New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்தவித்தான் யார்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஐந்தவித்தான் யார்?
Permalink  
 


title_inthavithan.gif


Introduction

THIS Publication, though small in size is largely valuable in research and it has mainly been written to protest the views of Mr. Deyva Nayagam, a christian Tamil Pandit according to whom Thiruvalluvar has created the complete "AINTHAVITHTHAN A ATRAL " (
¬üÈø) in favour of Christianty and he even published his views in a book named "AINTHAVITA THAN YAR?" The Madras Christian Cultural Communication centre has requested Sri Jeevabandhu T.S. Sripal to contribute a thesis not exceeding in twenty pages confirming clearly whether his view is agreeable or not and our eminent Scholar Jeevabandthu welcomed their request with pleasure contributing this essay as a book of protest. This thesis has been put forward among many eminent schloars in a conference arranged by the Christian Cultural Society. All the scholars appreciated his through literary knowledge and praised the deep and sound basis of his research as a rare and valuable thesis which revealed the un-acceptable view of Mr. Deyva Nayagam reflecting the truth with the scholar and honoured our Jeevabandhu by contributing cash-pripe of hundred rupees with great pleasure. such being the value of this creation, we publish it with the hope that it will be an useful guidance not only for the students of Thirukkural but also for research workers.

Our thoughts are highly appreciatable and remarkable since Sri. M. Shanmugam Pillai, Head of the department of Thirukkural Research Centre, University of Madras, has praised in his letter to the Author that his work which revealed the misinterpretation of Mr. Deyvanayagam is indeed a tasteful feast for schoilars, thanking him for the same on behalf of reserach-World. So the greatness and admiration of this piece need no further evidences.

Above all we indeed, than and appreciate with great respect, the greatness of the Madras Christain CulturalCommunication Centre in honouring the real knowledge of literature, in respecting the high principles,-in encouoraging it by contribution of prizes, though this plece of work is a controversy to that of its own religious author, Mr. Deyva Nayagam.

We recommend with pride those who have a taste In research of Thirukkural to go through the famous, valuable treasure of the author Sri Jeevabandhu T.S.Sripal, "THIRUVALLUVAR VAZHTHUM AADHIBAGAVAN" 
(¾¢ÕÅûÙÅ÷ Å¡úòÐõ ¬¾¢À¸Å¡ý) which will give full realisation for research workers.

Yours,
R. SOVANRAJ
Secretary
TAMIL NADU ANUVRAT SAMITI

Madras 
Dated: 30-11-1972 


ஐந்தவித்தான் யார்?

ஐந்தவித்தான் யார் என்ற தலைப்பில் ஒரு கிறித்துவப் புலவர் திரு. மு. தெய்வநாயகம் அவர்கள் எழுதியுள்ள நூலைப்பற்றி ஆராய்ந்து அவர் கூற்றுக்கள் ஏற்புடைத்தா இல்லையா என்பதை விளக்கி எழுதுமாறு கிறித்துவக் கலை தொடர்பு நிலைய இயக்குனர் திரு. சா. சுவிசேஷ முத்து அவர்கள் என்னைப் பணித்துள்ளார்கள். அப்பொ¢யாரின் விருப்பத்தை ஏற்று அப்பணியை மேற்கொண்டேன். யான் இந்நூலையும், இவ்வாசிரியர் எழுதியுள்ள-திருவள்ளுவர் கிறித்துவரா என்று நூலையும் படித்துப் பார்த்து வியப்பும் வேதனையும் அடைந்தேன்.


ஆராய்ச்சி அறிவு :

ஆராய்ச்சித்துறை ஒரு தனிக்கலை. அது சிந்தனையைக் கிளறுவது. ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவது. ஆராய்ச்சியாளர் தாம் மேற்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அரணாக பன்னூல் பயிற்சியும், வரலாறு, காலம், மரபுகள், அகச்சான்றுகள் ஆகிய துறைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும். இவைகளைக் கொண்டே தம் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி அறிவுடையோரின் நூல்களையே அறிஞர் உலகம் ஏற்றுக்கொள்ளும். அது மட்டுமல்ல; அந்நூல்களே என்றும் எவராலும் போற்றப்பட்டு நிலைத்து நிற்கும். மேற்கூறிய முறைகளைப் புறக்கணித்துவிட்டு, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற பழமொழிப்படி, ஆராய்ச்சி என்ற பெயரால் நூல்களை எழுதித் தள்ளவது அறிவுடமையாகாது. அத்தகைய நூல்கள் நகைப்பிற்கும், எதிர்ப்புக்கும் இடம் தரும். அந்நூல்களை வாசிக்கத் தொடங்கும் போதே அறிவு வெறுப்படையும். மேற்கொண்டு படிக்கவும், அதில் மனதை செலுத்தவும் உள்ளம் ஓடாது. அத்தகைய போலி நூல்கள் அக்கணமே, அன்றைப் பகலே அழிந்து மறைந்துவிடும். எனவே ஆராய்ச்சியாளர்கள் நாம் மேலே கூறிய வரலாறுகள் அகச்சான்றுகள் புறச்சான்றுகள் போன்றவைகளைக் கடைப்பிடிப்பது இன்றியமையாததும், கடமையும் ஆகும்.

இப்பேருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஐந்தவித்தான் யார்? என்ற நூல் அமைந்திருக்கிறதா என்பதை இனி ஆராய்வோம்.


ஐந்தவித்தான்

ஐந்தவித்தான் என்ற இப்பண்பு இறந்தகால நிகழ்ச்சியாகும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தின் வயப்பட்ட ஒருவர் தன் உயர் பண்பால் அவைகளைத் தன் வயப்படுத்தி ஆட்கொண்டார் என்பதாகும். இவ்வாறு ஐம்புலன்களையும் வென்ற தூயோர்களை முதன் முதலாக பாரத நாட்டு வரலாற்றிலும், பாரத நாட்டு பண்டைய இலக்கியங்களிலுமே காண்கிறோம் வேதங்களில் உபநிஷத்துக்களிலும் பல்வேறு புராணங்களிலும் பகவான் விருஷபதேவர் பேசப்படுகின்றார்.

இப்பெருமகனார் வரலாற்றுக்கெட்டாத காலத்தில் தோன்றி அப்பொழுது சீர்குலைந்திருந்து மக்கள் சமுதாயத்திற்குப் பல்வேறு தொழில் முறைகள், கல்வி, உழவு, வாணிபம் போன்றப் பல்வேறு துறைகளைக் கற்பித்தார். அதோடு அஹிம்சையின் அடிப்படையில் மக்கள் பண்பாட்டுக்குரிய அறநெறிகளை வகுத்தருளினார். அவ்வறநெறிகளை இல்லறம், துறவறம் என இருவகை அறங்களாகப் பிரித்து வாழ்க்கைக்கு வழிவகுத்தார். அதுமட்டுமல்லாமல் தாமும் இல்லறத்தை நடத்திப் பின்னர் துறவறம் பூண்டு ஐம்புலன்களையும் தன் வயப்படுத்தும் தவத்தை மேற்கொண்டு வீடுபேறு பெற்றார். இவ்வரலாற்றை நாம் மேலே கூறிய வேதங்களிலும், ஜைன இலக்கியங்களிலும் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

ஐம்புலன்களையும் வென்று வீடுபேறு பெற்ற இப் பெருந்தகைய மண்ணுலகமேயன்றி விண்ணுலகமும் இறைவன் அல்லது கடவுள் எனப் போற்றி வழிப்பட்டனர். இறைவன் என்ற பெயரே அப்பெருமகன் காலமுதலே உலகில் வழங்கி வரலாயிற்று.

இந்திரன் வருகை

இந்திரனைப்பற்றி பல்வேறு சமய நூல்களில் காண்கிறோம். ஜைன (சமணம்) நூல்களிலும் இந்திரன் வரலாறுகள் காணப்படுகின்றன. அவன் பேரறிவாளன், ஆயிரங் கண்ணுடையோன், நற்பண்பும், நற்பணியும் கொண்டவன். ஐந்தவித்துயர்ந்த ஆற்றல் படைத்த மகான்களை அடிப்பணிந்து போற்றும் அன்பும் ஆர்வமும் உடையவன். இப்பெருந்தகை பகவான் விருஷபதேவர் ஐந்தவித்துயர்ந்து கேவல ஞானமெனும் முழுதுணர் ஞானத்தை பெற்றுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆர்வமேலிட்டு தம் மனைவியோடு மண்ணுலகிற்கு வந்து பகவான் விருஷபதேவரை அடிபணிந்து வணங்குகின்றான். இக்காட்சியைப் பல்வேறு மொழிகளிலுமுள்ள ஜைன இலக்கியங்கள் அனைத்தும் பாராட்டிப் புகழ்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ் இலக்கியங்களில் இந்திரன் :

ஐந்தவித்துயர்ந்த பகவான் விருஷபதேவரை இந்திரன் வழிபடுங் காட்சியை,

"களியானை நாற்கோட்டத்
தொன்றுடைய செல்வன்
கண்ணோயிரமுடையான்
கண்விளக்கமெய்தும் ஒளியானை"-சூளாமணி
"காமாதி கடந்ததுவும்.....
... .... ... ....
...... .... தேவர் கோமான்
தாமாதியணிந்து பணிந்தெழுந்ததுவும்
தத்துவமென்றகவோ வென்ன"
-மேருமந்தர புராணம்
"வெந்துயர் அருவினை வீட்டிய அண்ணலை
இந்திர உலகம் எதிர் கொண்டாங்கு" பெருங்கதை இவைபோன்று பல்வேறு ஜைன நூல்களில் காணலாம்.


ஆயிரங் கண்களின் வரலாறு :

பகவான் அடைந்த கேவல ஞானப் பேரொளியைக் கண்டு களிக்கும் இந்திரன், ஆனந்த மேலீட்டால் பகவானைக்காண இருகண்களும் போதாவென எண்ணுகின்றான். ஆயிரங்கண்களால் கண்டுகளிக்க வேண்டுமென விழைகின்றான். எண்ணிய எண்ணியவாறு எய்தும் தனக்குரிய வைக்கிரம சா£ரத்தின் ஆற்றலால் (உருவை மாற்றிக்கொள்ளும் ஆற்றல்) இந்திரன் தன் உடலெங்கும் கண்களை உண்டாக்கிக்கொண்டு பகவானைப்போற்றி மகிழ்கின்றான். இக்காட்சியைக் கண்ட புலவர் பெருமக்கள் இந்திரனை ஆயிரங்கண்ணுடையோன் எனப் புகழ்ந்து வாழ்த்தினர்.

இவ்வரலாற்று நிகழ்ச்சியை ஆதிபுராணம் என்னும் வடமொழி நூலில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

"தவரூபஸ்ய செளந்தர்யம் திருஷ்டியா திருப்திம் ஆனாயி வான்
உயக்ஷ: சஹஸ்¡£க்ஷ: பபூப பஹ¤விஸ்வமய:"

(இ-ள்) இறைவனே! தத்துவத்தாலுயர்ந்து ஞான ஒளி வீசும் நினது பேரழகினைத் தனது இரு கண்களால் பருகியும் திருப்தியடையாத இந்திரன், பலரும் வியக்கத்தக்க முறையில் ஆயிரங்கண்களை உண்டாக்கிக் கொண்டு உன்னைப்போற்றி வழிபடுகின்றான்" என்பதாகும்.

இவ்வாறே தமிழ் நூலாகிய தோத்திரத்திரட்டில்.

"இன்றே யருளென இந்திர
ரெண்ணில வாய்க் கண்கொண்டு

நின்றே துதித்துப் பெறவரும்
பேற்றினை நீயுமென்ன

நன்றேயென் நெஞ்சமே பாகை
யின் முக்குடை நாயகன்றன்

குன்றே குணத்தன்பின் சாதுக்
கடாற்றலை கொள்ளுதியே"

என வாழ்த்தப் பெற்றுள்ளது. இதனால் இந்திரன் ஆயிரங்கண்களைத் தற்காலிகமாகப் பெற்றான் என அறிகின்றோம். இத்தகுசிறப்பமைந்த உண்மை நிகழ்ச்சியை மறைத்து இந்திரன் கெளதம முனிவா¢ன் சாபத்திற்குள்ளாகி உடலெல்லாம் சொல்லொணாக் குறிகளையுடையவனானான் என வைதீக சமய நூல்கள் கூறுகின்றன. இக்கொள்கையை பா¢மேலழகரும், தற்கால உரையாசிரியர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளது வருந்தத்தக்க செய்தியாகும்.


ஐந்தவித்தோரின் மாண்பு

வைதீக சமயக்கூற்றால் ஐந்தவித்துயர்ந்தோரின் தூய தவநெறியும் அத்தகு அறிவோரைப் போற்றும் இயல்புடைய இந்திரனின் எழில் நிலையும் மாசடைகின்றன. ஐந்தவித்தானெனில் ஐம்புலன்களால் ஏற்படும் உலகியல் ஆசைகளை அறவே அகற்றி, ஐம்புலன்களைத் தன் வயப்படுத்தியவன் என்பதை முன்னரே அறிந்தோம். இப்பெறலருந்தவத்தோரையே ஐந்தவித்தான் ஆற்றல் எனத் தேவர் போற்றினார். இவ்வரலாற்றின் மேன்மையை உலகோர் அறியவே "பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வாழ்வார்" என்னும் கடவுள் வாழ்த்தின் வாயிலாக முற்றுந் துறந்த முனிவர்களின் தவநெறியின் மாண்பையும் அவரே கடவுள் அல்லது இறைவன் எனும் கருத்தையும் அப்பெருமகன் அருளிய குற்றமற்ற ஒழுக்க நெறிகளின் உயர்வையும் அறியவைத்துள்ளார். இங்கே வைதீக சமயத்துறவுக்கு இடமில்லை. அத்துறவு கோலத்தைக்கொண்டு குறளில் காணும் ஐந்தவித்தோரைக் காதல் வாழ்க்கையில் சித்தா¢த்துக் காட்டுவது ஐந்தவித்தான் எனும் பண்பிற்கு முரணானது.

ஐந்தவித்தானுக்கு அதாவது ஐம்புலன்களை வென்றவனுக்கு மனைவி இருக்கலாமா? தம் மனைவியை வேறொருவர் காதலித்துக் கற்பழித்தார் என்பதற்காக கோபம் கொள்ளலாமா? அக்கோபக் கனலின் வயப்பட்டு அவரை சபிக்கலாமா? எனும் கேள்விகளுக்கு இடமுண்டாகிறது. அறிவியலுக்கு பொருந்தாத இக் கதையைத் திருக்குறளில் காணும் ஐந்தவித்துயர்ந்த அறவோர்களுக்குக் காட்டியது பொருத்தமற்ற செயல் மட்டுமல்ல சிந்தனையற்ற செயலுமாகும்.

வைதீக சமயத்து இந்திரன் கதையைத் திருக்குறளில் காணும் ஜைன முனிவர்களின் தூய தவ வாழ்க்கையில் முதன் முதல் பொருத்திக் காட்டியவர் பா¢மேலழகரேயாவார். இப்பொருந்தாக் கூற்றைப் புகுத்திய பா¢மேலழகர் இன்று காணும் திரு. தெய்வ நாயகமே எனில் மிகையாகாது.

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மா¢ல் பா¢மேலழகர் இறுதியானவர். இவர் திருக்குறள் இயற்றிய ஆசிரியர் ஜைன அறவோர் என்பதையும் திருக்குறளில் காணும் அறநெறிகள் யாவும் பகவான் விருஷப தேவரால் அருளப்பெற்ற நல்லறங்களே என்பதையும் நன்குணர்ந்தவர். அது மட்டுமல்ல-திருக்குறளின் முதல் உரையாசிரியராகிய தருமர் உரையை ஆழ்ந்து கண்டவர். இவ்வுண்மையைப் பா¢மேலழகர் தம் உரையிலேயே சுட்டிக் செல்வதை அறியலாம். இவர் உரையில் மேற்கோள் காட்டும் நூல்களில் பெரும்பாலும் ஜைன இலக்கியங்களேயாகும்.

பா¢மேலழகரைப் போன்றே திரு. தெய்வநாயகமும் திருக்குறளாசிரியர் ஜைன அறவோரே என்பதை நன்கு உணர்ந்தவர் எனும் உண்மையைத் தாம் எழுதிய 'திருவள்ளுவர் கிறித்தவரா' என்ற நூலின் 70ம் பக்கத்தில் "திருவள்ளுவர் வற்புறுத்தும் புலால் மறுத்தல், கொல்லாமை முதலியன தமிழகத்திலுள்ள மற்ற சமயங்களுடன் இருந்த தொடர்பை விட சமண சமயத்துடன் அதிகத் தொடர்பை புலப்படுத்துகின்றன. இவர் பிறப்பில் சமணராயிருந்திருத்தல் வேண்டும் என்றும் இவர் இறப்பில் சமணர் அல்லர்" எனவும் எழுதியுள்ள தினின்றும் அறியலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருக்குறள் முதல் நூல் அல்ல


திருக்குறளாசிரியர் பாரத நாட்டின் மிகத்தொன்மை வாய்ந்த அறநெறிகளை மறுமலர்ச்சியுறச் செய்தவரேயன்றி திருக்குறளை அவர் முதல் நூலாகக் கூறவில்லை.

திருக்குறளாசிரியர் "பகுத்துண்டு பல்லுயிரோம் புதல் நூலோர் தொகுத்தவற்றுளெல்லாம் தலை" எனக் குறிப்பிடுங் குறளின் வாயிலாகத் தாம் மேற்கொண்டுள்ள கொள்கைகள் யாவும் தமக்கு முன்னர் விளங்கிய நூல்களே என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறாயின் முதல் நூல் எது என்பதை ஆராய்வோம்.


முதல் நூல்

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் 
கண்டது முதல் நூல்"
எனும் தொல்காப்பியப் பாயிரத்தால் முதல் நூலையும், முதல் நூல் உரைத்த முனிவரையும் காண்கிறோம். முனிவர் எனில் முற்றுந்துறந்து ஐம்புலன்களையும் வென்றுயர்ந்தோரேயாவர். இம் முனிபுங்கவர்களின் தவ மாண்பினை நீத்தார் பெருமையில் படம் பிடித்துக் காட்டியுள்ளார் திருக்குறளாசிரியர்.

திருக்குறள் காட்டும் முதல் நூலின் தவக்கோலம்.
"இயல்பாகும் நோன்பிற் கொன்றின்மை
உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து"

"மற்றுந்தொடர்பாடெவன்கொல் பிறப்பறுக்க
றுற்றார்க்கு உடம்பும்மிகை"

என்ற பற்றற்ற நிலையையுடைய தவத்தை முதன்முதல் மேற்கொண்டு துறவறத்துக்கு வழிகாட்டியவர் நாம் முதலில் கூறியபகவான் விருஷப தேவரேயாவர். இம் முதல் முனிவரே இருவினைகளையும் வென்று வானோர்க்கும் உயர்ந்த உலகமாகிய வீடுபேற்றை அடைந்தவர்.

வினையின் நீங்கி விளங்கிய பேரறிவனாம் பகவான் விருஷப தேவா¢ன் திருமொழியை முதல் நூலாகும். இவ்வரலாற்றுண்மையை முன் வைத்தே "நூலோர் தொகுத்தவற்று எல்லாம் தலை" எனும் பொன் மொழியால் ஒளி வீசச் செய்துள்ளார் திருக்குறளாசிரியர் இம் மாண்புடை முதல் நூலோரைப் போற்றும் நீலகேசி ஆசிரியர்.

"நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயா¢ன்பமாக்கும்
சொல்லான் தருமச்சுடரான் எனுந்தொன்மையினால்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி"
எனவும்
சொற்றியாவதுங் கேளாய் சுதநயம் துணிவுமல் குரைத்தி
கற்றியாவதும் இலையாய்க் கடையில்
பல்பொருளுணர் உடையை
பற்றியாவதும் இலையாய்ப் பரந்த வெண்
செல்வமும் உடையை
முற்றயார்நினை உணர்வோர் முனைவர் தம்
முனைவர்க்கும் முனைவா"
எனவும் போற்றி மன்னுயிர்க்கெல்லாம் அரண் செய்யும் அறநெறியை உரைத்த முதல் இறைவன் முதல் முனைவன் என்பதைக் கலங்கரை விளக்கம் போல் காட்டியுள்ளார்.


அறிவுரைகளும் தத்துவக்கலைகளும்

நாம் மேலே கண்ட முதல் நூல் உரைத்த முனிவராகிய பகவான் விருஷப தேவர், அஹிம்சையின் அடிப்படையில் இல்லறம், துறவறம் ஆகிய இரு அடிப்படையில் இல்லறம், துறவறம் ஆகிய இரு பேரறங்களோடு அரசியல், பொருளாதார சமத்துவம், பகுத்துண்டு வாழ்தல், உலகம், உயிர், உயிரில்லாதவை, இறப்பு: மறுபிறப்பு, பாவம், புண்ணியம், ஊழ்வினை வானுலகம், வானோர்க்குமுயர்ந்த வீட்டுலகம் போன்ற பல தத்துவங்களையும் உலகுக்கு அருளினார்.

இப்பேரறங்களை தம் பெயரால் அமைக்காமல் மக்கள் பொது நெறிகளாக வேண்டி அறம், அறம் என்றே பெயா¢ட்டு வழங்கினார். அப்பெருமகனாருக்குப் பின் அவ்வப்போது இருபத்து மூவர் தோன்றி அவ் அறநெறிகளைப் பரப்பினர். அவர்கள் வழிவந்த அறவோர்கள் பலரும் இயற்றியருளிய நூல்களிலும் இலக்கியங்களிலும் அறம் என்ற பெயராலேயே அம் முதல்வா¢ன் கொள்கைகளைப் படைத்துவந்தனர். சமயம் என்ற பெயரையே அந் நூல்களில் காணவியலாது.

பகவான் விருஷப தேவர் அருளிய முதல் நூல் வழி வந்த நூல்கள் யாவற்றிலும் பிறர் நம்பும் காணவியலாத கடவுளைப் பற்றியோ படைப்பைப் பற்றியோ கூறப்படவில்லை. இவ்வுலகம் ஆதியும் அந்தமுமற்றதென்றும், இவ்வுலகமும், உலகில் காணும் உயிர்களும் எவராலும் படைக்கப்பட்ட தல்லவெனும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டவை அதனாற்றான் பகவான் விருஷபதேவர் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உரிய அற நெறிகளை வகுத்து அவைகளின் வழி ஒழுகி, உயர்நிலையை எய்த வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்தியுள்ளார். இதனால் மக்கள் பலரும் அறநெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தன்னை இறைவனாச் செய்வானும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும் தானேயாகையால் அவரவர் உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரவர் செயல்களேயன்றி வேறெந்தச் சக்தியும் அல்ல என்பதாகும். அதாவது எல்லாம் ஆண்டவன் செயல் என்ற கொள்கை ஜைனத்திற்கு உடன்பாடல்ல. இவ் அறிவியல் தத்துவத்தை மேற்கொண்ட திருக்குறளாசிரியர்,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றியான்"

எனும் குறட்பாவின் வாயிலாக ஏற்றத் தாழ்வுடன் கூடிய இவ்வுலகைப் படைத்த இறைவன் ஒருவன் இருப்பானாயின் அவன் விரைவில் அழிக என வன்மையாகச் சபிக்கின்றார். இதனால் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளே இல்லையெனும் கொள்கையைத் திருவள்ளுவர் நிலைநாட்டியுள்ளதை அறிகின்றோம். அது மட்டுமல்ல, மனிதன் தன் சுய முயற்சியாலும் ஒழுக்கத்தாலும் தவநெறியாலுமே இன்ப துன்பங்களை அடைகின்றான் எனும் உண்மையையும், அவன் ஐம்புலன்களையும் வென்று வீடு பேற்றை அடையும் ஆற்றலும் படைத்தவன் என்பதையும் வலியுறுத்திக்கூறும் முதல் அறவோரின் வழிநின்று திருக்குறளாசிரியர்.

"ஆராவியற்கை அவா நீங்கின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்."
என்னும் குறளால் ஐந்தவித்துயர்ந்தோர் அடையும் இனிப் பிறவா நிலையையும்,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்"
என்னும் குறளால் இல்லற நெறி வழுவா இல்லறத்தோர் உறும் தேவருலகையும்,

"யான் எனது என்னும் செறுக்கறுப் பான்
வானோர்க் குயர்ந்த உலகம் புகும்."

என்னும் குறலால் தவ மாண்புடையோர் வினைகளை வென்று அடையும் வானோர்க்கும் உயர்ந்த வீட்டுலகையும் கூறி மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இக் குறட்பாக்களால், கடவுளின்செயலுக்கே இடமின்மையை அறிகின்றோம்.

திருவள்ளுவர் மேற்கொண்டவை பகவான் விருஷப தேவர் கொள்கைகளே திருக்குறளாக மலர்ந்து அறிவியல் மணம் வீசுகிறது என்பதை அறிந்தோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பண்டைய அறநெறியின் பகைவர்கள்


இப்பெற்றிய அறநெறி நூலை வைதீக சமயசார்புடையதாகக் காட்ட வேண்டியே பா¢மேலழகர் தம் உரையில் ஆங்காங்கு வைதீக சமயக் கொள்கைகளை வலிந்து புகுத்தி உரை எழுதிப் பரப்பினார். இச்செயலை பா¢மேலழகர் தம் உரைகளின் விளக்கத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். தாம் தம் சமயக் கொள்கைகளை புகுத்திய இடங்களில் "இவ்வாறு கூறுவாரு முளர்" எனக் கீழே குறிப்பிட்டுச் செல்கின்றார். அக் குறிப்புகள்யாவும் பண்டைய அறநெறிகளின் சார்புடையனவேயாகும். அது மட்டுமல்ல, நாம் முன்னர் கூறியது போன்று பா¢மேலழகர் தம் உரைகளில் பெரும்பாலும் ஜைன நூல்களையே மேற்கோள் காட்டியுள்ளார்.

எனவே பா¢மேலழகர் ஜைன உரையாசிரியராகிய தருமர் உரையையே அங்கும் இங்கும் மாற்றி உரை எழுதியுள்ளார் எனில் மிகைபடக் கூறுவதன்று மறுக்க வியலாத இவ்வுண்மைகளால் பா¢மேலழகர் மக்கள் அறமாய், பொது நெறியாய் விளங்கும் திருக்குறள் அறநெறிகளை ஒரு சமயச் சார்புடையதாக அதாவது வைதீக சமய சார்புடையதாகக் காட்ட வேண்டி உரை எழுதிய சூழ்ச்சிகளில் ஒன்று தான் ஐந்த வித்துயர்ந்த அறவோர்களின் இயல்புக்கு மாறாக வைதீகப் புராணங்கள் கூறும் இந்திரன் கதையைத் திருக்குறளில் புகுத்தியது. அக்காலத்தில் பா¢மேலழகர், கையாண்ட குறுகிய மனப்போக்கைப் போன்றதே இக் காலத்தில் திரு.தெய்வநாயகம் மேற்கொண்ட செயல் திருவள்ளுவர்,

"ஐந்துவித்தான் ஆற்றல் அகல் விசும்புனார் 
கோமான் இந்திரனே சாலும் கா¢"

என இந்திரனைக் குறிப்பிட்டது நாம் முன்னர் கூறிய வரலாற்றுப்படி, இந்திரன் ஐந்தவித்தோரின் ஆற்றலைக் வரலாற்றுப்படி, இந்திரன் ஐந்தவித்தோரின் ஆற்றலைக் கண்டு வியந்து, அத்தூயோரை வழிபடும் உயா¢ய காட்சியையே சாட்சி எனக் குறிப்பிட்டாரேயன்றி சாட்சி கூறினார் எனக் குறிப்பிடவில்லை. எனவே திருக்குறளாசிரியர் ஐந்தவித்துயர்ந்தோரின் மாண்பினையும்; இந்திரனின் பெருந்தன்மையையும் இக்குறளால் வெளிப்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை.

இம்மாபெரும் மரபை, அகச்சான்றை, ஆட்சியை, இலக்கியங்கள் கூறும் உண்மைகளைப் புறகணித்துவிட்டுத் திரு. தெய்வநாயகம் அவர்கள் தம் கிறித்துவ சமயக் கொள்கையாகிய சான்று பகர்தல் எனும் ஆதாரமற்ற பொருளைத் திருக்குறளில் புகுத்தி இலக்கிய உலகில் மாபெருந் தவறை இழைத்துள்ளார்.

திருவள்ளுவர் மேற்கொண்ட முதல் நூலிலும் திருக்குறளிலும் ஆண்டவனைப் பற்றியோ, அவன் நீதிபதியாக விளங்கி நீதிபகர்பவனென்றோ, அவன் அடிக்கடி உலகில் தோன்றுவானென்றோ, பாவம் செய்தோரை மன்னித்து விடுவானென்றோ, இறந்த மனிதர்கள் மறுபடியும் பிறவாமல் ஆண்டவன் நீதியைப் பெறச் செல்வார்களென்றோ எங்கும் கூறவுமில்லை, அக்கொள்கைகள் உடன்பாடுமல்ல.

இவைகளுக்கு மாறாக இறந்த மனிதர்கள் அல்லது மற்ற ஜீவராசிகள் பிறந்தேயாக வேண்டும். இப்பிறவிகள் அவரவர் புரிந்த நல்வினைத் தீவினைகளுக்கேற்ப தன்மையும் தீமையும் அடையும் எனும் உண்மைகளை, சான்றுகளை முன்னரே கூறியுள்ளோம். அறிவியலோடு பொருந்தும் பண்டைய அறநெறிகளைக் கொண்ட தத்துவக் கொள்கைகளோ, ஆட்சியோ, அகச்சான்றோ ஒரு சிறிதும் கிறித்துவ நூல்களில் காணவியலாது. எனவே திரு. தெய்வநாயகம் அவர்கள் எழுதியுள்ள "ஐந்தவித்தான் யார்" எனும் நூலில் காணும் கூற்றுக்கள் யாவும் பொருந்தாக் கூற்றுகளேயாகும். நோ¢தின் ஆராய்ந்தறியும் தமிழக அறிஞர்களேயன்றிப் பாரத நாட்டுப் பல்வேறு சமய அறிஞர்களும் திரு. தெய்வநாயகம் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன்? கிறித்துவ அறிஞர்களும் வெறுப்படைவர் என்பது திண்ணம்.

வாழிய நல்லறம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard