New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவ வரலாறு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கிறிஸ்தவ வரலாறு
Permalink  
 


கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின் வாழ்க்கை

Image result for jesus christ risen

கலிலேயாவிலுள்ள பெத்லேகேமில் ஒரு சாதாரண மாட்டுத் தொழுவம் ஒன்றில் பிறந்தவர் தான் இயேசு. தன்னுடைய வாழ்வின் சிறுவயதுக் காலங்களை பெற்றோருடன் செலவிட்ட இயேசு அறிவிலும் ஞானத்திலும் நிறைந்து விளங்கினார்.

சிறுவயதிலேயே யூத மத சட்டங்களைக் குறித்தும், இறையாட்சியைக் குறித்தும் தெளிவு பெற்றிருந்தார் இயேசு. எல்லோரும் பார்க்கும் பார்வையில் சட்டங்களையும், மறை நூல்களையும் பார்க்காமல் அதிலுள்ள பிழைகளைத் துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவராக சிறுவயதிலேயே இயேசு திகழ்ந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் நரைத்த, பழுத்த ஆன்மீக வாதிகளுடன் இறையாட்சி குறித்த விவாதத்தில் ஈடுபடுமளவுக்கு அவருக்கு மறை நூல்கள் குறித்தும் சமுதாயம் குறித்தும் விழிப்புணர்வு இருந்தது.

தன்னுடைய முப்பதாவது வயதில் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்று பணி செய்யத் துவங்கிய இயேசு மூன்று ஆண்டுகள் இடையறாது பணிசெய்தார். தன்னுடைய பணியை முழுக்க முழுக்க மனித நேயம் சார்ந்த பணியாக அமைத்துக் கொண்டவர் இயேசு. இறை தன்மையுடன் விளங்கிய அவர் தான் கடவுளின் மகன் என்பதை தன்னுடைய போதனைகளில் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இறை தன்மையை வெளிக்காட்டும் விதமாக நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல் என ஏராளம் புதுமைகளை மக்களிடையே நிறைவேற்றினார் இயேசு.

பன்னிரண்டு பேரை தன்னுடைய சீடர்களாகத் தெரிந்தெடுத்த இயேசு அவர்களுக்கு வாழ்வியல் போதனைகளையும், பல ஆற்றல்களையும் வழங்கி தன்னுடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் அறிவிக்க அவர்களைத் தயாராக்கினார். ஏழைகளுக்கு உதவுதலே இறை பணி என்பதை தன்னுடைய போதனைகளின் அடிப்படையாக்கிக் கொண்ட இயேசு அன்பு என்பதே ஆன்மீகம் என்று போதித்தார்.

தன்னுடைய போதனைகளை சுருக்கி, கடவுளிடம் முழு மனதோடு அன்பு செய்வதும், தன்னை நேசிப்பது போல அடுத்தவரை நேசிப்பதையும் இரண்டு முக்கிய போதனைகளாக்கிக் கொண்டார்.

மூன்று ஆண்டுகள் இயேசு நிகழ்த்திய போதனைகளும், செய்த அற்புதச் செயல்களும் யூத மத குருக்களை எரிச்சலடையச் செய்தது. அவர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்றும், வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் என்று பகிரங்கமாகச் சாடி, அவர்கள் போதனைகளை நம்பவேண்டாம் அவர்கள் விண்ணரசிற்கு நுழையமாட்டார்கள். அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்கள் என்று மக்களுக்குப் போதித்தார். எனவே மத குருக்கள் அவரை ஒழித்துக் கட்ட வழி தேடினார்கள்.

எருசலேம் தேவாலயத்தில் பலிப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்துத் துரத்தி இயேசு புரட்சி செய்தது மத குருக்களை வெறி கொள்ளச் செய்தது. காலம் காலமாக நடந்து வந்த விற்பனையையும், அதற்கும் மேலாக மதகுருமார்கள் மேல் இருந்த மரியாதையையும் இயேசு சிதைத்து விட்டதால் அவர்கள் இயேசுவை கொல்வது என்று முடிவு செய்தார்கள்.

தலைமைக் குருக்களாக இருந்த அன்னா, காய்பா இருவரும் இயேசு தன்னைக் கடவுளின் மகனாகக் காட்டிக் கொண்டார் என்னும் குற்றச்சாட்டின் கீழ் அவரைப் பிடித்து ஆளுநனாக இருந்த பிலாத்துவின் விசாரணைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு பொய்சாட்சிகள் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டனர். பொய் சாட்சிகளின் சாட்சியங்கள் வலுவிழந்தன. ஆனால் இயேசு தானே கடவுளின் மகன் என்று அந்த விசாரணைக் கூடத்திலேயே துணிச்சலுடன் அறிவித்து சிலுவைச் சாவை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிலுவையின் உச்சியிலிருந்தும் தன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக மன்னிப்பை மன்றாடிய இயேசு தன் தந்தையின் கைகளில் தன்னுடைய உயிரை ஒப்படைத்தார். இறந்து விட்டார் என்று அரச வீரர்கள் ஈட்டியால் குத்தி ஊர்ஜிதப்படுத்திய பின் இயேசுவின் உடல் கீழிறக்கி கல்லறையில் அடக்கப்பட்டது.

இறந்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொல்லியிருந்ததால் அவருடைய கல்லறைக்கு அரச காவல் நியமிக்கப்பட்டது. கல்லறைக் கதவை சங்கிலியால் பூட்டி காவலர்கள் காவலிருந்தார்கள். ஆனால் மூன்றாவது நாள் இயேசு சொன்னது போல உயிர்த்தெழுந்தார். உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பல முறை காட்சியளித்தார்.

இயேசுவின் இறப்பினால் சோர்ந்து போயிருந்த சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்புச் செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அதுவே கிறிஸ்தவ மதம் மண்ணில் தோன்றுவதற்கு முக்கிய காரணமாயிற்று.

உலகெங்கும் உள்ள இயேசுவைப் பின்பற்றும் மக்களின் கூட்டமே திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருச்சபை தன்னுடைய தலைவராக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தத் திருச்சபை இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப் பட்டது. இயேசு தன்னுடைய சீடர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு நோய்தீர்க்கும் ஆற்றலையும், பேயோட்டும் ஆற்றலையும், போதிக்கும் ஆற்றலையும் அளித்தபோது திருச்சபை ஆரம்பமானது என்பது ஒரு சாராருடைய நம்பிக்கை.

இன்னொரு சாரார், திருச்சபையின் ஆரம்பம் இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகே துவங்கியது என்று நம்புகிறார்கள். எப்படியெனினும், திருச்சபையை ஆரம்பித்தவர் இயேசு என்பதில் கிறிஸ்தவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.

அப்போஸ்தலர் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு செய்தியாளர் அல்லது அனுப்பப் பட்டவர் என்னும் பொருள் உண்டு. இயேசு தன்னை தந்தை உலகிற்கு அனுப்பினார் என்று பிரகடனப் படுத்தியது போல தன்னுடைய சீடர்களை தன்னுடைய பணிக்காக அனுப்புகிறார். அனுப்புதல் என்ற சொல்லில் அவர்களுடைய வாழ்நாள் பணி என்பது இயேசுவின் போதனைகளைப் பரப்ப வேண்டும் என்பதே.

வெறும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே இயேசுவோடு பணியாற்றும் வாய்ப்புப் பெற்றிருந்தார்கள் அவர்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தவர்களும், தச்சு வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வரி வசூலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்த மூன்று ஆண்டுகளில் நல்ல பக்குவம் வாய்ந்த போதகர்களாகியிருந்தார்கள். மக்கள் முன்னிலையில் தைரியமாக வந்து நின்று இறைவனைப் பற்றியும், இறையரசு பற்றியும் தயக்கமில்லாமல் பேசும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள் அவர்கள்.

அவர்களுடைய முதன்மையான பணி இயேசு கிறிஸ்துவைப் பற்றி சான்று பகர்வதே. இயேசுவின் வாழ்க்கையில் அவர் சீடர்களோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும். அவர் மக்களிடம் போதித்த செய்திகளை புதிய மக்களிடம் போதிக்கவும், எல்லோரையும் இயேசுவின் போதனைகளின் பாதையில் நடப்பவர்களாக மாற்றுவதுமே அவர்களுடைய பணியாய் இருந்தது. அவர்கள் யாருமே தங்களை முன்னிலைப்படுத்தி போதிக்கவில்லை. அவர்களுடைய போதனைகளிலெல்லாம் இயேசுவே முதன்மையாய் இருந்தார்.

அந்த பன்னிரண்டு சீடர்களின் வாழ்வும் பணியுமே கிறிஸ்தவ மதம் வளரவும், ஆழமாய் வேர்விடவும், ஊரெங்கும் பரவவும் காரணமாயிற்று.

சிலகாலம் இணைந்து பாலஸ்தீனத்தில் பணியாற்றி வந்த சீடர்கள் தங்கள் பணி அந்த இடத்தை விட்டு மற்ற இடங்களுக்குப் பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இயேசு தன்னுடைய வாழ்நாளில் சுமார் இருநூறு மைல் சுற்றளவுள்ள இடத்தைக் கடந்து எங்கும் சென்றதில்லை என்கிறது இறையியல் வரலாறு. ஆனால் அவர் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளையோ ‘உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்’ என்பதே.

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களும் எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள். எங்கெங்கே சென்றார்கள் என்பதை அறிகையில் அவர்கள் இயேசுவின் பால் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்களுடைய மன உறுதியும் நம்மை வியப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவம் : ஒரு வரலாற்றுப் பார்வை.

Image result for adam eveகிறிஸ்தவ மதம் உருவானது இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்த நிகழ்வுக்குப் பின்பு தான். ஆனால் கிறிஸ்தவ மதம் உள்ளடக்கிய நம்பிக்கைகள் ஆதி மனிதன் ஆதாமின் காலத்திலிருந்து துவங்குகிறது. உல‌க‌த்தைப் ப‌டைத்த‌ க‌ட‌வுள் அவ‌ற்றை ப‌ண்ப‌டுத்த‌வும், ஆள‌வும் ஆதாம் எனும் ம‌னித‌னைப் ப‌டைக்கிறார். ம‌ண்ணிலிருந்து ஆதாமைப் ப‌டைத்து, அவனிடமிருந்து ஏவாள் எனும் பெண்ணைப் ப‌டைக்கிறார்.

அக்காலத்தில் கடவுள் மனிதர்களோடு நேரடியாக உரையாடி வந்தார். ஆதாமும் ஏவாளும் கடவுளின் தோட்டமான ஏதேன் தோட்டத்தில் சகல வசதிகளோடும் வாழ்ந்து வந்தனர். ஆனால் சாத்தானின் சூழ்ச்சியால் கடவுளின் வார்த்தையை அவர்கள் மீறிவிட்டனர். கடவுளின் அன்பை சந்தேகப்பட்ட அவர்கள் கடவுளின் ஏதேன் தோட்டத்தில் வாழும் பேற்றை இழந்து வெளியேற்றப்பட்டனர்.

உலகில் பாவம் அடியெடுத்து வைத்தது. காலங்கள் கடந்தன. மக்கள் மீண்டும் மனம் திருந்தி தன்னிடம் வரவேண்டும் எனும் கடவுளின் ஏக்கம் தொடர்ந்தது. கடவுள் மனிதனோடு தீர்க்கத்தரிசிகள் வழியாக பேசி அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளைக் கட்டளைகளாகக் கொடுத்தார்.  இந்தக் கட்டளைகள் மூலமாக அவர்கள் ஆண்டவரிடத்தில் ஒன்றித்திருக்கவும் நல் வழியில் நடக்கவும் பணித்தார்.

ம‌க்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஆபிர‌காமை த‌னியே அழைத்தார். அவ‌ர் மூல‌மாக‌ ஒரு தூய‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்தை உருவாக்க‌ விழைந்தார். ஆபிர‌காம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு எனும் வ‌ழியில் அந்த‌ வ‌ம்சாவ‌ளி வ‌ள‌ர்ந்த‌து. அந்த‌ வ‌ழியில் தான் இஸ்ர‌வேல் குல‌ம் உருவான‌து.

பல தீர்க்கதரிசிகளும், நீதித் தலைவர்களும் இஸ்ரேல் மக்களை நல் வழியில் நடத்தினார்கள்.  காலம் செல்லச் செல்ல கடவுளின் வார்த்தைகள் இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தவில்லை. தீர்க்கத் தரிசிகள் போதாது. பிற இன மக்களைப் போல தங்களையும் ஆள அரசர்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணினர்.

கடவுள் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை ஆள அரசர்களை ஏற்படுத்தினார். இறைவன் இஸ்ரேல் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்ததால் இஸ்ரேல் மன்னரோடும், மக்களோடும் தீர்க்கதரிசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

இஸ்ரேல் என்பது பன்னிரண்டு குலங்கள் மக்கள் சேர்ந்த ஒரு அரசாகும்.  அனைவரையும் ஒரே அரசர் அரசாண்டு வந்தார்.  உலகின் மிகப் பெரிய ஞானியான சாலமோன் மன்னனும் இஸ்ரேல் மக்களை ஆண்ட அரசர்களில் ஒருவர்.  சாலமோன் மன்னனுக்குப் பின் அவருடைய மகன் ரெகோபெயாம் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் பெரும் புரட்சி உருவாகி இஸ்ரேல் அரசு இரு பிரிவாகியது.  பத்து குலங்கள் இணைந்து இஸ்ரேல் அரசாகவும் மீதி இரண்டு குலங்கள் இணைந்து யூதா அரசாகவும் மாறியது.

யெரோபெயாமின் ஆட்சி இஸ்ரேல் அரசின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது. இறைவனிடம் பல உறுதிமொழிகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தபோதிலும் யெரோபெயாம் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வேற்று தேவர்களை தொழ ஆரம்பித்தார்.  இதனால் இஸ்ரேல் அரசு மற்ற ராஜாக்களின் தாக்குதலுக்கு ஆளானது.

150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் சாம்ராஜ்யம் முழுவதும் வேற்று அரசர்களின் கீழ் அடிமையாகி விட்டது.  இது நடந்த காலகட்டம் சுமார் கி.மு. 700-ம் ஆண்டாகும்.  சுமார் கி.மு. 705 ண்டில் யூத ராஜ்யம் சரிய ஆரம்பித்தது.

சுமார் கி.மு. 586 கால கட்டத்தில் பாபிலோன் மன்னன் செதேக்கியா என்னும் யூத அரசனை சிறை பிடித்து அவருடைய மகன்கள் இருவரையும் கொலை செய்தான்.  அப்படி யூதா முழுவதும் சிறைபிடிக்கப்பட்டது. பெரும் சிறப்புப் பெற்ற ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. அதில் இருந்த பொன்னும் பொருளும் கொள்ளையடிக்கப்பட்டன. யூதர்களின் கலாச்சாரம் சிதறடிக்கப்பட்டது.  அது முதல் யூதா வேற்று அரசர்களின் ஆளுகைக்குள் வந்தது.

இஸ்ரேல் மக்கள் மற்ற அரசர்களிடம் அனுமதி கோரி செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா என்னும் தலைவர்களின் கீழ் ஜெருசலேம் தேவாலயத்தை சீரமைக்கும் பணியை ஆரம்பித்தனர்.  இந்தத் தலைவர்கள் யூத மக்கள் கடவுளை நம்பி, அவரிடம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் கி.மு. 400-வது ண்டில் இது நடந்தது.

அதற்குப் பின்பு அவர்களுக்கு கடவுளால் எந்தத் தீர்க்கதரிசியும் அளிக்கப்படவில்லை.  அந்த கால கட்டத்தில் இஸ்ரேல் பெர்சியா மற்றும் எகிப்திய அரசாட்சியின் கீழ் இருந்தது.  மக்கள் மனம் போன போக்கில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர்.

வேற்று அரசர்களின் அரசாட்சி, முக்கியமாக கிரேக்கர்களுடைய வழிபாட்டு முறைகள் இஸ்ரேல் மக்களை மிகவும் பாதித்தன.  நாட்கள் செல்லச் செல்ல யூத முறைகளைப் பின்பற்றுவது மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.  இது யூதர்களைக் கோபமுறச் செய்தது.  அவர்கள் கிரேக்கர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர்

கலகத்திற்குப் பின் சிறிது காலம் யூதர்கள் கடவுளை மீண்டும் வழிபடத் துவங்கினர். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.  பின்னர் வந்த ரோமர்களின் ஆட்சி அவர்கள் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறைகளை துவம்சம் செய்தது.  அந்த ஆட்சியும், காலகட்டமும் தான் உலகத்தின் மிகப் பெரிய நிகழ்வுகளுக்குப் பக்க பலமாக இருந்தது.  அது தான் வரலாறுகளைத் திருத்தி அமைத்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம்.

அந்த கால கட்டத்தில் மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன.  பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் அவற்றில் சிலர்.  சதுசேயர்கள் அரசியல்வாதிகள்.  அவர்களுடைய முக்கியமான எண்ணம் தங்களுடைய பதவியையும், செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வது தான்.

Image result for pharisee and sadduceeசதுசேயர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒரே வாழ்க்கை ஒரே மரணம், அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என நம்புபவர்கள் அவர்கள்.  பரிசேயர்கள் அந்நிய ஆட்சியை எதிர்த்தவர்கள். மனிதநேயத்தை விட சட்டத்தையே மிக அதிகமாய் பின்பற்றியவர்கள். தங்களுடைய ஆதாயத்துக்காக சட்டத்தை பயன்படுத்தும் யுத்தி தெரிந்தவர்கள். அவர்கள் தங்களுடைய கலாச்சாரத்திலும், முன்னோர்கள் தங்களுக்குக் கொடுத்த சட்ட திட்டங்களிலும் உறுதியாய் இருந்த‌வ‌ர்க‌ள்.

இயேசு கிறிஸ்து அவர்களுடைய கண்மூடித்தனமான கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தபடியால் அவர்கள் இயேசுவை எதிர்த்தனர். தங்களுடைய சட்டங்களை விட இயேசு மனிதநேயத்தில் அதிகம் பற்று வைத்திருந்ததை அவர்கள் வெறுத்தார்கள். தங்களுடைய பொருளீட்டும் வழிகளில் இயேசு குறுக்கே நிற்பதால் அவர்கள் எரிச்சலடைந்தார்கள். ஒதுக்கப்பட்ட மக்களை, உயர்ந்த நிலையில் இயேசு உயர்த்தியதை அவர்கள் விரும்பவில்லை.

யூத மதம் மறக்கப்பட்டு வெவ்வேறு அரசாட்சியினால் சிதறடிக்கபபட்டது.  ரோம அரசாங்கம் யூதாவை தொல்லை தரக்கூடிய ஒரு நாடாகக் கருதியது.  யூதர்கள் தீர்க்கதரிசிகள் உரைத்தபடி மேசியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தினர்.  வெளிநாட்டு அரசர்களால் ஒடுக்கப்பட்டிருக்கும் தங்களை மேசியா என்னும் மீட்பர் வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று எதிர் பார்த்தனர். அதைத் தான் அதுவ‌ரை வாழ்ந்திருந்த‌ ப‌ல்வேறு தீர்க்க‌த் த‌ரிசிக‌ள் உரைத்திருந்த‌ன‌ர். அந்த‌ தீர்க்க‌த்த‌ரிச‌ன‌த்தின் விடையாக‌ வ‌ந்தார் இயேசு.

ஆனால் அவருடைய வருகையையே யாரும் அறியவில்லை. தாழ்மையின் வடிவமாக கன்னி மரியின் மடியில் மாட்டுத் தொழுவமொன்றில் பிறந்தார். அரசரை எதிர்பார்த்திருந்த யூதர்களால் தொழுவத்தில் வந்தவர் தான் மேசியா என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏழைகள் கடவுளால் வெறுக்கப்பட்டவர்கள் என்பதே அவர்களுடைய கோட்பாடாய் இருந்தது.

அவர்களில் சில யூதர்கள் விதி விலக்காக இருந்தனர்.  இயேசு பிறந்தபொழுது சிமியோன் மற்றும் அன்னாள் என்னும் தீர்க்கதரிசிகள் அவரைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைந்து அவர் தான் இஸ்ரேலரை விடுவிக்கும் மேசியா என்று வெளிப்படையாக தீர்க்கத்தரிசனம் உரைத்தனர்.

குழப்பமான அரசியல் சூழ்நிலையில், மனிதனை பாவத்திலிருந்து மீட்கவும், பாவமற்ற வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் போதிக்கவும் இயேசு உலகத்தில் வந்தார்.  எதிர்ப்புகளின் மத்தியிலும்,  பெரும்பான்மையான யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், தான் வந்த காரியத்தை பொறுமையாக, அன்பாக தொடர்ந்து செய்தார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது அக்காலத்தில் அவரைப் பின்பற்றியவர்கள் மிகுந்த தைரியத்தோடு தங்கள் மேலதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் எதிர்த்து இயேசுவைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.  இயேசு அவர்களுடைய தீய வாழ்க்கையைத் துவைத்து அழுக்ககற்றி அவர்களை தீவிர நம்பிக்கையுள்ளவர்களாக மாற்றினார். தான் மரித்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின் தன்னுடைய பணியை மண்ணில்  தொடர்வதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இயேசுவின் போதனைகள் மக்களிடையே பெரும் கலகத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தின. எத்தனையோ அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்த போதும் யூத மக்களின் விருப்பத்துக்கிணங்க ரோம அரசாங்கம் அவரைச் சிலுவையில் அறைந்தது.  இயேசுவின் ப‌ணிவாழ்வு வெறும் மூன்ற‌ரை ஆண்டுக‌ளோடு முடிந்து போன‌து. வெறும் பன்னிரண்டு சீடர்களே அவரோடு முழுமையாய் இணைந்திருந்தார்கள். தனது வாழ்நாளில் இருநூறு மைல் தொலைவைத் தாண்டி அவர் பயணித்ததில்லை ! ஆனால் அதுவே க‌ட‌வுளின் திருவுள‌மாய் இருந்த‌து.

தான் முன்ன‌றிவித்திருந்த‌ப‌டியே மூன்றாம் நாள் அவ‌ர் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த‌ இயேசு சுமார் ஐநூறுக்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குக் காட்சி கொடுத்தார். பின்ன‌ர் விண்ண‌க‌ம் சென்று தூய‌ ஆவிய‌ன‌வ‌ரை ம‌னித‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் வாழுமாறு அனுப்பினார். அதுவ‌ரை ப‌ய‌ந்து ந‌டுங்கிக் கொண்டிருந்த‌ சீட‌ர்க‌ள், தூய‌ ஆவியான‌வ‌ர் வ‌ந்த‌பின் தைரிய‌சாலிக‌ளானார்க‌ள்.

அரசுக்குப் பயந்து அறைகளில் அடைபட்டுக் கிடந்தவர்கள் வீதிக்கு வந்தார்கள். இயேசுவே கடவுளின் மகன் என பறைசாற்றத் துவங்கினார்கள். தான் மரணமடையும் முன்பே திருச்சபையைக் கட்டியெழுப்புவேன் என இயேசு கூறியிருந்தார். அந்த பணி அங்கே ஆரம்பமானது.

Image result for crucifixion of jesus

கிறிஸ்தவத்தின் முதல் விதை அது தான். இயேசு இறந்து உயிர்த்த நாற்பது நாட்களுக்குப் பின் அது விதைக்கப்பட்டது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து இறந்து போனார், அதைத் தவிர மற்ற அனைவரும் கிறிஸ்தவத்தின் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளர்களாக மாறிப் போனார்கள்.

அவர்கள் அனைவருமே மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும், கொடிய மரணங்களுக்கும் சாட்சியானார்கள். யோவானைத் தவிர அனைவருமே படுகொலை செய்யப்பட்டு தான் இறந்து போனார்கள்.

ஏரோது ம‌ன்ன‌னின் அவையில் வைத்து த‌லை கொய்ய‌ப்ப‌ட்டு ப‌லியானார் யாக்கோபு. நீரோ ம‌ன்ன‌னின் கால‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டார் பேதுரு. கிறிஸ்த‌வ‌ர்க‌ளைக் கொன்று குவிப்ப‌தை த‌ன‌து பொழுதுபோக்காக‌க் கொண்டிருந்த‌ நீரோ ம‌ன்ன‌ன் பேதுருவையும் கைது செய்தான்.

“பேதுருவை அவ‌னுடைய‌ த‌லைவ‌ர் இயேசு போல‌ சிலுவையிலேயே அறைந்து கொல்லுங்க‌ள்” என‌ ஆணை வ‌ந்த‌து. பேதுரு ப‌த‌றினார். “வேண்டாம் …வேண்டாம்.. ஒரே ஒரு விண்ண‌ப்ப‌ம், க‌ருணை காட்டுங்க‌ள்” என‌ கெஞ்சினார்.

சுற்றி நின்ற‌வ‌ர்க‌ள் ஏள‌ன‌மாய்ச் சிரித்தார்க‌ள். “இப்பாவாச்சும் உயிர் ப‌ய‌ம் வ‌ருகிற‌தா ? ” என்றார்க‌ள். பேதுருவோ,

‘இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு தான் இறந்தார். நானும் அப்படியே இறக்க தகுதியற்றவன். எனவே என்னை தலைகீழாகச் சிலுவையில் அறையுங்கள்’ என்றார். கூடியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். பேதுருவின் அர்ப்பணிப்பை எண்ணி மலைத்துப் போனார்கள்

கிறிஸ்த‌வ‌ர்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌ ச‌வுல் என்ப‌வ‌ருக்கு இயேசு த‌ரிச‌ன‌மானார். ச‌வுல் எந்த‌ அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌த்துக்கு எதிரியாய் இருந்தாரோ, அந்த‌ அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌த்துக்கு ஆத‌ர‌வாய் மாறினார். பைபிளின் நூல்க‌ள் ப‌ல‌ அவ‌ரால் தான் எழுத‌ப்ப‌ட்ட‌ன‌.

ஆதித் திருச்ச‌பையின் முக்கிய‌மான‌ ந‌ப‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ஸ்தேவான் க‌ல்லெறிந்து கொல்ல‌ப்ப‌ட்டார். இயேசு இற‌ந்த‌ மூன்று ஆண்டுக‌ளுக்குப் பின் இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

இயேசுவின் சீட‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ அந்திரேயா தீவிர‌மான‌ பிர‌ச்சார‌த்தில் ஈடுப‌ட்டார். இன்றைய ரஷ்யாவில் அவருடைய நற்செய்தி அறிவித்தல் நடந்தது. அவ‌ரை எக்ஸ் (  ) வ‌டிவ‌ சிலுவையில் அறைந்து கொன்றார்க‌ள். அதிக‌ வ‌லியை அதிக‌ நேர‌ம் கொடுக்க‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இப்ப‌டிச் செய்தார்கள். கிபி 69ல் இவர் கொல்லப்பட்டார்.

இன்னொரு சீட‌ர் பிலிப்பு ர‌ஷ்யாவிலுள்ள‌ சைத்தியாவில் ப‌ணி செய்தார். நீண்ட‌ நெடிய‌ இருப‌து ஆண்டுக‌ள் போதித்த‌பின் துருக்கி சென்று போத‌னையைத் தொட‌ர்ந்தார். அவ‌ரை சிலுவையில் க‌ட்டி வைத்துக் க‌ல்லால் எறிந்து கொன்றார்க‌ள். இவர் இறந்தபோது வயது 87.

ம‌த்தேயு இருப‌த்து மூன்று ஆண்டுக‌ள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் ப‌ணிபுரிந்தார். கி.பி 90 ஆம் ஆண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து மரண தண்டனை விதித்தான். அவரை நிற்க வைத்து படைவீரர்களை வைத்து ஈட்டியால் குத்தச் செய்தான் மன்னன். மத்தேயு உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.

நாத்தான் வேல் எனும் சீட‌ரின் ப‌ணி பெரும்பாலும் ஆர்மேனியா, எராப்போலி போன்ற‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌து. இந்தியாவின் வ‌ட‌மேற்குப் ப‌குதி வ‌ரை இவ‌ர் வ‌ந்த‌தாய் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. ஆனாலும் அத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் இல்லை. ஆர்மேனியாவில் வைத்து ப‌ல‌ அற்புத‌ங்க‌ளைச் செய்த‌தால் இவ‌ர் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார். உயிரோடு இவ‌ருடைய‌ தோலை உரித்து, பின்ன‌ர் சிலுவையில் அறைந்து கொடூர‌மாக‌க் கொலை செய்த‌ன‌ர். இவ‌ர் கிபி. 68ல் இற‌ந்தார்.

அல்பேயுவின் ம‌க‌ன் யாக்கோபு க‌ல்லால் எறிந்து கொல்லப்ப‌ட்டார். யூதா த‌தேயு கிபி 63 வ‌ரை அர்மேனியாவில் ந‌ற்செய்தி அறிவித்து, அந்த‌ நாட்டைக் கிறிஸ்த‌வ‌ நாடாக்கினார். அத‌னால் ஈட்டியால் குத்திக் கொல்ல‌ப்ப‌ட்டார். சீமோன் பார‌சீக‌த்தில் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட்டார். செப‌தேயுவின் ம‌க‌ன் யாக்கோபு சிர‌ச்சேத‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்தியா வ‌ந்த‌ தோமா கிபி 72ல் ஈட்டியால் குத்திக் கொல்ல‌ப்ப‌ட்டார். இயேசுவின் ச‌கோத‌ர‌ரான‌ யாக்கோபு உருளைக் க‌ட்டையால் த‌லையில் அடித்து கொல்ல‌ப்ப‌ட்டார்.

இப்ப‌டி இயேசுவின் கூட‌ ந‌ட‌ந்த‌ சீட‌ர்க‌ள் அனைவ‌ருமே கொடுமையான‌ சாவுக்கு ஆளானார்க‌ள். ஒரே ஒருவ‌ர் ம‌ட்டும் இய‌ற்கை ம‌ர‌ண‌ம் எய்தினார். அவ‌ர் தான் யோவான். த‌ன‌து நூறாவ‌து வ‌ய‌தில் அவ‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த‌ கால‌ம் சுமார் கிபி 33 என்று வைத்துக் கொண்டால், அது முதல் சுமார் 50 , 60 ஆண்டுக‌ள் சீட‌ர்க‌ள் செய்த‌ தீவிர‌மான‌ ப‌ணி தான் கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தின் அஸ்திவார‌மான‌து. இதுவே கிறிஸ்த‌வ‌த்தின் முத‌ல் க‌ட்ட‌ வ‌ள‌ர்ச்சி. இந்தக் காலகட்டத்திலேயே நற்செய்தி உலகின் பல பாகங்களுக்கும் சென்று சேர்ந்தது என்பதே வியப்பான விஷயம். தங்கள் உயிரை துச்சமாக மதித்து சீடர்கள் பணியாற்றியது கிறிஸ்தவ நம்பிக்கையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவைத்தது.

முத‌லாம் ஆண்டு கிறிஸ்த‌வ‌த்துக்கு ரோம‌ அர‌சிட‌மிருந்து மிக‌ப்பெரிய‌ எதிர்ப்புக‌ள் எழுந்த‌ன‌. ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார். திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார். தொட‌ர்ந்து வ‌ந்தவர்கள் கிளாடியுஸ், நீரோ என்பவர்கள். நீரோ ம‌ன்ன‌ன் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை வேரோடு அழிக்க‌ க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் க‌ள‌த்தில் ப‌ணியாற்றிய‌வ‌ன்.

முத‌லில் வாய்வ‌ழியாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ இயேசுவின் வ‌ர‌லாறு பின்ன‌ர் எழுத்து வ‌டிவ‌ம் பெற்ற‌து. குறைந்த‌ ப‌ட்ச‌ம் சுமார் 10, 12 ஆண்டுக‌ள் இயேசுவின் வ‌ர‌லாறு வாய்வ‌ழியாக‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌து. இயேசுவின் வரலாறு பைபிளில் மத்தேயும், மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நூல்களில் வருகிறது.

Image result for oldest bible

இவற்றில், மாற்கு நூலே முதலில் எழுதப்பட்ட நூல். கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார். அதுவே கால‌த்தால் பிந்தைய‌ நூல்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கிமு. 750 ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன. காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன. சாலமோன் மன்னனின் காலத்திற்குப் பிறகு தான் எழுத்து வடிவம் பரவ ஆரம்பித்தது. அதன் படி பார்க்கையில் கி.மு 1300 ம் ஆண்டு முதல், கி.பி 100ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் பைபிளில் இடம்பெற்றுள்ளன எனலாம்.

பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

இர‌ண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் தொட‌ர்ந்து துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌து. டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்கள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை ஒடுக்கினார்க‌ள். ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை சொல்ல‌ப்போனால் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இவ‌ருடைய‌ கால‌த்தில் குறைந்த‌ ப‌ட்ச‌ பாதிப்புக‌ளையே ச‌ந்தித்த‌ன‌ர். ஆனாலும் அவர்கள் பாதுகாப்பின்றி மறைவான வாழ்க்கையே வாழ்ந்தனர்.

அத‌ன் பின்னர் கிபி 161 முதல் 180  மார்க‌ஸ் அரேலிய‌ஸ் ஆட்சி கால‌த்தில் மீண்டும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.

மூன்றாம் நூற்றாண்டிலும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் தொட‌ர்ந்த‌ன‌. செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. துவ‌க்க‌த்தில் அமைதியாக‌வும், போக‌ப் போக‌ வ‌ன்முறையாக‌வும் இவ‌ருடைய‌ ஆட்சி ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்த‌ தேசியு ம‌ன்ன‌ன், கிறிஸ்த‌வ‌ம் அர‌சுக்கு எதிரான‌து என‌ செய்தி ப‌ர‌ப்பி கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியிலான‌ நெருக்க‌டியைக் கொடுத்தார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ வெலேரியன் ம‌ன்ன‌ன், அலீரிய‌ன் ம‌ன்ன‌ன் போன்ற‌வ‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ வெறுப்பாள‌ர்க‌ளாக‌வே இருந்தார்க‌ள். கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட‌ வேண்டும், கிறிஸ்த‌வ‌ நூல்க‌ள் எரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும், கிறிஸ்த‌வ‌க் குருக்க‌ள் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ள் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை நெருக்கின‌.  ஆனாலும் ஒட்டுமொத்த‌மாக‌ப் பார்த்தால் கிறிஸ்த‌வ‌ம் இர‌ண்டாம் நூற்றாண்டை விட‌ மூன்றாம் நூற்றாண்டில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பையும் அங்கீகார‌த்தையும் பெற்றிருந்த‌து.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் த‌ன‌க்குள்ளேயே ப‌ல‌ க‌ருத்து வேறுபாடுக‌ளை கொண்டிருந்த‌து. கிறிஸ்துவ‌த்தின் அடிப்ப‌டைப் போத‌னைக‌ளுக்கு எதிராக‌ குழுக்க‌ள் தோன்றின‌. இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான் கான்ஸ்ட‌ன்டைன் ம‌ன்ன‌ன் நிசியாவில் ஒரு ஆலோச‌னைக் கூட்ட‌த்தை ந‌ட‌த்தினார். இவர்தான் உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன்.

உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன. இது கிறிஸ்த‌வ‌ வ‌ர‌லாற்றின் முக்கிய‌மான‌ ஒரு நிக‌ழ்வு.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் அர‌சாங்க‌த்தோடு இணைந்து செய‌ல்ப‌டும் சூழ‌ல் உருவான‌து. உல‌கெங்கும் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் த‌ன‌து கிளைக‌ளை விரித்திருந்த‌து. ப‌ல்வேறு ச‌ட‌ங்கு ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் உருவாயின‌. புனித‌ர் வ‌ண‌க்க‌ம், புனித‌ர் மூல‌மாய் செபித்த‌ல் போன்ற‌ வ‌ழ‌க்க‌ம் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான் வ‌லுவ‌டைந்த‌து.

கான்ஸ்டைன் ம‌ன்ன‌ன் கான்ஸ்டான்டிநோபிள் எனும் அழ‌கிய‌ ந‌க‌ரை நிர்மாணித்து ஒரு மாபெரும் தேவால‌ய‌த்தையும் க‌ட்டினான். 1453ல் துருக்கிய‌ர் அந்த‌ நாட்டில் ப‌டையெடுத்து அந்த‌ ஆல‌ய‌த்தை ம‌சூதியாக‌ மாற்றினார்க‌ள். அந்த‌ நாடு தான் இன்றைய‌ இஸ்தான்புல் !

கி.பி 486ல் மேற்கு ரோம் சிதறுண்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மிகப் பெரும் பேரரசு தன்னுடைய வலிமை இழந்து கவிழ்ந்தது. கிறிஸ்தவத்தின் துவக்கம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கம் வரையுள்ள காலம் கிறிஸ்தவத்தின் முதல் காலம் என அழைக்கப்படுகிறது.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆயிரத்து ஐநூறு வரையிலான காலம் இடைகாலம் என அழைக்கப்படுகிறது. முதலாம் கிரிகோரி போப் ஆக பதவியேற்ற கிபி 590 களிலிருந்து இந்தக் காலம் துவங்குகிறது. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ப‌ல்வேறு அறிவு நெறிக் கோட்பாடுக‌ள், கொள்கைக‌ள், புதுப் புது சிந்த‌னைக‌ள் வ‌ள‌ர்ந்த‌ன‌. துற‌வ‌ற‌ம் கிறிஸ்த‌வ‌த்தை ஆக்கிர‌மித்த‌து இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான்.

கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார்.

உலக அளவில் கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் நுழைந்தாலும் வளர்ந்தாலும் பொதுவான தலைமை ரோமிலேயே இருந்தது. தனியே கொள்கை ரீதியினான தனித்தனி கிறிஸ்தவ இயக்கங்கள் சில இயங்கிய போதும் மொத்தத்தில் ரோம் போப்பின் கீழே கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டனர்.

இஸ்லாமின் தோற்ற‌மும் வ‌ள‌ர்ச்சியும் சிலுவைப் போர்க‌ளுக்கு வித்திட்ட‌து. பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் இந்த‌ சிலுவைப் போர்கள்.  1095ம் ஆண்டு முதல் 1272ம் ஆண்டு வரை ஏழு முக்கிய‌ சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. எல்லாமே தோல்வியில் முடிந்த‌ன‌. அன்பின் அஸ்திவார‌த்தில் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட்ட‌ கிறிஸ்த‌வ‌ம் வ‌ன்முறையில் நுழைந்த‌ வ‌ர‌லாறு அது. கிறிஸ்தவ‌ர்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ர்க‌ளுக்குமிடையே வெறுப்பு வ‌ள‌ர‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் முன்னெடுத்துச் சென்ற‌ சிலுவைப் போர்க‌ள் முக்கிய‌மான‌ கார‌ண‌ம்.

கிறிஸ்த‌வ‌த்திற்குள்ளே ப‌ல‌ பிரிவுக‌ள் கோட்பாடுக‌ள் தோன்றினாலும், புராட்ட‌ஸ்ட‌ன்ட் பிரிவே மிக‌ப்பெரிய‌ பிரிவாகும். கி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். இவ‌ரால் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ச‌பையே லூத்த‌ர‌ன் ச‌பை. க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பைக்கும், போப்பின் ஆளுகைக்கும் எதிரான‌ இவ‌ருடைய‌ புதிய‌ அமைப்பு உல‌கெங்கும் பின்ன‌ர் ப‌ர‌விய‌து.

க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பையில் அடிப்ப‌டையான‌ ப‌ல‌ ந‌ம்பிக்கைக‌ளை லூத்த‌ர‌ன் ச‌பை எதிர்த்த‌து. குறிப்பாக‌ இயேசுவின் அன்னை ம‌ரியாள் வ‌ண‌க்க‌த்துக்குரிய‌வ‌ர் எனும் சிந்த‌னையையும், இற‌க்கும் வ‌ரை அவ‌ர் க‌ன்னியாக‌வே இருந்தார் எனும் க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையின் ந‌ம்பிக்கையையும் இவ‌ர் எதிர்த்தார். இஸ்லாமிய‌ர்க‌ளின் புனித‌ நூலான‌ குரான் மிரிய‌ம் என‌ ம‌ரியாளை அழைத்து, அவ‌ர் க‌ன்னியாக‌வே வாழ்ந்தார் என‌ குறிப்பிடுகிற‌து. அதே போல‌ க‌த்தோலிக்க‌த் திருச்சபையின் புனித‌ர் வ‌ழிபாடு, பாவ‌ம‌ன்னிப்பு உட்ப‌ட‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை லூத்த‌ர‌ன் ச‌பை எதிர்த்த‌து. பைபிளையும், இறை வார்த்தைக‌ளையும் அது முன்னிலைப்ப‌டுத்திய‌து.

கிபி 1618ம் ஆண்டு கத்தோலிக்க – புராட்டஸ்டண்ட் கருத்துப் போராட்டம் மிகப்பெரிய போராய் வெடித்தது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும் இந்த போரில் ஈடுபட்டார்கள். பல அரசர்கள் தங்கள் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள இந்த போரை பயன்படுத்தினார்கள். ஐரோப்ப நாடு முழுவதும் இந்த போரில் ஈடுபட்டது. இந்த யுத்தம் முப்பது ஆண்டுகள் நடந்தது.

கிறிஸ்த‌வ‌த்தில் ஏராள‌மான‌ பிரிவுக‌ள் ஆர‌ம்ப‌மாகி வ‌ள‌ர‌த் துவ‌ங்கின‌. ப‌ல்வேறு மொழிக‌ளில் பைபிள் அச்சிட‌ப் ப‌ட்ட‌து. உல‌கின் அதிக‌ மொழிக‌ளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ நூல் பைபிள் என்ப‌து இன்றைய‌ நிலை. 1450ம் ஆண்டு தான்  விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த கூடம்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் !!! எனவே விவிலியமே உலகில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெறுகிறது. ஜெர்மனியிலுள்ள மயின்ஸ் என்னுமிடத்தில் இது அச்சிடப்பட்டது.

Related imageதமிழின் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இயேசு சபை பாதிரியார்களையே சாரும்.  கி.பி 1577ல்  “கிறிஸ்தவ வேதோபதேசம்” என்னும் உரை நடை நூல் வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளியான முதல் உரைநடை நூல். இந்நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ‘கிறிஸ்தவ வணக்கம்’ என்னும் நூல் ஆன்ரிக் என்னும் பாதிரியாரால் அச்சிடப்பட்டது. அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராபர்ட் நோபிலி, பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வாழ்ந்து வந்த வீரமாமுனிவர் போன்றோர் பல உரை நடை நூல்களை இயற்றினார்கள்.

அதன்பின் ஸீகன் பால்கு என்னும் டேனிஷ் சபையைச் சேர்ந்தவரின் முயற்சியினால் ஜெர்மனியிலிருந்து அச்சுப் பொறிகளும் அச்சு எழுத்துக்களும் வரவழைக்கப்பட்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. 1713ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அச்சுப்பொறி பல நூல்களைப் பதிப்பித்தது. இவ்வாறு கிறிஸ்தவ மதத்தினரின் மதப்பிரச்சாரம் ஒருவகையில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்டு இதை அவர்கள் செய்யவில்லை. ஆனால் நற்செய்தியைப் பரப்பவேண்டுமெனில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தமிழ் மொழியையும் கற்று, மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் நல்ல இலக்கியங்களையும், அச்சு, உரைநடை போன்ற தளங்களையும் விரிவுபடுத்தினார்கள்.

பைபிளின் மொழிபெய‌ர்ப்புக‌ளும், கிறிஸ்த‌வ‌த்தின் பிரிவுக‌ளும் ம‌த‌த்தை மிக‌ விரைவாக‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குக் கொண்டு செல்ல‌ப் ப‌ய‌ன்ப‌ட்ட‌ன‌. “உல‌கெங்கும் சென்று ந‌ற்செய்தியை அறிவியுங்க‌ள்” எனும் இயேசுவின் க‌ட்ட‌ளைக்கு ஏற்ப‌ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ ப‌ணியைச் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பை, லூத்த‌ர‌ன் ச‌பை, சொசினியானிச‌ம், அர்மீனியானிச‌ம், பியூரிடான்ஸ், ஸெப்பராஸ்டிஸ்ட்ஸ், பிரஸ்பத்தீரியன்ஸ், குவேக்கர் சபை, அனபாப்டிஸ்ட், பக்தி இயக்கம், மொரேவிய சபை, மெதடிஸ்ட் சபை, பிராட் சர்ச் பார்ட்டி, இரட்சண்ய சேனை, பெந்தே கோஸ்தே சபை, யஹோவா சபை, அட்வெண்ட் சபை உட்ப‌ட‌ ப‌ல்வேறு ச‌பைக‌ள் இன்று உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கின்ற‌ன‌.

இன்று உல‌கின் மிக‌ப்பெரிய‌ ம‌த‌மாக‌ உருவெடுத்திருக்கும் கிறிஸ்த‌வ‌த்தின் சுருக்க‌மான‌ வ‌ர‌லாறு இது தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 2 – விவிலியம் கூறும் திருச்சபை வரலாறு

Image result for Acts of the apostlesஆதித் திருச்சபையின் ஆரம்பம்

இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவின் மரணத்துக்கும், உயிர்ப்புக்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர்களுக்கு மாபெரும் சோதனைக்காலமாகவே இருந்தது. என்ன செய்வது ? எப்படி வெளியே தலை காட்டுவது ? காட்டினால் தலை இருக்குமா என்று ஏராளம் கேள்விகள் அவர்களுக்குள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.

மூன்றாவது நாள். இயேசு உயிர்த்துவிட்டார். அந்த செய்தியைக் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார். ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர்களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். கடந்த மூன்று ஆண்டுகளை ஒரு கனவு போல எண்ணி மறந்து விட்டு மீண்டும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும், இனிமேல் யாருடனும் பகைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வாழவேண்டும். இயேசு போன்ற ஒரு துணிச்சல் மிக்க, திறமை மிக்க, கடவுளின் வரம் பெற்ற ஒருவருக்கே இப்படி ஒரு மரணம் நேர்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஒருநாள் அதிகாலை. இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஒட்டு மொத்தமாய்க் காட்சி தருவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. பேதுருவும், அவருடன் சிலரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் கடற்கரையில் இயேசு தோன்றினார். பேதுரு இரவெல்லாம் வலைகளை இழுத்தும் மீன் ஒன்றும் கிடைக்காமல் களைத்திருந்த அதிகாலை வேளை அது. ஒரு காலத்தில் இந்தப் படகில் அமர்ந்து இயேசு போதிக்க அவருக்குப் பின்னால் அமைதியாகவும், கர்வத்துடனும் விழா மேடையில் அமர்ந்திருக்கும் விருந்தாளி போல இருந்த பேதுரு இப்போது வலைகளை இழுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

‘மீன்களைப் பிடித்தது போதும்.. வாருங்கள். உங்களை மனிதர்களைப் பிடிப்போராக்குவேன்’ என்று அழைத்துச் சென்ற இயேசு மனித மனங்களை எப்படி பிடிப்பது ? மனிதர்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன ? அவர்கள் எதற்கெல்லாம் அஞ்சவேண்டும் எதையெல்லாம் துச்சமென எண்ணி விலக்க வேண்டும் என்றெல்லாம் போதித்தார். இப்போது பேதுரு.. மனிதர்களைப் பிடித்தது போதும், வயிறுக்கு உணவிட வேண்டும். மீன்களைப் பிடிப்போமென மீண்டு வந்திருக்கிறார்.

‘பேதுரு…’ இயேசு அழைத்தார் !

பேதுரு கரையை நோக்கித் திரும்பிப் பார்த்தார். ஏதோ ஒரு மனிதர் கரையில் நின்று கொண்டிருக்கிறார். அதிகாலையில் தன்னை அழைப்பது யார் என்று அவருக்குப் புரியவில்லை. எனவே பேதுரு பேசாமல் படகில் அமர்ந்தார்.

‘பேதுரு.. உன் படகின் வலது பக்கமாக வலையை வீசு’ இயேசு சொன்னது கடலின் இரைச்சலையும் மீறி பேதுருவின் காதுகளில் வந்து விழுந்தது.

பேதுருவுக்குள் ஒரு சின்னப் பொறி பறந்தது. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி இயேசு உயிருடன் இருந்தபோதும் நடந்ததை அவருடைய மனம் அசை போட்டது. இருந்தாலும் இப்போது பேசுவது இயேசு தான் என்று அவர் நினைக்கவில்லை. இருந்தாலும் தன் மீது கரிசனை கொண்டு யாரோ வலை வீசச் சொல்கிறார்களே என்று பேதுரு படகின் வலது பக்கமாக வலையை வீசினார்.

ஆச்சரியம் !!! இழுக்க முடியாத அளவுக்கு மீன்கள் வலையை நிறைத்தன. எங்கிருந்து வந்தன இத்தனை மீன்கள் ? பேதுரு திகைத்தார்.

கரையில் நிற்பது இயேசு தான் என்பது பேதுருவுக்கு சட்டென்று விளங்கியது. படகைக் கரையை நோக்கி விரட்டினார். கரையை நெருங்கும் முன்பாகவே படகை விட்டு குதித்து அவரை நோக்கி ஓடினார். தண்ணீர் அவருடைய கால்களில் பட்டு முகம் வரை தெறித்தது.

கரையை அடைந்த பேதுரு ஆனந்தத்தில் அமிழ்ந்தார். கரையில் இயேசு புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தார்.

பேதுருவின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. உள்ளுக்குள் அவருடைய துயரங்கள் எல்லாம் சட்டென்று உருகி மறைந்தன. எந்த இயேசு தங்களை விட்டுப் பிரிந்தார் என்று நினைத்திருந்தாரோ அவர் இதோ தனக்கு முன்னால் நிற்கிறார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தவர், இப்போது தானே இறந்து உயிர்த்து வந்திருக்கிறார் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. பரவசத்தில் நின்றிருந்த பேதுருவை இயேசு அழைத்தார்.

‘பேதுருவே.. நீ என்னை நேசிக்கிறாயா ?’

‘ஆம் ஆண்டவரே…’ பேதுருவிடமிருந்து சட்டென்று பதில் வந்தது.

‘என் ஆடுகளை நீ தான் மேய்க்கவேண்டும்’ இயேசு சொன்னார். தான் இல்லாத போது தன்னுடைய பணிகளைத் தொடராமல், மீண்டும் உலக வாழ்க்கையின் தேடுதலுக்காக வலையுடன் தன் பிரிய சீடன் வந்து விட்டானே என்னும் கவலை இயேசுவின் குரலில் எதிரொலித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி எழுப்பிய மனிதர்கள் இப்போது கட்டுமரத்தோடு அலைகிறார்களே என்னும் ஆதங்கமும் அவருடைய குரலில் தெரிந்தது.

‘பேதுருவே… நீ என்னை அன்பு செய்கிறாய் தானே…’ இயேசு மீண்டும் கேட்டார்.

‘ஆம் ஆண்டவரே.. நாம் உம்மை உண்மையிலேயே அன்பு செய்கிறேன்’ பேதுரு சொன்னார்.

‘அப்படியானால் என்னுடைய ஆடுகளை நீ கண்காணி’ இயேசு சொன்னார். தன்னுடைய போதனைகளையும், இறையரசைப் பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்னும் இயேசுவின் தாகம் அவருடைய வார்த்தைகளில் ஒலித்தது. மக்களைத் திசை திருப்பி அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மதவாதிகளிடமிருந்து மக்களை நல்ல பாதையில் நடத்திச் செல்லவும், அவர்களுடைய வாழ்க்கையைக் கவனிக்கவும் ஒரு மேய்ப்பனாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசுவின் குரல் உணர்த்தியது.

‘பேதுருவே நீ என்னை நேசிக்கிறாயா ?’ இயேசு மூன்றாவது முறையாக பேதுருவிடம் கேட்டார்.

பேதுரு கண்கலங்கினார். இயேசு கைது செய்யப்பட்டபோது மூன்று முறை அவரைத் தெரியாது என்று மறுதலித்த நிகழ்வு அவருடைய மனதுக்குள் பாரமாக அமர்ந்தது. இப்போது இயேசு மீண்டும் மீண்டும் கேட்பது தன் மீது நம்பிக்கையில்லாததால் தானோ என்று பேதுரு கலங்கினார். அவருடைய மனம் உடைந்தது. இயேசுவுக்கு முன்னால் மண்டியிட்டார்.

‘இயேசுவே உமக்கே தெரியுமே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது’ பேதுரு கண்ணீர் விட்டார்.

‘என் ஆடுகளை உன் பொறுப்பில் விடுகிறேன். நீ அவற்றைப் பராமரி’ என்று அவரிடம் அன்புடன் சொன்ன இயேசு அவரை விட்டு மறைந்தார். பேதுருவுடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பேதுரு தெளிவடைந்தார். தன்னுடைய பணி மீன்களைச் சேகரிப்பதல்ல, மனிதர்களைச் சேகரிப்பது என்பதை அறிந்து கொண்டார். எப்படியாவது இயேசுவின் கொள்கைகளை மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். மீண்டும் சீடர்கள் இருந்த இடத்துக்குச் சென்று பதினோரு சீடர்களையும் ஒன்று திரட்டினார்.

இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின்பு சுமார் நாற்பது நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களுக்கு இயேசு காட்சியளித்தார். ஒருமுறை சுமார் ஐநூறு பேர் இருந்த ஒரு பெரும் கூட்டத்தில் மக்களிடையே தோன்றி பேசினார். இந்த நிகழ்வுகளெல்லாம் சீடர்களை பலப்படுத்தின. எங்கும் மீண்டும் இயேசுவைப் பற்றிய பேச்சும் அலையும் ஆரம்பமானது.

சீடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.

‘நாம் பன்னிரண்டு பேராக இயேசுவுடன் திரிந்தோம். இப்போது யூதாஸை இழந்துவிட்டோம். அதற்குப் பதிலாக இன்னொரு நபரைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் பன்னிரண்டு பேராக வேண்டும்’

‘சரி யாரைச் சேர்ப்பது ?’

‘பர்ணபா, மத்தியாஸ் இருவரும் நம்முடைய குழுவில் சேர மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்… அவர்களில் ஒருவரைச் சேர்க்கலாமே’ பரிந்துரை வந்தது.

‘சரி… இருவர் பெயரையும் எழுதிச் சீட்டுப் போடுவோம். இயேசுவின் பெயரைச் சொல்லி ஒரு சீட்டு எடுப்போம். யாருடைய சீட்டு வருகிறதோ அவரை குழுவில் சேர்ப்போம்…’ முடிவு எட்டப்பட்டது.

சீட்டில் பர்ணபா, மத்தியாஸ் இருவரின் பெயர்களும் எழுதப்பட்டன. சீட்டு குலுக்கிப் போட்டு எடுக்கப்பட்டது.

மத்தியாஸ் பெயருக்குச் சீட்டு வந்தது. மத்தியாஸ் யூதாஸினால் காலியான இடத்தை நிரப்பினார்.

அதன்பின் ஒருமுறை எல்லா சீடர்களும் ஒரு இடத்தில் குழுமியிருந்தார்கள். திடீரென நெருப்புத் தழல்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவர்களுடைய தலையில் அமர்ந்தது.

சீடர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த நெருப்பு அவர்களுக்குள் இறங்கிப் பரவியது. அவர்களுடைய உடலும், உள்ளமும் உற்சாகத்தினால் நிறைந்தது. இயேசு கூடவே இருந்தபோது எத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள் இருந்ததோ அதே மகிழ்ச்சி இப்போது அவர்களுக்குள்.
அவர்களுக்குள்ளே இருந்த பயம் விலகிவிட்டது. உள்ளுக்குள் ஏதோ ஒரு அசாத்தியத் துணிச்சல் வந்து நிறைந்தது.

அவர்கள் ஆனந்தமாய் வெளியே வந்தார்கள்.

எதிரே வந்த மக்கள் இவர்களை வினோதமாய்ப் பார்த்தார்கள்.
‘இவர்கள் அந்த இயேசுவின் சீடர்கள் அல்லவா ? இத்தனை நாட்களாய் எங்கே இருந்தார்கள் ? திடீரென கிளம்பியிருக்கிறார்களே’ மக்கள் கூட்டம் கூட்டமாய் பேசினார்கள்.

‘நீங்கள் கொலை செய்த இயேசுவின் சீடர்கள் தான் நாங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள் தானே. நாங்கள் அவரைப் பற்றி உலகெல்லாம் பறைசாற்றப் போகிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.

வணிகர்களும், யாத்திரீகர்களும் குழுமியிருந்த நகர சந்திப்புகளில் அவர்கள் தைரியமாய்ப் பேசத் துவங்கினார்கள் வியந்தார்கள். இதுவரை இயேசு மட்டுமே பேசிக்கொண்டிருந்த இடங்களில் சீடர்கள் தங்கள் பேச்சை, உரையாடலை, போதனைகளை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கே ஆச்சரியம். எல்லா மொழிகளும் அவர்களுக்குச் சரளமாக வந்தன.

இதென்ன விந்தை, ஒருவேளை இதுவும் இறைவனின் திருவுளமா ? நமக்குள் இறங்கிய நெருப்புத் தழல் நமக்கு மொழிகளையும் கற்றுத் தந்ததா என சீடர்கள் தங்களுக்குள் வியந்தார்கள்.

‘உனக்கு இந்த மொழி தெரியுமா ?’

‘இவர்கள் பேசும் எல்லா மொழியும் நமக்குப் புரிகிறதே’

‘புரிவது மட்டுமல்ல, நம்மால் பேசவும் முடிகிறதே…’

சீடர்கள் மேலும் மேலும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் இயேசுவின் புகழையும், கொள்கைகளையும் எங்கும் பரப்புவதென்ற முடிவை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.

பொதுவிடங்களில் பயமில்லாமல் பேசத் துவங்கினார்கள். ஆலய வளாகங்களில் தைரியமாக தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். இயேசு என்பவர் தான் உண்மையான கிறிஸ்து என்பதை வீதிகளில் பறைசாற்றத் துவங்கினார்கள்.

கிறிஸ்தவ மதத்துக்கான விதைகள் சீடர்களால் தூவப்படத் துவங்கின. மக்கள் அவர்களிடம் வந்து திருமுழுக்குப் பெற்று திருச்சபையில் இணையத் துவங்கினார்கள்.

மறை நூல் அறிஞர்களும், குருக்களும் திகைத்தார்கள். ஒரு தலைவலி போனால் பன்னிரண்டு தலைவலிகள் முளைத்திருக்கின்றனவே என்ன செய்வது என்று உள்ளுக்குள் குழம்பிப் போனார்கள். இருந்தாலும் இவர்களையும் வளரவிடக் கூடாது என்று வழக்கம்போலவே அவர்கள் பகை வளர்த்தார்கள்.

சீடர்களின் பணி பரவியது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவத்தின் ஆரம்பப் பணியாளர்கள் யோவானும், பேதுருவும்

ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகம் மூன்று மணி என்பதால் மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத் தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். அவன் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை கேட்டு தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான் அவன்.

தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள். அவனால் சுயமாக ஒரு அடி கூட நடக்க முடியாது என்னும் நிலமை.

பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

‘ஐயா… காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்…’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான்.

பேதுருவும், யோவானும் நின்றார்கள்.

பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே பேதுரு அவனிடம் சொன்னார் ‘என்னைப் பார்’.

அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.

‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று. பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார். ஆறுதல் அளித்தார். அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.

பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.
‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவனால் சரியாக நிற்க முடியவில்லை. தடுமாறினான். ஆனந்தத்தில் கதறினான். அதற்குள் அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

‘ஏய்… இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா ? இப்போது எப்படி நிற்கிறான் ?’

‘அவன் தானா இது ? அல்லது வேறு யாராவதா ?’

‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.

பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்தபிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரு மருத்துவர் போனால் இன்னொருவர் வந்திருக்கிறாரே என்று நோயாளிகள் ஆனந்தமடைந்தார்கள்.

‘ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவரைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்.’

பேதுரு பேசப் பேச கூட்டத்தினர் மெளனமானார்கள். அவர்களுடைய முகத்தில் திகில் படர்ந்தது.

‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். வேண்டுமென்றே செய்யவில்லை. இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். நீங்கள் இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.

மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மறைநூல் அறிஞர்களும், குருக்களும் எரிச்சலடைந்தார்கள். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.

‘ஒருவனை அடித்துக் கொன்று சிலுவையில் தொங்கவிட்டும் இவர்களுக்குப் புத்தி வரவில்லையே. இவர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்து பயமுறுத்தவேண்டும்’ கயபா கர்ஜித்தான். தான் எப்போதுமே தோற்றுப் போய்விடக் கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். தன் ஆதரவாளர்களைத் திரட்டி அன்றே பேதுருவையும், யோவானையும் சிறையில் அடைத்ன்.

இயேசு நிறுத்தப்பட்ட அதே கயபா வின் முன்னிலையில் இப்போது பேதுருவும், யோவானும்.

‘நீங்கள் மக்களிடையே கலகம் உண்டாக்குகிறீர்களா ?’ கயபா கேட்டான்.

‘கலகமா ? நாங்களா ? நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்கு அறிவிக்கிறோம். அவ்வளவு தான்’

‘மரியாதையாக இந்த வேலையை விட்டு விட்டு உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நாங்கள் தரும் எச்சரிக்கை. ‘

பேதுரு சிரித்தார். ‘ எச்சரிக்கையா ? நீங்கள் எங்களுக்கு விடுக்கிறீர்களா ? மடையர்களே நாங்கள் கடவுளுக்குக் கட்டுப் பட்டவர்கள். உங்கள் எச்சரிக்கைகளுக்குப் பயந்து பாயைச் சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் அல்ல.’ பேதுருவின் குரலில் உறுதி தெறித்தது.

‘உங்கள் இயேசுவையே கொன்று விட்டோம். உங்களை விட ஆயிரம் மடங்கு துணிச்சலாய் பேசியவன் அவன். உங்களை விட பல மடங்கு அறிவு உள்ளவன் அவன். அவனையே கொன்று விட்டோம். நீங்கள் பின்வாங்காவிடில் உங்களுக்கும் அதே நிலமை தான்’ அவர்கள் எச்சரித்தார்கள்.

‘நீங்கள் கொன்ற இயேசுவுக்கு என்னவாயிற்று என்பதை நீங்களே அறிவீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். அவர் வல்லமையானவர் என்பதற்கு இதோ இந்த நலமடைந்த மனிதரே சாட்சி ! நாற்பது ஆண்டுகளாக உங்கள் உரையைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போயிருந்த இந்த கால்கள் இயேசுவின் பெயரைக் கேட்டதும் உயிர்த்துவிட்டதே ! தெரியாதா ? வேறென்ன சாட்சி உங்களுக்கு வேண்டும்’ பேதுரு கேட்டார்.

கயபா வியந்தான். இவன் ஒரு மீன்பிடிக்கும் தொழிலாளி தானே. கல்வியறிவு என்பது கடுகளவும் இல்லாத இவனால் எப்படி இவ்வளவு தெளிவாக, சரளமாக, உறுதியாகப் பேச முடிகிறது. இயேசுவைப் பிடித்தபோது ஓடி ஒளிந்த கூட்டமல்லவா இது ? எப்படி திடீரென இவர்களுக்குத் தைரியம் வந்தது ? ஆள்பவர்களுக்கு முன்னால் இவர்கள் இவ்வளவு தைரியமாய் பேசுகிறார்கள் என்றால் ஒருவேளை இயேசு உயிர்த்து விட்டாரோ ? கயபா சிந்தித்தான். ஆனாலும் அந்த சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்தான்.

இயேசுவின் ஆதரவாளர்கள், இயேசுவைப் பின்பற்றிய மக்கள், இயேசுவின் மறைவால் தலைமறைவாகியிருந்தவர்கள் எல்லோரும் பேதுரு, யோவானுக்கு ஆதரவாக அவருடன் இணைந்தார்கள். பொதுவிடத்தில் இவர்களை விசாரித்தால் அது இவர்களுக்கு தான் தரும் ஒரு அங்கீகாரமாக ஆகிவிடக்கூடும், அல்லது ஒரு விளம்பரமாகிவிடக் கூடும் என்பதை உணர்ந்த கயபா பேதுருவையும், யோவானையும் எச்சரித்து விடுதலை செய்தான்

பேதுருவும் யோவானும் எதற்கும் அஞ்சவில்லை. இயேசுவின் பெயரை ஊரெங்கும் பரப்பினார்கள். திருச்சபை கிளைகள் விட ஆரம்பித்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பொய் கொல்லும், உண்மை விடுவிக்கும்

பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவே கிறிஸ்து என்று மக்களிடையே உரையாடி ஏராளமான மக்களை தங்களுடைய ஆதரவாளர்கள் ஆக்கினார்கள். ஏராளமான மக்கள் இயேசுவை கிறிஸ்துவாக, மீட்பராக ஏற்றுக் கொண்டு ஒன்று திரண்டார்கள். அவர்களுடைய சபை வளர்ந்தது.

ஆதித் திருச்சபை அதுதான். அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை.

இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு விரும்பியது அது தானே ‘ உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை. ஆதிக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்ட பிரியப்பட்டார்கள். எனவே அவருடைய போதனைகளின் படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தார்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.

அனனியா சென்று தன்னுடைய சொத்தையெல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.

நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் ? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே ? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம் எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மறுநாள் காலையில் அவன் தன்னுடைய திட்டத்தின் படி சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தைக் பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான்.

‘ஐயா… இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’

பேதுரு அவனைப் பார்த்தார்.

‘அனனியா ! ஏன் பொய் சொல்கிறாய் ? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா ? நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய் ? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய் ?’ பேதுரு கேட்டார்.

பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார் !

குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. கடவுளின் முன்னிலையில் நேர்மையாய் இருக்கவேண்டும். இல்லையேல் மரணம் நிச்சயம் என்று மக்கள் தங்கள் உள்ளத்தில் பயத்துடன் எழுதிக் கொண்டார்கள்.

மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.

அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,
‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா ?’ என்று கேட்டார்.

‘ஆம் விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு கொடுத்திருப்பாரே’ அவள் சொன்னாள்.

‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா ?’ பேதுரு கேட்டார்.

‘ஆம்… இவ்வளவுக்குத் தான் விற்றோம்’ அவளும் பொய் சொன்னாள்.

பேதுரு அவளைப் பார்த்து,’ நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள் ? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே ! உங்களுடைய நல்ல எண்ணத்தை அவன் குழி தோண்டிப் புதைத்துவிட்டானே !’ என்றார்.

அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.

‘இதோ… உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.

அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள். கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அவளையும் எடுத்துக் கொண்டு கணவனின் அருகிலே அடக்கம் செய்தார்கள்.


நாட்கள் செல்லச் செல்ல பேதுருவின் புகழ் எங்கும் பரவியது. அவரால் ஏராளமான அரும் செயல்கள் நடந்தன. ஏராளமான மக்களின் நோய்கள் நீங்கின. ‘இயேசு கிறிஸ்துவின் பெயரால்’ என்று கூறி பேதுரு அனைவரையும் குணமாக்கினார். இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வந்தது.

பேதுரு நடந்து செல்லும்போது அவருடைய நிழல் படும் இடத்தில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டார்கள். அப்படி நம்பிக்கையுடன் வந்தவர்கள் எல்லோரும் சுகமடைந்தனர்.

பேதுருவின் நடவடிக்கைகளும், இயேசுவைக் குறித்த அவருடைய அறிக்கைகளும் குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும் மேலும் மேலும் எரிச்சல் படுத்தின. பலமுறை எச்சரித்தும் தங்களுடைய அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் பணியவில்லையே என்னும் கோபமும் அவர்களிடம் நிரம்பி வழிந்தது.

பேதுருவும், யோவானும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

‘நாங்கள் எத்தனை முறை எச்சரித்தாலும் நீங்கள் இப்படித்தான் உளறிக் கொண்டு திரிவீர்கள் என்றால் இனிமேல் சிறையிலேயே கிடங்கள். எத்தனை பேரைக் கொன்றாலும் நீங்கள் திருந்தப்போவதில்லையா ? ஏன் இந்த பிடிவாதம் ? திருமுழுக்கு யோவான் தலையை இழந்தார், இயேசு சிலுவையில் உயிரையே விட்டார். நீங்களும் ஏன் சாவே தேவை என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்’ சிறையில் அடைத்தவர்கள் கோபத்தில் கத்தினார்கள்.

‘உண்மை பேசியதற்காக இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். அவர் உயிர்த்தார். அதை நாங்கள் அறிக்கையிடுகிறோம் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். பாவத்துக்கு மேல் பாவம் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்’ பேதுரு சொன்னார்.

‘இயேசு உயிர்த்தார்…உயிர்த்தார்…உயிர்த்தார்…. இதைத் தவிர வேறு ஏதும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லையா ?’ அவர்கள் எரிச்சலின் உச்சத்தில் கொதித்தார்கள்

‘உண்மை சுடும் என்பது உண்மை’ பேதுரு சொன்னார்.

‘நீ எங்கள் மீது இரத்தப் பழியைப் போடுகிறாய்’

‘பிலாத்துவின் முன்னிலையில் நீங்கள் சொன்னதை அத்தனை விரைவாய் மறந்து விட்டீர்களோ ? இயேசுவின் இரத்தப் பழி உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும் என்று சொன்னீர்களே !’ பேதுரு அவர்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் ஆத்திரத்துடன் அகன்றார்கள்.

இரவு.

சிறைக்கதவுகளுக்கு உள்ளே பேதுருவும், யோவானும் அடைபட்டுக் கிடக்க அவர்கள் முன்னிலையில் தேவதூதர் ஒருவர் தோன்றினார்.

சிறைக்கதவுகள் தானே திறந்தன. பேதுருவும், யோவானும் வெளியே வந்தார்கள். தூதர் அவர்களிடம்
‘நீங்கள் போய் கோயிலில் நின்று வாழ்வு தரும் வார்த்தைகளை அறிவியுங்கள்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

கதவுகள் மீண்டும் மூடின. பூட்டுகள் பூட்டிக் கொண்டன. சிறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. பேதுருவும், யோவானும் ஆலயத்திற்கு வந்தார்கள்.

மறு நாள் காலையில் அனைவரின் முன்னிலையிலும் பேதுருவும் யோவானும் பேசத்துவங்கினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஏகமாய் அதிர்ந்தார்கள். சிறையில் தானே இவர்களை அடைத்தோம், இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் ? என்று குழம்பினார்கள்.

சிறைக்கு ஓடினார்கள்.

சிறை பூட்டப்பட்டிருந்தது. காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே யாரும் இல்லை. குருக்கள் திகைத்தனர். காவலர்கள் நம்பமுடியாமல் பார்த்தனர். என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார்கள்.

பேதுருவின் உரைகள் வலுவடைந்தன. திருச்சபை மிக வேகமாய் வளர்ந்தது.

பேதுவின் துணிச்சல்

பேதுரு திருச்சபை வளர்ச்சிக்கு மிகவும் வலுவான அடித்தளம் அமைத்தார். இயேசு செய்தவற்றைப் போன்ற பல அற்புதங்களையும், அதிசயங்களையும் ‘இயேசுவின் பெயரால்’ பேதுருவும் செய்தார். ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக இறந்து போன தொற்கா என்னும் பெண்ணையும் உயிருடன் எழுப்பினார். இந்த செயல்களையெல்லாம் கண்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டு கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.

யாக்கோபுவும் நல்ல இறை வல்லமை பெற்ற மனிதர். அவரும் நோயாளிகளைக் குணமாக்குதல், தெளிவாக மறை உண்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவருடைய ஆற்றல் மிக்க பேச்சு பலரை சபையில் இணைத்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ஏரோது மன்னன் கடும் கோபமடைந்தான். தன்னுடைய அதிகாரத்தைக் காட்ட விரும்பி யாக்கோபுவை சபைக்கு இழுத்து வந்தான்.

‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? நாட்டில் கலகம் விளைவிக்கிறாயா ?’ மன்னன் கேட்டான்

‘கலகம் அல்ல, கலங்கிக் கிடக்கும் மனங்களைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறேன்.’ யாக்கோபு பயப்படாமல் சொன்னார்.

‘யார் முன்னிலையில் நீ பேசுகிறாய் என்பது தெரியுமா ?’

‘யார் முன்னிலையில் வேண்டுமானாலும் பேசுவேன். ஏனென்றால் நான் கடவுளின் பின்னால் செல்பவன். எனக்குள் இயேசு இருக்கிறார்’

‘உன்னை இப்போது கொல்லப் போகிறேன். இயேசு உன்னைக் காப்பாற்றுவாரா பார்க்கலாம்’ ஏரோது சிரித்தான்.

‘மன்னிக்கவேண்டும். நீர் என்னைக் கொல்ல முடியாது. என் உடலைத் தான் கொல்ல முடியும். ஆன்மாவைக் கொல்ல முடியாமல் உடலைக் கொல்வோருக்கு அஞ்சவேண்டாம் என்பது என் இயேசு எனக்குச் சொன்ன வார்த்தை !’ யாக்கோபு சொல்ல ஏரோது எரிச்சலைடைந்தான்.

‘என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வாதாடுகிறாயா ?’ என்று கேட்டுக் கொண்டே உறையிலிருந்த வாளை உருவி யாக்கோபின் கழுத்தை நோக்கி வீசினான்.

யாக்கோபின் தலை தெறித்தது.

யாக்கோபு இறைவனுக்காய் இறந்தார். ஏரோது எகத்தாளமாய் சிரித்தான். அரசவையில் இருந்த யூதர்கள் எல்லாம் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரித்தனர். யாக்கோபின் தலை ஓரமாய் தீர்க்கப் பார்வையோடு அவையை வெறித்தது.


‘பேதுரு என்றொரு மனிதன் இருக்கிறான். அவனையும் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடையுங்கள்’ ஏரோது ஆணையிட்டான்.

பேதுரு சிறையில் அடைக்கப்பட்டார்.

‘அரசே.. சென்ற முறை தலைமைக்குரு பேதுருவைச் சிறையில் அடைத்தபோது யாருக்கும் தெரியாமல் தப்பிப் போய்விட்டான். எனவே இந்தமுறை நீங்கள் அதிக கவனமாய் இருக்க வேண்டும்’ ஒருவர் ஏரோதின் காதில் கிசுகிசுத்தார்.

‘தப்பிப்பதா ? பாஸ்கா விழாவிற்குப் பின் அவனைக் கொலை செய்யப் போகிறேன். அவன் இனிமேல் வாழக்கூடாது’ ஏரோது சிரித்தான்.

‘இருந்தாலும், கவனம்…. அவனுடைய சீடர்கள் யாராவது அவனைத் தப்ப வைத்துவிட்டு கடவுள் விடுவித்தார் என்று கதைவிடக் கூடும். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’

‘ம்ம்.. சரி…நம்முடைய படை வீரர்களில் பலவான்களான பதினாறுபேரை தேர்ந்தெடுத்து நான்கு குழுக்களாக அவர்களை அமைத்து பேதுருவுக்குக் காவல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள். பேதுருவை பாஸ்கா விழாவில் மக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும்’ ஏரோது ஆணைகளைப் பிறப்பித்தான்.

காவல் துவங்கியது. நாட்கள் நகர்ந்தன.

நாளை வழக்கு நாள். பேதுருவை மக்கள் மத்தியிலே வைத்து விசாரித்து அவரைக் கொன்றுவிடவேண்டும் என்பது ஏரோது மன்னனின் திட்டம்.

இரவு.

பேதுரு இரண்டு காவலர்களுக்கு இடையே சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். வெளியே காவலர்கள் பல நிலைகளில் நின்று காவல் செய்துகொண்டிருந்தார்கள்.

திடீரென்று அறை பிரகாசமானது. வானதூதர் ஒருவர் பேதுருவின் முன்னால் வந்து நின்றார்.
தூங்கிக் கொண்டிருந்த பேதுருவை அவர் தட்டி எழுப்பினார்.

‘பேதுரு… எழுந்திரும். உடனே எழுந்திரும்’

பேதுரு திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார். அவருக்கு முன்னால் வானதூதர். ஆச்சரியத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பேதுருவின் கைகளில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் தானே அவிழ்ந்து விழுந்தன.

‘உமது இடையை வரிந்து கட்டிக்கொள்ளும் மிதியடியையும் போட்டுக் கொள்ளும்’ தூதர் சொல்ல பேதுரு அவ்வாறே செய்தார்.

‘இப்போது உமது மேலாடையையும் போட்டுக்கொண்டு என்னைப் பின் தொடரும்’ தூதர் சொல்லிவிட்டு முன்னால் நகர பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார்.

சிறையின் கதவுகள் தானே திறக்க, தூதர் நடந்தார். பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார். முதல் நிலை, இரண்டாம் நிலை என ஒவ்வொரு காவல் நிலையாகக் கடந்து தூதர் பேதுருவை அழைத்துச் சென்றார். நகர்¢ன் இரும்புக் கதவுகள் கூட தூதர் நெருங்கியதும் தானே திறந்தது.

பாதுகாப்பான ஒரு இடம் வந்ததும் தூதர் சட்டென்று மறைந்தார். அதுவரை இது ஒரு கனவு என்றே நினைத்திருந்த பேதுரு, சுற்றுப்புறத்தைப் பார்த்தபின்பு தான் நடந்தவையெல்லாம் கனவு அல்ல, நிஜம் என்பதை உறுதி செய்து கொண்டார். அவருடைய ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அவர் கொண்டிருந்த இறைவிசுவாசம் மேலும் மேலும் ஆழப்பட்டது.

அவர் நேராக யோவானின் தாயாருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே பலர் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்கள். பேதுரு சிறையில் இருக்கிறார் என்னும் செய்தியும், நாளை அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப் போகிறார்கள் என்னும் செய்தியும் அவர்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. எப்படியாவது கடவுள் தான் அவரைக் காப்பாற்றவேண்டும், என்று செபித்துக் கொண்டிருந்த வேளையில் பேதுரு அங்கே வந்து கதவைத் தட்டினார்.

பணிப்பெண் ரோதி கதவின் அருகே வந்தாள்.

‘யாரது ?’

‘நான் தான்…’ பேதுரு சொன்னார். பேதுருவின் குரலைக் கேட்டதும் அவள் கதவைத் திறக்காமலேயே ஆனந்தத்தில் உள்ளே ஓடினாள்.

‘பே…பேதுரு வந்திருக்கிறார்’ அவள் தடுமாறினாள்.

‘பேதுருவா ? என்ன உளறுகிறாய் ? அவர் சிறையில் அல்லவா கிடக்கிறார்… நீ நன்றாகப் பார்த்தாயா ?’

‘நான் குரலைத் தான் கேட்டேன். கதவைத் திறக்கவேயில்லை. ஆனால் அது பேதுருவின் குரல் தான்’

‘ஒருவேளை ஏதேனும் வானதூதராய் இருக்குமோ ?’ அவர்கள் கேள்விகளுடனும், ஆவலுடனும், பயத்துடனும் கதவை நெருங்கினார்கள்.

‘யாரது…’

‘நான் தான் கவலைப்படாமல் கதவைத் திறவுங்கள்’ பேதுரு சொல்ல அவர்கள் கதவைத் திறந்தார்கள்.

அதிர்ந்தார்கள். உண்மை தான். பேதுரு தான் கண் முன்னால் நிற்கிறார். அவர்கள் ஆனந்தமடைந்தார்கள். பேதுரு நடந்த செய்திகளையெல்லாம் சொல்ல அவர்களின் விசுவாசமும் ஆழமானது.

ஏரோது மன்னனோ கடும் கோபத்தில் இருந்தான். பேதுருவை அழைத்து வரச் அதிகாலையில் சிறைக்குச் சென்றபோது சிறைச்சாலைக் கதவுகள் மூடிக் கிடந்தன. ஆனால் பேதுரு உள்ளே இல்லை ! ஏரோது மன்னனின் கோபம் காவலர்களின் மேல் திரும்பியது.

‘உங்களுக்குத் தெரியாமல் அவன் தப்பியிருக்க முடியாது’ என்று சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.

பேதுரு பயப்படாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.
பேதுருவின் மரணம்

பேதுரு தன்னுடைய பணியை இஸ்ரேல் நாட்டின் மேற்கு எல்லையிலுள்ள மத்திய தரைக் கடற்கரையோரமாக விரிவுபடுத்தினார். அந்தக் கடல் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அந்தியோக்கியாவில் தங்கி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், மக்கள் வாழ வேண்டிய வழிகளையும் போதித்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார். பின் பவுல் காலத்தில் பேதுரு கொரிந்து நகரில் தன்னுடைய இறைப்பணியை விரிவு படுத்தினார். கி.பி 33ம் ஆண்டு முதல், கி.பி 40 ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அந்தியோகியா நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். ஆசியா மைனர் பகுதியிலும் அவர் தன்னுடைய போதனைகளை நிகழ்த்தினார். அங்கிருந்து எகிப்துக்குப் பயணமாகி எகிப்து நாட்டிலும் துணிச்சலாக இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

எகிப்து நாட்டில் சில காலம் பணி செய்தபின் அங்கிருந்து கிரீஸ் நாட்டுக்குப் பயணமாகி அங்குள்ள கொரிந்து நகரில் இறைபணியாற்றினார். அதன் பின் தன்னுடைய பணியை ரோம், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் விரிவு படுத்தினார். பிரான்ஸ் நாட்டிலுள்ள கால் என்னுமிடத்தின் சார்ட்ரஸ் சபையின் புனித தந்தை என்று பேதுரு அழைக்கப்படுகிறார். பல நாடுகளுக்கும் சென்று இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும், இயேசுவின் பார்வையில் வாழ்க்கை முறை பற்றியும் போதித்தபின் மீண்டும் அவர் ரோமுக்கே திரும்பினார்.

அங்கே இறைபணி ஆற்றிக் கொண்டிருந்த பேதுரு மீண்டும் பல சோதனைகளைச் சந்தித்தார். ஆளும் அரசும், மதகுருக்களும் அவருக்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு அலைகளை எழுப்பினார்கள்.

கி.பி 67ல் பேதுரு கைது செய்யப்பட்டார்.

அவரை மேமர்டைன் என்னும் சிறையில் அடைத்தார்கள்.

மேமர்டைன் சிறை மிகக் கொடுமையானது. சிறையிலேயே கைதிகளைக் கொல்லவேண்டுமென்றால் அங்கே அடைப்பது அவர்களின் வழக்கம். அந்தச் சிறையில் கைகளும் கால்களும் ஒரு தூணில் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் பேதுரு தவித்தார். அவரைச் சுற்றிலும் ஏராளமான கைதிகள். அவர்களில் பலர் இருந்த நிலையிலேயே இறந்து போயிருந்தார்கள். பலர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சமும் காற்றும் வராத அந்த அறையில் பேதுருவும் அடைக்கப்பட்டார்.

உணவோ, நீரோ எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. சிறைக்காவலாளிகள் அவ்வப்போது சிறையைத் திறந்து பிணங்களை அப்புறப்படுத்துவார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் பேதுரு இன்னும் இறக்கவில்லையே என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த வேளைகளில் பேதுரு இயேசுவைப் பற்றி அவர்களுடன் பேசுவார். அவர்களில் பலர் பேதுருவின் உறுதியைக் கண்டும், போதனைகளைக் கேட்டும் கிறிஸ்தவர்களானார்கள். இப்படி பேதுரு சிறையில் சாவுடன் போராடியும், அந்த நிலையிலும் கிறிஸ்தவத்தை வளர்க்கப் போராடிய மாதங்கள் 9 !!

ரோமப் பேரரசராக அப்போது இருந்தார் மன்னன் நீரோ !!

நீரோ மன்னனுக்கு கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. மறைமுகமாக இயேசுவை ஆதரித்தவர்களையும் அவர் கொன்று குவித்தார். பேதுரு வெளிப்படையாக இயேசுவைப் பற்றி போதித்தவர், தப்ப முடியுமா ? அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பேதுரு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும்., ஆணை பிறப்பிக்கப்பட்டது.

‘ஒரே ஒரு விண்ணப்பம்’, பேதுரு கேட்டார்.

‘என்ன விண்ணப்பம் ?’ அவர்கள் கேட்டார்கள். தன்னை விடுவியுங்கள் என்றோ, சிலுவை மரணத்துக்குப் பதிலாய் விரைவாய் சாகக் கூடிய, வலியில்லாத மரணத்தையோ ஏதோ ஒன்றை பேதுரு கேட்கப் போவதாய் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பேதுரு அவர்கள் வியந்து போகும் விதமாய் ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.

‘இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு தான் இறந்தார். நானும் அப்படியே இறக்க தகுதியற்றவன். எனவே என்னை தலைகீழாகச் சிலுவையில் அறையுங்கள்’ பேதுரு விண்ணப்பம் வைத்தார். கூடியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். பேதுருவின் அர்ப்பணிப்பை எண்ணி மலைத்துப் போனார்கள்.

பேதுருவின் விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது.

டைபர் நதியின் கரையில் இருந்த வாடிகன் மலையின் உச்சியில் பேதுரு தலை கீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவருடைய உடலை பதப்படுத்தி வாடிகன் நகரில் அடக்கம் செய்தார்கள்.

தற்போது வாடிகனில் அமைந்திருக்கும், போப்பாண்டவரின் இடமான பேதுரு தேவாலயம் பேதுருவின் கல்லறை மீது தான் அமைந்திருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிறிஸ்தவத்தை வளர்த்த சவுல்

சவுல். கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். இயேசுவின் சீடர்களால் திருச்சபை வெகு வேகமாகக் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரும் வேகத்தடையாக வந்தார் சவுல். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரையும் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். மறை நூல் அறிஞர்கள், குருக்கள் பலர் அவரோடு இருந்தார்கள். சவுல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் இருந்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.

தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர் தலைமைக் குருக்களிடம் சென்று
‘எந்த நகரிலானாலும் சரி, இந்தப் புதிய மறையைத் தழுவுபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அவர்கள் எருசலேமுக்கு இழுத்து வரப்படவும் வேண்டும். இதற்காக ஆணை ஒன்றைத் தயாராக்கி தமஸ்கு நகர தொழுகைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்’ என்றான்.

‘ஏன் தமஸ்கு நகர தொழுகைக் கூடங்களுக்கு ?’

‘அங்கே இந்த மறையைச் சார்ந்தவர்கள் பெருகி வருகிறார்கள். இங்கே இருந்த மக்களை நான் துரத்தி விட்டேன். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மறையைப் பரப்புகிறார்களாம். இதை நாம் தடுத்தாக வேண்டும்’ சவுல் சொன்னார்.

‘சவுல்… உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நம்முடைய சட்டதிட்டங்களின் மேலும், மதத்தின் மேலும் நீ வைத்திருக்கும் மரியாதையை நினைத்து நான் ஆனந்தமடைகிறேன். இதோ, நீ கேட்கும் அத்தனை ஆணைகளையும் தயாராக்கி உன்னிடமே தந்து விடுகிறேன். நீ தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும். இங்கே அந்த மக்களைத் துரத்தியது போல, அங்கும் சென்று உன் தலைமையில் அந்த புதிய மறையினரை துரத்த வேண்டும். கிறிஸ்தவமாம் கிறிஸ்தவம்… இனிமேல் அந்த பெயரில் ஒருவனும் நடமாடக் கூடாது’ தலைமைக் குரு சொல்ல, சவுல் ஆனந்தமடைந்தார்.

ஆணை தயாரானது. அதைத் தமஸ்கு நகருக்கு எடுத்துச் செல்லும் பணியும் சவுலிடமே கொடுக்கப்பட்டது. சவுல் தன்னுடன் ஒரு குழுவினரையும் அழைத்துக் கொண்டு ஆனந்தமாக அந்தப் பணிக்கு ஆயத்தமானார்.

தமஸ்கு நோக்கிய பயணம் துவங்கியது. சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய குழுவினர் அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் தமஸ்கு நகர். அங்கே சென்று ஆணையை வினியோகித்து கிறிஸ்தவர்களாய் உலவுகின்றவர்களை எல்லாம் இழுத்துச் செல்லவேண்டியது தான். சவுல் உள்ளத்தில் எண்ணிக் கொண்டே உற்சாகமாய் சென்று கொண்டிருந்தார்.

திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது ! சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.

‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ?’ குரல் ஒன்று ஒலித்தது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

‘ஆண்டவரே நீர் யார் ?… நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்..’

‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார். இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எனவே அவரிடமிருந்து பதில் குரல் எழவில்லை.

‘நீ எழுந்து நகருக்குப் போ… நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார் எங்கும் ஒரே இருள் ! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது !

மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை. அவருடைய மனதுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது இயேசுவின் குரல். நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா ? எனக்கு ஏன் இப்படி ஒரு காட்சி நடக்கவேண்டும் ? நான் இப்போது என்ன செய்வது ? சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.

பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் துவங்கினார்.
‘ஆண்டவரே… நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.

‘சவுல்… அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார்.

அதே நேரத்தில் அனனியா என்னும் மனிதரிடமும் இயேசு பேசினார்.
‘அனனியா…’ கடவுள் அழைக்க அனனியா ஆனந்தமாய்

‘ஆண்டவரே.. இதோ அடியேன். சொல்லும்’ என்று பணிந்தார். அனனியா தமஸ்கு நகரில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் போதித்து வந்த ஒரு சீடர்.

‘நீ நேர்த்தெருவுக்குச் சென்று அங்கே யூதாவின் வீட்டில் தங்கியிருக்கும் சவுலைச் சென்று பார்’

‘சவுலா ? இயேசுவே …சவுல் எருசலேமில் செய்த கொடுமைகள் உமக்குத் தெரியாததா ? கிறிஸ்தவத்தை அழிக்கத் தான் அவர் இங்கே வந்திருக்கிறார். அவரை நான் போய்ப் பார்க்க வேண்டுமா ?’ அனனியா பயந்தார்.

‘கவலைப்படாதே. சவுல் இப்போது என்னுடைய சீடன். காட்டாற்று வெள்ளமாய் இருந்த அவனை நான் ஒழுங்கு படுத்தியிருக்கிறேன். நீ போய் அவருக்குப் பார்வையையும், தூய ஆவியையும் அளிக்க வேண்டும்’ இயேசு சொல்ல சீடன் அமைதியாய் ஒத்துக் கொண்டான்.

அதன்பின் அனனியா தாமதிக்கவில்லை. நேர்த்தெருவுக்கு ஓடி யூதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.

‘சவுல்… சவுல்… சவுல் இங்கே இருக்கிறாரா ?’ அனனியா கேட்டார்.

சவுல் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்

‘நீங்கள் ?…………..’

‘என் பெயர் அனனியா…’

அனனியாவின் பதிலைக் கேட்ட சவுல் ஆனந்தமடைந்தார். கடவுளின் வல்லமையை நினைத்து வியந்தார்.

‘நான் தான் சவுல். உங்கள் வருகைக்காகத் தான் காத்திருந்தேன்’ சவுல் சொல்ல, அனனியா சென்று சவுலின் கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார். அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கழன்று விழ அவர் பார்வையடைந்தார்.

அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்கும் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.

எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார் !
தன்னுடைய பெயரையும் பவுல் என்று மாற்றிக் கொண்டார். தலைமைக் குருக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள், மறைநூல் அறிஞர்கள் செய்வதறியாமல் திகைத்தார்கள் பவுல் நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் துவங்கினார்.

கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டார்கள்

பவுல் தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். தமஸ்கு நகரிலிருந்து பவுல் வெளியேறிவிடாமலிருக்க நகர வாசலில் காவலாளிகள் நியமிக்கப்பட்டார்கள். பவுலுக்கு, அவருடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கும் செய்தி வந்தது. அவருடைய ஆதரவாளர்கள் எப்படியாவது பவுலைத் தப்ப வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பவுலை ஒரு கூடையில் வைத்து நகரின் கோட்டைச்சுவருக்கு மறுபக்கத்தில் இறக்கிவிட்டார்கள். பவுல் அங்கிருந்து தப்பி எருசலேம் வந்தார் !

எருசலேமில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே பவுல் இயேசுவைப் பற்றிப் போதிக்கத் துவங்கினார். எருசலேமில் யார்தான் போதிக்க முடியும் எதிர்ப்புகள் புற்றீசல் போல கிளம்பின. பவுல் அங்கிருந்து தர்சுக்குத் திரும்பி அங்கே தர்சு நகர மக்களிடம் தன்னுடைய போதனையை புதுப்பித்தார். அங்கே சில ஆண்டுகள் தங்கி இயேசுவின் வாழ்க்கையையும், போதனைகளையும் மக்களிடையே விளம்பினார்.

அதன்பின் பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் பவுலைத் துரத்தின. இயேசுவுக்கு ஆதரவாக பவுல் செயல்பட்டபோது அவரோடு இருந்த தலைமைக் குருக்கள் எல்லாம் இப்போது பரம எதிரிகளாகிவிட்டிருந்தார்கள். எனவே அவர் நாடுகள் மாறி மாறி தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோக்கியா கிறிஸ்தவர்களை பரம விரோதிகளாய்ப் பார்த்தார்கள். பவுல் அங்கே சென்று துணிச்சலாய் போதித்தார். அங்கே அவர் சில புதுமைகளும் செய்தார். ஒரு சப்பாணியை நடக்க வைத்தார்.

யூதர்கள் அவரைத் துரத்தியடித்தார்கள். அவர்கள் கூட்டமாக சேர்ந்து பவுலை சுற்றி வளைத்து கல்லால் எறிந்தார்கள். அவரைக் குற்றுயிராக்கி ஒரு பள்ளத்தாக்கில் வீசினார்கள். அவர் இறந்து விட்டதாக நினைத்து நிம்மதியுடன் திரும்பிச் சென்றார்கள். ஆனால் பவுல் பிழைத்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்து தான் செய்து கொண்டிருந்த இறைப்பணியை தொடர்ந்து நடத்தினார்.

அங்கிருந்து ஐரோப்பாவின் மக்கதோனியாவில் தன்னுடைய அடுத்த கட்டப் பணியைத் துவங்கினார் பவுல். அத்தேனே, கொரிந்து ஆகிய நகரங்களிலும் அவருடைய கிறிஸ்தவ மத போதனைப் பணி நடந்தது. சில ஆண்டுகள் அங்கெல்லாம் பணிபுரிந்தபின் மீண்டும் பவுல் அந்தியோக்கியாவுக்கே திரும்பினார். அந்தியோக்கியாவில் ஏராளம் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.

அதன்பின் கலாத்தியா, பிரிகியா ஆகிய நாடுகளில் பணி செய்ய ஆரம்பித்தார் பவுல். எபேசு நகரில் அவருடைய பணி மிகவும் வேகமாக நடந்தது. ரோமர்களின் நகரமான எபேசுவில் துணிச்சலாய் போதித்த பவுல் எபேசு நகரில் பலர் கிறிஸ்தவத்தைத் தழுவ காரணமானார்.

அதன் பின் மீண்டும் எருசலேமிற்குச் சென்றார் பவுல். எருசலேமில் சென்று எருசலேம் தேவாலயத்துக்குள் யூதர்கள் அல்லாத பிற இனத்து மக்களையும் அழைத்துச் சென்றார். குருக்கள் கொதிப்படைந்தனர். அவர்கள் பவுலைக் கைது செய்தனர்.

தலைமைச் சங்கத்தில் பவுல் நிறுத்தப்பட்டார்.

பவுல் பரிசேயராக இருந்ததால் அங்கே அவருக்கு எதிரான வழக்குகள் எதுவும் நிரூபிக்கப் படாமல் இருந்தது. அவர் ரோமராகவும் இருந்தார் எனவே தலைமைச் சங்கத்தினர் அப்போது அவருக்கு எதிராக ஏதும் செய்யவில்லை. பவுலை ரகசியமாய்க் கொல்வதே ஒரே வழி என்று யூதர்கள் முடிவெடுத்தார்கள். பவுலோ அவர்களிடமிருந்து தப்பி செசரியாவிற்குச் சென்றார்.

இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் கி.பி 64ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார் !

முதல் இரத்த சாட்சி ஸ்தேயான்

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் திருச்சபை மிகவும் வேகமாக வளர்ந்து வந்தது. எதிர்ப்பாளர்களின் எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் வலுவிழந்து விட்டன. திருச்சபையில் ஏராளமான ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர், அனாதைகள் இருந்தார்கள். அவர்களுக்குச் சபையினரே உணவு உறைவிடங்கள் வழங்கினார்கள். மக்கள் பகிர்தலில் சிறந்து விளங்கியதால் அவர்களுக்கு அது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.

மக்களுக்கு உணவு வழக்கும் வேலைகளையும் அப்போஸ்தலர்களே கவனித்துவந்ததால் அவர்களால் அதிக இடங்களில் உரையாற்றவும், போதனைகள் நிகழ்த்தவும் முடியவில்லை. எனவே அவர்கள் கணக்கு வழக்குகளைக் கவனிக்கவும், மக்களுக்கு உணவு வழங்கவும் ஒரு குழுவினரை அமைப்பது என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் ஸ்தேயான்.

ஸ்தேயான் இயேசுவின் கொள்கைகளின் மீது மிகவும் பற்றுக் கொண்டிருந்தவர். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை உறுதியாக நம்பி, அதைப் பொதுவிடங்களில் தைரியமாக உரைத்து வந்தார். அவருக்கு நோய்தீர்க்கும் வல்லமையும் இருந்ததால் மக்கள் அவரிடமும் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். அவரும் பேதுருவுக்கு அடுத்தபடியாக அதிக நோயாளிகளைக் குணமாக்கி அதிசயங்களைச் செய்து வந்தார்.

ஸ்தேயானின் புகழ் பரவியது.

இயேசுவின் பெயரால் கூட்டம் நாளுக்கு நாள் வளர்வதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள் கலக்கமடைந்தார்கள். ஏதேனும் செய்து இவர்களை ஒடுக்கியாக வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்களுடைய பார்வை ஸ்தேயானின் மீது விழுந்தது.

ஸ்தேயான் ஒரு கிரேக்கர். அதை வைத்து அவரை மாட்டிவிடுவது என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.

ஊரிலுள்ள யூத வெறியர்கள் பலரிடம் சென்று
‘ஒரு கிரேக்கன் வந்து யூதர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான். சட்டங்கள் தவறென்கிறான். மோசேயைப் பழித்துரைக்கிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வெட்கமில்லாமல் யூதன் என்று சொல்லித் திரிகிறீர்களே’ என்று திரியைப் பற்ற வைத்தார்கள்.

சிறு பொறியாக போடப்பட்ட வெறியெனும் நெருப்பு வெறித்தனமாய் படர்ந்து பரவியது. யூதர்களில் கல்வியறிவில்லாத பலர், மத சம்பிரதாயங்களில் ஊறிப்போய்விட்ட மக்களோடு சேர்ந்து கொண்டு ஸ்தேயானுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

அவர்கள் ஸ்தேயானை இழுத்துக் கொண்டு தலைமைச் சங்கத்தின் முன்னால் விசாரணைக்காக நிறுத்தினார்கள். ஸ்தேயானைக் கேள்விகளினால் மாட்டவைக்கவேண்டும் என்னும் திட்டம் பலிக்கவேயில்லை, தொடுக்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் மறுக்க முடியா பதில்களை அவர் அளித்தார்.

‘இவன் மோசேயைப் பழித்தான்’

‘நம் சட்டத்தை இடித்துரைத்தான்’

‘யூதர்களிடையே பிரிவினை உருவாக்குகிறான்’ பல்வேறு குற்றச்சாட்டுகள் ஸ்தேயானை நோக்கி எறியப்பட்டன. ஸ்தேயான் அமைதியாய் இருந்தார்.

அவருடைய முகம் மிகவும் சாந்தமாக இருந்தது. அவரைக் கண்டவர்கள் ஏதோ வானதூதர் மக்களிடையே நிற்பதுபோல உணர்ந்தார்கள். ஸ்தேயான் மறைநூலை அவர்களுக்கு விளக்கினார்.
‘உங்கள் மறைநூல் விளக்கங்களைப் பார்த்தீர்களே. எல்லா இறைவாக்கினர்களையும் கொல்கிறீர்கள். பின் அவர்களைக் கொண்டாடுகிறீர்கள். இது தானே வழக்கமாய் இருந்து வருகிறது’ என்று கேட்க கூட்டத்தினர் கொதித்தனர்.

‘உங்கள் முட்டாள்தனமான வழியை விட்டுவிட்டு விலகாவிட்டால் நீங்கள் அழிவது உறுதி’ ஸ்தேயான் கூடியிருந்த எதிரிகள் மத்தியில் இறைவனின் அருளால் தைரியமாய்ச் சொன்னார்.

கூட்டத்தினரின் கோபம் கரை கடந்தது. அவர்கள் அவரை இழுத்துக் கொண்டு சங்கத்திற்கு வெளியே போட்டார்கள்.

ஸ்தேயான் அப்போதும் கலங்கவில்லை. வானத்தை ஏறிட்டுப் பார்த்த அவர்.’ வானம் திறந்திருக்கிறது. இயேசு அங்கே நிற்கிறார். அதை என் கண்கள் காண்கின்றன’ என்றார்.

அவர்கள் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. ஸ்தேயானின் மீது கற்களை எறியத் துவங்கினார்கள். ஸ்தேயான் கலங்கவில்லை, அழவில்லை, அவருடைய முகம் சாந்தத் தன்மையையோ ஒளியையோ இழக்கவில்லை.

மண்டியிட்டார். கற்கள் அவர் மேல் மூர்க்கமாய் விழுந்து கொண்டே இருந்தன.

‘ஆண்டவராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்… இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்’.

இயேசுவின் வழியில் எதிரிகளுக்காக மன்னிப்பை விண்ணப்பித்துக் கொண்டே உடலெங்கும் இரத்தம் வழிய மண்ணில் சாய்ந்து உயிர்விட்டார் ஸ்தேயான்.

இயேசு பணி செய்ய ஆரம்பித்தபின் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் கொலை செய்யப்பட்டார். இப்போது இயேசுவின் மரணம் நிகழ்ந்த சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் ஸ்தேயான் கொல்லப்படுகிறார்.

இயேசுவின் முதல் இரத்த சாட்சியானார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 4 – பைபிளின் ஆரம்பம்

Image result for Bible old

இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் தவிர ஸ்தேவான், பவுல் பர்னபா, யாக்கோபு, தீத்து, மார்கு, லூக்கா போன்ற பலரும் இயேசுவின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கையையும் மக்களிடையே மிகுந்த உத்வேகத்துடன் பரப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த காலம் முதல் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் அவர்கள் செய்த துணிச்சலான, கம்பீரமான போதனைகள் தான் கிறிஸ்தவத்தின் மிகப் பலமான அஸ்திவாரமாக ஆயிற்று.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கொடூரமான மரணத்தைச் சந்தித்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இயேசு சொன்ன ஆறுதல்களும், அவர் கொடுத்த ஊக்கமும் பணி செய்வதிலிருந்து அவர்களை பின்வாங்காமல் பார்த்துக் கொண்டது. அப்போஸ்தலர்கள் அனைவரும் உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதால் அவர்களுக்கு அச்சம் என்பதே இல்லாமல் போயிற்று. இறந்தால் இயேசுவிடம் செல்வோம் என்னும் நம்பிக்கை அவர்களை துணிச்சலாய்ப் பணி செய்ய வைத்தது. அவர்களுக்கு சாவா, வாழ்வா என்று ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகையில் எல்லாம் சாவையே தேர்ந்தெடுத்து கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த இன்னொரு முக்கியமான பணி, இவர்கள் போதித்த இடங்களிலெல்லாம் குழுக்களை ஏற்படுத்தி அங்கெல்லாம் ஒவ்வொரு தலைவர்களை நியமனம் செய்தது. தாங்களாகவே பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்குப் பின் வழிநடத்தும் தலைவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதனால், இவர்கள் செல்லுமிடமெல்லாம் பணியைத் தொடரக்கூடிய வல்லமை படைத்த ஒரு தலைவரை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களும் ஆர்வமுடன் பணியாற்றினார்கள்.

வருடங்கள் உருண்டோடின. இயேசு பற்றிய நிகழ்வுகளெல்லாம் போதனைகள் வாயிலாக மட்டுமே சொல்லப்பட்டு வந்தன. அவர்களிடையே எதுவும் எழுதப்படவில்லை. ஆங்காங்கே பல தலைவர்களை நியமித்ததால் அவர்கள் என்ன போதிக்கிறார்கள், இயேசுவின் போதனைகள் முழுமையாய் மக்களைச் சென்றடைகிறதா என்னும் கவலை முதல் அப்போஸ்தலர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதென்று முடிவெடுத்தார்கள்.

மத்தேயு, வரி வசூலிக்கும் தொழில் செய்து வந்தவர். பல மொழிகளில் திறமை பெற்றவர். அவர் இயேசுவின் வாழ்க்கையை எபிரேய மொழியில் எழுதினார். அவருக்கு பழைய ஏற்பாட்டு நீதி நூல்கள், இறைவாக்குகள் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. எனவே ஒவ்வொரு இறைவாக்கையும், அதன் நிறைவாக இயேசு வந்ததாகவும் அவர் எழுதுகிறார். அவருடைய நூலின் நோக்கம் பெரும்பாலும் யூதர்களைக் குறிவைத்தே இருந்தது என்கிறார்கள் இறையியல் வல்லுனர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள். அதனால் தான் அவர் யூதர்களுக்குப் பரிச்சயமான நீதி நூல்களைக் கோடிட்டு தன்னுடைய எழுத்துக்களை அமைக்கிறார்.

விவிலியத்தில், புதிய ஏற்பாட்டின் முதல் நூலாக இவருடைய நூல் அமையும் அழியாப் பெருமை மத்தேயுவுக்குக் கிடைத்திருக்கிறது. இவர் எபிரேய மொழியில் எழுதிய நூல் தான் முதன் முதலில் இந்தியா வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

மார்கு எழுதிய நூல் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் இரண்டாவது நூலாக வருகிறது. மார்கு தான் முதலில் நூலை எழுதியிருப்பதாக இறையியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ரோம தந்தைக்கும் யூதத் தாய்க்கும் பிறந்த மார்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் இருவருடனும் நெருங்கிப் பழகியவர். இயேசுவுடன் நேரடியான பழக்கமோ தொடர்போ விசுவாசமோ மார்கு கொண்டிருக்கவில்லை. இயேசு உயிர்த்தபின் பேதுரு, பவுல் போன்றோர் ஆற்றிய போதனைகளும், இறை பணியுமே மார்குவை கிறிஸ்தவத்தில் இணைத்தது.

மார்கு அப்போஸ்தலர்கள் சொன்ன சம்பவங்களை நூலாக எழுதினார். பேதுருவும், பவுலும் பிற நாட்டு மக்களுக்குச் செய்திகளை கடிதங்கள் வாயிலாக எழுதி அனுப்புவது வழக்கம். அப்படி செய்திகளை எழுதத் துணைபுரிந்தவர் மார்கு என்றும், அதன் மூலமே அவருக்கு இயேசு குறித்த ஏராளமான தகவல்கள் கிடைத்தன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அலக்சாந்திரியாவில் பணியாற்றிய மாற்கு, அங்குள்ள சிலை வழிபாட்டுக்காரர்களின் பரம விரோதியானார். கி.பி 68ம் ஆண்டில் இயேசுவின் உயிர்ப்பு தின விழா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மக்கள் மார்குவைப் பிடித்துக் கட்டி தெருவழியாக இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தினார்கள். பின் அவரைக் கட்டிவைத்து உயிருடன் கொளுத்தினார்கள். மார்கு சாகாத ஒரு நூலை எழுதிய பெருமையுடன் மரணமடைந்தார்.

லூக்கா இயேசுவை நேருக்கு நேராக சந்தித்தது கூடக் கிடையாது ! நல்ல இலக்கிய ஆர்வலராக இருந்தவர் லூக்கா. அவருடைய நூல் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் மிகவும் கட்டமைவான நூல் என்று போற்றப்படுகிறது. கிரேக்க மொழியில் அவர் இயேசுவின் வாழ்க்கையை எழுதினார். இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் !

இயேசுவை கண்டதில்லை எனினும் ஒரு சிறந்த நம்பிக்கையாளராக இருந்தார் லூக்கா. அவர் அப்போஸ்தலர்களிடம் பெற்ற செய்திகளை வைத்து தன்னுடைய நூலை எழுதினார். அப்படி எழுதுவதற்கு முன்பாக செய்திகளின் நம்பகத் தன்மையை அறியும் பொருட்டு இரண்டு ஆண்டுகள் கலிலேயா, யூதேயா முழுதும் சுற்றித் திருந்தார். அங்கே இயேசுவின் அருகாமையை உள்ளுக்குள் உணர்ந்த லூக்கா நற்செய்தி நூலை எழுதினார். அவருடைய நூலில் மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். யூத அரசர்கள், ஆளுநர்கள் போன்றவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். இது வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகவும் துணையாக இருக்கிறது.

விவிலியத்தில் வரும் ஐந்தாவது நூலான திருத்தூதர் பணிகள் எனப்படும் அப்போஸ்தலர் பணி நூலையும் லூக்காவே எழுதியுள்ளார். விசுவாச வரலாற்று இலக்கிய நூலாக இவை திகழ்கின்றன. தன்னுடைய எண்பத்து நான்காவது வயதில் அவர் மரணமடைந்தார்.

யோவான் இயேசுவின் அன்புச் சீடர். அவர் எழுதிய நூல் விவிலியத்தின் நான்காவது நூல். இயேசுவைக் கடவுளாகக் காட்டும் பல்வேறு போதனைகளையும், நிகழ்ச்சிகளையும் யோவான் தான் விவரிக்கிறார். இயேசுவோடு அருகிருக்கும் வாய்ப்பு இவருக்குத் தான் அதிகமாய் வழங்கப்பட்டது. எனவே இவருடைய நூலில் அதிகமான செய்திகள் காணக் கிடைக்கின்றன.

அப்போஸ்தலர்கள் எழுதிய இந்த நூல்கள் பிற நாடுகளில் வாழும் மக்களுக்கு இயேசுவைப் பற்றிய உண்மையான வாழ்க்கை வரலாற்றை தெரியப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாகிப் போனது. கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு இந்த நூல்கள் மிகப் பெரும் பங்காற்றியுள்ளன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

***************************************************************************************************************************************************
விவிலியம் குறித்த ஒரு அறிமுகம்
**************************************************************************************************************************************************

புனித பைபிள், திருவிவிலியம், பரிசுத்த வேதாகமம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிப்லோஸ் ( biblos) என்னும் கிரேக்கச் சொல் மருவி பிப்ளியோன் என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இதையே பைபிள் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கிறது. பிப்ளோன் என்பது லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். புத்தகம் செய்வதற்குப் பயன்படும் பாப்பிரஸ் அங்கே தான் விற்கப்பட்டது.

விவிலியத்தில் உள்ள செய்திகளை இறைவனின் ஏவுதலால், அல்லது பரிசுத்த ஆவியின் வழி காட்டுதலாம் மனிதன் எழுதினான் என்பதே அனைத்துக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும். இதை கடவுள் மனிதனுக்குத் தந்திருக்கும் வாழ்க்கை முறையாகவும், நம்பிக்கை வழிகாட்டியாகவும், மீட்பின் செய்தியாகவும், அன்பின் கடிதமாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையே கிறிஸ்தவத்தின் அடிப்படை.

விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறது. ஒன்று பழைய ஏற்பாடு. இன்னொன்று புதிய ஏற்பாடு. ஏற்பாடு என்பது உடன்படிக்கையே. பழைய ஏற்பாடு ஆதாமின் பிறப்பு முதல் இயேசுவின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது. புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.

புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தவரை கத்தோலிக்கர்கள் 46 நூல்களும், புரோட்டஸ்டண்ட் (சீர்திருத்தச் சபையார்) பிரிவினர் 39 நூல்களையும் பயன்படுத்துகிறார்கள். மிச்சமுள்ள ஏழு நூல்களும் பாலஸ்தீன அடிமைத்தனத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாலும், அது எபிரேய மொழியில் எழுதப்படாமல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாலும், பாலஸ்தீனத்துக்கு வெளியே எழுதப்பட்டதாலும் சீர்திருத்தச் சபையார் இதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆதித் திருச்சபை இந்த நூல்களை ஏற்றுக் கொண்டதால், கத்தோலிக்கர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இருப்பினும் இது சீர்திருத்தச் சபையாரால் ஒதுக்கப்பட்டதால் கத்தோலிக்கத் திருச்சபை இவற்றை ‘பிற்சேர்க்கை’ என்று பெயரிட்டு தனிப் பிரிவாக தன்னுடைய விவிலியத்தில் இடம்பெறச் செய்துள்ளது.

கிமு. 750 ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன. காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன. சாலமோன் மன்னனின் காலத்திற்குப் பிறகு தான் எழுத்து வடிவம் பரவ ஆரம்பித்தது. அதன் படி பார்க்கையில் கி.மு 1300 ம் ஆண்டு முதல், கி.பி 100ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி 1440 ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது. புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி 1550 பிரிக்கப்பட்டன, ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216ல் பிரித்திருந்தார்.

களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதப்பட்டன. அவற்றின் நகல்கள் பின்னாளில் எடுக்கப்பட்டன. பலவற்றின் மூல நூல்கள் கிடைக்காமல் பிரதிகளிலிருந்தே தகவல்கள் எடுக்கப்பட்டன. சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி 350 ல் கண்டெடுக்கப்பட்டன. யூதேயா பாலை நிலப் பகுதியில் கி.பி 1947 ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் சாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.

பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. சில நூற்றாண்டுகளுக்குப் பின் எபிரேய மொழி அழிவைச் சந்தித்ததால் எல்லா நூல்களும் அரமேய மொழியில் எழுதப்பட்டன. இறைவனின் செய்தியாகிய பழைய ஏற்பாடு சிதறுண்டு போன மற்ற மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த நூல் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப் பட்டது. இந்த மொழிபெயர்ப்பை எழுபது பேர் செய்ததால் இது செப்துவஜிந்த் ( எழுபதின்மர் நூல் ) என்று அழைக்கப்பட்டது. இதில் ஏழு நூல்கள் அதிகம் உள்ளன. இவையே கத்தோலிக்க மத விவிலியத்தில் இடம்பெற்றுள்ள, சீர்திருத்த சபை விவிலியத்தில் இடம் பெறாத ஏழு நூல்கள்.

புதிய ஏற்பாட்டு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது.

புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப் பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

1450ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த கூடம்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் !!! எனவே விவிலியமே உலகில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெறுகிறது. ஜெர்மனியிலுள்ள மயின்ஸ் என்னுமிடத்தில் இது அச்சிடப்பட்டது.

சீகன்பால்கு என்னும் லூத்தரன் மறைப்பணியாளர் 1715ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது தமிழ் மொழியில் தான் !. அதன் பின்னர் 1727 ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது.
தற்போது உலக மொழிகள் 1848 ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 5. திருச்சபை வளர்ச்சியின் முதல் நிலை

Image result for Christianity in first centuryமுதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

முதலாம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு ரோமை அரசிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தன. அவர்கள் கிறிஸ்தவர்களின் மதத்தின் மேல் கொண்டிருந்த சந்தேகமே இந்த எதிர்ப்புக்குக் காரணம் எனலாம். அந்த சந்தேகங்களில் முக்கியமானவைகளாக கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றைச் சொல்லலாம்.

குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும் வழக்கமான மத வழிபாட்டுக்குரியனவாய் இருக்கவில்லை எனவே கிறிஸ்தவர்களின் வழிபாடுகளின் மேல் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இருந்து வந்தது. குறிப்பாக வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் உண்ணும் அன்பின் விருந்தில் குழந்தைகளின் மாமிசம் பரிமாறப்படுகிறது எனும் வதந்தியும் எழுந்தது.

இயேசுவின் இறுதி இரவு உணவுப் பந்தியில், இயேசு அப்பத்தைஎடுத்து அது தன்னுடைய உடல் என்றும், திராட்சை இரசத்தை தன்னுடைய இரத்தம் என்றும் சொல்லி சீடர்களுக்குக் கொடுத்தார். சீடர்களும் அதை உண்டார்கள். அதை நினைவுகூரும் விதமாகவே வழிபாடுகளின் அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

இது இயேசுவின் உடல் என்று சொல்லி அப்பத்தை சீடர்கள் உண்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைக் குடித்தோம் என்றும் பிரசங்கித்தார்கள். இது தான் அவர்களுடைய அன்பின் விருந்தின் மேல் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ காரணமாய் அமைந்தது.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்றும் எண்ணப்பட்டனர். அந்த நாட்களின் வழக்கத்தில் இருந்த சிலை வழிபாடுகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவில்லை. மன்னனைக் கடவுளாக வணங்கும் வணக்கமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. எனவே இவர்களுடைய வழிபாடு குறித்து மக்களிடையே வியப்பும், சந்தேகமும் எழுந்தது. கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபடுபவர்கள் அல்ல என்று கருதப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள் பிறரோடு கலந்து கொள்ளாமல் தனித் தனியாக குழுக்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான தொழில்களில் சிலை வழிபாட்டு முறைகள் இருந்ததால் அந்தத் தொழில்களையே அவர்கள் புறக்கணித்தனர்.

ரோம அரசுக்கும், அவர்களுடைய அரசாங்கத்துக்கும் மேலானது கிறிஸ்துவின் அரசு என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். எனவே அவர்கள் அரசையோ, தலைவர்களையோ முதன்மையானவர்களாய் கருதவில்லை. அவர்களுக்கு மனிதருக்குரிய மரியாதையை மட்டுமே வழங்கினர். கடவுளே முதன்மையானவர் அதற்குப் பிறகே மற்றவர்கள் என்னும் போக்கு கொண்டிருந்தார்கள். மனிதருக்குக் கீழ்ப்படிவதை விடக் கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்றே போதித்தனர்.

ரோமை அரசு கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் ரோமர்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்க முக்கியமான ஒரு காரணம் எனக் கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களின் வளர்ச்சி ஆலய வியாபாரங்களையும் பெருமளவில் பாதித்தது. பலியிடுதல் என்பது பாவத்தைப் போக்குவதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்கு என்பது யூதர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது. எனவே தங்கள் பாவங்களுக்குத் தக்கபடி பலிப் பொருட்களை அதிக விலை கொடுத்து ஆலய வளாகங்களிலிருந்து பெற்றுக் கொண்டு அதை கடவுளுக்குப் பலியிடுவது அவர்களது வழக்கம். இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக அங்கு நடை பெற்று வந்தது. கிறிஸ்தவர்களிடையே அந்த நம்பிக்கை இல்லை. எனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பலியிடுவதை நிறுத்தினார்கள். இது அவர்களுடைய வியாபாரத்தைப் பாதித்து விட்டது. குறி சொல்பவர்களும் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டதால் கிறிஸ்தவர்களை எதிர்த்தனர்.

அந்த நாட்களில் நிகழ்ந்த போர்களும், இயற்கைச் சீற்றங்களுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என எண்ணப்பட்டனர். கிறிஸ்தவர்களின் புதிய வழிபாட்டு முறையினால் கோபம் கொண்ட மற்ற தெய்வங்கள் மனிதர்களுக்கு இடர்கள் வழங்கியதாக அவர்கள் நினைத்தனர்.

கிறிஸ்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாய் இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை விரைவிலேயே வரும் எனும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் உயிரை துச்சமென மதித்து மதத்தைப் போதித்தனர். அவர்கள் ஒரு மாபெரும் மனித சக்தியாக உருவெடுத்து வந்தனர். எனவே இவர்கள் ரோமை ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடும் எனும் பயம் நிலவியது.

கிறிஸ்தவர்களின் தைரியம் அரசுக்கே சவாலாய் இருந்தது. ரோமை தெய்வங்களுக்கு தூபம் காட்ட கிறிஸ்தவர்கள் மறுத்தனர். அதற்காக எந்த ஒரு பெரிய தண்டனையையும் புன்னகையுடன் பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராய் இருந்தனர். கிறிஸ்தவர்கள் எனும் பெயரை வைத்திருப்பதே தண்டனைக்குரிய தவறாய் பார்க்கப்பட்டது.

யூத மதகுருக்கள் மற்றும் யூத மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியோர் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து பொய்பிரச்சாரங்களையும், புகார்களையும் ரோம அரசுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பிற மத சிலைகளுக்கு தூபம் காட்ட மறுத்ததையெல்லாம் அரச விரோத செயல்களாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராக கலகம் மூட்டினார்கள். கிறிஸ்தவர்களால் தான் இயற்கைச் சீற்றங்கள் நடக்கின்றன என்றும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாகக் கூடுவது பின்னாளில் அரசைப் பிடிப்பதற்கான ஆலோசனையே என்றும் அரச காதுகளில் செய்திகள் சொல்லப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வளர்ச்சியின் முதல் கட்டம் என்று அப்போஸ்தலர்களின் மதப் பிரச்சாரத்தைக் குறிப்பிடலாம். இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும், மீண்டும் அவர் உலகிற்கு வருவார் என்னும் நம்பிக்கையையும், இயேசு உயிர்த்துவிட்டார் அவர் கடவுளாக இருக்கிறார் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டே நடந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி நடந்து நாற்பது நாட்களுக்குப் பின் இந்த பணி அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்கப் பட்டது. அது யோவானின் மரணம் நிகழ்ந்த கி.பி நூறாம் ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த காலத்தில் சுமார் முப்பத்து இரண்டு நாடுகள், ஐம்பத்து நான்கு நகரங்கள், மற்றும் ஒன்பது மத்திய தரைக்கடல் சார்ந்த தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

இந்த முதல் காலகட்டம் கிறிஸ்தவர்களுக்கும் அந்த மதத்தைப் பரப்பியவர்களுக்கும் மிகவும் சோதனைகள் நிறைந்த காலமாகவே இருந்தது. மரணத்தை விரல்களில் பிடித்துக் கொண்டே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் செயல் நடந்தது. தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமுதாயத்திலிருந்து நிராகரிக்கப் பட்டனர்.

ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார்.

திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார்.

இயேசுவின் மறைவுக்குப் பிறகு அரசேற்ற மன்னன் காலிகுலா. இயேசுவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திருபவர்கள் மீது இவருக்கு அலர்ஜி. எனவே அவர் இயேசுவைப் பின்பற்றியவர்களை அடியோடு வெறுத்தார். இவர் மக்கள் தன்னை வணங்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தார். புகழ் பெற்ற எருசலேம் தேவாலயத்தில் தன்னுடைய சிலையை நிறுவி ஆராதனை செய்யப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆயுள் அவருடைய ஆசையை நிறைவேற்றவில்லை. அவருடைய எண்ணம் நிறைவேறும் முன்பாகவே கி.பி நாற்பத்து ஏழில் இறந்தார்.

அடுத்ததாக கி.பி 41ல் ஆட்சிக்கு வந்த கிளாடியுஸ் மன்னனும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே இருந்தார். கிறிஸ்து என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் பேர் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கிறிஸ்தவர்களைப் பற்றி அவர் நினைத்திருக்கிறார். எனவே இவருடைய ஆட்சிக் காலமான கி.பி 49ல் கிறிஸ்தவர்கள் ரோமிலிருந்து துரத்தியடிக்கப் பட்டனர்.

இதற்குப் பின் வந்த மன்னன் தான் ரோம் தீ பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் ! இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களின் இருண்ட காலம் எனலாம்.

கி.பி 54 முதல் கி.பி 68 வரை ரோம பேரரசை ஆண்டு வந்த நீரோ மன்னனின் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்தன. தன் தாயையே கொலை செய்தவன் நீரோ மன்னன் என்கிறது வரலாறு.

இவன் காலத்தில் ரோமா புரியின் ஒரு பாகத்தை இவனே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மேல் சுமத்தினான். அதனால் பல கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பிடித்து சிங்கங்களின் கூண்டுகளிலும், முதலைகளின் தடாகத்திலும் போட்டு அவர்களை விலங்குகள் கொல்வதைப் பார்த்து ரசித்தார்கள்.

சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் கிறிஸ்தவர்களைக் கட்டி வைத்து அவர்களை உயிரோடு கொளுத்தி நீரோ மன்னன் அந்த வெளிச்சத்தில் வெற்றி ஊர்வலம் செல்வான். இதனால் கிறிஸ்தவர்கள் உயிர் விளக்குகள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகபட்ச வன்முறையை அரங்கேற்றிய நீரோ அதன்பின் நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.

எந்த அளவுக்கு நெருக்கடியை கிறிஸ்தவர்கள் சந்தித்தார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்தார்கள்.

பலர் கிறிஸ்தவத்தை யூதமதத்தின் ஒரு பிரிவாகவே பார்த்தார்கள். இயேசு யூத மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவருடைய சீடர்கள் யூத மதத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களைச் சார்ந்தே தங்கள் விளக்கங்களை அமைத்ததாலும், யூதர்களிடையே அவர்களுடைய போதனை அதிக அளவில் இருந்ததாலும் அப்படி ஒரு தோற்றம் இந்த முதல் கட்டத்தில் ஏற்பட்டது.





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கி.பி அறுபத்து ஒன்பதாம் ஆண்டு முதல் எழுபத்து ஒன்பதாம் ஆண்டுவரை ஆட்சி செய்த மன்னன் வெஸ்பெஷியன் என்பவர். இவருடைய மகன் தான் எருசலேம் நகரத்தை அழித்த தீத்து.

தீத்து கி.பி எண்பத்து ஒன்றுவரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. மறைந்தே வாழ்ந்தனர். இவனுக்குப் பின் அரசேறினான் இவனது தம்பி தொமித்தியான்.

தொமித்தியானின் ஆட்சிக் காலம் கி.பி எண்பத்து ஒன்பது முதல் கி.பி தொன்னூற்று ஆறு வரை. எண்பத்து ஒன்றாம் ஆண்டு செப்டம்பர் பதிமூன்றாம் நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொண்டார்.

நாட்டிலுள்ள அனைவரும் தன்னை வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான். சிலை வழிபாடுகள் போல தனக்கும் தூபம் காட்டி வழிபட வேண்டும் என எல்லோரையும் கட்டாயப்படுத்தினான்.

கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்தனர். அவர்கள் அரசரின் ஆணையை மதிக்கவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்னும் முத்திரை குத்தி துன்பப்படுத்தப் பட்டனர். கிறிஸ்தவர்கள் கலகக் காரர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

அரசனை வணங்காத கிறிஸ்தவர்கள் மீது அரசனின் கோபம் பாய்ந்தது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வன்முறைக்கு ஆளானார்கள்.

இவன் காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டாலும் கிளை விட்டது. கிறிஸ்தவம் அரண்மனைகளிலும் நுழைந்தது. மன்னனின் தம்பி கிளமெண்ட் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான். கிறிஸ்தவர்களை வெறுத்த மன்னன் தம்பியையும் வெறுத்தான்.

தன் தம்பி என்றும் பாராமல் மன்னன் கிளமெண்ட் ஐ கொன்றான். அவனுடைய மனைவியை நாடுகடத்தினான்.

அந்த நாட்களில் ரோம் நகரில் நடந்த வன்முறைகளைக் குறித்து ‘ஷெப்பர்ட் ஆஃப் ஹெர்ம்ஸ்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணவம் கொண்டு தன்னை ஆண்டவன் என்று அழைத்துத் திரிந்த தொமித்தியான் நீண்டநாட்கள் வாழவில்லை. கி.பி தொன்னூற்று ஆறில் அவன் படுகொலை செய்யப்பட்டான்.

அதன்பின் நெர்வா எனும் மன்னன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிறிஸ்தவர்கள் சற்றே இளைப்பாறும் காலமாக அது இருந்தது. பிரச்சனைகள் இல்லாத ஆட்சியாய் நெர்வாவின் ஆட்சி இருந்தது.

ஆதிகாலத் திருச்சபை கிறிஸ்தவத்தின் பொற்காலமாக இருந்தது. உண்மையில் கிறிஸ்துவின் போதனைகளை அப்படியே பின்பற்றும் காலமாக அது இருந்தது. அப்போது எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களுக்குள் பிளவு காணப்படவில்லை.

மக்கள் தங்கள் சொத்துகளை பொதுவில் கொண்டு வைத்தார்கள். அதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கென யாரும் சொத்து சேர்த்து வைக்கவில்லை.

அதிகமாக செபித்தார்கள். இயேசு உடனே திரும்ப வந்து தங்களை அழைத்துச் செல்வார் எனும் எண்ணம் நிறைய பேரிடம் காணப்பட்டது. எனவே உருக்கமான செபம் எப்போதும் நடந்தது.

பெண்களின் நிலை அந்த காலகட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்தது. அனைத்து செயல்களிலும் பெண்களின் ஈடுபாடு இருந்தது. அவர்கள் ஆண்களோடு சமமாக பணிகளில் ஈடுபட்டார்கள்.

உதவுதல் மிக முக்கியமான பணியாக இருந்தது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக இருந்தது அன்றைய திருச்சபை.

இயேசுவுக்காய் துன்பப்படுவது நல்லது என்று நினைத்தார்கள். ‘என் நிமித்தம் மக்கள் உங்களைத் துன்புறுத்தினால் மகிழுங்கள்’ என்று இயேசு போதித்திருந்தார். எனவே துன்பத்தை மக்கள் விரும்பி ஏற்றார்கள்.

தங்களை வெறுத்தவர்களையும் துன்பப்படுத்தியவர்களையும் ஆதிகால கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை. அவர்களுக்காய் செபித்தார்கள். அவர்களை மன்னித்தார்கள்.

திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. குழுவில் இணைய விரும்புபவர்கள் திருமுழுக்கு அளிக்கப்பட்டனர். முழுமையாக நீரில் மூழ்குவதோ, மூன்று முறை தண்ணீர் தெளிப்பதோ ஞானஸ்நானத்தின் அடையாளமாய் இருந்தது.

எனினும் பெரும்பாலும் யூதர்களே கிறிஸ்துவர்களானதால் யூத மத வழக்கங்களும் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமைகளிலும், இயேசுவின் உயிர்ப்பு நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் அவர்கள் ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள்.

மாற்கு நூலே விவிலியத்தின் முதலாம் நூல் இது கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார்.

லூக்கா அப்போஸ்தலர் பணி எனும் நூலையும் எழுதினார். அது கி.பி அறுபதில் எழுதப்பட்டது. தூய பவுல் எழுதிய நிரூபங்கள் கி.பி ஐம்பதுக்கும் அறுபத்து நான்கிற்கும் இடைப்பட்டவை. எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அறுபத்து இரண்டிற்கும், எழுபதுக்கும் இடையே எழுதப்பட்டவை.

யாக்கோபு எழுதிய நூல்கள் கிபி நாற்பத்து நான்கிற்கும் ஐம்பதுக்கும் இடையில் அல்லது அறுபத்து இரண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒன்று பேதுரு தனது நூலை கி.பி அறுபத்து நான்கில் எழுதினார். யோவான் தரிசனம் கி.பி தொன்னூற்று ஐந்திலும் எழுதப்பட்ட யூதாவின் கடிதங்களும், யோவானின் கடிதங்களும் கி.பி நூறில் எழுதப்பட்டன.

இந்த நூல்கள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக காரணமாயிற்று. எருசலேமில் மட்டுமே சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அது மட்டுமன்றி அந்தியோக்கியா, எபேசு, கொரிந்து, சமாரியா, யோப்பா, லித்தா, சீரியா, யூதேயா உட்பட பல்வேறு இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவியது.

கி.பி 66 ல், யூதேயாவில் வாழ்ந்த யூதர்களுக்கும் ரோம அரசுக்கும் எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தது. யூத மதத்தின் கோட்பாடுகளை காயப்படுத்தும் விதமாக ரோமர்கள் கடும் விமர்சனம் செய்தார்கள். ஏற்கனவே ரோம அரசுக்கு வரி கொடுப்பதில் உடன்படாத யூதேயா வாழ் யூதர்கள் யூத மதத்தை ரோமர்கள் விமர்சித்ததும் பொங்கினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் படை வலிமையுடைய ரோமர்களின் முன்னால் யூதர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போர் தீவிரமாய் நடந்தது. நீண்டகாலம் நடந்த யுத்தம், பட்டினியையும், ஏராளமான சாவுகளையும், உள்நாட்டுக் கலவரங்களையும் சம்பாதித்துத் தந்தது.

பாலஸ்தீனம் வீழ்ச்சியடைந்தது.

கிபி எழுபதாம் ஆண்டில் எருசலேம் தீக்கிரையானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.

யூதர்கள் அடிமைகளாக்கப் பட்டார்கள். அடிமைகளாக்கப் பட்ட யூதர்களை வைத்து ரோமர்கள் கடுமையான வேலை வாங்கினர். அப்போது தான் உலகப் புகழ் பெற்ற கொலோசியம் யூத அடிமைகளால் கட்டப்பட்டது.

கிபி. எழுபதாம் ஆண்டில் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட பின்பு தான் யூத மதமும், கிறிஸ்தவ மதமும் இரண்டு வேறுபட்ட மதங்கள் என்னும் பார்வை பரவியது. அது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். வீசி எறியப்பட்ட விதைகள் ஆங்காங்கே புதிய மரங்களைத் தோற்றுவிப்பது போல, சிதறடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்த இடத்திலெல்லாம் கிறிஸ்தவத்தை விதைத்தார்கள்.

எருசலேமில் ஆரம்பமான இயேசுவின் போதனைகள் இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பிற்குப் பிறகு எருசலேமிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஆரம்பமாகி பின் மற்ற இடங்களுக்கும் பரவியது. குறிப்பாக ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இடங்களிலெல்லாம் கிறிஸ்தவம் பரவியது.

பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

இரண்டாம் நூற்றாண்டில் டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்களால் கிறிஸ்தவ மதத்துக்கு துன்பம் ஏற்பட்டது.

டிரேஜான் கிபி தொன்னூற்று எட்டு முதல் நூற்று பதினேழு வரை அரசாண்டார். இவருடைய காலத்திலும் சிலை வழிபாடு ஊக்கப்படுத்தப் பட்டு, கிறிஸ்தவ வழிபாடு இன்னலுக்கு இலக்கானது. கிறிஸ்தவர்கள் அதிகமாய் பெருகி விட்டதனால் தேவாலயங்களில் பலியிடுவோர் குறைந்து விட்டதாகவும், அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் பித்தானியாவின் அதிகாரி பிளினி என்பவர் டிரேஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கிறிஸ்தவர்கள் அரசனை வணங்கினால் விடுவிக்கப்பட்டனர். இல்லையேல் அவர்கள் துன்பப்படுத்தப் பட்டனர்.

இக்னேஷியஸ் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத பேராயர். அந்தியோக்கியாவின் மூன்றாவது பேராயராய் இவர் இருந்தார். கிறிஸ்தவ மதத்தில் மிகவும் உறுதியாய் இருந்த இவர் தியோபோரஸ் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்டிருந்தார்.

இயேசு ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்’ என்று சொல்லி கைகளில் தூக்கிய குழந்தைகளில் ஒன்று இவர் என்று இவரைக் குறித்து கதைகள் உலவுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றுக்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று சொல்லி இக்னேஷியஸ் கண்டிக்கப்பட்டார். அவரோ அசந்து போகவில்லை. கிறித்துவுக்கு சாட்சியாக நின்றார். இயேசுவை ஆதரித்து மன்னனை எதிர்த்தார். எனவே ரோம் நகருக்குக் கொண்டு வரப்பட்டு அவர் கொடிய விலங்குகளுக்கு விருந்தானார்.

ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை. எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு ஏதேனும் அங்கீகாரமோ, கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாவலோ கிடைக்கவில்லை.

வழக்கம் போல கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். வெளிப்படையாக விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ரோமை படைத் தளபதியாய் இருந்த அலெக்சாண்டர் என்பவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதற்காக கொலை செய்யப்பட்டார். மன்னனின் வெற்றியைப் பறைசாற்றி சிலைவழிபாடு நடக்கையில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். அது அரசனின் கோபத்தைக் கிளறி விட்டது. கிறிஸ்தவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். உயர் பதவியில் இருந்தாலும் கிறிஸ்தவன் என்றால் மரணம் வரும் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.

அராரத் மலை கிறிஸ்தவர்களின் இரத்தத்தினாலும் இறுதி மூச்சுகளினாலும் நிறைந்தது. துன்பம் இறைவரம் என்றே நினைத்தனர் கிறிஸ்தவர்கள். எனவே அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிட்டனர். அப்படி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் முட்களினால் முடிசூட்டப்பட்டனர். ஈட்டிகளினால் குத்தி கொலை செய்யப்பட்டனர். சிலுவையில் கொடூரமான கொலை செய்யப்பட்டனர். இயேசு தன்னுடைய மரணத்தின் போது அடைந்த அத்தனை வலிகளையும் ஒரு தவம்போலவே இருந்து ஏற்றுக் கொண்டனர் கிறிஸ்தவர்கள்.
எத்தனை கொடுமைகள் தங்களுக்கு எதிராக நடந்த போதிலும் கிறிஸ்தவர்கள் பொறுமை காத்தனர். எனவே கிறிஸ்தவர்களின் கடவுள் மிகப் பெரியவர் என்னும் கருத்தும் எழுந்தது. கொலோசீரியஸ் என்பவர் ‘கிறிஸ்தவர்களின் தலைவர் பெரியவர்’ என்று வெளிப்படையாய் சொன்னார்.

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் மன்னனின் கோபத்துக்குத் தப்பவில்லை. கொலோசீரியனும் மன்னனின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார்.

அவருடைய காலகட்டத்தில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வு யூதர் புரட்சி. யூத மதத்தினரான இயேசுவின் பெயரால் புதிய மதம் புறப்பட்டதால் முதலில் யூதர்கள் மட்டுமே அந்த மதத்தில் இணைந்தனர். இன்னும் பலர் அதுவும் யூதமதத்தில் ஒரு பிரிவு என்றே எண்ணிக்கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் மாறிவிட்டன. கிறிஸ்தவமும் யூதமும் வெவ்வேறானவை எனும் தெளிவு ஏற்பட்டது.

பார்கொக்பே, ராபி அக்கிபா எனும் இருவருடைய தலைமையில் யூதர்கள் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். அப்போது விருத்த சேதனத்தைத் தடை செய்யப்பட்டு மன்னன் சட்டம் இயற்றினார்.

பார்கொக்பே இறைவனின் தூதர் எனும் எண்ணம் யூதர்களிடையே இருந்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அவரை மதிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசுவே மெசியா. எனவே அவர்கள் யூதர்களின் பார்கொக்பேவை வழிபடவும் இல்லை வணங்கவும் இல்லை. இது யூதர்களை எரிச்சலடையச் செய்தது.

கிறிஸ்தவர்கள் அதிகமாய் யூதர்களைப் பகைத்துக் கொள்ள இது ஒரு முக்கிய காரணமாயிற்று. யூதர்கள் கிறிஸ்தவர்களை அதிகமாய் துன்பப்படுத்த ஆரம்பித்தனர்.

கி.பி 124ல் மன்னன் ஆதிரையான் தன்னுடைய ஆட்சிக்குக் கீழே உள்ள தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதில் கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்பப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களைக் காரணமின்றி துன்பப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தான்.

கி.பி 135ம் ஆண்டு பார்கொக்பே கைது செய்யப்பட்டார்.

கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் முக்கியமாக இருந்த எருசலேம் நகரம் ஏலியா கேப்பிட்டோலினா என்று அழைக்கப்பட்டு வேற்று மதத்தினருக்கு உரியதாயிற்று.

கிபி 138 க்குப் பின் அரியணை ஏறி 161 வரை ஆட்சி செய்த மன்னர் ஆண்டோனியஸ் பயஸ் என்பவர். இவர் இதற்கு முன் மன்னனாய் இருந்த ஆதிரையானின் வளர்ப்பு மகன்.

இவர் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாய் இருக்கவில்லை. எனினும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகள் ஒழியவில்லை. கிறிஸ்தவர்கள் தனியாகவே வாழ்க்கை நடத்தினார்கள். இவர் காலத்திலும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பறைசாற்றியதால் பலியானவர்கள் ஏராளம்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் போலிகார்ப். இவர் கி.பி 70 பிறந்தவர். இவர் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யோவானின் சீடர்.

சீரியா நாட்டைச் சேர்ந்த இவர் அடிமையாய் விற்கப்பட்டவர். பெரும் பணக்காரப் பெண்மணியான காலிஸ்டோ இவரை அடிமையாக வாங்கினார். அடிமை வேலைகளைச் செய்து வந்த போலிகார்ப்பின் நேர்மையையும், உண்மையையும், அன்பையும் கண்டு வியந்த காலிஸ்டோ, தன்னுடைய சொத்துகளை எல்லாம் அவருக்கு எழுதி வைத்தார்.

காலிஸ்டோவின் மரணம் போலிகார்ப் ஐ ஒரு மிகப்பெரிய செல்வந்தராக்கியது. இவர் கிறிஸ்தவ மதத்தின் மீது ஆழமான பற்றுறுதி கொண்டிருந்தார். சிமிர்னா பகுதியில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர்.

இவருக்கும் ரோமையிலுள்ள திருச்சபைத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இயேசுவின் உயிர்ப்பு தினம் அந்த குறிப்பிட்ட நாளில் தான் கொண்டாட வேண்டும் எனும் எண்ணத்தை போலிகார்ப் வலியுறுத்தினார்.

ஆனால் எல்லா ஆண்டும் ஞாயிற்றுக் கிழமை தான் அதை நினைவு கூர வேண்டும் என்பது ரோமை திருச்சபையின் எண்ணமாய் இருந்தது. இந்த விவாதம் அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தில் எழுந்த முக்கியமான விவாதமாகக் கருதப்படுகிறது.

ஆண்டோனியஸ் பையஸின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் போலிகார்பைக் கைது செய்யத் தேடினார்கள். அவர் பக்கத்து ஊருக்குச் சென்று பதுங்கினார்.

போலிகார்ப் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. கடவுளிடம் மன்றாடிய அவருக்கு கனவின் பொருள் விளங்கியது. தான் எரித்துக் கொல்லப்படப் போவதன் அறிகுறியே அது என அறிந்தார்.

அதே நேரத்தில் அரசனின் வீரர்கள் அவரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் மன்னன் போலிகார்ப்பின் இருப்பிடம் தெரிந்த இருவரைப் பிடித்து சித்திரவதை செய்தான்.

சித்திரவதையைத் தாங்க முடியாத ஒருவன் அவருடைய மறைவிடத்தைச் சொன்னான். படைவீரர்கள் அவருடைய வீட்டை அடைந்தனர். நடப்பதெல்லாம் இறை சித்தம் என்று உறுதியாக நம்பிய போலிகார்ப் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடினார்.

அவருடைய உறுதியைக் கண்டு படைவீரர்கள் வியந்து போனார்கள். அவர் அவர்களுடன் உரையாடினார். பின்னர் தனக்கு செபிக்க சிறிது நேரம் தருமாறு கேட்டுக் கொண்டார். படை வீரர்களும் அவரை செபிக்க அனுமதித்தனர். இரண்டு மணி நேரம் நின்றவாறே செபித்தார் அவர்.

போலிகார்ப் மன்னனிடம் அழைத்துச் செல்லப்பட்டார். போலிகார்ப்பின் உறுதி மன்னனையும் கூட இருந்தவர்களையும் வியப்பிலாழ்த்தியது.

‘மன்னனை வணங்கி தூப ஆராதனை செய். உன்னை விடுவிப்போம்’ போலிகார்ப்பிடம் அவர்கள் சொன்னார்கள்.

‘நான் உங்கள் விருப்பப்படி நடப்பவன் அல்ல’ போலிகார்ப் உறுதியாகப் பதிலளித்தார்.

அவரை பயமுறுத்தி, காயப்படுத்தினார்கள். அவர் அசரவில்லை. விளையாட்டு அரங்கத்திற்கு அவரை வண்டியில் கொண்டு சென்று வழியிலேயே அவரை கீழே தள்ளினார்கள். அப்போதும் அவர் எதுவும் நடவாதவர் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

மன்னன் அவரைப் பார்த்தார். அவருடைய வயதையும் கவனித்தார்.

‘இந்த வயதில் உனக்கு என்ன இத்தனை பிடிவாதம். நீ என்னை வணங்கவேண்டாம். கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் கடவுள் இல்லாதவர்கள் என்று மட்டும் சொல் உன்னை விடுவிப்பேன்’ என்றான். போலிகார்ப் சிரித்தார்.

எண்பத்து ஆறு ஆண்டுகள் கடவுளுக்காகப் பணிபுரிந்தேன். அந்த கடவுளை எப்படி நான் இழிவாகப் பேச முடியும். அவர் உண்மையான கடவுள் என்றார்.

‘நீ கிறிஸ்தவர்களை பழிக்காவிடில் உயிரை இழப்பாய்’ மன்னன் எச்சரித்தான்

‘கிறிஸ்தவர்களைப் பழிப்பது என்பது கிறிஸ்துவைப் பழிப்பது போல. அதை விட உயிரை இழப்பதே மேல்’ போலி கார்ப் சொன்னார்.

‘உன்னை காட்டு மிருகங்களுக்கு உணவாகப் போடுவேன் அல்லது எரித்துக் கொல்லுவேன்’ மன்னன் கோபமடைந்தார்.

‘செய்ய வேண்டியதை விரைவிலேயே செய்ய வேண்டியது தானே ? ஏன் இன்னும் தாமதம்’ போலிகார்ப் சொன்னார்.

சுற்றியிருந்த மக்கள் “இவனை எரித்துக் கொல்லுங்கள்” என்று கத்தினார்கள்.

மன்னனும் இசைந்தான்.

எரிப்பவர்களை மரத்தில் கட்டி கைகளை ஆணிகளால் அறைந்து தீ வைப்பது அவர்களின் வழக்கம். போலிகார்ப்பும் மரத்தில் கட்டப்பட்டார். ஆணிகளால் அவருடைய கையை அடிக்க முனைந்தபோது அவர் தடுத்தார்.

என் கைகளை ஆணிகளால் அறைய வேண்டாம். நான் எந்த நெருப்புக்கும் அசையாத உறுதியை கடவுள் தருவார். என்றார்.

போலிகார்ப்பின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் கைகளில் அவர்கள் ஆணி அடிக்கவில்லை.

அவரைக் கட்டி வைத்தபின் அவரை எரித்தார்கள். அவர் அசையாமல் செபநிலையிலேயே நின்றார். அவரை ஈட்டியாலும் குத்தினார்கள். போலிகார்ப்பின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த ஆண்டு 155 பெப்பிரவரி 23.

மார்கஸ் அரேலியஸ் மன்னன் கிபி 161 முதல் 180 வரை ரோம் அரசராக இருந்தான். இவனுடைய ஆட்சிக்காலமும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைக் கட்டவிழ்ப்பின் அரசாகவே இருந்தது.

இவனுடைய பார்வையில் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் பிடிவாதகாரர்கள். எது சொன்னாலும் கேட்காதவர்கள். தன்னுடைய பேச்சைக்கேட்காத யாரையும் அரசர்களுக்குப் பிடிப்பதில்லையே. அதுவே தான் நடந்தது இந்த மன்னனின் ஆட்சியிலும்.

இவர் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜஸ்டின் மார்டர் என்பவர். இவர் சிறந்த தத்துவ ஞானி. கற்றறிந்தவர். தன்னுடைய கல்வியினாலும் ஞானத்தினாலும் கிடைக்காத மன நிம்மதி கிறிஸ்தவத்தில் இணைவதில் கிடைக்கப் பெற்றார்.

எனவே இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் குறித்த புரிதலுக்கு வழி வகுத்தார். கிறிஸ்தவ மதம் சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின் மூலம் பரப்பினார். இவருடைய வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

ரோம அரசன் எரிச்சலடைந்தான். ஜஸ்டினைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஜஸ்டின் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஜஸ்டின் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார்.

ஜஸ்டின் தைரியமாய் நின்றார். நடுவர் அவரை நோக்கி கேள்வியை வீசினார்.

‘நீ உயிர்த்தெழுவாய் என நினைக்கிறாயா ?’

‘நினைக்கவில்லை. உண்மையிலேயே நடக்கும் என்பது எனக்குத் தெரியும்’ ஜஸ்டினின் பதில் அவர்களை எரிச்சலடையச் செய்தது. அவருக்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது.

‘சம்மட்டியால் அடித்து இவனுடைய தலையை சிதையுங்கள்’ குரூரமான ஆணையைக் கேட்டு ஜஸ்டின் கலங்கவில்லை. தைரியமாய் நின்றார்.
சம்மட்டிகள் அவருடைய தலையை பிளந்தன. சிதைத்தன. ஜஸ்டின் விசுவாசத்தை விட்டு விலகாமல் உயிர் விட்டார்.

பிலாண்டினா எனும் பெண்மணி ஒருத்தியும் மார்கஸ் அரேலியஸ் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவரும் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் அரசனின் ஆணைகளைப் புறக்கணித்தவர். கிறிஸ்தவ மத பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் இவர் கொலை செய்யப்பட்டார்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து பின்னர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார். எரிந்தும், கிழிந்தும் உயிர்விட்டார் பிலாண்டினா.

கமோடஸ் என்னும் மன்னன் அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி 191 வரை ஆட்சி புரிந்தான். தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கமோடஸ் தந்தை மார்கஸ் அரேலியசைப் போலன்றி சற்று நிதானமாய் இருந்தார்.

இவருடைய மனைவி மார்சியா கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். எனவே இவரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு சற்று விடுதலை கிடைத்தது. கிறிஸ்தவர்கள் அதிக துன்பங்களைச் சந்திக்கவில்லை.

இதே காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் பலர் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. நுமீதியாவிலுள்ள சிலியில் பன்னிரண்டு பேர் கிறிஸ்தவர்கள் என்பதால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் ‘சிலியின் இரத்த சாட்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இரண்டாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டது. நிர்வாக அமைப்பைப் போல பேராயர்கள், துணை ஆயர்கள், டீக்கனார் என பல அடுக்கு தலைமைகள் உருவாக்கப்பட்டன.

திருச்சபை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வன்முறைகளைச் சந்தித்து வந்ததால் இந்த அமைப்பு ரீதியின் தேவை அதிகரித்தது. மேலும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்தவ இலக்கியங்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவ வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அப்போஸ்தலர்களின் நூல்களுக்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் மார்சியன் தன்னுடைய நூல் ஒன்றை வெளியிட்டார். எனவே இக்காலகட்டத்தில் எவையெல்லாம் திருச்சபைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் வரை முறை கொண்டு வரப்பட்டது.

கிறிஸ்தவர்களுடைய அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் பலரால் வியப்புடன் பார்க்கப்பட்டன. கி.பி 125ல் அரிஸ்டைடிஸ் என்பவர் எழுதிய நூலில் கிறிஸ்தவத்தைப் பற்றி மிகவும் வியந்து எழுதியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரப் பாவத்தைச் செய்வதில்லை. பொய்சாட்சி சொல்ல மறுக்கிறார்கள். பெற்றோரைப் பெருமையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள். மனத்தாழ்மை, அன்பு இவற்றைக் கடைபிடிக்கிறார்கள். தன்னை விடத் தாழ்ந்தவர் என்று யாரையும் அவர்கள் நினைப்பதில்லை. அடிமைக்கும், மன்னனுக்கும் ஒரே கவுரவத்தைத் தருகிறார்கள். அவர்கள் இறைவனை எல்லா நிகழ்வுகளுக்கும் புகழ்கிறார்கள். எனவே தான் பூமி செழிக்கிறது. என்று அவர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

கார்தேஜ் என்னும் நாட்டில் பிளேக் நோய் பரவியபோது மற்ற அனைத்து சமூகத்தினரும் விலகினார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களோடு இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்தனர்.

கேலிஸ்டன் என்பவர் அடிமையாய் இருந்தவர். அவர் கிறிஸ்தவத்தைத் தழுவியபின் பேராயராக மாறினார். எனவே கிறிஸ்தவத்துக்குள் சமத்துவம் நிலவியது என்பதை உணர முடிகிறது.

ரோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் அறுபது சுரங்கக் கல்லறைகளில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரை இழந்தவர்களுடைய கல்லறைகளில் கிறிஸ்துவுக்காய் துன்பப்பட்டவர்கள் என எழுதப்பட்டுள்ளது.

தோளில் ஆட்டுக்குட்டியைச் சுமக்கும் இயேசுவின் படம் இந்த கல்லறைகளில் காணப்படுவது வியப்பு தருகிறது. பாய்மரக்கப்பல், திராட்சைக் கொடி, மீன், நங்கூரம் போன்ற பல சித்திரங்கள் இந்த குகைகளில் காணக் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் இந்த நூற்றாண்டிலேயே இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் திருமுழுக்கு எளிதாகக் கொடுக்கப்படாமல் அதற்குரிய சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட பின்பே அளிக்கப்பட்டிருக்கின்றன.

கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் திருப்பலிகளில் நன்கொடையாக வழங்கப்பட்டன. பின் அவை சபையோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாவ மன்னிப்பு வழக்கம் இருந்தது. மற்றவர்களை மன்னிப்பதன் அடையாளமாக சமாதான முத்தம் இடும் வழக்கமும் இருந்தது.

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கிறிஸ்தவர்கள் ஆலயங்களைக் கட்டி வழிபாடு ஆரம்பித்தனர். யூதர்களுடைய ஆலயங்களில் ஆலயத்துக்கு வெளியே கைகளைக் கழுவ தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கம் அன்றைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் காணப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழா, தூயவர்கள் மணமடைந்த விழா என பல விழாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.

மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. இவருடைய ஆட்சி துவக்கத்தில் நல்ல ஆட்சி போல தோற்றமளித்தது. ஆனால் போகப் போக அவருடைய குணம் மாறியது.

கிறிஸ்தவர்களின் துன்பம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் எகிப்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பல விதமான சோதனைகள் நேர்ந்தன. இவருடைய ஆட்சி காலத்தில் கார்த்தேஜில் பலர் கிறிஸ்தவத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கார்தேஜில் இவருடைய காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா மற்றும் பெலிசிட்டாஸ் எனும் இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட மறுத்ததால் கொலை செய்யப்பட்டனர்.

பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவளுடைய இருபத்து இரண்டாவது வயதில் கிறிஸ்தவத்தில் ஆழப் பதிந்திருந்தாள். திருமணமாகி குழந்தை ஒன்றுக்குத் தாயானவள். உலகில் எதையும் விட இயேசுவே வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றாள்.

காவலர்கள் கையில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவளுடைய மனதை மாற்ற தந்தையார் பல முறை பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.

சிறைச்சாலையில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதி மூச்சு வரை இயேசுவை மறுதலிக்காமல் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.

பெலிசிட்டாஸ் ஒரு அடிமைப் பெண். அவளும் திருமணமாகி எட்டு மாத கர்ப்பிணியாய் இருக்கையில் காவலர்களிடம் பிடிபட்டாள். கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம். காவலர்கள் கூறினர்.

கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுதல் சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றாள் பெலிசிட்டாஸ்.

இறுதியில் இருவரும் முரட்டுத்தனமான மாடுகளுக்கு முன்பாகப் போடப்பட்டார்க. விலங்குகள் இவர்களை மிதித்து, இடித்து சித்திரவதை செய்தன. இறுதியில் இவர்கள் இருவரையும் குத்திக் கொன்று விட்டனர்.
செப்டிமஸ் செவேரஸ்க்குப் பின் தேசியு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்தார். இவர் கிறிஸ்தவக் கொள்கைகள் அரசுக்கு எதிரானவை எனும் கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தை முழுமையாக எதிர்த்தார்.

இவர் காலத்தில் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள் அனேகர். ரோம் நகரில் ஃபேபியன், அந்தியோக்கியாவில் பாபிலாஸ், எருசலேமில் அலெக்சாண்டர், சிமிர்னாவில் பயோனியஸ் ஆகியோர் இந்த காலகட்டத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர்.

அதன்பின் வெலேரியன் மன்னன் கிபி 260 வரை ஆட்சி செய்தார். அதுவும் மற்ற மன்னர்களின் ஆட்சிபோல கிறிஸ்தவர்களை வெறுக்கும் அரசாகவே இருந்தது.

அலீரியன் மன்னன் கிபி275 வரை ஆட்சி செய்தார். அதன்பின் டியோக்ளேஷியன் என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் பல மட்டங்களிலும் ஊடுருவியிருந்தார்கள்.

அரண்மனையில் மன்னனின், மனைவியும் மகளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அரண்மனைப் பணியாளர்களிலும் பலர் கிறிஸ்தவர்களாய் இருந்தார்கள். எனினும் கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பு மன்னனுக்குக் குறையவில்லை.

இவனுடைய ஆட்சி காலத்தின் நான்கு முக்கியமான உத்தரவுகளை மன்னன் பிறப்பித்தான். இந்த நான்கு உத்தரவுகளுமே பல்வேறு காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தன.

முதலாவது உத்தரவின் மையம் கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும், கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும் என்றிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு பணிகளில் கீழ் நிலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டளையை எதிர்த்த கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்டனர்.

இரண்டாவது உத்தரவு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும் கொல்லப்படவேண்டும் எனும் கடுமையான உத்தரவாய் இருந்தது. இந்த உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டபோது அனைத்து சிறைச்சாலைகளும் குருக்களால் நிறைந்து வழிந்தன.

மூன்றாவது உத்தரவும் கிறிஸ்தவர்களை மிரட்டி ஆசைகாட்டியது. அதில் கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவு போதித்தது.

நான்காவது உத்தரவு கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறியது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசு நிலையிலிருந்து ஏற்பட்ட விரோதம் போல பொதுமக்களிடமிருந்து கோபம் எழவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் பரவியிருந்ததாலும், கிறிஸ்தவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழாததாலும் பொது மக்களிடம் கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

மூன்றாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்
மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் சந்தித்த வன்முறை இரண்டாம் நூற்றாண்டில் சந்தித்ததை விட மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கிறிஸ்தவம் பல இடங்களுக்குப் பரவியதும், கிறிஸ்தவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யாய் போனதும் இதன் காரணமாக இருக்கலாம்.

கிறிஸ்தவம் ஒரு அமைப்பு ரீதியாக சற்று பலப்படத் துவங்கியது. சபையில் வெளியிலிருந்து வரும் இன்னல்களை மீறி உள்ளுக்குள்ளேயே கருத்து மோதல்கள் எழுவது சகஜமாயிற்று.

கிறிஸ்தவத்தில் முதல் நூற்றாண்டில் இருந்த பற்றுறுதி உடைபடத் துவங்கியது. கிறிஸ்துவுக்காக இறப்பது நல்லது எனும் சிந்தனை இருந்தாலும் அது வலுவிழந்ததாய் காணப்பட்டது. பலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள கிறிஸ்தவத்துக்கு எதிராக பேசிய நிகழ்வுகளும், பின் வாங்கிய நிகழ்வுகளும் நடந்தன.

இதன் முக்கியமான காரணம் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழவில்லை என்பதே. பலர் இயேசு உயிர்த்த சில ஆண்டுகளிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்று நம்பினார்கள். அது இந்த காலத்தில் பொய்க்கத் துவங்கியது. இரண்டாம் வருகையைக் குறித்த நம்பிக்கைகள் மறையத் துவங்கின.

பாவ மன்னிப்பு என்பது சபையில் அனைவரிடமும் சொல்ல வேண்டும் எனும் நிலை மாறி குருவானவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும் எனும் நிலை உருவானது இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றாகும்.

குருக்கள் பெரும்பாலும் மணமாகாதவர்களாகவே இருந்தார்கள். இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை எனவே குருக்களும் திருமணம் செய்யக் கூடாது எனும் எண்ணம் வலுவாய் இருந்தது.

உயிருக்குப் பயந்து கிறிஸ்துவை மறுதலித்தவர்களை மீண்டும் கிறிஸ்தவத்தில் சேர்த்துக் கொள்வது தேவையா எனும் விவாதம் எழுந்தது. சரி என்றும், தவறு என்றும் இருபிரிவினர் வாதிட்டனர். ரோம் திருச்சபை மன்னித்தல் இறைவனின் வரம் எனவே மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாய் கூறியது.

ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டவர்கள் நோவேட்டஸ் என்பவரின் தலைமையில் தனி பிரிவாக இயங்கினர். இந்த பிரிவினர் ஐந்தாம் நூற்றாண்டுவரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கிறிஸ்துவுக்காக இறப்பவர்கள் மரியாதை செலுத்தப்பட்டன. அவர்கள் விண்ணகத்தில் இயேசுவோடு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மூலமாக இறைவனிடம் வேண்ட முடியும் என்னும் சிந்தனைகளும் பரவின. எனவே மக்கள் விண்ணப்பங்களையும் இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களிடமும் வைத்தனர்.

திருமுழுக்கு கொடுப்பதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. திருமுழுக்கின் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடுதல், வெள்ளை உடை அணிதல் போன்ற இன்றைய முறை இந்த நூற்றாண்டில் தான் ஆரம்பித்தது.

திருப்பலியில் வழங்கப்படும் திராட்சை இரசமும், கோதுமை அப்பமும் இயேசுவின் இரத்தமாகவும் உடலாகவும் இருக்கிறது எனும் சிந்தனை ஆழமாய் பரவியிருந்தது. நற்கருணை வழிபாடுகள் முக்கியத்துவம் அடைந்தன. இயேசு சிலுவையில் பலியானதன் தொடர்ச்சி நற்கருணை வழிபாட்டால் கிடைக்கிறது எனும் நம்பிக்கையும் கிறிஸ்தவத்தில் இருந்தது.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம்

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் பல கருத்து வேறுபாடுகளைச் சந்தித்தது. டொனேட்டிசம் மற்றும் அரியானிஸம் என்பவை இந்த நுற்றாண்டில் நோன்றிய இரண்டு முக்கியமான பிரிவுக் குழுக்களாகும்.

டொனேட்டிசம் மென்சூரியஸ் என்பவரை மையப்படுத்தி உருவானது. துன்ப நாட்களில் பல குருக்கள் கிறிஸ்தவ நூல்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களை கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது.

அந்த நாட்களில் கிறிஸ்துவுக்காய் இறப்பது மிகப்பெரும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. எனவே பலர் தாமாகவே முன்வந்து மரணத்தை ஏற்றுக் கொண்டனர். இதை மன்சூரியஸ் எதிர்த்தார். இப்படி இறப்பவர்களுக்கு மரியாதை செலுத்தப் படக் கூடாது என்று அறிவித்தார்.

அரியானிஸம் அரியன் எனும் குருவானவரால் உருவாக்கப்பட்டது. இவர்களுடைய கொள்கைப்படி கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாமல் முழுமையானவர். ஒரே கடவுள். அவருடைய தன்மை பகிரும் தன்மையோ, உருமாறும் தன்மையோ அல்ல.

எனவே இயேசு கடவுள் அல்ல. அவர் கடவுளிடம் நேரடியாய் பேச முடியாதவர். தன்னுடைய வாழ்க்கை முறையை ஒத்தே அவருக்கு கடவுளிடமுள்ள அருள் இருக்கும் என்று போதித்தார்.

இவருடைய இந்த கொள்கை ஒட்டு மொத்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கே இடையூறாக விளங்கியது. எனவே கி.பி 321ல் எகிப்தில் கூடிய பேராயர் பேரவை இவரை கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேற்றியது.

இந்த பிளவை சரிசெய்வதற்காக கான்ஸ்டண்டைன் மன்னன் கூட்டிய முதல் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நிசியாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன.

இயேசு கடவுளைப் போல அதே தன்மையுடையவர் எனும் கருத்து வலிமைப்படுத்தப் பட்டது. அரியானிஸம் கொள்கை நிராகரிக்கப்பட்டது. அவரை மதம் வெறியேற்றியதுடன் அவருடைய நூல்களையும் எரித்தது.

இந்த கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் ஒத்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டன. இயேசுவின் உயிர்ப்பு விழா ஒரு ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாடப்பட வேண்டும் எனவும், திருச்சபைகளில் பல சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டன.

அதன் பின் வந்த பல மன்னர்கள் நிசியா குழுவை எதிர்ப்பவர்களாக இருந்தனர். குறிப்பாக 337ல் அரசரான காண்டாண்டியஸ் நிசியா கொள்கைக்கு எதிராக தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரியானிஸம் கொள்கையை நிலைப்படுத்த முயன்றார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இதன்பின் 361ல் ஆட்சிக்கு வந்த ஜூலியன் மன்னன் கிறிஸ்தவத்தையே விரட்டி விட முயற்சி எடுத்து தோல்வியடைந்தார். 371ல் ஆட்சிக்கு வந்த தியோடோசியஸ் மன்னன் தான் நிசியா பொதுக்குழிவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார்.

நிசியா விசுவாசப் பிரமாணம் என்று அழைக்கப்பட்டு இன்றும் ஆலயங்களில் வாசிக்கப்படும் விசுவாசப்பிரமாணம் கிபி 381ல் கான்ஸ்டாண்டினோ புரியில் கூட்டப்பட்ட குழுவில் தயாராக்கப்பட்டது.

அப்போலிநரியானிஸம் என்று இன்னொரு கொள்கையும் இந்த காலகட்டத்தில் தோன்றியது. இதன்படி இயேசு உண்மையில் மனிதரல்ல. அவருக்குள் இருந்தது மனித ஆன்மா அல்ல. அது வார்த்தை. மட்டுமன்றி பரிசுத்த ஆவியானவருக்கு எந்த விதமான தெய்வத் தன்மையும் இல்லை.

இந்த கொள்கை பெருமளவில் பரவவில்லை. இதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
நான்காம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள்

நான்காம் நூற்றாண்டில் திருச்சலை அரசியல் நிகழ்வுகளோடு இணைந்து விட்டது. அரசின் வெறுப்பு ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்கள் பக்கம் குவிந்திருந்த காலம் மறைந்து போயிருந்தது.

இந்த நூற்றாண்டில் சில முக்கியமான கிறிஸ்தவ அடிப்படை எண்ணங்கள் வலுப்பெற்றன. குருக்கள் திருமணமாகாதவர்களாக இருப்பதே சிறந்தது எனும் மூன்றாம் நூற்றாண்டுச் சிந்தனை இந்த நூற்றாண்டில் வலுவடைந்து பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்துக்கு வந்தது.

திருப்பலிகளில் வழங்கப்படும் அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் இருக்கிறது எனும் சிந்தனையும் வலுவடைந்தது.

இயேசுவுக்காய் பாடுகள் பட்டு இறந்தவர்களை நோக்கி விண்ணப்பம் வைக்கும் வழக்கமும் தீவிரமடைந்தது. சிலர் இத்தகைய புனிதர்களை வணங்கவும் ஆரம்பித்தனர். எனவே இந்த காலகட்டத்தில் இரத்தசாட்சியாய் இறந்தவர்கள் விண்ணக தூதர்கள் போல கௌரவிக்கப்பட்டனர்.

மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயங்கள் இந்த நூற்றாண்டில் தான் கட்டப்பட்டன. நிக்கோதேமியாவில் இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் அரண்மனை போல அற்புதமாய் விளங்கியது என குறிப்புகள் தெரிவிக்கின்றன

எருசலேம், பெத்லேகேம், ரோம் போன்ற இடங்களிலும் சிறப்பான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவ மதம் சமூகத்திலுள்ள பிற மதங்களோடு இணைந்து தனித்துவம் பெற்ற மதமாக எங்கும் பரவத் துவங்கியது.

கருங்கடலுக்கு வட கிழக்கே அமைந்திருந்த ஜியார்ஜியா நாடு கிறிஸ்தவ நாடானது. ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணின் ஜெபத்தினால் அந்த நாட்டு அரசி சுகமானதே இதன் காரணமாயிற்று.

அர்மீனியா நாடும் அந்த காலத்தில் கிறிஸ்தவ நாடானது. அதற்கு அந்த நாட்டு இளவரசன் கிரிகோரியே காரணமானார். அந்த நாட்டிலுள்ள பல ஆலயங்கள் கிறிஸ்தவக் கோயில்களாக மாற்றப்பட்டன.

பாரசீகத்திலும் நான்காம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கிறிஸ்தவம் மிகவும் செழுமையுடன் காணப்பட்டது. ஆனால் நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிறித்தவர்களுக்கு அங்கே பெரும் இன்னல் காத்திருந்தது. அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களுடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் சிரிய மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அங்கிருந்து பின்னர் இந்தியா வந்து மலபார் சபையில் இணைந்திருக்கலாம் என்றும். இவர்கள் மூலம் சிரியன் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அரேபியா நாட்டிற்கும் கிறிஸ்தவம் கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவ துறவியர் அதற்காக அரேபியப் பாலைவனங்களில் பயணித்து பலருக்கு சுகமளித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 6 – உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன்

Image result for King constantine Christianity

முதல் கிறிஸ்தவ மன்னன் என்னும் பெருமை கான்ஸ்டண்டைன் மன்னனுக்குக் கிடைத்தது. அவனுடைய ஆட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறிகொண்ட வேங்கைக் கூட்டம் போல பாய்ந்து கொண்டிருந்த வெறுப்பு அலையை அடக்கியது. கிறிஸ்தவர்களுக்குக் குறைந்த பட்சப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தது. கான்ஸ்டாண்டியஸ் என்னும் ராணுவ தளபதிக்கும், ஹெலீனா என்பவளுக்கும் முறைகேடாகப் பிறந்தவன் இந்த மன்னன் என்கிறது வரலாறு. டயோக்லீஷியன் மன்னனின் மறைவுக்குப் பின் அரியணையை யார் கைப்பற்றுவது என்னும் போரில் கான்ஸ்டண்டைன் வெற்றி பெற்றான். இவன் போருக்குச் செல்லும் முன் ஒரு சிலுவையைக் காட்சி கண்டான். சிலுவை அருகே அவனுக்கு வெற்றி உறுதி என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் கண்ட கான்ஸ்டண்டைன் புதிய உத்வேகத்துடன் எழுந்து அரியணைப் போட்டியாளர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றினான்.

இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு என்னும் எல்லையோடு நின்று விடாமல், கிறிஸ்தவம் அல்லாதவர்களுக்கு எதிராக சட்டங்கள் முளைவிட்டன. பிற மதங்கள் பல தடை செய்யப்பட்டன. அரசினால் செய்யப்பட்டு வந்த பலிகள், வழிபாடுகள் போன்றவை நிறுத்தப்பட்டன. கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை வெளிப்படையாகப் பேசும் நிலை உருவானது.

டயோக்லீஷியஸ் மன்னன் காலத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நிலையங்கள் பல இடிக்கப்பட்டன. பல ஆக்கிரமிக்குக்கு உள்ளாயின. கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் அவை கிறிஸ்தவர்களால் மீட்கப்பட்டன. இந்த காலத்தில் தான் கிறிஸ்தவ ஆலயங்கள் அழகுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் கட்டப்பட்டன. மன்னன் கிறிஸ்தவன் ஆகையால் ஆலயம் கட்டுவதற்கான அனுமதி தடையின்றிக் கிடைத்தது. காண்டாண்டிநோபிள் போன்ற இடங்களில் மிகப்பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புபவர்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களில் பணி புரிபவர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்கியது ! எனவே கிறிஸ்தவப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணிகளைப் போலாயின. மற்ற மதங்களுக்காய் செலவிடப்பட்டு வந்த பணம் குறைக்கப்பட்டது, அல்லது நிறுத்தப்பட்டது. கிறிஸ்தவப் போதகர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப் பட்டார்கள். அவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்தனர். கிறிஸ்துவை நம்பாதவர்களும், கிறிஸ்தவ மதத்தின் மேல் ஆழமான ஈடுபாடு இல்லாதவர்களும் அரசு சலுகைகளுக்காகவும், மரியாதைக்காகவும் கிறிஸ்தவ மதத்துக்குள் ஏராளமாய் நுழையும் நிலையும் இந்த காலத்தில் நிகழ்ந்தது. இப்படி பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்ததால் அவர்களுடைய கலாச்சாரங்களும், சிந்தனைகளும் கிறிஸ்தவ மதத்துக்குள் பரவின. இது கிறிஸ்தவ மதத்தின் தனித்தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக புனிதர்கள், அன்னை மரி போன்றவர்களுக்கு சிலைகள் நிறுவும் பழக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்தவத்தில் நுழைந்தது.

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகவும். கிறிஸ்தவ ஆராதனைகள் நடைபெறும் நாளாகவும் அறிவிக்கப்பட்டதும் கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் தான். அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவை ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை பெற்றன.

ஞாயிற்றுக் கிழமை சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது !

மன்னன் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டதால், சிலுவை அவனுக்குப் புனிதச் சின்னம் ஆனது. எனவே சிலுவை கொலைக் கருவி என்னும் நிலையிலிருந்து விலக வேண்டும் என்று அவன் நினைத்தான். சிலுவை மரணத்தைத் தடை செய்தான் ! சிலுவை இகழ்ச்சிக்குரியது என்னும் நிலையிலிருந்து விலகி வணக்கத்துக்கு உரியதாக பிரபலப்படுத்தப் பட்டது. சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமானது !

தேவையற்ற குழந்தைகளைக் கொல்வதும், அவர்களை அடிமைகளாக விற்பதும் அந்நாட்களில் நடைபெற்று வந்தது. அதை மன்னன் தடை செய்தான். மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையும், சமுதாய மனித உறவுகள் மேம்படும் நிலையும் இந்த தடையினால் உருவானது.

எல்லோரிலும் இறைவன் இருக்கிறான் என்னும் சிந்தனை வலுப்பெற்றது. அடிமைகளுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. அடிமைகள் விரும்பினால் அவர்கள் விடுதலை பெறவும் பல வழிகள் உருவாக்கப்பட்டன. அடிமைகள் என்பவர்கள் முதலாளிகள் வெட்டி வீழ்த்தி விளையாடும் பகடைக் காய்களாக இருக்கும் நிலை மாறியதில் அடிமைகள் ஆனந்தமடைந்தார்கள். அதுவரை அடிமைகள் இறந்தாலும், வாழ்ந்தாலும் யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் சட்ட ரீதியான பாதுகாப்பு தோன்றியது.

கி.பி 379ல் கிறிஸ்தவ மதத்துக்குள் ஞானஸ்நானத்துக்காய் தண்ணீரில் மூழ்கி எழத் தேவையில்லை. தலையில் தண்ணீர் ஊற்றினால் போதும் என்னும் சிந்தனை எழுந்தது. முழுக்கு ஞானஸ்நானமே சிறந்தது என்று இயேசுவே சொல்லவில்லை என்றும், சிறையில் இருப்பவர்களுக்கும், மூழ்கி எழும் நிலையில் தண்ணீர் இல்லாத இடங்களில் இருப்பவர்களுக்கும், ஞானஸ்நானம் வழங்க இதுவே சிறந்தது என்றும், ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளமே, ஒருவன் கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறப்பதே உண்மையான கிறிஸ்தவனாகும் நிலை என்றும் சாமாதான விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில் தான் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கும் வழக்கமும் ஆரம்பமானது.

கான்ஸ்டைன் மன்னன் கிறிஸ்தவத்தைத் தன்னுடைய மதமாகத் தேர்ந்தெடுத்தபின் ரோமப்பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியது. ஆனால் ரோம் நகரம் பிற மதத்தினரின் கலாச்சார அடையாளங்களையே எங்கும் சுமந்திருந்தது. எதிரிகளின் பார்வையும் ரோமின் மீதிருந்து எப்போதும் அகலவில்லை, அடிக்கடி பிரச்சனைகள், போர்கள் என்று ரோம் ஒரு பாதுகாப்பற்ற நகராகவே இருந்தது. எனவே கான்ஸ்டண்டைன் மன்னன் ஒரு புதிய தலைநகரைத் தோற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காக அவன் கிரேக்க நகரான பைசாண்டியைத் தேர்ந்தெடுத்து கான்ஸ்டாண்டிநோபிள் என்னும் அழகிய நகரை நிர்மாணித்தான். இந்த பைசாண்டி , ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது. போர்களைப் பல ஆண்டு காலமாக சந்திக்காத இடமாகவும் இருந்தது பைசாண்டி.

இந்த காண்டாண்டிநோபிள் தான் தற்போதைய இஸ்தான்புல்.

இஸ்தான்புல்-லில் இப்போது இருக்கும் மிகப் பிரம்மாண்டமான மசூதி 1453ம் ஆண்டு துருக்கியர்கள் படையெடுக்கும் வரை கிறிஸ்தவ ஆலயமாக இருந்தது. கி.பி 537ல் ஐன்ஸ்டீனியன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் கான்ஸ்டண்டைன் மன்னனால் கட்டப்பட்டு ‘சான்சா சோபியா’ என்று அழைக்கப்பட்டதாகும்.

நகர் நிர்மாணிக்கப்பட்டபின் ரோமப் பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிரேக்க மொழிபேசிய மக்கள் வாழ்ந்த கிழக்குப் பகுதி கிரேக்கம் என்றும், லத்தீன் மொழி பேசப்பட்ட மேற்குப் பகுதி லத்தீன் என்றும் அழைக்கப்பட, ரோம் இரண்டாய் பிரிந்தது.

கான்ஸ்டண்டைன் மன்னன் காலத்தில் கிறிஸ்தவம் வளர்ந்தது. அதற்குப் பிறகு வந்த அரசர்கள் வன்முறையினால் கிறிஸ்தவத்தை வளர்க்க முற்பட்டார்கள். பிற மதத்தினரின் வழிபாட்டு இடங்களை அபகரித்தும், அவர்களை கிறிஸ்தவத்துக்குள் நுழைய கட்டாயப்படுத்தியும், அவர்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றியும் கொடுமைப்படுத்தினார்கள்.

கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவத்தின் தலைமை இடம் என்று கான்ஸ்டண்டைன் மன்னன் தீர்மானித்திருந்தாலும், ரோமிலும் கிறிஸ்தவம் இருந்தது. அங்கே இருந்த கிறிஸ்தவத் தலைவர் மூத்தவராக இருந்ததாலும், பேதுரு முதலில் பணியாற்றிய இடம் என்பதாலும் ரோம் நகரின் கிறிஸ்தவ அமைப்பைப் போன்றே மற்ற அமைப்புகளும் இருக்க வேண்டும் என்னும் கருத்து நிலவியது. பேதுருவை இயேசு பாறை என்றழைத்து இந்தப் பாறையின் மீது எனது திருச்சபையைக் கட்டுவேன் என்றும். என் ஆடுகளை மேய்ப்பவனும், கண்காணிப்பவனும், பராமரிப்பவனும் நீ தான் என்றும் திருச்சபைக்கான முழு பொறுப்பையும் கொடுத்திருந்தார். எனவே அவர் இடத்தில் அவருக்குப் பின் வருபவரே அதிகாரத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் பரவலாயின.

கான்ஸ்டாண்டிநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலக்சாண்டிரியா உள்ள தலைவர்கள், அல்லது பிஷப் களுக்குக் கீழும் சபைகள் ஏராளம் இருந்தன. ரோம் தலைவரான பிஷப்புக்குக் கீழும் சபைகள் இருந்தன. ரோமில் இருந்த பிஷப் தன்னை பப்பா என்றும், மற்றவர்கள் தங்களை பாட்டிரியார்க் என்றும் அழைத்துக் கொண்டார்கள். ஒரு வகையில் உலகில் அப்போது ஐந்து போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் ! இந்த ஐந்து பேருக்குமிடையே யார் பெரியவன் யார் எல்லோருக்கும் தலைவராக இருப்பது என்று ஒரு போராட்டம். காலம் செல்லச் செல்ல ரோம் மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் இரண்டுக்குமிடையே தான் தலைவர் யார் என்னும் போராட்டம்! அதில் பேதுருவின் வழி வந்த இடம் என்பதால் ரோம், தன்னுடைய அதிகாரத்தை, தலைமைத்துவத்தை பிடித்துக் கொண்டது !

ரோம் திருச்சபை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. விவிலியத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது கூட ரோம் திருச்சபையே. ரோமாபுரித் திருச்சபையினரிடம் சிறப்பான நிர்வாகமும், திட்டமிடுதலும் இருந்தது. அவர்கள் ஆழமான விசுவாசத்துடன் மக்கள் பணிகளிலும் அதிகமாக ஈடுபட்டார்கள். ‘நான் பசியாய் இருந்தேன் எனக்கு உண்ணத் தந்தீர்கள்’ என்னும் கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்ப அவர்கள் மக்கள் தொண்டுகளில் ஆர்வம் காட்டியதால் மக்கள் அவர்களை மிகவும் உயர்வாக மதித்தார்கள். பஞ்சம், நோய்கள், போர் இழப்புகள் போன்றவை நிகழும் போதெல்லாம் திருச்சபை முன்வந்து அனைத்து உதவிகளையும் செய்தது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி, தன் எல்லைக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் உதவி செய்தது ரோம் திருச்சபை. எனவே அது முக்கியத்துவம் பெற்று தலைமை இடமானது !

ரோம் அக்காலத்தில் மிகவும் பரந்து விரிந்த பேரரசாய் இருந்தது. கி.பி 337ல் கிறிஸ்தவ மதம் பரவ முக்கிய காரணமாய் இருந்த மன்னன் கான்ஸ்டண்டைன் மரணமடைந்தான். அதன் பின் ஆட்சிக்கு யார் வருவது என்று எழுந்த சர்ச்சையில் உள்நாட்டுக் கலவரங்கள் எழத் துவங்கின. போரிட்டு, வன்முறையிலும் தான் அரச பீடத்தை கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை உருவானது. இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மேற்கு ரோம் மீது பலர் படையெடுத்து ஆக்கிரமிப்புகளை ஆரம்பித்தார்கள். நாடு மிகவும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டதும், நாட்டில் பலர் பணக்காரர்களாக இருந்ததும் பிற நாட்டினரைக் கவர்ந்திழுத்தது. பலர் வன்முறையாய் வந்து பல இடங்களைக் கைப்பற்றினார்கள். மேற்கு ரோமில் இருந்தவர்கள் போருக்குத் தயாராகாத நிலையில் இருந்ததால் அவர்களால் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க முடியவில்லை. இதனால் மேற்கு ரோம் கான்ஸ்டண்டைன் மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளின் சின்னாபின்னமானது. விசிகோத்ஸ், வாண்டல்ஸ், பர்கண்டியர்கள், பிராங்க்ஸ், ஹியூன்ஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து தாக்கியதில் கி.பி 486ல் மேற்கு ரோம் சிதறுண்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மிகப் பெரும் பேரரசு தன்னுடைய வலிமை இழந்து கவிழ்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 7 – கிறிஸ்தவத்தில் அறிவு நெறிக் கோட்பாடுகள்

 Image result for christianity religion
கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களால் வளர்ந்தது. இரண்டாம் நூற்றாண்டில் இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே உயிருடன் இல்லை. யோவான் கடைசியாக கி.பி 100ல் இறந்தபின் வழிகாட்டலுக்கு அப்போஸ்தலர்கள் இல்லாமல் சபை அடுத்த நிலை தலைவர்களின் கைகளுக்கு வந்தது.

முதலாம் நூற்றாண்டிலும் சரி, இரண்டாம் நூற்றாண்டிலும் சரி அரசாங்கத்தினால் கிறிஸ்தவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. புதிய சபை, கிளர்ச்சியின் சபை, திமிர்பிடித்தவர்களின் கூட்டம், நாத்திகர்களின் கூட்டன் என்றெல்லாம் பெயர்களை வாங்கி அடிபட்டது.

முதலாம் நூற்றாண்டில் ஒற்றுமையாக ஒரே சிந்தனையுடன் இருதார்கள் கிறிஸ்தவர்கள். இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருக பெருக பிரச்சனைகளும் ஆரம்பித்தன.

தாங்கள் சொல்வதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு எனும் எண்ணம் ஆங்காங்கே முளைத்தது. கிறிஸ்துவின் போதனைகளையும், தாங்கள் கற்றுக் கொண்டவற்றையும் கலந்து கட்டி தத்துவங்கள் புறப்பட்டன.

கிறிஸ்தவம் ஒரு தத்துவ மதம் என்னும் சிந்தனை ஆங்காங்கே முளைத்தது. எந்த தத்துவம் என்பதில் அங்கே போட்டி நிலவியது. கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே நிலவிய இந்த கருத்து முரண்பாடுகள் கிறிஸ்த்தவ ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தது.

முக்கியமாக மூன்று அறிவு நெறிக் கோட்பாடுகள் இந்த காலகட்டத்தில் தோன்றின.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டினர், எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டினர், பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாட்டினர் என அவர்கள் மூன்று மிகப் பெரும் பிரிவாக இயங்கினர்.

இவர்களுடைய அறிவு நெறிக் கோட்பாடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

சிரியன் அறிவு நெறிக் கோட்பாடு

முதலில் சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டைப் பார்ப்போம். இதை வெகுவாக பரப்பிய தலைவர்கள் சீமோன், மற்றும் டேஷியன் ஆவார்கள்.

சீமோன் தன்னைக் குறித்துப் பெருமையாய் பேசிக் கொள்பவர். அவருடைய கோட்பாட்டின் படி உலகத்தைப் படைத்த ஒரு கடவுள் உண்டு. அவர் சகல சக்தியும் உடையவர். அவரோடு கூடவே ஒரு பெண் தெய்வமும் உண்டு.

அந்த பெண் தெய்வமே தூதர்களைப் படைக்கிறது. அந்த பெண் தெய்வம் படைத்த தூதர்கள் பூமியை பாவ நிலமாக மாற்றி விட்டதனால் அவள் விண்ணகம் செல்லவில்லை. பூமியிலேயே தங்கி விட்டாள்.

ஒரு முறை அது டிராய் நகரத்து ஹெலன் இளவரசியாய் வெளிப்பட்டது. பிறிதொரு முறை தீர் நகரில் பாலியல் தொழிலாளியாக வெளிப்பட்டது. மூன்றாம் முறையாக அது சீமோனுக்கு வெளிப்பட்டதாம் !

சீமோனுடைய அறிவு நெறிக் கோட்பாட்டின் மையம். மீட்பு என்பது நமது செயல்களினாலல்ல, கடவுளின் அருளினால் என்பது தான். எனவே உடல் என்பதும், நம்முடைய பாவ செயல்கள் என்பதும் மீட்போடு தொடர்புடையது அல்ல என்று நம்பினார்கள்.

அனைத்து விதமான பாவ அசுத்த வழிகளிலும் தவறாமல் நடந்தார்கள்.

இவருடைய சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டு சீடர்கள் இந்த கருத்துக்களை எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் பரப்பினார்கள்.
சிரியன் அறிவு நெறிக் கோட்பாட்டில் இன்னொரு பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் பாம்பை வழிபட்டார்கள். அதாவது பாம்பு ஏவாளுக்குப் விலக்கப்பட்ட மரத்தின் கனியை அளித்ததால் தான் ஏவாளுக்கு அறிவுக் கண்கள் திறந்தன. எனவே ஏவாளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டது பாம்பு தான். நன்மை தீமை அறியும் அறிவு மனிதனுக்கு வர காரணமே பாம்பு தான் என பல்வேறு காரணங்களை அடுக்கினார்கள்.

டேஷியன் தன்னுடைய போதனையிலும் நமது செயல்களுக்கும் நமது மீட்பிற்கும் தொடர்பு இல்லை என்றே வாதிட்டார். அவருடைய சிந்தனைப்படி உலகத்தைப் படைத்தவர் கடவுள் அல்ல. இரண்டாம் நிலையிலுள்ள ஒரு கடவுளே உலகத்தைப் படைத்தவர்.

கிறிஸ்துவும் இயேசுவும் இரண்டு வேறு மனிதர்கள். இயேசு என்னும் மனிதர் மரியின் வயிற்றில் பிறந்தார். அவருக்குள் கிறிஸ்து வந்து இறங்கினார். பின்னர் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பாகவே அவர் இயேசுவை விட்டு வெளியேறிவிட்டார். இது சிரியன் அறிவு நெறிக்கோட்பாட்டினரின் இன்னொரு தத்துவம்

இயேசு தாவீது மன்னனின் தலைமுறையில் வந்தவர் என்பதை இவர் விரும்பவில்லை. இயேசுவுக்கு அந்த அடைமொழி தேவையற்றது என நினைத்தார். எனவே அவருடைய சிரியன் குழுவினர் பயன்படுத்த விவிலியத்தில் சில மாற்றங்கள் செய்தார். குறிப்பாக தாவீதின் மகன் என இயேசுவைக் குறிக்கும் அனைத்து பாகங்களையும் விலக்கினார்.

சிரியன் குழுவினரில் காயீனன் என்னும் இன்னொரு குழுவினரும் இருந்தார்கள். இவர்கள் காயீன் போன்றவர்கள் கட்டளை மீறல்கள் நடத்தியதால் தான் உலகிற்கு மீட்பு தேவைப்பட்டது. அதனால் தான் இயேசு பூமிக்கு வந்தார். எனவே காயீன் போன்ற தீய மனிதர்கள் உண்மையில் நன்மை செய்திருக்கிறார்கள் எனும் வித்தியாசமான சிந்தனை கொண்டிருந்தனர்.

இவருடைய இந்த விவிலியம் சிரியன் குழுவினரிடம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கிறது.

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு

எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு செய்த போதனை மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது கடவுள் மிகவும் பரிசுத்தமானவர். அவரிடமிருந்து ஏயோன்கள் என்னும் ஆவிகள் வெளியேறி செயலற்றவற்றை உருவாக்கின என்பதாகும்.

ஆனால் எத்தனை ஏயோன்கள் என்பதில் அவர்களுக்குள் பெரும் பிரச்சனை வந்து விட்டது. சிலர் முப்பது என்று சொல்ல, இன்னொரு பிரிவினர் பதினாறு சோடி எனவே முப்பத்தி இரண்டு என்று சொல்ல, வேறு சிலர் இயேசுவும் தூய ஆவியும் கூட கடவுளின் ஏயோன்கள் தான் என்றனர்.

அவர்களுடைய தத்துவப்படி உலகின் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை மனிதர்கள் ஜடம் போல இருப்பார்கள். இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் மீட்படைவதில்லை. இவர்கள் ஆன்மீகத்தின் வாசலுக்குக் கூட வராதவர்கள். எனவே இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

இரண்டாவது வகையினர் மனோதத்துவ மனிதர்கள். இவர்கள் தங்களை சற்று அறிந்தவர்கள். இவர்கள் மீட்படைய வாய்ப்பு உண்டு. ஆனால் தனியாக இவர்களால் மீட்பு அடைய முடியாது. ஒரு மீட்பரின் மூலமாக இவர்கள் மீட்படைய முடியும்.

மூன்றாவது வகை மனிதர்கள் ஆன்மீக வாதிகள். இவர்களுக்கு விண்ணகத்தில் நிரந்தர இடம் உண்டு. இவர்கள் வழக்கம் போல இறைவனுக்காய் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தால் போதும்.

இந்த மூன்று வகையான மனிதர்களைக் குறித்த போதனைகள் எகிப்திய அறிவு நெறிக் கோட்பாட்டின் முக்கியப் பணியாக இருந்தது.

பாஸிலிடிஸ் என்னும் ஒரு மனிதர் இருந்தார். அவரும் எகிப்திய நெறிக் கோட்பாடை ஏற்றுக் கொண்டு பரப்பி வந்தவர். அவருடைய கருத்துப் படி கடவுளிடமிருந்து வந்த ஏயோன்களின் ஒன்று யூதர்களின் கடவுள். அந்த கடவுள் அழிவுக்கு மக்களை நடத்துகிறார்.

கிறிஸ்து இறந்தது ஒரு தோற்ற மயக்கமே. உண்மையில் கிறிஸ்து இறக்கவில்லை. வழியில் அவருக்கு சிலுவை சுமக்க உதவிய சீரேனே ஊரானாகிய சீமோன் தான் சிலுவையில் அறையப்பட்டவர்.

இந்த நெறிக் கோட்பாட்டினரும் உடலை எப்படிப் பயன்படுத்தினாலும் தவறில்லை. ஆன்மா மட்டுமே அழுக்கடையாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தனர்.

பாண்டிக் அறிவு நெறிக் கோட்பாடு

மார்சியன் என்னும் பெரும் பணக்காரரால் இந்த பாண்டிக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. இவர் ரோம திருச்சபைக்கு பெரும் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இவருடைய போதனைப்படி யூதரின் கடவுள் மிகவும் மோசமானவர். அவர்கள் இரக்கத்தின் கடவுளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே கடவுள் இயேசு எனும் இரக்கத்தின் கடவுளை உலகிற்கு அனுப்பினார்.

விவிலியத்தின் பழைய ஏற்பாடு புறக்கணிக்கப்பட வேண்டியது. புதிய ஏற்பாட்டின் இரக்கமும், பழைய ஏற்பாட்டின் பழி வாங்குதலும் முரணானவை. முரண்கள் இரண்டு ஒரே அரணுக்குள் இருக்கக் கூடாது எனவே அதை புறக்கணிக்க வேண்டும் என பழைய ஏற்பாட்டை புறக்கணித்தார்.

இவ்வுலகம் தீமையினால் நிறைந்தது. இந்த உலகின் கடவுளுக்கும் இயேசு சொன்ன கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இரண்டும் வேறு வேறு நபர்கள் என்று போதித்தார்.

கிறிஸ்துவுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. எல்லாம் ஒரு தோற்ற மயக்கமே என்பதும் இவருடைய போதனைகளில் ஒன்று.

மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். திருமணம் செய்வது கூட உடலை தீட்டுப் படுத்துவது. எனவே திருமணத்தைக் கூட வெறுத்தார். புலால் உண்ணவில்லை. உடல் தூய்மையைக் கடைபிடித்தார்.

இவ்வாறு இரண்டாம் நூற்றாண்டிலும் மூன்றாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் குழுக்களாக விவாதங்களில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் ஆதிகால இணைந்து வாழும் முறை எல்லாம் விடைபெற்றிருந்தது.

கிறிஸ்தவ மதம் மாபெரும் குழப்பத்தையும் சவாலையும் சந்தித்தது

கடவுளைப் பற்றிய தவறான தகவல்களை பல விதமாகப் போதித்தனர். கடவுள் உலகைப் படைத்தார் எனும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக அது அமைந்தது.

கிறிஸ்து ஒரு தோற்றம் என்பதும், உண்மையில் இயேசு இறக்கவில்லை என்பதும் கிறிஸ்தவத்தின் அடித்தளத்தையே அசைப்பவை. எனவே அவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் விழுந்தது.

கடவுளிடமிருந்து ஏயோன் புறப்படுகின்றன எனும் கற்பனைகளும் கிறிஸ்தவத்துக்கும் விவிலியத்திற்கும் எதிரானது. இந்த அறிவு நெறிக் கோட்பாடுகள் அவற்றையும் பெருமளவில் பரப்பின.
அந்த காலகட்டத்தில் அறிவு நெறிக் கோட்பாடு கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக கிளம்பியதால் பலர் அதை எதிர்த்தார்கள். பல நூல்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை மையப்படுத்தியும் நெறிக் கோட்பாடுகளை எதிர்த்தும் வெளியாயின.

ஜஸ்டின், ஐரேனியஸ், கிளமெண்ட் முதலானோரின் நூல்கள் அக்கால கிறிஸ்தவர்களின் குழப்பங்களைத் தீர்க்கும் விதமாய் அமைந்தன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாண்டேனஸ் கொள்கை

கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அறிவு நெறிக் கோட்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவை விடப் பல மடங்கு பின்னடைவை மாண்டேனஸ் சபை ஏற்படுத்தியது. இந்த பிரிவில் நடந்த நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மாறாத கரும்புள்ளியாய் இடம்பெற்றுவிட்டது.

கி.பி 156ல் மாண்டேனஸ் கொள்கை பிறந்தது. இதை மாண்டேனஸ் என்பவர் உருவாக்கியதால் இது மாண்டேனஸ் கொள்கை என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

பிரிகியா நாடு இந்த மாண்டேனஸ் கொள்கைக்காரர்களால் புனித பூமி என்று வர்ணிக்கப்பட்ட நாடு.

மிசியாவில் அர்டபா எனுமிடத்தில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த மாண்டேனஸ். பிறப்பினால் கிறிஸ்தவரானவர் அல்ல இவர். இவர் தன்னுடைய கடவுளாக சைபீல் தேவதையை ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்து வந்தவர்.

கிறிஸ்தவ மதமும் அதன் பிரிவுகளும் அதன் பன்முகக் கோட்பாடுகளும் மாண்டேனஸ் பார்வையை கிறிஸ்தவத்தின் பக்கம் திருப்ப வைத்தன. கி.பி 150ல் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் மக்களை வசீகரிக்க, தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என கூறத் துவங்கினார். பலர் அதை நம்பினார்கள். நம்பியவர்கள் அவருடைய குழுவில் இணைந்தார்கள்.

தூய ஆவியானவர் தன்னுடன் பேசுகிறார் என்று சொல்லி வந்த மாண்டேனஸ் ஒரு கட்டத்தில் தானே தூய ஆவியானவர் என்று பேசத் துவங்கினார். அவருடைய ஆதரவாளர்களும் அவரை தூய ஆவியானவராகவே பார்த்தார்கள்.

பிரிசில்லா, மாக்ஸிமில்லா எனும் இரண்டு பெண்கள் அவருடைய தீவிரமான பக்தர்கள் ஆகிவிட்டனர். இருவதும் அவரோடே திரிந்து கொள்கைப் பரப்புச் செயல்களில் ஈடுபட்டனர்.

கடவுளும் தூய ஆவியானவரும் தனக்குள் இறங்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று இவர் சொல்லிக் கொண்டார். எனவே அவருடைய பேச்சை கடவுளின் நேரடிப் பேச்சுக்குரிய மரியாதை கொடுத்து அனைவரும் ஆதரித்தனர்.

இவருடைய கொள்கைப்படி திரு வெளிப்பாடு முடியவில்லை. திருவெளிப்பாடு என்பது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த இயேசுவின் வெளிப்படுத்தல். தன் உயிர்ப்பிற்குப் பின் இயேசுவே தன்னுடைய அன்புக்குரிய சீடனான யோவானுக்குக் காட்சி கொடுத்து அறிவுறுத்தியதே திருவெளிப்பாடு என நம்புகிறது கிறிஸ்தவம்.

மாண்டேனஸ் தன்னுடைய போதனைகளில் திருவெளிப்பாடு இன்னும் வரவில்லை. அது விரைவில் வரும் என அறிவிக்கத் துவங்கினார். அவருடைய பேச்சுத் திறமை மாண்டேனஸ் கொள்கைக்கு ஆட்களைக் கூட்டிச் சேர்த்தது.

பிரிகியாவிலுள்ள பெப்பூசா எனுமிடத்தில் இயேசு இரண்டாம் முறை வருவார் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. பல பரவசப் பேச்சுகளைப் பேசி வந்த மாண்டேனஸ் தன்னுடைய சீடர்களுடன் பெப்பூசாவில் சென்று தங்கினார்.

இவருடைய கொள்கைக்காரர்கள் கடவுள் விரைவில் வருவார் என நம்பினார்கள். எனவே தங்களுக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பதும், ஆலயத்துக்குக் கொடுப்பதும், உண்ணா நோன்பு இருப்பதும் என பல செயல்களைச் செய்தனர்.

பிரிஸ்கில்லாள் தன்னுடைய கணவனை விட்டு விட்டு மாண்டேனஸின் தீவிர பக்தையாய் சுற்றத் துவங்கினார். இயேசுவின் இரண்டாம் வருகை இதோ விரைவில் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய ஆயுள் கனவுகளை நிறைவேற்றி வைக்காமலேயே நிறைவுற்றது.

மாக்சிமில்லாளும் மாண்டேனஸ் கொள்கைகளைத் தீவிரமாய் பரப்பினாள். மாண்டேனஸ் சபையின் தீர்க்கத் தரிசி போல செயல்பட்டார். தானே கடைசி தீர்க்கத் தரிசி, இனிமேல் தீர்க்கத் தரிசிகள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே உயிர் நீத்தார்.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் பெப்பூசாவில் இயேசுவின் இரண்டாம் வருகை வரும் வரும் என காத்திருந்தார்கள். ஆனால் நடக்கவில்லை. எனவே பெப்பூசாவே புதிய எருசலேம். புனித நகரம் என்று போதிக்கலானார்கள்.

பெப்பூசா புதிய எருசலேம் என்னும் பெயர் பரவியதும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு புனித யாத்திரை வந்தார்கள். பெப்பூசாவின் புகழ் பரவியது. பல நாடுகளிலிருந்தும் மக்கள் பெப்பூசாவுக்கு வர ஆரம்பித்தனர்.

மாண்டேனஸ் கொள்கையைப் பின்பற்றுபவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும் மற்றவர்கள் போலிகள் என்றும் அவர்கள் தீவிரமாய் போதித்தனர். சபைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெண்களுக்கு உயரிய நிலை வழங்கப்பட்டது.

ஆப்பிரிக்காவிலும் மாண்டேனஸ் கொள்கை பரவத் துவங்கியது. தெர்த்துலியான் என்பவர் ஆப்பிரிக்காவில் மாண்டேனஸ் கொள்கையைப் பரப்ப உறுதி எடுத்து தலைமை ஏற்றார்.

தெர்த்துலியான் போதனைகள் கடுமையாய் இருந்தன. குருக்களும் பொது நிலையினரும் ஒரே மரியாதைக்குரியவர்கள். இருவருக்கும் வித்தியாசமில்லை எனும் உயரிய சீர்திருத்தச் சிந்தனையை தீவிரமாய் போதித்தவர் அவரே.

இருமுறை திருமணம் செய்வதை தீவிரமாய் எதிர்த்தார் இவர். ஒன்றே கடவுள், ஒன்றே சபை, ஒன்றே திருமணம் என்று வித்தியாசமாய் போதித்தார்.

கி.பி 395ல் தியோடஸ் மன்னனின் காலத்தில் மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் ஒடுக்கப்பட்டனர். அதே நிலை யுஸ்தினியான் மன்னன் அரசாண்ட கி.பி 565லும் நிகழ்ந்தது.

மாண்டேனஸ் கொள்கைக்காரர்கள் மன்னர்களின் வாளுக்கு மடியவில்லை. குழுக்கள் குழுக்களாக ஆலயங்களில் கூடினார்கள். வாயில்களை மூடினார்கள். ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி தாங்களும் மாண்டார்கள் !

நெஸ்டோரியஸ் கொள்கை

ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேலும் சில கொள்கை ரீதியிலான பிளவுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. பல இடங்களுக்குக் கிறிஸ்தவம் பரவினாலும் அவர்களிடையே ஒரே சிந்தனை இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் புரிந்து கொண்ட விதமாக கிறிஸ்தவத்தைப் பார்த்தனர்.

இந்த காலகட்டத்தில் எழுந்த கொள்கைகளில் நெஸ்டோரியஸ் கொள்கை மிக முக்கியமானதாகும். நெஸ்டோரியஸ் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்தவர். இவர் கி.பி 428ல் அவர் கான்ஸ்டாண்டிநோபிளில் பேராயராக பொறுப்பேற்றார்.

இவருடைய கொள்கைப்படி இயேசு பிறக்கும் போது தெய்வத் தன்மையோடு பிறக்கவில்லை. கடவுளின் அருளால் பிறந்தவர் இயேசு எனும் கூற்றை இவர் மறுத்தார். தெய்வீகத் தன்மையுடன் இயேசு பிறக்காததனால் இயேசுவின் தாய்க்கு தெய்வீகத் தன்மை இல்லை.

இயேசு பிறந்த பின்பே அவர் ஒரு காலகட்டத்தில் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டார். எனவே இயேசுவிலேயே மனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் கலந்து தான் காணப்படுகிறது.

இயேசுவின் தாய்க்கு எந்தவிதமான தெய்வீகத் தன்மையும் இல்லாததால் அவருக்கு மரியாதை செலுத்த அவசியமில்லை. இயேசுவின் அன்னையை ‘தேவமாதா’ என்று அழைக்கப்படுவது தவறு என்றார்.

இந்தக் கொள்கையை பெரும்பாலானோர் எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டிரியா பேராயர் சிரில். இவர் குறிப்பிடுகையில் இயேசுவின் பிறப்பே தெய்வத் தன்மையுடையது தான். இயேசு மனிதத்தன்மையும், இறைத்தன்மையும் கலந்து பிறந்தவர் எனவே மாதாவை தேவமாதா என்று அழைக்கலாம் என்றார்.

சிரில் கொள்கை பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரோமை தலைமையும் இதை ஏற்றுக் கொண்டதால் நெஸ்டோரியஸ் கொள்கைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

நெஸ்டோரியஸ் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரும் அவருடைய ஆதரவாளகளும் தங்களுடைய கொள்கைகளை விட்டு விலக மறுத்தனர். எனவே நெஸ்டோரியஸ் எகிப்து நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நெஸ்டோரியஸ் நாடுகடத்தப்பட்டாலும் நெஸ்டோரியஸ் கொள்கை அழியவில்லை. உலகின் பல நாடுகளுக்கும் அந்த கொள்கை பரவியிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்த கொள்கை தாக்குப் பிடிக்க முடியாமல் அழிவைச் சந்தித்தது.

பலாகியஸ் கொள்கை

பலாகியஸ் என்னும் குருவானவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பலாகியஸ் கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படை ஜென்ம பாவத்தை மறுதலிப்பதாகும். மனிதனுக்கு முன் ஜென்ம பாவம் என்று ஒன்று இல்லை என்று இவர் வாதிட்டார்.

ஆதாம், ஏவாள் பாவம் செய்ததால் மனித குலம் முழுவதுக்கும் ஜென்ம பாவம் இருக்கிறது எனும் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கையை இது எதிர்த்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையே அவனுடைய மீட்புக்கும் வழி வகுக்கும். மனிதன் பிறக்கும் போது தெய்வீகத் தன்மையோடு பிறக்கிறான். தெய்வீகத் தன்மையோடு பிறக்கும் மனிதன் பாவியாக இருக்க முடியாது.

மனிதன் பிறக்கும் போது ஆதாமுக்கும் முந்திய நிலையில் தான் பிறக்கிறான். எனவே ஆதாமின் பாவம் அவனைப் பாதிக்காது.

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான கிறிஸ்துவால் மீட்பு எனும் கொள்கையை அசைத்தது. காரணம் பாவமே செய்யாத நிலையில் மனிதன் பிறக்கிறான் எனில் அவனுக்கு மீட்பு தேவையில்லை.

கிறிஸ்து இல்லாமலேயே மனிதனுடைய உள் தெய்வீகத் தன்மை மூலம் அவன் மீட்பைப் பெறமுடியும் என்று போதித்தார் பலாகியஸ்.

இவருடைய கொள்கைக்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. புனித அகுஸ்தீனார் இவருடைய கொள்கையை தீவிரமாய் எதிர்த்தார்.

புனித அகுஸ்தீனார் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான பல நூல்களை இயற்றியவர். இளமைக்காலத்தில் பல விதமான தவறுகளைச் செய்யும் மனநிலை உடையவராக இருந்தாலும் பின் மனம் திரும்பி திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவத்தில் இணைந்தார்.

கிறிஸ்தவத்தில் இணைந்து பல ஆண்டுகள் பேராயராக இருந்தார். இவர் கிறிஸ்தவத்துக்கு எதிரான கொள்கைகள எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார்.

இவருடைய போதனைகளில் ஆதாமுக்குப் பின் மனுக்குலம் பாவத்தில் விழுந்தது. மனிதனின் தெய்வீகத் தன்மை சிதைக்கப்பட்டு விட்டது. எனவே முன்பாவம் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்ப்புமே ஆதாமின் பாவத்தை விலக்கும் சக்தி கொண்டது என்று போதித்தார். இறை அருள் இல்லாமல் மனிதன் எதையும் செய்ய முடியாது என்றும், மீட்புக்கான வழியைக் கண்டறியவே அவனுக்கு இறை அருள் தேவை என்றும் அவர் போதித்தார்.

இறைவனின் கருணை மனிதனை மீட்படையத் தூண்டுகிறது, மனிதனோடு இணைந்து செயலாற்றுகிறது, மனிதனால் எதிர்க்க முடியாததாக இருக்கிறது எனும் மூன்று தத்துவங்களை முன்வைத்து தன்னுடைய போதனைகளை இவர் அமைத்துக் கொண்டார்.

காப்புரையாளர்கள் ( Apologists )

அரசியல் ரீதியாக கிறிஸ்தவர்கள் துன்பங்களைச் சந்தித்தபோது கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துதல் நியாயமற்றது என்பதை நிரூபிக்க பலர் போராடினார்கள். இவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எழுதி வெளியிட்டார்கள். இவர்களே காப்புரையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எழுத்துப் படிவங்கள் அரச இருக்கைகளில் இருந்தவர்களுக்கு அனுப்பப்பட்டன. கிறிஸ்தவ மதம் குறித்த புரிதலையும், அந்த நாட்களின் கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.

அந்த காலத்து காப்புரையாளர்கள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் காப்புரைகள் எழுதியிருக்கிறார்கள். குவார்டிரேட்டஸ், அரிஸ்டைடிஸ், தியோப்பிலஸ், ஆரிகன், அந்தேனோகொராஸ், கிளமெண்ட், ஜஸ்டின் மார்ட்டின், தேசியன் போன்றோர் கிரேக்க மொழியில் காப்புரைகள் எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.

இலத்தீன் மொழியில் காப்புரைகள் எழுதியவர்களில் அர்னோபியஸ், தெர்ட்டூலியன், பெலிக்ஸ், லாக்டாண்டியஸ் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.

இந்த காப்புரையாளர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்றவும், மதத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும் பல வழிகளில் போராடினார்கள். இவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ நியாயங்களை முன்வைப்பதாகவே அமைந்தன.

சிலர் பிற மதங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதினார்கள். இதன் மூலம் அத்தகைய குறைபாடுகள் கிறிஸ்தவ மதத்தில் இல்லை என புரிய வைத்து அரசின் அங்கீகாரம் பெறுவது அவர்களின் நோக்கம்.

சிலர் மற்ற மதங்கள் போதிக்கும் மீட்பரும் இயேசுவே என பழைய ஏட்டுச் சுருள்களையும், நீதி நூல்களையும், பழைய தீர்க்கத் தரிசனங்களையும் இயேசுவோடு ஒப்பிட்டு எழுதினார்கள். இதன் மூலம் கிறிஸ்தவம் மற்ற மதங்களை அழிக்க வந்ததல்ல, மற்ற மதங்களின் தொடர்ச்சியாக வந்தது என்பதை நிரூபிப்பது அவர்களின் விருப்பம்.

சிலர் இயேசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அதிசயச் செயல்களைப் பட்டியலிட்டு, அவற்றைக் குறித்த விரிவான விளக்கங்களையும் எழுதி மன்னனுக்கு அனுப்பினார்கள். இயேசுவின் பெயரால் அதிசயங்கள் நடக்கின்றன அவர் உண்மையான கடவுள் என்றனர்.

சிலர் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை விவரித்து எழுதினார்கள். அவர்களுக்குள்ளே நிலவிய சகோதர மனப்பான்மையையும், உயரிய குணங்களையும் விரிவாக எழுதினார்கள். அவர்கள் பிற மதங்கள் மீதான வன்முறை எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை என வாதிட்டனர்.

இத்தனை வன்முறைகளுக்குப் பின்னும் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் அழியாமல் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அது உண்மையான கடவுளால் உருவானது எனும் கருத்தின் அடிப்படையில் பலர் எழுதினார்கள்.

குவாடிடேட்டஸ் எழுதிய காப்புரையே முதல் காப்புரை என்கிறார் யூசபியஸ் எனும் விவிலிய அறிஞர். கிவேடிடேட்டஸ் மிகவும் தாழ்மையான குரலில் தன்னுடைய வாதத்தை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் அரசின் சட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கிறிஸ்தவர்கள் வரி செலுத்துகிறார்கள். கிறிஸ்துவை அறிக்கையிட்டதைத் தவிர எந்த காரணத்துக்காகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பேரரசருக்கு கிறிஸ்தவர்கள் எதிரிகளல்ல. என்று குவாடிடேட்டஸ் தன்னுடைய காப்புரையில் குறிப்பிடுகிறார்.

ஜஸ்டின் மார்ட்டின் எழுதிய காப்புரைகள் புகழ்பெற்றவை. இவருடைய காப்புரை ஒன்றைப் படித்தபின் மன்னன் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமான ஒரு ஆணையைப் பிறப்பித்த வரலாறும் உண்டு.

அவருடைய காப்புரையில் கிறிஸ்தவர்களின் ஆழமான விசுவாசத்தை தன்னுடைய புலமை கலந்து எழுதினார். மரண நேரத்திலும் அவர்களுடைய உறுதியை குறிப்பிடுகிறார். இதன்மூலம் கிறிஸ்தவத்தில் கிறிஸ்தவன் கொண்டுள்ள ஆழமான பற்றுறுதியை புலப்படுத்துகிறார்.

அந்தேனோகொராஸ் தன்னுடைய காப்புரையில் கிறிஸ்தவ மதத்தின் தத்துவக் கூறுகளை எழுதுகிறார். கிறிஸ்தவர்கள் எனும் பெயருக்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றார். கிறிஸ்தவர்களுக்கும் மற்ற மனிதர்களைப் போல விசாரணக்குட்படுத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் அல்ல என்றும், உருவ வழிபாடு இல்லையெனில் நாத்திகம் என பொருள் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார். கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஒழுக்கம் போன்றவற்றையும் விரிவாக எழுதியுள்ளார்.

பாடுபட அஞ்சுபவர்கள் பாடுபட்ட இயேசுவின் பின் செல்பவர்களாக இருக்க முடியாது. எனவே நாங்கள் பாடுபட பயப்படவில்லை. இரத்தம் தோய்ந்த மரணத்தின் கைகளில் விழுந்தாலும் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கொண்டு தான் கிறிஸ்தவன் சாவான் ‘இரத்த சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் விதை ‘ என உணர்ச்சி பூர்வமாக எழுதினார் தெர்துல்லியான்.

இவ்வாறு மக்கள் எழுதிய காப்புரைகள் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கு அரசுகளால் நேர்ந்த இன்னல்களையும் பற்றிய அறிவைத் தருகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 8 திருச்சபை வளர்ச்சியின் அடுத்த‌ கட்டம்

Image result for history of christianity

திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்

ரோமர்கள் கிறிஸ்தவத்தை அழிப்பதற்காக பல வழிகளில் முயன்றார்கள். மற்ற பல மதங்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவம் தன்னுடைய அணுகுமுறையையும், வழிபாட்டு முறையையும் மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டிருந்தது ரோமர்களின் கோபத்தைத் தூண்டியது.

சிலைவழிபாடு அக்காலத்தில் பரவலாக இருந்த ஒரு வழிபாட்டு முறை. கிறிஸ்தவம் அதை எதிர்த்தது. சிலைகளுக்குப் பலியிடுவதையோ, அவற்றுக்கு அபிஷேகங்கள் நடத்துவதையோ கிறிஸ்தவம் எதிர்த்தது. பல மதங்கள் இயேசுவையும் ஒரு கடவுளாக வழிபட ஒப்புக்கொண்டன, கிறிஸ்தவர்களோ இயேசுவை வழிபட வேண்டுமெனில் பிற கடவுள்கள் யாரையும் வழிபடக் கூடாது என்று தடை விதித்தது. பல கடவுள்களோடு ஒருவராக இயேசு அல்ல, இயேசுவே ஒரே கடவுள் என்னும் கொள்கையை அது போதித்தது. கிறிஸ்தவத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு பார்க்கப் படவில்லை. தலைவராக இருக்க அனைவருமே தகுதியுடைவர்கள் என்னும் கருத்து நிலவியது. இவையெல்லாம் ரோம அரசர்கள் கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாயின.

கி.பி 303 முதல் கி.பி 305 வரை ஆண்ட டயோக்ளிஷியன் ஆட்சிகாலம் கிறிஸ்வதவர்களுக்கு ஒரு நடுக்கத்தின் காலமாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தவன் இந்த மன்னன். இவன் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல சட்டங்கள் இடப்பட்டன. அதன்படி கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், அவர்களை நாடுகடத்துதல், ஆலயங்களை எரிப்பது, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பு உட்பட ஏராளமான சட்டங்கள் போடப்பட்டன. இவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்தன. கிறிஸ்தவர்கள் மீண்டும் மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வருடங்கள் ஓடின. மேலும் சில மன்னர்கள் வந்தார்கள். முந்தைய அரசர்களின் போரை தொடர்ந்தார்கள். அவர்கள் விட்ட இடத்திலிருந்து இவர்கள் தொடர்ந்தார்கள். கிறிஸ்தவம் என்னும் மதம் அடியோடு அழிக்கப்படுமோ என்று தோன்றுமளவுக்கு நிகழ்வுகள் நடந்தன. அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது கான்ஸ்டண்டைன் மன்னனின் வரவு.

கான்ஸ்டண்டைன் மன்னன் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு அறிக்கை வெளியிட்டான். அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கிறிஸ்தவம் ஒரு அங்கீகரிக்கப் பட்ட மதமாக திகழும் என்பதே அது. அந்த சட்டத்தைப் பின்பற்றி கி.பி 380 ல் கிறிஸ்தவ மதம் என்பது ரோம பேரரசின் அங்கீகரிக்கப் பட்ட மதமாக மாறியது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியபின் அதற்கு அரசு பாதுகாப்பு இருந்தது. மறைந்து வாழும் வாழ்க்கை நின்று போனது. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்புகின்றவர்கள் கொடுமைகள் அனுபவிக்கும் நிலை அகன்று விட்டது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் ஆனதும் கிறிஸ்தவ மதத்துக்கான புனித நூலைத் தயாரிக்கும் பணி துவங்கியது. கி.பி 397ம் ஆண்டில் வேதாகமம் தொகுக்கப் பட்டது. அது கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமானது.

கிறிஸ்தவத்தில் கி.பி ஐநூறாம் ஆண்டு முதல் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டுவரை உள்ள காலம் இடைக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் திருச்சபையைத் துறவறம் பெருமளவில் ஆக்கிரமித்தது.

ஐரோப்பா போன்ற நாடுகளில் கிறிஸ்தவம் பெருமளவில் பரவிய காலகட்டம் இது என்பதாலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகி விடுகிறது இந்த இடைக்காலத் திருச்சபை. கிறிஸ்தவத்தில் துறவறமே சிறந்ததென்று கருதி ஒரு காலகட்டத்தில் ஐரோப்பா துறவி மடங்களால் நிரம்பி வழிந்தது.

ரோமை ஆண்டுவந்த மன்னன் தியோக்லேஷியான் அன்றைக்கு உலகம் என்று கருதப்பட்ட ரோம் நகரை இரண்டாகப் பிரித்தார். மேற்குப் பாகம் ரோமை தலைநகராகக் கொண்டும் கிழக்கும் பாகம் கான்ஸ்டாண்டிநோபிளை தலைமையிடமாகவும் கொண்டு இயங்கத் துவங்கியது. இது ரோமின் வீழ்ச்சியானது.

முதலாம் கிரெகோரி போப்பாக பதவியேற்ற கி.பி 590ம் ஆண்டே திருச்சபையின் இடைக்கால ஆரம்பமாகிறது.

ஒரு குழப்பமான சூழலில் கிரெகோரி பதவியேற்றார். இவர் பதவியேற்கும் முன் 527 முதல் 565 வரை கான்ஸ்டாண்டிநோபிளின் பேரரசன் ஜஸ்டினியான் காலத்தில் கிறிஸ்தவத்திலுள்ள கொள்கைப் பிரிவினரோடு திருச்சபைக்கு பெரும் போராட்டம் இருந்தது.

யுனிஸ்டியான் கான்ஸ்டாண்டிநோபிள் நகரை விரிவாக்கி தன்னுடைய அரசின் எல்லைகளை பலப்படுத்த விரும்பினான். மேலும் திருச்சபைக்கு தானே தலைவனாக வேண்டும் என்றும் அனைத்து பேராயர்களும், குருக்களும் தனக்குக் கீழானவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான்

த சர்ச் ஆஃ செயிண்ட் சோபியா ஆலயத்தை கான்ஸ்டாண்டிநோபிளில் இவர் கட்டினார். மேலும் பல ஆலயங்களையும் துறவற மடங்களையும் இவர் கட்டினார்.
கிறிஸ்தவத்தை வளர்க்க வேண்டும் என இவர் விரும்பினாலும் அனைத்துக்கும் தானே தலைவராக வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்ததால் திருச்சபைக்கு எதிரானவராய் தோன்றினார்.

கி.பி 54ல் பிறந்த கிரெகோரி ஒரு சிறந்த வழக்கறிஞராய் வாழ்ந்து வந்தார். லம்பாடியர்களால் ரோம் நகருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனும் சூழல் எழுந்தபோது இவர் அமைதிப் பேச்சின் தலைவராக செயலாற்றினார்.

சிறந்த நுட்பமும், அறிவும் அரசியல் செல்வாக்கும் பெற்றவராக இருந்தார் கிரெகோரி. எனினும் அரசியல் பதவிகளை விரும்பாமல் கிறிஸ்தவத்தில் இணைந்து பணி செய்வதையே விரும்பினார்.

தன்னுடைய சொத்துகளின் பெரும்பாகத்தை விற்று அதை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். கிறிஸ்தவ மதத்தின் துறவற நிலையையே முதலில் விரும்பினார். சுமார் ஐந்து ஆண்டுகள் இவர் துறவற நிலையிலேயே இருந்தார்.

ஒருமுறை ரோம் நகரில் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவர்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்கள். அந்த இந்த சிறுவர்களின் அழகையும், கம்பீரத்தையும் கண்ட கிரெகோரி அந்த நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்ப வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

கி.பி 570ல் ரோம் நகரில் பிளேக் நோய் பரவியது. அப்போது ரோம் நகர போப் காலமானார். அடுத்த போப் ஆக பணியாற்றும் வாய்ப்பு திறமையும், சாதுர்யமும், தைரியமும் நிறைந்த கிரெகோரிக்கு வாய்த்தது.

ஆனால் கிரெகோரி முதலில் போப் பட்டத்தை விரும்பவில்லை. ஓடி ஒளிந்தார். ஆனால் குழு கிரெகோரியைத் தான் போப் ஆக திருநிலைப்படுத்துவது என முடிவோடு இருந்தார். எனவே மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கண்டுபிடித்து போப்பாக நியமித்தார்கள்.

கடவுளின் பணியாளர்களுக்கெல்லாம் பணியாளர் என்னும் பெயரை வைத்துக் கொண்டு போப் எனும் பதவியின் பெருமையை இவர் உயர்த்தினார். போப்பின் பணிகளும் அவருடைய ஆளுமைளும் இவருடைய காலத்தில் சிறப்பாக வெளிப்பட்டன.

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம்

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் என்பது ரோமின் வீழ்ச்சி முதல் கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ச்சி வரை உள்ள சுமார் ஆயிரம் ஆண்டு காலத்தைக் குறிப்பிடலாம். இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவம் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் முதலாம் கிரிகோரி என்பவர்.

ரோம் அரசாங்கத்தில் கவர்னராகப் பணியாற்றி வந்த கிரிகோரி தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் துறவியாக மாறினார். லத்தீன் மொழியில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கினார் அவர். லத்தீன் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார். ரோம் பிஷப்பின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிளில் சிலகாலம் பணியாற்றிய இவர் பின்னர் தனியே வந்து தூய ஆண்ட்ரூ என்று ஒரு மடம் ஆரம்பித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். துறவறம் ஏற்றபின் தன்னுடைய சொத்துகளையெல்லாம் விட்டு விட்டு துறவுப் பணியில் முழுமையாய் தன்னை அர்ப்பணித்தார்.

கிரிகோரியில் செயல்களும், பேச்சும், அவருடைய இலக்கியப் புலமையும் அவரை மக்களிடம் அதிக அறிமுகம் உடையவராக மாற்றியது. சிறப்பான மக்கள் பணியும் அவரை பிரபலப் படுத்தியது. ரோம் பிஷப்பிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், மிகவும் செல்வாக்குள்ளவராகவும் இருந்தார். கி.பி 590 ல் போல் கலேஜியஸ் மரணத்துக்குப் பின் கிரிகோரி போப்பாக தெரிந்தெடுக்கப் பட்டார்.

கடவுள் பணி செய்பவர்கள் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இவருடைய சிந்தனைகளில் ஒன்று. அதை அவர் முக்கியப்படுத்தி பிரகடனப் படுத்தினார். பணி வாழ்வுக்குத் தேவை பணிவு என்பதை மிகவும் ஆழமாக நம்பியவர். இயேசுவின் போதனைகளை வாழ்வில் வாழ்ந்து காட்டவேண்டும் என்னும் உயரிய சிந்தனைகளின் படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் இவர். இவர் இயேசுவை வாழ்ந்து காட்டியதில் ஈர்க்கப்பட்ட பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் இணைந்தார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இவர் ஊழியர்களை அனுப்பி இறைபணி செய்ய வைத்தார். இவருடைய ஆர்வத்தினால் ஏராளம் மக்கள் நற்செய்தி அறிந்தார்கள், பலர் அறிவித்தனர். தாமாகவே பல புதிய செயல்களைச் செய்து போப் பின் பெருமையையும், இருப்பையும் உலகிற்கு உரத்துச் சொன்னார் இவர். தன்னுடைய இலக்கிய அறிவினால் விவிலியத்தில் வரும் யோபு புத்தகத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். ஏராளமான கடிதங்கள் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை அடுத்துள்ள இடங்களுக்கெல்லாம் இவர் பரப்பினார். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்து ஏராளமானவ்ர்களுக்கு இறை செய்திகளை வழங்கினார்.

இவருடைய காலத்தில் உத்தரிக்கும் ஸ்தலம் – மையப்படுத்தப்பட்டது. இவ்வுலகில் நீதிமானாக விளங்குபவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள், இவ்வுலகில் பாவிகளாய் இருப்பவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். இவ்வுலகில் நல்லவர்களாக இருந்து, தவறுதலாய் பாவம் செய்தவர்கள் உத்தரிக்கும் ஸ்தலம்’ என்னும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கே அவர்களுக்கு மோட்சத்தில் செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். நம்முடைய செபங்கள் அவர்களை மீட்கும் என்பதில் கிரிகோரி நம்பிக்கை கொண்டிருந்தார். இறை பணியில் ஆர்வமாய் ஈடுபட்ட காரணத்தால் இவர் மகா கிரிகோரி என்றும் அழைக்கப்பட்டார்.

நாட்டில் ஆட்சி மாறி மாறி வந்தாலும் திருச்சபையில் போப்பின் ஆட்சிக் காலம் நிலையாக இருந்ததால் பலர் அந்த ஆட்சியை விரும்பினார்கள். போப் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்கள். எனவே போப்பின் ஆட்சி சிறப்பான ஆட்சி என்னும் பெயர் பரவியது. நிலைத் தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை அனைவரும் விரும்பினார்கள். ரோமில் இருக்கும் கிறிஸ்தவத் தலைமைக்கு உயர் மரியாதைகளும், பெருமைகளும் இருப்பதாக எங்கும் செய்திகள் பரவின. அரசர்களின் அதிகாரங்களை விட போப்பின் அதிகாரம் மிகவும் மதிக்கப்பட்டது.

உலக சபைகள் மீது ரோம் போப் முழு அதிகாரம் கொண்டவர் என்னும் கருத்து வந்தது இவர் காலத்தில் தான்.

அதன்பின் நாட்கள் செல்லச் செல்ல போப்பின் அதிகாரம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 9 – போப்பின் அதிகாரம்

Image result for Pope

கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார். திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை ஒழிப்பதற்கு மிகவும் கடினமாக பாடுபட்டார். குறுக்கு வழியில் இடம் பிடித்தல், தலைமைப் பதவிக்கு போராட்டங்கள் போன்றவற்றை இவர் வெறுத்தார். இவர் காலம் ஒரு களையெடுப்புக் காலம் என்று கூறலாம்.

குருத்துவ நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று முதலாம் மகா கிரிகோரி சொன்னதை இவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திச் சொன்னார். திருமணம் செய்து கொள்பவர்கள் பலவிதமான சிந்தனைகளில் தங்கள் இறைபணிக்கான முக்கியத்துவத்தை இழந்து விடுவார்கள் என்பதும், திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கையில் கடவுள் பணி இரண்டாம் பட்சமாகி விடும் என்னும் பயமும் துறவறமே தேவை என்னும் கொள்கையை இவர் எடுக்க பின் புலமாய் இருந்தன.

இவர் காலத்தில் அரசுக்கும், மதத்துக்கும் இடையே இருந்த பலமான இணைப்பு நொறுக்கப்பட்டது. அரசுகள் மதங்களை கட்டுப்படுத்துவதும், தலைவர் நியமனங்களில் தலையிடுவதும் இவருடைய காலத்தில் விலகியது. இதனால் மதம் தன்னுடைய சுதந்திரத் தளத்தை மீட்டுக் கொண்டது.

இந்த காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத் தக்க இன்னொரு போப் மூன்றாம் இன்னசெண்ட் என்பவராவர். போப் உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தவர் இவர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி நாட்டை ஆளும் அரசர்களை விட அதிகாரம் படைத்தவர் போப் என்றும், இவர் கிறிஸ்துவின் சீடரான பேதுருவின் வழித்தோன்றல் என்பதிலும் உறுதியான பிடிப்பு கொண்டிருந்தார். எனவே தாழ்ச்சியும், மனத் தூய்மையும், ஆழமான இறை விசுவாசமும், எதையும் கடவுளின் பெயரால் எதிர்த்து நின்று செயிக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

தன்னுடைய மனைவியை சுயநலமாய் விவாகரத்து செய்த பிரான்ஸ் மன்னன் பிலிப் பகஸ்டஸ்க்கு பகிரங்க கண்டனம் தெரிவித்து மனைவியை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இவர் கட்டாயப் படுத்தினார். மன்னன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தான். போப் விடவில்லை, நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார் இதனால் நாடு ஸ்தம்பித்தது. ஆலயங்கள் மூடப்பட்டன, நாட்டில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவானது. மன்னன் தன் மனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டான். போப் தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு போப் மிகவும் தீவிரமாய் உழைத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். கத்தோலிக்க மதத்தினருக்காக சில சட்ட திட்டங்களையும் இவர் வகுத்தார். அதற்காக ஒரு சபையையும் இவர் தன்னுடைய பணிநாட்களில் ஏற்படுத்தினார்

கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக அரசர்களையும் துணிவுடன் போப் எதிர்த்ததால் பல நாட்டு மன்னர்களுக்கு போப்பின் அதிகார மையத்தின் மீது வெறுப்பும், அதிருப்தியும் நிலவியது. அரசரும் அவனுக்கு ஆதரவாய் இருந்தவர்களும் ஒட்டு மொத்தமாக போப் பின் மீது அதிருப்தியடைந்தார்கள். ஆனால் போப் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருச்சபைச் சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் வீரத்துடன் செயல்பட்டது. எனவே அரசர்கள் போப்புக்கு எதிராக செயல்பட்டார்கள்.

எட்டாம் போனிபஸ் போப்பாக தலைமைப் பொறுப்பை ஏற்றபோது நிலமை இன்னும் மோசமானது. கி.பி 1294 முதல் 1303 வரையிலான காலகட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. பிரான்ஸ் நாட்டில் பிலிப் என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய அரச எல்லைக்கு உட்பட்ட இடங்களிலிருந்து போப்புக்கு பணம் எதுவும் செல்லாமல் தடை விதித்தான். இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்வர்ட் மன்னனும் போப்புக்கு எதிராக செயல்பட்டார். தன்னுடைய அரசிலிருந்தும் போக்குக்கு பணம் செல்வதைத் தடுத்தார். குருத்துவப் பணி செய்து வந்தவர்களுக்கு பல்வேறு இன்னல்களையும் செய்ய ஆரம்பித்தான்.

போப் தனக்கும் திருச்சபைக்கும் எதிராக பெரிய அலை எழுவதைக் கண்டு அஞ்சவில்லை. இறைமகன் இயேசு நியமித்த திருச்சபையின் வழித்தோன்றல் தான் என்றும், மீட்படைய வேண்டுமெனில் போப்பின் வார்த்தைகளை மதித்து நடக்கவேண்டும் என்றும் துணிச்சலாய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அரசுகளின் கோபத்தை அது கிளறிவிட்டது. பிரான்ஸ் மன்னன் பிலிப் படையெடுத்து வந்து போப்பை கைது செய்து சிறையில் அடைத்தான். அதுவே போப் எட்டாம் போனிபஸின் மரணத்துக்குக் காரணமாயிற்று.

அதன்பின் 1305 முதல் 1377 வரையுள்ள காலகட்டத்தில் போப்பாக நியமிக்கப் படுபவர் யார் என்பதை நிர்ணயிப்பதில் பிரான்ஸ் மன்னனும் பங்கும் இருந்தது. ஐந்தாம் கிளமெண்ட் என்னும் போப் திருச்சபையின் தலைமையிடத்தை ரோமிலிருந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள ‘அவிக்னோன்’ என்னுமிடத்திற்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் போப்பாக தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தியவர்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் மதம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர். எனவே போப்பிற்கு மதத்துக்கு வெளியே இருந்த அதிகார வளையம் நீர்த்துப் போனது.

போப் என்பவர் அரசுகளுடன் போரிடவோ, பிரச்சினைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்னும் நிலை உருவானது. எனவே ஆங்காங்கே பலர் தான் தான் போப் என்று சொல்லிக் கொண்டு தங்களின் கீழ் சில கிறிஸ்தவக் குழுக்களை இணைத்துக் கொண்டு பணியாற்றத் துவங்கினார்கள். பிரான்ஸ் நாட்டிற்கு தலைமையிடம் மாற்றப்பட்டதிலிருந்து குழப்பங்கள் ஏற்படத் துவங்கின. எனவே 1377ல் போப் 11ம் கிரிகோரி தலைமையிடத்தை மீண்டும் ரோமுக்கே திருப்பினார்.

இந்த குழப்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக கி.பி 1414 ல் கான்ஸ்டன்ஸ் என்னுமிடத்தில் திருச்சபை மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதில் நான்கு பேர் தாங்கள் தான் போப் என்று வாதிட்டார்கள். அவர்களுக்காய் வாதிட ஒரு ஆதரவாளர் குழுக்களையும் அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் நான்குபேருமே நிராகரிக்கப்பட்டு புதிய போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

1378 முதல் மீண்டும் போப்பாண்டவர்கள் ரோமிலிருந்தே பணியாற்றத் துவங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுடைய அதிகாரம் வலுவிழந்திருந்தது. அரசுகளின் எதிர்ப்பும், தலைவராக வேண்டும் என்று போட்டியிடும் மனப்பான்மையில் இருந்த குழுக்களின் செயல்பாடுகளும் போப்பின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தன.
போப்பின் அதிகாரத்துக்கான காரணங்கள்

உலக அளவில் கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் நுழைந்தாலும் வளர்ந்தாலும் பொதுவான தலைமை ரோமிலேயே இருந்தது. தனியே கொள்கை ரீதியினான தனித்தனி கிறிஸ்தவ இயக்கங்கள் சில இயங்கிய போதும் மொத்தத்தில் ரோம் போப்பின் கீழே கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டனர்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உலகின் முதல் போப் ‘பேதுரு’ இயேசுவின் அன்புக்குரிய சீடர். இயேசு அவரிடம் ‘உன் பெயர் பாறை. உன் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்’ என்று கூறியிருந்தார். எனவே பேதுருவின் தலைமையைப் போலவே அவருடைய இடத்திற்கு வரும் மற்ற போப் களின் தலைமையும் மதிக்கப்பட்டது.

அப்போஸ்தலர்கள் காலத்தில் பேதுருவின் பணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. ரோம் நகர் கிறிஸ்தவத்தின் ஆழமான துவக்கமாய் இருந்தது. பேதுருவைத் தவிர பவுலும் ரோமில் சிறப்பாக கிறிஸ்தவப் போதனைகள் செய்திருந்தார்.

போப்பின் ஆளுகை மிகவும் சரியானதாக இருந்தது. கிறிஸ்தவ மதத்திற்குள் கொள்கை கோட்பாடு ரீதியான தர்க்கங்கள் முளைத்தபோது போப் கிறிஸ்தவர்களை சரியான பாதையில் வழி நடத்தினார்.

துறவற சபைகள் நுழைந்தபோது அவர் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கைகளைச் சிதைக்காத துறவற சபைகளை அங்கீகரித்தார். அது துறவற சபைகளின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாயிற்று.

உலகெங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப குருக்களையும், பேராயர்களையும் அனுப்புவதில் போப் மிகவும் ஆர்வம் காட்டினர். உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் எனும் இயேசுவின் போதனைப்படி வாழ்ந்தார்கள் போப்பாக அமர்ந்தோர்.

ரோம் நகரம் மற்ற நகரங்களை விட உயர்ந்ததாய் கருதப்பட்டது. எனவே ரோம் நகரில் இருக்கும் போப் அதிக அதிகாரம் வாய்ந்தவர் எனும் கருத்து நிலவியது.

‘கடவுளின் நகரம்’ எனும் புனித அகுஸ்தீனாரின் நூல் ரோமை தலைமையை முக்கியத்துவப்படுத்தியிருந்தது. ரோம் போப் தலைமைக்குச் சிறந்தவர் என்றும் அவரே உண்மையான அதிகாரத்தில் இருப்பவர் என்றும் நூல் கூறியது.
இவையெல்லாம் போப்பின் அதிகாரத்தைக் குறித்த ஒரு பொதுவான தகவலை உலகக் கிறிஸ்தவ இயக்கங்களுக்குக் கூறியது. இவை போப்பின் அதிகார வரையறைக்குக் காரணமாயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 10 – கிறிஸ்தவத்தில் துறவறம்

Related image

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தில் ஆரம்பமான துறவறம் இடைக்காலத் திருச்சபை நாட்களில் வளர ஆரம்பித்தது. கற்பு, சுய கட்டுப்பாடு, தன்னை ஒறுத்தல், உலகிய இன்பங்களை விட்டு ஒதுங்கி இருத்தல், வாழ்வில் தூய்மை போன்றவை துறவறத்தில் மிக முக்கியமாகப் போதிக்கப்பட்டன.

‘ஒருவன் என்னைப் பின்பற்ற வேண்டுமெனில் தன்னையே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்’ என்பது இயேசுவின் அழைப்புகளில் ஒன்று. எனவே கிறிஸ்துவைப் பின் பற்றுபவர்கள் தன்னை வெறுக்க வேண்டும் எனும் சிந்தனை நான்காம் நூற்றாண்டில் வேகமாகப் பரவியது.
இவையே ஒறுத்தல் முயற்சிகளில் இறைவனைக் காணும் துறவறச் சபைகளின் துவக்கம்.

நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டண்டைன் மன்னன் கிறிஸ்தவத்தை அங்கீகரித்ததால் பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் வந்தார்கள். எனவே உலக ஆசைகள் கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தது. உண்மையான, ஆழமான பக்தியுடையவர்கள் மட்டுமே இருந்த கிறிஸ்தவத்துக்குள் பதவிக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் பலர் நுழைய ஆரம்பித்தனர். இது துறவற சபைகளின் வரவுக்கு ஒரு காரணமாகும்.

கிறிஸ்தவ மதத்தில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு அரசாங்க ரீதியிலான எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அதன் பின் கி.பி 313க்குப் பின் அத்தகைய துன்பங்கள் நேரவில்லை. எனவே மக்கள் தாங்களாகவே தங்களுக்கு துன்பத்தை வருத்திக் கொள்ள விரும்பினார்கள். இது துறவற வளர்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று.

இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் இருக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே மக்கள் தங்களை வெறுத்து, தனிமையில், குகைகளில், பாலை வெளிகளில் இறைவனைத் தேட ஆவல் கொண்டனர்.

தன்னை அறிதல் மிகவும் முக்கியம் என்று போதிக்கப் பட்டது. எனவே தன்னைக் குறித்த அறிவைத் தேட மக்கள் தனிமையையும், துறவறத்தையும் ஒரு காரணியாக்கிக் கொண்டனர்.

தீய சக்திகளை எதிர்க்கும் சக்தி தனக்கு வேண்டுமெனில் துறவறத்தின் மூலம் ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனும் சிந்தனை மக்களிடையே பரவியிருந்தது.

சபையின் கட்டுப்பாடுகளின் படி வாழ விருப்பம் இல்லாதவர்கள் தனியாக தங்கள் விருப்பத்திற்கு கடவுளைத் தொழ துறவறம் வழி செய்தது.

வாழ்க்கையில் பின் தங்கியவர்களும், தங்கள் உலக வாழ்க்கையில் நேரிட்ட துன்பங்களை விட்டு விலகியிருக்க விரும்பியவர்களும் துறவறத்தை நாடினார்கள்.

இவையெல்லாம் நான்காம் நூற்றாண்டில் துறவறம் வேகமாய்ப் பரவ காரணங்களாகிவிட்டன.

கிறிஸ்தவப் பணியாற்றிய குருக்களை திருச்சபைக்கு உள்ளே இருந்து பணியாற்றிய குருக்கள், திருச்சபைக்கு வெளியே இருந்து பணியாற்றிய குருக்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

திருச்சபைக்கு உள்ளே இருந்த குருக்கள் திருச்சபைத் தலைமையோடு இணைந்து பணியாற்றினார்கள். இவர்களுக்கு மேல் இருந்த பேராயர்கள், போப் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இவர்கள் இயங்கினார்கள்.

திருச்சபையில் திருப்பலிகள் நடத்துவதும், போதிப்பதும், திருமுழுக்கு கொடுப்பதும் இதர கிறிஸ்தவ குழுக்களின் பணிகளைத் தலைமை ஏற்று நடத்துவதும் திருச்சபைக் குருக்களின் பணியாய் இருந்தது.

துறவிகளாய் இருந்த குருக்கள் தனித்து இயங்கினார்கள்.

கெல்டிக் துறவறம்

‘நீ நிலை வாழ்வு பெற விரும்பினால் உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ எனும் இயேசுவின் வார்த்தையே கெல்டிக் துறவறத்தாரின் தாரக மந்திரம். அதற்காக அவர்கள் தங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று ஏழ்மை நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

சமுதாயப் பணி செய்வதை தங்கள் வாழ்வின் நோக்கமாகவும் கொண்டார்கள். இவர்களுடைய கெல்டிக் துறவறம் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்பானியா, இத்தாலி போன்ற நாடுகளில் பரவியது.

கல்விப்பணி செய்வதையும், சமுதாயப் பணி செய்வதையும் கெல்டிக் துறவறத்தினர் தங்கள் முதல் பணியாகக் கொண்டனர். அயர்லாந்தில் இவர்கள் செய்த கல்விப் பணிகள் மிகவும் பிரபலமானவை.

இவர்களுடைய வாழ்க்கை முறை மிகவும் கடினமாக இருந்ததால் பலர் இந்த கெல்டிக் துறவறத்தை விரும்பவில்லை.

பெனடிக்டைன் துறவறம்

கி.பி 480 ல் பிறந்த பெனடிக்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த துறவறம் பெனடிக்டைன் துறவறம் என்று அழைக்கப்படுகிறது. ரோமுக்கு நேப்பிள்ஸ்க்கும் நடுவே உள்ள மாண்டே காசினோ என்னுமிடத்தில் இந்த குழு ஆரம்பிக்கப்பட்டது. பெனடிக்டைன் துறவறத்தினர் கெல்டிக் துறவறத்தினரைப் போல மிகவும் கடினமாக தங்களை வாட்டிக் கொள்ளவில்லை. எனவே இங்கிலாந்தில் இந்த துறவறம் பெருமளவில் வளர்ந்தது.

குறிப்பாக ஐரோப்பாவின் வட பகுதிகளில் கிறிஸ்தவ மதம் பரவ இவர்கள் மிக முக்கிய காரணமாக இருந்தனர். இவர்கள் துறவற வாழ்க்கையைக் கடைபிடித்து அதன் மூலம் கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு எடுத்துச் சொல்ல விரும்பினர்.

இவர்களும் கெல்டிக் துறவறத்தினரைப் போல தங்களுடைய சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்கு மடத்தில் தேவையான உணவு உடை போன்றவை வழங்கப்பட்டன.

உடலை ஒடுக்கும் போது அது மனிதனுக்குப் பயன்பட வேண்டும் எனும் சிந்தனை பெனடிக்டைன் துறவறத்தின் கொள்கையாக இருந்தது. இவர்கள் தங்கள் மடங்களைச் சுற்றி தானியங்களைப் பயிரிட்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

புனித பெனடிக்ட் ஆரம்பித்த இந்த துறவறக்குழு தங்களை முழுநேர செபத்திலும், தியானத்திலும் ஈடுபடுத்தாமல் சமுதாய மேம்பாட்டுக்கான செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது. மக்களோடு மக்களாக அவர்களுக்கு உதவி செய்தல், அவர்களுடைய துன்பங்களில் பங்கெடுத்தல் என ‘பிறருக்கு இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ எனும் இயேசுவின் வார்த்தையை வாழ்ந்து காட்டினார்கள். இந்த துறவற சபையின் எழுச்சியே பிற்காலத்தில் பிற துறவற சபைகள் தோன்ற காரணமாயிற்று.

செபத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் ஒரு நாள் ஏழு முறை செபித்தனர். இப்படி நான்கு மணி நேரங்கள் செபத்துக்காகவே செலவிட்டனர். நல்ல ஆன்மீக நூல்களை வாசித்தனர்.

வெளியாட்களோடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தொடர்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆழமான நட்போ, உறவுகளோ ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

புதிதாக இந்த மடத்தில் சேர வருபவர்களுக்கு ஓராண்டு துறவறப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஓராண்டில் விலக விரும்புபவர்கள் விலகலாம். அதன்பின் யாரும் துறவறத்தை விட்டு விலக அனுமதிக்கப்படவில்லை.

ஐரோப்பா இங்கிலாந்து போன்ற இடங்களில் இந்த துறவறம் பெருமளவில் வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் ஏழாம் நூற்றாண்டில் இந்த துறவறம் நுழைந்தது.

கார்த்தூசியன் துறவறம்

கார்தூசியன் துறவறத்தினர் கடுமையான துறவற நெறிகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரே மடத்தில் இருந்தாலும் தனித்தனி அறைகளில் தங்கினர். அவர்களுக்குள்ளேயே அவர்கள் தனித்தனித் தீவுகளாக இயங்கினர்.

தனித்தனியாகவே சமைத்து, தனித்தனியாக உண்டனர். சுய வெறுப்பு இவர்களுடைய பிரதான கொள்கையாய் இருந்தது. அதற்காக உடலை வெகுவாக ஒடுக்கினர்.

இவர்கள் தங்களுடைய ஞான அறிவை வளர்த்துக் கொண்டு பல நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.

குளூனிக் இயக்கம்

குளூனிக் இயக்கம் 910ல் வில்லியம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அக்குயிட்டேன் எனுமிடத்தில் பிறந்த இவர் ப்ரெஞ்ச் பர்கண்டியிலுள்ள குளூனி என்னுமிடத்தில் ஒரு துறவற மடத்தை ஆரம்பித்தார். எனவே இது குளூனிக் மூவ்மெண்ட் என்று அழைக்கப்பட்டது.

பெனடிக் குழுவினரின் ஒழுங்கு முறையை ஆதாரமாகக் கொண்டு ஒரு சீர்திருத்த துறவறக் குழு போல குளூனிக் செயல்பட்டது. குளூனிக் இயக்கம் போப்பாண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்தது.

குருக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உயரிய கொள்கைகளைக் கொண்டிருந்தது இந்த குளூனிக் இயக்கம்

இந்த இயக்கத்தின் குருக்கள் தனித்து இயங்கும் தன்மை படைத்தவர்களாக இருந்தார்கள். உலகத்தோடு ஆழமான பற்றுறவு கொண்டவர்களை இந்தக் குழுவினர் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை.

துறவறத்தின் தூய்மை குளூனிக் இயக்கத்தின் ஆதாரமாய் இருந்தது. சமூகத்தின் உறவு அற்ற குருக்களாய் இருந்தாலும், சமுதாயத்துக்கு நன்மை தரும் பல செயல்களை அவர்கள் செய்தார்கள்.

குருக்கள் திருமணம் செய்யக் கூடாது எனும் கொள்கையையே இவர்களும் கொண்டிருந்தார்கள். சுமார் இருநூறு குருமடங்கள் பதினோராம் நூற்றாண்டில் குளூனிக் இயக்கத்தில் இருந்தன.

சிஸ்டெர்ஷியன் துறவறம்

கி.பி 1098ல் சிஸ்டர்சியன்ஸ் என்னும் துறவற குழு ஆரம்பமானது. புனித ராபர்ட் இதைத் துவங்கினார். பெனடிக்டைன்ஸ் குழுவின் கொள்கைகளை உள்வாங்கி மேலும் சில திட்டங்களையும், கோட்பாடுகளையும் வகுத்துக் கொண்டு இந்த துறவற சபை ஆரம்பமானது. இவர்கள் இலக்கிய சேவை செய்வதையும் தங்கள் துறவறப்பணியின் ஒரு கடமையாகக் கொண்டனர். சிஸ்டெர்ஷன் துறவறம் அடிப்படையில் குளூனிக் இயக்கத்தைக் கொண்டது என்று வாதிடுவோரும் உண்டு. பிரான்சிலுள்ள சிட்றா என்னுமிடத்தில் இந்த துறவறம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த துறவற இயக்கம் பெர்னாட் என்பவரால் விரைவாகப் பரவியது. பல இடங்களில் சிஸ்டெர்ஷன் துறவியர் மடங்கள் உருவாகின. இந்த துறவற மடங்களை அந்தந்த மடத்தின் தலைவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

மடத்தின் தலைவர்களுக்கு பொதுவான கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டது. இவர்கள் கடுமையான ஒழுங்குகளைக் கடைபிடித்தார்கள். ஆன்மீகப் பணி செய்பவர்கள், சமுதாயப் பணி செய்பவர்கள் என மடத்திலுள்ளவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

அன்னை மரியாளுக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் வழக்கத்தை இந்த துறவறத்தினர் கொண்டிருந்தனர். விளைநிலமில்லாத இடங்களில் கூடாரமடித்து அந்தப் பகுதிகளில் கடுமையாக உழைத்து அவற்றை பக்குவப்படுத்தி பயிர் செய்தனர்.

ஹாஸ்பித்தலர்ஸ், திருநிலைக்காப்பு வீரர் எனும் இரண்டு வகுப்புகள் பிற்காலத்தில் தோன்ற இந்த சிஸ்டர்ஷன் துறவறமே காரணமாயிற்று
இந்த துறவற சபையும் தழைத்து வளர்ந்தது.

கத்தாரி துறவறம்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் துறவறம் வெகுவாகப் பரவியது. துறவறம் பரவப் பரவ துறவறத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் எழுந்தன. சில துறவற சபையினர் அதிகமாக செல்வம் சேர்க்கிறார்கள் என்பது அதில் முக்கியமானது.
துறவறத்தினர் சொத்துகள் வைத்திருப்பதே கேலிக்குரியது என சில நகைப்புகள், துறவியரிடையே பெரிய ஆலயங்கள் கட்டும் மோகம் இருக்கிறது என வேறு சில எதிர்ப்புகள்
என துறவறத்தின் தூய்மை கேள்விக்குரியதாக்கப் பட்டது.

அப்போஸ்தலர்கள் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டுத் திருச்சபையைப் போல திருச்சபை தூய்மையாக வேண்டும் என விரும்பிய பலர் தனியே குழுக்களாக வாழ்ந்தனர்.

கத்தாரி குழுவினர் தாங்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள் என்று எண்ணினார்கள். மற்றவர்கள் கிறிஸ்தவனுக்குரிய தன்மை அற்றவர்கள் என்னும் கருத்து கொண்டிருந்தனர்.

துறவறத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் பற்றற்று வாழ்தல் முக்கியம் என்றும் கருதினார்கள். உலகம் இரண்டு விதமான சக்திக்கு அடிமையாய் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள்.

முதல் சக்தி அழிவுக்கான மோசமான சக்தி. இது உலகில் நிரம்பியிருக்கிறது. மனிதன் பாவத்தில் தான் வாழ்கிறான். அவன் மீட்படைய கத்தாரி துறவறத்தில் சேரவேண்டும் என்றனர். பழைய ஏற்பாட்டை இவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்.

அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உடல் இல்லை என்று வாதிட்டனர். இயேசு இறக்கவேயில்லை பின் ஏன் சிலுவையையும், நற்கருணை வழிபாடையும் நடத்துகிறீர்கள் என விவாதித்தனர்.

வால்டன்ஷியர்

வால்டோ என்பவரால் உருவாக்கப்பட்ட துறவறம் வால்டன்ஷியர் என்று அழைக்கப்பட்டது. வால்டோ 1176ல் ‘உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்னும் இயேசுவின் வார்த்தைகளால் உந்தப்பட்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்றார்.

ஏழ்மை நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டு வால்டன்ஷியர் துறவறத்தை ஆரம்பித்தார். 1177ல் அவருடைய இயக்கத்திற்கு பலர் கிடைத்தனர். இவர்களுடைய வாழ்க்கை முறை புதிய ஏற்பாட்டை பிரதிபலித்தது.

‘நீங்கள் இரண்டிரண்டு பேராகச் செல்லுங்கள்’ என்று இயேசு சீடர்களுக்குச் சொன்னதை நிறைவேற்றும் விதமாக இவர்கள் இரண்டு இரண்டு பேராகவே பணியாற்றினர்.

சில காரணங்களுக்காக இவர்களுடைய போதனை அனுமதி போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. எனவே இவர்கள் தனித்துப் பணியாற்றினர். வாரம் இரண்டு நாள் உண்ணா நோன்பு, முழு நேர இறையின் ஒன்றித்திருத்தல் என கடுமையான வழியில் ஆன்மீகத்தைத் தேடினர்

பிரியர்ஸ்

பிரியர்ஸ் துறவறத்தினர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் சமூகப்பணியில் இறைவனைச் சந்திக்க விரும்பியவர்கள். குறிப்பாக கல்விக்கு மிகவும் முன்னுரிமை வழங்கினர். இவர்களிடமிருந்து இரண்டு மாபெரும் துறவற இயக்கங்கள் தோன்றின அவை பிரான்சிஸ்கன், மற்றும் டொமினிக்கன்.

பிரான்சிஸ்கன்

1209ம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியார் ஆரம்பித்த பிரான்சிஸ்கன் என்னும் துறவற சபை துறவற சபைகளிலெல்லாம் மிகவும் பலமாக வேரூன்றி வளர்ந்தது. இவரும் ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் இறைவனை நெருங்க முடியும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தார். இவருடைய குழுவில் இணைந்தவர்கள் எல்லாம் தங்களுக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் உண்பதைக் கூட பிச்சையெடுத்தே உண்டு வந்தார்கள்.

நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் அளிப்பதும், பசியால் வாடுபவர்களுக்கு உதவுவதும், சிறையில் வாடுபவர்களை சந்திப்பதும் என இயேசுவின் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவாமல் வெறுமனே கடவுளே, கடவுளே என்று அழைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இயேசு ‘சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு அகன்று போங்கள்’ என்று கூறுகிறார். இந்த வசனமே இவர்களுடைய பணிவாழ்வுக்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் விளங்கியது.

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக் நோய் பீடித்தபோது இந்த துறவற சபையினர் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பணிபுரிந்தார்கள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு உலகில் இல்லை என்னும் இயேசுவின் போதனையை மனதில் ஏற்று சுமார் ஒன்றே கால் இலட்சம் துறவியர் இந்த பணியில் ஈடுபட்டபோது நோய் தாக்கி இறந்து போனார்கள். பிரான்சிஸ்கன் சபையின் துணிவையும், அர்ப்பணிப்பு உணர்வையும் விளக்க இந்த ஒரு நிகழ்ச்சியே போதும்.

டொமினிக்கன்ஸ்

கி.பி 1215ம் ஆண்டு துவங்கிய இன்னொரு துறவற இயக்கம் டொமினிக்கன்ஸ். இது புனித டோமினிக் என்பவரால் துவங்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆரம்பித்து ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் கிளைகளை விரித்து மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்த இயக்கம் இது. இவர்களும் மற்ற துறவற சபையினரைப் போல ரோமன் கத்தோலிக்க சபைக்கு ஆதரவாகவே தங்கள் போதனைகளை அமைத்தார்கள். இவர்கள் மக்களை தன்வசப்படுத்தும் அறிவைப் பெற்றிருந்ததால் இவர்களுடைய இயக்கத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் இணைந்தார்கள். இவர்களும் பிரான்சிஸ்கன் சபையினரைப் போலவே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள், சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த துறவற சபையினரின் பெருக்கம் ஒருவகையில் கிறிஸ்தவ மதத்தின் மனித நேயப் பணிகளை மக்களுக்கு நேரடியாக புரிய வைத்தன. போர்களினால் வருத்தமடைந்திருந்த மக்களுக்கு இத்தகைய துறவற இயக்கங்கள் பெரிதும் ஆறுதலாய் இருந்தன. ஏழைகள் நோயாளிகள் போன்றவர்கள் சமூகத்தின் கவனிப்பையும் ஆதரவையும், ஆறுதலையும் பெற இந்த துறவற சபைகள் மிகவும் துணையாய் இருந்தன.

இவர்கள் ‘நீங்கள் மனம் திருந்தியதை செயல்களில் காட்டுங்கள்’ என்னும் இயேசுவின் போதனைக்கு ஏற்ப தங்கள் விசுவாசத்தை செயல்களில் வெளிப்படுத்தினார்கள். இவர்கள் செல்லுமிடமெல்லாம் கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளைப் போதித்து மக்களை கிறிஸ்தவர்களாக்கினார்கள். பணியுடன் கூடிய போதனை மக்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. கல்வி நிலையங்கள் பலவற்றை இவர்கள் ஏற்படுத்தினார்கள். ஏராளம் விசுவாச நூல்கள் இந்த துறவற மடங்களினால் உருவாயின. திருமணம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது என்னும் கருத்து துறவறத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்டது இது குடும்ப வாழ்க்கைக்கு முரணாய் அமைந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு :11 – சில வித்தியாசமான துறவிகள்

Image result for christianity

துறவறத்தையும் அதன் தன்மைகளின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலில் தனித்து வாழ்ந்த துறவியர். இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பாறைவெளிகள், குகைகள் மற்றும் பாலை நிலங்களில் தனித்துத் தவம் செய்தனர். ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இரண்டாவது வகையினர் குழுக்களாக துறவறத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய துறவியர் குகைகளில் சேர்ந்து வாழ்ந்தனர். திரு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒறுத்தல் முயற்சிகளை அனைவரும் பின்பற்றினர்.

மூன்றாவது பிரிவினர் அமைப்பு ரீதியாக துறவறம் மேற்கொண்டவர்கள். இவர்கள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தங்கிக் கொண்டனர்.
ஒறுத்தல் முயற்சிக்காகச் செலவிடும் நேரத்தையும், உழைப்பையும் மக்கள் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தனர்.

 

ஆண்டனி

 

கி.பி இருநூற்று ஐம்பதில் எகிப்தில் பிறந்த ஆண்டனி என்பவர் துறவற வரலாற்றில் மிக முக்கியமானவர். ஒருவன் விண்ணக வாழ்வை அடைய வேண்டுமெனில் தனக்குள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் எனும் கட்டளை அவரை வசீகரித்தது.

தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். அனைத்து சொத்துகளையும் இழந்தபின் ஒரு பாழடைந்த கோட்டைக்குள் சென்று மூடிக் கொண்டார். அப்போது அவருக்குப் முப்பத்தைந்து.

அவருடைய ஐம்பத்து ஐந்தாவது வயது வரை அந்த கோட்டையை விட்டு வெளியே வரவில்லை. அடைத்த கதவுகளுக்குள் அவர் தியானத்திலும், ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

மக்கள் அவருக்கு அப்பமும், நீரும் அளித்து வந்தனர். இருபது ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்தபின் வெளியே வந்த அவருக்கு பெரும் மரியாதை கிடைத்தது. மக்கள் அவருடைய போதனைகளைக் கேட்க பெருமளவில் திரண்டனர்.

துறவற வாழ்க்கையின் தேவை. அதன் இன்பம். தூய்மையான வாழ்வின் தேவை இவற்றைப் பற்றியெல்லாம் அவர் மக்களுக்குப் போதித்தார். தன்னுடைய 105 வது வயதில் இறையடி சேர்ந்தார்.

 

சீமோன்

 

அந்த காலத்தில் துறவறத்தில் ஈடுபட்டவர்களின் இன்னொரு முக்கியமான நபர் சீமோன். அவர் ஒறுத்தல் முயற்சிக்காக நாற்பது நாட்கள் ஒரு இருட்டுக் குகைக்குள் குடியிருந்தார். அப்போது தன்னுடைய வலது காலை ஒரு சங்கிலியால் கட்டி பாறையோடு இணைத்திருந்தார்.

நகர முடியாமல், எதுவும் உண்ண முடியாமல் தன்னை ஒறுத்து குகையில் வாழ்ந்த அவர் அதன் பின் வெளியே வந்து வேறொரு ஒறுத்தலில் ஈடுபட்டார்.

நாற்பது முழ உயரமுள்ள ஒரு கோலின் உச்சியில் ஒரு சிறு கூண்டு செய்து அதில் முப்பத்து ஏழு ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்திருக்கிறார்.

 

பியோர்

 

பியோர் துறவி உலகத்தோடு தனக்கிருந்த உறவை வெட்டி விட்டதன் மூலம் துறவறத்தின் ஆழத்தை அனுபவித்தார். தன்னுடைய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் விட்டு விட்டு தனியே வாழ்ந்தார்.

ஐம்பது ஆண்டுகள் தன்னுடைய குடும்பத்தினரோடும், உறவினரோடும் பேசாமல், அவர்களைப் பார்க்காமல் வாழ்ந்த பியோரை ஒருமுறை மக்கள் கட்டாயப்படுத்தினார்கள். அதாவது அவருடைய சகோதரியைச் சந்திக்க வேண்டுமென்று.

பியோர் சென்றார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கப் போகும் தன்னுடைய சகோதரனைப் பார்க்க ஆவலில் காத்திருந்தாள் சகோதரி. ஆனால் பியோர் விட்டை அடைந்ததும் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டார்.

தன்னுடைய சகோதரியை அவர் பார்க்கவேயில்லை. இதை ஒரு பெரும் ஒறுத்தல் முயற்சியாய் அவர் நிறைவேற்றினார்.

 

சிரோஸ்

 

சிரோஸ் என்றொரு துறவி இருந்தார். அவருடைய ஒறுத்தல் முயற்சி இன்னும் கடுமையானது. அவர் எப்போதுமே விழித்திருந்து கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பார்.

அவருக்கு தூக்கத்தை ஒடுக்க வேண்டும் எனும் ஆசை. எனவே தூக்கம் வராமலிருக்கும் வழிகளைக் கடைபிடிக்க ஆரம்பித்தார். என்ன செய்தாகிலும் தூக்கத்தைத் துரத்தினார்.

தூக்கம் அதிகமாய் வருவதாய் தெரிந்தால் பெரிய செங்குத்தான பாறையின் உச்சியில் போய் நின்று கொள்வார். தூங்கினால் விழுந்து இறந்துவிடுமளவுக்கு ஆபத்து இருப்பதால் தூக்கம் வராமல் தப்பித்துக் கொள்வார்.
இவர்களைத் தவிரவும் ஆயிரக்கணக்கான துறவிகள் அந்த நாட்களில் கிறிஸ்தவத்தில் இருந்தார்கள். அவர்களுடைய பல கதைகள் சுவாரஸ்யமானவை.
அப்பல்லோ என்பவர் குடும்பத்தை விட்டு தனித்து வாழ்ந்தார். தன்னுடைய தந்தையின் அடக்கச் சடங்கிற்கு செல்லவும் மறுத்தார். தானும் உலக வாழ்க்கைக்கு இறந்து போயிருப்பதாய் சொன்னார்.

சிலர் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் மட்டும் குடித்தும், சிலர் தோல் ஆடைகளை மட்டுமே உடுத்தியும், சிலர் வாரம் ஒருமுறை தான் உண்டும் தங்களுடைய துறவற வாழ்க்கையை நடத்தினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு : 12 – கிழக்கு சபையும், மேற்கு சபையும் பிரிகிறது

Image result for Third Leo

மன்னன் டியோகிளேசியன் கிபி 286ல் ரோம் அரசை இரண்டாகப் பிரித்து மேற்கில் ரோம் நகரின் தலைமையிலும், கிழக்கே கான்ஸ்டாண்டிநோபிளிலுமாக இரண்டு பிரிவை ஏற்படுத்தினார்.

உலகின் பல நாடுகளிலும் பத்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் புகுந்து தங்கள் இருப்பை நிலை நாட்டினர். எனினும் எல்லா கிறிஸ்தவர்களும் ரோம் நகர போப்பின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தனர்.

கான்ஸ்டாண்டிநோபிள் தனிப் பிரிவாக இருந்தாலும் அங்குள்ள தலைமைக்கு உலகக் கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு இல்லை. இது 1054ல் இரண்டு சபைகளுக்குமிடையே பெரும் பிளவு ஏற்பட காரணமாயிற்று. இந்த இரண்டு சபைகளும் பிரிய பல்வேறு காரணங்கள் இருந்தன.

கிழக்கிலுள்ள அரசு கிரேக்க அரசென்றே அந்நாட்களில் அழைக்கப்பட்டது. காரணம் கிழக்கில் ஆட்சி மொழி கிரேக்கமாய் இருந்தது. மேற்கு ரோம சபையோ லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது. லத்தீன் மொழியினருக்கு கிரேக்க மொழிமீது இயல்பாகவே மொழி விரோதம் இருந்து வந்தது.

இந்த மொழிப் பாகுபாடு இவர்கள் ஒட்டுமொத்தமாக கூடிய பொதுக்குழுக்களிலும் அவ்வப்போது பிரதிபலித்தே வந்திருக்கிறது. குறிப்பாக இரண்டு இடங்களிலும் சில கலாச்சார வேறுபாடுகள் மத அடையாளங்களிலும், திருமுழுக்கு போன்றவற்றிலும் வெளிப்பட்டன. அவை இரு தரப்பினருக்குமிடையே உரசல் வர வழி வகுத்தது.

கிழக்கு சபைக்கு கான்ஸ்டண்டைன் மன்னன் காலம் முதலே அரசியல் தலையீடு அதிகமாய் இருந்தது. மேற்கைப் பொறுத்தவரை போப்பின் அதிகாரமே முக்கியமானதாய் இருந்தது.

அரசியல் ரீதியாகவும், எல்லை ரீதியாகவும் இந்த இரண்டு சபைகளுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. குறிப்பாக பல்கேரியா, தெற்கு இத்தாலி போன்ற இடங்களுக்கு இரண்டு தலைமைகளும் உரிமை கொண்டாடின.

கொள்கை ரீதியாகவும் இரு சபைகளுக்குள்ளும் உரசல்கள் நிகழ்ந்தன. உதாரணமாக கிபி 589ல் டாலிடோ ஆலோசனைக் குழு ‘தூய ஆவியானவர் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் வருபவர்’ என்று ரோமை சபையின் விசுவாச பிரமாணத்தில் சேர்த்தது. இதற்கு அவர்கள் கிழக்கு சபையின் அனுமதியைக் கேட்கவில்லை.

ஏனெனில் கிழக்கு சபை இந்தக் கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை. தந்தியிடமிருந்து மகனாகிய இயேசுவின் வழியாக தூய ஆவியானவர் வருகிறார் என்றே கிழக்குத் திருச்சபை ஒத்துக் கொண்டிருந்தது.

தந்தையும் , மகனும் ஒன்றே எனும் அடிப்படையில் தங்கள் கருத்து சரி என ரோம் சபை வாதிட்டது. தந்தையும் மகனும் ஒன்றே எனினும் மகனுக்குப் பிறகே தூய ஆவியானவர் வருகிறார். மகன் தான் தூய ஆவியானவரை அனுப்புவேன் என்று சொல்லியிருக்கிறார் எனவே இந்தக் கோட்பாடே உண்மையானது என கிழக்கு சபையினர் வாதிட்டனர்.

கிழக்குச் சபை ஆதிக்கம் செலுத்திய டிரில்லியன் பேரவை கிபி 692ல் கூடியது. அதில் அவர்கள் பல சட்டங்களை இயற்றினார்கள். அவற்றில் சில ரோமை சபையினரின் எதிர்ப்புக்கு ஆளாகின.

குருக்கள் திருமணம் செய்வதை ஆதரிக்கும் சட்டம் அதில் ஒன்று. குருக்கள் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் தங்களை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இயேசுவைப் போல அவர் பணி செய்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது எனும் கருத்து முதல் சில நூற்றாண்டுகளில் வலிமையாய் இருந்தது.

அந்த ஆழமான சிந்தனையை விலக்கும் இந்த புதிய சட்டத்தை மேற்கு சபையினர் எதிர்த்தனர்.

இயேசு கிறிஸ்துவை தேவ ஆட்டுக்குட்டியாக சித்தரிப்பது தவறென கூறப்பட்டது. இதுவும் மேற்குச் சபையின் எதிர்ப்புக்கு ஆளானது. முதல் சில நூற்றாண்டுகளாக இருந்த நம்பிக்கைகளுக்கும் வழக்கங்களுக்கு எதிராக நிற்க அவர்கள் மறுத்தனர்.

கிழக்குப் பேராயரை போப்பின் அதே அதிகாரம் உடையவராக சித்தரிக்கப்பட்ட சட்டத்தையும் ரோம் சபை எதிர்த்தது. தவக்காலங்களில் சனிக்கிழமை உண்ணா நோன்பு இருப்பது உட்பட மேலும் சில சட்டங்கள் ரோம் சபையினரின் விருப்பத்துக்கு இணங்காமல் இருந்தது.

அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் இயேசு மானிட உருவில் வந்த கடவுள் எனும் கோட்பாட்டின் படி உருவப்படங்களை வழிபாடுகளில் பயன்படுத்தினர். சிலைகள் செய்வதும், படங்கள் பயன்படுத்துவதும் அந்நாட்களில் சகஜமாய் இருந்தது. இந்த வழக்கம் கிறிஸ்தவர்களை உருவ வழிபாட்டுக் காரர்கள் போல சித்தரித்தது.

கிபி 717ல் பேரரசனாய் இருந்த மூன்றாம் லியோ இந்த எண்ணத்தைத் தகர்ப்பதற்காக இனிமேல் வழிபாடுகளில் உருவங்களோ, உருவப் படங்களோ வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மேற்கு ரோமின் எதிர்ப்பையும் மீறி கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த பெரும் மாறுதல் கிழக்கு மேற்கு பிரிவிற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது.

இறுதியாக மிகாவேல் செருலேரியு எனும் கிழக்குப் பேராயர் தானும் போப்பைப் போன்ற அதிகாரத்துடன் விளங்க வேண்டும் என விரும்பினார். எனவே அவர் ரோம் போப்புக்கு எதிராக மடல் எழுதினார்.

மேலும் பல்கேரியாவிலுள்ள துறவற மடங்களில் ரோம் நடத்தி வந்த லத்தீன் வழிபாடுகளை வலுக்கட்டாயமாய் நிறுத்தினார். அரசிடமிருந்தும், ரோமிடமிருந்தும் பிரிந்தால் மட்டுமே தனக்கும் போப் அந்தஸ்து கிடைக்கும் என கருதினார்.

இது ரோம் போப் ஒன்பதாம் லியோவை கடும் கோபமூட்டின. கிபி 1054 ஜூலை பதினாறில் கிழக்குச் சபையையும் மேற்குச் சபையும் பிரிந்தன.

இந்தப் பிளவினால் கிழக்கு சபை பலமிழந்தது. ஒரு நல்ல தலைமை இல்லாததனால் சபைகள் தனித் தனியே இயங்க ஆரம்பித்தன. சிலுவைப்போர்களுக்கும் இந்தப் பிளவே வழி வகுத்தது.

துருக்கியரின் போரை சந்திக்கும் வலு இல்லாத நிலைக்கு கிழக்கு சபை தள்ளப்பட்டது. சின்ன ஆசியாவிலுள்ள பல இடங்கள் 1071ல் துருக்கியரின் கைக்குப் போனது. சிறப்பு மிக்க நிசேயா 1081ல் வீழ்ந்தது. மேலும் சில நூற்றாண்டுகள் தாக்குப் பிடித்த கான்ஸ்டாண்டிநோபிள் 1453ல் வீழ்ச்சியடைந்தது.

Advertisements


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு :13. சிலுவைப் போர்கள்

Image result for Crusades

பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் சிலுவைப் போர்கள். இப்போர்கள் திருச்சபையின் தூண்டுதலாலும், அவர்களுடைய ஈடுபாட்டினாலும் நிகழ்ந்தவையே. எருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்வது வழக்கமாக இருந்தது.

கிபி 1000 வது ஆண்டில் கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார். அவர் மக்களை தீர்ப்பிடுவார் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே எருசலேமிற்குச் செல்லும் மக்களின் கூட்டம் அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருந்தது. அப்படி செல்லும் பயணிகள் பாலஸ்தீனத்தில் பல இன்னல்களைச் சந்தித்தார்கள். அவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமெனில் பாலஸ்தீனம் முகமதியர்களின் கையை விட்டு கிறிஸ்தவர்களிடம் வரவேண்டும் என்று திருச்சபை நினைத்தது. அந்த எண்ணமே சிலுவைப்போருக்கு வித்தானது.

1095ம் ஆண்டு முதல் 1272ம் ஆண்டு வரை பல சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. இவை வரலாற்றில் நடந்த மிகப்பெரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஏழு முக்கியமான சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த ஏழு சிலுவைப்போர்களுமே தோல்வியில் முடிந்தன. ஏராளமான உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டன. போரிடச் என்றவர்களிடம் போதுமான அளவு பயிற்சி இல்லாததும், ஒருமித்த குறிக்கோள் இல்லாததும், பிரிவினை மனப்பான்மைகளும், தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமும் இந்த போர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தன.

போப் இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தார். 1095ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிலுவை அடையாளத்தை ஏந்திக் கொண்டு போருக்குச் சென்றார்கள். ஆனல் ஒழுங்குபடுத்தப் படுத்தப் படாத, போர் பயிற்சி அதிகம் இல்லாத படை என்பதால் போரில் தோல்வியடைந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் காட்ப்ரே என்பவர் முறையான போர் பயிற்சியுடனும், வகைப்படுத்தப் பட்ட படையுடனும் சென்று பாலஸ்தீனாவை கைப்பற்றினார். ஆனால் இதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை.

பாலஸ்தீனாவின் எல்லைப் பகுதிகள் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகின. பிரான்ஸ் நாட்டின் ஏழாம் லூயிஸ் , மன்னன் மூன்றாம் கான்ராடுவுடன் இணைந்து போருக்குச் சென்றார். இது இரண்டாம் சிலுவைப்போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் இவர்கள் சில பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.

கி,பி 1187ல் மீண்டும் எருசலேம் கைநழுவியது. சலாடின் என்பவரால் எருசலேம் கையகப்படுத்தப்பட்டது. இதை மீண்டும் பிடிப்பதற்காக மூன்றாம் சிலுவைப்போர் நிகழ்ந்தது. ஜெர்மனியில் பிரடெரிக் பார்பரோசா, பிரான்சைச் சேர்ந்த பிலிப் அகஸ்டஸ் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்ட் ஆகியோர் இந்த போரை நடத்தினார்கள். வழியிலேயே பிரடெரிக் இறந்துவிட, அகஸ்டஸ் போரைக் கைவிட்டு திரும்பினார். எனவே ரிச்சர்ட் வேறு வழியின்றி எருசலேமை கையகப்படுத்தி வைத்திருந்த மன்னன் சலாடினுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டான். இதன்படி கிறிஸ்தவர்கள் எருசலேமிற்கு தடையின்றி செல்ல வழி பிறந்தது.

நான்காம் சிலுவைப்போர் திருச்சபை வரலாற்றின் திருப்பமாக இருந்தது. 1201 ல் நிகழ்ந்த் இந்த சிலுவைப்போரில் எருசலேமைப் பிடிப்பதற்குப் பதிலாக கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றினார்கள் போராளிகள். கான்ஸ்டாண்டிநோபிள் சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்த சிலுவைப்போர் துருக்கியர்கள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றக் காரணமாய் இருந்தது. இது கிறிஸ்தவத் திருச்சபைக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாய் முடிந்தது.

1220ல் நிகழ்ந்த் ஐந்தாம் சிலுவைப்போர் ஒரு சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி எருசலேம், பெத்லகேம் போன்ற கிறிஸ்தவர்களின் புனித இடங்கள் கிறிஸ்தவர்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால் இந்த உடன்படிக்கை நீண்ட நாட்கள் நிலைநிற்கவில்லை. 1274ம் ஆண்டு மீண்டும் எருசலேம் முகமதியர்களிடம் சேர்ந்தது.

1248ல் நிகழ்ந்த ஆறாம் சிலுவைப்போரும், 1270 ல் நிகழ்ந்த ஏழாம் சிலுவைப்போரும் புனித லூயிஸ் என்பவரின் முயற்சியால் நிகழ்ந்தது. ஆனால் இந்த இரண்டு சிலுவைப்போர்களுமே கிறிஸ்தவர்களுக்குச் சாதகமான முறையில் நிறைவடையவில்லை. ஏழு சிலுவைப்போர்கள் முக்கியமாக நிகழ்ந்தாலும் போரின் இலட்சியம் நிறைவேற்றப்படவேயில்லை. முகமதியர்கள் தங்கள் ஆளுகைக்குல் எருசலேமை 1917 வரை வைத்திருந்தார்கள்.

சிலுவைப்போர்கள் தோல்வியில் முடிந்தாலும் சில நன்மைகளும் நிகழத்தான் செய்தன. குறிப்பாக முகமதியர்கள் ஐரோப்ப நாடுகளுக்குள் அத்துமீறல் செய்வது இதன் பின்னால் தடை செய்யப்பட்டது. எருசலேமிற்குச் செல்ல விரும்பிய பயணிகள் சுதந்திரமாய் சென்று வரக்கூடிய சூழலை சிலுவைப்போர்கள் ஏற்படுத்தின. திருச்சபையின் வளர்ச்சிக்கும் இவை ஒருவகையில் உதவியாய் இருந்தன.

சிலுவைப் போர்களுக்கான காரணங்கள்

கிழக்கு சபை அமைந்த பகுதியின் பேரரசன் முதலாம் அலெக்சியஸ் துருக்கியர்களுக்கு எதிராக போர் தொடுக்க விரும்பினான். அதற்காக அவன் ரோமில் இருந்த போப்பின் ஆதரவை நாடினான்.

அப்போதைய போப் அர்பான் இதை ஆதரித்து துருக்கியர்களுக்கு எதிரான போரை தூண்டி விட்டார். மேற்கு ஐரோப்பாவுக்கு அர்பான் அறைகூவல் விடுத்தார். போரில் ஈடுபடுபவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்றும். அவர்கள் வேறு பல சலுகைகளையும் பெறுவார்கள் எனவும் 1095 நவம்பர் 26ல் போப் அறிவித்தார்.

மதம் எளிதில் மக்களை உணர்ச்சி வலையால் பிடிக்கக் கூடிய வல்லமை படைத்தது. அது அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைத்தது. கிழக்கு மேற்கு என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஒன்றானார்கள். விரைவிலேயே படை திரண்டது. அனைவரும் இடது தோளிலே சிலுவை அடையாளத்தை அணிந்து கொண்டிருந்தனர்.

இஸ்லாமியருக்கு எதிராகப் போராடவேண்டும் எனும் வெறி கிறிஸ்தவர்களிடம் நிரம்பியது. அதற்காக மக்கள் பணம் பொருள் அனைத்தையும் அர்ப்பணித்தனர். ஒருமித்த சிந்தனை அங்கே நிலவியது.

ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் பஞ்சம் நிலவியது. ஐம்பது ஆண்டுகளாக பஞ்சத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் போர் மூலமாக பஞ்சம் தீரும் என நம்பினார்கள். சிலுவைப்போர் வரவேற்கப்பட்டது.

கொள்ளையடிக்க விரும்பியவர்களும், வன்முறைகளில் நாட்டமுடையவர்களும், பலவான்களும் போர்களை இயல்பாகவே விரும்பினார்கள். எனவே அவர்களுக்கும் சிலுவைப்போர் தேவையாய் இருந்தது.

சிறையில் இருந்தவர்கள் விரும்பினால் அவர்களும் படைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கைதிகளுக்கு வெளி உலகிற்கு வர இது ஒரு வாய்ப்பாக அமைந்ததால் அவர்கள் இதை தீவிரமாய் ஆதரித்தனர்.

போர் வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. எனவே வணிகத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் சிலுபைப்போரை ஆதரித்தனர்.

சிலுவைப்போர் முழு மூச்சாக வரவேற்கப்பட மக்கள் மத்தியிலே மத குருக்கள் ஏற்படுத்திய சிந்தனையும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. சிலுவைப்போர்களில் ஈடுபடுவது புனிதச் செயல் என்று மக்களுக்குச் சொல்லப்பட்டது. புனிதப் போரில் இறப்பவர்களுக்கு சுவர்க்கம் நிச்சயம் என்று போதிக்கப்பட்டது.

புனிதப் பயணங்கள் அன்றைய காலத்தில் மிக முக்கிய நிகழ்வாக இருந்தன. அவை மதத்தின் அடையாளங்களாக மட்டும் இல்லாமல் மீட்பின் வாசலாகவும் பார்க்கப் பட்டது. எனவே அந்தப் பயணத்திற்கு தடை ஏற்பட்டதை மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள்.

சிலுவைப் போர்களால் ஏற்பட்ட விளைவுகள்

சிலுவைப்போர்கள் பல விளைவுகளுக்குக் காரணமாயிருந்தன.
கிறிஸ்தவர்களிடையே இருந்த கிழக்கு சபை, மேற்கு சபை என்னும் எண்ணம் மாறி, கிறிஸ்தவர்கள் என்னும் எண்ணம் உருவாக இந்த சிலுவைப்போர்கள் பெருமளவில் உதவின.

சிலுவைப்போர்களில் உயிரிழந்த செல்வந்தர்களின் சொத்துக்களெல்லாம் அரசின் வசமானது. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இது அரச செல்வம் உயர வழி வகுத்தது.

வணிகமும், தொழிலும் மறுமலர்ச்சியடைய இந்த சிலுவைப்போர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவின எனலாம்

சிலுவைப்போர்களில் அரசர்கள் போப்பின் ஆலோசனைப்படி நடந்ததால் கிறிஸ்தவ தலைமையின் வலிமை உயர்ந்தது.

நினைவுச் சின்னங்கள், புனிதப்பயணங்கள் போன்றவற்றுக்கான மரியாதை அதிகரித்தது. மக்களின் புனிதப்பயணங்கள் செல்லும் விருப்பம் அதிகரித்தது.

மத்தியதரைக் கடலில் கிழக்குப் பகுதிகளில் ரோமின் எல்லை விரிவடைய சிலுவைப் போர்கள் காரணமாய் இருந்தன.

கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியருக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட இந்த சிலுவைப் போர்களும் ஒரு முக்கிய காரணமாயிற்று.

மேற்கு, கிழக்கு நாடுகளிடையே உறவுப் பாலம் உருவானது. எனவே கலாச்சாரங்கள், புதிய நாகரீகங்கள் என பலவற்றை அவர்கள் கற்றுக் கொள்ள சிலுவைப்போர்கள் வாய்ப்பளித்தன. மேற்கத்திய நாடுகளில் துறவறம் வளரவும் சிலுவைப் போர்கள் காரணமாயிற்று.

சிலுவைப்போர்கள் நடந்த காலத்தில் எதிரிகளின் எல்லைக்குட்பட்ட கிணறுகளில் நச்சு கலக்கப்பட்டது. இரு தரப்பினருமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் அவர்களுக்குள் நல்ல தண்ணீருக்கான சண்டை நடந்தது. பிளவை நோய் தாக்கி பலர் மரணமடைந்தனர்.

போர்களின் மூலமாக மதத்தைப் பரப்புதல் கிறிஸ்தவ அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது. எனவே எத்தனை நன்மைகள் விளைந்தாலும் சிலுவைப் போர்கள் கிறிஸ்தவ வரலாற்றின் கறைகளே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு 14. கிறிஸ்தவத்தில் நடந்த மாபெரும் கிளர்ச்சி

Image result for roman catholic

கிறிஸ்தவ மதத்தில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், போப்பிற்கு எதிராகவும் நடந்த கிளர்ச்சியே திருச்சபையின் மிகப்பெரிய கிளர்ச்சி எனலாம். போப்பின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட விருப்பமில்லாதவர்களும், தங்களை தாங்களே ஆளவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்களும், தங்கள் பணம் திருச்சபையின் தலைமை இடத்துக்குச் செல்வதை விரும்பாதவர்களாலும் இந்த கிளர்ச்சி துவங்கப்பட்டது. ஏற்கனவே கிறிஸ்தவத்தில் பல குழுக்களும், துறவறங்களும், தனியுறவுச் சபைகளும் ஆங்காங்கே தோன்றி வளர்ந்தாலும் அவை பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோ, அல்லது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமலோ தான் நடந்து கொண்டிருந்தன. திருச்சபைக்கு விரோதமாய் நடந்தவர்கள் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்கள் ஆரம்பித்த தனிச் சபைகள் ஏதும் மாபெரும் பிளவையோ தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.

கத்தோலிக்க மதத்துக்கு எதிராகவும், போப்புக்கு எதிராகவும் எழுந்த முதல் சவால் அரசுகள் போப்பின் அதிகார வட்டத்தை விரும்பாமல் தனித்து இயங்கியது எனலாம். அதுவே ஆங்காங்கே கத்தோலிக்க மதத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்ற ஏதுவாயின. போதிக்கும் திறமை இருந்தவர்கள் தனித் தனிக் குழுக்களாக பிரிந்து தங்கள் பெயரை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்று விரும்பியதும் கிளர்ச்சிக்கான காரணங்களின் ஒன்றாகும். இன்னொரு முக்கியமான காரணம் அந்நாட்களில் ரோமுக்கு சென்று கொண்டிருந்த பணம். இந்த பணம் தங்களுக்குள்ளேயே இருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைத்தார்கள். அதுவரை ரோமன் கத்தோலிக்க சபைக்கு எந்த பெரிய இழப்பும் ஏற்படாததால் அவர்கள் மறை பரப்புதலில் முழு மூச்சாக ஈடுபடவில்லை. அவர்களுடைய திருச்சபைச் சட்டங்களையே பெருமளவில் மதித்து நடந்தார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்த ‘பாவசங்கீர்த்தனம்’ , பாவமன்னிப்பு அல்லது பாவ மன்னிப்புச் சீட்டின் மீதும் பலர் அதிருப்தி கொண்டிருந்தார்கள். திருச்சபைத் தலைவரான குருவிடம் தாங்கள் செய்யும் பாவங்களை மக்கள் சொல்லவேண்டும், குருவானவர் அந்த பாவத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் செய்யச் சொல்வார். அந்த பிராயசித்தத்தின் மூலம் பாவம் மன்னிக்கப் படும். என்பது கத்தோலிக்கர்களின் வழக்கமாக இருந்தது. பாவங்களை அறிக்கை இடுபவர்களுக்கு வழங்கப்படும் பிராயச்சித்தம் என்ன என்பதைக் குறிப்பிடும் சீட்டே பாவ மன்னிப்புச் சீட்டு என்றழைக்கப்பட்டது. பிராயச் சித்தமாக ஆலயத்தில் முழங்கால் படியிட்டு செபிப்பது, யாருக்கு எதிராக பாவம் செய்திருக்கிறோமோ அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்பது, ஏதாவது புண்ணிய ஸ்தலத்துக்குச் செல்வது போன்றவை வழக்கமான பாவ மன்னிப்புச் சீட்டின் உள்ளடக்கமாகும். ஆனால் மன்னர்கள் செல்வந்தர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் பாவ மன்னிப்புச் சீட்டிலோ ஆலயத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கித் தருவது, ஆலய தேவைக்காக ஒரு தொகை வழங்குவது என்பது பாவமன்னிப்புச் சீட்டாக இருந்தது.
செல்வந்தர்களும், மன்னர்களும் திருச்சபைக்கு எதிராக குரல் கொடுக்க இது ஒரு காரணமாக இருந்தது.

பாவ மன்னிப்புச் சீட்டு விவிலியத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இவை கத்தோலிக்கத் திருச்சபையின் தீர்மானங்களாய் இருந்தது. எனவே இவற்றை கிளர்ச்சியாளர்கள் தங்கள் எதிர்ப்பு வரிசையில் முன்னிலைப்படுத்தினார்கள். இந்த கிளர்ச்சிகளும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லையெனிலும் பின்னாட்களில் புராட்டஸ்டண்ட் சபை உருவாக இவையே அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு :15 – புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கம்

Image result for Protestant Lutherகி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். நல்ல இறை சிந்தனையும், பக்தியும் உடைய லூத்தர் முதலில் நம்பியது துறவறத்தையே. சில காலம் துறவறத்தில் இணைந்து துறவியாகவே வாழ்க்கை நடத்தினார் இவர். தன்னுடைய உயிர்நண்பனின் திடீர் மரணம் தந்த பாதிப்பு இவரை மரணத்தின் மீது பயம் கொள்ள வைத்தது. மரணத்தின் பயத்திலிருந்து எப்படித் தப்புவது ? மரணத்துக்குப் பின் என்ன நிகழும் என்பவை போன்ற சிந்தனைகள் அவரை வாட்டின. எனவே அகஸ்டீனியரின் மடத்தில் சென்று தன்னுடைய இருபத்து இரண்டாவது வயதிலேயே துறவியானார். தந்தையின் கனவுகள் தகர்ந்தன. லூத்தரோ அடுத்த வாழ்க்கையைக் குறித்தே அதிகமாய் கவலைப்பட்டார். மோட்சத்தை அடைய என்ன வழி என்று எப்போதும் யோசிக்கத் துவங்கினார்.

துறவற வாழ்க்கை அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைபடுவதாக அவருடைய உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. துறவற வாழ்க்கை அவருக்கு மனதோடு உரையாடும் பக்குவத்தை வழங்கியிருந்தது. தன்னுடைய கேள்விகளையும், அதற்குரிய பதில்கள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் தன்னுடைய மனதில் இருத்தி தியானித்துக் கொண்டே இருந்தார். கி.பி 1507 ல் அவர் குருப்பட்டம் பெற்றார். ஆனாலும் மனதில் கவலைகள் தீரவில்லை. வேதாகமத்தை வாசிப்பதில் தீவிர ஆர்வம் காட்டிய அவர் விவிலியத்தின் மூல மொழிகளைக் கற்கும் ஆர்வம் காட்டினார். எபிரேய கிரேக்க மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இறையியல் பயின்று போதகர்களுக்கான B.D பட்டமும் பெற்றார். விட்டன்பெர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள ஆலயத்தில் போதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு லூத்தரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வாய் அமைந்தது.

ஆலயத்தில் போதிப்பதற்காக அவர் வேதாகமத்தை மிகவும் ஆழமாக வாசிக்கத் துவங்கினார். அப்போது பரவலாக மக்களிடம் வேதாகமம் இல்லாததால் இவருடைய பேச்சையும், நற்செய்தியையும் கேட்க மக்கள் குவிந்தார்கள். இயல்பிலேயே நல்ல பேச்சுத் திறமை கொண்டிருந்த லூத்தர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மக்களை வசீகரித்தார்.

ஸ்தொபிட்ஸ் துறவிகளுக்கும், அகஸ்டின் மட துறவியருக்குமிடையே கருத்து மோதல்கள் எழுந்தபோது லூத்தர் நடுநிலைவாதியாக ரோம் நகருக்குச் சென்று போப்பைச் சந்தித்தார். அப்போது இரண்டாம் ஜூலியஸ் என்பவர் போப்பாக இருந்தார். அந்நேரத்தில் பிரான்ஸ் மீது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. லூத்தரின் பயணம் வெற்றிகரமாக இருக்கவில்லை. அவர் அங்கே காத்திருக்க நேரிட்டது. ரோம் ஆலயத்தில் இருந்த பிரம்மாண்டம் அவரை வியக்க வைத்தது. அங்கே இருந்த பரிசுத்த ஏணி என்றழைக்கப்படும் படிக்கட்டுகளையும் தரிசித்தார். அந்த படிக்கட்டுகளில் முழங்காலால் ஏறி செபம் செய்து தங்கள் பாவங்களைக் கரைப்பது அங்கே வரும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருந்தது. வாழ்வில் நிம்மதி தேடி அலைந்த லூத்தருக்கு அதுவும் நிம்மதி தரவில்லை. உள்ளுக்குள் மீண்டும் கேள்விகள். இவை உண்மை என்று எப்படி நம்புவது என்று அவருக்குள் மீண்டும் சந்தேகம்.

தான் சென்ற பணியை முடித்துவிட்டு மீண்டும் விட்டன்பர்க் ஆலயத்தில் போதனைசெய்து கொண்டிருந்தார் லூத்தர். ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்த குறைபாடுகள் அவருடைய மனதை வெகுவாகப் பாதித்தது. கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுத்தரும் கருவிகளாக தாங்கள் மட்டுமே இருப்பதாக குருக்கள் கர்வத்துடன் நினைத்தது லூத்தரை எரிச்சலடைய வைத்தது. அதுமட்டுமின்றி அந்நாட்களில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு பெரிய எதிர்ப்பு ஏதும் வராததால் அவர்கள் இறை பணியையும் சரிவரக் கவனிக்கவில்லை. இவையெல்லாம் லூத்தரின் போதனைகளில் முக்கிய இடம் பிடித்தன. அவருடைய போதனைக்கும், அவருடைய சொல்வன்மைக்கும் மக்கள் குவிந்ததால் தனியே ஒரு சபை ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்குள் உதித்தது. அப்படி உதித்தது தான் புரட்டஸ்டண்ட் சபை. விவிலிய அறிவு பெற்றிருந்த லூத்தர் ‘விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்’ என்னும் வார்த்தையை தன்னுடைய போதனைகளின் மையமாக்கிக் கொண்டார். அவர் சார்ந்திருந்த மடத்திலுள்ளவர்களைச் சந்தித்து அவர்களுடைய ஆதரவையும் பெற்றார் லூத்தர். தனியே ஒரு குழுவாக இயங்க ஆரம்பித்தார். அவருடைய போதனைகளில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சடங்குகளையும், அவர்களுடைய வழிபாட்டு முறையையும் அனைத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து கொண்டே லூத்தர் தனியே சபை ஆரம்பித்ததை திருச்சபை எதிர்த்தது. லூத்தர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். லூத்தர் கவலைப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்திருந்தார். தன்னுடைய எதிர்ப்புகளை இப்போது இன்னும் அதிகமாக வெளிக்காட்ட ஆரம்பித்தார். பாவமன்னிப்பு உட்பட ஏராளம் சடங்குகளை லூத்தர் கடுமையாக எதிர்த்தார். அவருடைய பெயர் வேகமாக பரவியது.

லூத்தர் அதன்பின் ஜெர்மானிய மொழியில் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நூலை மொழிபெயர்த்தார். ஜெர்மானியர்கள் இதன் மூலம் விவிலியத்தை தங்கள் மொழியிலேயே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடுமுழுவதும் தன்னுடைய சபைக்குக் கிளைகள் ஏற்படுத்த கடுமையாய் உழைத்தார். கத்தோலிக்கக் குருமார்கள் திருமனம் செய்யக் கூடாது என்பது திருச்சபை நியதி. லூத்தர் திருச்சபையிலிருந்து வெளியே வந்தபின் 1525ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்க மதத்தின் சடங்குகளை விலக்கி ஒரு புதிய சபையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. புரட்டஸ்டண்ட் சபை விவிலியத்தை மையப்படுத்தியது. மீட்பு என்பது கடவுள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையினாலும், அவருடைய இரக்கத்தினாலும், விவிலிய வார்த்தைகளாலும் மட்டுமே என்பது இவர்களுடைய மையக்கருத்தானதால், சமுதாயப் பணிகளும், மனித நேயப் பணிகளும் பின் தள்ளப்பட்டன.

இங்கிலாந்தில் அப்போது எட்டாம் ஹென்றி ஆட்சி செய்து வந்தார். மிகவும் திறமையாக தன்னுடைய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அவருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஹென்றி ஆனி போலின் என்றொரு பெண்ணையும் நேசித்தார். தன் மனைவி தனக்கு ஒரு ஆண்குழந்தை பெற்றுத் தரவில்லை என்று சொல்லி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஆனி போலினைக் கைப்பிடிக்க மன்னன் முடிவு செய்தான். இதை கத்தோலிக்க மதம் ஏற்கவில்லை. அவருடைய விவாகரத்துக்கு எதிராக நின்றது. அரசனே ஆனாலும் செய்வது தவறு என்பதை கத்தோலிக்கத் திருச்சபை ஆணித்தரமாய் கூறியது.

காதல் மயக்கத்தில் இருந்த மன்னனுக்கு போப்பின் எதிர்ப்புகள் எரிச்சலைக் கிளப்பின. அவன் போப்புக்கும், திருச்சபைக்கும் எதிராகத் திரும்பினான். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மத குருமார்கள் பலரை தன்னுடன் இணைத்துக் கொண்டான். இனிமேல் இங்கிலாந்தில் திருச்சபைக்குத் தலைவர் போப் அல்ல, அரசனே என்று தீர்மானம் கொண்டு வந்தான். அவனுடைய சார்பாக இருந்த ஒரு பிஷப்பை வைத்து விவாகரத்து வாங்கி தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்தான்.

இந்த மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்படுத்தியது. மார்டின் லூத்தரால் துவங்கப் பட்ட புராட்டஸ்டண்ட் சபை பின்னாட்களில் மிகவும் பிரபலமாக வளர்வதற்கு எட்டாவது ஹென்றியின் இந்த முடிவே முன்னுரையானது. ஹென்றி கத்தோலிக்க திருச்சபையை விட்டு விட்டு புராட்டஸ்டண்ட் திருச்சபைக்கு சார்பானார்.

ஹென்றியின் காதல் மனைவி ஆனிபோலின் தாய்மை எய்தினாள். அவளுக்குக் குழந்தை பிறக்கும் நாளுக்காக மன்னன் ஆவலுடன் காத்திருந்தான். ஒரு ஆண்மகனை கையில் ஏந்தும் ஆர்வம் அவனிடம் மிளிர்ந்தது. ஆனால் அவளுக்கும் பெண்குழந்தையே பிறந்தது. மன்னன் தன் காதல் மனைவியை கொலை செய்தான். பின்னர் ஜேனி செய்மோர் என்னும் பெண்ணை மணந்தான். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இறுதியில் ஆனி என்னும் இன்னொரு பெண்ணையும் ஹென்றி மணந்தான். திருச்சபை நீதிக்கு எதிராக மன்னன் செய்ய இருந்த திருமணத்தை தடை செய்தது. மனைவியை விலக்கி விடுதல் முறையல்ல என்னும் இயேசுவின் போதனைகளை அது பிரதிபலித்தது. ஆனால் மன்னனோ தனக்குத் தானே சட்டங்களை வகுத்துக் கொண்டு விருப்பம் போல வாழ்ந்தான்.
கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இங்கிலாந்து மண்ணிற்கும் இருந்த பிடிப்பு உடைபட்டது இவருடைய காலத்தில் தான்.

எட்டாம் ஹென்றிக்குப் பிறகு மன்னனாகப் பொறுப்பேற்ற ஆறாம் எட்வர்ட் புராட்டஸ்டண்ட் திருச்சபையை தீவிரமாய் வளர்த்தார். குருமார்களின் திருமணத்தை அங்கீகாரம் செய்ததால் புராட்டஸ்டண்ட் மதத்தில் சேர்ந்த குருமார்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இறந்தவர்களுக்காக, அவர்களுடைய ஆன்ம இளைப்பாறுதலுக்காக செபிப்பது நிறுத்தப் பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் அருளடையாளங்கள் விடப்பட்டன.

ஆறாம் ஹென்றிக்குப் பின் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த ஹென்றியின் மகள் மேரி கத்தோலிக்க மதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டாள். தன்னுடைய தந்தையின் முடிவு தவறானது என்னும் உறுதியான முடிவு அவளிடம் இருந்தது. எனவே தந்தை இயற்றிய சட்டங்களை அவள் திரும்பப் பெற்றாள். கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் இங்கிலாந்தில் எழுச்சியடைந்தது. ஆனால் அந்த எழுச்சியை அடுத்து வந்த எலிசபெத் அடக்கினார். கிபி 1558 முதல் 1603 வரை ஆட்சி செய்த அவருடைய காலத்தில் புராட்டஸ்டண்ட் சபைக்கு ஆதரவாக அனைத்தும் செய்யப்பட்டன.

புராட்டஸ்டண்ட் மதம் வேகமாக வளர்ந்தது. கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக எழும்பிய முதல் மிகப்பெரிய பிரிவு என்னும் பெயரை புராட்டஸ்டண்ட் பிரிவு பெற்றது. மற்ற பிரிவுகளைப் போல காலப்போக்கில் அழிந்து விடாமல் அது உலகெங்கும் கிளை விரித்துப் படர்ந்தது. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்காட்லாண்ட் துவங்கி எல்லா இடங்களிலும் புராட்டஸ்டண்ட் திருச்சபை வளர்ந்தது. புதிய போதனைகளால் வசீகரிக்கப்பட்டு புராட்டஸ்டண்ட் சபைக்குத் திரும்பிய பல நாடுகள் மீண்டும் கத்தோலிக்க மதத்தில் இணைந்த சம்பவங்களும் ஏராளம் நடந்தன. போலந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் புராட்டஸ்டண்ட் பிரிவில் இணைந்து சில காலம் இயங்கிவிட்டு மீண்டும் தாய் திருச்சபையான கத்தோலிக்கத்துக்கே திரும்பின.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிறிஸ்தவ வரலாறு 16 : – இயேசுவின் அன்னை வணக்கத்துக்குரியவரா ?

Image result for Mary mother of Jesus

கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பிரிந்து போன சபையினருக்குமிடையே உள்ள மிகப்பெரிய விவாதப் பொருட்களில் ஒன்று அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவரா இல்லையா என்பது. கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை வணக்கத்துக்குரியவராகவும், கடவுளிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தரும் இரு இடை நிலைவாதியாகவும் பார்க்கிறார்கள். பிரிந்து போன சபையினர் அதை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இருவருமே தங்கள் பக்க நியாயங்களை வரிசையாய் அடுக்கி தத்தம் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

புரட்டஸ்டண்ட் பிரிவினர் இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதற்கு கீழ்வரும் காரணங்களைச் சொல்கிறார்கள்.

இயேசு என்னும் கடவுளை மனித வடிவில் வந்தபோது சுமந்தவர் தான் மரியாள். அவருக்கு வேறு சிறப்புத் தகுதி ஏதும் இல்லை. அவர் கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கருவி மட்டுமே. எனவே அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவர் என்பதும் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதும் முறையற்றது.

இயேசுவைச் சுமந்ததனால் தான் மரியாள் அருள் மிகப் பெற்றவர் எனப் போற்றப்படுகிறார். மற்றபடி இயேசுவே தன்னுடைய போதனையில், என்னுடைய வார்த்தைகளின் படி நடப்போரே எனக்கு தாயும் சகோதரரும் என்கிறார். எனவே இயேசுவே தன்னுடைய தாய் மீது அதிக பற்றுதல் கொண்டிருக்கவில்லை. எனவே மரியாளை நாம் சிறப்பு வணக்கத்துக்குரியவர் என்பதை விட, இயேசுவின் போதனைகளின் படி வாழும் கிறிஸ்தவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்பதே சிறந்தது. எனவே மரியாளுக்கு எந்த சிறப்பு வணக்கமும் தேவையில்லை

இயேசுவின் தாயாரை விவிலியம் சிறப்பு மிக்கவராகவோ, உன்னதமானவராகவோ காட்டவில்லை. சராசரியான ஒரு தாயாகவே காட்டுகிறது. எந்த இடத்திலும் மரியாள் எந்த விதமான புதுமைகள் செய்ததாகவோ, போதனைகள் செய்ததாகவோ விவிலியம் நமக்குச் சொல்லவில்லை. விவிலியம் சொல்லாத் ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. எனவே அன்னை மரியாளை வணங்குதல் தேவையற்றது.

இயேசு உயிர்த்த பின்பும் தன்னுடைய தாயாருக்கு எந்த விசேஷ தகுதியும் தரவில்லை. எங்கும் அவரை கிறிஸ்தவ மதத்தின் பாதுகாவலராக குறிப்பிடவும் இல்லை. முதன் முதலில் மரிய மதலேனாளுக்கும், பின் சீடர்களுக்கும் தான் காட்சியளிக்கிறார். அவர் தன் அன்னையே முக்கியமானவர் என்று நினைத்திருந்தால் அவருக்கே முதல் காட்சி அளித்திருப்பார். எனவே மரியாள் சிறப்பு வணக்கத்துக்கு உரியவர் அல்ல.

உயிர் விடும் தருவாயில் சிலுவையில் இருந்து கொண்டே ‘இதோ உன் தாய்’ என்று அருகிலிருந்த சீடரிடம் அன்னையை ஒப்படைத்துவிட்டு அன்னை மரியாளை ஒரு மானிடத் தாயாக வெளிப்படுத்துகிறார். அதுவரை இயேசுவின் தாயாக இருந்த மரியாள் அது முதல் மனிதனின் தாயாக மாறி விடுவதால், அன்னை மரியாள் வணக்கத்துக்கு உரியவர் அல்ல.

மரியா ஜென்மபாவமில்லாமல் பிறந்தவர் என்றும், அமல உற்பவி என்றும் கத்தோலிக்கர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மரியா ஜென்ம பாவங்களோடு பிறந்த சாதாரண தாய் தான். அவரே இதோ ஆண்டவரின் அடிமை என்று சொல்கிறார். அவரையே மீட்பதற்கு ஆண்டவர் தேவைப்படும் போது எப்படி அவர் அமல உற்பவியாய் இருக்க முடியும்.

கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை கன்னி மரி என்கிறார்கள். ஆனால் விவிலியத்திலேயே இயேசுவின் தாயும், அவருடைய சகோதரர்களும் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள். எனவே அவர் இயேசுவை ஈன்ற உடன் தன்னுடைய இறைப் பணியை முடித்துக் கொண்டார். அதன் பின் அவர் ஒரு சாதாரணத் தாயாகவே வாழ்ந்திருக்கிறார்.

விவிலியத்தில் ‘மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவே மரியா இயேசுவைப் பெற்றெடுத்த பின் ஒரு சாதாரணத் தாயாகவே இருந்திருக்கிறாள் என்பது விவிலியம் வாயிலாகவே விளங்குகிறது. எனவே அவருக்கு சிறப்பு வணக்கங்கள் தேவையில்லை.

செபமாலையை இன்று கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் மரியே வாழ்க என்று மரியாளை ஐம்பது முறை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள், இறைவனை பதினோரு முறை தான் வாழ்த்துகிறார்கள் இதிலிருந்தே அவர்கள் இறைவனை விட மேலாக மரியாளை வணங்குவது தெளிவாகிறது அல்லவா ?
என்றெல்லாம் புரட்டஸ்டண்ட் பிரிவினர் தங்கள் தரப்பு நியாயங்களையும், விவாதங்களையும் முன் வைக்கிறார்கள்.

கத்தோலிக்க பிரிவினர் இவர்களுடைய வாதங்களை அவர்கள் தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்கிறார்கள். இயேசுவின் தாய் வணக்கத்துக்குரியவரே என்பதற்கு அவர்கள் தரும் காரணங்கள் இவை..

அன்னை மரியாளை கடவுளாக கத்தோலிக்கர்கள் வழிபடுவதாக சொல்வதே தவறு. அன்னை மரியாள் கடவுளல்ல, அவர் சிறப்பு வணக்கத்துக்குரியவர். ‘ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாவாக மாறினாலும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது’ என்கிறார் புனித அகுஸ்தீனார். ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்று கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்துகிறார், தூதர்கள் தாமாக எதையும் செய்வதில்லை. அவர்கள் கடவுளின் கட்டளைப்படியே இயங்குகிறார்கள். எனவே இந்த வாழ்த்தும் கடவுளிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே அன்னை மரியாள் வாழ்த்துதலுக்கு உரியவரே.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் (LG 66/67 ) “ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்களே புனிதர்களுக்கு. அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருப்பதால் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்தப்படுகிறது’ என்கிறது.

‘தூய ஆவி நிரம்பியவராய் பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ?’ என்று எலிசபெத் மரியாவை வாழ்த்துவதாய் விவிலியம் சொல்கிறது. எலிசபெத் வாயிலாக கடவுள் இயேசுவை ‘ஆண்டவரின் தாய்’ என்கிறார். எனவே இயேசுவின் தாய் மனிதரின் தாயல்ல கடவுளின் தாய். கடவுளின் தாயை வணங்குதல் முறையே.

அன்னை மரியே ‘இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவர் என்பர்’ என்கிறார். விவிலியம் சொல்வதெல்லாம் இறை ஏவுதல் என்றும், தூய ஆவியின் ஏவுதல் என்றும் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். அப்படியெனில் அவரை வணக்கத்துக்குரியவராகவும் பேறுபெற்றவராகவும் கொண்டாடுவது முறைதானே.

இயேசு சிலுவையில் உயிர் பிரியும் தருணத்தில் சீடரிடம் ‘இதோ உன் தாய்’ என்றது மனுக்குலத்துக்கே அவரைத் தாயாக்குவது போல தான். சீடர்களுக்கு இயேசுவழங்கும் அறிவுரைகளை நமக்கே வழங்கப்படும் அறிவுரைகளாக நாம் ஏற்றுக் கொள்ளும் போது, சீடரிடம் ஒப்படைத்த அன்னையை நம்முடைய அன்னையாய் பாவிப்பதே பொருத்தமாகும். நம்முடைய அன்னையை நாம் வணங்காமலிருப்பது விவிலியத்தின் கட்டளைகளுக்கு எதிரானது.

இயேசுவே அன்னை மரியாவையும் மீட்டார் என்னும் கூற்று உண்மையே. ஆனால் இயேசு இருக்கிறவராய் இருக்கிறார். எனவே அன்னை மரியாள் பிறக்கும் முன்பே அவர் அன்னையை புனிதப்படுத்தினார். ஆபிராமுக்கு முன்பே நான் இருந்தேன் என்று இயேசு கூறுவதிலிருந்து கடவுளுக்கு எல்லாமே நிகழ் காலம் தான் என்றும் அன்னையின் மீட்பு பாவத்துக்கு உட்படாமல் மீட்ட மீட்பு என்றும் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிடுகிறார். கன்னி கருத்தாங்கி மகனைப் பெறுவார் என்று இயேசுவின் பிறப்புக்கும் 600 ஆண்டுகளுக்கு முன்பே எசாயா இறைவாக்கினர் தீர்க்கத் தரிசனம் உரைத்துள்ளார். எனவே இது கடவுளால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதே. எனவே அன்னை மரியாள் சாதாரணப் பெண் அல்ல, ஆதியிலேயே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்.

விவிலியத்தில் ‘மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘இதோ உலகம் முடியும் வரை..’ , ‘பகைவரைக் கால்மனையாக்கும் வரை..’ போன்ற சொற்றொடர்களில் வரும் ‘வரை’ என்பது நிகழ்காலத்தைக் குறிப்பது. அதன் பொருள் எப்போதுமே என்பதாகும். எனவே மரியா கன்னியாகவே வாழ்ந்தார். மேலும் யோசேப்பு ஒரு நீதிமான் என்கிறது விவிலியம். நீதிமானாய் இருக்கும் ஒருவர் கடவுளின் சொத்தான மரியாவை அபகரிக்க வாய்ப்பே இல்லை.

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பல புனிதர்கள் ஒரிஜின், யுசேபியுஸ், அகுஸ்தினார், ஜெரோம் போன்றவர்கள் அன்னை மரியாளை பாவமற்றவர், கறையற்றவர், அமலி, முழுமையானவர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து ஆதியில் இருந்த கிறிஸ்தவர்கள் அன்னை மரியை அமல உற்பவி என்று கொண்டாடியது நிரூபணமாகிறது.

மேலும் விவிலியத்தில் இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் என்று தான் குறிப்பிடப்படுகிறதே தவிர, அன்னை மரியாளின் பிள்ளைகள் என்று குறிப்பிடப்படவில்லை. Adolphos (சகோதரர் ) என்னும் வார்த்தை பொதுவானது எனவே அது இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகள் அல்ல. தமிழ் மொழியிலும் அராமிக் மொழியிலும் சகோதரர் என்பது பொதுச் சொல்லே. பெரியப்பா மகனும், சித்தப்பா மகனும் சகோதரர்கள் என்று தான் அழைகப்படுகிறார்கள். achim என்று குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர் வார்த்தை மூன்று நான்கு தலைமுறை உறவுகளுக்குள் வரும் சகோதரர்கள் என்பதைக் குறிக்கிறது. இயேசு தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் ஆலயத்துக்குச் சென்றபோது மரியாவுடன் வேறு பிள்ளைகள் செல்லவில்லை. வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் அன்னை மரியாள் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார். அல்லது அவர்களைப் பற்றிய குறிப்பாவது இருந்திருக்கும். அது மட்டுமல்ல, மரியாவுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் ‘இதோ உன் தாய்’ என்று அன்னையை இயேசு ஒரு சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை இல்லை. வேறு பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைதியாய் இருந்திருக்கலாம் அல்லவா.

கி.பி 649ல் கூடிய லூத்தரன் பொதுச்சங்கமும் மரியாவின் கன்னிமை பற்றிக் குறிப்பிடுகையில், மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் கன்னியாகவே இருந்தார் என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தது !

“கத்தோலிக்கர்கள் புனிதர்களை ஆராதிப்பதில்லை. மரியாவுக்கு தேவதாய்க்கு உரிய வணக்கத்தை அளிக்கிறோம். தந்தை மகன் தூய ஆவியாகிய மூவொரு கடவுளுக்கே ஆராதனையும் மகிமையையும் செலுத்துகிறோம்’ என்கிறார் புனித எபானியுஸ்.

இயேசு என்னும் மனிதனின் தாய் அல்ல மரியாள். அவர் இயேசு கிறிஸ்து என்னும் கடவுளின் தாயே. கி.பி 431ல் எபேசு நகரில் கூடிய திருச்சங்கம் “கிறிஸ்து மெய்யான இறைவன், மெய்யான மனிதன். எனவே அன்னை மரியா இறைவனின் தாயே, இயேசுவின் தாய் என்றும். கடவுளின் படைப்பாகிய மரியாவை கடவுளின் தாய் என்று கூறுவது தவறாகாது’ என்று திட்டவட்டமாய் அறிவித்தது.

விவிலியத்திலுள்ள தொடக்க நூலில் ‘தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்’ என்றும், பத்து கட்டளைகளில் ‘தாய் தந்தையரைப் போற்று’ என்றும் இறைவன் கூறுகின்றார். நமது பெற்றோரைப் போற்றும்படி கூறும் கடவுள், தமது அன்னையை சபிப்பவர்களையும், வெறுப்பவர்களையும் வாழ்த்துவாரா ?

‘அவள் உன் தலையை நசுக்குவாள்..’ என்று பாவமாகிய பாம்பின் தலையை நசுக்கும் அன்னையைப் பற்றி கடவுள் தொடக்க நூலிலேயே குறிப்பிடுகிறார். எனவே துவக்கத்திலேயே தேர்ந்து கொள்ளப்பட்ட அன்னையை நாம் வணங்குவதே சரி.

இயேசு தன் தாயை நேசித்தார். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அறிந்திருந்தும் அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் கானாவூரில் திருமண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசம் ஆக்கினார். இயேசுவை பூமிக்கு அறிமுகப்படுத்தி, பணி வாழ்வுக்கும் அறிமுகப்படுத்துபவராக கடவுள் அன்னை மரியாளை நமக்குக் காட்டுகிறார்.

செபமாலை வழக்கம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அது கத்தோலிக்கர்கள் மட்டும் பயன்படுத்தியதும் அல்ல. 1220ல் புனித சுவாமிநாதரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த செபமாலை முறை. பல புனிதர்களால் பின்பற்றப்பட்ட செபம். தாவீதின் சங்கீதங்களிலும், உன்னத சங்கீதத்திலும் உள்ள எழில் செபமாலை செபத்தில் உள்ளதாக புனித சிப்ரியான் குறிப்பிடுகிறார். செபமாலை இட்டுக் கட்டி எழுதப்பட்டதல்லை. கடவுளால் தரப்பட்ட செபமே. இதில் ஏழு விவிலிய வசனங்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியாகிய ‘அர்ச்சிஷ்ட மரியாயே, சரவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்’ என்னும் பகுதியை கி.பி 430 ல் எபேசு நகரில் கூடிய திருச்சபை தந்தது.

‘மரியா இடை நிலையாளர் என்பது அவர் நம்மீது கொண்ட அக்கறையையே குறிக்கிறது; என்று 1திமோ2:5 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அன்னை மரியாள் நம்மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்பதும். அப்போஸ்தலர்களே அவரை ஒரு இடைநிலையாளராய்ப் பார்த்தார்கள் என்பதும், நாம் கொண்டிருப்பது ஆதியில் அப்போஸ்தலர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தின் நீட்சியே என்பது புலப்படும்.

அன்னை மரியாள் குறித்து திருச்சபையில் விவாதங்கள் எழுவது ஆதியிலேயே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சபை ஆரம்பித்த பின்பு தான் இந்த விவாதங்கள் எழுச்சி பெற்றன. கிறிஸ்தவ மதம் வெளிப்பார்வைக்கு ஒரே இயக்கமாய் தெரிந்தாலும் அதில் பல்லாயிரக்கணக்கான பிரிவுகள் உள்ளன. ஏராளமான கருத்து வேறுபாடுகளுடன் ஒருவருக்கொருவர் விவாதங்களை முன்வைத்தும், தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்தவத்துக்கு வெளியே இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் அன்னை மரியாள் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறார். மரியம் என்று அழைக்கப்படும் அவர் தான் குரானில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே பெண்மணி ! அவருக்கென ஒரு தனி அதிகாரமே இருக்கிறது. அவர் கன்னியாகவே வாழ்ந்தார் எனவும், விண்ணேற்பு அடைந்தார் எனவும் குரான் கூறுகிறது.

அன்னை மரியாளுக்கு உலகெங்கும் ஏராளமான ஆலயங்கள் கட்டி எழுப்பப்பட்டு அவரை ஒரு சிறப்பு வணக்கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியவராக கத்தோலிக்கத் திருச்சபை முன்னிலைப்படுத்துகிறது. ஆனாலும் அந்த ஆலயங்களிலும் திருப்பலியும், மற்ற அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவுக்கே ஆராதனை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும் ஒன்றிணைகின்றன. அன்னை மரியாளை வணங்கலாமா, புனிதர்கள் வணக்கம் தேவையா என்றெல்லாம் விவாதங்கள் எழுகையிலும், இயேசுவுக்கே முதல் ஆராதனை, மரியாதை, வணக்கம் எல்லாம் என்பதில் எல்லா பிரிவுகளும் கை கோத்துக் கொள்கின்றன.

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு 17 a : கிறிஸ்தவத்தின் பிரிவுகளும், இயக்கங்களும்

 Image result for Christianity groups
ரோம சபைக்கு எதிராக ஆங்காங்கே தனித்தனிக் குழுக்கள் ஆரம்பித்த காலகட்டம் பிரிவினையின் ஆரம்பம் எனலாம். போப்பின் ஆளுகைக்கு எதிராகவும், தலைவராக வேண்டும் என்னும் தனி போதகர்களின் ஆசையின் காரணமாகவும் இயக்கங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்தன. துறவற சபைகள் தனியே இயங்கினாலும் அவை ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக இருக்கவில்லை. எனவே ரோம சபை அவர்களை ஆதரித்தது. அதேநேரம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக முளைத்த சபைகளை திருச்சபை வன்மையாகக் கண்டித்தது. அவர்களை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது. அவற்றில் முக்கியமானவையாக நான்கு இயக்கங்களைக் குறிப்பிடலாம்.

அல்பிஜென்ஸஸ் எனும் இயக்கம் கி.பி 1170 ஆரம்பமானது. தென் பிரான்ஸிலுள்ள அல்பி என்னுமிடத்தில் துவங்கிய இயக்கியமானதால் இதற்கு அந்த பெயர் வழங்கப்பட்டது. இவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையின் கட்டுப்பாடுகளையும், நிறுவன அமைப்பையும் பகிரங்கமாக எதிர்க்கும் குழுவாக அறிமுகமானார்கள். விவிலியத்தின் வார்த்தைகளைக் கொண்டு முடிவுகளை எடுப்பதாக தங்களைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்கள். எனவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படாத அனைத்தையும் இவர்கள் மறுதலித்தார்கள். ரோமத் திருச்சபை நம்பிக்கைகளான உத்தரிக்கும் ஸ்தலம் (சுவர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடைப்பட்ட ஒரு இடம் ) என்பதை இவர்கள் திட்டவட்டமாக மறுத்தார்கள். ஆனாலும் இவர்களிடம் சரியான திட்டமிடுதலும், தெளிவான பார்வையும் இல்லாததால் இவர்களால் பரவ இயலாமல் போயிற்று. மேலும் ரோமன் கத்தோலிக்கர்களும் இவர்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் இருந்தார்கள்.

கி.பி 1176ம் ஆண்டு பீட்டர் வால்டோ என்பவர் வால்டென்சியன்ஸ் என்னும் குழுவை ஆரம்பித்தார். இவரும் தன்னுடன் சிலரை ஈர்த்துக் கொண்டு தனி சபை நடத்தத் துவங்கினார். கத்தோலிக்க மதத்தில் இருந்து கொண்டே தனியாக சபைகள் நடத்துவதை ஏற்றுக்கொள்ளாத கத்தோலிக்கத் திருச்சபை இவரை வெளியேற்றியது. இவர் கவலைப்படாமல் தன்னுடைய சபை வளர்ச்சிக்காய் போதிக்க ஆரம்பித்தார். இவர்களும் விவிலியத்தின் வார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று தங்கள் கொள்கையை வகுத்திருந்தார்கள். இவர்கள் தான் பிற்காலத்தில் புரட்டஸ்டன்ஸ் சபையாக மாறினார்கள் என்போரும் உண்டு.

மூன்றாவது முக்கிய இயக்கம் கி.பி 1350 களில் ஆரம்பமான லோலார்ட்ஸ் என்னும் இயக்கம். இவர்களும் தங்களை தனியே அடையாளப் படுத்திக் கொள்ள கத்தோலிக்க மதத்தையும், அதன் கோட்பாடுகளையும் எதிர்த்தார்கள். ஆலயத்தில் திருவிருந்து நிகழ்ச்சியில் பரிமாறப்படும் அப்பமும், திராட்சை இரசமும் உண்ணும் போது நாம் இயேசுவையே உண்கிறோம் என்னும் கத்தோலிக்க நம்பிக்கையை எதிர்த்தார்கள்.

இயேசுவின் இறுதி இரா உணவில் அப்பத்தைப் பிட்டு ‘இதை என் நினைவாகச் உண்ணுங்கள், இது என் உடல். ‘ என்ற இயேசுவின் வார்த்தைகளை கத்தோலிக்கர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதிட்டார்கள். இவையெல்லாம் அடையாளங்களே உண்மையில் அப்பம் இறைவனாவதில்லை என்று தீர்க்கமாய் சொன்னார்கள். கி.பி 1380ம் ஆண்டு இவர்கள் முதன் முதலில் விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள் ! இவ்வியக்கத்தை ஆரம்பித்த ஜான் விக்ளிப் இந்த மொழிபெயர்ப்பைச் செய்தார். இவருடைய போதனைகளும் எழுத்துக்களும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும் இவர்களால் நிலைக்க முடியவில்லை.,

யுனைட்டர் பிரதரன் என்றழைக்கப்பட்ட குழுவை ஜான் ஹஸ் என்பவர் கி.பி ஆயிரத்து முன்னூறுகளின் பிற்பகுதியில் ஆரம்பித்தார். இவர் லாலார்ட்ஸ் இயக்க தலைவர் ஜான் விக்ளிப் போதனைகளையே அடிப்படையாகக் கொண்டு போதித்தார். ரோமன் சபைக்கு எதிராக பெரும் பிரச்சாரங்களை இவர் நிகழ்த்தினார். திருச்சபை இவருடைய பிரச்சாரங்களினால் எரிச்சலடைந்து இவரை ரோம சபையை விட்டு வெளியேற்றியது. தற்போதைய மொரேவியன் சபை இந்த குழுவிலிருந்து தோன்றியதே. ஜான் ஹஸ்ன் போதனைகளும், பிரச்சாரங்களும் மிகவும் வசீகரத் தன்மையுடையவையாக இருந்தன. இவர் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக செயல்பட்டதனால் இவர் கி.பி 1415ம் ஆண்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

ரோம கத்தோலிக்க சபையின் அதிகாரத்தை எதிர்த்தும், அவர்களுடைய போதனைகள் நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இவ்வாறு பல இயக்கங்கள் ஆரம்பித்தாலும் அவை துறவற சபைகளைப் போல சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. கிறிஸ்தவம் என்பது இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்வதும், அவரை விசுவசிப்பதும் மட்டுமே என்னும் கருத்தே மையம் கொண்டிருந்தது. மக்களின் தேவைகளுக்கு விவிலியத்தின் வார்த்தைகள் தீர்வாக சொல்லப்பட்டன.

இவற்றில் பெரும்பாலானவை வாழ்ந்து காட்டுவதை விட வாசித்துக் காட்டுவதையே முன்னிலைப்படுத்தின. இந்த சபைகள் எல்லாம் ரோமன் திருச்சபையையும் அதன் சடங்குகளையும் வெறுத்தன. ஆலயங்களில் சிலைகள் வைத்திருப்பதையும், குருவானவர் பாவ மன்னிப்பு வழங்குவதையும், அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாய் இரத்தமாய் மாறுகிறது என்பதையும் இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

 

எதிர்ப்பில் எழுந்த நன்மைகள்

 

ரோம சபைக்கு எதிராய் ஏராளம் சபைகள் ஆங்காங்கே உருவானதில் கிடைத்த மிக முக்கியமான நன்மை விவிலியம் பரவலாய் எல்லோருக்கும் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த குழுவினர் விவிலியத்தை மட்டுமே முக்கியப் படுத்தியதால் விவிலியத்தில் சொல்லப்பட்டிருந்த பல கருத்துக்கள் புதிதாக மக்களைச் சென்றடைந்தன. ஆங்கிலத்தில் விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
இக்காலத்தில் ஹியூமனிஸ்ட்கள் தோன்றினார்கள் !

ஹியூமனிஸ்ட்கள் மனித முக்கியத்துவத்தைப் பிரச்சாரம் செய்தார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியமானவன் என்றும் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவை அவன் காத்துக் கொள்ளவேண்டும் என்றும், தனி தியானங்கள் தேவை என்றும் ஹியூமனிஸ்ட் கள் போதித்தார்கள். மனிதன் தன்னுடைய செயல்களில் தூய்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்றும், மனித நேயமிக்க செயல்களைச் செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதையும் இவர்கள் மையப்படுத்தினார்கள். கிபி 1433 முதல் 1536 வரை மார்சிலியோ, ஜான் காலட், எராஸ்மஸ் போன்ற பலர் இந்த ஹியூமனிஸ்ட் குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஹியூமனிஸ்ட்களின் காலம் ஒரு தத்துவார்த்த காலம் போல் விளங்கியது. பல நூல்கள் எழுதப்பட்டன, நற்செய்தி பலரை சென்றடைந்தது.

இக்காலத்தில் விளங்கிய இன்னொரு குழுவினர் ‘மிஸ்டிக்ஸ்’ என்பவர்கள். இவர்கள் தனியுறவே இறையுறவு எனும் கொள்கை கொண்டிருந்தவர்கள். இவர்களும் ஹியூமனிஸ்களின் சாயலையே கொண்டிருந்தார்கள். இவர்கள் தனிப்பட்ட மனிதன் தன்னுடைய ஆழ்மன தியானத்தின் மூலம் இறைவனை அடைய முடியும் என்னும் கொள்கை கொண்டிருந்தார்கள். சமுதாயத்தின் பிரச்சினைகளிலிருந்து தப்பி தனியே வாழ்வதும், பின் ஆழ்மன தியானங்களின் மூலம் உள்ளோளி உணர்வு பெற்று அதன் மூலம் இறை பிரசன்னத்தை உணர்வதும் இவர்களுடைய கொள்கையாய் இருந்தது. இதனால் இவர்கள் திருச்சபையின் எல்லா கொள்கைகளையும் விட்டு விட்டார்கள். எந்த அடையாளங்களும் தேவையில்லை என்று விலகிவிட்டார்கள். விவிலியம் சொல்லாத வழிகளை இவர்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள்.

மெய்ஸ்டர் எக்கார்ட் என்பவர் ஜெர்மனியில் மிஸ்டிக்ஸ் பிரிவைத் தோற்றுவித்தார். உள்ளொளிப் பயணங்கள் மூலம் மனிதன் இறைவனை அடையவேண்டும். அப்போது கடவுளும் மனிதனை அடைவார். அவ்வேளையில் கடவுளும் மனிதனும், மனிதனும் கடவுளும் ஒன்றாவோம் என்று ஒரு புதிய தத்துவத்தைக் கொண்டு வந்தார். இவருடைய சிந்தனைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொடுத்தன. ஆனாலும் கடவுள் என்னும் நிலையில் இவர் கிறிஸ்தவத்தை மையப்படுத்தி மதத்தின் பரவலுக்கு உதவி புரிந்தார். கி.பி 1260 முதல் கி.பி 1327 வரை எக்கார்ட் மிஸ்டிக்ஸ் கொள்கைகளை பரப்புவதில் ஈடுபட்டார்.

கி.பி 1347 முதல் கி.பி 1380 வரை வாழ்ந்த புனித கேத்தரின் தனி தியானத்தை முதன்மைப்படுத்தினார். இவ்வாழ்க்கையில் துறவறம் சார்ந்த ஒறுத்தல் முயற்சிகளும் தனி மனித ஒழுக்கமும் ஆழ்மன தியானங்களுமே ஆன்மீகம் என்று போதித்தார். தன்னுடைய தனி தியானங்களின் இறை பிரசன்னத்தையும், இறைவனின் குரலையும் கேட்டதாக இவர் பல வேளைகளில் குறிப்பிடுகிறார். இந்த தனியுறவுக் கொள்கைகள் நெதர்லாந்து போன்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவின.

இந்த தனியுறவுக் கொள்கைகளில் திருச்சபை மையப்படுத்தப்படவில்லை. கூடி வாழ்தல் செபித்தல் போன்றவற்றை விட தனி மனித சிந்தனைகளும், ஒழுக்கங்களும், தியானங்களுமே மையப்படுத்தப் பட்டதால் மக்கள் தீவுகள் போல வாழத் துவங்கினார்கள். அவரவருக்குப் பிடித்த வழியில் இறைவனைத் தரிசிக்க முடியும் என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டது. சமுதாயப் பணிகளிலும், மனித நேயப் பணிகளிலும், திருச்சபை நிகழ்வுகளிலும் ஈடுபடுவது இல்லாமல் போய்விட்டது. இயேசுவின் போதனைகளான கடவுளை நேசி, மனிதனை நேசி என்னும் கொள்கைகள் மாறி உன்னை மட்டும் நேசி என்றானது.

இந்த தனியுறவுக் கொள்கையினர் தழைத்து வளர்ந்து வந்த காலகட்டத்தில் சுதேசி இயக்கம் என்னும் பெயரில் இயக்கங்கள் தோன்றின. இவை பெரும்பாலும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே எழுந்தன. தங்கள் பணம் ரோமில் இருக்கும் தலைமை இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதே அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. தங்கள் பணத்தை தாங்களே செலவிடவும், தங்களை தாங்களே வழிநடத்தவும் வேண்டும் என்று இந்த இயக்கத்தினர் போதித்தார்கள். போப்பின் அதிகாரத்துக்கு எதிராக இந்த அலை எழும்பியது. இது பல தனித் தனிக் குழுக்கள் தோன்றி இலக்கில்லாமல் செல்லவும் வழி வகுத்தது.

 

இயேசு சபையின் வருகை

இயேசு சபை ஸ்பெயின் நாட்டில் கிபி 1536ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புராட்டஸ்டண்ட் மதத்தின் எழுச்சியை மட்டுப்படுத்தவும், கத்தோலிக்க திருச்சபை சந்தித்து வந்த சவால்களை நிவர்த்தி செய்யவும் இயேசு சபை பெரிதும் உதவியது. இக்னேசியஸ் லயோலா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் ‘JESUITS’ என்று அழைக்கப்படுகிறது. போப் மூன்றாம் ஜான்பாலில் ஒப்புதலுடன் இந்த இயக்கம் மிகவும் உயிர்ப்புடனும், எழுச்சியுடனும் தன்னுடைய பணியை ஆரம்பித்தது. இவர்கள் மிகச் சிறந்த கோட்பாடுகளுடன் தங்களுடைய இயக்கத்தை வளர்த்தார்கள். தன் வாழ்வில் நேர்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக இந்த இயக்கத்தை ஆரம்பித்த இக்னேஷியஸ் பின்னாட்களில் புனிதர் பட்டம் பெற்றார்.

புராட்டஸ்டண்ட் மதம் கத்தோலிக்கத் திருச்சபையின் குறைகளை நிவர்த்தி செய்யும் என்னும் எதிர்பார்ப்பில் ஏராளமான மக்கள் அதில் இணைந்தார்கள். இந்த மாற்றம் கத்தோலிக்கத் திருச்சபையிலும் ஒரு வித மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களும் இறை வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து போதனைகள் செய்வதை துரிதப்படுத்தினார்கள். இயேசு சபை அதற்கு உறுதுணையாய் இருந்தது.

இவர்கள் தனிமனித ஒழுக்கங்களை மிகவும் முக்கியமாக வலியுறுத்தினார்கள். தங்கள் தாய் சபையான ரோமன் கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சிக்கும், அவர்களுடைய புகழ் பரவலுக்கும் முக்கிய இடம் கொடுத்தார்கள். மக்களை கிறிஸ்தவ இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்னும் தனியாத தாகம் அவர்களிடம் இருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட விசுவாசத்தையும் வளர்த்து, சமுதாயத்திலும் அந்த விசுவாசத்தை விதைத்தார்கள்.

கல்வியை இவர்கள் முதன்மைப்படுத்தினார்கள். எதிராக வந்த அனைத்துத் தடைகளையும் முறியடித்து சுமார் எழுபது ஆண்டுகளில் 306 கல்லூரிகளைக் கொண்ட மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்தார்கள். கல்வியை மக்களுக்கு வழங்கி அதன்மூலம் சமூக வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழிகோலுவது இவர்களுடைய முக்கியமான திட்டமாக இருந்தது. இந்த இயேசு சபை சார்பாக இந்தியா வந்த முக்கியமான நபர் புனித பிரான்சிஸ் சேவியர்.

பிரான்சிஸ் சேவியர் இந்தியாவில் கத்தோலிக்க மதம் பரவ முக்கியமான காரணமாக விளங்கினார். தென்னிந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவர் பல்லாயிரம் பேரை கிறிஸ்தவ மதத்துக்குள் இணைத்தார். இலங்கை மலாக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவர் இறை செய்தி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், லத்தீன் அமெரிக்கா, ஹியூபெக், சீனா போன்ற இடங்களுக்கும் இயேசு சபை விரைவாகப் பரவியது.

இயேசு சபையின் தீவிரப் பணி கத்தோலிக்க மதத்திற்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது.

 

வத்திக்கான் சபையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தவும், தங்களுக்குரிய மத ஒழுங்குகளை அமைக்கவும் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டினர். இந்த வத்திக்கான் சங்க முடிவுகள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பணிகளை வரையறுத்தது.

குறிப்பாக சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுதல் பற்றி வத்திக்கான் கிறிஸ்தவர்களுக்கு பல வேண்டுதல்களை வைக்கிறது. பெண்விடுதலை, கல்வி, ஏழ்மை என பலதரப்பட்ட சமூக காரணிகளை அணுகுவது குறித்து வத்திக்கான் சங்கம் வரையறைகள் தருகிறது. சமூகப்பணியும் ஆன்மீகப் பணியும் இணைந்து பயணித்தலே உண்மையான ஆன்மீகம் என வத்திக்கான் சங்கம் வலியுறுத்துகிறது.

முதலாம் வத்திக்கான் சங்கம் 1869 – 1870 ல் நடைபெற்றது. இந்த சங்கத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடப்பதற்கு இந்த வத்திக்கான் சங்க கூட்டம் ஆதாரமாய் இருந்தது.

போப்பாண்டவரின் தலைமை சந்தேகத்துக்கோ, விவாதத்துக்கோ இடமின்றி அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது முதலாம் வத்திக்கான் சங்கத்தின் ஒரு பாகமாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் 23ம் ஜான் போப்பாக இருந்த காலத்தில் 1962 அக்டோபர் 11ல் ஆரம்பித்தது. வத்திக்கான் கூட்டம் முடியும் முன் போப்பானவர் இறந்து விட்டார் எனவே தொடர்ச்சியை அடுத்து வந்த போப் ஆறாம் பால் தொடர்ந்தார்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், மற்ற கிறிஸ்தவர்களும் ஒரே தூய ஆவியின் வரங்களைப் பெற்றவர்கள் எனவே சகோதர உறவு அனைத்து கிறிஸ்தவர்களிடமும் காட்டப்பட வேண்டும் என வத்திக்கான் வலியுறுத்தியது.

கிறிஸ்தவ ஒற்றுமையை நிலைநாட்ட கத்தோலிக்க மதத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வற்புறுத்தாமல், கிறிஸ்துவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் வத்திக்கான் தீர்மானங்களில் சிறப்பு மிக்கதாகும்.

சமூகப்பணிகள் அற்ற கிறிஸ்தவ விசுவாசம் முழுமையானதாய் இருக்காது என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்கமும் வலியுறுத்துகிறது.

அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்று படவேண்டும் என்னும் நோக்கத்தில் பொதுவான மொழிபெயர்ப்புடன் கூடிய விவிலியம் ஒன்றை கத்தோலிக்க கிறிஸ்தவம் முன்னின்று நிறைவேற்றியிருப்பது உலகக் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட வேண்டும் என்னும் அவர்களுடைய தாகத்தையே காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பல்வேறு பெயர்களில் தனித்தனியே இயங்குவது போன்ற ஒரு தோற்றம் உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்காவில் 1857ம் ஆண்டு கிறிஸ்துவின் ஐக்கிய சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த சபையில் அமெரிக்காவிலுள்ள பல கிறிஸ்தவப் பிரிவுகள் இணைந்தன.

இங்கிலாந்தில் இதேபோல 1832ல் ‘இங்கிலாந்து வேல்ஸ் சபை ஆட்சி ஒருமைப்பாடு’ எனும் பெயரில் ஒரு இணைந்த இயக்கம் ஆரம்பமானது. இதிலும் வெவ்வேறு பிரிவினர் பலர் இணைந்தனர்.

1900ல் ஸ்காட்லாந்தில் பல சபைகள் ஒன்றாக இணைந்து ஒருங்கிணைந்த சுதந்திர சபை உருவானது. இந்த அமைப்பில் ஸ்காட்லாந்து சபைகள் பல இணைந்தன.

ஜப்பானில் இதேபோல 1941ல் ஜப்பானின் கிறிஸ்து சபை உருவானது. இதில் குறிப்பாக மெத்தடிஸ்ட் சபையும், சீர்திருத்தச் சபையும் இணைந்தன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘பிலிபைன்ஸ் ஐக்கிய எவாஞ்சலிக்கல் சபை’ 1946 ல் பெரும்பான்மையான சீர்திருத்தச் சபைப் பிரிவுகளை ஒன்றாக்கி உருவானது.

இவ்வாறு உலகின் பெரும்பாலான இடங்களில் பல கிறிஸ்தவக் குழுக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற விரும்பினர். இது கிறிஸ்தவர்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையைக் குறைக்கும் நோக்கிலும், ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் உருவானதாகும்.

 

கிறிஸ்தவத்தின் புதிய பிரிவுகள்

கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சென்ற புராட்டஸ்டண்ட் மதத்தினர் தங்களுடைய சபையை ஒரே இயக்கமாக நடத்த இயலவில்லை. கத்தோலிக்க மதத்துக்கு மாற்றாக தோன்றிய புராட்டஸ்டண்ட் மதத்தில் இன்றைய நிலவரப்படி சுமார் முப்பதாயிரம் பிரிவுகள் இருக்கின்றன. பொதுவான தலைமையும் வழிகாட்டுதலும் இல்லாததாலும், பொதுமக்களே குருக்கள் என்னும் கொள்கையினாலும், சபை நடத்த குருத்துவப் பட்டம் பெறத் தேவையில்லை என்ற கருத்து நிலவியதாலும், குருக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்னும் நிலை இருந்ததாலும் பலர் வேதாகமத்தை வாசித்து தாங்கள் புரிந்து கொண்டதன் படி இறை விளக்கம் கொடுக்கவும், தனித்தனியே குழுக்கள் ஆரம்பிக்கவும் துவங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அவர்கள் புரிந்து கொண்ட விதமே சரியானது என்று வாதிட்டுக் கொண்டு தங்கள் சபைகளை நடத்தினார்கள். மீட்பு பெற தங்கள் சபைக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தனிக் குழுக்கள் அமைப்போரின் போதனையாய் இருக்கிறது. ஒரு வகையில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு இந்த குழுக்கள் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுமைப்பட்ட போதனை வகுக்கப்படாததால் ஒரு சபையில் சொல்லும் விளக்கங்கள் தவறென்று வேறொரு பிரிவினர் போதிப்பது போன்ற பல குழப்பங்கள் ஏற்பட்டன.

புராட்டஸ்டண்ட் பிரிவிற்குப் பின் கத்தோலிக்க மதத்தில் ஆயிரத்து ஐநூறுகளின் பிற்பகுதியில் ‘ஓரேட்டரி ஆஃப் டிவைன் லவ்’ என்னும் இயக்கம் ஆரம்பமானது. இவர்கள் விவிலியம் சார்ந்த போதனைகளையும், இறை அனுபவ வெளிப்பாடுகளையும் முன்னிலைப்படுத்தினார்கள். இந்த அறக்கட்டளை மிகவும் உயிர்ப்புடன் செயல்பட்டது. இவர்கள் சமுதாயப்பணிகளையும் ஏராளம் செய்தனர். இவர்களுடைய பணி புராட்டஸ்டண்ட் பிரிவினரின் வளர்ச்சிக்கு ஒரு வேகத்தடை போட்டது.

1524ம் ஆண்டு ‘தியேட்டின் ஆர்டர்’ என்னும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. டினி என்பவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்கு உறுதுணையாக நின்றார் பின்னாட்களில் போப்பாக திருநிலைப்படுத்தப்பட்ட கராப்பா என்பவர். ஏழ்மை, பணிவு, கீழ்ப்படிதல் போன்ற குணங்களை வாழ்க்கைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்த அறக்கட்டளை பணியாற்றியது. இத்தாலியில் இந்த அறக்கட்டளை ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகத்தோடு இணைந்து இந்த அறக்கட்டளையினர் பணிகளிலும் ஈடுபட்டார்கள். எனவே கத்தோலிக்க மதத்தின் இழந்த பெயர் ஓரளவு மீண்டெடுக்கப்பட்டது.

கேப்புசின் அறக்கட்டலை 1525ம் ஆண்டு மேட்டியோ டா பேசியோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஒறுத்தல் முயற்சிகளால் வாழ்வின் உயர் நிலை அடையவும், ஆன்மீகத்தின் ஆழங்களை தரிசிக்கவும் கொள்கை ரீதியாய் இணைந்தவர்கள். இவர்கள் செருப்புகளைக் கூட வெறுத்து தங்கள் ஒறுத்தலைக் காட்டினார்கள். உணவுக்காய் பிச்சையும் எடுத்தார்கள்.

கி.பி 1535ம் ஆண்டு பெண்களுக்காக ஏஞ்சலா மெரிசி என்னும் பெண்ணால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை உருசுலின் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையினரும் சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார்கள். கல்வி அறிவித்தல் பணியிலும், மருத்துவ உதவிகளிலும், நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பதிலும் இவர்கள் முனைப்புடன் ஈடுபட்டார்கள்.

கிபி 17ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றிய இயக்கம் ‘பக்தி மார்க்கம்’ என்பது. லூத்தரன் சபையில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்னும் சூளுரையோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்த பக்தி மார்க்கம். தனிப்பட்ட வாழ்க்கையில் பத்தியுடனும், ஆன்மீக ஆழத்துடனும் வாழவேண்டும் என்றும், நம்முடைய தினசரி வாழ்க்கையில் அதை செயலில் காட்ட வேண்டும் என்றும், நடை முறை வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் விவிலியத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்த இயக்கம் கொள்கை வகுத்துக் கொண்டது. பிலிப் ஸ்பீனரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் பின்னர் பிராங்கே என்பவரின் வழிகாட்டலில் வளர்ந்தது.

ஏழைகள் கல்வி அறிவு பெறுவதற்காக கல்வி நிலையங்கள் ஏற்படுத்துதல், விதவைகள் இல்லம் அமைத்தல், அனாதைகளைக் கவனித்தல், விவிலியம் போதித்தல் என எல்லா விதமான பணிகளையும் அவர்கள் செய்தார்கள்.

கவுண்ட் வான் ஸின்செண்டார்ஃப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சபை மொரேவியன். இவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் கண்ட கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் மொரேவியன் சபையில் இணைத்தார்கள். கி.பி 1742ல் இந்த சபை அங்கீகரிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பினர் விஜயம் செய்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள்.

ஜான் வெஸ்லி ஆரம்பித்த மெதடிஸ்ட் சபை ஒரு பெரும் சபையாக உருவெடுத்தது. சிறையில் வாடுவோரை சந்தித்து ஆறுதல் அளிப்பதும், விவிலியத்தை வாசித்து செபிப்பதும் இவருடைய வழக்கமாக இருந்தது. சுமார் இருநூறு புத்தகங்களையும் 42, 000 சொற்பொழிவுகளையும் இவர் செய்திருக்கிறார். போதைப் பழக்கம், அடிமைத்தனம், போர் இவைகளுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பியவர் அவர்.

Advertisements


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிறிஸ்தவ வரலாறு 18 : இந்தியாவில் கிறிஸ்தவம்

Image result for st. thomas the apostle kerala

புனித தோமா இந்தியாவுக்கு வருகை தந்தபோது ஆரம்பித்த கிறிஸ்தவம் இந்தியாவில் தட்சசீலா நகரில் முளைவிட ஆரம்பித்தது. ஆனால் தோமா எதிர்பார்த்தது போல அங்கு கிறிஸ்தவம் வளரவில்லை. காலப்போக்கில் அழிந்து விட்டது. ஆனால் தோமா கேரளாவில் உருவாக்கிய கிறிஸ்தவ அடித்தளம் நிலைபெற்றது. பெருமளவில் பரவாவிடினும் பூர்வீகமாய் கிறிஸ்தவ மதம் அங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. சிரியன் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்த தோமா கிறிஸ்தவர்கள் முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கேரளாவில் உள்ளனர்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் இருந்தது என்பதை அலெக்சாந்திரியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த தத்துவ அறிஞர் பண்டேனூஸ் என்பவருடைய குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. இவருடைய வருகையின் போது இயேசுவின் சீடர்களில் ஒருவரான பார்த்தலமேயு என்பவரும் இந்தியாவில் வந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.

நான்காம் நூற்றாண்டில் மருதா என்னும் கிறிஸ்தவரைப் பற்றி புனித ஜான் கிறிசாந்தோம் குறிப்பிடுகிறார். அவர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியதாகவும் அவர் இந்தியாவிலுள்ள சபை ஒன்றுக்கு தலைவராய் இருந்து பணியாற்றியதாகவும், கிபி 381ல் நடந்த கான்ஸ்டாண்டிநோபிள் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். கி.பி 345ல் கானாவூர் தோமா என்பவர் பெர்சியா நகரை விட்டு கேரளாவுக்கு வந்தார். அவருடன் எழுபத்து இரண்டு கிறிஸ்தவக் குடும்பங்களும் வந்து கேரளாவில் குடியேறினார்கள். அவர்கள் அங்கே ஒரு ஆலயமும் கட்டி அங்குள்ள கிறிஸ்தவர்களோடு இணைந்து வாழ்ந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. புனித அம்புறோஸ் தன்னுடைய குறிப்புகளில் மாசியஸ் என்னும் கிறிஸ்தவ தலைவர் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகங்களோடு தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கிறார்.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் காஸ்மாஸ் இண்டிகோபிளேஸ்டஸ் என்னும் வணிகர் தன்னுடைய பயண அனுபவங்களைக் குறிப்பிடுகையில் மலபாரிலுள்ள கிறிஸ்தவர்கள் மிளகு சாகுபடி செய்வதாக எழுதுகிறார்.

கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவுக்கு இறை பணி ஆற்றுவதற்காகச் சென்ற போப்பாண்டவரின் தூதர்கள் இந்தியா வழியாக பயணம் செய்து மலபார் பகுதியில் தோமா கிறிஸ்தவர்கள் வாழ்வதாகக் குறிப்பிடுகின்றனர். கி.பி 1320ல் டொமினிக் சபையைச் சார்ந்த ஜோர்தான் என்னும் குருவும் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த நான்கு குருக்களும் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களைச் சந்திப்பதற்காக வருகை புரிந்தார்கள். இந்த வருகைக்குப் பின் போப்பாண்டவர் இருபத்து இரண்டாம் ஜாண் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் பல விதங்களில் வேறு வேறு விதமாக கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை அறிந்து, கிறிஸ்தவர்களில் பல பிரிவுகள் இருக்கக் கூடாது ஒரே இயக்கமாக அவர்கள் செயல்படவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருப்பதாய் தெரிகிறது.

கி.பி 1350 ல் கிளமெண்ட் ஜாண் டிமாரி ரோலி என்னும் ஆயர் இந்தியாவிற்கு வந்து ஓராண்டு தங்கியிருந்தார். அவர் போப்பாண்டவர் ஆறாம் கிளமெண்ட் அவர்களிடமிருந்து வந்ததால் அவரை மலபார் கிறிஸ்தவர்கள் மிகவும் பாசத்துடனும் மரியாதையுடனும் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் நூறு பொற்காசுகள் கொடுத்து கெளரவித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்கையில் பணமுடிப்பாக ஆயிரம் பொற்காசுகள் வழங்கியிருக்கிறார்கள்.

போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இந்தியாவின் கிறிஸ்தவம் புத்தெழுச்சி பெற்றது. அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் இருப்பதைக் கண்டு வியப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தபோது மலபாரில் சுமார் அறுபதாயிரம் கத்தோலிக்கர்கள் சுமார் அறுபது கிராமங்களில் வசிப்பதைப் பார்த்தார்கள். அவர்களுடைய குறிப்பேடுகளில் இந்த செய்திகள் காணப்படுகின்றன.

கி.பி 1663ல் சுமார் 116 சபைகளாக இயங்கி வந்த தோமா கிறிஸ்தவர்களை கத்தோலிக்க பிரிவுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போர்த்துக்கீசியர்களின் இந்த முயற்சியின் விளைவாக சுமார் 84 சபைகள் கத்தோலிக்க சபையில் இணைந்தன. மிச்சமிருந்த சபைகள் தங்கலை ஜேக்கபைட்ஸ் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தங்களை புராட்டஸ்டண்ட் குழுவினருடன் இணைத்துக் கொண்டார்கள்.

இன்றும் கேரளாவில் மூன்று வகையான கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். முதலாவது கத்தோலிக்கர்கள். இவர்கள் போப்பாண்டவரை தங்கள் ஆன்மீகத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் சீரோ – மலபார், சீரோ மலங்கரா, மற்றும் லத்தீன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். இன்னொரு பிரிவினர் சிஸ்மாட்டிக்ஸ். இவர்கள் சிரியன் வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் போப்பாண்டவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்கள் ஜெக்கோபியர்கள், மார்த்தோமா கிறிஸ்தவர்கள் மற்றும் நஸ்ரானியன்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிறிஸ்தவம் முதலாம் நூற்றாண்டிலேயே நுழைந்திருந்தும் சுமார் பதினெட்டு நூற்றாண்டுகளாக அவை பரவவேயில்லை. மலபார் தேசத்தை விட்டு வெளியே பெரிய அளவில் கிறிஸ்தவம் ஒரு இயக்கமாக எழுச்சி பெறவில்லை. அது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் வேகமாகப் பரவியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

றிஸ்தவ வரலாறு 19 : மதத்தைப் பரப்பிய வணிகம்

Image result for vasco da gama

யவணர்கள் தென்னிந்தியாவுடன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்கள் கடல் வழியாக வந்து தென் இந்தியாவின் கடலோரப் பகுதிகளை தங்கள் வணிக வளாகமாக்கியதாக வரலாறு கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் யவணர்கள் இந்தியாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் குறிப்பிடுகின்றன. காவிரிப் பூம்பட்டினம், மதுரை போன்ற இடங்களில் யவணர்கள் வசித்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன. கி.மு இருபத்து இரண்டிலேயே மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கும் யவன அரசர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. வணிகத் தொடர்புக்காக இந்தியாவுக்கு வருகை தந்தவர்கள் இந்தியாவின் வணிகச் சிறப்பைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்வது வழக்கம். வணிகத் தொடர்பு இருந்ததேயன்றி அது மிகப் பெரிய அளவில் நடந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

ஹிப்பல்லஸ் காற்றின் திசையை அறிந்து எப்போதெல்லாம் கடல்வழிப் பயணம் செய்தால் விரைவாக பயணத்தை முடிக்க முடியும் என்பதை கி.பி 47ல் கண்டுபிடித்தார். அதன் பின்னர் வணிகத் தொடர்பு இன்னும் வளர்ந்தது. யவணர்களிடம் இந்தியாவிற்கு இருந்த வணிகத் தொடர்பு இஸ்லாமியர்கள் எகிப்து, பாரசீகம் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய ஏழாம் நூற்றாண்டுடன் அடியோடு நின்று போனது. அதன்பின் இஸ்லாமியர்கள் வணிகத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இந்தியாவின் பொருட்களைக் கப்பல்களில் ஏற்றி ஐரோப்பா போன்ற நாடுகளுக்குக் கொண்டு சென்று பெரும் பொருளீட்டினார்கள்.

1498ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வாஸ்கோடகாமா என்னும் வணிகர் இந்தியாவுக்கு வந்தார். யவணர்களுக்குப் பிறகு கிறிஸ்தவ மதம் சார்ந்த வியாபாரி இவர் தான். வாஸ்கோடகாமா இந்தியாவுடன் செய்து கொண்ட வணிக உடன்படிக்கையின் காரணமாக ஏராளமான போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தார்கள். அவர்கள் மூலமாக பல தாவரங்கள், பழச் செடிகள் இந்தியாவிற்கு அறிமுகமாயின. போர்ச்சுக்கீசியர்களின் வரவு இஸ்லாமியர்களின் வியாபாரத்தைப் பாதித்தது. அவர்கள் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்தார்கள். ஆனால் போரில் இஸ்லாமியர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள். அதன்பின் போர்ச்சுக்கீசியர்களின் வாணிகம் எந்தவிதமான இடையூறுமின்றி சிறப்பாக நடந்தது.

போர்ச்சுக்கீசியர்களின் இந்திய வரவு தான் இந்தியாவில் கிறிஸ்தவம் பரவுவதற்குக் காரணமாய் இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலரான தோமா இந்தியாவில் வந்து கிறிஸ்தவ மதத்தை அறிமுகம் செய்தாலும் அது பதினைந்து நூற்றாண்டுகளாக வளராமலேயே இருந்தது. கேரள நாட்டில் இருந்த தோமா கிறிஸ்தவர்களும் மதத்தைக் கட்டிக் காத்தார்களே தவிர பரப்ப வேண்டுமென்று எண்ணவில்லை. எனவே கிறிஸ்தவம் முறையான வளர்ச்சியின்றி கவனிக்கப்படாமலேயே இருந்தது.
இவர்களோ பல இயேசு சபைப் பாதிரியார்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டார்கள். வீரமாமுனிவர், புனித சவேரியார் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.

இந்தியாவுடன் போர்ச்சுக்கல் வணிகர்கள் செய்து வந்த வணிகம், ஹாலண்டு நாட்டுக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்த டச்சுக்காரர்களும் இந்தியாவுடன் வணிகத்தைத் துவங்கினார்கள். அவர்கள் ஆரம்பித்த “கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” அவர்களுடைய வணிகத்தை விரிவு படுத்த உதவியது. இவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்களைத் துரத்திவிட்டு வியாபாரத்தை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

டச்சுக்காரர்களின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பணி துரிதமாக நடைபெற்றது. இவர்கள் பலவேளைகளின் வன்முறையின் மூலமாகவும் மதத்தை மக்கள் மேல் திணிக்க முயன்றார்கள். விரும்பியும், விரும்பாமலும் பலர் கிறிஸ்தவர்களானார்கள். ஆங்கிலேயர்களின் வரவு இவர்களின் ஆட்சியை முடித்து வைத்தது.
அதன்பின் பிரஞ்சு மக்கள் இந்தியாவுடன் வாணிகம் செய்தார்கள். “பிரஞ்ச் கிழக்கிந்திய வர்த்தக சங்கம்” எனும் ஒரு சங்கத்தை 1664ல் இவர்கள் ஆரம்பித்தார்கள்.

வியாபாரத்துக்கு வந்த ஐரோப்பியர்கள் வெறும் வியாபாரத்தோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்ளவில்லை. அவர்களுடைய அடுத்த இலக்கு கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்பதே. இதற்காக அவர்கள் ஏராளமான கிறிஸ்தவப் பாதிரியார்களை இந்திய தேசத்துக்கு அழைத்து வந்தார்கள். இந்திய மொழி தெரியாத இவர்களுடைய மத ஆர்வமும், கிறிஸ்தவத்தைப் பரப்பும் ஆர்வமும் ஒருவகையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலின. அதிலும் குறிப்பாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இவர்களின் வருகை மிகப்பெரிய வரமாய் அமைந்தது எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிறிஸ்தவ வரலாறு 20 – தமிழ் வளர்த்த கிறிஸ்தவம்

 

தமிழ் இலக்கியச் செழுமைக்குப் பெயர்போன மொழி. அடர்த்தியும் அழகும், ஆழமும் நிறைந்த செய்யுள்களாலும், பாடல்களாலும் தமிழ் இலக்கிய உலகம் ஆழமாய் வளர்ந்திருந்தது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு குறை மட்டுமே இருந்தது, அப்போது தமிழில் உரைநடை நூல்கள் இல்லை ! வெறும் பாடல்கள் மட்டுமே இலக்கியத்தை வாழவைத்துக் கொண்டிருந்தது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் கூட கவிதையாகவே அமைந்திருந்தன. தூய உரைநடை நூல்களே இல்லை.

ஓலைச் சுவடிகளில் ஆணிகளால் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பக்கம் பக்கமாய் உரைநடையை எழுதுதல் சுலபமில்லையே. எழுதும் வேலை குறைவாகவும், அது தரும் பயம் மிக அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அந்தக் கால புலவர்களின் எண்ணமாக இருந்தது. எனவே அவர்கள் கவிதைகளையே இலக்கியத்துக்கான வடிவமாக்கிக் கொண்டார்கள். இதனால் உரை நடை இலக்கியம் தமிழில் வளரவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற வெகு சில உரை நடை நூல்களும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலேயே அமைந்திருந்தது.

உரைநடை இலக்கியமே மக்களுக்கு தகவல்களை மிக விரைவாக விளக்க முடியும். கவிதைகளை மனப்பாடம் செய்து, அவற்றின் பொருளறிந்து கற்பதில் ஏராளமான நேரம் செலவிட வேண்டி இருந்ததால், உரை நடை இலக்கியத்தின் தேவை இன்றியமையான ஒன்றாக இருந்தது.

தமிழின் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இயேசு சபை பாதிரியார்களையே சாரும். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த அவர்கள் முதலில் மொழியைக் கற்றார்கள். அவர்களில் பலர் நல்ல தரமான இலக்கிய நூல்களைப் படைக்குமளவுக்கு மொழியறிவு பெற்றார்கள். கி.பி 1577ல் “கிறிஸ்தவ வேதோபதேசம்” என்னும் உரை நடை நூல் வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளியான முதல் உரைநடை நூல். இந்நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ‘கிறிஸ்தவ வணக்கம்’ என்னும் நூல் ஆன்ரிக் என்னும் பாதிரியாரால் அச்சிடப்பட்டது. அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராபர்ட் நோபிலி, பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வாழ்ந்து வந்த வீரமாமுனிவர் போன்றோர் பல உரை நடை நூல்களை இயற்றினார்கள்.

பதினாறாம் நூற்றாண்டிலேயே உரைநடை நூல் அறிமுகம் ஆகியிருந்தாலும் அது வளரத் துவங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான். அதுவரை மிகவும் குறிப்பிட்ட நூல்கள் மட்டுமே தமிழ் உரை நடை வடிவில் எழுதப்பட்டன. இடைப்பட்ட நூற்றாண்டுகளி உரைநடை வளரவேயில்லை என்பது வியப்பளிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுப் பொறிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டதால் உரைநடை நூல்கள் ஏராளம் வெளிவந்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக எளிய விலையிலும், இலவசமாகவும் நூல்களும் பிரசுரங்களும் அச்சிடப்பட்டன.

கிறிஸ்தவர்களின் புதிய அணுகுமுறை இந்தியாவிலிருந்த மற்ற மதத்தினரை உசுப்பி விட்டது. அவர்களும் தங்கள் பங்கிற்கு நூல்களையும், பிரசுரங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்கள். தமிழ் மொழியில் உரைநடை நூல்கள் ஏராளம் வரத் துவங்கின. இந்த அச்சுநூல்கள் விலையில் மிகவும் குறைவானதாகவும், பல நூல்கள் இலவசமாகவும் இருந்ததால் சமூகத்தின் கீழ்தட்டு மக்களும் மிக எளிதாக நூல்களைப் பெற முடிந்தது. மதங்களின் பிரச்சாரத்தின் வெளிச்சத்தில் தமிழ் உரை நடை வளர்ந்தது.

அச்சுப் புத்தகங்களின் வரவு இலக்கிய வளர்ச்சியில் ஒரு மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் அச்சு ஆரம்பித்தது தமிழ் மொழியில் தான். அதையும் செய்தது இயேசு சபை பாதிரியார்கள் தான். அச்சுப்பொறிகள் முதலில் கேரளாவிலுள்ள கொச்சியில் தான் நிறுவப்பட்டன. அதன்பின்னர் திருநெல்வேலியிலுள்ள புன்னக்காயல் என்னுமிடத்தில் அச்சுப் பொறி ஒன்று நிறுவப்பட்டது. தமிழின் முதல் உரைநடை நூல்கள் இரண்டுமே கேரளாவில் அச்சிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தியாவின் வணிக மாற்றங்கள் அச்சுத் தொழிலில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தின. இயேசு சபைப் பாதிரியார்களை டச்சுக்காரர்கள் விரட்டியடித்தார்கள். எனவே அச்சுத் தொழிலும் முடங்கியது. அதன்பின் ஸீகன் பால்கு என்னும் டேனிஷ் சபையைச் சேர்ந்தவரின் முயற்சியினால் ஜெர்மனியிலிருந்து அச்சுப் பொறிகளும் அச்சு எழுத்துக்களும் வரவழைக்கப்பட்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. 1713ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அச்சுப்பொறி பல நூல்களைப் பதிப்பித்தது. இந்தியர்கள் அச்சுப்பொறி தயாரிக்கக் கூடாது என்னும் சட்டம் கூட அந்த காலத்தில் இருந்தது. அந்த சட்டம் 1835ல் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அச்சுத் தொழில் அசுர வளர்ச்சி கண்டது.

இவ்வாறு கிறிஸ்தவ மதத்தினரின் மதப்பிரச்சாரம் ஒருவகையில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்தது என்றால் அது மிகையல்ல. தமிழ் மீது தணியாத தாகம் கொண்டு இதை அவர்கள் செய்யவில்லை. ஆனால் கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டுமெனில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் தமிழ் மொழியையும் கற்று, மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் நல்ல இலக்கியங்களையும், அச்சு, உரைநடை போன்ற தளங்களையும் விரிவுபடுத்தினார்கள்.

அவர்களில் மிக முக்கியமான சிலரைப் பற்றிய சுவையான செய்திகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

 

Image result for Robert de nobili

பூணூல் போட்ட கிறிஸ்தவர் 
ராபர்ட் டி நோபிலி – தத்துவப் போதக சுவாமிகள்

 

கி.பி 1606 ல் தமிழ்நாட்டுக்கு வந்த நோபிலி அவர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இயேசு சபையைச் சேர்ந்த இவர் தமிழகத்திலுள்ள மதுரைக்கு வந்தபோது தமிழகத்தில் வேரோடிப் போயிருந்த சமயப் பிரிவினைகளை முதலில் கவனித்தார். பெரும்பாலான மத செய்திகள் எல்லாம் அடித்தட்டு மக்களை, அல்லது கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற மக்களை மட்டுமே சென்று சேர்கிறது என்றும், உயர் குல இந்துக்கள் கிறிஸ்தவத்தை நிராகரித்தார்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். அவருடைய பார்வை உயர்குல இந்துக்களின் மேல் விழுந்தது. உயர்குல இந்துக்களை கிறிஸ்தவ மதத்தில் இழுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. உயர்குல இந்துக்கள் மட்டுமே கல்வியறிவுடனும், சமூக மரியாதைக்குரிய மனிதர்களாகவும் இருந்தார்கள். எனவே அவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினால் கிறிஸ்தவம் மிக வேகமாக வளரும் என்பது அவருடைய கணிப்பு. அவர் உயர்குல இந்துக்களின் நடை உடை பாவனைகளையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் முதலில் கண்டறிந்தார். அவர்களுடைய அடையாளங்கள் என்னென்ன என்பதையும், சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களையும் ஆழமாய் கவனித்தார். அவர்களிடம் இருந்த தீண்டாமை என்னும் சாஸ்திரம் தான் அவர்களிடம் கிறிஸ்தவத்தைக் கொண்டு செல்ல மிகப்பெரும் தடையாய் இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

பிராமணர்களைப் படித்த நோபிலி தானும் ஒரு பிராமணர் போல வேடமிட்டார் ! தங்கத்தினாலான பூணூல் அணிந்தார். நெற்றியிலும் மார்பிலும் சந்தனமிட்டார். அசைவ உணவை அறவே ஒதுக்கி சைவ உணவை மட்டுமே உண்டார். தன்னுடைய பெயரையும் தத்துவப் போதக சுவாமிகள் என்று மாற்றிக் கொண்டார். அவருடைய வேடத்தைக் கண்டு சற்றே நம்பினாலும் அவரை பிராமணர் என்று நம்புமளவுக்கு பூர்வீக பிராமணர்கள் முட்டாள்கள் அல்லவே. அவர்கள் அவரை சோதித்தார்கள்.

அவர்களைச் சமாளிக்க நோபிலி ஒரு திட்டமிட்டார். மிகவும் பழைய ஓலை ஒன்றில் சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் எழுதினார். அதில் ரோமில் உள்ள இயேசு சபைப் பாதிரியார்கள் உண்மையிலேயே பூர்வீக பிராமணர்கள் என்று குறிப்பிட்டு அனைவரையும் நம்பச் செய்தார். இப்போது நோபிலி அவர்கள் உயர் குல மக்களோடு உறவாட முடிந்தது. பலருக்கு கிறிஸ்தவ மதத்தைப் பற்றி விளக்கி அவர்களை தன்பால் இழுத்தார்.

தமிழ் மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த இவர் ஏராளம் உரை நடை நூல்களை எழுதினார். பல கிறிஸ்தவத் தத்துவங்களை தமிழ் மொழியில், தமிழ் மக்களுக்காக இவர் எழுதினார். இயேசு நாதர் சரித்திரம், ஞானோபதேச காண்டம், நித்திய ஜீவன் சல்லாபம் உட்பட பதினேழு உரைநடை நூல்களை இவர் தமிழ் மொழியில் எழுதினார்.

இவருடைய இந்த வேட அணுகுமுறையை கிறிஸ்தவத் தலைமையிடம் கண்டித்தது. யாரையும் ஏமாற்றி மனம் மாற்றுதல் தவறு என்று தலைமையிடம் இவரை கடிந்து கொண்டது. தான் யாரையும் ஏமாற்றும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை என்றும், உயர்குல இந்துக்களை நெருங்கிப் பழகும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே அப்படி நடந்து கொண்டதாகவும் நோபிலி விளக்கினார். கிறிஸ்த மதத்தைப் பரப்புவதற்காக தன்னுடைய விருப்பு வெறுப்புகளை விட்டு ஒரு உயர்குல இந்துவைப் போல நடந்து கொண்டது பார்வைக்குத் தவறாக இருந்தாலும் அடிப்படையில் அவர் நிறைவேற்றியது ‘எல்லா இனத்தாருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள்’ என்னும் இயேசுவின் கட்டளையைத் தான் என்று கூறி ரோம் இவர் குற்றமற்றவர் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்த சலசலப்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. உண்மை தெரிந்த உயர்குல இந்துக்கள் இவரைப் புறக்கணித்தார்கள். இவரை எங்கும் சேர்த்துக் கொள்ளவில்லை. தனக்கு மதுரை உயர்குல மக்களிடம் இருந்த ஆதரவு விலகி விட்டதை அறிந்த நோபிலி வட தமிழகத்தை நோக்கி தன்னுடைய பணியைத் இடமாற்றம் செய்தார். கி.பி 1656ல் இவர் சென்னையில் காலமானார்.

Image result for constantine joseph peski

 

புலித்தோலில் அமர்ந்த கிறிஸ்தவர்.
வீரமாமுனிவர் – கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி

 

கி.பி 1700 ல் மதுரைக்கு இத்தாலியிலிருந்து வந்த இயேசு சபையைச் சேர்ந்த இன்னொருவர் பாதிரியார் பெஸ்கி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சிறந்த தமிழ் பண்டிதரான சுப்பிரதீபக் கவிராயரிடம் இவர் தமிழ் பயின்றார். வெறும் வாசிப்பு அனுபவத்துக்காகவோ, பேச்சு அறிவுக்காகவோ இவர் தமிழ் கற்கவில்லை. ஆழமான அறிவு வேண்டுமெனும் வேட்கையுடன் தமிழ் கற்றார். தமிழுடன் சேர்த்து சமஸ்கிருந்தம், தெலுங்கு போன்ற மொழிகளையும் இவர் கற்றறிந்தார்.

இவரும் தன்னுடைய நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு தான் பணி செய்தார். காவி உடையும், தலைக்கு தொப்பியும், நெற்றிக்கு சந்தனமும் இட்டுக் கொண்டு, சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தார் இவர். புலித்தோலில் அமர்ந்து செபமும், தபமும் செய்பவராக இருந்தார். இந்துஸ்தான், பாரசீகம் போன்ற மொழிகளையும் அறிந்திருந்ததால் இவரை மதுரையில் ஆண்டு வந்த சந்தா சாகிபு என்னும் நவாபு தனக்குத் திவானாக ஏற்படுத்தினார்.

தமிழ் மொழியில் சிறப்பு பயிற்சி பெற்ற இவர் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் படித்தார். தமிழ் மொழிக்கு என்னென்ன தேவை என்பதையும் மனதுக்குள் குறித்துக் கொண்டார். அதன் விளைவாக வந்தது தான் தமிழின் முதல் அகராதி ! இவருடைய சதுரகராதியே தமிழில் எழுதப்பட்ட முதல் அகாராதியாகும்.

இவருடைய தேம்பாவணி இன்னும் காலத்தைக் கடந்து நிற்கும் உயர்ந்த இலக்கியமாகிறது. 1726ம் ஆண்டில் இவர் தேம்பாவணியை எழுதினார். கலி வெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்பானை,திருக்காவலூர்க் கலம்பம், அடைக்கல மாலை இவையெல்லாம் இவர் எழுதிய செய்யுள்கள்., இதைத் தவிர வேதியர் ஒழுக்கம், திருச்சபைக் கணிதம், வாமன் கதை உட்பட பல உரை நடை நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழுக்கு பல நன்மைகள் செய்து, தமிழ் மூலம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தன்னாலான பங்களிப்பை அளித்த வீரமாமுனிவர் 1742ல் காலமானார்.

Image result for சீகன் பால்க்

 

ஸீகன் பால்கு

 

கிறிஸ்தவ மதத்திலுள்ள புராட்டஸ்டண்ட் – பிரிவிலிருந்து முதன் முதலாய் இந்தியாவுக்கு வருகை தந்தவர் இவர் தான். தன்னுடைய நண்பர் பிளீஷௌ என்பவருடன் 1705ம் ஆண்டு தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தார் இவர். ஜெர்மன் நாட்டிலுள்ள புல்ஸ்னிட்ஸ் என்னும் நகரில் இவர் பிறந்தார். டென்மார்க் நாட்டின் அரசன் நாலாம் ப்ரடரிக் என்வர் தமிழ்நாட்டிற்கு நல்ல மத போதகர்களை அனுப்பவேண்டும் என்று விரும்பி அழைப்பு விடுத்தான். இதைக் கேள்விப்பட்ட ஜெர்மனி நாட்டு சீகன் பால்க் தன்னுடைய நண்பருடன் டென்மார்க் நாட்டு அரசனைச் சென்று சந்தித்து தமிழ்நாட்டுக்குப் பயணமானார்கள்.

சிறுவயதிலிருந்தே இறை பக்தியில் சிறந்து விளங்கிய சீகன் பால்க் தமிழ்நாட்டுல் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கத் துவங்கினார். மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருந்தது கற்றுக் கொண்ட தமிழை வைத்து இறை பணி செய்து வந்தார். வீரமாமுனிவரைப் போல இவர் தமிழில் பெரும் புலமை பெறவில்லை மதத்தை எடுத்துரைக்குமளவுக்கு கற்றிருந்தார்.

இவர் செய்த மிகப் பெரும் பணி ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரமும் தமிழ் எழுத்துக்களும் வரவழைத்தது தான். இதன்மூலம் ஏராளமான உரை நடை நூல்கள் வெளியிடப்பட்டன. இவருடைய காலத்தில் தான் உரைநடை நூல்கள் பொதுமக்களிடையே பெருமளவு புழங்கின. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் இந்த அச்சு இயந்திரங்கள் உதவின. ஆலயங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தியும், கிறிஸ்தவ மதம் சார்ந்த நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் இவர் கிறிஸ்தவ மதம் வளர மிகப்பெரும் தூணாக நின்றார். இவர் மூலமாகத் தான் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவமதம் இந்தியாவில் முளை விட்டது. 1719ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

மதப் பிரச்சாரத்தில் மேலும் சிலர்

சீகன் பால்க் கிற்குப் பின் பிரான்சிஸ் வயிட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேயர் கிறிஸ்த மதப் பரப்புதலில் ஈடுபட்டார். இவர் வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள் போன்றவற்றை அச்சில் வெளியிட்டு அவற்றுக்கு மறு வாழ்வளித்தார். திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ் வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாய் இருந்தார். பலரை கிறிஸ்தவ மதத்துக்குள் இணைத்த இவர் 1819ல் காலமானார்.

இவருக்குப் பின் சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் இரேனியுஸ் என்னும் ஜெர்மனியர் 1814ல் சென்னைக்கு வந்தார். இவர் லூத்தரன் மிஷன் என்னும் கிறிஸ்தவ மதப் பிரிவைச் சார்ந்தவர். இவர் தன்னுடைய இறைபணியை பெரும்பாலும் மனித நேய பணிகளின் மூலமாக வெளிப்படுத்தினார். விதவைகள் மறுவாழ்வு, பள்ளிக்கூடங்கள் கட்ட நிலம் வாங்கிக் கொடுத்தல், ஆலயங்கள் கட்ட உதவுதல், ஏழைகளுக்கு வறுமை போக்க உதவுதல் என பல நல்ல செயல்கள் செய்தார். மக்களோடு மக்களாக ஒன்றித்து வாழ்ந்தார். இவருடைய பணிகளில் கவரப்பட்டு பலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டனர். 1838ம் ஆண்டு இவர் காலமானார்.

அயர்லாந்துக் காரரான ராபர்ட் கால்ட்வெல் தென் தமிழகத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உருவாக பெரும் பங்காற்றியவர். திருநெல்வேலையை அடுத்துள்ள பகுதிகளில் இவருடைய போதனைகள் காரணமாக சில நூறுகளாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியது. பின் அங்கேயே ஒரு சபையில் இறை பணி ஆற்றிவந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ்ப் பணியும் செய்திருக்கிறார். இவருடைய நூலில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதை விளக்கமாக எழுதியிருந்தார். திராவிட மொழிகள் ஒரே மூலத்தைச் சேர்ந்தவை என்பதை நூலாக்கிய பெருமை இவரையே சாரும். நற்கருணைத் தியான மாலை, தாமரைத் தடாகம், போன்றவை இவர் இயற்றிய பிற நூல்களாகும். 1891ம் ஆண்டு இவர் காலமானார்.

Advertisements


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு 21 : நாடுகளில் கிறிஸ்தவம்

  Image result for Christianity in Britain

பிரிட்டனில் கிறிஸ்தவம்

பிரிட்டனுக்குள் எப்போது கிறிஸ்தவம் நுழைந்தது என்பதைக் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் பிரிட்டனில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கி.பி 286ம் ஆண்டு அல்பான் என்பவர் கிறிஸ்தவராக இருந்த காரணத்திற்காய் சிரச்சேதம் செய்யப்பட்டார். படைவீரராய் இருந்த அவர் காயமடைந்த ஒரு குருவானவருக்கு உதவி செய்து அவரை படையின் கையிலிருந்து தப்புவித்தார்.

படைவீரர்கள் வந்து விசாரித்தபோது துணிச்சலாய் தான் ஒரு கிறிஸ்தவன் என்றும் குருவை தானே தப்பித்ததாகவும் சொல்ல சிரச்சேதம் செய்யப்பட்டார் என்கிறது வரலாறு. அந்த இடத்தில் புனித அல்பான் ஆலயம் அமைந்துள்ளது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அரிமத்தியா ஊரானாகிய சீமோன் எனும் சீடரால் பிரிட்டிஷ் தீவுகளில் கிறிஸ்தவம் நுழைந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்திகள் உலவுகின்றன.

வணிகர்கள் மூலமாக கிறிஸ்தவம் அங்கே நுழைந்திருக்கவோ, ரோம் அரசு பிரிட்டன் மீது போர் தொடுத்தபின் கிறிஸ்தவம் பரவியிருக்கவோ கூட வாய்ப்புகள் உள்ளன.

ஆரோன் , ஜூலியஸ் எனும் இருவர் கூட கிறிஸ்தவ மதத்தினரானதால் படுகொலை செய்யப்பட்ட வரலாறு உண்டு. எனவே துவக்க காலத்திலேயே கிறிஸ்தவம் பிரிட்டிஷ் தீவுகளில் நுழைந்திருக்கிறது.

கி.பி 312ல் நடந்த ஆர்ல்ஸ் கவுன்சிலில் லண்டனிலிருந்தும், யார்க்கிலுமிருந்தும் இரண்டு பேராயர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். எனவே அமைப்பு ரீதியான கிறிஸ்தவம் மூன்றாம் நூற்றாண்டுகளின் துவக்கத்திலேயே பிரிட்டனில் உண்டு என்பது தெளிவாகிறது.

கிறிஸ்தவத்தின் கொள்கைப் பிரிவுகளில் பிரிந்தவர்களைக் குறித்த குறிப்புகளும் இந்த நூற்றாண்டு சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. ஹிலாரி, ஜெரோம், அடனாஸ் போன்றோரின் குறிப்புகளில் அவர்கள் பிரிவுக் கொள்கைகளில் நுழைந்து விடவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ரோமர்கள் பிரிட்டனிலிருந்து கி.பி 418களில் பிரிந்தபோது பெலாகியு கொள்கை பரவியிருந்ததாக அரசியல் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன. அந்த கொள்கையின் பிடியிலிருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்ற வெளியிடங்களிலிருந்து, குறிப்பாக கால் என்னுமிடத்திலிருந்து பேராயர்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

சாக்சன்ஸ் மற்றும் ஆங்கில்ஸ் தாக்குதல் கி.பி.449 களில் நடந்தபோது கிறிஸ்தவர்கள் வேல்ஸ், கார்ன்வால் போன்ற இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
வேல்ஸ்லிலுள்ள பாங்கார் என்னுமிடத்தில் துறவற மடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டாயிரம் துறவிகள் அங்கே தங்கினர்.

புனித பாட் ரிக் அயர்லாந்தில் கிறிஸ்தவம் வளர முக்கிய காரணியாக இருந்தார். வேல்ஸ்சில் ஒரு துறவியின் மகனாக 389ல் பிறந்த இவர் அயர்லாந்தில் அடிமையாக விற்கப்பட்டு பல ஆண்டுகள் அங்கே துன்புற்றவர்.

அங்கிருந்து தப்பி ஐரோப்பா சென்று கிறிஸ்தவ துறவி மடத்தில் இணைந்தார். தனது நாற்பத்து மூன்றாவது வயதில் குருப்பட்டம் பெற்றபின் தான் அடிமையாய் வாழ்ந்த அயர்லாந்திற்கே சென்றார். அங்கே தனது மரணம் வரை சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

அவருடைய முயற்சியால் கிறிஸ்தவம் அயர்லாந்தில் முழு மூச்சாக வளர்ந்தது. ஒரு காலகட்டத்தில் ‘புனிதர்களின் தீவு’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அயர்லாந்து கிறிஸ்தவத் துறவிகளால் நிறைந்தது. சுமார் 435 பேராயர்கள் கிறிஸ்தவக் குரு மடங்களை நிர்வாகித்தனர்.

கொலம்பா என்பவரின் முயற்சியால் கிறிஸ்தவம் ஸ்காட்லாந்தில் பரவியது. இவர் கிபி 521ல் பிறந்த இவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பாகத்தை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலேயே செலவிட்டார்.

இவருக்கு முன்பாகவே நினியன் என்பவர் நாலாம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே கிறிஸ்தவத்தை ஸ்காட்லாந்தில் பரப்பியிருக்கிறார். இவர் ஸ்காட்லாந்தின் தென்பாகத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். கொலம்பா வடபாகத்தில் தன்னுடைய பணியை மேற்கொண்டார்.

ஸ்காட்லாந்திலும் கிறிஸ்தவம் துறவற சபை மூலமாகவே வளர்ந்தது,.

போப் கிரகோரி ஸ்காட்லாந்தில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக பெரும் முயற்சிகள் செய்தார். அகஸ்டின் எனும் குருவானவர் ஸ்காட்லாந்திற்கு வந்தார். அவருடன் வேறு சில துறவியரும் கிபி 597ல் ஸ்காட்லாந்தின் கெண்ட் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு மன்னனாயிருந்த எட்வர்ட் கிறிஸ்தவ மதத்தை அறிந்திருந்தார். எனவே அகஸ்டினும் அவருடன் வந்த குருமார்களுமாக சேர்ந்து கிறிஸ்தவத்தை விரைவாகப் பரப்பினர்.

பிரிட்டன் முழுவதுமே போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டன. எனவே தலைமை குறித்த விவாதங்கள் பெருமளவில் எழவில்லை.

**************************************************************************************************************************************************

ஜெர்மனியில் கிறிஸ்தவம்
**************************************************************************************************************************************************
ஜெர்மனியில் கிறிஸ்தவம் நுழைந்த வரலாறு பெரும்பாலும் இங்கிலாந்து நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்களைச் சார்ந்தே இருந்தது. ஹாலந்து, ஜெர்மனி போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் நுழைய இங்கிலாந்து சபையின் பங்களிப்பே முக்கியமானது.

வில்லிபிராட், வில்பிரட் எனும் பானிபேஸ் என்னும் இருவருடைய வரலாறும் ஜெர்மனியில் கிறிஸ்தவம் வளர்ந்த வரலாறோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது.

வில்லிபிராட் தன்னுடைய கிறிஸ்தவ மதப் பரப்புதலை பெல்ஜியம், ஹாலந்து போன்ற இடங்களில் செய்தார். அந்த நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் – பிரிசீய குலத்தினரிடையே இவர்களுடைய கிறிஸ்தவ மத போதனை முழு மூச்சாய் நடந்தது.

தனது முப்பத்து மூன்றாவது வயதில் ஹாலந்துக்குச் சென்ற வில்லிபிராட் தமது எண்பத்து ஓராவது வயது வரை கடுமையாக உழைத்தார். அவருடன் ஒரு குழுவாக பல குருக்கள் ஹாலந்துக்குச் சென்று மதப் பணி ஆற்றினார்கள்.

போப் அவருக்கு முழுமையான ஆதரவு அளித்தார். அவரை ஒரு பேராயராகவும் நியமித்தார்.

வில்பிரட் தன்னுடைய பணிவாழ்க்கையில் பானிபேஸ் என்றே அழைக்கப்பட்டார். இவருடைய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. 718ல் போப்பின் அனுமதியுடன் ஜெர்மனிக்கு வந்த வில்பிரட் தன்னுடைய பணியை செவ்வனே செய்தார். அவருடைய உழைப்பினால் பல கிறிஸ்தவக் குழுக்கள் ஜெர்மனியில் புதிதாய் தோன்றின.

ஜெர்மனியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ இயக்கங்களையும் போப்பின் அதிகாரத்திற்குக் கீழே இணைத்த பெருமையும் இவரையே சாரும். ஒரே தலைமைக்கு இவர் மிகவும் மரியாதை செலுத்தினார்.

எஸ்ஸென் நாட்டில் ஒரு மிகப்பெரிய மரம் இருந்தது. அந்த மரம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும், அதை வெட்டினாலோ அதை பழித்துப் பேசினாலோ மரணம் நிச்சயம் என்று காலம் காலமாக நம்பிக்கை அங்கே உலவி வந்தது.

வில்பிரட் தன்னுடைய போதனைக்குக் குறுக்கே நின்ற அந்த மரத்தைப் பார்த்தார். இந்த மரத்தை நான் வெட்டி வீழ்த்துகிறேன். உங்கள் கடவுள் உண்மையானவராய் இருந்தால் என்னைக் கொல்லட்டும் என்று சவால் விட்டார்.

நாட்டு மக்கள் பெரும் திரளாக மரத்தினருகே குவிந்தனர். வில்பிரட் தன்னுடைய உடன் பணியாளருடன் மரத்தருகே வந்தார். மக்களிடம் சிறு உரையாற்றிவிட்டு மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

சுற்றியிருந்த மக்கள் அதிர்ந்தனர். வில்பிரட் கண்டிப்பாக இறந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களுடைய நம்பிக்கைக்கு கோடரி அங்கே வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் அந்த பகுதியில் நுழைய அது ஒரு காரணமாயிற்று.

வில்பிரட் ஜெர்மனியில் துறவற சபைகளையும் ஏற்படுத்தினார். அவை பெனடிக் குழுவைப் போல செயல் பட்டன. போப்பின் அதிகாரத்துக்கும், வழிகாட்டலுக்கும் உட்பட்டே அவருடைய பணிகள் இருந்தன.

கி.பி754 ஜூன் ஐந்தாம் தியதி வில்பிரட் தன்னுடைய உடன் பணியாளரோடு திருமுழுக்கு கொடுக்க வந்திருந்தார். திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவத்தில் சேர பலர் தயாராய் இருந்தார்கள். அப்போது பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீது கொடூரமாகத் தாக்கினர்.

வில்பிரட் படுகொலையானார். அவருடைய உடன் பணியாளரும் மாண்டனர். வில்பிரட் மரணம் வரை கிறிஸ்தவ மதத்துக்காய் சிறப்பாகப் பணியாற்றியதால் ஜெர்மனியில் அப்போஸ்தலர் எனும் பெயரைப் பெற்றார்.

பிற நாடுகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி

அன்ஸ்காரின் கிறிஸ்தவ மத பரப்புப் பணி குறிப்பிடத்தக்க இடம் வகிக்கிறது. ஐரோப்பாவின் வட பகுதிகளில் இவருடைய முயற்சியினால் கிறிஸ்தவம் நுழைந்தது, வளர்ந்தது.

அன்ஸ்காரின் பணி முதலின் டென்மார்க்கில் ஆரம்பமானது. ஆனால் டென்மார்க் நகரில் அவருடைய கிறிஸ்தவ மதப்பணி பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அப்போது தான் ஸ்வீடன் நாட்டு மன்னனின் அழைப்பு அன்ஸ்காருக்கு வந்தது.

அன்ஸ்கார் ஸ்வீடன் சென்றார். அங்குள்ள மக்களுக்கு குறிப்பாக வணிகர்களுக்கு அவர் கிறிஸ்தவத்தைப் போதித்தார். அங்கே ஓராண்டு காலம் சிறப்பான பணி செய்தபின் ஹாம்பர்க் சென்றார். அது ஜெர்மனியின் ஒரு துறைமுக நகரம்.

கி.பி 865ம் ஆண்டு வரை இவருடைய பணி தொடர்ந்தது. பலரை குருக்களாகவும், மறை பரப்புக் கருவிகளாகவும் இவர் தயாராக்கினார். இவரிடமிருந்து பலர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று போதித்தனர்.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன் எனும் மூன்று நாடுகளிலும் கிறிஸ்தவம் அடுத்த நூற்றாண்டில் வளர அன்ஸ்காரின் அடித்தளமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென கருதப்படுகிறது.

கிரீமியா நாட்டு மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தைக் கொண்டு சென்றவர்கள் இருவர். ஒருவர் சிரில், இன்னொருவர் அவருடைய சகோதரர் மெதாடியஸ். குறிப்பாக கிரீமியா நாட்டில் சிரில் செய்த கிறிஸ்தவ அடித்தளப் பணி காரணமாக அங்கே ஒரு சபை உருவானது.

கிரீமியா கி.பி 1016ம் ஆண்டு ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்படி ரஷ்ய நாட்டிலும் கிறிஸ்தவ மதத்தின் சிறு முளை எழுந்தது. ரஷ்ய பழங்குடியினரின் மொழியைக் கற்ற சிரில் அந்த மொழியில் பைபிளின் ஒரு பாகத்தை எழுதி பணி செய்தார்.

ரஷ்ய மன்னன் வால்டிமோர் கிபி 988ல் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். அதன்பின் ரஷ்யாவில் கிறிஸ்தவம் வளர்ந்தது. அவருடைய இறப்புக்கு முன்பே கிறிஸ்தவம் ரஷ்யாவில் மூன்று பெரும் பிரிவுகளுக்குக் கீழ் ஒன்றிணைந்தது.

மெதாடியஸ் பல்கேரிய நாட்டு மன்னனிடம் சென்று கிறிஸ்தவ மதத்தைக் குறித்து உரையாடினார். முக்கியமாக இறுதித் தீர்ப்பைக் குறித்து அவர் மன்னனிடம் எச்சரிக்கை செய்தார். அணையா நெருப்பில் வேக வேண்டுமோ எனும் பயத்தின் காரணமாகவே மன்னன் கிறிஸ்தவனானான். மன்னன் கிறிஸ்தவன் ஆனதனால் நாட்டில் பலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள்.

எகிப்தை ஒட்டிய பகுதிகளில் இருந்த ஆதிகால கிறிஸ்தவம் இஸ்லாமியர்களின் ஆட்சியின் கீழ் அழிந்து விட்டது. பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வணிகர்களால் அங்கு கிறிஸ்தவம் நுழைந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் வந்தபோது கிறிஸ்தவம் பரவியது.

அல்ஜீரியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐம்பது இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குள் வந்தபோது கிறிஸ்தவம் அங்கே பரவியது.

பாலஸ்தீனாவிலும் கிறிஸ்தவம் முற்றிலும் அழியவில்லை. கத்தோலிக்க சபையினர் அங்கே காணப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட் சபையினரும் நுழைந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்தவ வரலாறு 22 : புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியப் பிரிவுகள்.

 

Image result for vatican church

புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்கத் தலைமைக்கும் கொள்கைக்கும் எதிராக உருவானது. கத்தோலிக்க சபையின் திருவருட்சாதனங்களுக்குத் தரப்படும் முன்னுரிமைகள், அன்னை மரியாள் மரியாதை, புனிதர் மரியாதை போன்றவை எதிர்ப்புக்கு ஆளாயின. போப்பின் அதிகார மையத்தையும் புராட்டஸ்ட் சபையினர் எதிர்த்தனர்.

புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்கத்தை விட்டுப் பிரிந்தபின் தங்களுக்குள்ளேயே கருத்து மோதல்களும், மீறல்களும் கொண்டன. அப்போதெல்லாம் புதுப்புது சபைகள் தோன்றின. பல்லாயிரக்கணக்கான கிளைச் சபைகளோடு விளங்கும் புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியமான சில பிரிவுகள் இவை.

1 சொசினியானிசம்

சொசீனியஸ் என்பவரால் இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்து தெய்வீகத் தன்மை உடையவரல்ல. அவர் மனிதரே. அவருடைய வாழ்க்கை முறையே அவரை உயிர்த்தெழ வைத்தது.

கிறிஸ்துவின் மரணமோ உயிர்ப்போ உலகிற்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. கிறிஸ்துவின் வாழ்க்கையை பின்பற்றுதலும், அவருடைய கீழ்ப்படிதலை கற்றுக் கொள்வதுமே கிறிஸ்தவனின் கடமை என்று போதிக்கப்பட்டது.

இந்த சபைப்பிரிவினர் கிறிஸ்தவத்தின் அடிப்படையையே எதிர்த்ததனால் வளர முடியாமல் வீழ்ந்தனர்.

2. அர்மீனியானிசம்

ஜேக்கப் ஆர்மீனியஸ் என்பவரால் ஏற்பட்ட சபை ஆர்மீனியானிசம் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சபையிலேயே பின்னர் பிரிவுகள் ஏற்பட்டன. இந்தச் சபையினர் முக்கியமாக கடவுளின் திட்டங்களைக் குறித்து பேசினார்கள்.

விதி என்று நாம் சொல்லும் கருத்தே அவர்களுடைய சபையிலும் காணப்பட்டது. நமக்கு நடப்பது எல்லாம் இறைவன் ஏற்கனவே முன்கூட்டி திட்டமிட்டு நடக்கிறதா ? யார் மீட்படைய வேண்டும் என்பதை முதலிலேயே கணித்து, அதன் பின்னர் நிகழ்வுகள் நடக்கின்றனவா என்பது போன்ற விஷயங்கள் இந்த சபையில் முன்னிறுத்தப் பட்டன.

நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இங்கிலாந்திலும் இந்த சபை பரவியது.

3. பியூரிட்டான்ஸ்

கிறிஸ்தவத்தில் நடைபெற்று வந்த பல செயல்களை எதிர்த்தவர்கள் தனியே ஆரம்பித்தது தான் பியூரிட்டான்ஸ் சபை. இவர்கள் திருமுழுக்கு கொடுக்கும் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடக் கூடாது என்று வாதிட்டனர்.

குருக்கள் மக்களைப் போல இருக்க வேண்டும். அவர்களை வேறுபடுத்திக் காட்டும் ஆடைகள் அணியத் தேவையில்லை என்பதும் இவர்களுடைய வாதமாய் இருந்தது.

4. ஸெப்பராஸ்டிஸ்ட்ஸ்

இவர்கள் சபைகள் தனித்து இயங்க வேண்டும் எனும் கொள்கையுடையவர்கள். அமைப்பு ரீதியாக சபை இருக்க வேண்டிய தேவையில்லை. சபைகள் தனித்தனியே அவரவர்களுக்குப் பிடித்த தலைவர்களை கொண்டு இயங்க வேண்டும்.

சபை எந்த அரசுக்கும் பணியக் கூடாது. அரசு வேறு மதம் வேறு. இந்தச் சபையில் இருப்பவர்களுக்கு ஒரே தலைவர் இயேசுவே என்ற கொள்கையை வைத்திருந்தார்கள்.

5. பிரஸ்பத்தீரியன்ஸ்

ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்பத்தீரியன்ஸ் என்னும் பிரிவினர் இருந்தார்கள். இவர்களும் கொள்கை ரீதியாக பல கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களை வெறுத்தார்கள். இவர்களும் இயேசுவின் தலைமை என்பதை மட்டுமே முக்கியப் படுத்தினார்கள்.

6. குவேக்கர் சபை

குவேக்கர் சபையினர் உள் மனதில் இயேசு வெளிப்படுகிறார் என்றனர். விவிலியம் கூறும் இரண்டாம் வருகையும், வெளிப்படுத்துதலும் முக்கியமில்லை. ஒவ்வொருவரின் மனதிலும் இறைவன் ஒளியாய் இருக்கிறார்.

மற்ற பணிகள் எதுவும் முக்கியமில்லை நம்முடைய உள்ளத்தின் ஒளியைப் பாதுகாக்க வேண்டும். எனவே திருச்சடங்குகள் ஏதும் தேவையில்லை. தனியே ஆன்மீகப் பணி செய்ய வேண்டும் என்றனர்

இந்த சபைப் பிரிவினர் வேகமாக வளர்ந்தனர். வேகமாக இந்த பிரிவு வளர்ந்ததால் பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த சபை ஒடுக்கப்பட்டது.

7. அனபாப்டிஸ்ட்

இவர்கள் திருமுழுக்கு குறித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்கள். குழந்தைகளுக்கு திருமுழுக்கு தேவையில்லை என்பது இவர்களுடைய உறுதியான கொள்கையாய் இருந்தது.

பெரியவர்கள் ஆனபின் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தால் போதுமானது. திருமுழுக்கு கொடுத்தபின் அவர்கள் கிறிஸ்தவ நிலைக்குள் வருவார்கள். கிறிஸ்தவன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனுக்கு அரசு ரீதியிலான காரியங்களில் ஈடுபாடு கூடாது என்றனர்.

கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளான லூத்தரன், கத்தோலிக்கம் போன்றவர்கள் மீது இவர்கள் கடுமையான விமர்சனம் வைத்ததால் இவர்கள் வெறுக்கப்பட்டனர்.

8. பக்தி இயக்கம்

நற்செய்தி அறிவித்தலிலும் பக்தி முயற்சிகளும் இங்கு முன்னிறுத்தப் பட்டன. வாழ்க்கையோடு சேர்ந்த ஆன்மீகம் போதிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்தவன் என்பது செயலில் வெளிப்பட வேண்டும் என போதித்தனர்.

இவர்களுடைய சபை ஜெர்மனியில் புகழ் பெற்றது. இந்த சபையிலிருந்து பலர் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார்கள். இந்தியா வந்த சீகன் பால்கு என்பவர் இந்த சபையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்கள் பல்வேறு விதமான விவிலிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.

9. மொரேவிய சபை

மொரேவிய சபையில் நற்செய்தி பரப்புதல் முக்கியமாய் இருந்தது. ஒழுங்கு முறையுடன் கூடிய திட்டமிட்ட ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டில் பல இடங்களுக்கும் கிறிஸ்தவம் செல்ல வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய சிந்தனையாய் இருந்தது.

நற்செய்தி அறிவிக்க பல இடங்கள் இருந்தாலும் இவர்கள் தேர்வு செய்யும் இடங்கள் மிகவும் கடினமான இடங்களாய் இருந்தன. கடினமான இடங்களில் கிறிஸ்தவத்தை தாங்கள் கொண்டு சென்றால் மற்ற இடங்களுக்கு பிறர் கொண்டு செல்வார்கள் என்பது இவர்களுடைய திட்டம்.

10 மெதடிஸ்ட் சபை

கிறிஸ்தவ சபைகளில் மெதடிஸ்ட் சபை முக்கியமான ஒன்று. இவர்களுடைய சபையின் நோக்கம் நற்செய்தி அறிவித்தலாகவே இருந்தது. குறிப்பாக இவர்கள் சிறைச்சாலைகளில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என விரும்பினார்கள்.

பிற்காலத்தில் அதிகமான பிரிவுகளும், பல இயக்கங்களும் மெதடிஸ்ட் சபையிலிருந்து தோன்றின. இவர்கள் சிறுவர்களுக்கு போதிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

11. பிராட் சர்ச் பார்ட்டி

இவர்கள் சபையின் முக்கியமான ஆன்மீக மலர்ச்சி மனிதனுக்குள் வளர வேண்டும் என போதிக்கப்பட்டது. நற்கருணை போன்ற கிறிஸ்தவ வழக்கங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை இவர்கள்.

சபையின் திரு அருட்சாதனங்களை விட ஆன்மீக விழிப்புணர்வே தேவை என்றனர். அறிவுக் கோட்பாடுகள், விவாதங்கள் தேவையில்லை என்றனர். விவிலியத்தின் கருத்துக்களை விவாதிப்பதை விட தவத்தில் இறையை காண வேண்டும் என போதித்தனர்.

இங்கிலாந்தில் துவங்கிய இந்த சபை அதிக வளர்ச்சியடையவில்லை. ஆனால் வேறு சபைகள் தோன்ற இந்த சபை காரணமாய் இருந்தது எனலாம். குறிப்பாக ஆக்ஸ்போர்ட் இயக்கத்தினர் இந்த சபையிலிருந்தே தோன்றினர்.

12. ஆங்கிலேய கத்தோலிக்கச் சபை அல்லது ஆக்ஸ்போர்ட் இயக்கம்

இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், புராட்டஸ்டண்ட் பிரிவினருக்கும் இடையே ஒரு பாலமாக இந்த சபை விளங்கும் என கூறிக் கொண்டனர். திவ்ய அருட்சாதனங்களான நற்கருணை போன்றவை தேவை என போதித்தனர். மெத்டிஸ்ட் சபையினரை தங்கள் எதிரிகளாய் பாவித்தனர்.

இவர்களுடைய சிந்தனை பெரும்பாலும் கத்தோலிக்க சபையைச் சார்ந்து இருந்ததால் மற்ற பிரிவினர் இவர்களை எதிர்த்தார்கள். எனவே இந்த சபையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

13 கத்தோலிக்க அப்போஸ்தலத் திருச்சபை

ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் சில இடங்களில் இந்த திருச்சபை பரவியது. இவர்களுடைய சபையில் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டவர் பன்னிரண்டு பேர் இருந்தனர்.

அப்போஸ்தலர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களுடைய முக்கிய நோக்கம் இரண்டாம் வருகைக்கான தங்களைத் தயாரித்துக் கொள்வதும், அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதுமாய் இருந்தது.

14 பிளைமவுத் பிரதரன் சபை

இவர்கள் குருக்கள் தேவையில்லை, தலைமை தேவையில்லை என்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற இடங்களில் இவர்களுடைய சபை பெருகியது. இவர்கள் விசுவாசப் பிரமாணம் தேவையில்லை. விசுவாசம் மட்டுமே போதும். தூய ஆவியானவரே அனைவரையும் ஒன்றாய் இணைக்கிறார் என்றனர்.

15. இரட்சண்ய சேனை

இது மெதடிஸ்ட் சபையிலிருந்து தோன்றிய சபை எனலாம். காரணம் இதை ஆரம்பித்தவர் மெத்தடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர். இவர் சபை ஒரு இராணுவத்தைப் போன்றது என்பதைக் குறிக்கும் விதமாக சேனை என்னும் பெயரை வைத்தார்.

கிறிஸ்தவ மத சிந்தனைகளை தெருவோரங்களில் பிரசங்கிப்பது இந்த சபையினரின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாய் இருந்தது. இங்கிலாந்தில் தோன்றிய இந்த சபை பல நாடுகளுக்கும் பரவியது.

16 லூத்தரன் சபை

லூத்தரன் சபையும் பழமையான வரலாறு கொண்டது. வழிபாடுகளைப் பொறுத்தவரை இவர்களுக்கும் கத்தோலிக்க மதத்தினருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் திவ்ய அருட்சாதனங்கள், அன்னை மரியாள் போன்ற விஷயங்களில் வேறுபடுகின்றனர்.

லூத்தரன் சபை இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது.

17. பெந்தே கோஸ்தே சபை

இவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக அதிகமாய் பிரார்த்திப்பவர்கள். இவர்களுடைய கூட்டங்களில் தூய ஆவிக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆவியில் ஒன்றித்திருத்தல், அன்னிய பாஷ பேசுதல், உற்சாகமாய் பாடுதல் என இவர்களுடைய வழிபாடுகள் இருக்கும்.

பெந்தேகோஸ்தே என்பது இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாள் சீடர்கள் மேல் தூய ஆவியானவர் நெருப்பு வடிவில் இறங்கிய நாளைக் குறிக்கிறது. அதே போன்ற இன்னொரு நாள் விரைவில் வரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

18. அஸெம்பிளீஸ் ஆஃப் காட்

இந்த சபை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்பமானது. பிரசங்கம் என்பது இந்த சபைகளில் முக்கியப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் பாட சாலைகள், குழுக்கள், நற்செய்தி அறிவித்தல் என பல பணிகளைச் செய்கின்றனர். இவர்கள் மிக விரைவாகப் பரவும் ஒரு சபையினர் என்பது குறிப்பிடத் தக்கது.

19. அட்வெண்ட் சபை.

அட்வெண்ட் சபை வில்லியம் மில்லர் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இவர் இயேசுவின் இரண்டாம் வருகை 1843ம் ஆண்டு நிகழும் என தீர்க்கத் தரிசனம் சொன்னார். எனவே இவர் சார்ந்திருந்த பாப்டிஸ்ட் சபையில் பெரும் புகழைப் பெற்றார்.

மறை நூலை மிக நுட்பமாக ஆராய்ந்ததால் இந்த முடிவு கிடைத்ததாக அவர் சொன்னார். ஆனால் அந்த ஆண்டு ஏதும் நிகழவில்லை. எனவே மீண்டும் ஆய்ந்து 1844ல் இரண்டாம் வருகை நிகழும் என்றார். அதுவும் நிகழவில்லை. எனவே அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சபை மக்களால் எதிர்ப்புக்கு ஆளானார்கள்.

எதிர்ப்புக்கு உள்ளான இவர்கள் தனியே போய் அட்வெண்ட் சபை என்ற ஒன்றை ஆரம்பித்தனர்.

20 யஹோவா சபை

இவர்கள் கடவுளை யஹோவா என்றே அழைத்தனர். நரக வேதனை என்ற ஒன்று கிடையாது என போதித்தனர். இவர்களுடைய சிந்தனைப்படி இயேசுவின் இரண்டாம் வருகை 1874லேயே நடந்து விட்டது. இப்போது நடப்பது இறைவனின் ஆயிரம் ஆண்டு ஆட்சி என்றனர். இயேசுவை அறைந்த சிலுவை + வடிவிலானது அல்ல ஒரு நேர்கோடு போன்றது என்றெல்லாம் இவர்கள் பல சிந்தனைகள் கொண்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட சில முக்கியச் சபைகளைத் தவிரவும் ஆயிரமாயிரம் கிளை சபைகள் புராட்டஸ்டண்ட் சபைப்பிரிவில் தோன்றின. இவர்கள் பல பாகங்களுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். கத்தோலிக்க சபையைத் தவிர்த்த அனைவரும் புராட்டஸ்டண்ட் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் பல சபையினர் இந்த இரண்டு பிரிவுகளையுமே வெறுத்து தனியே கிறிஸ்தவப் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் 1995ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரக் கணக்குப் படி சுமார் 968,000,000 கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், 395,867,000 புராட்டஸ்டண்ட் பிரிவினரும், 275,583,000 மற்ற பிரிவினரும், 217,948,000 ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களும், 70,530,000 ஆங்கிலிக்கன்ஸும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard