New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?
Permalink  
 


வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்? (Post No.3624)

4bb2d-valluva-nayanar.jpg?w=600

Written by London swaminathan

 

Date: 10 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-56

 

Post No. 3624

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திருவள்ளுவரின் பழைய வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது போலவே அவருடைய பெயர்களும், திருவள்ளுவ மாலையில் உள்ள 50-க்கும் மேலான செய்யுட்களும் மறைக்கப்பட்டு விட்டன; மறக்கப்பட்டும் விட்டன. இன்று அவருடைய 11 பெயர்களை மட்டும் ஆராய்வோம்.

 

அவருடைய 11 பெயர்கள்

 

திருவள்ளுவர்

தேவர்

முதற்பாவலர்

மாதாநுபங்கி

தெய்வப்புலவர்

செந்நாப்போதார்

பெருநாவலர்

நான்முகனார்

புலவர்

பொய்யில் புலவர்

நாயனார்

 

இனி இதன் விளக்கங்களைக் காண்போம்

 743ef-valluvar2biyengar.jpg?w=600

1.திருவள்ளுவர்

வள்ளுவர் என்பது ஒரு ஜாதியின் பெயர் என்றும் அந்த ஜாதியினர் அரசனின் ஆணைகளை யானை மீது சென்று பறையறிவித்து பிரகடனம் செய்வர் என்றும் கூறுவர்.

மற்றொரு பொருள்:- திரு என்பது உயர்வைக் குறிக்கும்; வள்ளுவர் என்பது வண்மையுடையவர் எனப் பொருள்படும்.

 

வேத சாஸ்திரங்களில் இலை மறை காய்போல இருந்த அரிய பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்லி தமிழ் வேதம் எனப்படும் திருக்குறளை எழுதியதால் இப்பெயர் பெற்றார் என்பாரும் உளர்.

வள்ளுவர்- வண்மையென்னும் பண்பினடியாய்ப் பிறந்த பெயர்; உ-சாரியை

 

2.தேவர்

தெய்வத்தனமையை உடையவர். மனிதனுக்கும் மேலாக தேவர் என்னும் நிலையில் வைத்துக் கொண்டாடப்படுபவர்; முனிவர் போல ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தவர். திருவள்ளுவ மாலையில் உறையூர் முதுகூற்றனார், “தேவிற் சிறந்த திருவள்ளுவர் என்று கூறுவது, இதை உறுதி செய்கிறது.

 

3.முதற்பாவலர்

முதன்மையுடைய பாவலர்; இதன் பொருள் கவிகளில் சிறந்தவர். காளிதாசனை “கவி குல குரு” என்பது போல.பாவலர்= பாடல் பாட வல்லவர். பலவகை வெண்பாக்களுள் குறள்பா முதன்மையானது; அதில் பாடியவர். மேலும் அந்தண ஜாதியிற் பிறந்ததால் முதல் பாவலர் என்பாரும் உளர்.

4.மாதாநுபங்கி

திருவள்ளுவ மாலையில் மாதாநுபங்கி என்ற பெயரையும் செந்நாப்போதார் என்ற பெயரையும் நல்கூர் வேள்வியார் பயன்படுத்தியுள்ளார்; தாய் போல சாலப் பரிந்து அன்பு செலுத்தியவர். தாயெனத்தக்கவர்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்

உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்

மாதாநுபங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்கச்சு

 

e0b33-valluvar2ba252c2baa252c2bi2bii.jpg

5.தெய்வப் புலவர்

கிரேக்க மொழியின் முதல் கவிஞர் ஹோமரையும் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதிய பாணினியையும் Divine Homer டிவைன் ஹோமர், பகவான் பாணினி என்பர். அதுபோலத் தெய்வீகத் தன்மையுடைய திருக்குறளை எழுதியதால் தெய்வப் புலவர் என பெயர் பெற்றார். அதுமட்டுமல்ல, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இவரையும் வணிகர் மரபில் தோன்றிய ருத்திரசர்மர் என்பவரை யும் மட்டுமே சங்கப் பலகையில் அமர கடவுள் அனுமதித்தார். மற்றவர் எல்லோரையும் மீனாட்சி கோவில் பொற்றாமரைக் குளத்தில் விழவைத்தது என்பது செவிவழிச் செய்தி. அப்போது ஆகாயவாணி (அசரீரி) இவரது திருக்குறளை அங்கீகரித்ததால் இப்பெயர். அதுமட்டுமல்ல. சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் எழுதிய தொல்காப்பிய உரை முதலியவற்றில்தெய்வப்புலவன் திருவள்ளுவன் என்று போற்றியுள்ளானர்.

 

6.செந்நாப்போதார்

செவ்விய நாவாகிய மலரையுடையவர்; “என்றும் புலராது”   என்ற இறையனார் பாசுரத்தில், திருவள்ளுவர் வாய்ச் சொற்குக் கற்பகத் திருமலர் உவமை கூறப்பட்டுள்ளது. போது=மலர். மலர்மேல் அமரும் சரஸ்வதி தேவி, அவரது நாவில் வசிக்கிறாள்; செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல், வவ்விய கவிகளாகிய தேனைச் சொரிகிற நாக்கை உடையவர்.

 

7.பெருநாவலர்

பெருமையுடைய புலவர்; நாவலருட் பெரியவர் என்க.

நாவலர்= கவந சக்தியும், பிரசங்க சக்தியும், போதனா சக்தியும் படைத்த நாவன்மை உடையவர். திருவள்ளூவ மாலையில் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

 

8.நான்முகனார்

பிரம்மதேவனின் அம்சத்துடன் பிறந்தவர்; திருவள்ளுவ மாலையில், உக்கிரப் பெருவழுதியும், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் கூறியதைக் காண்க:-

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்தான் மறைந்து வள்ளுவானய்த் தந்துரைத்த நூன்முறையை…..”

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமாமெய்யாய வேதப்பொருள் விளங்கப் பொய்யாதுதந்தானுலகிற்குத்தான் வள்ளுவனாகிஅந்தாமரைமேலயன்

9.புலவர்

புலம் அல்லது புலமை உடையவர் (புலம்= தேர்ந்த அறிவு; புலமை=கல்வித் தேர்ச்சி) நூலறிவு; பாண்டித்தியம் உடைமை.

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம்

வைணவர்களுக்கு கோவில் என்றால் திருவரங்கம்

அது போல   தமிழில் புலவர் என்றால் வள்ளுவர்

 

திருவள்ளுவ மாலையில் புலவர் திருவள்ளுவரன்றிப் பூமேற்- சிலவர் புலவரெனச் செப்பல் – என்று மதுரை தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார் கூறியதால் அறிக.

 d4084-valluvar-4.jpg?w=600

10.பொய்யில் புலவர்

 

பொய்மையில்லாத புலவர்; பொருள்களை உள்ளபடி உணரவும், உணர்ந்தபடி உரைக்கவும் வல்ல அறிவை உடையவரென்றபடி. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலையில், பொய்யில் புலவன் பொருளுரை  தேறாய் – என்றனர்.

 

11.நாயனார்

இப்பெயரை நச்சினார்க்கினியர், தன் உரையில் பயின்றுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!! (POST NO.3344)

 a3ad9-laws-of-manu.jpg?w=600

WRITTEN by London Swaminathan  Date: 11 November 2016 Time uploaded in London: 20-18  Post No.3344

 Pictures are taken from various sources; they are representational only; thanks.   contact; swami_48@yahoo.com

  வரி விதிப்பது எப்படி? மனு, காளிதாசன், வள்ளுவன் அணுகுமுறை

 வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இவர்களில் மனு சொல்லும் விஷயஙகள் வியப்பைத் தரும் முதலில் அதைக் காண்போம்:-

 மனுதர்ம சாத்திரத்தில் ஏழாவது அத்தியாயத்தில் சொல்கிறார்:-

 ஒரு அரசன் பசியினால்  இறந்து போக நேரிட்டாலும், வேதத்தை மனப்பாடமாக வைத்திருக்கும் பிராமணனிடத்தில் வரி வாங்கக்கூடாது. அவர்களைப் பசியினால் வாடவிடக்கூடாது (7-133)

 வேதம் அறிந்த பார்ப்பான் பசியினால் மயக்கமடைந்து விழுந்தால் அந்த அரசாட்சியும் வீழும் (7-134)

 இதைப் பார்த்தவுடன் பலரும் இது நியாயமில்லாத ஒரு விதி என்று எண்ணலாம். ஆனால் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை), தேவதானம் (கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை) ஆகிய அனைத்தையும் இறையிலி (வரியற்ற) நிலங்களாகவே அறிவிக்கின்றன. ஆக, தமிழ் மன்னர்கள் மனு நீதியைப் பின்பற்றியது தெளிவு.

 இப்போது இந்த இடத்தில் பிராமணர்கள் என்பதற்குப் பதிலாக அறிஞர்கள் என்று போட்டுவிட்டால் பொருள் நன்கு விளங்கும். அதாவது புத்தியுடையோர், அறிவாளிகள் வறுமையில் வாடக்கூடாது என்பதே பொருள். நிறைய சம்பாதிக்கும் அறிஞர்கள் இதில் வாரார். பிராமணர்கள் மூன்று நாட்களுக்கு மேலான செல்வம் வைத்திருக்கக்கூடாது என்பது விதி. எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுதானம் செய்து பொருள் பெற வேண்டும் என்பதற்கே இந்த விதி!

3bf4c-manu2bskt.jpg?w=600

 அட்டை போல உறிஞ்சு!

 மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

 ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

 அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப்பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

 பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

cfdcf-manu2b3.jpg?w=494&h=659

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

 வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

 காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

 சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard