New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் - ப்ராவாஹன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் - ப்ராவாஹன்
Permalink  
 


தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும்
ப்ராவாஹன்

 

தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இல்லை; பிராமணர், சூத்திரர் என்ற இரண்டுதான் என்றொரு பொய் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எழுதப்பட்ட வரலாறு சங்க இலக்கியங்களுடன் தொடங்கு கிறது. “வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும்” (புறம் 183) என்பதில் தொடங்கி நாற்பால் குறித்துப் பதிவுகள் அற்ற தமிழ் இலக்கியங்கள் அரிதே.

சங்க இலக்கியங்களின் இறுதி யாகச் சொல்லப்படும் தொல்காப்பியம் நாற்பால் குறித்து விரிவான பதிவைச் செய்துள்ளது. அதையடுத்த காப்பிய காலத்திற்குரிய
சிலப்பதிகாரம் (6:164, 14:183, 212), மணிமேகலை (5:97, 6: 56), சீவக சிந்தாமணி போன்றவையும் நாற்பால் குறித்துப் பதிவு செய்துள்ளன. பிறகு வந்த புறப்பொருள் வெண்பா மாலை (8:10)ம் நாற்பால் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. 9-10 ஆம் நூற்றாண்டு, சேந்தன் திவாகரம் தொடங்கி நாற்பால் குறித்து விளக்கந் தராத நிகண்டுகளே இல்லை. இது பற்றி ‘தமிழத்தில் நான்கு வர்ணம் ஒரு சிறப்புப் பார்வை’ (காண்க : திண்மை இணைய இதழ்) எனும் கட்டுரையில் அறிஞர் பிரகஸ்பதி விரிவாக எழுதி யுள்ளார்.

சமஸ்கிருத இலக்கியங்களைப் பொருத்தவரை, வேதங்களில், ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலமாக வருகின்ற புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், அது இடைச் செருகல் என்பது அறிஞர் களின் கருத்து. அதையடுத்து வந்த பௌத்த நூல்களும் பின்னர் இயற்றப் பட்ட தர்ம சாஸ்திரங்கள் பலவும் நான்கு வர்ணம் பற்றி குறிப்பிடுகின்றன. கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் நான்கு வர்ணங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. இவற்றிலெல்லாம் நான்கு வர்ணம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிகப் பரவலாக அறியப்பட்டிருப்பது மனு தர்ம சாஸ்திரமே. ஆனால், நடப்பி லுள்ள மனு தர்ம சாஸ்திரப் பிரதி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் முழுமை யடைந்தது என்பது அறிஞர்களின் சிலரின் கருத்து.

உண்மையில், கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்த சாஸ்திரமும், தனது முதனூல்களான மூன்று தர்ம சாஸ்திரங்களைக் குறிப் பிடுகிறது. அதில் மனு தர்மமும் ஒன்று. கெடுவாய்ப்பாக, அந்த மனு தர்மப் பிரதி எதுவும் கிடைக்காததனால் அதற் கும் நடப்பிலுள்ள பிற்காலப் பிரதிக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் அறிய முடியவில்லை. தொல்காப்பியத்தில் சொல்லப் பட்டுள்ள நாற்பால் குறித்த பகுதிகள் பிற்கால இடைச்செருகல் என்போர் உண்டு. அல்லது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திலேயே பார்ப்பன ஆதிக்கம் தொடங்கிவிட்டது ; தொல் காப்பியரே ஒரு வட இந்தியப் பார்ப் பனர், அவர் தங்களின் வர்ணத்தை இதில் புகுத்தி விட்டார் என்று சொல் வோரும் உண்டு. ஆனால் அது இடைச் செருகல் அல்ல ; இந்த நாற்பாலும் வடக்கத்திய நான்கு வர்ணமும் வேறு பட்டவை என்று சொல்வோரும் உண்டு.

அடுத்து, நாற்பால் குறித்த விவரங்கள் ஒரு இடைச் செருகல் என்பது. அதை இடைச்செருகல் என்று சொல்வோர், சில அத்தியாயங்களும், சில பொருள் தொடர்பான விஷயங் களும் திடும் திடுமென முடிந்து முந் தைய விஷயம் தொடர்ச்சியாகப் பேசப் படுவதாக சொல்கின்றனர். இத்கைய காரணங் கற்பிப்போர், தொல்காப்பியம் கூறுகின்ற நூல் எழுதும் உத்தி களையும், அத்தகைய உத்திகள் தொல் காப்பியத்திலேயே பயன்படுத்தப்பட் டிருப்பதையும் சரியாக உணர்ந்திடவில்லை. உதாரணமாக செய்யுளியலில் கூறப்பட்டுள்ள மாட்டு எனும் உத்தி. “அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் / இயன்று பொருள் முடிப்ப தந்தனர் உணர்தல் / மாட்டென மொழிப் பாட்டியல் வழக்கின்” என்பது. இதன்படி பார்ப்போமானால், தொடர்ச்சியின்மை என்பது ஒரு பொருட்டே இல்லை ; அவற்றை ஒருங்கு கூட்டிப் பொருள்கொள்வது மரபே.

கி.பி. 12, 13, 14 ஆம் நூற்றாண்டு களில் தொல்காப்பியத்திற்கு உரை யெழுதியோர் தம்மனப் போக்கில் உரை யெழுதி, அதில் நான்கு வர்ணங்களைப் புகுத்தியதாகவும் ஒரு விமர்சனம் உண்டு. ஒரு இலக்கியத்திற்கு அது எழுதப்பட்ட சில பல நூறாண்டுகள் கழித்து உரை வகுக்கையில் சமகால சமூக நிலவரங்களின் தாக்கம் ஏற்பட்டு விடுவது இயல்பே. அவ்வகையில், உரையாசிரியர்களின் காலத்தில் சமூகத் தில் நான்கு வர்ணங்கள் தெளிவாகவே இருந்தமைக்கு அரசர்களின் மெய்க் கீர்த்தியே (‘மனு நெறி தழைப்ப’ அரசாண்டதாக சோழ அரசர்கள் பலரின் மெய்க் கீர்த்திகளில் சொல்லப்பட் டுள்ளது) நல்ல சான்று. இதற்கும் அப்பால், இவ்வுரையாசிரியர்களுக்கும் முன்னதாகவே முதல் தமிழ் நிகண்டு (சேந்தன் திவாகரம், 8-9 ஆம் நூற் றாண்டு) இயற்றப்பட்டது. அது மிகத் தெளிவாக நான்கு வர்ணங்களின் தொழில்களையும் பட்டியலிட்டுள்ளது. அதையடுத்து புறப்பொருள் வெண்பா மாலையும், மிகத் தெளிவாகவே நான்கு வர்ணங்களின் தொழில்களைப் பட்டிய லிட்டுள்ளது. மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள், கொடுத்துள்ள எடுத் துக்காட்டுகள் அனைத்தும் சங்க இலக் கியங்களிலும் காப்பியங்களிலும் இருந்தே என்பது கவனத்திற்குரியது. இத்துடன், தொல்காப்பியம் குறிப் பிடும் உத்திகளில் சமூக நிலவரங்களில் இருந்து விசேஷங்களை உணர்ந்து உரை வகுப்பதும் ஒன்று.

இதற்கு ஆதரவாக உள்ள தொல் காப்பியர் குறிப்பிடும் உத்தி, “வாராத தனான் வந்தது உணர்தல்” என்பதாகும். ‘வந்தது கொண்டு வாராதது உணர்தல்’ என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், ‘வாராததில் இருந்து வந்ததை உணர்தல்’ என்பது சற்றே கடினமானது. உண்மையில் இதன் பொருள், சமூக நிலவரங்களில் இருந்து அதை உய்த் துணர்தல் என்பதுதான். சங்க கால சமூகத்தில் ஐந்தி ணைகள் இருந்தமை சங்க இலக்கி யங்கள் மற்றும் தொல்காப்பியத்தின் வாயிலாகத் தெரிகிறது. நான்கு திணைகளுக்குப் பெயரும் இலக் கணமும் வகுத்துச் சொல்லும் தொல் காப்பிய நடுவண் திணையாகிய பாலைக்குரிய பொழுதைச் சொல்லி யதே தவிர நிலத்தைக் குறிப்பிடவே இல்லை. எனினும், அடுத்து வந்த புலவர்கள், அதைத் தெளிவாகவே உணர்ந்து சொல்லியுள்ளனர்.

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமயிற் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதால் படிவங்கொள்ளும்’ என்பது இளங்கோவடிகள் வகுக்கின்ற இலக்கணம். இது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விவரங் களுக்குப் பொருந்தி உள்ளது. ‘வாராத தனால் வந்தது உணர்தல்’ என்ற உத் தியைப் பயன்படுத்தி இது தருவிக்கப் பட்டுள்ளது. இதே உத்தியைப் பயன் படுத்தி, எதார்த்த நிலவரங்களைக் கொண்டு நாற்பாலுக்கு உரையாசிரி யர்கள் விளக்கம் எழுதியுள்ளனரேயன்றி அவர்கள் தம்மனப் போக்கில் செய்திட வில்லை. எனினும் நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல அவர்களின் சமகால சமூக நிலவரங்கள், உரைகளில் தாக்கம் செலுத்தி யிருப்பதையும் நாம் கணக்கில் கொள்வது அவசியம். எவ்வாறிருப்பினும், நாற்பாலும் நான்கு வர்ணமும் ஒப்பிடத்தக்கனவே. எனவே முதற்கண் அர்த்த சாஸ்திரம் கூறும் நான்கு வர்ணங்களின் இலக்கணங் களைப் பார்ப்போம்.

அர்த்த சாஸ்திரம் கூறும் வருண தருமங்களாவன :- அந்தணர்க்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இவ்வாறுமாம். அரசர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், உயிர்களைக் காத்தல் என்னும் இவ்வைந்துமாம். வணிகர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணியம் இவ் வாறுமாம். சூத்திரர்க்கு இரு பிறப் பாளர் மூவர்க்கும் பணி புரிதல், உழவு, பசுக்காவல், வாணிகம், காருகன்மம் (நெசவுத் தொழில்), குசீலவகன்மம் (குயிலுவம் என்பது தமிழ் வழக்கு - ஆடல் பாடல் முதலியன : குசீலவர்கள் - கூத்தாடுவோர்) என்னும் இவையாம். (முதல் அதிகரணம், முதல் பிரகரணம், மூன்றாம் அத்தியாயம்)

தொல்காப்பியம் கூறுவன :

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் / ஐவகை மரபின் அரசர் பக்கமும் / இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்” (பொருளதிகாரம், புறத் திணையியல் 20)
“ஈண்டு உரையாளர் எல்லோரும் அந்தணர்க்குக் கூறிய அறுதொழில் களில் வேறுபட்டிலர். பதிற்றுப்பத்து என்னும் நூலில் “ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு புரிந்தொழுகும் அந்தணர் என்று கூறப்பட்டிருத்தலும் காண்க” என்கிறார் மு. கதிரேசச் செட்டியார். (கௌடலீயம், அர்த்த சாஸ்திர உரை, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு 1979). இதில் தமிழ் நூலார்க்கும் வடநூலார்க்கும் எவ்வித மாறுபாடுமில்லை என்பதுடன் நாம் முற்றிலும் உடன்படுகிறோம். எனி னும், அந்தணர் வேறு பிராமணர் வேறு என்று சொல்வோரும் உண்டு. அத்தகை யோர், “அந்தணர் என்ப அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற குறளைச் சுட்டுவர்.

நாம் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்” எனும் குறளைச் சுட்டினால், இவர்கள் அந் தணர் வேறு, பார்ப்பார் வேறு, பிரா மணர் வேறு என்ற நிலையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. சோணாட்டுப் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன், வேத வேள்விகள் இயற்றியது பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. எனவே வேதவழியில் வந்தவர் அவர் என்பதுறுதி. இவர் குறித்து பார்ப்பார் என்ற குறிப்பு உள்ளது. பதிற்றுப்பத்து (24 : 6-8) சொல்லும் அந்தணர் அறு தொழில் குறித்த பாடலாலும், பரி பாடல் (11: 78-79) குறிப்பிடும் விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என்ற குறிப்பாலும், பெரும்பாணாற்றுப் படை (315 - 16) ‘கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத்து’ என்பதில் அந்தணர் வேள்விகள் செய்துள்ளமை தெரிய வருவதாலும் பார்ப்பார், அந்தணர் என்பவை ஒத்த பொருள் கொண்ட சொற்களே என்று நாம் துணியலாம்.

அரசர் ஐந்தொழில் என்பதில் தொல் காப்பிய உரையாசிரியர்கள் இளம் பூரணர் ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்பல் ஆகியன வற்றைக் குறிப்பிடுகிறார். நச்சினார்க் கினியர் ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்று குறிப்பிடு கிறார். இவ்விருவரது வகைப்பாடடில் நச்சினார்க்கினியர் காத்தல், தண்டஞ் செய்தல் என்று ஒரே விஷயத்தின் இரு கூறுகளை தனித்தனித் தொழில்களாகப் பட்டியலிடுவது பொருத்தமுடைய தல்ல. இவ்விரண்டுமே இளம்பூரணர் குறிப்பிடும் ‘குடியோம்பல்’ என்பதுள் அடங்கும். எனவே இளம்பூரணர் சொல்வதே சரி என்று கொண்டால் அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுவதும் இளம் பூரணர் சொல்வதும் ஒன்றியிருக்கிறது. அர்த்த சாஸ்திரத்துக்கு விளக்கமெழுதிய கதிரேசச் செட்டியாரும் இதில் உடன் படுகிறார். எவ்வாறெனில், “இனி ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்’ என் பதற்கு நச்சினார்க்கினியர் “ஓதல், வேட்டல்,ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்னும் ஐவகை என்பர்”. இளம்பூரணர் “ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்பல் என்னும் ஐவகை என்பர்”. இவற்றுள் இளம் பூரணர் கொள்கை இந்நூற் (அர்த்த சாஸ்திரம்) கருத்தோடு ஒத்திருத்தல் காண்க” என்கிறார்.

அடுத்ததாக, வணிகர், வேளாளர் என்ற இவ்விரு பிரிவுகளின் ஆறு தொழில்கள் கூறப்பட்டுள்ளன. இது பற்றி விளக்கங் கூறும் கதிரேசச் செட்டியார், “இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்பது வணிகரும் வேளாளரும் ஒத்த அறுவகைத் தொழில் களையுடையவர் என்பதைக் குறிக்கும். அங்ஙனமாகவும், நச்சினார்க் கினியர் “ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரை யோம்பல், வாணிகம் என்னும் இவ் வறுதொழிலும் வணிகர்க்கு உரியன என்றும், வேதம் ஒழிந்தன ஓதலும், ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறு வகைத் தொழிலும் வேளாண் மாந்தர்க் குரியன என்றும் வேறுபடுத்துக் கூறு வாராயினர். தொல்காப்பிய மூலத்தில் வேறுபாடு தோன்றா வகை கூறப்பட் டிருக்க இங்ஙனம் இவர் கூறியது வடநூல் நான்காம் வருணத்தவராகிய சூத்திரர்க்கு வகுத்த அறு தொழில் களையே தமிழ் நிலத்து வேளாளர்க்கும் உரியனவாகக் கருதினமையாம்.

தமிழ் நிலத்து வேளாளர் வடநூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம். இதனை நன்குணர்ந்த பேராசிரியர் ஓதல், வேட்டல், ஈதல் இம்மூன்றும் நால்வகை வருணத் தார்க்கு ஒத்த சிறப்பின எனவும், வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் உழவும் நிரை காத்தலும் வாணிகமும் ஒத்த சிறப்பின எனவும் கூறி இம் மூன்றனுள் வாணிகம் வணிகர்க்குப் பெருவரவிற்றெனவும், உழவு வேளாண் மாந்தர்க்குப் பெருவர விற்றெனவும் கூறி வேறுபாடு காட்டினார். (தொல் - பொருள் - மரபி - 8ஆம் சூத்திரவுரை). இஃதே தமிழ் நிலத்தார்க்குப் பொருந் தியதாகும். இக்கௌடலீய நூலிற் கூறப்பட்ட சூத்திரர், ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குசீலவகன்மம் ஆகிய இவ்விரு தொழில்களையுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ் நிலத்து வேளாண் மாந்தரொடு இச் சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறுடைத்தென்பது விளக்கமாம்” என்கிறார் (கௌடலீகம் (அ) பொருணூல் பக். 27 - 28 பணிதமணி மு. கதிரேச செட்டியார் விளக்கம்).

கதிரேசச் செட்டியார் மட்டும்தான் இவ்வாறு திரித்து விளக்கம் சொல் வதாக நினைக்க வேண்டாம். வேளாண் அறிஞர்கள் / அவர்களைப் பின்பற்று வோர் அனைவருமே ஏதோவொரு வகையில் இந்தத் திரிதலைச் செய்திருக் கின்றனர். மறைமலையடிகளின் வழித் தோன்றலான புலியூர்க் கேசிகன், புற பொருள் வெண்பாமாலை, “மேல் மூவரும் மனம்புகல / வாய்மையான் வழியொழுகின்று” என்ற வேளாண் வாகை சூத்திரத்துக்கு உரையெழுது கையில், “மேற்சொல்லிய அரசரும் பார்ப்பனரும் வணிகரும் ஆகிய மூன்று சாரரும் நெஞ்சத்தால் விரும்பும் படியாக வாய்மையிலே வழிபட்டு நடத்து வருவது, வேளாண் வகையாகும்’ என்று எழுதிவிட்டு, ‘வேளாளரைப் பற்றிய, மூவர் ஏவல் கொள்ளலாகிய கருத்து ஏற்புடையதாகாமை தெளிவாம். அக் காலத்தைய சமூக நியதியும் இங்ஙனம் இருந்ததென்று கொள்வதற்கில்லை என்பதும் நினைக்க’ என்று எழுதுகிறார்.

அந்தணர் அறுதொழில் மற்றும் அரசர் ஐந்தொழில் குறித்து இளம் பூரணரைக் குறிப்பிட்ட கதிரேசச் செட் டியார், வணிகர், வேளாளர் தொடர் பாக, தனது திரித்தலுக்கு வாய்ப்பாக இளம்பூரணர் உரையைத் தவிர்த்துச் செல்வது கருதத்தக்கது. முதற்கண், “இறு மூன்று மரபின் ஏனோர் பக்க மும்” என்பதற்கு வணிகரும் வேளாள ரும் ‘ஒத்த’ அறுவகைத் தொழில்களை உடையவர்” என்கிறார். ‘ஒத்த’ என்ற சொல்லை இவர் தன் விருப்பத்திலிருந்து சேர்த்திருக்கிறார்; மேலும், தொல் காப்பிய மூலத்தில் ‘வேறுபாடு தோன் றாவகை’ கூறப் பட்டிருக்க என்கிறார். தொல் காப்பியத்தில் இருவருக்கும் அறு தொழில் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளதேயன்றி அவை ஒத்த தொழில்கள் என்றோ, மாறுபட்டவை என்றோ ஒன்றையும் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபிற் சூத்திரம் (9 : 79), வணிகர்க்கு எண் வகை உணவை உண்டாக்குகிற தொழிலைக் கூறுகிற அதே நேரத்தில், வேளாண் மாந்தர்க்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை (9:81) என்கிறது.

எனவே இவற்றைக் கூட்டிப் பொருள் கொள்வதே சரி. தற்காலத்திலும் பொது வாக நாம், நிலவுடைமை யாளரையும் பிறர் நிலத்தில் விவசாயக் கூலி வேலை செய்பவரையும் விவசாயி என்றே சொல்கிறோம். ஆனால் வணிகர் நிலம் வைத்திருந்த விவசாயி என்பதால் ‘உணவை உண்டாக்குகிற’ என்றும் வேளாளர் நிலம் அற்ற விவசாயி என்பதால், ‘உழவு தவிர வேறு தொழி லில்லை’ என்றும் சொல்கிறார். உண்மை இங்ஙனமிருக்க, கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகி யோரின் சிந்தனைப் போக்கைப் பின்பற்றியுள்ள கதிரேசச் செட்டியார், ‘ஒத்த தொழில்’ என்றும் ‘வேறுபாடு தோன்றாவகையில்’ என்றும் கூறப்பட்டிருப்பதாகச் சொல்வதில் வியப் பில்லை. மேலும் அவர சைவ மடத்தின் உபகாரத்தில் இருந்தவர் என்பதும் கருதத்தக்கது. எனவே, தம் விருப்பத் திற்குப் பொருள்படுத்தும் பொருட்டு கதிரேசச் செட்டியார் விடுத்து விட்ட இளம்பூரணரின் விளக்கத்தைப் பார்ப்போம்.

இளம்பூரணரின் கொள்கைப் படி வணிகர்க்குரிய ஆறு பக்கமாவன : ஓதல், வேட்டல், ஈதல், உழல், வாணிகம், நிரையோம்பல் ஆகியன. இது அர்த்த சாஸ்திரம் குறிப்பிடும் வைசியர் பிரிவி னரின் தொழில்களுடன் முற்றிலும் பொருந்துவதாகக் காண்க. இளம்பூரணர் குறிப்பிடும் வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்க மாவன: உழவு,உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி ஆகியன. “இக்கௌடலீய நூலிற் கூறப் பட்ட சூத்திரர் என்பது ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குசீலவகன்மம் ஆகிய இவ்விழி தொழில்களை யுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ் நிலத்து வேளாண் மாந்தரொடு இச்சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறு” என்கிறார் கதிரேசச் செட்டியார். ‘உழவொழிந்த தொழில்’ என்று இளம் பூரணர் குறிப்பிடுவதில் காருகமும், குயிலுவமும் உள்ளடங்கி விடும்.

தவிரவும் இளம் பூரணர் சொல்லியிருக்கும் ‘வழிபாடு’ என்பது தான் ‘மேல்மூவர்க்கும் ஏவல்’ என்பதை புலியூர்க் கேசிகனும் தெளிவுபடுத்தி உரையெழுதியுள்ளார். இவ்வாறிருக்க ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குயிலுவம் ஆகியன தமிழ் மரபில் கூறப் படவில்லை என்று கதிரேசச் செட்டியார் தம் விருப்பத்திலிருந்தும், தமது சமகால சமூக நிலைகளிலிருந்தும் முடிவு செய்கிறார். தொல்காப்பிய உரையாசிரி யர்களின் காலத்துக்கும் முற்பட்ட சேந்தன் திவாகரமும் இதர நிகண்டு களும், புறப்பொருள் வெண்பா மாலையும் ‘மேல் மூவர்க்கும் ஏவல் செய்தல்’ அல்லது ‘ஆணைவழி நிற்றல்’ என்பதை வேளாளரின் கடமையாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றை அடியொற் றியே உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

“தமிழ் நிலத்து வேளாளர் வட நூலற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம்” என்கிறார் கதிரேசச் செட்டி யார். தமிழ் நூல்களிற் கண்ட முடிவாக எதைக் கொண்டு கூறுகிறார் என்பது தெரியவில்லை. சங்க இலக்கியங்களுன் ஒன்றான பரிபாடலில் (20 : 62-64), ‘தம் எருதுகளை உழுதற் றொழில் செய் யாமல் ஓடவிடும் முறைமை வேளா ளர்க்கு இன்றாதலால்’ என்று தெளி வாகவே சொல்லப்பட்டுள்ளது. தம் எருதை ஏரில் மட்டுமே பூட்டும் உரிமை பெற்றிருந்த வர்களே (பிறவற்றுக்குப் பயன்படுத்தும் உரிமையில்லை) வேளா ளர்கள் என்று கருதும்போது அவர்கள் கடமையுள், மேலோர் மூவர்க்கும் பணி செய்தல் ஒன்றாக இருந்திருக்கும் என்ற கருத்தே வலுப்பெறுகிறதேயன்றி அத்தகைய இழிதொழில் தமிழ் மரபில் இல்லை என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாக இல்லை. இதைத்தான் புறப்பொருள் வெண்பாமாலை (8 :10) தெளிவு படுத்தியுள்ளது. அடுத்து, குசீலவகன்மம் (குயிலுவம்) என்று அர்த்த சாஸ்திரம் சொல்லியிருப்பது வேளாளர்களின் தொழில்களில் ஒன்று. இன்றைக்கு வரையிலும் இசை வேளாளர் என்று ஒரு பிரிவிருப்பதே இதற்குச் சான்று. மேலும் அர்த்த சாஸ்திரமும் தமிழ் நிகண்டுகளும் குறிப்பிடுகின்ற காருகத் தொழிலில் கைக்கோளர்கள் இன்றைக்கு வரையிலும் ஈடுபட்டு வருவது ஒப்பு நோக்கத்தக்கது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு இலக்கணமாகக் கூறப்படும் ஐரோப் பியச் சமூகத்தில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோர் விவசாயத் தொழி லில் ஈடுபடுத்தப் பட்டமை அனை வரும் அறிந்ததே. ஐரோப்பியச் சமூகத் திற்கும் முற்பட்ட தமிழ் மரபிலும் அதைப் போலவை இருந்துள்ளது. ‘போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவி யரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததை சங்க நூல்கள் குறிப் பிடுகின்றன” என்கிற பேரா. ஆ. சிவ சுப்பிரமணியன். @ மேலும், ‘இன் றையத் தமிழகமும், கேரளத்தின் பெரும் பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால் பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதி யினையே குறிக்கும் என்பதனை உணர லாம். எனவே போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியரும், அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணி புரிந்துள்ளனர் என்பது தெளிவு’ என்கிறார். (தமிழகத்தில் அடிமைமுறை, பக். 22-27) அத்தகை யோரே தமிழ் மரபில் கொண்டி மகளிர் என்றும் புடைப் பெண்டிர் என்றும் கூறப்பட்டுள்ளனர். இவர்கள் உழு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதற்கு நாலடியார் (122 : 1-2) பாடல் சான்று பகர்கின்றது. இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிடுவது அவசியம்.

தொல்காப்பியர், வேளாண் மாந்தர்க்கு உழவே தொழில் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, உழுதுண் போர் எல்லாம் வேளாண் மாந்தர் என்று சொல்லியிருக்க வில்லை. ஏனெனில், வைசியப் பிரிவில் வருபவரும் உழு தொழிலில் ஈடுபடலாம் என்ற கருத்தை முன்வைத்தே அவர் இங்ஙனம் கூறி யிருக்கிறார். இது வட இந்திய தர்ம சாஸ்திரங்கள் கூறுவதுடன் ஒப்பு நோக் கத்தக்கது. மேலும், ‘உழுதுண்போர் எல்லாம் வேளாண் மாந்தர்’ என்று சொல்லி இருந்தால் வேளாண்மை என்ற சொல்லின் பொருள், ‘உழவு’ என்று கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் தொல்காப்பியர் காலத்திலோ அல்லது அதையடுத்து வந்த காலங் களிலோ வேளாண்மை என்ற சொல் லுக்கு உழவு என்று பொருள் இல்லை. வேளாண்மை எனும் சொல், ‘உபகாரம் மற்றும் மெய்யுபசாரம்’ என்ற பொரு ளிலேயே பயன்பட்டுள்ளது. எனவே தான் உழவை உயர்த்திச் சொல்லும் திருவள்ளுவரும் கூட உழவையும் வேளாண்மையையும் வேறுபடுத்தியே சொல்லி இருக்கிறார். அதாவது, வேளாண்மை என்பதை ‘உபகாரம்’ எனும் பொருளிலும் உழவு என்பதை ‘பயிர்த்தொழில்’ எனும் பொருளிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொல்காப்பியம் கூறும் “அடி யோர் பாங்கினும் வினைவலர் பாங்கி னும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்” என்ற இலக்கணப்படி வேளாண் மாந்தர்களின் அன்பின் ஐந் திணைக்குப் புறம்பான கைக்கிளை மற்றும் பெருந்திணைக்கு உரியவர் களாவர். மேலை உலகில் அடிமை களுக்கு அங்கீகரிக்கப்பட்ட குடும் பங்கள் இல்லை ; அவர்களின் மண உறவு நெடுங்காலம் அங்கீகரிக்கப்படா மலேயே இருந்தது. தமிழ் மரபிலும் அவ்வாறே இருந்துள்ளது. இதைத்தான் கைக்கிளை மற்றும் பெருந்திணை யாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அத்துடன் நேரடியாகவே, “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” என்று வேளாண் மாந்தராகிய நான்காம் வர்ணத்தவருக்கு கரணம் அமைந்ததைச் சொல்வதையும் நாம் ஒப்பிட்டுக் காண லாம். பகை நாட்டிலிருந்து பிடித்து வரப்பட்ட மகளிரை வேளத்தில் ஏற்று வது என்பதாக ஒரு மரபும் இருந்தமை பிற்கால சான்றுகளால் உறுதிப்படு கிறது.

அவ்வாறான மகளிரை சீதன வெள்ளாட்டிகளாக கொடுத்தமை குறித்து ‘குரு பரம்பரை வைபவம்’ எனும் வைணவ இலக்கியம் குறிப் பிடுகிறது. வெள்ளாட்டிகள் (வேளாளர் / வெள்ளாளரின் பெண்பால்) என்போர் வேலைக்காரிகளாக இருந்த மரபு மிகப் பிற்காலம் வரையிலும் இருந்துள்ளது. இத்தகையோரும் அவர்தம் வாரிசு களும் குசீலவகன்மம் மற்றும் மேலோர் மூவரின் ஆணைவழி நிற்றல் என்ற கடமைகளை நிறைவேற்றும் நிலை யிலேயே இருந்திருப்பர் என்பது வெளிப்படை.

இவை ஒருபுறமிருக்க, மனு தர்மம் கூறுகின்ற நால் வர்ணத்தவரின் தொழில்கள் மற்றும் கடமைகளை தொல்காப்பியம் கூறுவதுடன் ஒப் பிட்டுக் காண்போம்.
மனுதர்மம், முதல் அத்தியாயம் 88வது சுலோகம், “அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல் வரிடத்து ஏற்றும் வாழத்தக்கவர்” என்கிறது. இது இளம்பூரணர் சொல் கின்ற அறு தொழில்களுடனும், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து குறிப்பிடு வதுடனும் முற்றிலும் ஒத்து இருக் கின்றது.

அரசருக்குரிய கடமைகளைச் சொல்லும் 89வது சுலோகம், பிரஜா பரிபாலனம், ஈகை, வேள்விகள் புரி வது, வேத பாராயணம் செய்விப்பது, விஷய சுகங்களில் மனதை அலைய விடாது, உறுதியாக நிற்பது என்கிறது. இவற்றில் முதல் நான்கு இளம்பூரணர் சொல்லும் குடியோம்பல், ஈதல், வேட்டல், ஓதல் ஆகியன முறையே பொருந்தியுள்ளது. படை வழங்கல் குறித்து தனியே ஏதும் குறிப்பிட வில்லை. மாறாக, அரசனின் உறுதித் தன்மையை வலியுறுத்துகிறது. எனினும் அரசு நீதி குறித்து சொல்லக் கூடிய 7வது அத்தியாயத்தில் இவை யனைத்தும் விளக்கமாக சொல்லப் பட்டுள்ளது.

வைசியருக்கான கடமைகளாக மனு தர்மம், முதல் அத்தியாயம், 90 ஆவது சுலோகம், ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், வணிகம், வட்டித் தொழில்,பயிர்த் தொழில் ஆகியன வற்றைச் சொல்கிறது. இவை, இளம் பூரணர் சொல்கின்ற நிரை யோம்பல், ஈதல், வாணிகம், உழல் ஆகியன பொருந்தி வருகின்ற அதே நேரத்தில் ஓதல், வேட்டல் ஆகிய இரண்டும் மூவர்ணத்தவருக்குமான தொடக்கத்திலேயே சொல்லப்பட் டுள்ளது. வட்டித் தொழில் என்பதை வாணிகம் என்பதுள் பொருத்திப் பார்ப்பதே சரி.

மேலும், சங்க இலக்கியங்களில் மேலோர் மூவர்க்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாளர் குறித்த குறிப்புகள் மிகக் குறைவே. இவ் வாறாக பல்வேறு தரவுகளை ஒப்பு நோக்கையில் தமிழ் மரபில் கூறப் பட்டுள்ள நாற்பாலும், வட மரபில் சொல்லப் பட்டுள்ள நான்கு வர்ணமும் ஒன்றே என்ற முடிவுக்கு நாம் வர முடிகிறது. எனினும் வட மரபுக்கும் தென் மரபுக்கும் இடையில் நடை முறையில் முற்றிலும் வேறுபாடே இல்லை என்று நாம் கூறிடவில்லை. ஆனால், இவ்வேறு பாடுகளைக் கொண்டு மனுதர்மம் இங்கே புகுத்தப் பட்டதாகச் சொல்வது அபத்தமாக முடியும் என்பதுதான். மாறாக, இவ்விரு மரபுகளும் ஒரு பொது இடத் தில் இருந்து கிளைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை நாம் முந்தைய கட்டுரை யிலேயே குறிப்பிட்டிருந்தோம். எனவே, அத்தகைய வேறுபாடுகள் தோன்றியதன் வரலாற்றுப் பின்னணி ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

“உற்றுழி உதவியும்..” எனத் தொடங்கும் இப்புற நானூற்றுப் பாடலில், ‘கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பாலொருவனு மவன்கட் படுமே’ என்று வருகிறது. அதாவது நான்காம் வர்ணத்தவருக்கு கல்வி உண்டென்பது தமிழ் மரபு. வட மரபில் நான்காம் வர்ணத்தவருக்குக் கல்வியில்லை. எனவே, இரண்டும் வெவ்வேறு என்பது ஒரு சாரார் கருத்து. உண்மையில் போரில் சிறைப் பிடிக்கப்பட்டவர்களே நான்காம் வர்ணத்தவர் எனும்போது அவர்கள் அரச வர்ணத்தவராக இருப்பர். அவர்களுக்கு ஏற்கெனவே கல்வி புகட்டப் பட்டிருக்கும். எனவே அவர்களின் வாரிசுகளுக்கு உரையாசிரியர்கள் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் சொல்வதைப் போல வேத மொழிந்த கல்வி உண்டு. மனு தர்மம் பத்தாவது அத்தியாயம் 127 வது சுலோகம் வருமாறு : “தன் குலக் கடமை களை உணர்ந்த நாலாம் வருணத்தவர், துவிஜர் களின் தருமமான யாக யக்ஞங்களைத் தானும் மேற்கொள்கையில், வேத மந்திரங்களைப் பயன் படுத்தாமல், ஸ்தோத்திர மந்திரங்களால் ஐம்பெரும் வேள்விகளைக் குல வழக்கப்படி மேற்கொள்வ தனால் உலக நிந்தைப் பட்டு உழலாமல் நற்புகழ் வந்தெய்தும்” என்கிறது.

அரசனுக்கு இப்பணியைச் செய்ய வேண்டியது யார் என்றும் அர்த்த சாஸ்திரம் தெளிவு படுத்தியுள்ளது. கணிகையர் (வரைவின் மகளிர்) குறித்து விவரித்துச் செல்லும் இரண்டாம் அதி காரணம். இருபத்தாறாம் பிரகரணம், நாற்பத்தெட் டாம் அத்தியாத்தில், “கணிகை மகன் எட்டாம் யாண்டு தொடங்கி அரசனுக்கு இசை பாடு வோனாக இருத்தல் வேண்டும்” என்கிறது.

மனு தர்மமும் கூட நான்காம் வருணத் தவராக, போரில் சிறைப் பிடிக்கப் பட்டவர்களையே முதன்மையாகச் சொல்கிறது. அதாவது அடிமை நிலையில் இருந்தவர்களையே பட்டியலிடுகிறது. இது ஐரோப்பிய சமூக இலக்கணத்துடனும் தமிழ்ச் சமூக இலக்கணத்துடனும் நெருங்கி இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் - ப்ராவாஹன்
Permalink  
 


ஆங்கிலேயன் கால்டுவெல் சொன்ன உளுத்துப்போன கருத்துக்களும். அந்த இத்துப்போன கருத்தை வைத்துத்தான் இந்த திராவிட டுமீலர்கள் தங்கள் வாதத்தை வைக்கின்றனர். 
அதற்கு ஆதாரமாக இவர்கள் சொல்வது சிந்து சமவெளி நாகரீகம். அது திராவிடர்களுடையது. ஆரியர்களின் படையெடுப்பால் அது அழிந்து விட்டதாக ஒரு வாந்தி வாதத்தை வைக்கின்றனர்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் காலகட்டத்தை பற்றி பல தகவல்கள் இருந்தாலும் கூட கி.மு 3,500 ல் இருந்து கி.மு 1,700 இதற்குள் அந்த நாகரிகம் பற்றிய காலகட்டம் அடங்கி விடுகிறது.

இந்த காலகட்டத்திற்குள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக படையெடுத்து வந்த ஆரியர்கள் அந்த திராவிட நாகரிகத்தை அழித்தார்களாம்.

ஆக கி.மு 3500 க்கு முன்னதாக ஆரியர் என்ற இனம் இந்தியாவில் இல்லை, அதற்கு பின்னால் தான் ஆரியர்களின் வரலாறு இந்தியாவில் ஆரம்பமாகிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் இப்போது தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம். எனக்கு தெரிந்து தொல்காப்பியத்திற்கும் மேலான ஒரு பழமையான நூல் தமிழ் இலக்கியத்தில் கிடையாது.

தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)

இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?

மாயோன் திருமால் எனவும், வருணன் வேதங்களில் குறிப்பிடும் வருணபகவான் எனவும் உறுதியாக எடுத்துக்கொள்ளலாம். 
சேயோன் என்பது தமிழ் கடவுள் முருகன், சிவன் இருவரில் யாரை குறிக்கிறது என்பதில் தமிழறிஞர்களிடையே இன்று வரை பலத்த சர்ச்சை நிலவுவதால் நாம் அதை விட்டு விடலாம். 
இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தொல்காப்பியத்தின் காலம். கி.மு. 8000 ல் இருந்து கி.மு. 20,000 வரையாக பல காலகட்டங்களை தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
கைபர், போலன் கணவாய் வழியாக கி.மு 3500 க்கு பிறகு வந்த ஆரியர்களின் வேதங்களில் உள்ள திருமாளும், வருணனும் எப்படி அதை விட பழமையான தொல்காப்பியத்திற்குள் வந்தார்கள்...? 
ஒரு வேளை, தொல்காப்பிய காலத்தில் திராவிடர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தில் ஏறி கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்று தொல்காப்பியர் திருமாளையும், வருணனையும் பிடித்துக்கொண்டு வந்து தொல்காப்பியத்தில் வைத்திருப்பாரோ...?
---------- ----------- ------------------

இது தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.

-தொல்.பொருளதிகாரம்—1038

 

தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.

எட்டுவகைத் திருமணங்களின் விவரம்

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம்

பிராம்மம் வகைத் திருமணங்கள்.

இந்த எட்டு வகை திருமணங்களில் நமக்கு தேவையானது முதலாவது வகை திருமணம் பற்றிய தகவல்கள் மட்டுமே. பதிவின் நீளத்தை கருதி மற்றவற்றை விட்டு விடலாம். முதல் வகையை மட்டும் பார்க்கலாம்.

வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.

இதில் வேதம் ஓதுகின்ற மாப்பிள்ளை யார்....? அவன் எந்த வேதத்தை ஓதினான்...? ஆரியர்கள் கி.மு 3500 ல் வந்தார்கள் என்றால் கி.மு 8000 ல் வேதம் ஓதும் மணமகன் எப்படி தொல்காப்பியத்தில் வந்தான்....? 
திராவிட டுமீலர்கள் இதற்கு விளக்கம் சொல்வார்களா....?

ஆக பிரம்மம் முறையில் திருமணம் செய்ய பெண்ணை பெற்றவர்கள் இங்கிருந்து திராவிடன் ஏர்லைன்ஸ் விமானம் பிடித்து கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்று வேதம் படித்த மாப்பிள்ளைகளை பிடித்து வந்துள்ளார்கள். 
---------- ------------- -----------------

தொல்காப்பியம் மரபியல்:...

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)

முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)

அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)

தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...? கி.மு 3500 படையெடுத்து வந்த ஆரியர்கள் தான் அந்தணன் என்றால் அவன் எப்படி கமண்டலம், முப்புரி நூல், அமரும் பலகை உடன் எப்படி தொல்காப்பியத்திற்குள் வந்தான்...? அவனுக்குரிய அடையாளங்களை எப்படி தொல்காப்பியரல் சொல்ல முடிந்தது. அந்த அந்தணனன் எந்த தெயவத்திற்காக காட்டில் தவம் செய்தான். 
இதன் மூலம் நாம் கீழ்கண்டவற்றை விளங்கிக்கொள்ளலாம்.

அந்தணன் திராவிடன் ஏர்லைன்சில் தமிழகம் வந்து கமண்டலம், முப்புரி நூல், பலகை சகிதமாக காட்டில் ஷகிலாவின் தரிசனத்திற்காக தவம் செய்துள்ளான். 
---------- --------- -------

இந்த திராவிட டுமீலர்கள் சிவனையும்,விஷ்ணுவையும் ஆரிய கடவுள்கள் எனவும், அது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கிறது எனவும் ஊளை விட்டு மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர். கூடவே தமிழ் மொழியின் காவலர்கள் என்றும் பெருமை பீத்தல் வேறு.

தமிழர்களின் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, 
இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....! அதற்கு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். 
பகுத்தறிவு என்ற பெயரில் சிவன், விஷ்ணுவை பற்றிய குறிப்புகள், துதிகள், புகழ் மாலைகள் உள்ள இந்த நூல்கள் அனைத்தையும் குப்பையில் எறிய போகிறார்களா....? செருப்பால் அடிப்பான் தமிழன் இந்த பகுத்தறிவு பகலவன்களை. இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ இந்த திராவிட திருடர்களால் நிறுவ முடியுமா....? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா......?

உண்மையை சொன்னால் இவர்கள் தமிழை காப்பாற்றுபவர்கள் அல்ல. தமிழை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு பகுத்தறிவு என்ற பெயரில் தொன்மையான தமிழனின் வரலாற்றை அழிக்கும் தமிழின துரோகிகள்.

ஆரியம், திராவிடம் என்று பொய்களை அவிழ்த்து விட்டு கொள்ளையடிக்கும் கும்பலிடம் நாம் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளோம். இல்லாத ஆரியத்தின் பெயரில் இப்படியும் ஒரு மானங்கெட்ட பிழைப்பு. 
இந்த இன துரோகிகளை இனியும் இப்படியே விட்டு வைத்தால் தமிழ் நூல்கள் அனைத்தும் அழியும். தமிழ் நூல்கள் அழிந்தால் தமிழ் மொழியும் அழியும். தமிழ் மொழியே அழிந்தால் வரலாற்றில் இன்று நாம் அழிந்து போன சிந்து சமவெளி நாகரிகத்தை படிப்பது போல, அழிந்து போன தமிழனின் நாகரிகத்தை பிற்காலத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard