New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹிந்து கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:!!!!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஹிந்து கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:!!!!
Permalink  
 


 

Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:
-----------------
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்? இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?

4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன? அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?

5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை?

7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன? இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?

8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?

9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும்? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்? மானைக் கொல்வது தவறில்லையா?ا

 



-- Edited by Admin on Tuesday 9th of May 2017 05:32:13 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஹிந்து -Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:
Permalink  
 


11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா?

12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்?

14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை?م

15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா?

என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஹிந்து -Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:
Permalink  
 


 தமிழச்சி அய்யர் 1. பாரத நாகரீகத்தின் தொன்மை வளம் அறியாத உளறல். மகாபாரத காந்தாரம் - ஆபிகான் கண்டஹார். மேலும் சிந்து சரஸ்வதி நாகரீகம் பாரதம், பாக்கிஸ்தானம் , ஆப்கான் வரை மட்டுமின்றி பாரசீகம் - எகிப்து வரை நீண்டு இருந்தது. 

பைபிளின் எல்லோஹிம் - அல்லஹ்தும் - தமிழ் எல் என்பதன் மீட்பே
சுமேரிய சிற்பங்களில் இராமாயணம் உள்ளதுhttps://www.academia.edu/.../Comparative_Analysis_of_Ram...


-- Edited by Admin on Wednesday 17th of June 2015 04:02:57 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஹிந்து -Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:
Permalink  
 


 

  • தமிழச்சி அய்யர் 2. புழக்கத்தில் பொ.மு. 100 வாக்கில் தான் ஒட்டகம் வந்தது இஸ்ரேலில். ஆனால் கட்டுக்கதை ஆபிரகாம் வீட்டில் ஒட்டகம் என தௌரத்தில்.
    புழங்கும் மிருகம் பயன்படுத்தல் ஹிந்து புராணங்களில்
    Like · Reply · 4 · Yesterday at 1:58pm · Edited
  •  
    தமிழச்சி அய்யர் 3. தவறு - கிருஷ்ணர் ஆயராகத் தான் காணப்பட்டார். 
    வள்ளி காட்டு வேடன் மகள்
  •  
    தமிழச்சி அய்யர் 4- 5 ) மனிதனின் பாவம் பெறுக தங்களை இறைவன் மறைத்துக் கொண்டான் ஹிந்து புராணங்களில்.
    அவ்வப்போஅது இறையடியார்கள் மூலம் வெளிக் காட்டுகிறார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  • தமிழச்சி அய்யர் 6 நடக்கும் செயல்கள் எல்லாம் உமக்குப் புரியாது. இன்று கூட்டிய ஆயுளே தண்டனை. மகன் - மகள் சாக, ஜெயில் செல்ல வாழ்வதே தண்டனைகள்
  •  
    Naga Wara முடிந்தால் அந்த Dr.சுனில் அவர்களை இங்கே டேக் பண்ணுங்க, அவரும் தெரிஞ்சுகட்டும்
  •  
    தமிழச்சி அய்யர் 7. பிரம்மத்தோடு இருந்த ஆபிராம், இறைவனிடம் விலக ஆபிரகாம் ஆனான்.
    இறைவனை அடைய சுய முயற்சி தேவை. ஆனால் அரசின் ஆட்சிக் கத்தி பலத்தால் தான் ஆபிரகாமியம் வளர்ந்தது. அது அதன் பொய்மையை சொல்லும்.https://www.facebook.com/groups/1438673579744564/permalink/1605087716436482/


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  • தமிழச்சி அய்யர் 8.அரசர்கள் ஆட்சித் தந்திரம், போர் தடுக்க போன்றது
  •  
    தமிழச்சி அய்யர் 9. இறைவன் எது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வான். இது ஒரு தத்துவத்தை விளக்க செய்யப்பட்டது
  •  
    தமிழச்சி அய்யர் 10. உணவு என்பது- தேவை - கிடைப்பதெற்கேற்ப. மற்றொன்று அரச குலத்தைச் சேர்ந்தவர் போரில் செல்ல சக்தி தேவை. கல்விப் பணியில் இருந்த அந்தணரே அசைவம் தவிர்க்க வேண்டியவர்.
  •  
    தமிழச்சி அய்யர் 11. மனிதராகப் பிறந்து மனிதராக வாழ்ந்து காட்டியவர் இராமர். தன் தெய்வீகத்தை பயன்படுத்தவில்லை - அது இராவணன் பெற்ற வரம் அடக்க
  •  
    தமிழச்சி அய்யர் 12 புராணத்தை விளிம்பில் இருந்து பார்த்தலின் தன்மை.
    இராவணன் பெற்ற வரம் : மனிதர் - வானரம் -கரடிகளால் தவிர மற்ற பல உருவுகளின் வெற்றி, எனவே இராமர் மனிதனாகவும், தேவர்கள் வானரம் -கரடிகளாய் பிறந்தனர்.
    தேவர்கள் தெய்வ வடிவு இராமனோடு முழுமையாய் பழகவில்லை என்றதால் மீண்டும் அவர்களுக்கு கோபிகை உருவம். கிருஷ்ணர் கோபிகை யாரையும் மணக்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் அவர் ஒரு வளரும் பருவத்தே விளையாட்டு
  •  
    தமிழச்சி அய்யர் 13.அர்த்தமற்ற பொய்
  • தமிழச்சி அய்யர் replied · 1 Reply
 தமிழச்சி அய்யர் 14.அது பாதிரிகள் பொய். உருவமற்ற நிலையில் தூணாக, ஆரம்பம் - முடிவு அற்றவர் என்பதே லிங்கம்http://www.hindunet.org/srh_home/1996_9/msg00266.html Re: ARTICLE : Swami Vivekanand on origins of Shiva LingamHINDUNET.ORGLike · Reply · Remove Preview · 4 · Yesterday at 2:35pm · Edited Naga Wara King Lloyd what super bro, jesus birth a?Like · Reply · 1 · Yesterday at 2:23pm தமிழச்சி அய்யர் 15.மனிதன் மூன்று நிலைகளில் உள்ளான். (Psychoanalysis)மனிதம், அரக்கம், தெய்வீகம் - இதில் நீங்கள் மூன்றாவது நிலை அடைய வேண்டும். ஆனால் அசைவ உணவு தவறான வழி காட்டுதலால் பெரும்பாலும் இரண்டாவது நிலையிலே உள்ளோம், அப்போது தான் காமம் வக்கிரமாகும், காமமின்றி இனப் பெருக்கம் இல்லை, நீங்களும் நானும் இல்லை. குளிக்கும் போது அந்தரங்க உருப்பை சுத்தம் செய்யாது முடியாது. அது போலே காமத்தை கலை வடிவில் படைத்தலும் கலையின் உச்ச கட்டம். நாம் மனநிலையில் உயர உண்மை புரியும்

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  
  • Jaffer Sathick தமிழச்சி அய்யர் 2 . நான் ஒட்டகம் ஏன் இல்லை என்று கேக்கவில்லையே .......அனைத்து மிருகங்களும் உள்ளூர் அல்லவா அது ஏன் என்று கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்....ஒவவுரு மிருகங்களும் ஒவ்வரு காலகட்டத்தில் வந்தாதா......அப்போ பூனை,எலி எல்லாம் எந்த காலகட்டத்தில் வந்ததுங்கோ??
    • தமிழச்சி அய்யர் நண்பரே என் பார்வை வரலாற்று கோணமே. 
      பொ.மு.1ம் நூற்றாண்டில் தான் யூதர்கள் ஒரு நாடாக ஒரு மதமாக இஸ்ரேல் - ஜெருசலேம் தலைமையில் இன்றைய வடிவில் மதமாய் ஆனது. 
      சாக்கடல் சுருள்களின் தௌரத்தில் ஆபிரகாம் பலி கொடுக்க சென்றது சமாரிய கெர்சிம் மலையில், இதையே என் ஆலயம் 
      என இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் யாவே சொன்னார் என உள்ளது. இன்றைய பைபிள் தயாரானது ஏசுவிற்கு 100 ஆண்டு முன்பே.
      எகிப்தில் யூதர்கள் வாழ்ந்ததில்லை. செங்கடல் வழிவிடவில்லை. இது குரானில் 80 சூறாவில் சொல்லப்பட்டுள்ளது.
      அந்த கட்டுக்கதைகளை குரான் உளறியது.
    •  
      Mansoor Babu Kuran onrum ulara villai.
      Moolgadikapatta king firon witk skin dead body u can see in the musium. As per quranic vitness.
    •  
      தமிழச்சி அய்யர் Egypt had a king. But there was no Jewish race of Abraham origin existed ever. Abraham - Moses -David - Solomon are all just fiction made by Jews. Entire Torah is a fabricated myth and repeated by Muhammad nabi in quran. In Egypt there is no proof of Hebrew living there


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  

    அறியாத கிறிஸ்தவரின் கேள்விகள்

    இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:

     

    1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்?

    இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

     

    பதில்:

    முதன் முதலில் இயற்கையை உணர்ந்து இறைவனை உணர்ந்து அவனை துதித்தவர்கள் இந்தியாவில் பிறந்த முன்னோர்கள். குமரிக் கண்டம் என்று சொல்லக்கூடிய கன்னியாகுமரிக்கு தெற்கே மிகப்பெரிய கண்டம் இருந்தது. இதில் தான் தமிழும் தோன்றியது. மனிதர்களும் தோன்றினார்கள். நாகரிகமும் வளர்ந்தது. Lemuria continent என்று மேற்கத்தியவர்கள் அழைக்கும் குமரிக்கண்டம் தொடர்ந்து வந்த கடல்கோள்களினால் (ஜப்பான் மொழியில் சுனாமி, ஆங்கிலமும் இந்த வார்த்தையை திருடிக்கொண்டு விட்டது) அவை கடலுக்குள் இன்று அமைதியாக மூழ்கி கிடக்கிறது. இதற்கான சான்றுகள் நம் சங்க கால பாடல்களில் பதிவாகியிருக்கின்றன. தமிழின் முதல் சங்கம் இரண்டாம் சங்கம் இங்கு தான் நடைபெற்றதாக குறிப்புகள் பதிவாகியுள்ளன. குமரிக்கண்டம் பற்றிய மேலும் அரிய தகவல்கள் http://vazhikaatti.webs.com என்ற தளத்தில் உள்ளது.

    இவ்வாறு இருந்த நாட்டில் மக்களின் வேண்டுதலுக்கு இணங்கவும், உயிர்களை உய்விக்கவும், அந்த உருவம் இல்லாத இறைவன், மனித உருவாய் தோன்றினான். தாயின் வயிற்றில் உயிர்கள் முதலில் எடுக்கும் உருவம் சிவலிங்கம் போன்று இருக்கும். இதை அருவுருவம் என்று கூறுவர். எல்லா உயிர்களும் இந்த வடிவத்தையே முதன்முதலில் பெறுகின்றன. இறைவனும் இவ்வுருவிலேயே முதலில் தோன்றி பின்னர் உருவம் பெற்று பல திருவிளையாடல்களை நடத்தியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இறைவன் ஒருவனே என்ற தத்துவம் தெளிவாக சைவ சித்தாந்தங்களில் உள்ளது.

    இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களை அறிந்திருக்கவில்லை என்பது தவறான கருத்து. உங்களுக்குத் தெரியவில்லை. கிறிஸ்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே சைவசமயம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. உலகம் முழுவதும் சிவன் கோவில்கள் இருந்தன. இந்தோனேசியா, கம்போடியா, கனடா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று பூமிக்கடியில் புதைந்து போன சிவன் கோவில்கள் இன்றும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவையாவும் சைவ சமயம் உலகெங்கும் பரவியிருந்ததற்கான சான்றுகள். சற்றே ஆராய்ந்து பாருங்கள். இதற்கான ஆதாரம் கொட்டிக்கிடக்கின்றன. பின்னர் வந்த கிறிஸ்தவமும், இசுலாமும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்து சமயத்தை எதிர்த்து அழித்தனர்.

     

    2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்?

    ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

     

    பதில்: அருமையான கேள்வி. மிருகங்களும் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு உருவங்கள் பெற்றன. தொல்லியல் துறை தான் இதை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். இறைவன் இந்த தெற்கு நாட்டு குமரிக்கண்டத்திலிருந்து உலகம் எங்கும் பரவியதாலேயே இவ்வாறு பெற்றன.

     

    3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்?

    ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?

     

    பதில்: அனைத்து கடவுள் என்று கூறுவதே தவறான கேள்வி. இறைவன் ஒருவனே என்பது சைவ, இந்து சமயங்களின் ஆழமான கருத்து. சைவ சித்தாந்தத்தை படியுங்கள். இதற்கு விடை கிடைக்கும். இறைவனின் பல்வேறு குணங்களை பல்வேறு அங்கங்களாக பிரித்து பார்க்கும் அறிவே, பல்வேறு சிறுதெய்வங்கள் உருவாக காரணம். எப்படி Microsoft என்ற ஒரு அலுவலகத்தில் பல்வேறு அதிகாரிகள் இருக்கின்றனரோ, அவர்கள் யாவரும் மைக்ரோசாப்ட் என்ற பெயரில் ஒன்றானவர்கள். அது போலவே. ஒரு பூவில் வெவ்வேறு பல இதழ்கள் இருந்தாலும் பூ ஒன்று தானே. அது போல உள்ள தத்துவமே. இறைவன் ஒருவனுக்கு அவன் செயல்களின் தன்மையை பொறுத்து பல ஆயிரம் பெயர்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இறைவன் ஒருவனே. குலம் என்பதற்கு உங்களுக்கு பொருளே தெரியவில்லை. குலம் என்பது குணமாகும். நல்ல குணங்களை கொண்ட குடும்பங்களை நற்குலத்தோர் என்பர். இறைவன் இழிந்த தாழ்வான குலத்தில் இருக்க வாய்ப்பே இல்லை. சாதி என்பது சமுதாய சீர்கேடு. எவ்வாறு நிறவெறி, இனவெறி கிறிஸ்தவத்திலும் இசுலாமிலும் உள்ளதோ அதுபோல சாதியை தவறாக பயன்படுத்தியவர்களால் இந்த நிலை. இவர்கள் எங்கிருந்தாலும் எந்த system இருந்தாலும் இந்த இழிவான செயலை செய்வர். சாமிக்கு குலமும் இல்லை கோத்திரமும் இல்லை. இறைவன் மனித தன்மைகளுக்கு அப்பாற்பட்டவர்.

     

    4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன?

    அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?

     

    பதில்: அருமையான கேள்வி. இதை கேள்வியை தான் ஒரு மன்னன் சேக்கிழார் பெருமானிடம் கேட்டான். சந்தனம் பூசுவது, அபிஷேகம் செய்வது எல்லாம் இறைவனுக்கு தேவையில்லை. ஆனால், மனித தன்மையுள்ள நாம், இறைவனை கொண்டாடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே.. வெறுமனே கண்களை மூடிக்கொண்டு நினைத்தால் இறைவன் தெரிவானா ?  புரிந்தவர்களுக்காவது பரவாயில்லை. குழந்தைகள் எப்படி இறைவனை கண்களை மூடிக்கொண்டு அறிவார்கள். இவர்களுக்காகத் தான் உருவ வழிபாடே. இறைவனை உணர்ந்து மனதில் நினைக்க தெரிந்தவனுக்கு உருவவழிபாடு தேவையில்லை. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர் உறவினர்களுக்கே நாம் தடபுடலாக விருந்து வைக்கிறோம். சாதாரணமாக சோறும் குழம்பும் சாப்பிட்டாலே அவர்களுக்கு வயிறு நிறைந்து விடுமே. ஆனால், நாம் வாழையிலை போட்டு எத்தனை கூட்டு, எத்தனை கறி, எத்தனை விதமான உணவு படைக்கிறோம். நம் உறவினர்களுக்கே இவ்வாறு செய்யும் போது, இந்த உலக்தையே ஆளும் இறைவனுக்கு நாம் செய்யமாட்டோமா ?  நம் மன திருப்திக்காகத்தான் அபிஷேகங்களும், ஆராதனைகளும். இவையெல்லாம் இறைவனை மனதில் நிறுத்தி அவனை வணங்குவதற்கு எளிதாக்கவே செய்யப்படுகின்றன.

     

     

    5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

     

    பதில்: அவன் எங்கோ இருந்து கொண்டு இங்கு பூமிக்கு வருவது என்ற கற்பனையே இந்த கோளாறான கேள்விக்கு காரணம். உங்களுக்கு இன்று காலை உணவு எப்படி கிடைத்தது ? யார் கொடுத்தார்கள் ? எங்கிருந்து வந்தது ? உருவம் இல்லாத இறைவன் பல்வேறு உருவில் உங்களோடு கூடவே இருக்கிறானே. புலியின் பசிக்கு மான் பலியாகிறது. இங்கு புலி பாவம் செய்கிறதா ? பாவமும் புண்ணியமும் நம் பார்வையில் தான் இருக்கிறது. நமக்கு இன்பத்தை கொடுப்பதை புண்ணியம் என்று கஷ்டத்தை கொடுப்பதை பாவம் என்றும் கருதுவது மனித இயல்பு. ஆகவே, இறைவன் இங்கேயே இருக்கிறான். அவனுக்கு நடப்பது எல்லாம் தெரியும். எல்லாம் ஓர் காரணத்திற்காகவே நடத்துகிறான். தன்னை எல்லோருக்கும் தகுந்த நேரத்தில் புரிய வைத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

     

    6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

    அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை?

     

    பதில்: ஹாஹா... உத்தரகாண்டை இழுப்பது உங்கள் அரசியல் புத்தியை காட்டுகிறது. பரவாயில்லை. இப்போது தான் ஒரு வெள்ளை நிற கிறிஸ்தவன் கருப்பு நிற கிறிஸ்தவர்கள் வழிபடும் சர்ச்சுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டானே, அப்போ, அவனை இயேசு கிறிஸ்து தான் சுடச் சொன்னாரா ?  பிறப்பதும் இறப்பதும் உயிரினங்களின் தன்மை. உத்தரகாண்டில் சாகாமல் தப்பித்தவர்கள் இவ்வுலகில் என்றும் நிரந்தரமாக இருக்க போவதில்லை. அவர்களும் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தானே ? எவனுக்கு எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது தான் நடக்கும். இப்பூமியில் யாரும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. மரணத்தை வென்றவன் இறைவன் ஒருவனே. அவன் மட்டும் தான் இங்கு எப்போதும் இருப்பான். புராணங்கள் சொல்வது ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே. பல்வேறு நிகழ்வுகளில் இறைவன் அநியாயம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த கேள்விக்கு இந்து சமயத்தை தவிர வேறு எந்த மதத்திலும் சரியான பதில் இல்லை. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்யும் பாவ புண்ணிய செயல்களை பொருத்தை அதன் அடுத்து பிறவியின் நோக்கமும் செயல்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறவி சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கும் தன்மை கொண்டது. அது இறைவன் அடி சேரும் வரை. இறைவன் அடி சேர்வது இறைவன் அருளினாலே ஆகும். ஆகவே தான் நம் முன்னோர்கள் பிறவி என்னும் துன்பம் வேண்டாம், உன் அடி சேரும் அருளை வேண்டினார்கள்.

     

    7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை?

    இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன?

    இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன?

    ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?

     

    பதில்: உங்களுக்கு தெரிந்த வரலாறு 2000-3000 வருடத்திலேயே முடிந்து விடுகிறது. கிறிஸ்தவமும் இசுலாமும் இவ்வாறே சொல்கிறது. கடவுள் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் 7 நாளில் உலகை படைத்தார் என்று. இதை தவறு என்று அறிவியல் நிரூபித்த பின்னர் தான், கிறிஸ்வம் பல்வேறு நாடுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. உங்களுக்கு தெரியுமா ? கடந்த 7 ஆண்டுகளில் 50 லட்சம் அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மதத்தை தூக்கியெறிந்து விட்டனர். இது பிபிசி செய்தி. வலையில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். இறைவனை பற்றிய முதன்முதல் சிந்தனை இந்த பாரத கண்டத்தில் தான் தோன்றியது. நான் ஏற்கனவே கூறிய குமரி கண்ட வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள்.

    கிறிஸ்தவமும் இசுலாமும் மதம் பரப்புவதற்கு என்றே மிஷனரிகளை உருவாக்கி, உலகில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று எவ்வாறு கல்வி, மருத்துவம் போன்று துறைகளில் மெதுவாக நுழைந்து கிறிஸ்தவத்தை பரப்ப முடியும் என்பதை உலகை ஏமாற்றி பணம் சம்பாதித்த பணக்கார முதலைகள் யோசித்து யோசித்து அமெரிக்க நாட்டில் மதம் பரப்பும் வியூகங்களை அமைத்து திட்டமிட்டு ஏமாற்றி தங்கள் மதத்தை பரப்பி வருகின்றன. ஆனால் பொய் நிற்காது, அழிந்து விடும். இதற்கு சான்றாகவே கிறிஸ்தவம் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அழிந்து வருகிறது. இதை காக்கவே, இயேசு கிறிஸ்துவை பற்றி தெரியாத, வரலாறு அறியாத மக்களிடம் வேகமாக பரப்ப முயற்சி செய்து வருகின்றனர். நீங்கள் நம்பவில்லை என்றால், “decline in Christian population  America Australia united kingdom Europe” என்று கூகுள் செய்து பல்வேறு செய்திகளை ஆராந்ய்ந்து பாருங்கள். கிறிஸ்தவம் உலகிலிருந்து கூடிய விரைவில் அழியும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவம் என்ற வார்த்தையே கிடையாது. மத அரசியல் செய்வதற்கே இது உருவாக்கப்பட்டது. நாம் இந்த பாரத கண்டத்தில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம்.

     

    8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?

     

    பதில்:  இறைவனுக்கு ஏதடா திருமணமும் குழந்தை குட்டிகளும் ?  சமூகத்தின் பார்வையும் கட்டுபாடுகளும் பண்பாடுகளும் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய சட்டதிட்டங்களை வைத்து வேறு ஒரு காலத்தின் செயல்பாடுகளை ஆராய்வது தவறு. இந்த காலத்து மன்னர் கருணாநிதி கூட பல்வேறு மனைவியர் வைத்திருக்கிறார். ஆனால் சட்டத்தில் ஒருவர் ஒரு மனைவியைத் தான் திருமணம் செய்ய முடியும் என்று இருக்கிறது. இன்றைய காலத்தில் இந்த சட்டம் இருக்கும் போது, தலைவர் ஒருவரே அந்த சட்டத்தை மீறி இருக்கிறார். நாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் சட்டங்களையும் நடைமுறைகளையும் பண்பாடுகளையும் தெரியாமல் கண்மூடிக்கொண்டு கேட்பதால் பயன் இல்லை. 1000 மனைவியர் வைத்திருந்தவர் அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார். சட்ட திட்டங்களும் தான் இருக்கின்றன.

     

    9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்?

    ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும்? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

     

    பதில்: சர்வ வல்லமை படைத்தவரே கடவுள். தான் வல்லமை படைத்தவர் என்பதற்காக இன்றே கூட அவரால் இவ்வுலகை அழிக்க முடியும். நாம் ஒவ்வொருவரையும் நிற்க வைத்து 100 பிரம்படி கூட தான் அவரால் கொடுக்க முடியும். ஆனால் அவர் அதை ஏன் செய்வதில்லை ?  இறைவன் என்றாலும், ஒரு வரைமுறைக்கு உட்பட்டே இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறான். ஆகவே, அந்த வரைமுறைகளை அவன் தேவையில்லாமல் மீறுவதில்லை.

    அப்பாவி யானை அல்ல. அது இறைவனுக்கு எதிர் வினைகளை செய்து வந்த யானை. அது தான் அதன் விதி. அதற்கு கிடைத்த பேறு பெரும் பேறு அல்லவா. விநாயகரின் தலையாக மாறுவதற்கு அது முப்பிறவிகளில் என்ன தவம் செய்ததோ ?

    ஆட்டின் கண்ணை எடுத்து மனிதனுக்கு பொருத்தினால் அவரை விஞ்ஞானி என்று கூறிகிறீர். யானையின் தலை மனிதஉடலோடு பொருத்திய விஞ்ஞானிகளின் தலைவன் அவன்.

     

    10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்? மானைக் கொல்வது தவறில்லையா?ا

     

    பதில்: வேட்டையாட சென்றார். ஆனால், ஏதாவது மானைக் கொன்றார் என்று எங்காவது குறிப்பு இருக்கிறதா ?

     

    11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை?

    ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா?

     

    பதில்: ராமர் கடவுளின் அவதார உருவமாகும். கடவுளாகவே இருந்தாலும், அவரும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டே இயங்குகிறார், இயக்குகிறார். அவரால் எல்லாவற்றையும் உடனே அழித்து செய்ய முடியும், ஆனால் ஏன் செய்யவில்லை ?  அதே வரைமுறைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு அவன் வெற்றி பெற்று காட்டுகிறான்.

     

    12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்?

    தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா?

    அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

     

    பதில்: இந்த காலத்து swimming pool போனால் பல்வேறு பெண்டிரும் குழந்தைகளும் குளித்துக்கொள்வதை பார்க்கிறோம். நம் கண்களில் காமம் இல்லையே. காமம் இருக்கும் கண்களும் இருக்கின்றன. ஒருவர் தன்னைப் போலவே அடுத்தவரையும் நினைப்பது மனித இயல்பு.

     

    13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்?

     

    பதில்: ஹாஹா... நீங்கள் வெறும் இந்து செய்திகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் என்பது இந்த கேள்வி மூலம் புலப்படுகிறது. NUN sex pastor sex rape என்று கூகுள் செய்து பாருங்கள். பாதிரியார்களின் பல பித்தலாட்டங்கள் உலகம் முழுவதும் இருப்பது தெரியும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் மதங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும் குற்றம் புரிவர்.

     

    14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை?م

     

    பதில்: அது ஆண் உறுப்பு அன்று. ஆணும் பெண்ணும் இணைந்த உருவம். அது இல்லையென்றால், இந்த உலகமே இல்லை. ஆணும் பெண்ணும் இணையவில்லையென்றால், இவ்வுலகில் உயிர்கள் இருக்காது. நீங்களும் ஓர் ஆண் பெண் இணைந்து தான் இந்த உலகில் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர். இதை கேவலமாக பார்க்கும் மனப்பக்கும் காலம் காலமாக நம்மிடம் இல்லை. இதை கேவலமாக பார்க்கும் பக்குவம் மேற்கத்திய கலாச்சாரத்தினுடையது. கேவலமாக பேசிவிட்டு அவர்களே இதை தினமும் செய்வார்கள். என்னே முரண் ?

     

    15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா?

    உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா?

     

    பதில்: காமம் என்பதை வன்மையாக பார்ப்பது மேற்கத்தியவர்களின் கலாசாரம். புனிதமாக பார்ப்பது இந்திய பண்பாடு. காமம் இல்லையென்றால் உயிர்கள் பிறக்காது. உயிர்கள் இல்லையென்றால் உலகமே இயங்காது. இவ்வுலகம் இன்று இயங்க மூல காரணமே காமம் தான். அது விரசம் அல்ல. நம் முன்னோர்கள் சொன்னால் கேட்கமாட்டீர். வெளிநாட்டுக்காரன் காமசூத்ரா னு படம் எடுத்தா, மிகுந்த விலை கொடுத்து டிவிடி மட்டும் வாங்கி பார்ப்பீர் ?

    என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்!

    இன்னும் கேளுங்கள். தெளிய தெறிய தான் அறிவும் ஊறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்? கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா? பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா? அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது? இப்படிப்பட்ட சிற்பங்கள், வடக்கில் மட்டும் இல்லாமல், நம்ம தெற்கிலும் ஒரு மிகப் பெரிய கோவிலில் இருக்குதுங்க அய்யா. சரியான புகைப்பட ஆதாரத்துடன் சீக்கிரம் உங்களுக்கு அனுப்பறேன். ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

பதில்; கோவில்களில் உடலுறவுச்சிலைகள் மட்டும் இல்லை. வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கும்.

இந்தச்சிலைகள் இரு பெரும் மரபுகளைச் சார்ந்தவை. நிலவளம் பெருகுவதற்காகச் செய்யப்படும் வளச்சடங்குகள் [விருஷ்டி அனுஷ்டானங்கள்] தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலேயே உள்ளவை. அவை போகத்தை செழிப்பின், உயிர் உற்பத்தியின் குறியீடாகக் காண்கின்றன. இறைவனின் லீலையின் கண்கூடான ஆதாரம் அது எனப் புரிந்து கொள்கின்றன.

ஆகவே சூரியனை வழிபடும் சௌர மதத்தில் அச்சிலைகள் பெருமளவு இருந்தன. பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்தபோது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற்றன.

காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை தாந்த்ரீக மதங்கள்.அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அந்தத் தாந்த்ரீக மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. சைவ, சாக்த ஆலயங்களில் அவை காணப்படுகின்றன.

இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.

எளிமையான கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் சிற்பங்கள் மட்டும் இல்லையேல் உங்களுக்கு மன ஒருமை கைகூடி விடுகிறதா? உங்கள் மனதில் காமம் எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டுதானே இருக்கிறது? அது நிகழாத, வேறெதிலாவது உங்கள் மனம் நிலைத்திருக்கக்கூடிய, எத்தனை மணிநேரம் வாய்க்கிறது உங்கள் வாழ்க்கையில்?

காமச்சிற்பங்கள் தேவை இல்லை என்றால் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லலாமே.அவர்களைப்பார்த்தால் காமசிந்தனை வரலாமே. ஏன் பெண்கள் வராவிட்டால்கூட மல்லிகை மணம் வந்தாலே போதுமே? இசை, ஓவியம் எதுவாக இருந்தாலும் அதே காம ஈர்ப்பு நிகழலாமே?

மன ஒருமை எதையும் இறுக்கமாக மூடிவைப்பதன் வழியாக நிகழ்வதில்லை. பிரச்சினை மனதில் இருக்கிறது, வெளியே அல்ல. கொஞ்சம் கண்மூடினால் அந்தச் சிற்பங்களை விட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமாக உங்கள் மனதில் பிம்பவெளி ஓடுவதை நீங்களே காணலாம்.

எல்லாம் கடவுளின் லீலை என நம்பி ஏறிட்டே பார்க்காமல் நேராகச் சென்று கும்பிட்டு மீள முடிந்தால் அதைச்செய்யுங்கள். அது பக்தியின் வழி. நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் அதையே செய்கிறார்கள்.

அது ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை. அனைத்தையும் ஒரு மாபெரும் கட்டுமானத்தின் பகுதிகளாகக் காணும்போது உருவாகும் முழுமை நோக்கு மூலமே நாம் விடுபடுகிறோம



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஹிந்து கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:!!!!
Permalink  
 


இஸ்லாம் - கிறிஸ்துவம் ஒரு ஒப்பீடு.

இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை எளிதில் சொல்லி விடலாம்.

இதற்கென்று பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.

உழைத்து பிழைக்காத சோம்பேறிகள் முகமது, கிறிஸ்து இருவர் உருவாக்கியது தான் இஸ்லாத்தும், கிறிஸ்துவமும்.

இருவரும் ஆடு மேய்த்தவர்கள்.

ஆடு மேயக்க கூட தகுதியில்லாமல் இருவரும் உளறியதுதான் பரம்பிதா, அல்லா.

இருவரின் பின்னாலும் சீடர்களாக சென்றவர்கள் வெட்டி முண்டங்கள் தான். உடம்பு நோகாமல் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இருவரும்.

இருவரும் உளறியது தான் வேதமானது.

இந்த வேதங்களை பின்பற்ற மூளை இருக்க கூடாது. மூளை இருந்தாலும் அது ஒர்க்கிங் கண்டிசனில் இருக்க கூடாது.

பைபிள், குரானை தாண்டி தர்க்க ரீதியாக அறிவியல் ரீதியாக சிந்தனை செய்வது பரம்பிதாவான இயேசு, அல்லாவிற்கு எதிரானது.

ஒருவன் இயேசுவை பின்பற்ற ஐரோப்பிய ஆங்கில பெயரும், அல்லாவின் வழிகாட்டுதலை பெற அரேபிய பெயரும் அவனுக்கு கட்ட்டாயம் தேவை. அது இல்லாதவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.

பரம பிதாவுக்கு சாட்சி இயேசு. அல்லாவுக்கு சாட்சி முகமது. பரமபிதாவின் வசனங்களை தான் இயசு சொன்னார். அல்லாவின் வசனங்களைத்தான் முகமது சொன்னார். இதை நம்புபவர்கள் மட்டுமே கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியனாகவும் இருக்க முடியும். நம்பாதவர்கள் ரிஜக்ட்டட்.

அல்லா ஒரு ப்ரீ பெயட் இறைவன். இயேசு ஒரு போஸட் பெய்ட் கடவுள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என அனைத்திற்கும் அல்லா முன் அனுமதி கொடுத்து விட்டார். சகோதரி, மருமகள் எவர் கூடவும் உறவு வைக்கலாம் தவறு இல்லை.

இயேசு ஒரு போஸ்ட் பெய்ட் இறைவன். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சகோதரி,தகப்பன் என்று முறை தவறிய பாலியல் வக்கிரங்கள் என்று எதுவானால் செய்து விட்டு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிப்பு கொடுத்து ஏற்றுக்கொள்வார்.

கோவில் இடம் எங்கு பார்த்தாலும் கிறிஸ்தவர்கள் அதற்கு முன்னுரிமை கொடுத்து தேவாலயம் கட்டுவார்கள். முஸ்லிம்கள் கோவில் இடம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வேறு இடத்தில் மசூதி கட்டுவார்கள்.

கிறிஸ்தவர்கள் மலை மேல் சிலுவை நட்டு வைப்பார்கள். முஸ்லிம்கள் இந்துக்களின் சிலையை அகற்றி விட்டு பிறை நிலா சின்னத்தில் கோபுரம் வைப்பார்கள்.

இருவருமே இந்தியத்தை ஏற்க மாட்டார்கள். ஆனால் இந்து மக்கள் அல்லாவையும், இயேசுவையும் ஏற்க சொல்வார்கள்.

இஸ்லாம் கேவலமான சொர்க்கத்தை காட்டி ஆள் பிடிக்கும். கிறிஸ்தவம் செய்த கேவலங்களுக்கு மன்னிப்பு கொடுப்பதாக சொல்லி ஆள் சேர்க்கும்.

அல்லாவின் வம்சாவளி அரேபியாவில் பிச்சை எடுத்து அல்லாவை இந்தியாவில் காப்பாற்றுவார்கள். இயேசுவின் வம்சாவளி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிச்சை எடுத்து இயேசுவை இந்தியாவில் காப்பாற்றுவார்கள்.

அல்லாவின் வாரிசுகள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என கூட்டம் போட்டு மக்களை மடையர்களாக்குவார்கள். இயேசுவின் வாரிசுகள் எழுப்புதல் கூட்டம் போட்டு முடவன் நடக்கிறான், குருடன் பார்க்கிறான் என மக்களை மெண்டல் ஆக்குவார்கள்.

சொல்லிக்கொண்டே போகலாம்.....!

Image may contain: skyImage may contain: sky, cloud and outdoor


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இந்த மாதிரி குர்ஆனை இழிவுபடுத்தும் 
அமெரிக்க நிறுவனங்களின் 
பொருட்களை யாரும் 
யாரும் வாங்க வேண்டாம் என
கேட்டுக் கொள்கிறேன்!...

See more


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard