்பு அல்ல என்று எண்ணுகிறேன் .அது கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் எழுதிய வரி என்று நினைவு .இந்த லக்ஷணத்தில் கவி பேரரசு பட்டம் வேறு.உரை முழுக்க விஷமத்தனமான பல கோட்பாடுகள் .என்னதான் இப்போது பா ஜ க ஆதரவாளர் வேடம் தரிக்க முயன்றாலும் தொட்டில் பழக்கம் எளிதில் போகாதே .ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் .
2) விவகாரம் இத்துடன் முடிந்து விட்டது என்று நாம் எண்ணக்கூடாது .இனி வருகிறவன் போகிறவன் எல்லாம் சகிப்பு தன்மையை குறித்து நமக்கு பாடம் எடுப்பான் .அரையும் குறையுமாக புரிந்து கொண்டு ஆய்வுகளின் அவசியம் குறித்து பேசுவார்கள் .ஏற்கனவே "Lyricist says sorry for pun on Andal"
என்று Deccan Chronicle செய்தி வெளியிட்டாயிற்று .அவர் பேசியது pun ஆ ? ஆனால் இதை வாசித்து விட்டுதான் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நம்முடன் சொற்போர் புரிவார்கள் .ஆய்வு ஆய்வு என்கிறார்கள் .அவர் பேசியது ஆய்வரங்கில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .மற்றபடிக்கு கவிஞரின் பாடல்களில் அடிக்கடி வரும் "இரட்டை திமிர்" என்னும் சொல்லை கொண்டு நம்மாலும் ஒரு உளப்பகுப்பாய்வு கட்டுரையை எழுத முடியும் என்பதை இவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் .
3) இந்த விவகாரத்தை ஹிந்துத்துவர்கள்களும் ஹிந்து அரசியல் கட்சியினரும் எதிர்க்கிறார்கள் .ஆனால் இவர்கள் இருவரும் கூறும் விளக்கங்கள் சிறிய முரணை கொண்டுள்ளன .இதனை குறித்து பார்ப்போம் :
அ ) இந்திய சமயங்கள் பலவற்றிலும் நாயகி பாவம் என்பது உண்டு .ஏன் ,கத்தோலிக்க கிறிஸ்தவம் ,சுஃபி இஸ்லாம் ஆகியவற்றில் கூட உண்டு .இதனை மதம்சார் ஆய்வுகளில் Bridal Mysticism என்போம் .மத்வாச்சாரியார் இந்த முறையிலான பக்தி மானிடர்களுக்கு விலக்கப்பட்டது என்றும் அப்சரஸ்களுக்கு (தேவ கன்னிகைகளுக்கு ) மட்டுமே ஏற்றது என்றும் கூறுகிறார் .கோதை மானுட பெண் அல்ல என்று தொல் வைணவ நூல்கள் கூறுவதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும் .ஆதலால் இத்தகைய பக்தி முறையில் எந்த விபரீத போக்கையும் ஒரு பக்தனோ நல்ல ஆய்வாளனோ காணமாட்டான் .அற்ப புத்தி தான் இதனை வக்ரமாக பார்க்கும் .
ஆ ) "தாச " பக்தி என்பதும் ஒரு வகையான பக்தி தான் .இன்றளவும் ராமானுஜ வைணவர்கள் "தாசன் " என்ற தீக்ஷ நாமத்தை கொண்டுள்ளனர் .தங்களை தாசன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளவும் செய்கின்றனர் .மாத்வர்களில் "தாச தீக்ஷை " என்று ஓன்று தனியாகவே உண்டு .கனக தாசர் ,புரந்தர தாசர் ,ஜகந்நாத தாசர் ,கோபால தாசர் போன்றோர்கள் தாச தீக்ஷை பெற்றவர்கள் தான் .கோதையின் காலத்தில் தேவ தாசியாக இருப்பது அதாவது இறைவனுக்கு அடியவளாக இருப்பது என்பது ஆபாசமானதோ கொச்சையானதோ இல்லை .அது பாலியல் தொழில் சார்ந்ததும் இல்லை .மன்னர்களது மகள்கள் அவ்வாறு இருந்துள்ளனர் .பெண்கள் மேற்கொள்ளும் துறவாக கூட அதனை கருதலாம் .ஆண்களில் கூட அத்தகைய கோவில் சார்ந்த தேவ தாசர்கள் இருந்ததாக குமரி மாவட்டத்தில் கல்வெட்டு உண்டு .அக்காலத்தில் தேவ தாசனாக,தேவ தாசியாக இருப்பது "இறைவனை தவிர வேறு யாருக்கும் ஆடி பணிய மாட்டோம் " என்ற நிலைப்பாடு .துறவறத்திற்கு ஒரு படி பின்னே .பிற்காலங்களில் இம்முறை சீரழிந்தது .இன்றளவும் தாச தீக்ஷை ஆண்கள் இடையே ஆன்மீக உச்சமாக இருப்பதை புரிந்துகொண்டால் ,இவ்வரலாறு புரியும் . எனில் வைரமுத்து கூறியதற்கு எதிராக ஏன் கண்டனம் தெரிவிக்கிறோம் .வைரமுத்து ஆன்மீக புரிதலோடு அவ்வார்த்தையை பயன்படுத்தவில்லை .பாலியல் தொழிலோடு இணைத்து ,விலை மகளிர் என்னும் பொருள்பட பேசினார் .//சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்// என்னும் அவர் வரி அவரது வக்ர சிந்தனையை தோலுரித்து காட்டுகிறது .இதனை கடுமையாக கண்டிக்க வேண்டியது ஹிந்துக்கள் மட்டும் அல்ல .இக்கால பெண் கவிஞர்களும் தான் .
3) Indiana பல்கலைக்கழக புத்தகம் : வைரமுத்துவின் உதவியாளர்கள் சரியாக குறிப்புகளை சேகரிக்கவில்லை போலும் .அவர் கூறும் Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform நூல் Indiana பல்கலைக்கழக வெளியீடு அல்ல .IIAS என்று அழைக்க படும் Indian Institute of Advanced Studies என்னும் இந்திய அரசால் பாலும் தெளி தேனும் கொடுத்து போஷிக்க படும் இந்திய உயர் ஆய்வு நிறுவனம் 1978 ல் வெளியிட்ட புத்தகம் இது .JNU ,டெல்லி பல்கலை போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் பேராசிரிய பெருந்தகைகளுக்கு சம்பளத்தோடு விடுமுறை அளித்து ஆய்வு ஊக்க தொகையும் அளித்து உயர் ஆய்வு செய்ய ஷிம்லாவில் வசதியையும் செய்து கொடுக்கும் அமைப்பு இது .பல்வேறு துறைகளை சேர்ந்த அறிவு ஜீவிகள் கலந்துரையாட வேண்டும் என்று எண்ணி Princeton பாணியில் உருவாக்க பட்ட அமைப்பு இது .சிம்லா ஆளுநர் மாளிகைக்குள் இருக்கிறது .நம் தலைவிதி .இவர்கள் ஆய்வு இத்தகைய தரத்தில் தான் இருக்கிறது .மேற்படி தொகுப்பில் உள்ள M G S NARAYANAN மற்றும் VELUTHAT KESAVAN எழுதிய Bhakti Movement in South India என்னும் கட்டுரையில் தான் சர்ச்சைக்குரிய கருத்து உள்ளது என்று எண்ணுகிறேன் .இவர்களை போன்றோர் செய்யும் அநியாயத்தால் மலையாளம் பேசுபவனை கண்டால் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளவர்கள் கல்லை எடுக்காதது மட்டும் தான் பாக்கி .இந்நூலின் தொகுப்பாசிரியர் பிரபல சரித்திர வல்லுநர் மாலிக் .எத்தகைய நிறுவனங்களையும் அறிவு ஜீவிகளையும் நாம் சோறு போட்டு வளர்க்கிறோம் என்பதை மறக்க கூடாது .
4) இந்த விஷயத்தை காதால் கேட்டதும் பதறி கோபமும் அழுகையும் ஓன்று சேர பல ஹிந்துத்துவ செயல்பாட்டாளர்களையும் தொடர்பு கொண்டு இதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தியவர் வழக்கறிஞர் ரங்கநாயகலு .உடனடியாக அறவழி போராட்டத்திற்கான முயற்சிகளையும் எடுத்தார் ."எங்கள் தாயை இப்படி சொல்லி விட்டானே " என்று ஏறத்தாழ அழுதே விட்டார் .தொடர்ந்து ஜகன் நாதன் , பேரா கனகராஜ் போன்றவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர் .ஜடாயு ,.தேவ ராஜ் போன்றோர்களும் விரிவாக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .இவர்களை எல்லாம் தான் வந்தேறி வடுகர்கள் ,மலையேறி ஆரியர்கள் என்று இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் கண்டிக்கின்றனர் .ஆனால் பாருங்கள் ,இந்த விஷயத்தில் அக்மார்க் தமிழ் உணர்வாளர்கள் பலரும் ஆழ் மௌனத்திற்கு சென்று விட்டனர் .இப்போது தெரிகிறது இவர்கள் உண்மை நிறம் .இப்போது தெரிகிறது கிருஷ்ணா தேவராயர் விட்டு சென்றவர்களின் பக்தியும் தமிழ் பிடிப்பும் .கோதை மீதான பக்தி கிருஷ்ண தேவராயருக்கும் கொஞ்சமல்லவே .
5) இணையத்தில் உலவும் தமிழ் போராளி ஒருத்தர் உண்டு .கடும் சைவரும் கூட .பஞ்சாக்ஷரத்தையே மொழி பெயர்த்து தான் சொல்வார் .தமிழ் தமிழ் என்பார் .ஆழ்வார்களை குறித்தும் நாயன்மார்களை குறித்தும் தமிழ் சமய அடிப்படையில் எழுதி தள்ளுவார் .ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு சிறு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை .போதாத குறைக்கு இதனை அந்தணர் எதிர் அந்தணர் அல்லாதவர் பிரச்சனையாக திசை திருப்ப முயன்றார் .இந்த புத்தியால் தானே பேர் அழிவுகள் வந்தன ?இருப்பினும் அதே சிறுமதி .வேறு சில தமிழ் உணர்வாளர்கள் மற்றும் இணைய ஹிந்துக்கள் "என் ஜாதிக்கக்காரன் சொன்னால் சரியாதான் இருக்கும் / என் ஜாதிக்காரனுக்கு நான் ஆதரவாகத்தான் இருப்பேன் " என்ற அடிப்படையில் வைரமுத்துவிற்கு ஆதரவு அளித்தனர் .இதனை நாம் கண்டுகொள்ள வேண்டாம் .பசும்பொன் ஐயா இருந்திருந்தால் எத்தகைய நிலைப்பாட்டினை எடுத்திருப்பார் என்று நமக்கு தெரியும் .ஜாதிக்காக மதத்தை விட்டுக்கொடுப்பது அவருக்கு செய்யும் துரோகம் என்று இத்தகையவர்களுக்கு புரிந்தால் சரி.
இந்நிகழ்வு நமக்கு போதித்த பாடங்கள் பல


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

A Point by Point reply to Vairamuthu Blasphemic article about Goddess Andal by Sri Vaishnava Sri Krishnamachari, Editor Panchajanyam magazine, Srirangam.

8-1-2018 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளிவந்த கவிஞர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்” என்ற கட்டுரைக்கான மறுப்பு.

‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்குத் தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டதாகும்.

மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக் கழகம், 2012-13-ஆம் ஆண்டு இளங்கலை பாடத்திட்டத்தில், முதலாண்டு முதல்பருவம் தமிழ்ப் பாடப்பகுதியில் தோழர் ஈ.செல்வராஜ் எழுதிய ‘நோன்பு’ என்னும் சிறுகதையில், ஆண்டாள், பெரியாழ்வார், வல்லபதேவன் ஆகியோர் இழிவுபடச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். அஆஙக மற்றும் பாஞ்சஜன்யம், கீதாசார்யன் பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்ததால், அந்த விஷமத்தனமான கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.


இன்று ‘கள்ளிக்காட்டுக் காவியக் கவிஞர்’, ‘மெட்டுக்குப் பாட்டெழுதும் ஒரு கூலிக்காரர்’, ஒரு நாத்திகர் Pseudo Sickular , மரபு வழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்த முற்பட்டுள்ளார். பூமி தேவியின் ஓர் மறுபிறப்பாக, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக ‘வேதம் அனைத்துக்கும் வித்தாகும்’ தமிழை, உலக மக்களுக்குக் கொடையாகத் தந்துள்ளார் ஆண்டாள்.

“கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு” என்ற ஆன்றோர் வாக்கின்படி வைரமுத்து போன்ற ‘வைரஸ் கிருமிகள்’, தமிழை, தமிழர் பண்பாட்டை, இழிவு படுத்த முற்பட்டுள்ளது, உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கட்டுரையாளரின் உள்நோக்கம் சிந்தனைக்குரியது. எழுத்துச் சுதந்திரம், பேச்சுத் சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது.

எழுத்தாளர் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பின்மை என்ற முகமூடிகளை அணிந்து, இவர் நிகழ்த்தியுள்ள குற்றங்கள் பல. இவரைக் கொண்டாடி இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் ஆசிரியரும் கண்டனத்திற்குரியவராவார்.

இந்தக் கட்டுரையின் நகல் தினமணி இதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மானமுள்ள தமிழினத்தைச் சார்ந்தவரானால் இந்தக் கட்டுரையை உள்ளபடியே வெளியிட வேண்டும். ஏனெனில் தினமணி இதழில் வெளிவந்த கட்டுரையில் பல கருத்துப் பிழைகள், வலிந்து பொருள் கொள்ளுதல், மரபுகளுக்கு மாறான பொருள் விளக்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் களையப்பட்டு, உண்மையை வெளிக்கொணர்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ‘சூரியனைப் பார்த்து நாய் குலைப்பது போல்’ ஏதேதோ பொருத்தமில்லாச் செய்திகளை, கட்டுரைக்குத் தேவையற்றச் செய்திகளை மேனாட்டு அறிஞர் ஒருவருடைய கருத்துக்களைத் துணைகொண்டு கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார்.

ஆனால் கவிஞர்வைரமுத்து, கனிமொழி போன்றோர் மற்றைய மதத்தினரின் மூடநம்பிக்கைகளையும், வாழ்க்கை வரலாற்றுகளையும் பற்றி வாய்திறப்பதில்லை.

இதுபோன்ற ஆய்வுகள் முற்போக்குச் சிந்தனை என்ற பெயரில் தமிழில் பெருமளவில் வெளிவருகின்றன. காரைக்கால் அம்மையார், ஔவையார், ஆண்டாள் போன்ற சமயச் சான்றோர்களை இழிவுபடுத்தி சிலர் எழுதி வருகின்றனர். இவர்களுக்கு இந்தியப் பண்பாட்டை எப்படியாவது உருக்குலைத்துவிட வேண்டும் என்று பண்பாட்டுச் சீரழவில் ஈடுபட்டிருக்கும் மற்றைய மதத்தினரின் ‘ஆசீர்வாதங்களும் உண்டு’.

உயர்ந்த நிலையில் அருளாளராகத் திகழும் தமிழ்க் கவிஞர் ஆகிய ஆண்டாளை, அவமானப்படுத்துவது, தமிழ் இனத்தை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும். இது ஒரு மனநோய். இவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று தங்கள் நோயைக் குணபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடலில் ஆடையின்றி தெருவில் திரிய வேண்டும் காலம் வரும்.

வைரமுத்துவை நோக்கிச் சில கேள்விகள்:-

1. ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, அதுவும் நெடுங்காலமாக வளர்ச்சியுற்ற ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள இந்த மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

2. “பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப் பொருளாகவும் கருதப்பட்ட 8-ஆம் நூற்றண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய், ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது” என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று.

ஆண்டாள் இறைவனுடைய பத்தினிமார்கள் ஒருவளின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார். மானுடரைப் போல வக்ர புத்தி படைத்து, பெண்களை அணைந்து கொள்பவனல்லன் ஸ்ரீமந்நாராயணன், இந்த உலகத்திலுள்ள மனிதப் பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஜீவராசிகளும், மனிதர்கள் உட்பட, அனைவரும் வாழ்வதற்கு பூமி என்ற இருப்பிடம் தேவை. அதைத் தருபவள் பூமிதேவி. செல்வம் தேவை, அதைத் தருபவள் ஸ்ரீதேவி, ஆணும் பெண்ணும் இன்பம் அனுபவிப்பதற்கு உந்து சக்தியாய் விளங்குபவள் நீளை எனப்படும் மூன்றாம் தேவிமார். ஆகவே இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகிறார்கள். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவையெல்லாம் தெரியாது. திருப்பாவைக்கும், நாச்சியார் திருமொழிக்கும் உள்ளுறைப் பொருள் என்ற ஒன்று உண்டு. ‘உதடு’ ஞானத்தின் வெளிப்பாடாகவும், பெண்ணின் ‘தடமுலைகள்’ பக்தியின் வெளிப்பாடாகவும், இடை வைராக்கியத்தின் குறியீடாகவும் என்ற உள்ளுறைப் பொருள் உண்டு. அக இலக்கியக் கோட்பாடுகளில், ‘இறைச்சி உள்ளுறை உவமம்’ என்ற குறியீடுகள் உண்டு. இதை இதை இந்தக் கவிஞர் அறியார் போலும்.

ஆண்டாளுடைய நிலை மிக உயர்ந்ததொன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால் ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து கண்ணன் மீது காதல் கொண்டாள். அந்தக் காதல் கட்டுக்கடங்காது, உணர்ச்சிகள் கொப்பளிக்க வெளிப்படும் பாடல்கள் பலவற்றை நாச்சியார் திருமொழியில் காணலாம்.

தமிழ் இலக்கிய, இலக்கண மரபில் “காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று வரையறுத்துள்ளனர் தமிழர்கள். அதற்கு உதாரணம் அகநானுறு 398-ஆம் பாடலாகும். காமம் மிகுதல் பற்றி அனைவரும் உணர்வர். படர் என்பது நினைவு. படர்ந்து செல்வதால் நேரும் துன்பத்தைக் குறிக்கும். இதற்காகவே திருவள்ளுவர், ‘படர் மெலிந்து இரங்கல்’ என்னும் ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார். கழி என்னும் உரிச்சொல் மிகுதியைக் குறிக்கும் என்பதையும், தலைவி எப்போது ‘காமம் மிக்க கழிபடர் கிளவியை’ வெளிபடுத்துவாள் என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதையே அவர் ‘அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இறையனார் அகப்பொருள் உரையில் களவு-சூத்திரம் 30-இல், “காம மிக்க கழிபடர் கிளவியும் காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும் ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவியும் இரவினும் பகலினும் நீவரு கென்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் தன்னுள் கையா றெய்திடு கிளவியும் அன்ன மரபின் பிறவும் தொகைஇத்தன்னை அழிந்த கிளவி எல்லாம் வரைதல் வேட்கைப் பொருள என்ப” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறாகும். இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை!. வைணர்களின் கொள்கைப்பபடி அந்தக் கண்ணன்தான் அனைவரும் பூசிக்கத்தக்க நிலையில் திருவரங்கத்தில் ‘கிடந்ததோர் கிடைக்கையாய்’ இருந்து வருகிறான்.

இந்தத் தமிழாசிரியர், கடவுள் வேறு, தெய்வம் வேறு, என்று பிதற்றியுள்ளார். அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். அதை இவர் அறிவார். ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ நான்காம் மண்டலம் மூன்றாம் பகுதி பக்கம் 14-இல், தெய்வம் - 1. கடவுள் (சூடா), எணிஞீ, ஈஞுடிtதூ. “தெய்வ முணாவே” (தொல்.பொருள்.18). 2. தெய்வத்தன்மை, ஈஞுதிடிணஞு ணச்tதணூஞு. “தெய்வமே கமழுமேனி” (சீவக. 1718). 3. தெய்வத்தன்மையுள்ளது. tடச்t தீடடிஞிட டிண் ஞீடிதிடிணஞு. “தெய்வத்தாற் கூறாயோ” (திணைமாலை 90).

கடவுள் - உலகத் தோற்றத்திற்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படும் நம்பப்படும் ஆற்றல் வாய்ந்த சக்தி, தெய்வம். இறைவன். 
“தெய்வம் கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. தெய்வம் என்பது பழம்பொருள், பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள், பழகாத பொருள்” என்பது வைரமுத்துவின் ஒரு புதுவிளக்கம். புதுக்கவிதை போல ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

“வர்க்க பேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்கால பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை” என்று இவர் பிதற்றியுள்ளார். இது எப்படியென்றால் சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் ஆனாலும் பல நூற்றாண்டுகளுக்கு, இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் தொடர வேண்டும் என்ற முரண்பாடான வாத்திற்கு ஒப்பானது. வர்க்க பேதம், சாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்குவதற்கு உருவாக்கப்பட்ட சொற்களாகும். எட்டாம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய தம் கடமைகளைச் செய்துவந்தனர்.

தச்சர் என்ற ஒரு வகுப்பினர் இல்லையென்றால் வீடு கட்ட முடியாது. முடி திருத்துபவர் என்ற பிரிவினர் இல்லையென்றால் அனைவரும் ஆதிவாசிகள் போன்று தோற்றமளிப்பர். அந்தணர் என்ற வகுப்பினர் இல்லையென்றால் கோள்களின் நிலையை எடுத்துக் கூறுபவர் யார்? ஒவ்வொருவர் உட்கொள்ளும் உணவுப்பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாட்டு முறைகள் இவற்றின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களின் இனப் பெருக்கங்கள் தனித்தனியே வாழலாயின.

அப்படித்தான் இந்தப் பிரிவுகள் தோன்றினவே ஒழிய, வேறு காரணங்கள் இல்லை. சமுதாயத்திற்கு அனைத்து மக்களின் செயல்பாடுகள் தேவை, ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழன்றும் உழவே தலை’ என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே ஆண்டாளின் பெருமையை விளக்குவதற்கு, வர்க்க, சாதிப்பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.

பக்தனுக்கு கடவுள் கல்லல்ல. அது மந்திரங்களால் ஜீவனூட்டப்பட்ட ஓர் தெய்வம். பல பெரியோர்களுக்கு அது நேரே காட்சியளிக்கும். நம்முடைய ஊனக்கண்களுக்கு Violet to Red வரையிலான ஒளிக் கற்றைகளைக் கொண்டு பொருள்களைப் பார்க்க முடியும். Ultra Violet Infra Red X Rays ஆகியவற்றைப் பார்க்கமுடியாது. அதனால் அதை இல்லையென்று சொல்ல முடியுமா? கடவுளர்க்கும், ஆண்டாளுக்கும் ஆழ்வார்களுக்கும் கோயில்களில் இருக்கும் சிலைகள் கல்லல்ல. பக்தர்களுடைய பார்வையில் அவை உயிருள்ள எல்லா குணநலன்களையும் கொண்ட கருணையின் வடிவாக விளங்கும் ஓர் தெய்வ உரு.

இதைப் புரிந்து கொள்ள வைரமுத்து (Thagarasippi) வால் முடியாது.

ஆகவே எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள் என்று பிதற்றியுள்ளார். எங்கள் பெரியோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இவ்வாறு கூறிவருகிறார்கள் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா? நீ கேள்வி எழுப்பிய சில மணித்துளிகளிலே உன் வீடும், உன் உயிரும் இந்த உலகில் நிலைபெற்றிருக்காது.

அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வைணவர்களின் உணர்வை நீ சீண்டிப்பார்க்கிறாய், “ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர், கருநாய் கவர்ந்த காலராக” ஆவர் என்பது வேளாளர் குல திலகமும் எங்கள் குருவுமான நம்மாழ்வார் வாக்கு. இன்று நீ புகழின் உச்சியில் இருக்கலாம், நீ அடையப்போகும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை. இது வைணவர்கள் உனக்குக் கொடுக்கும் சாபம்.

“பாகவத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒருவேறுபாடு உண்டு” என்பது உன்னுடைய பிதற்றல்களில் ஒன்று. பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்பது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று (அனுகரித்து) கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. பேரறிஞர்களான வைணவ உரை ஆசிரியர்கள், பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார், ஆயி ஆகியோர்கள் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

(இவர்களுடைய பரந்த அறிவிற்கு முன்பு நீ ஒரு மின்மினி பூச்சி, சினிமாப் பாடலில் காமச்சுவைத் தோன்ற, பெண்களின் அங்கங்களை விவரிக்கும் உனக்குத் திருப்பாவை மற்றும் நாச்சசியார் திருமொழியின் ஆழ்ந்த பொருள் நயம் எப்படிப் புலப்படும். உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி கருடனாக முடியாது. இனியேனும் வைணவ இலக்கியங்களைப் பற்றிப் பேசும் போது, கற்றறிந்த வைணவர்களிடம், பொருள் நயங்களைக் கேட்டறிந்த பிறகு பொருள் சொல்ல முற்படுவீராக! ஆகையால் வைணவ ஆசார்யர்கள் வலிந்து பொருள் சொல்கிறார்கள் என்று கூறாதே.

வள்ளி திருமணத்தில் முருகன் நேரே வந்ததுபோன்று, சீதையையும், ருக்மிணியையும், ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்து திருமணம் செய்து கொண்டான் எங்கள் கடவுள். ஆண்டாளுடைய கண்களுக்குக் கண்ணனாகக் காட்சியளித்து அவளை ஏற்றுக் கொண்டான் என்பதை மறுப்பதற்கு நீ யார்? நீ தெய்வ சக்தி படைத்தவனா? ஓர் அற்ப மானுடனான நீ, கடவுள் நேரில் வந்தானா? என்று கேட்பதற்கு என்ன தகுதியுண்டு. மானிடர்கள் இறை உருவத்தோடு கலந்ததற்கு ஆவணங்கள் உள்ளன. தியாக ப்ரஹ்மத்திற்கு இறைவன், இராமன், சீதை, இலக்குவன், மாருதி ஆகியோரோடு நேரில் வந்ததை 19-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக இன்றும் பேசப்படுகிறது. பக்தனுடைய கண்ணோட்டம் வேறு, நாத்திகனுடைய கண்ணோட்டம் வேறு.

இதற்கெல்லாம் பதில், நீ இறந்த பிறகு, யமப்பட்டணத்தில் 12-ஆதித்யர்களின் சாட்சியாக உன்னை விசாரிப்பார்கள். உன் உடல் எரிக்கப்பட்டாலும், புதைக்கப்பட்டாலும் உன்னைப் போன்ற முறுக்கு மீசையுடன் இருக்கும் ஓர் உடலில் உன் ஆத்மாவைப் புகுத்தி விசாரணை நடத்தப்படும். அப்போது நீ இதற்குரிய பதிலைப் பெறுவாய். உன்னைப் போன்று கேள்வி கேட்கும் நாத்திகர்கள் அனைவருக்கும் இதுதான் கதி (கனிமொழி உட்பட).

ஓஷோ போன்றவர்களுடைய வாதம் அனைத்திற்கும், எம் ஆசார்ய பெருமக்களான ஆளவந்தார், இராமானுசர், கூரத்தாழ்வான், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, நிகமாந்த தேசிகன், ஸ்ரீமணவாளமாமுனிகள் போன்ற அறிவிற்சிறந்த பெரியோர்கள் விடையளித்துள்ளனர்.

இது ஒன்றும் ஓர் புதிய வாதம் அல்ல. Vibgyor ஐ தாண்டிப் பார்க்க இயலாத ஊனக் கண்களுக்குக் கடவுள் கல்லாகத் தான் தெரிவார். மற்றைய பக்தர்களுக்கு அவர் சதையும், இரத்தமுமுடைய கடவுளின் வடிவாகத் தெரிவார்.

இந்தக் கட்டுரையை பொறுமையுடன் படிக்கக் கற்றுக்கொள். 9-1-2018, தந்தி TV விவாத மேடையில் பங்கு கொண்ட ஓவியாவும் இதைப் படிக்க வேண்டும். பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எல்லாம் ஓர் கட்டுப்பாட்டிற்குள்தான் அடங்கும்.

அது ஓர் வரைமுறையற்ற உரிமம் அல்ல.

அதே சமயம் மற்றைய மதத்தினரின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும், கட்டுக்கதை களையும் இவ்வாறு விமர்சிக்க, இந்த அம்மையாரும், வைரமுத்துவும் முன்வருவார்களா? தினமணி நாளிதழ் இந்த மறுப்புக் கட்டுரைய வெளியிட முன் வர வேண்டும். இல்லையெனில் இந்த நாளிதழை நடத்த தகுதியற்றவர்களாகின்றார் அவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Why Vairamuthu Gets It Wrong About Aandal

By undermining the spiritual grandeur of Aandal, Vairamuthu has only revealed his shallow understanding of Tamil social history.

It is critical to understand why Aandal is being targeted this way by those posing as intellectuals.

One of the favourite strategies of the Dravidianist and Marxist ‘writers’ in Tamil Nadu, has been writing speculative fictions on the history of venerated Hindu seers. These speculative forays are invariably negative, deeply distortionary, seldom based on robust historic scholarship and rooted in Marxist or Dravidiainist Hinduphobia but passed off under the garb of artistic licence. A circuitous process of ‘mainstreaming’ then ensues.

These works of speculative fiction is lent credence by non-Tamil academics belonging to the entrenched establishment, as the 'source material' for 'alternative' reading of history. In the next step the academics get copiously quoted by home-bred Dravidianists and Marxists as 'proof' for the distorted depiction of Hindu saints.

Recently, a Kollywood screen-writer, without an iota of respect for well-established historical facts, made a brazen claim that the epic Periya Puranam the devotional poetic narrative on the histories of the 63 Nayanmars and quintessentially Hindu responses to movements of social stagnation, was influenced by Christian stories of saints. Not to be outdone, a noted Kollywood lyricist Vairamuthu went event a step further. Rumoured to be striving for a 'Gnanapeeth' award, the influential lyricist chose the Tamil month of Markazhi to distort and degrade Aandal - one of the greatest of the Tamil poetesses and definitely one of the greatest of the mystic poetesses of humanity.

In a copybook Dravidianist rhetorical style that places very little premium on scholarship, he claimed the period in which Aandal lived was the period when Tamil society was making a transition from dharma-based society to theistic society. This typical Dravidianist fantasy, of an earlier materialistic, proto-atheistic Tamil society prior to the Bhakthi movement, has been repeatedly falsified by countless poems in the Sangham literature.

For example Vairamuthu belabours a distinction between deivam and kadavul. He regards the latter as something spiritually lower in hierarchy than the former. Then he goes on to announce that Krishna was originally a deivam and later turned into a kadavul or godhead. He implies the 'Maal' (Thirumaal) worship in ancient Tamil literature was something similar to ancestral worship as against the worship of kadavul which he implies as the worship of the Unknown. However Sangham literature like Paripadal which were composed before the so-called Bhakthi movement of the seventh century clearly show a spiritual vision of Thirumaal - which is very Vedic. Paripadal sings of Vishnu-Thirumaal thus:

Your presence is in the banyan tree with its fiery flames of prop roots which germinate and also give shade and also in the Kadamba tree; it is in the centre of the islets one finds in the good rivers; in the hills where the wind is still and in many other places similar - in every such place (where one can feel the sacredness) You are. And You are with names many and paths whatever have You as their destiny. You are in the harmony that pervades the hands of Your devotees folded in worship. You are their servant and You protect the actualizing of their endeavors.
Paripadal 4:66-73

Kadavul, which the lyric-writer of Kollywood passes for as 'unknowable' or something that could be known only by a chosen few, comes out in Sangham literature as a divine principle that manifests in the sacred spaces of day to day life.

According to various Sangham poets, the kadavul principle manifests itself in various places and varied objects including the junctions of roads, in the forests, in the base of the trees and in trees like neem, in the mountains, in the water bodies, in the royal drums etc.

Periyazhvar is in rage as  he sees Aandal wearing the garlands meant for Vishnu before sending them to Him. Later, the Lord Himself would reveal to the azhvar that he prefers only the garlands worn by Aandal.Periyazhvar is in rage as  he sees Aandal wearing the garlands meant for Vishnu before sending them to Him. Later, the Lord Himself would reveal to the azhvar that he prefers only the garlands worn by Aandal.

What is even more damaging to the spurious speculation of Vairamuthu and the general thesis of the Dravidianists is the Sangham poet, when describing the boundaries of his cultural matrix, speaks of Himalayas as where kadavul is centred. Here the words ‘Himalayas where the Gods are centred’ seems to have a pan-Indic usage as centuries later Kalidasa (4th to 5th century CE) uses the same imagery for Himalayas ‘Devatatma Himalaya’.

After suggesting such baseless binaries in a fantasy laden ancient Tamil culture, Vairamuthu reduces the spiritual grandeur of Aandal to fallacious reading limited by his shallow understanding of Tamil social history. Imagining to climb the intellectual high pedestal, the Kollywood lyricist claims that the women of seventh and eighth century were considered as mere object in the household and were locked in the house.

Then he pictures Aandal as an exceptional voice of liberation of women. He blames the traditional Sri Vaishnava commentary as ‘not doing justice’ to Aandal. Then he claims that though Periyazhvar, a Brahmin by birth, was the foster father of Aandal her caste was unknown and hence she was not accepted in the society. Along with this ‘fact’ he asks his audience to listen to another 'fact’, that in those days the society and the state had sanctioned dedicating women to temples.

So the conclusion, Vairamuthu arrives is that her poetry should be seen as a kind of protest poetry against such social phenomena. Apparently as a clinching proof, the lyricist provides a sentence from 'Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform' (Ed. Subhash Chandra Malik) published by Indian Institute of Advanced Study in 1978. Interestingly, the lyricist mentions the book as having published by ‘Indiana University of America.’

A cursory search on Google reveals that the book itself was very much an Indian publication and was not published by any American university but by Indian Institute of Advanced Study, Shimla. The last time I checked, Shimla is very much in India, Himachal Pradesh and not in Indiana, United States.

Contrary to what Vairamuthu claimed, the book he quoted was published not by Indiana University but by India based ‘Indian Institute of Advanced Study’ Shimla.Contrary to what Vairamuthu claimed, the book he quoted was published not by Indiana University but by  India based ‘Indian Institute of Advanced Study’ Shimla.

It is critical to understand why Aandal is being targeted this way by anti-Hindu and Hindu-phobic rhetoricians posing as intellectuals.

Azhvars are an interesting, unique and very important socio-spiritual phenomenon in the history of India. Usually dated from around 5th to 9th or even 10th century CE, they created the spiritual and philosophical substratum over which Sri Ramanuja formulated his Sri Vaishnavism. Alzhvars contained in their high poetry all the possibilities for individual liberty and social emancipation. It is not an accident that the Sri Vaishnavism of Sri Ramanuja rooted in the sacred literature of azhvars later gave birth to various spiritual social movements in North India including Kabir Panth, a tradition that served as an ideological milieu which subsequently inspired personalities like Dr Ambedkar.

Out of 12 alzhvars, the only female is Aandal. Her poetry combines the poetry of nature, body and spirit. There is aesthetics of highest order combined with deepest expression of bridal mysticism almost unparalleled in the world literature. Naturally, anti-Hindu and Hindu-phobic colonial-evangelical-Marxist scholarship had for the past two centuries tried to demonise and deconstruct her in every way possible - from calling her poetry just eroticism to using the outdated frameworks of Freud and Marx.

Coming back to the specific claims, how much of this is true? The marriage of a girl to the deity as in the case of Aandal is, as can be very well seen by her own poetry, very much a mystical experience. During her times, the institution of so-called devadasi was not there. It was during the Chola time that the devadasi system got institutionalised. Historian Upinder Singh in her book on the history of ancient and medieval India, writes:

Leslie Orr’s study shows that the ‘temple women’ of the Chola period were very different from the devadasis of the 20th century. ... The modern devadasi phenomenon is marked by hereditary transmission, professional skill, and temple dedication. None of these were operative in the case of the temple women of the Chola period. These women were neither temple dancers nor prostitutes. They were not married to the God, nor is there any indication that their sexual activity was exploited or confined to the temple context. Their history in the Chola period cannot be seen as a story of degeneration or decline - in fact their position got strengthened and well established over time.
A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, 2008

In fact, the bridal mysticism itself can be traced to Vedic literature itself. And it also created gender fluidity, a phenomenon that is very important in later day understanding of gender minority rights and issues.

Exchange of garlands between Aandal and Sri Ranganathar is a celebrated theme sung in many marriage festivities of Tamil Nadu.Exchange of garlands between Aandal and Sri Ranganathar is a celebrated theme sung in many marriage festivities of Tamil Nadu.

Prof Vijaya Ramaswamy Professor of ancient Indian history at JNU points this out this Vedic roots of Aandal’s bridal mysticism:

The use of the metaphor of a mystic marriage in describing the close bond between divine and human appears to be as old as the Rig Veda where one finds lines such as: “My thoughts touch you, powerful Indra, even as loving wives embrace their husbands. And again: ‘As wives embrace their own husbands, even so they embrace the faultless and generous Indra for support.’ In the Bhagavata movement of south India, besides Namma-zhwar, Manikkavachagar, the tenth-century Saivite saint, is the best example of a ‘male bride’ mystic.
Walking Naked: Women, Society, Spirituality in South India,1997

Incidentally, the book of Prof Ramaswamy was also published by Indian Institute of Advanced Study , right here in the state of Himachal Pradesh and not in Indiana, USA.

So why did Prof Subhash Chandra Malik make such an authoritative assertion of a historically wrong statement on Aandal being a devadasi. This lie is rooted in a 1960 short story penned by Daniel Selvaraj, a Marxist writer belonging to Communist Party of India. In this he had ‘re-read’ Aandal as being born in devadasi lineage.

The story described Aandal as a devadasi and she assuming spiritual 'penance' to escape the predatory attempts of then Pandya king Sri Vallabha. Periyazhvar too was depicted in the short story as a person who enjoyed the sexual favours of devadasis. The story also implied that Aandal could have been the child born out of such relations. Incidentally, in Sri Vaishnava tradition, Periyazhvar, Aandal and Sri Vallabha Pandya are all held in veneration for more than 1,000 years.

The short story was a deliberate propagandist account that intentionally falsified history. As stated earlier devadasis were not part of the temple institutions in Tamil provinces prior to 9th century. However, what is interesting is that this propagandist distortion of history had reached the ivory towers of academia and had gained a life of its own.

In 2012, the short story collection that included the story that falsified Aandal's history was sneaked into the Tamil curriculum for BA and BSc students of Manonmanian Sundranar University, Tirunelveli. “The book was published by New Century Book House, a leftist publishing house. This is another example of how the cabal of leftist authors - the left wing publishing houses and their own professors inside the curriculum committee in university function in hand in glove manner - using the government educational institutions for indoctrinating the students,” says advocate Visu who was then in Akhil Bharatiya Vidyarthi Parishad and coordinated the protests against the inclusion of this story in the curriculum.

“We did not ask for the ban of the book or did not even question the right of the author to falsify history for his propaganda “, he pointed out, “But we questioned how a propagandist literature that falsifies history was included in the curriculum for students at an impressionable age.” With such clear-headed and timely protests the short story was removed from the collection and NCBH reprinted the short story collection without that story demeaning Aandal.

Advocate Visu: remembers how a similar attempt to was made to demean Aandal.Advocate Visu: remembers how a similar attempt to was made to demean Aandal.

“It is a feeling of deja vu !” says Visu, an advocate in the district court of Nagercoil, when asked about what ongoing controversy over Vairamuthu’s speech on Aandal. "They would never cease their raids on our cultural and spiritual heritage.

These attempts, almost akin to Gaznavi - Malik Kafur raids on our cultural and literary monuments, should be protected by us with vigilance and intelligence. But tell me, why call a known Hindu baiting lyricist for a function on Aandal? That is the original sin,” he says.

One has to agree.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: 2 people, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

போலி திராவிடம்

திருச்சியில் நடந்த நாத்திக மாநாட்டில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது பகுத்தறிவு பற்றி மற்ற உறுப்பினர்களுக்கு ‌பாடம்‌ எடுத்ததை விவரிக்கிறார். இவர்களின் நாத்திகம் இந்து‌‌ மத கடவுள்களுக்கு ‌மட்டுமே பொருந்தும் மறந்தும் ‌கூட‌ திராவிட போலிகள்‌ மாற்று மதத்தினரை பேசியது இல்லை. பகுத்தறிவு திராவிடம் என்று சொல்லி இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்ற போகிறார்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பக்தியும் ஆன்மிகமும் தான் தமிழை வளர்த்தன. தமிழின் சுவையை நமக்கு பருகச் செய்தன. பூவும் அதன் மணமும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அதுபோல தமிழும் பக்தியும் பிரித்து பார்க்க இயலாதவை.

குறை மனமுள்ள வைரமுத்து போன்றவர்களால் இவ்வாறு பிரித்துப் பார்த்து பிரிவினை விஷத்தை தூவிவிட முடியும் என்றே கருதத்தோணுகிறது.

எங்கள் அன்னை ஆணடாள் தமிழையும் கண்ணனையும் தன் பக்தியால் ஆண்டவள். அவள் கண்ணனைத் தவிர வேறொரு ஆடவனை கனவிலும் நினையாதவள்.

அன்னை ஆண்டாளை **********யோடு ஒப்பிட்டு பேசியவர் வக்கிரம் செறிந்த பக்தியற்ற ஒழுக்க்கேடான சிந்தனைக்கு சொந்தக்காரராக இருப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சொரணை கொள் பக்தனே. கண்டிக்க மறந்தால் இனிவரும் காலம் உன்னை பக்தி செய்யவும் விடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திரு.வைத்திய நாதன் அவர்களுக்கு 

 

தாங்கள் தெரிவித்த படி, எனது எதிர்ப்பை, வைரமுத்துவிற்கு எழுதி  இருக்கிறேன். இதனை ஏதும் மாற்றம் செய்யாது வெளியிட வேண்டுகிறேன்.

             *

சமீபகாலமாய் தமிழ் கூறும்  நல்லுலகின் "சலசலப்பும் , கிசு கிசுப்பும் - " வைரமுத்து, ஆன்மீகத்திற்கு  மாறி வருகிறாராமே ?" - என்பதுதான் . ஏனென்றால் இதுநாள் வரை, நாத்திக சிகாமணிகளுக்கு நாவிதம் செய்து வந்த வைரமுத்துவின் நா , இப்போது ஆத்திகத்திற்கு ஆலவட்டம் போடுவது போல் அசைகிறது.  ஆனால் உண்மையாதெனில் நாத்திக வியாபாரம் இனி விலை போகாது என்பதால், அவர் இப்போது ஆன்மீக வாசலில் கையேந்த வந்திருக்கிறார் என்பது தான் .

 

ஆனால் இதை உணராத சிலர் அவரை உற்சாக​ப்​

படுத்தி உசுப்பேற்று கின்றனர். ​ ​அதில் பாவம்..​தினமணியும் திண்டாடுகிறது ... என்றாலும் இந்த நாத்திக ஞமலியை நன்னீராட்டி , நடுப்பக்க (வீட்டில்) வைத்து அழகு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதன் சான்றுதான் அவரது " தமிழை ஆண்டாள் " கட்டுரை .

 

ஆண்டாளின் அருந்தமிழை அலச வேண்டியவர் அனாவசியமாய்  அறுதியிட்டும்  உறுதியிட்டும் போற்றப்படும் 

​ஆண்டாளின் வரலாற்றை 

அனுமானம் என்பதாய் அசிங்கப்படுத்தி யிருக்கிறார் . இந்த வஞ்சக குசும்பு,

கட்டுரையின் பல இடங்களில் துர்நாற்றம் அடிக்கிறது . இந்த கெட்ட வாடையின் உச்சம் தான் ஏதோ ஒரு மிலேச்சன் எழுதியதாய் சொல்லும் அமெரிக்க பல்கலை கழக வாசகம்.

 

சங்ககால பாவை ​​நோ​ன்புக்கும், பாவையின் பாவை ​​நோ​ன்புக்கும்

 உள்ள அடிப்படை வேறுபாடு புரியாமல் துவங்கும் இக்கட்டுரையில் மூன்றாம் பாசுரத்தின் முதல் வரி விடுத்து,

உயிரியல் வாழ்வியல் என்றெல்லா​ம் வர்ணம் பூசி​,​ உத்தமன் பேர் பாடும் இறை​யியல் உண்மையை இலைமறை காயாய்  மறைக்க முயல்வது,

அவரது மடமையை மட்டும் தான் பறை சாற்றுகிறது .

 

வைணவம் ஏதோ ஏழாம் நூற்றாண்டின் பின்னால் எழுச்சி

​யுற்றது ​என்று எழுதியிருப்பதில் கவிஞரின் அறியாமை பட்டவர்தனமாய் பல் இளிக்கிறது.​  ​இறைநெறியும் அறநெறியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை சொல்ல​த் ​

துணிவும் இல்லை , ஆன்மீக​ப் ​பணிவும் இல்லை

​ இவருக்கு.  இறைவனின் வாத்சல்யத்திற்கும் சௌலப்யத்திற்கும் காருண்யத்திற்கும் காலஅளவை காட்டும் நீங்கள்​, ​

முதலில் இதிகாசங்களையும் புராணங்களையும் படியுங்கள் புலவரே !​

   ​தெய்வம் வேறாம் கடவுள் வேறாம்

​..​என்றெனில் தெய்வம் தொழா அள் என்னும் குறளுக்கு எப்படி குரல் கொடுப்பீர்கள் ?

 

"கன்னி கழியாத பெண்ணின் பாலியல் உரையாடல்​"​ என்று கோதை தமிழை கொச்சைப்படுத்தும் உங்களின் சொற்களில் வன்மம் மட்டுமே விரவி இருக்கிறது... என்றாலும்,

நடிகையின் உடலை பார்த்து ரசித்து கவிதை வியாபாரம் செய்யும்  உங்களி​டத்தில்​,​  இலக்கிய சுவையையும்  ஆன்மீக உணர்வையும் எதிர்பார்த்தது

​எங்களது ​தவ​​று தான் . புரட்சி​ப்​ பெண் என்றும் புதுமை​ப்​

பெண் என்றும் ஆண்டாளை சொல்ல எத்தனிக்கும் உங்கள் எச்சி​ல் ​

சொற்களில் நயவஞ்சகம் மட்டுமே நர்த்தனம் ஆடுகிறது . பெற்ற தாயின் மார்பகத்தை காமுறக்காணும் கயவனின் கண்களில்  ஆண்டாளின் ஆன்மீகம் எப்படி தெரியும்

​ கவிஞரே ...​​ ?​

 

ஆண்டாளின் காதல் சங்ககால மங்கையரின் அகநானூற்று காதல் அல்ல. பசலையில் தவிக்கும் பத்தினியின் பைந்தமிழ் அல்ல

​புலவரே..... ​ஆனால் 

நீங்கள் வினாக்கள் எனும் போர்வையில் வினவ துடிப்பதில்,

விரசம் மட்டுமே விரவி கிடக்கிறது . "குருதி , இறைச்சி " என்ற சொற்களின் பயன்பாடு, இடம் பொருள் ஏவல் அறியாத கல்லாதான் ஒட்பத்தின் பூரண வெளிப்பாடு .

 

கோதை தமிழை கோலம்  போடும் கோணத்தில் , " சில வினாக்கள் " என்னும் போர்வையில் உங்கள் விஷமத்தனத்தால் நாத்தீக விஷத்தை விதையாய் விரவி இருக்கிறீர்கள் . உங்களது வஞ்சக நெஞ்சின் வஞ்ச புகழ்ச்சியில் பாவை தமிழை பாராட்டி இருக்கிறீர்கள் .

 

வேற்று மதத்து நாட்டவன் கழிப்பிடத்தில் கொட்டி கிடந்த கழிவினை கிளறி அதற்கு கற்பூரம் காட்டி அற்புதம் என்கிறீர்கள் . முடிவில் கடந்த கால நிகழ்காலம், இறந்த கால எதிர்காலம் எனும் வார்த்தை ஜாலத்தால் வாசகர்களை 

​ வஞ்சித்து இருக்கிறீர்கள் ..​

திட்டமிட்டு கோதை தமிழை வட்டமிட்டு​,​

மட்டம் தட்டிவிட்டு,

யாதும் அறியாதது போல், ​"​விட்டு விடுங்கள்​"​ என்று மன்னிப்பு கோருகிறீர்கள் .

கவிஞரே ​....​

ஒன்றை நினைவில் நிறுத்துங்கள்

​....​ இனி எழுதுவதையும் நிறுத்துங்கள்

​....​ ஏனெனில் உங்களை போன்ற பசுத்தோல் புலிகளை, மன்னிக்க

நாங்கள் மஹாத்மாக்களும் அல்ல

​....​மடையர்களும் அல்ல... 

​இனி மன்னிக்கவும் மாட்டோம்

​...​தண்டிக்க தயங்கவும் மாட்டோம் .

 

இப்ப​டிக்கு ​ 

கவிஞர்  எஸ் .ச​தீ​ஷ் குமார் 

வழக்கறிஞர் 

சென்னை உயர்நீதி மன்றம் 

அலை பேசி எண் : 98410​ ​98606



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாளை பற்றி தவறாக பேசிய வைரமுத்துக்கு வைஷ்ணவ அசே௱ஷியன் கண்டனம்🌻 

------+++++++++++++++++

 

🙏🏼ஸ்ரீ ஆண்டாளை பற்றி தவறான கருத்துக்களை பேசிய கவிஞர் வைரமுத்துக்கு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ அசே௱ஷியன் தலைவர் எஸ் கே௱தண்டன்  கண்டனம் தெரிவித்துள்ளார் 

அதில்  பெரியாள்வாரின் நூல்களையே௱ ,ஆண்டாளின் திருப்பாவையே௱, நாலாயிரம் திவ்யபிரதந்தையே௱ 

கிருஷணராய தேவராயர் எழுதிய அமுக்தாமாலிகா என்ற நூலிலையே௱ படித்து ஆராயமல் தவறான கருத்தை கூறிய வைரமுத்து  வைஷ்ணவ நெறியாளர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் 

இந்துக்கள் மார்களி மாதம் என்றாலே ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையை பாடி பத்தி பரவசம் அடைவது மட்டுமல்ல உலக மக்கள் சுபேட்சமும் உயிரினங்கள் சுபேட்சமும் பிற உயிர்களை துன்புறத்தாமல் அன்பெனும் அரு மருந்தாக மக்கள் வாழவேண்டும் என்பதே 

மார்கழி யின் சிறப்பு௱கும் 

இன்றும் வரலாற்று ஆசிரியர்கள் அற நெறியாளர்களும் தத்துவ ஞானிகளும் மார்களி மாதம் என்றால் அது ஆண்டாள் அருளிய திருப்பாவை தான் நினைவுக்கு வரும் 

கே௱தை ஆண்டாள் தமிழை ஆண்டாள் ,,,ஆகவே ஆண்டாளை பற்றி தவறாக பேசுவது தமிழர்களை பற்றியும் தமிழ் வரலாறை பற்றி தவறாக பேசுவது பே௱ன்றதாகும் 

ஆகவே வைரமுத்து வரலாறை தெரியாமல் 

தவறாக  பேசியதிற்கு வைஷ்ண அசே௱ஷியன் தனது கண்டனத்தை தெரிவிக்கிறது என செய்தியாளர்களிடையே அதன் தலைவர் கே௱தண்டன கூறினார்  உடன், செயலாளர் முத்துகிருஷ்ணன்,பெ௱ருளாளர்,ராம்மே௱கன் 

உள்ளிட்டே௱ர்கள் உடன் இருந்தனர்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிராமணர்கள் கோவில்களில் பிச்சை எடுக்கிறார்கள். - விசிக 

 

#அட_இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவளம்?....

 

1.பிராமணர்களுக்கு வழிப்பறி திருட்டு தெரியவில்லை...

 

2. கௌரவமாக கடைகாரர்களை மிரட்டி பணம் பறிக்கத் தெரியவில்லை...

 

3. கவுண்டனை வெட்டு கவுண்டச்சியைக் கட்டு... தேவனை வெட்டு தேவச்சியைக் கட்டு எனப் பேசி கலவரம் செய்யத் தெரியவில்லை... 

 

4.உன் புருசனை டைவர்சு பண்ணிட்டு என் கூட வந்துவிடு என ஏமாற்றி பொம்பளை சொத்தை அபகரிக்கத் தெரியவில்லை...

 

5.தென்னந்தோப்பில் தேங்காய் திருடப் போய் தோட்ட உரிமையாளர் துரத்தியதால் தென்னை மரத்தில் இருந்து இறங்கி ஒடி  அருகில் உள்ள உப்பனாற்றில் குதித்து, கரையேற முடியாமல் இறந்த இருவரின் பிணத்தை வைத்து கொண்டு அரசை மிரட்டி 50 லட்சம் பணமும் அரசாங்க வேலையும் வேண்டும் என்று சாலை மறியல் செய்யத் தெரியவில்லை...

 

6. நாடகக் காதல் மூலம் சிறுமிகள் முதல் முதிர்கன்னிகள் வரை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கடத்தி கட்டப்பஞ்சாயத்து பண்ணி பணம் பறிக்கத் தெரியவில்லை...

 

7.எவன் அரசியலுக்கு வந்தாலும் முதல் ஆளாய்ப்போய் துண்டு போடத் தெரியவில்லை....

 

இவ்வளவு வழிகளையும் விட்டு கோயில் கைங்கரியம் செய்து தட்டேந்தி பிச்சை எடுக்க வேண்டுமா எனக் கேளுங்கள் விசிக பாய்ஸ்......

 

அதுசரி.அப்புறம் எதற்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று போராடுகிறீர்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 1 person, smiling



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைரமுத்துவின் உளறல்களுக்குப் பதில்

உளறல் 1. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை.  இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

 

பதில் – ஆண்டாள் ஏதோ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற சாதாரண வாழ்வியல் விதியை வலியுறுத்துவதற்காகவே மார்கழி நோன்பு நோற்றாள் என்றும், அதற்காகவே திருப்பாவை பாடிக் கண்ணனை வணங்கினாள் என்றும் கவிஞர் கூறுகிறார்.

ஆண்டாள் ஏன் மார்கழி நோன்பு நோற்றாள்? திருப்பாவைக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்கள், “ஆண்டாள் கண்ணனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் தவித்தாள். எனினும் ஒருநாள் கண்ணன் வந்து தன்னை மணப்பான் என்ற திட நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது. அதனால் கண்ணன் வரும் வரை தற்காலிகமாகத் தன் பிரிவாற்றாமையைத் தணித்துக் கொள்ள, ஆயர்பாடியில் வாழ்ந்த கோபிகைகளின் மார்கழி நோன்பைப் பின்பற்றித் தானும் நோன்பு நோற்றாள். நோன்பு நோற்றால் அது வருத்தத்தில் தவிக்கும் தன் மனத்துக்கு ஒரு மாறுதலாக இருக்கும் எனக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆய்ப்பாடியாகக் கருதி, தன்னையே ஒரு கோபிகையாகக் கருதி, தன் தோழிகளை ஆயர்களாகக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள திருமுக்குளத்தையே யமுனை நதியாகக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலையே நந்தகோபனின் வீடாகக் கருதி, வடபத்ரசாயீ பெருமாளையே கண்ணனாகக் கருதி மார்கழி நோன்பு நோற்று அதை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையாக அருளினாள்” என்று கூறியுள்ளார்கள்.

இந்த  நுட்பம் எதையும் அறியாமல், அவளது பக்தி, பிரிவாற்றாமை இவற்றின் ஆழத்தை உணராமல், வெறும் அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதை வலியுறுத்த மார்கழி நோன்பு நோற்றாள், திருப்பாவை பாடினாள் என்பது உளறலின் உச்சம்.

 

உளறல் 2. பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.

 

பதில் – இது அதை விடப் பெரிய உளறல். “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று சொல்லி, கண்ணனை மட்டுமே தன் கணவனாக வரித்தாள் ஆண்டாள் என்று கவிஞரும் கட்டுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். அதே சமயம், அவள் நோற்ற திருப்பாவை நோன்பு கண்ணனைக் கணவனாக அடைவதற்காக அல்ல, நல்ல கணவன் கிடைக்கத் தான் என்று அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்.

 

உளறல் 3. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.  "நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,  திங்கள் மும்மாரி பெய்யும்;  நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்;  வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும்,  ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'  - இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

 

பதில் – நாடு நலம் பெற வேண்டும் என்று ஆண்டாள் கூறியதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வெறும் உயிரியல், வாழ்வியல், சமூகவியலை மட்டும் ஆண்டாள் முன்நிறுத்தவில்லை. திருப்பாவை மூன்றாம் பாசுரத்தில் “நாங்கள் நம் பாவைக்கு... வாங்கக் குடம் நிறைக்கும்...” முதலிய வரிகளைச் சொன்ன கவிஞர் அதற்கு அடுத்த வரி தனக்குச் சாதகமாக இல்லாமையால் விட்டுவிட்டார். “நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” என்று அடுத்த வரியில் ஆண்டாள் கூறுகிறாள்.

நீங்கும் செல்வமாகிய நீர் வளம், நில வளம், பால் வளம் முதலியவற்றை விரும்பிய ஊரார்க்கு அவை கிடைக்கட்டும். அந்த நாட்டு நலம் மட்டுமின்றி நீங்காத செல்வமான கண்ணன் எங்களுக்குக் கிட்ட வேண்டும். கிருஷ்ணாநுபவம் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறாளே. அது ஏன் கவிஞரின் கண்களில் படவில்லை?

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,  திங்கள் மும்மாரி பெய்யும்;  நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்;  வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும்”

ஆனால் அவை அனைத்தும் நீங்கும் செல்வங்கள். கண்ணன் தான் நீங்காத செல்வம். அந்தச் செல்வம் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.

பக்தி இலக்கியத்தில் உள்ள பக்தியையே ரசிக்கத் தெரியாதவர்கள் அவற்றைப் பற்றிப் பேசினால் இப்படித் தான் ஆகும்.

[11:49 AM, 1/12/2018] +91 85269 99902: உளறல் 4 –

“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்” (திருப்பாவை - 19)

என்ற சொல் ஆண்டாளுக்கு அருளப்பட்டதா? அல்லது அக உணர்ச்சியின் அத்து மீறலா?

உரைகாரர்கள் இதற்கு வேறு பொருள் கூறித் தம் தீராப் புலமையின் திமிர் காட்டுவார்கள். “குத்து விளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்ச சயனமாவது தேவ, திர்யக், மநுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள். மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்” என்று பிரபந்த ரக்ஷையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும், அதை நயம் பாராட்டல் என்று சொல்ல இயலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்ல இயலாது. இதற்கு நேர் பொருளே ஏற்புடைத்து.

கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில் கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டும் என்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.

 

பதில் – ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல்.

“கோடும் புருவத்து உயிர்கொல்வை மன்நீயும்

பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து

வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்”

இந்தப் பாடலில் காம ரசம் உள்ளதே. சமணத் துறவியான இளங்கோ அடிகளுக்கு இப்பாட்டை எழுத யார் அதிகாரம் தந்தார்கள். இது அத்துமீறல் இல்லையா என்று கவிஞர் கேள்வி எழுப்பலாமே.

பதில் யாதெனில், காவியத்தில் ஒரு விஷயத்தை வருணிக்கும் போது, காட்சி எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத் தான் வருணனைகள் வரும். கோவலனும் மாதவியும் தனிமையில் இருக்கும் காட்சியை வருணிக்கையில் இளங்கோவடிகளாகிய சமணத்துறவி இவ்வாறு பாடுகிறார்.

அதுபோல, திவ்ய தம்பதிகளான கண்ணனும் நப்பின்னையும் ஏகாந்தமாக இருக்கும் காட்சியை வருணித்துள்ளாள் ஆண்டாள். தமிழ் இலக்கியத்தில் அதுவரை யாருமே இதை வருணிக்காதது போலவும், ஆண்டாள் ஏதோ அத்துமீறியது போலவும் கவிஞர் கூறுகிறார். இந்தக் கவிஞர் திரைப்படங்களில் பலப்பல இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதியவர் என்பதால் அவரது சிந்தனை அந்தத் திசையில் செல்கிறது போலும்.

இந்தப் பாசுரத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆசிரியர்கள் யாருமே வைரமுத்து கூறுவது போலப் பொருளைத் திரித்து, மடக்கி எல்லாம் எழுதவில்லை. நேரடியான பொருளைத் தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த நேர் அர்த்தத்தையே கவிஞர் தவறாகக் கூறிவிட்டார்.

உரையாசிரியர்கள் காட்டும் பொருள் யாதெனில் – கண்ணனும் நப்பின்னையும் ஏகாந்தமாக அறையில் எழுந்தருளியுள்ளார்கள். ஆண்டாளும் தோழிகளும் அறைக்கு வெளியே இருந்து அவர்களை எழுப்புகிறார்கள். அப்போது ஆண்டாள் கண்ணனிடம், "குத்து விளக்கு உள்ளே எரிந்து கொண்டிருக்க, குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தைக் கொண்டு செய்யப்பட்ட கால்களை உடைய கட்டில் மேல் மென்மை, வெண்மை, அழகு, குளிர்ச்சி, நறுமணம் என்ற ஐந்து குணங்கள் கொண்ட பஞ்ச சயனத்தில் உன் திருமார்போடு நப்பின்னையின் திருமார்பை அணைத்தபடி சயனித்துள்ள மலர்மார்பனே! வாய் திறந்து ‘அஞ்சேல்’ என்ற வார்த்தையை எங்களைப் பார்த்துச்சொல்! நீ கதவைத் திறக்காவிடிலும் பரவாயில்லை, வாயையாவது திற!” என்று வேண்டுகிறாள்.

ஆனால் இந்த அர்த்தத்தை மாற்றி அருவருக்கத்தக்க வகையில் கண்ணன் வாய் வைக்க இடம் தேடி வேறொரு இடத்தில் அதை வைத்தான் என்றெல்லாம் பொருள் சொல்வது நியாயமும் அல்ல, நயமும் அல்ல.

இங்கே இப்பாடலில் சிருங்கார ரசம் உண்டு. ஆனால் பெருமாளும் தாயாரும் திருமார்போடு அணைத்தபடி சயனித்துள்ளார்கள் என்ற அளவில் தான் உள்ளதே தவிர, இவரது சினிமா கற்பனைகள் போல வேறெதுவும் இல்லை.

இப்படிப்பட்ட சிருங்கார ரசங்கள் பக்தி இலக்கியங்களில் உண்டு. அது எதற்காக என்றால், உலக இன்பங்களிலேயே எப்போதும் ஈடுபட்டிருக்கும் மனிதனின் மனம் இந்த திவ்ய தம்பதிகளின் தெய்வீகக் காதல் ரசத்தைக் கண்டாலாவது அற்ப சுகங்களை விட்டுவிட்டு, இறைவனிடத்தில் ஈடுபடத் தொடங்கும் என்பதே. இறைவனைக் காண மாட்டேன் எனச் சொல்லும் நம் கண்கள் இந்தக் காம ரசத்தைக் காட்டினாலாவது இறைவனைப் பற்றிய விஷயத்தில் ஈடுபடாதா என்ற ஒரு ஏக்கத்தில் தான் சிறந்த அடியார்களும் இத்தகைய பாடல்களை அமைத்துள்ளனர்.

கண்ணன் கோபிகைகளுடன் இணைந்து நடனமாடிய ராச லீலையைத் தினமும் படிப்பவர்களுக்கு சந்நியாச ஆசிரமம் நன்கு சித்திக்கும், உலகப்பற்றுகள் அனைத்தும் விலகும் என்று அண்மையில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சாரியாரும் கூறியுள்ளார்.

[11:49 AM, 1/12/2018] +91 85269 99902: வைரமுத்துவின் உளறல்களுக்குப் பதில்கள்

 

உளறல் 5. மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். எவரிடம் கேட்பது அவனுடன் உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

 

பதில் - கருப்பூரம் நாறுமோ பாசுரம் lip kiss பற்றிச் சொல்லும் பாடல் என்று விமர்சகர் ஞாநியும் (பெயரளவில் மட்டுமே ஞாநி) ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கூறுகிறார்.

இது உலகியலில் நாம் காணும் காதலோ முத்தமோ அல்ல. இறைவனின் அழகு எப்படிப் பட்டதென்றால், அவனது அழகைக் கண்டவுடன் ஆண்களும் கூடத் தங்கள் ஆண் தன்மையை மறந்து பெண்களாக மாறிப் பாடல்கள் பாடுவதுண்டு. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோரும் முறையே பராங்குச நாயகி, பரகால நாயகி என்ற பெயர்களில் நாயகிகளாகப் பாடல்கள் பாடியுள்ளார்கள். அதிலும் சிருங்கார ரசம் உண்டு.

ஆனால் இது உலகில் காணும் சிருங்கார ரசம் அல்ல. உபநிடதம் எம்பெருமானைத் தியானிக்கும் முறையைக் கூறும் போது, “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:” என்கிறது. அதில் ‘நிதித்யாஸிதவ்ய:’ – ‘நிதித்யாஸனம்’ என்பதற்குப் பொருள் யாதெனில், காதலுடன் இடைவிடாது இறைவனைத் தியானிக்க வேண்டும் என்பது. நாயக-நாயகி பாவத்தில் இறைவனைப் பாடும்போது நிதித்யாஸனம் என்று உபநிடதம் சொல்வது போலக் காதலுடன் அவனைத் தியானிக்க எளிதாக இருப்பதால், அந்த பாவத்தை உயர்ந்த மகான்கள் கைக்கொள்கிறார்கள்.

இதற்கும் உலகில் நாம் காணும் காதல், முத்தம் இவற்றுக்கும் சம்பந்தமே இல்லை.

பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்றார் வள்ளுவர். உலகப் பற்றுகளை ஏல்லாம் அறவே அறுப்பதற்காக இறைவனின் திருவடிகளைப் பற்றுகிறார்கள் அடியார்கள். அப்படி உலகப்பற்றற்ற அந்த அடியார்களின் அமுத மொழிகளைக் கீழ்த்தரமான விஷயங்களோடு ஒப்பிடுவது மிகத்தவறு.

உலகியலிலுள்ள காதலையும் முத்தத்தையும் அறவே வென்று, வெறுத்து, ஒதுக்கி இறைவனே கதி என்று அவனைக் காதலிக்கும் அடியார்களை மிகவும் தரந்தாழ்ந்த முறையில் விமர்சிப்பது பெரும் பாவம்.

கோபிகைகளுடன் கண்ணன் இணைந்து உறவாடுகிறான் என்னும் போது, அதில் சரீர ரீதியான எந்த உறவும் கிடையாது. விந்து வெளியேறுதல் போன்ற நிகழ்வுகள் எதுவும் அதில் ஏற்படுவதில்லை என ரிஷிகளே தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றி இருக்கும் நிலையைத் தான் கோபிகைகள் கண்ணனுடன் இணைந்திருக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டாளும் அந்த கோபிகைகளுள் ஒருத்தியாகவே தன்னைக் கருதித் தெய்வீகக் காதலில் திளைத்து இப்பாடலைப் பாடியுள்ளாள்.

இதே மாதிரி பொருளில் ஒரு சுலோகத்தை நாராயண பட்டத்திரியும் நாராயணீயத்தில் பாடியுள்ளார்.

“ஆபிபேயம் அதராம்ருதம் கதா வேணுபுக்த ரஸ சேஷம் ஏகதா

தூரதோ பத க்ருதம் துராசயேத்யாகுலா முஹுரிமாஸ் ஸமாமுஹந்”

கோபிகைகள் கண்ணனின் புல்லாங்குழலைப் பார்த்து, நீ மட்டும் எப்போதும் கண்ணனின் திருவாய் அமுதத்தைப் பருகுகின்றாயே, அந்தப் பாக்கியம் எங்களுக்குக் கிட்டவில்லையே என்று பொறாமையுடன் சொல்வதாகக் கேரளாவைச் சேர்ந்த பட்டத்திரியும் பாடியுள்ளது நோக்கத்தக்கது.

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்ற பாசுரத்தையும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் நெருங்க வேண்டும் என்பதையே நயம்படச் சொன்னதாகத் தான் பார்க்க வேண்டுமே ஒழிய இதில் லௌகிகக் காமம் எதுவும் கிடையாது.

 

உளறல் 6. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாளைக் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. ___ (அந்த வார்த்தைகளை எழுத மனம் வரவில்லை)

 

பதில் - தமிழை ஆண்டாள் என்ற உங்கள் தலைப்புக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம். அவளது தமிழைச் சரியாக ஆராயத் தெரியாமல் தாறுமாறான அர்த்தம் சொன்னவர் அவளைப் பற்றியும் தாறுமாறாகப் பேசுவது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று.

யாரோ ஒரு மிலேச்சன் செய்த ஆய்வின் பெயரைச் சொல்லிக் கொண்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு வார்த்தை சொல்வது பெரும் தவறு.

நம் பாரத தேசத்தில் தோன்றிய ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம், திவ்யசூரி சரிதம் முதலிய தமிழ் நூல்களில் ஆண்டாளைப் பற்றியுள்ள செய்திகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்தவன் செய்த ஆராய்ச்சியைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்வதில் நியாயமே இல்லை.

ஆண்டாளின் குலத்தைப் பற்றிப் பேசுவோர்க்கு ஒரு செய்தி.

நம் மேல் கருணை கொண்ட பூமிதேவி, வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் 5 வயது குழந்தையாக ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றினாள்.

மணவாள மாமுனிகள் என்ற வைணவ குரு 'உபதேச ரத்தின மாலை' என்ற நூலின் 22-ம் பாடலில் இதைப் பாடியுள்ளார்:

"இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத

வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளார் ஆய்"

ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து பிறந்தவர்களுக்குத் தானே குலம் உண்டு. கர்ப்ப வாசமே செய்யாத ஆண்டாளின் குலம் என்னவென்று எப்படி கூறமுடியும்?

வேதாந்த தேசிகர் இயற்றிய கோதா ஸ்துதியின் முதல் சுலோகத்தில் "கமலாம் இவான்யாம்" - மகாலட்சுமியின் மறுவடிவம் என்று ஆண்டாளைப் போற்றுகிறார். எனவே உலகிலுள்ள அனைத்து இனத்தவர்க்கும் அன்னை அவள். அவளை இகழ்வது தன் தாயை இகழ்வதற்குச் சமம்.

அந்த அன்னை உலகுக்கே தந்தையான கண்ணனைக் குறித்து எழுதிய பக்தி இலக்கியத்தைப் போய் காமப் பாசுரம் என்று சொல்வது மடமை அல்லவா?

மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் எப்போதும் திருப்பாவயையே சொல்லிக் கொண்டிருப்பார், அதனால் திருப்பாவை ஜீயர் என்று அவர் அழைக்கப் பட்டார். காமப் பாசுரமாக இருந்தால், அதை ஒரு துறவி படிப்பாரா?

உபநிஷத், கீதையில் உள்ள கருத்துக்கள் யாவும் திருப்பாவையில் உள்ளதால், திருப்பாவை "கோதோபநிஷத்" என்று போற்றப்படுகிறது. அந்தக் கற்பூர வாசனை அறியாது ஆண்டாள் பாசுரங்களை விமர்சிக்கலாமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த வைரமுத்து என்பவன் யார். கருணாநிதி என்னும் கபோதிக்கு பெண்கள் சப்ளை செய்யும் அவனுக்கு லஞ்சம் கொடுக்க ஆட்களை பிடித்து வரும் ஒரு ப்ரோக்கர்தானே. முதலாளி கருணாநிதிதானே? முதலாளி போலத்தானே அவனது பிம்பும் இருப்பான். அந்த முதலாளியின் புத்திதானே எச்சிலை இலை நாய்க்கும் இருக்கும்? இப்படி வைரமுத்து பேசியதில் ஆச்சரியம் ஏதுமில்லையே? ஏற்கனவே இதை விட மோசமாக கருணாநிதி எழுதியிருக்கிறானே? ஆகவே முதலில் அவனை செருப்பால் அடித்து விட்டு அவனது ப்ரோக்கர் வைரமுத்துவையும் அப்படி அடித்த பிஞ்ச செருப்பால் அடியுங்கள். கருணாநிதி என்ன எழுதினான்? படியுங்கள்: வைரமுத்து எதையும் புதிதாகச் சொல்லவில்லை. அவனை திட்டுபவர்கள் அனைவரும் அதை விட ஆயிரம் மடங்கு திட்ட வேண்டியது இந்தக் கருணாநிதி என்னும் கழிசடையையே. அவன் சொன்னதைத்தான் இன்றைக்கு இந்த வைர முத்து வாந்தியெடுத்திருக்கிறான். திட்டம் போட்டு இந்தக் கும்பல்கள் இதை பரப்பி வருகிறார்கள்:

கருணாநிதிக்குத் தெரிந்தது எல்லாம் கொக்கோகப் பத்திரிகைகளின் தரத்தில் எழுதும் ஆபாச எழுத்துக்கள் மட்டுமே. அவர் ராமானுஜரைப் பற்றி எழுதினாலும் அது அந்தத் தரத்தில் மட்டுமே இருக்கும். ஏனென்றால் கருணாநிதியின் புத்தி தரம் எல்லாம் அந்த மட்டுத்தான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கருணாநிதி ஏற்கனவே ஆண்டாள் பற்றி எழுதியதைப் படியுங்கள். ஆண்டாள் பற்றி கருணாநிதி எழுதியது கீழே. இதை தலைச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இரண்டு பெரும் தமிழ் இலக்கியவாதிகள் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்த இலக்கியவாதிகளின் தரத்தை நான் சொல்ல வேண்டியது கிடையாது. இருவரும் சாகித்ய அகடமி விருது பெற்ற இலக்கியவாதிகள் படித்து விட்டுக் காறி உமிழலாம்.

ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள் இந்தக் கழிசடை கருணாநிதி மீது நீங்கள் காறி உமிழும் முன்னால் ப்ரோக்கர் வைரமுத்துவை செருப்பால் அடிக்கும் முன்னால் நீங்கள் காறி உமிழ வேண்டிய செருப்பால் அடிக்க வேண்டிய இன்னும் ரெண்டு அயோக்கிய நாய்கள் உள்ளன அதில் ஒருவன் பெயர் சா.கந்தசாமி இன்னொருத்தன் பெயர் பிரபஞ்சன் அந்த இரு கபோதிகளும் இந்த ஆபாசக் கதையை மிகச் சிறந்த இலக்கிய படைப்பு என்று கணையாழி என்னும் இன்னொரு குப்பை பத்திரிகையின் கருணாநிதி சிறப்பு மலரில் எடுத்து வெளியிட்டவர்கள். ஆக வைரமுத்துவை வரிசையில் வர்ச் சொல்லி விட்டு அதற்கு முன்பாக செருப்பால் அடிக்கப் பட வேண்டிய சொறி நாய்கள் இந்த மூவருமே

------------------------------------------------------------------------------

 

 

கருணாநிதியின் சரோஜாதேவி ரகக் கதைகளில் முக்கியமானதான ஒன்றாகக் கருதப் படும் குப்பைத் தொட்டி என்ற சிறுகதை (!!!!) யில் இருந்து ஒரு பகுதி. ஒரு குப்பைத்தொட்டி தன் அனுபவங்களைக் கூறுகிறது. இனி மேலெ படியுங்கள்.

------------------------------
குத்து விளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து நேரம் இரவாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டி விடலாம். இரவு நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள் ஓர் அம்மை. பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காதுதான் என்று நாம் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடும் அளவில் பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. வர்ணனையைக் கவனிப்போம். குத்து விளக்கின் ஒளியில் கட்டில் ஒன்றுத் தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா அதன் மீது மெத்தென்ற மஞ்சம். மல்லிகை முல்லை ரோஜா மலர்கள் தூவப் பட்ட மஞ்சம். கட்டில் மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரம் இருந்தாலும் பால்நிலவாய் ஒரு மங்கை அந்தப் படுக்கையுல் இருக்கிறாள். அவள் கொந்தலர் பூங்குழல் கொண்ட கோதை பெயரோ நப்பின்னை. கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற முடியாதே? அந்த மங்கையின் மாங்கனியான மார்பினில் மீது தன் மார்பகத்தை வைத்தவாறு பிரரர்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். அவன் ஆடவனா இல்லை இல்லை ஆண்டவன். ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை. மலர்மார்பா வாய் திறந்து எனக்கருள்வாய். என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார். அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக்குள்ளேயே போய் விடுகிறார். போனதும் கண்ட காட்சிதான் குத்து விளக்கு எரியும் அறையின் கோலாகலக் காட்சி. குத்துவிளக்கெரியல் கோட்டுக்கால் கட்டிலின் மேல் மெத்தன்ற மஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வவத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய் இந்தப் பாடலத்தான் அந்தக் கசங்கிய தாளில் படித்துப் பார்த்தேன். ஐயோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடையோரம் அப்படியே சப்ரமஞ்ச மஞ்சமாகி விடக் கூடாதா? எனக்குப் பக்கத்திலேயே ஒரு பெண் குப்பைத் தொட்டி வந்து சேரக் கூடாதா? அப்படி ஒரு அதிர்ஷடம் வந்தால் அவளோடு நான் எப்படி இன்பமாக இருப்பேன்? கண்மனி என்று அழைப்பதற்குப் பதிலாக குப்பை மணி என்று அழைப்பேன். இப்படியாக காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது.

யார் பெற்ற பெண்னோ? பெற்றவர்கள் தூக்கி எறிந்து விட்டுப் போய் விட்டார்கள். யாரோ ஒரு ஆழ்வார் எடுத்து வளர்க்கிறார். கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன் தான் கலந்தாரோ தெரியவில்லை

ஒரு பாட்டு படித்து விட்டே இந்தப் பாடு படுகிறேனே எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பயித்தியக்கார விடுதியில்தான் கொண்டு போய் வைக்க வேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த வைரமுத்து என்பவன் யார். கருணாநிதி என்னும் கபோதிக்கு பெண்கள் சப்ளை செய்யும் அவனுக்கு லஞ்சம் கொடுக்க ஆட்களை பிடித்து வரும் ஒரு ப்ரோக்கர்தானே. முதலாளி கருணாநிதிதானே? முதலாளி போலத்தானே அவனது பிம்பும் இருப்பான். அந்த முதலாளியின் புத்திதானே எச்சிலை இலை நாய்க்கும் இருக்கும்? இப்படி வைரமுத்து பேசியதில் ஆச்சரியம் ஏதுமில்லையே? ஏற்கனவே இதை விட மோசமாக கருணாநிதி எழுதியிருக்கிறானே? ஆகவே முதலில் அவனை செருப்பால் அடித்து விட்டு அவனது ப்ரோக்கர் வைரமுத்துவையும் அப்படி அடித்த பிஞ்ச செருப்பால் அடியுங்கள். கருணாநிதி என்ன எழுதினான்? படியுங்கள்: வைரமுத்து எதையும் புதிதாகச் சொல்லவில்லை. அவனை திட்டுபவர்கள் அனைவரும் அதை விட ஆயிரம் மடங்கு திட்ட வேண்டியது இந்தக் கருணாநிதி என்னும் கழிசடையையே. அவன் சொன்னதைத்தான் இன்றைக்கு இந்த வைர முத்து வாந்தியெடுத்திருக்கிறான். திட்டம் போட்டு இந்தக் கும்பல்கள் இதை பரப்பி வருகிறார்கள்:

கருணாநிதிக்குத் தெரிந்தது எல்லாம் கொக்கோகப் பத்திரிகைகளின் தரத்தில் எழுதும் ஆபாச எழுத்துக்கள் மட்டுமே. அவர் ராமானுஜரைப் பற்றி எழுதினாலும் அது அந்தத் தரத்தில் மட்டுமே இருக்கும். ஏனென்றால் கருணாநிதியின் புத்தி தரம் எல்லாம் அந்த மட்டுத்தான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கருணாநிதி ஏற்கனவே ஆண்டாள் பற்றி எழுதியதைப் படியுங்கள். ஆண்டாள் பற்றி கருணாநிதி எழுதியது கீழே. இதை தலைச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இரண்டு பெரும் தமிழ் இலக்கியவாதிகள் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்த இலக்கியவாதிகளின் தரத்தை நான் சொல்ல வேண்டியது கிடையாது. இருவரும் சாகித்ய அகடமி விருது பெற்ற இலக்கியவாதிகள் படித்து விட்டுக் காறி உமிழலாம்.

ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள் இந்தக் கழிசடை கருணாநிதி மீது நீங்கள் காறி உமிழும் முன்னால் ப்ரோக்கர் வைரமுத்துவை செருப்பால் அடிக்கும் முன்னால் நீங்கள் காறி உமிழ வேண்டிய செருப்பால் அடிக்க வேண்டிய இன்னும் ரெண்டு அயோக்கிய நாய்கள் உள்ளன அதில் ஒருவன் பெயர் சா.கந்தசாமி இன்னொருத்தன் பெயர் பிரபஞ்சன் அந்த இரு கபோதிகளும் இந்த ஆபாசக் கதையை மிகச் சிறந்த இலக்கிய படைப்பு என்று கணையாழி என்னும் இன்னொரு குப்பை பத்திரிகையின் கருணாநிதி சிறப்பு மலரில் எடுத்து வெளியிட்டவர்கள். ஆக வைரமுத்துவை வரிசையில் வர்ச் சொல்லி விட்டு அதற்கு முன்பாக செருப்பால் அடிக்கப் பட வேண்டிய சொறி நாய்கள் இந்த மூவருமே

------------------------------------------------------------------------------

 

 

கருணாநிதியின் சரோஜாதேவி ரகக் கதைகளில் முக்கியமானதான ஒன்றாகக் கருதப் படும் குப்பைத் தொட்டி என்ற சிறுகதை (!!!!) யில் இருந்து ஒரு பகுதி. ஒரு குப்பைத்தொட்டி தன் அனுபவங்களைக் கூறுகிறது. இனி மேலெ படியுங்கள்.

------------------------------
குத்து விளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து நேரம் இரவாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டி விடலாம். இரவு நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள் ஓர் அம்மை. பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காதுதான் என்று நாம் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடும் அளவில் பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. வர்ணனையைக் கவனிப்போம். குத்து விளக்கின் ஒளியில் கட்டில் ஒன்றுத் தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா அதன் மீது மெத்தென்ற மஞ்சம். மல்லிகை முல்லை ரோஜா மலர்கள் தூவப் பட்ட மஞ்சம். கட்டில் மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரம் இருந்தாலும் பால்நிலவாய் ஒரு மங்கை அந்தப் படுக்கையுல் இருக்கிறாள். அவள் கொந்தலர் பூங்குழல் கொண்ட கோதை பெயரோ நப்பின்னை. கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற முடியாதே? அந்த மங்கையின் மாங்கனியான மார்பினில் மீது தன் மார்பகத்தை வைத்தவாறு பிரரர்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். அவன் ஆடவனா இல்லை இல்லை ஆண்டவன். ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை. மலர்மார்பா வாய் திறந்து எனக்கருள்வாய். என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார். அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக்குள்ளேயே போய் விடுகிறார். போனதும் கண்ட காட்சிதான் குத்து விளக்கு எரியும் அறையின் கோலாகலக் காட்சி. குத்துவிளக்கெரியல் கோட்டுக்கால் கட்டிலின் மேல் மெத்தன்ற மஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வவத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய் இந்தப் பாடலத்தான் அந்தக் கசங்கிய தாளில் படித்துப் பார்த்தேன். ஐயோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடையோரம் அப்படியே சப்ரமஞ்ச மஞ்சமாகி விடக் கூடாதா? எனக்குப் பக்கத்திலேயே ஒரு பெண் குப்பைத் தொட்டி வந்து சேரக் கூடாதா? அப்படி ஒரு அதிர்ஷடம் வந்தால் அவளோடு நான் எப்படி இன்பமாக இருப்பேன்? கண்மனி என்று அழைப்பதற்குப் பதிலாக குப்பை மணி என்று அழைப்பேன். இப்படியாக காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது.

யார் பெற்ற பெண்னோ? பெற்றவர்கள் தூக்கி எறிந்து விட்டுப் போய் விட்டார்கள். யாரோ ஒரு ஆழ்வார் எடுத்து வளர்க்கிறார். கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன் தான் கலந்தாரோ தெரியவில்லை

ஒரு பாட்டு படித்து விட்டே இந்தப் பாடு படுகிறேனே எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பயித்தியக்கார விடுதியில்தான் கொண்டு போய் வைக்க வேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தயவு செய்து பொறுமையாகப் படித்து, நம் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அழிக்க எப்படியான கூட்டுச் சதிகள் நடக்கின்றன என்று திரு.@Thirumalai Sa சார் விளக்கமாக எழுதியுள்ளார். அவசியம் முழுமையாகப் பொறுமையாகப் படியுங்கள்.
----------------------------------------------------------------------------------
வைரமுத்துவும் இண்டியானா ஹார்வார்ட் யுனிவர்சிடிகளும்
--------------------------------------------------------------------------------

வைரமுத்து என்னும் காசுக்கு தமிழை விற்கும் ஈன ஜென்மம் தன் ஆண்டாள் உரையில் இண்டியானா பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வருடத்தில் யாரோ ஒரு வட இந்தியன் எங்கோ கிறுக்கி வைத்ததைத் தேடிப் பிடித்து கொளுத்திப் போட்டு விட்டுப் போகிறான்

அதை முன் வைத்து நான் எப்படி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் திட்டமிட்டு எழுதி வைக்கப் படும் விஷப் பிரசாரங்கள் பின்னர் இந்தியாவின் வரலாறாக மாற்றப் பட்டு அதுவே நிலைத்து விடும் என்பதற்கு இந்த இண்டியானா பல்கலை ரெஃபரென்ஸ் ஒரு உதாரணம் ஆகவே வரவிருக்கும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தை ஆதரிக்காதீர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன்

உடனே ஒரு இலக்கிய நண்பர் கிளம்பி வந்து ஆண்டாள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா அது ஒரு லெஜண்ட் தானே? வைரமுத்து சொன்னபடியாகவும் இருக்கலாம் அல்லவா என்று அவனுக்கு வக்காலத்து வாங்கினார். அவருடன் பேசுவது அர்த்தமற்ற ஒரு வெட்டி வேலை என்பதினால் நான் மேலே பேசவில்லை

இப்பொழுது அந்த ஆராய்ச்சிக் கட்டுரை உண்மையிலேயே இண்டியானா யுனிவர்சிடியில் எழுதப் பட்டது இல்லை என்றும் சிம்லாவில் உள்ள இடதுசாரி வக்கிரர்களினால் உருவாக்கப் பட்ட ஒன்று என்றும் அதற்கு ஆதாரம் தமிழகத்தின் செல்வராஜ் என்ற ஒரு கம்னியுஸ்டு கபோதி என்றும் தெரிய வந்துள்ளது. எப்படியோ இண்டியானா யுனிவர்சிடி பேர் அந்த தளத்தில் தென்பட்டதால் வைரமுத்து அதை அமெரிக்க ஆராய்ச்சி என்று சொல்லி விட்டான். அவன் தெரியாமல் சொல்லியிருந்திருக்க வாய்ப்பில்லை. இன்று வரை அப்படி சொன்னது தவறு என்றும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தெரிந்தே வேண்டும் என்றேதான் அந்த அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயரைப் போட்டுள்ளான். காரணம்?

காரணம் எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்க்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்பதினால்தான். இது ஒரு அடிமை நோய்.

இதற்கு முன்பாக நண்பர் சந்திரமெளலி பீ. சிதம்பரத்தை தான் வெகுவாக மதிப்பதாகவும் அவனது பாராளுமன்ற உரைகளை அமெரிக்காவில் உள்ள சவுத் ஏஷியா ஸ்டடிஸ்களில் ஆராய்ச்சி செய்வதாகவும் சொன்னார். நான் பதிலுக்கு வெளியே சொல்லாதீர்கள் சிரிக்கப் போகிறார்கள் என்றேன். இப்படித்தான் எதற்கும் ஒரு அமெரிக்க முத்திரையைக் குத்தி விட்டால் அது உசத்தி அதுவே இறுதியான ஆதாரம் என்று ஆகி விடுகிறது. அப்படிச் சொல்லப் படுவதை நம்புவதற்கு தமிழகத்தில் பல படித்த மூடர்கள் கூடத் தயாராக இருக்கிறார்கள்.

ஆக இங்கு நாகர்கோவிலில் செல்வராஜ் என்ற ஒரு கம்னியுஸ பொறுக்கி முதலில் ஆண்டாளைப் பற்றி எழுதுகிறான் அதற்கு முன்பாக கருணாநிதி எழுதுகிறான். பின்னர் அது சிம்லாவில் உள்ள கம்னியுஸ கடன்காரன்களினால் நடத்தப் படும் தண்ட இன்ஸ்ட்டியூட் ஒன்றில் செல்வராஜ் சொன்னதை கல்வெட்டு ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கட்டுரையாக எழுதப் படுகிறது. அந்தக் கட்டுரைத் தொகுப்பை இண்டியானா பல்கலையில் ஒரு ரெஃபரன்ஸாக வைக்கிறார்கள். பின்னர் முன்பு தமிழகத்தின் கடைந்தெடுத்த பொறுக்கிகளான செல்வராஜும் கருணாநிதியும் சொன்னது அமெரிக்காவிலேயே சொல்லப் பட்ட ஆதாரங்களாக ஆராய்ச்சி முடிவுகளாக மீண்டும் தமிழகத்திலேயே விற்கப் படுகிறது

இது ஒரு சுழற்சி தந்திரம். இப்படித்தான் இந்தியாவின் பெருந்தெய்வங்கள் எல்லாம் சிறு தெய்வஙகளை அழித்து விட்டன என்று பாளையங்கோட்டையின் சேவியர் காலேஜில் இருந்து ஃபண்டு செய்யப் பட்டு அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்களினால் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதப் படுகிறது. அதுவே பின்னால் அமெரிக்காவில் பதிக்கப் பட்டு மீண்டும் அமெரிக்கக் கண்டு பிடிப்பாக அதே சமாசாரம் இறக்குமதி செய்யப் படும்

விநாயகர் குறித்தும் இவ்விதமே ஆராய்ச்சி செய்யப் பட்டு தமிழகத்தில் விற்பனையானது.

ஒருவன் ஓரிடத்தில் கண்ணகி ஒரு வேசி என்று ஒரு கட்டுரை எழுதுவான். அதை ஆதாரமாகக் குறிப்பிட்டு வட இந்தியாவில் இன்னொருவன் ஒரு பல்கலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கட்டுரை எழுதுவான். அந்தக் கட்டுரையை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் நாளைக்கு இதே ஹார்வார்ட் தமிழ்ச் சேரில் உள்ள ஒரு வருங்கால ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதுவார். அது அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும். இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. நாளைக்கு ஹார்வார்ட் தமிழ்ச் சேரில் அவர்கள் ஆட்களில் ஒருவனான பெருமாள் முருகனை ப்ரொஃபசராகப் போடுவார்கள் அதன் பின்னர் மாதொருபாகன் வரலாற்று ஆவணமாகப் பதியப் பட்டு அமெரிக்காவிலேயே சொல்லப் பட்டு விட்ட உண்மை என்று தமிழகத்தில் பரப்பப் படும். இதற்குத்தான் முட்டாள் தமிழக்ரள் மொய் விருந்து தின்று காசு கொடுக்கிறார்கள். தங்கள் கைகளால் தங்கள் கண்களையே குத்திக் கொள்கிறார்கள். ஏற்கனவே இங்கு செயல்படும் கலிஃபோர்னியா டமில் அகடமியில் சுத்தமாக தமிழில் இருந்து பக்தி இலக்கியங்கள் சுத்திகரிக்கப் பட்டு விட்டன. இவை போன்ற அமைப்புகளை நடத்தும் ஆட்கள்தான் இந்த ஹார்வார்ட் தமிழ் சேரின் பின்ணணியிலும் இயங்குகிறார்கள்

இதை கிறிஸ்துவ மிஷநரிகள் ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். காலப் போக்கில் கண்ணகி ஒரு வேசி என்றும் காரைக்கால் அம்மையார் ஒரு தாசி என்றும் இவ்விதமான கட்டுரைகளால் நிறுவப் பட்டு அவையே எதிர்கால த்மிழர்கள் நம்பும் ஆதாரங்கள் ஆகி விடும். எதையும் அமெரிக்காவில் இருந்து சொன்னால் அதை நம்புவதற்கு ஒரு மாபெரும் மூடர் கூடமே தமிழகத்தில் தயாராக உள்ளது.

ஆகவே வைரமுத்து சொன்னது திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு சதி ஆகும். அது ஏதோ தற்செயலாகப் பேசப் பட்டது அல்ல. இது ஒரு நீண்டகால சதிகாரத் திட்டத்தின் ஒரு முக்கியமான கண்ணி., ஒரு முக்கியமான அங்கம். இதைச் செய்வதற்கும் பரப்புவதற்கும் அமெரிக்காவில் ஏராளமான இந்திய அமைப்புகள் தேவைப் படுகின்றன. ஃபெட்னா அதில் ஒரு முக்கிய அமைப்பாகும். சென்றதொரு ஃபெட்னா மாநாட்டிலே தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பவள் உ.வே.சாமிநாதையர் அவர்களை பாப்பான் என்று வசை பாடினாள். இவை எல்லாமே அந்தக் கண்ணியின் தொடர்ச்சிகள்தான். இதை மிஷநரிகள் ஃபெட்னா போன்ற அமைப்புகள் மூலமாகவும் வைரமுத்து போன்ற காசுக்கு விலை போகும் வேசிகள் மூலமாகவும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்

அப்படி அமெரிக்காவில் தேவைப் படும் அமைப்புகளை நம்மிடமே காசு வாங்கி உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப் படும் ஒரு அமைப்புதான் இந்த ஹார்வார்ட் தமிழ் சேர் என்பது. நாளைக்கு அங்கு இவை போல பல ஆராய்ச்சிகள் செய்யப் படும் அவை இந்தியாவில் பரப்பபட்டு அவையே உண்மை என்று நிறுவப் படும். பெருமாள் முருகன் எழுதிய க்தையை ஆராய்ச்சி பூர்வமான உண்மை வரலாறு என்றுதானே அவன் சொன்னான் அவனுக்கு அதை எழுத காசு கொடுத்தது யார்? அமெரிக்காவின் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் தானே? ஆக நாளைக்கு ஆயிரக்கணக்கான பெருமாள் முருகன் செல்வராஜ்கள் இந்த ஹார்வர்ட் தமிழ்த் துறை மூலமாக சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளே தமிழகத்தின் வரலாற்று சான்றுகளாக ஆவணங்களாக நம்ப வைக்கப் படும்

இப்படிச் சொல்வதன் மூலமாக இந்துக்களின் ஆதார நம்பிக்கைகளைக் காலப் போக்கில் தகர்த்து அவர்களை மதமாற்றி அதன் மூலமாக இந்திய அரசியலை எளிதாகக் கைப்பற்றி விடும் ஒரு நீண்ட கால சதித் திட்டத்தின் ஒரு கண்ணி முடிச்சுகளே இந்த இண்டியானா, ஹார்வார், வைரமுத்து, செல்வராஜ், பெருமாள் முருகன் அனைத்துமே. நாயன்மார்களின் வரலாறும் ஆழ்வார்களின் வரலாறுகளும் கிறிஸ்துவ தொன்மங்களின் எச்சம் என்று போகிற போக்கில் நம் எழுத்தாளர்கள் சொல்லி விட்டுப் போக அதுவே நாளைக்கு ஆதாரங்களாக உருமாற்றப் படும்.

ஆகவெ இந்த விஷயத்தில் இண்டியானா யுனிவர்சிடி நேரடியாக சம்பந்தப் படவில்லை என்றாலும் என் குற்றசாட்டிற்கான சான்று எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. ஹார்வார்ட் பல்கலையின் தமிழ் சேருக்கான என் எதிர்ப்பு அப்படியே உள்ளது. இதற்காக நான் தப்பாக தகவலைச் சொல்லி விட்டேன் மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்கிறார்கள்

பல்கலையின் பெயரைச் சொன்ன வைரமுத்துவே அது தவறு என்று சொல்லவில்லை ஆண்டாளை வேசி என்று சொன்ன வைரமுத்துவை இவர்கள் மன்னிப்பு கோரக் கோரவில்லை அவன் சொன்னது சரி என்று சாதிக்கிறார் ஆனால் இண்டியானா யுனிவர்சிடியை முன் வைத்து நான் ஹார்வார்ட் தமிழ்ச் சேரை எதிர்த்தது தவறாம் அதற்கு நான் பொதுவில் மன்னிப்பு கேட்க்க வேண்டுமாம் எப்படி இருக்கிறது நியாயம். நான் சொன்னது சரியானதே நான் மறுக்கவோ மன்னிப்பு கேட்க்கவோ எந்தவொரு அவசியமும் கிடையாது. இண்டியானா என்று வைரமுத்து திட்டமிட்டு உதிர்த்த ரெஃபரன்ஸ் ஒன்றே என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஆகவே மீண்டும் சொல்கிறேன் இண்டியானா யுனிவர்சிடி ரெஃப்ரன்ஸ்ஸை முன் வைத்துச் சொல்கிறேன் ஹார்வார்ட் தமிழ்ச் சேரை ஆதரிக்காதீர்கள்.

அமெரிக்காவில் உருவாக்கப் படும் இந்திய மொழி,மத கல்வி நிறுவன அமைப்புகளிடம் இந்திய அரசின் கல்வி கலாசாராத் துறை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை கண்காணிக்கப் பட வேண்டும். அவற்றின் கேடு கெட்ட முயற்சிகள் முறியடிக்கப் பட வேண்டும்

ஹார்வார்ட் தமிழ் சேருக்கு இங்குள்ள தமிழர்கள் ஏராளமான பேர்கள் நிதி வழங்குகிறார்கள். மொய் திருவிழா நடத்தி கடா வெட்டி விருந்து வைத்து காசு வசூலிக்கிறார்கள். அது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். பலரும் எந்தவொரு அறிவும் இன்றி ஒரு போலி பெருமைக்காகவே அதற்குக் காசு கொடுக்கிறார்கள். ஒரு ஐம்பது டாலர்களை விட்டெறிந்து விட்டு அதற்கு கடா விருந்தும் சாப்பிட்டு விட்டு ஏதோ உ வே சா போல தமிழ்ச் சேவை செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மூடர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சென்ண்ட்டும் நாளைய தமிழகத்தின் பக்தி உணர்வுகளுக்கும் வரலாற்றுக்கும் வைக்கப் படும் விஷம் என்பதை உணருங்கள். உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் இருங்கள் என்கிறேன். என்னை தமிழின விரோதி என்கிறார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பின்னாலிருந்து இயக்கும் அரசியல் தெரியாதவர்களுக்கான பதிவு!

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் எப்படி உருவாகிறது என்று ஏற்கனவே எழுதியிருந்தோம். தொழிலில், பிரபலத்தில், பணத்தில் தோற்றவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, பொருளாதார/அரசியல்/பிரபலத்திற்கான தேவையை மறைமுகமாகச் செய்தி கொடுத்து விட்டு, அதற்குக் கைமாறாக நாட்டில் குழப்பங்களை உருவாக்கச் செய்வதற்கென்றே சில அமைப்புகள் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இயங்கி வருகின்றன. அப்படியான அமைப்பில் சிக்கியவர்கள் தான்,

சீமான், கௌதமன், திருமுருகன் காந்தி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், போன்றவர்கள் (சாம்பிள் தான் இது). இதில், கரு.பழனியப்பன், கமல் போன்றவர்கள் எல்லாம் டெம்ப்ரவரி. அதாவது, “இதுக்கு அது”. என்பதான காண்ட்ராக்ட் பேஸிஸ். இதில் கடைசியாக வந்து சேர்ந்தது தான் வைரமுத்து. கருணாநிதியின் பின்புலத்தால் இயங்கி வந்த வைரமுத்துவிற்கு இப்பொழுது சார்புக்கு ஆள்/அமைப்பு இல்லாத சூழலில் ஞானபீட விருதுக்கு அடி போட்ட பொழுது, அவருக்குக் கொடுக்கப்பட்ட அஸைண்ட்மெண்ட் தான் தாயார் ஆண்டாள்.

செய்ததை என்னவோ செவ்வனே செய்து விட்டார். ஆனால், இப்படியான ஓர் எதிர்ப்பை எதிர்பார்க்க வில்லை. வைரமுத்து மட்டுமல்ல, பின்னாலிருந்து இயக்கும் அமைப்பே எதிர்பார்க்கவில்லை. மிரண்டு பின் வாங்கும் வைரமுத்து, வாயைத் திறந்து உளறிக் கொட்டிவிட்டால் இன்னும் சிக்கல் அதிகமாகிவிடும் என்று, தனது பழைய அடிபொடிகளை விட்டு ஹெச்.ராஜா மீது பார்வை படும்படி விசயத்தைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.

வைரமுத்துவும் பாரதிராஜாவும் கடும்பகையில் இருக்கிறார்கள், எனினும் வாங்கிய காசுக்கு பாரதிராஜா அறிக்கை விட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். வைரமுத்துவிற்கு சப்போர்ட் செய்த நபர்களை எல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள் நான் சொன்னதின் உண்மை புரியும்.

ஆஹ்ஹ்ங்ங்ங்.... பிரகாஷ் ராஜ் மட்டும் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கலையே என்று எதிர் கேள்வி கேட்பவர்கள் போகோ சானல் பார்க்கப் போகலாம். அல்லது இன்பாக்ஸில் விபரம் கேட்டுக்கலாம்.

உங்கள் நம்பிக்கையையும் கலாச்சாரத்தையும் அழிக்க எப்படியான திட்டங்களுடன் அமைப்புகள் செயல்படுகிறது என்று உணர்ந்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் சந்ததிகள் ரத்தச் சகதியில் சிக்கித் தவிப்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாளே, மன்னித்து விடு

ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டாளின் சிறப்புமிக்க மார்கழி மாதத்தில், இச்செயல் நிகழ்ந்தது வருந்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. கடுமையாகக் கண்டிக்கின்றோம், பேசியவனின் சொற்களில் உள்ள அடிப்படைப் பிழைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆண்டாளின் உணர்ச்சிகள்

ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் சில உணர்ச்சிமிக்க வாக்கியங்களைக் கொண்டு அவளது உணர்வினை இவ்வுலகின் பாலுணர்வோடு கவிஞன் ஒப்பிட்டுள்ளான். மடமையிலும் மடமை. ஆண்டாளின் உணர்ச்சிகளை மாபெரும் பக்தர்கள், ஆச்சாரியர்கள் முதலிய புலனடக்கம் கொண்ட பல்வேறு மகான்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவளது உணர்ச்சிகளில் துளியளவும் காமம் கிடையாது, அவ்வாறு இருந்திருந்தால், மகான்கள் அவளை மனமார போற்றி அவளது கடைக்கண் பார்வைக்காக ஏங்கியிருக்க மாட்டார்கள். அந்த ஆச்சாரியர்களைக் காட்டிலும் இந்த கவிஞன் புத்திசாலியோ? அப்படித்தான் நினைத்துக் கொண்டுள்ளான் தன்னை. இல்லையெனில், இவ்வாறு உரைத்திருப்பானா?

ஆண்டவனையே அடக்கியாளும் ஆளுமை ஆண்டாளின் அன்பிற்கு இருந்தது. இதெல்லாம் புலனடக்கம் கொண்ட பெரியோர்களால்கூட எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள். இவ்வாறிருக்க, மதுவிலும் மாதுவிலும் மதியை இழந்த மக்கு மாந்தர்களால் அவளது தெய்வீக உணர்ச்சிகளை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?

கல்லினுள் ஐக்கியமாகுதல்

ஆண்டாள் எவ்வாறு கல்லினுள் ஐக்கியமானாள் என்பதில் கவிஞன் ஐயம் எழுப்புகிறான். முட்டாளின் கண்களுக்கு எங்கள் அரங்கன் வெறும் கல்லாகத் தோன்றலாம், ஆனால் ஆண்டாளின் அகன்ற விழிகளுக்கு அரங்கன் அப்படியே அரங்கனாகவே தோன்றினான். பக்திப் பக்குவத்தில் கணிந்திருந்த கோதையினால் அரங்கனை அப்படியே காண முடிந்தது. கவிஞனின் காமக் கண்களுக்கு காட்சியளிப்பதில்லை எங்கள் அரங்கன். அதனால் அந்தக் கவிஞன் அவரை வெறும் கல்லாகக் காண்கிறான் என்பதில் ஆச்சரியமில்லை.

ஆண்டாளுக்குப் பிந்தைய காலத்தில் தோன்றிய இராமானுஜாசாரியர், மத்வாசாரியர் முதலியோரின் மறைவும்கூட விசித்திரமானவையே; ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ஆண்டாளைப் போலவே கிருஷ்ண விக்ரஹத்தினுள் பிரவேசித்து தமது லீலைகளை நிறைவு செய்தார். மாபெரும் பக்தரான துக்காரமர் விண்ணில் மறைந்தார். இன்னும் எத்தனையே எடுத்துக்காட்டுகளை எடுத்துரைக்கலாம். ஆனால் அவை எதையுமே ஆண்டாளின் ஆண்டவனான அந்த அரங்கனின் அருளற்ற அற்பர்களால் அறியவியலாது.

ஆண்டாளின் பிறப்பு

ஆண்டாளின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் தெளிவில்லை என்றும் அதனால் அவளை பிராமண குலம் அங்கீகரிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் தனது கற்பனைத் திறனை கவிஞன் அவிழ்த்து விட்டுள்ளான். ஆண்டாள் பூதேவியின் அவதாரம் என்பதை அனைத்து சான்றோர்களும் அறிவர். உலகிலுள்ள அனைவருக்கும் பிறப்பளிக்கும் பூதேவி மற்றொருவரின் வயிற்றில் பிறக்காமல் இவ்வுலகில் தோன்றினாள். இதில் தொன்றுதொட்டு வரும் அறிஞர்கள் எவருக்கும் எந்த ஐயமும் இருக்கவில்லை. ஆனால் ஆன்மீகப் பெருமைகள் மிக்க திராவிட மண்ணில் “திராவிடம்” என்ற பெயரில் நாத்திகத்தை விதைத்துவிட்ட தீயோர்களால் நிச்சயம் இதனைப் புரிந்துகொள்ள முடியாது.

வயலில் கிடைத்த சீதையை அனைவரும் ஜனகரின் மகளாக ஏற்றனர், தோட்டத்தில் கிடைத்த ராதையும் விருஷபானுவின் மகளாக ஏற்கப்பட்டாள். அதுபோலவே, துளசித் தோட்டத்தில் கிடைத்த ஆண்டாளும் பெரியாழ்வாரின் மகளாக ஏற்கப்பட்டாள். இதில் எவருக்கும் எந்த ஐயமும் இருப்பதில்லை. ஆனால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாயளவில் கூறிக் கொண்டு ஜாதியை வளர்ப்பதில் அதிலும் குறிப்பாக உயர் ஜாதியினரை இகழ்வதில் ஈடுபட்டுள்ளவர்களால், நிச்சயம் பூதேவியின் அவதாரமான ஆண்டாள் நேரடியாக பூமியில் தோன்றினாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.

ஏன் கண்டனம்?

ஆண்டாளின் மகத்துவங்களை இந்த அறிவற்ற பெயரளவு கவிஞனால் உணர முடியாது என்னும் பட்சத்தில், ஏன் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வினவலாம். ஆம், தெரியாத விஷயத்தைப் பற்றி தெரிந்தவனைப் போல பேசியதற்காகக் கண்டிக்கிறோம். அறியாத விஷயத்தை அறிந்தவனைப் போல வார்த்தை ஜாலங்களுடன் பேசியதற்காகக் கண்டிக்கிறோம். மக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டும்கூட மன்னிப்பு தெரிவிக்காமல் வெறும் “வருத்தம்” தெரிவிக்கும் அந்த பண்பற்ற புத்தியைப் பழிக்கின்றோம்.

வைணவர்கள் வம்பு தும்பிற்கு வர மாட்டார்கள் என்ற துணிவில் வரம்பு மீறிய துஷ்டனைத் தூற்றுகிறோம். அகிலத்தின் அன்னையான ஆண்டாளின் அருமை பெருமைகளை அகிலம் அறியட்டும் என்று அன்பைக் காட்டுகிறோம், அந்த அன்பினாலேயே அர்ப்பரிக்கின்றோம், “அரசே, ஆணையிடு” என்று ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்கிறோம். நெஞ்சில் பாய்ச்சப்பட்ட ஈட்டியின் வலி தாங்காமல் கதறுகிறோம்.

அன்னையே, அந்த அற்பனின் அற்ப மொழிகளை எனது இதயம் தாங்கிவிட்டதே என்பதை எண்ணி உம்மிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்.

ஸ்ரீ கிரிதாரி தாஸ்,
ஆசிரியர், 
பகவத் தரிசனம் (இஸ்கான் இயக்கத்தின் மாத இதழ்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வைரமுத்துவும் அமெரிக்க பல்கலைகளும்

--------------------------------------------------------------------------------

 

வைரமுத்து என்னும் காசுக்கு தமிழை விற்கும் ஈன ஜென்மம் தன் ஆண்டாள் உரையில் இண்டியானா பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வருடத்தில் யாரோ ஒரு வட இந்தியாவில் ஒரு கம்னியுஸ பொறுக்கி எங்கோ கிறுக்கி வைத்ததைத் தேடிப் பிடித்து கொளுத்திப் போட்டு விட்டுப் போகிறான்

 

அதை முன் வைத்து நான் எப்படி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் திட்டமிட்டு எழுதி வைக்கப் படும் விஷப் பிரசாரங்கள் பின்னர் இந்தியாவின் வரலாறாக மாற்றப் பட்டு அதுவே நிலைத்து விடும் என்பதற்கு இந்த இண்டியானா பல்கலை ரெஃபரென்ஸ் ஒரு உதாரணம் ஆகவே வரவிருக்கும் தமிழ் சேரை ஆதரிக்காதீர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன்

 

உடனே ஒரு இலக்கிய நண்பர்  கிளம்பி வந்து ஆண்டாள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா அது ஒரு லெஜண்ட் தானே? வைரமுத்து சொன்னபடியாகவும் இருக்கலாம் அல்லவா என்று அவனுக்கு வக்காலத்து வாங்கினார். அவருடன் பேசுவது அர்த்தமற்ற ஒரு வெட்டி வேலை என்பதினால் நான் மேலே பேசவில்லை

 

இப்பொழுது அந்த  ஆராய்ச்சிக் கட்டுரை உண்மையிலேயே இண்டியானா யுனிவர்சிடியில் எழுதப் பட்டது இல்லை என்றும் சிம்லாவில் உள்ள இடதுசாரி வக்கிரர்களினால் உருவாக்கப் பட்ட ஒன்று என்றும் அதற்கு ஆதாரம் தமிழகத்தின் செல்வராஜ் என்ற ஒரு கம்னியுஸ்டு கபோதி என்றும் தெரிய வந்துள்ளது. எப்படியோ இண்டியானா யுனிவர்சிடி பேர் அந்த தளத்தில் தென்பட்டதால் வைரமுத்து அதை அமெரிக்க ஆராய்ச்சி என்று சொல்லி விட்டான். அவன் தெரியாமல் சொல்லியிருந்திருக்க வாய்ப்பில்லை. இன்று வரை அப்படி சொன்னது தவறு என்றும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தெரிந்தே வேண்டும் என்றேதான் அந்த அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயரைப் போட்டுள்ளான். காரணம்?

 

காரணம் எந்தவொரு விஷயத்தையும் அது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று சொல்லி விட்டால் நம்ம ஊர் கூமுட்டைத் தமிழர்கள் கேள்வி கேட்க்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்பதினால்தான். இது ஒரு அடிமை நோய். 

 

இதற்கு முன்பாக  இன்னொரு நண்பர்  பீ. சிதம்பரத்தை தான் வெகுவாக மதிப்பதாகவும் அவனது பாராளுமன்ற உரைகளை அமெரிக்காவில் உள்ள சவுத் ஏஷியா ஸ்டடிஸ்களில் ஆராய்ச்சி செய்வதாகவும் சொன்னார். நான் பதிலுக்கு வெளியே சொல்லாதீர்கள் சிரிக்கப் போகிறார்கள் என்றேன். இப்படித்தான் எதற்கும் ஒரு அமெரிக்க முத்திரையைக் குத்தி விட்டால் அது உசத்தி அதுவே இறுதியான ஆதாரம் என்று ஆகி விடுகிறது. அப்படிச் சொல்லப் படுவதை நம்புவதற்கு தமிழகத்தில் பல படித்த மூடர்கள் கூடத் தயாராக இருக்கிறார்கள். 

 

ஆக இங்கு நாகர்கோவிலில் செல்வராஜ் என்ற ஒரு கம்னியுஸ பொறுக்கி முதலில் ஆண்டாளைப் பற்றி எழுதுகிறான் அதற்கு முன்பாக கருணாநிதி எழுதுகிறான். பின்னர் அது சிம்லாவில் உள்ள கம்னியுஸ கடன்காரன்களினால் நடத்தப் படும் தண்ட இன்ஸ்ட்டியூட் ஒன்றில் செல்வராஜ் சொன்னதை கல்வெட்டு ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கட்டுரையாக எழுதப் படுகிறது. அந்தக் கட்டுரைத் தொகுப்பை இண்டியானா பல்கலையில் ஒரு ரெஃபரன்ஸாக வைக்கிறார்கள். பின்னர் முன்பு தமிழகத்தின் கடைந்தெடுத்த பொறுக்கிகளான செல்வராஜும் கருணாநிதியும் சொன்னது அமெரிக்காவிலேயே சொல்லப் பட்ட ஆதாரங்களாக ஆராய்ச்சி முடிவுகளாக மீண்டும் தமிழகத்திலேயே விற்கப் படுகிறது

 

இது ஒரு சுழற்சி தந்திரம். இப்படித்தான் இந்தியாவின் பெருந்தெய்வங்கள் எல்லாம் சிறு தெய்வஙகளை அழித்து விட்டன என்று பாளையங்கோட்டையின் சேவியர் காலேஜில் இருந்து ஃபண்டு செய்யப் பட்டு அ.கா.பெருமாள் போன்ற  அறிஞர்களினால் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதப் படுகிறது. அதுவே பின்னால் அமெரிக்காவில் பதிக்கப் பட்டு மீண்டும் அமெரிக்கக் கண்டு பிடிப்பாக அதே சமாசாரம் இறக்குமதி செய்யப் படும்

 

விநாயகர் குறித்தும் இவ்விதமே ஆராய்ச்சி செய்யப் பட்டு தமிழகத்தில் விற்பனையானது.

 

ஒருவன் ஓரிடத்தில் கண்ணகி ஒரு வேசி என்று ஒரு கட்டுரை எழுதுவான். அதை ஆதாரமாகக் குறிப்பிட்டு வட இந்தியாவில் இன்னொருவன் ஒரு பல்கலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கட்டுரை எழுதுவான். அந்தக் கட்டுரையை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் நாளைக்கு இதே  தமிழ்ச் சேரில் உள்ள ஒரு வருங்கால ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதுவார். அது அமெரிக்காவிலேயே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி விட்டார்கள் ஆகவே கண்ணகி ஒரு வேசிதான் என்று தமிழகத்தில் ஒரு வைரமுத்துவினாலோ ஒரு பழநிபாரதியினாலோ பரப்பப் படும். காலப் போக்கில் அதுவே உண்மை என்று நம்பப் படும். 

 

இப்படியாகவே நமது அடிப்படை ஆதார நம்பிக்கைகளை திட்டமிட்டு சீர் குலைக்க இவை போன்ற ஒரு மாபெரும் சதிகார அமைப்புகளே கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அமெரிக்க பல்கலைகள் மூலமாக உருவாக்கப் பட்டு தொடர்ந்து சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. நாளைக்கு ஒரு  தமிழ்ச் சேரில் அவர்கள் ஆட்களில் ஒருவனான பெருமாள் முருகனை ப்ரொஃபசராகப் போடுவார்கள் அதன் பின்னர் மாதொருபாகன் வரலாற்று ஆவணமாகப் பதியப் பட்டு அமெரிக்காவிலேயே சொல்லப் பட்டு விட்ட உண்மை என்று தமிழகத்தில் பரப்பப் படும். இதற்குத்தான் முட்டாள் தமிழக்ரள் மொய் விருந்து தின்று காசு கொடுக்கிறார்கள். தங்கள் கைகளால் தங்கள் கண்களையே குத்திக் கொள்கிறார்கள். ஏற்கனவே இங்கு செயல்படும் கலிஃபோர்னியா டமில் அகடமியில் சுத்தமாக தமிழில் இருந்து பக்தி இலக்கியங்கள் சுத்திகரிக்கப் பட்டு விட்டன. இவை போன்ற அமைப்புகளை நடத்தும் ஆட்கள்தான் இந்த  தமிழ் சேரின் பின்ணணியிலும் இயங்குகிறார்கள்

 

இதை கிறிஸ்துவ மிஷநரிகள் ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். காலப் போக்கில் கண்ணகி ஒரு வேசி என்றும் காரைக்கால் அம்மையார் ஒரு தாசி என்றும் இவ்விதமான கட்டுரைகளால் நிறுவப் பட்டு அவையே எதிர்கால த்மிழர்கள் நம்பும் ஆதாரங்கள் ஆகி விடும். எதையும் அமெரிக்காவில் இருந்து சொன்னால் அதை நம்புவதற்கு ஒரு மாபெரும் மூடர் கூடமே தமிழகத்தில் தயாராக உள்ளது.

 

ஆகவே வைரமுத்து சொன்னது திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு சதி ஆகும். அது ஏதோ தற்செயலாகப் பேசப் பட்டது அல்ல. இது ஒரு நீண்டகால சதிகாரத் திட்டத்தின் ஒரு முக்கியமான கண்ணி., ஒரு முக்கியமான அங்கம். இதைச் செய்வதற்கும் பரப்புவதற்கும் அமெரிக்காவில் ஏராளமான இந்திய அமைப்புகள் தேவைப் படுகின்றன. ஃபெட்னா அதில் ஒரு முக்கிய அமைப்பாகும். சென்றதொரு ஃபெட்னா மாநாட்டிலே தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பவள் உ.வே.சாமிநாதையர் அவர்களை பாப்பான் என்று வசை பாடினாள். இவை எல்லாமே அந்தக் கண்ணியின் தொடர்ச்சிகள்தான். இதை மிஷநரிகள் ஃபெட்னா போன்ற அமைப்புகள் மூலமாகவும் வைரமுத்து போன்ற காசுக்கு விலை போகும் வேசிகள் மூலமாகவும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்

 

அப்படி அமெரிக்காவில் தேவைப் படும் அமைப்புகளை நம்மிடமே காசு வாங்கி உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப் படும் ஒரு அமைப்புதான் இந்த சேர் மேஜைகள் எல்லாமே. நாளைக்கு அங்கு இவை போல பல ஆராய்ச்சிகள் செய்யப் படும் அவை இந்தியாவில் பரப்பபட்டு அவையே உண்மை என்று நிறுவப் படும். பெருமாள் முருகன் எழுதிய க்தையை ஆராய்ச்சி பூர்வமான உண்மை வரலாறு என்றுதானே அவன் சொன்னான் அவனுக்கு அதை எழுத காசு கொடுத்தது யார்? அமெரிக்காவின் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் தானே? ஆக நாளைக்கு ஆயிரக்கணக்கான பெருமாள் முருகன் செல்வராஜ்கள் இந்த  தமிழ்த் துறை மூலமாக சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளே தமிழகத்தின் வரலாற்று சான்றுகளாக ஆவணங்களாக நம்ப வைக்கப் படும்

 

இப்படிச் சொல்வதன் மூலமாக இந்துக்களின் ஆதார நம்பிக்கைகளைக் காலப் போக்கில் தகர்த்து அவர்களை மதமாற்றி அதன் மூலமாக இந்திய அரசியலை எளிதாகக் கைப்பற்றி விடும் ஒரு நீண்ட கால சதித் திட்டத்தின் ஒரு கண்ணி முடிச்சுகளே இந்த இண்டியானா, ஹார்வார்ட், வைரமுத்து, செல்வராஜ், பெருமாள் முருகன் அனைத்துமே. நாயன்மார்களின் வரலாறும் ஆழ்வார்களின் வரலாறுகளும் கிறிஸ்துவ தொன்மங்களின் எச்சம் என்று போகிற போக்கில் நம் எழுத்தாளர்கள் சொல்லி விட்டுப் போக அதுவே நாளைக்கு ஆதாரங்களாக உருமாற்றப் படும்.

 

ஆகவெ இந்த விஷயத்தில் இண்டியானா யுனிவர்சிடி நேரடியாக சம்பந்தப் படவில்லை என்றாலும் என் குற்றசாட்டிற்கான சான்று எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. இந்த தமிழ் சேருக்கான என் எதிர்ப்பு அப்படியே உள்ளது. இதற்காக நான் தப்பாக தகவலைச் சொல்லி விட்டேன் மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்கிறார்கள்

 

 பல்கலையின் பெயரைச் சொன்ன வைரமுத்துவே அது தவறு என்று சொல்லவில்லை ஆண்டாளை வேசி என்று சொன்ன வைரமுத்துவை இவர்கள் மன்னிப்பு கோரக் கோரவில்லை அவன் சொன்னது சரி என்று சாதிக்கிறார் ஆனால் இண்டியானா யுனிவர்சிடியை முன் வைத்து நான் தமிழ்ச் சேரை எதிர்த்தது தவறாம் அதற்கு நான் பொதுவில் மன்னிப்பு கேட்க்க வேண்டுமாம் எப்படி இருக்கிறது நியாயம்.  நான் சொன்னது சரியானதே நான் மறுக்கவோ மன்னிப்பு கேட்க்கவோ எந்தவொரு அவசியமும் கிடையாது. இண்டியானா என்று வைரமுத்து திட்டமிட்டு உதிர்த்த  ரெஃபரன்ஸ் ஒன்றே என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஆகவே மீண்டும் சொல்கிறேன் இண்டியானா யுனிவர்சிடி ரெஃப்ரன்ஸ்ஸை முன் வைத்துச் சொல்கிறேன் எந்தவொரு  தமிழ்ச் சேரையும் ஆதரிக்காதீர்கள். 

 

அமெரிக்காவில் உருவாக்கப் படும் இந்திய மொழி,மத கல்வி நிறுவன அமைப்புகளிடம் இந்திய அரசின் கல்வி கலாசாராத் துறை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை கண்காணிக்கப் பட வேண்டும். அவற்றின் கேடு கெட்ட முயற்சிகள் முறியடிக்கப் பட வேண்டும்

 

 தமிழ் சேருக்கு இங்குள்ள தமிழர்கள் ஏராளமான பேர்கள் நிதி வழங்குகிறார்கள். மொய் திருவிழா நடத்தி கடா வெட்டி விருந்து வைத்து காசு வசூலிக்கிறார்கள். அது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். பலரும் எந்தவொரு அறிவும் இன்றி ஒரு போலி பெருமைக்காகவே அதற்குக் காசு கொடுக்கிறார்கள். ஒரு ஐம்பது டாலர்களை விட்டெறிந்து விட்டு அதற்கு கடா விருந்தும் சாப்பிட்டு விட்டு ஏதோ உ வே சா போல தமிழ்ச் சேவை செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மூடர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு சென்ண்ட்டும் நாளைய தமிழகத்தின் பக்தி உணர்வுகளுக்கும் வரலாற்றுக்கும் வைக்கப் படும் விஷம் என்பதை உணருங்கள். உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் இருங்கள் என்கிறேன். என்னை தமிழின விரோதி என்கிறார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி!

Posted By: Shankar
Published: Monday, April 20, 2015, 19:36 [IST]
Subscribe to Oneindia Tamil
 
 
 

தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை.

 
 
 
 
 
 
Loading ad
 

ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து.

இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி!

Posted By: Shankar
Published: Monday, April 20, 2015, 19:36 [IST]
 
 

தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை.

 
 
 
 
 
 
Loading ad
 

ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து.

ஆனால் அவர் அப்படிச் செய்த ஒரு விஷயம், இப்போது சந்திக்கு வந்து கேலிக்குரியதாகிவிட்டது. அது அண்மையில் மறைந்த தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்பானது. என்ன அது? இதோ ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி இன்று வைரமுத்துவை 'வெளுத்து வாங்கி' எழுதியிருப்பதைப் படியுங்கள்: "சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது." -என்னத்தைச் சொல்றது... வைரமுத்து பார்க்காத புகழில்லை. இப்படி அற்பத்தனமாகவா மாட்டிக் கொள்ள வேண்டும்!



Read more at: https://tamil.filmibeat.com/news/jayakanthan-s-daughter-exposes-vairamuthu-034178.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 2 people, text



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard