New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


தமிழ் முச்சங்கம் பற்றிய கட்டுக்கதை

தமிழில் இலக்கிய வரலாறு -கார்த்திகேசு சிவத்தம்பி

அடுத்து, இறையனார் அகப்பொருளுரையிலே தரப்பட்டிருக்கும் முச்சங்கம் பற்றிய ஐதீகக் கதையிலேயே, கடந்தகால இலக்கியத்துக்கான நிகழ்கால அர்த்தத்தை மதிப்பிடும் முயற்சியினை எதிர்நோக்குகின்றோம். இவ்வுரையின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியே என்பதை இராம.சுந்தரம் முடிவாக நிறுவியுள்ளார்.21 அதனைப் பொதுவில், கி.பி.7 ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு படைப்பாகவே கொள்வது வழக்கு.

இவ்வுரையிலேயே மூன்று சங்கங்கள் பற்றிய ஐதீக நிலைப்பட்ட முழு விவரங்கள் அடங்கிய, நன்கமைந்த விவரமான 'அறிக்கை' காணப்படுகின்றது. முச்சங்கம் பற்றிய அவ்விவரங்கள் எல்லோர்க்கும் நன்கு தெரிந்தனவே.22 அவற்றினை இங்கு மீட்டும் கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் அக்கதையிலே கூறப்பட்டுள்ள சில தகவல்கள் பற்றி இங்குக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.

மேலும் இரு விவரங்களை நினைவூட்டிக் கொள்ளல் வேண்டும்.

அ. இந்த மூன்று சங்கங்களும் மதுரையிலேயே நடத்தப் பெற்றன23 மதுரை, பின்னர் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்று ஆகின்றது என்பதனை மனத்திருத்தல் வேண்டும்.

ஆ. முதற் சங்கத்திற் பங்கு கொண்டோரென அக்கதையிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர்களின் பெயர்கள், இந்துத் தெய்வங்கள் சிலவற்றின் பெயர்களாகும்.

இந்து ஐதீகக் கதைகளில் அடிக்கடி வரும் அகத்தியர், முதலிரு சங்கங்களினதும் அங்கத்தினராகவிருந்தாரென்று குறிப்பிடப்படுகின்றது.

இவ் ஐதீகம், தமிழிலக்கியத்திற் சமணத்தின் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகத் தொழிற்பட்ட காலத்தின் பின்னரே, சமண நோக்குச் சார்புடைய அற இலக்கியங்கள் எழுதப்பட்டதன் பின்னரே எடுத்துக் கூறப்படுகின்றது.

சமண மத நிறுவனங்கள் இயங்கிய முறைமை, அந் நிறுவனம் இலக்கியத்தைப் பயன்படுத்திய முறைமை, அவர்களால் (சமணர்களால்) எழுதப்பெற்ற இலக்கியங்கள் அதற்கு முந்தித் தோன்றிய இலக்கியச் செல்நெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த முறைமை ஆகியன இப்பொழுது நிலையான இலக்கிய வரலாற்றின் அங்கங்களாகிவிட்டன.24 சமணர்களின் 'மிசனறி' (தேவ ஊழிய) நடவடிக்கையில் வச்சிர நத்தியின் திராவிட சங்கத்துக்குரிய இடம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.25

பாண்டிய, பல்லவ அரசுகள், ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்தனவெனினும், பக்தி இயக்கத்துக்கு அரசு ஆதரவு வழங்கின.26 பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற, சைவர்கள், வைஷ்ணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவத்துக்கு அல்லது வைஷ்ணவத்துக்குத்தான் உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும், திருஞான சம்பந்தர், திருமங்கை ஆழ்வா‘ர் போன்றவர்கள் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும்.27

இப் பின்னணியிலேயே இறையனார் அகப்பொருளுரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டு கொள்ளல் வேண்டும்.

ஐதீகவாக்கம் என்பது வரலாற்றினைத் 'தயாரிக்கும்' ஒரு வகைமுறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை, தமிழை இந்துசமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் ஐதீகத்துக்குரிய இடம் பெருமுக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை ('சங்க'த்தினை) எடுத்துக்கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம். இதனிலும் பார்க்கச் சுவாரசியமானது. அக்கதைக்குள் அரசர்கள் கொண்டு வரப்படும் முறைமையாகும். கதையின் அமைப்பை நோக்கும்பொழுது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக் கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் சீவாதாரன பகுதியாக்கப்பட்டுள்ளது. உண்மையில்ல, சங்கம் பற்றிய கதை தொடங்கும் பகுதி பின்வருமாறு தொடங்குகின்றது.

'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'

கடவுளர்களே பங்கு கொள்ளும் ஒரு சங்கத்திற்கு ஓர் அரச தளத்தை கற்பிப்பதன் மூலம், அப்பொழுது மேற்கிளம்பும் பாண்டிய ஆட்சியை, சந்தேகத்துக்கு அப்பாலான ஒரு முறைமையில் முறைவழிப்பட்ட தாக்குவதற்கான முயற்சி இக்கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சங்கம் பற்றிய கதை, தமிழிலக்கிய வரலாற்றை சைவத்தின் வரலாற்றுடன் இணைப்பதற்கான முதல் முயற்சியாகும்.

நாயன்மார்கள் தமிழுக்கு முற்றிலும் சைவச் சார்பான தோற்றம்பற்றிக் குறிப்பிடுவதும், தமிழை வடமொழிக்கு இணையாகக் கொள்வதும், இம்முயற்சியின் அடுத்தபடிகளாகும். இவற்றினைப்பற்றிப் பேசும் இவ்வேளையில், தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்தும் இம்முயற்சிக்கான பௌத்த பதிற் குறிப்பினைப்பற்றி இங்கு குறிப்பிடலாம்.

'ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'

- வீரசோழியம்-பாயிரம் (11)

வீரசோழிய ஆசிரியர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவராகவிருத்தல் வேண்டும். அவர் தமிழை அவலோகி தேஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கின்றார் (இது சொல்லப்பட்ட காலம் சைவத் தமிழ் மரபைக் காக்க இராஜராஜன் முதல் சேக்கிழார் வரையுள்ள சோழப் பேரரச ஆட்சியுறுப்பினரே முன்னின்று உழைத்த காலமாகும்). இதே போன்று ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக் கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளேயாகும். தமிழ்நாட்டில் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கு ஒங்காதிருந்த காலத்தில் (9-ம் நூற்றாண்டு முதல் 11-அம் நூற்றாண்டு வரை) தாங்கள் எழுதிய இலக்கியக் கூற்றுக்குத் தனியான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்க முனைந்தது ஆச்சரியத்தைத் தருவதன்று.

குறித்த அப்பண்பாட்டுச் சூழல்களில் வரலாறெழுது முறையியல் தொழிற்பட்ட முறையினை நோக்கும்பொழுது, இந்த ஐதீகங்களை உண்மையில் வரலாழெழுதுவதற்கான முயற்சிகளாகவே கொள்ளல் வேண்டும். எந்த ஒரு மதமும், தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைப்பது அத்தியாவசியமே. அதன் காரணமாக அம்மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தையே அது தனதாக்கிக் கொள்ள முயல்வது இயல்பே. நமது பண்பாட்டுச் சூழலில் இலக்கிய வரலாறு தொழிற்பட்ட ஒரு சிறப்பான அமிசமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும்.

http://www.noolaham.net/project/01/50/50.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


மூன்று சங்கங்கள் சரித்திர ரீதியில் இருந்ததா-இல்லையா ?
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி..பி.8ம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் கட்டிவிடப்பட்ட கதையே முச்சங்க கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ அவற்றை கடல் கொண்டதாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.

முச்சங்க கதையை நம்பி சங்க காலத்தை கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.
- பக்-30 சங்க கால மன்னர் வரலாறு 
வி.பி.புருஷோத்தம், 
தமிழ அரசு உதவித் தொகையோடு வெளியிடப்பட்டது,
Published with TN Govt ASSISTANACE 

 

தோமோவழி கிறித்துவம் http://www.tamilpaper.net/?p=8898

தமிழ்நாட்டின் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடல், சங்ககாலத்தில் இல்லை...
TAMILPAPER.NET

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? 
பேராசிரியர். க.பூரணச்சந்திரன் 
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். லெமூரியாக் கண்டம் என்ற ஒன்றுகூட-அதைப்போல-இருந்தததாகச் சொல்கிறார்கள். இவையெல் லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலப்பகுதிகள். அப்போது பூமியின் தோற்றமே வேறாக இருந்தது. இப்போதுள்ள பல நிலப்பகுதிகள் துண்டுபட்டும், பல நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்தும் தோற்றமளித்தன. எந்தக் கலைக்களஞ்சியத்திலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம்.
ஆனால் குமரிக்கண்டத்தில் ஏழுஏழு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன, அவற்றில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. (நண்பர் அவற்றின் பெயர்களையெல்லாம் வேறு தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.) சிலப்பதிகாரத்தில் “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வருவதெல்லாம் தொல்பழம் மனத்தின் நினைவுகள் அல்லது கூட்டு நனவிலியின் நினைவுகள் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கொள்வார்கள்.
ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழியே பிறக்காத கற்கால மனிதர்கள்தான் வாழ்ந்தார்கள். இன்று போற்றப்படுகின்ற எகிப்திய நாகரிகம் (பிரமிடுகளையெல்லாம் வானியல் அறிவோடு கட்டியவர்கள்) என்பதே இன்றைக்கு ஐந்தாயிரம்-ஆறாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுதான். சிந்து வெளி நாகரிகமும் அவ்வாறே. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்தது என்பது பழங்காலக் கற்பனை. ஒருவேளை ஆரியர்கள் அவர்களுடைய வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கதைகட்டியதற்கு மாற்றாகத் தமிழ்ப்புலவர்கள் இப்படிக் கதைகட்டினார்களோ என்னவோ!
லெமூரியா என்ற பெயர், லெமூர் என்ற ஆதிக்குரங்கின் பெயரால்தான் வருகிறது. இதனால்தான் புதுமைப்பித்தன் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று சொல்வதில் தமிழர்களுக்கு ஆசை என்று கிண்டல் செய்தார் போலும்.
இன்று நாம் செய்ய வேண்டியது லெமூரியாவையோ குமரிக் கண்டத்தையோ தேடுவது அல்ல. அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அங்கு தமிழர்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வேறு கற்கால இனம் ஏதேனும் வாழ்ந்திருக்கவும் கூடும். ஏனென்றால் இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நிலப்படங்களில் ஆப்பிரிக்காவும் இந்தியத் துணைக்கண்டப் பகுதியும் இணைந்திருந்ததாகக் காட்டப்படுகிறது.
இப்போது நாம் செய்யவேண்டியது, இன்று தமிழினம் தன்னை எப்படித் தற்காத்துக் கொள்ளப்போகிறது, எப்படி எதிர்காலத்தின் சவால்களை எதிர் கொண்டு வாழப்போகிறது என்பது பற்றிய சிந்தனைதான். குமரிக்கண்டம் இருக்கட்டும், இன்று போகும் போக்கில் இனி ஐந்து முதல் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயமே இருக்காது, நிலம் எல்லாம் பிளாட்போட்டு விற்பனை செய்யப்பட்டு விடும், சோற்றைவிடுங்கள் ஐயா, குடிக்கத் தண்ணீருக்கு எங்கே போகப்போகிறீர்கள்? அரசியல்வாதிகளுக்கு இதுபற்றிய அக்கறை எல்லாம் இல்லை
உணவு உடை உறைவிடம் என்றார்கள் பழங்காலத்தில். உணவையும் (விவசாயத்தையும்) உடையையும் (நெசவுத்தொழிலையும்) ஒழித்துவிட்டு வெறும் கான்கிரீட் காடுகளில் (உறைவிடம்) வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணமா?
அன்பர்களே, தயவுசெய்து தமிழ்மீது உள்ள அக்கறை என்றபெயரில் குமரிக் கண்டத்தையும் பழங்கால நினைவுகளையும் தேடுவதைவிட்டு இன்றைக்கு வாழ்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி யோசியுங்கள்.
http://siragu.com/?p=5130
Tweet கேள்வி (39): குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? அது பற்றித் தங்கள் கருத்தென்ன? நண்பர் ஒருவர் தான் குமரிக்கண்டம் என்ற நூல் ஒன்று எழுதப்போவ தாகக் கூறி அதுபற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு என் எதிர்வினையைப் பொதுவாகச் சிறகில் தெரிவிக்க வேண்டியே இந்த பதில…
SIRAGU.COM|BY SIRAGU

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் முச்சங்கம் கட்டுக்கதை - கார்த்திகேசு சிவத்தம்பி
Permalink  
 


 லப்பதிகாரம் - சிலம்பின் காலம் - இராம.கி

விக்கிப்பீடியா -இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 
சிலம்பின் காலம் பொ.மு. முதல் நூற்றாண்டு எனக் கதைக்கிறார். நால கட்டுரை. அவர் வலப்பூவில் உள்ளதை இங்கே வரிசையா எளிதாக தொகுத்துள்ளனர்.
http://newindian.activeboard.com/t50666132/topic-50666132/

சிலப்பதிகாரம் - சிலம்பின் காலம் - இராம.கி
NEWINDIAN.ACTIVEBOARD.COM

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆரிய வாதம் ஆங்கிலேயருக்குத் தேவைப்பட்டது அடிமைத்தனத்தை மேம்படுத்துவதற்காக. ஆரிய வாதம் கம்யூனிச்ட்டுகளுக்குத் தேவைப்படுவது அவர்களுடைய சித்தாந்தத்தை பரப்புவதற்காக. ஆரிய வாதம் திராவிடக் கட்சிகளுக்குத் தேவைப் படுவது உணர்ச்சி தூண்டி அரசியல் செய்வதற்காக.

ஆரிய வாதம் என்பது வரலாறல்ல, ஒரு கூற்று மாத்திரமே. ஆரியர் எங்கிருந்தோ இங்கு வந்தார்கள் என்பது போல, ஆரியர்கள் இங்கிருந்து தான் வேற்றிடத்துக்கு பெயர்ந்தார்கள் என்றொரு கூற்றும் உண்டு. ஆரிய வாதமே புரட்டு என்று மற்றொரு கூற்றும் உண்டு.
Bloomfield, L., Review of Konkordanz Panini Candra Von Dr. Bruno, Leibich, Vol. 5, 1929, p. 267-276): ‘The descriptive Grammar of Sanskrit, which Panini, brought to its highest perfection, is one of the greatest monument of human intelligence and (what concerns us more) an indispensable model for description of languages. The only achievement in our field, which can take rank with it is the historical linguistics of the nineteenth century and this indeed owed its origin largely to Europe’s acquaintance with the Indian Grammar. One forgot that the Comparative Grammar of the Indo-European languages got its start only when the Paninian analysis of an Indo-European language became known in Europe…If the accentuation of Sanskrit and Greek, for instance had been unknown, Verner could not have discovered the Pre-Germanic sound change, that goes by his name. Indo-European Comparative Grammar had (and has) at its service, only one complete description of a language, the grammar of Panini. For all other Indo-European languages it had only the traditional grammars of Greek and Latin woefully incomplete and unsystematic.’…

 

  • “ There is ample evidence that Hinduism is not the religion of India, even if it s older than Christianity in India. There is no reason either Ariyanism or Dravidianism or other religion in India to call the other Foreign. 
    –Page34, Christianity in Ind
    ia- Unique and Universal Mission released by CSI and the same book says-
    “ Due to Aryan Invasion of 1500BC, the Adivasis fled to the hills and forest and did not integrate with other Indians, ofcourse the Dravidians were more docile and less militant and migrated to South India and Some were absorbed in the Aryan Acculturalisation” page-225. further , I quote” The most outstanding fact that we need to understand is that we must know that the Tribals People of the NorthEast Hills are not Hindus by any stretch of imagination, they are the people who Continued to come from parts of Asia at different stages of History. 
    Page 236
  •  
    Devapriya Solomon NEW CATHOLIC ENCYCLOPEDIA- 
    “The Beginning of Sanskrit Literature go back to almost 2500BCE, Not only is the antiquity of Sanskrit Literature truly remarkable, but its fecudits, veracity and continuity or no less so” Page445, Vol 7 .


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 One more verse (Rig Veda 1-164-39) states, " In the letters (akshara) of the verses of the Veda...". 

There are a number of compositional chandas (metres), lines in a metre and specific number of words in a line available from the Rig Vedic text. 
It w
ill take a tremendous amount of mental effort to compose and to commit to memory the vast amount of lines with all the intricacies involved. 
Unless these are reduced to writing and given a specific concrete shape, it would not facilitate oral transmission. 
Yet another verse (RgV 10-62-7) mentions cows being "marked" by an "8-eight" which again shows that the ancients possessed the art of writing. 
Also, RgVed 10-71-4 refers to a language which can be "seen"; that is a script. 
If there was no script, preferably the verb "to pronounce" rather than "to inscribe/write" would have been utilized. 
However, such a distinction has been made obviously because a written form of language existed during that time. 
Even during the Mahabharat era the art of writing was prevalent. The verb "lekhi (writing)" in all its forms (lekhako, lekhani, etc.) appears numerous times in the Mahabharat text (Aadi 1.77/78). 
On the arrows were inscribed the names of specific persons to whom they belonged. Distinction has been made between "to write" and "to read" (Harivansha .50) indicating "what was written was being read". 
How could a text with a monumental 100,000 verses could be composed, preserved and transmitted through memory alone? 
This incredible feat may have been performed by a few, but that does not suggest that the art of writing was not developed. The Atharvasheersha (from the Upanishads) symbolizes Shree Ganesh as an "omkar", a combination of "g-aakar, m-aakar". 
How can there be an "aakar - shape" to a syllable only transmitted orally? 
The Mahabharat text contains quotes of Rishi Vasistha of the Ramayanic Era on the meaning of the "granth(a)" (manuscript), its value and other literary attributes. Discussions on skills required to writing and evaluating a "granth(a)" were already in vogue during the Ramayanic era. 
How is this possible if "writing" was not known in that era? The Yujurvedic Taittiriya Samhita and also the Atharvaveda utilize the word "likha (to write)", although not as ancient as the RgVed, at least are of the Ramayanic era. 
The art of writing was known by ancient Vedic peoples since remote times. 
In spite of the evidence presented above, it has been continually stressed that the ancients passed on their knowledge through oral tradition alone and no art of writing was available - the earlier part of course is probably true. 
On the deliberate stress given to oral transmission, R.N. Dandekar remarks, "There is, indeed, considerable circumstantial and inferential character which enables us to perceive the existence of writing even in the very early periods of Indian cultural history. 
It is true that the Veda has been handed down from generation to generation through oral tradition. It must not, however, be supposed that on that account, as is often erroneously done, that the art of writing was unknown in the early Vedic age. 
The practice of oral transmission of Veda was adopted, not because written copies of these texts were not available, but presumably because it was believed that oral transmission alone was more conducive to the preservation of the magic-religious potency and the formal protection of those arts.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அந்தணர் அறவொழுக்கம்

அந்தணர் வேதக் கல்வியை விரும்பிப் பயின்றனர். அதில் கூறப்பட்ட சடங்குகளை “மந்திர விதியுட் மரபுளி வழாஅ” மரபில்லிருந்து மாறாமல் செய்தனர். மதுரைக் காஞ்சி 468-479 கூறும் பொழுது “அந்தணர் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சினர்,” என்றும், “எவ்வுயிரிடத்திலும் அன்பு கொண்டனர் என்றும்”, கூறுகின்றது. அவர்கள் தோற்றத்தையும் அவர்கள் வேதவேள்வி செய்த முறையையும் திருமுருகாற்றுப்படை 179-182 கூறுகின்றது. அவர்கள் பெற்றோர் மரபு சிறப்புடையது; தொன்மையும் மேன்மையும் உடைய குடிப்பிறப்பாளர்; நாற்பத்தெட்டாண்டுகள் விதிமுறைக் கல்வியில் கழித்த்வர்; முத்தீச் செல்வத்து இருப்பிறப்பாளர்; ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்(கயிறு) அணிபவர்; உச்சிக் கூப்பிய கையினர்; நாளும் நாவில் ஆறெழுத்த்தை உச்சரிக்கும் உயர் குணத்தாளர்” என்று அவர்கள் வாழ்க்கையைத் தெளிவு படத் தெரிவிக்கின்றது. பக்76

காசியப, வாதுல, ஆத்ரேய, கௌசிக கோத்திரத்தைச் சார்ந்த பிராமணர்கள் இருந்தனர் என சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆக்னிஷ்தோம, அஸ்வமேத, வாஜபேய யாகங்களும், ஹிரண்யகர்ப, துலாபார, கோசஹரா பொன்ற சடங்குகளை பிராமணர்கள் செய்தனர். பக்-112

பல்லவர் காலத்தில் பல செப்புப் பட்டயங்கள் வெளியிடவும் பிராமணர்களே உதவி புரிந்தனர். பக்- 113

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தழிழகம் 3-ம் நூற்றாண்டு முதல் 6—ம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். - பக்106 Dr.ஏ.சுவாமிநாதன்-தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு-1997,



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 வள்ளுவர் கருத்துக்கும் வடநூல்களின் கருத்துகளுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர்களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல்களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆதலால் வள்ளுவரைக் கருவியாகக் கொன்டு வடமொழியுடன் போர் தொடுக்க முடியாது. வேறு இனத்தாருடன் சண்டை போட முடியாது. மொழி வெறுப்பாளர் பக்கத்தில் வள்ளுவர் நிற்கமாட்டார். இன வெறுப்பாளர் பக்கத்திலும் வள்ளுவர் நிற்கமாட்டார்.

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சாமி சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் ஆக்கியுள்ளார். 33 சிறு கட்டுரைகளாக அமைந்த இந்த நூலை 2001ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.[1]
TA.WIKIPEDIA.ORG

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard