New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவர்களை வெட்கப்பட வைத்த ஆறுமுக நாவலர்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கிறிஸ்துவர்களை வெட்கப்பட வைத்த ஆறுமுக நாவலர்
Permalink  
 


ஈழத்தின் சைவ எழு ஞாயிறு 
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879)
NALLUR SRILASRI ARUMUGANAVALAR- பெ. சு. மணி mani_paasu.jpg

navalar10.jpg

ந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865)ஆகியன குறிப்பிடத்தக்கன.

இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து, சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன. ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது, பெரும்பான்மையானது. ஆங்கிலக் கல்வியும், அதன் வழி அரசு ஊழிய பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவ சமயம், 'பிழைக்குமோ' என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18/12/1822 இல், கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது இளமைக்காலத்துச் சிந்தனைகளை, 1868இல் வெளியிட்ட "சைவ சமயங்களுக்கு விக்கியாபனம்" எனும் கட்டுரையில் கூறியதாவது:

"நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனானேன். பார்சிவல் துரை 'நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது' என்று பல தரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இல்வாழ்க்கையில், புகவில்லை. இவையெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையாம். நான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்து சிந்தித்து, சைவ சமயத்தை வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின் கண்ணாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!" என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்கும் பிதற்றலிலுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்."

இங்கு பண்டைய ஈழத்தின் அரசியல் பின்னணியையும் சுருக்கமாக அறிதல் வேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் தமிழ் மன்னர் ஆட்சி நிலவியதை சிங்கள இதிகாசமான மகாவம்சம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசுகளும் தமிழ்நாட்டின் சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளும் தம்முள் கொண்டிருந்த அரசியல் கலாசார உறவுகள் வரலாற்றில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டில் மறைவதற்கு முன்பாக ஆட்சி செலுத்திய தமிழ் மன்னர்கள் ஆரிய சக்ரவர்த்திகள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள், "தமிழையும் சைவத்தையும் பேணி வளர்த்த புரவலராகவும், புலவராகவும்" பாராட்டப்பட்டுள்ளனர்.

கி.பி. 1620இல் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ சமய மாற்றத்தில் கொடுமைகள் நிகழ்ந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் போர்த்துகீசிய தலைவனுக்கு நாள்தோறும் உணவிற்காக ஒரு பசுவை அனுப்பி வைக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

போர்த்துகீசிய ஆதிக்கத்துக்குப் பிறகு டச்சு, காலனியாதிக்கம் கி.பி. 1658 முதல் கி.பி. 1790 வரையில் நீடித்தது. புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த டச்சு ஆதிக்கத்தில் சுதேசிய சமயங்கள் இழிந்துரைக்கப்பட்டன. மதமாற்றமும் தீவிரமுற்றது. 1796-ல் ஆங்கிலேயர் கொழும்பு நகரைக் கப்பற்றினர். கி.பி. 1815-ல் கண்டி அரசனை வீழ்த்தி ஈழம் முழுவதையும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தினர். இவர்கள் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விட்டு விட்டதால், ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலலயும் மேற்கொண்டனர்.

சைவ சமய ஆர்வலர்கள், சைவ சமய குருமார்கள் கிறிஸ்துவ மிஷனரிகளைப் போல்க் கல்வி பரப்புதலை ஆள்வதில் தகுதியும், திறமையுமற்று பின் தங்கியிருந்தனர். பொதுக் கல்வியில் மட்டுமன்று, சைவ சம்யக் கல்வியும் போதிய தேர்ச்சியில்லாமல் புறச் சமயத்தவரின் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பயனளிக்க இயலாமல் திணறினர். இந்தச் சூழலில் ஆறுமுக நாவலர் கிழர்ந்தெழுந்தார்.

சமயம் பிரசார நூல்களை போர்க்கலன்களாகப் படைப்பதில் நாவலர் தனி முத்திரை பதித்தார். மெதடிஸ்த ப்?டசாலையில் மாணவராகவும், ஆசிரியராகவும் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் பைபிளை தமிழாக்கம் செய்ததில் பேர்சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும், சமய பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகள் நாவலரிடம் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், இயக்க ஆற்றலையும் ஏற்படுத்தின.

கிறிஸ்தவ கண்டன நூல்கள்:

சைவ தூஷண பரிகாரம் (1854), சுப்பிரபோதம் (1853), வச்சிர தண்டம் ஆகியன கிறிஸ்தவ சமய கண்டன நூல்களாகும். இவருடைய கிறிஸ்தவ மத கண்டனங்களை கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள் "Hindu Pastor" எனும் புத்தகத்தில் மிக வியந்து எழுதியிருக்கிறார்கள். 1855இல் "சைவ தூஷண பரிகாரம்" எனும் வெளியீட்டைப் பற்றி வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையில் பின்வரும் வியப்புரைகள் கூறப்பட்டுள்ளன.

"இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு சைவ தூஷண பரிகாரம் எனும் நூல் வெளியீடாகும். இந் நூல் அசாதாரணமான இலக்கியமாகவும் தொன்மமாகவும் விளங்குகிறது. சைவருடைய ஒவ்வொரு நம்பிக்கையும் நடைமுறையும் கிறிஸ்தவ புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை சடங்குகளோடு இசைந்தும் இணைந்தும் இருப்பதாக நிரூபணம் செய்கிறது.

இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவாகத் திரட்டித் தரம் பெற்றுள்ள சாத்தியக் குவியலைப் பார்க்கும்பொழுது மிக்க வியப்பாக உள்ளது. எதிர்தரப்பின் மறுப்பை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதை புறந்தள்ளும் மதி நுட்பம் முதல் தரமான தேர்ந்த உள்ளத்த்?ற்கே உரியதாகும் என்பதையும் இந்நூலில் கான்க்?ன்றோம். இந்நூல் நமக்கு மிகுந்த இடர்களை விளைவிப்பதாகும்".

சைவ சமய விளக்க நூல்கள்:

சைவ சமய வழிபடுகளை விளக்க பின்வரும் சிறுசிறு நூல்களை வெளியிட்டார் நாவலர்:

 

  • அனுட்டான விதி முதற்புத்தகம் (நித்ய கன்ம விதி),

     
  • அனுட்டான விதி இரண்டாம் புத்தகம்,

     
  • குரு வாக்கியம்,

     
  • சிவாலய தரிசன விதி,

     
  • சைவ சமய சாரம்,

     
  • சைவ வினாவிடை முதற்புத்தகம்,

     
  • இரண்டாம் புத்தகம் (1875),

     
  • திருக்கோயிற் குற்றங்கள் (1878).

     

தாக்குதலுக்காக மட்டுமல்லாமல் தற்காப்பிற்காகவும், சுயசமயத் தெளிவிற்காகவும் நாவலர் தன்னந்தனியாக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்கள் போன்ற அமைப்புகள் ஈழத்தில் இல்லாத காலத்தில் அவரே ஓர் அமைப்பாக, இயக்கமாக புயலாகவும் தென்றலாகவும் இயங்கினார்.

கந்த புராண கலாசாரம்

யாழ்ப்பாண சைவ சமயம் கந்தபுராணக் கலாசாரத்த அடித்தளமாகக் கொண்டது. யாழ்ப்பாணம் நல்லூர், இந்து சமய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. நல்லூர் கந்தசாமி கோயில் சைவ சமயத்தின் உயிர் நாடியாகும். கிறிஸ்தவ சமயம் பாதிரிமார் இத்திருக்கோயிலை குறிவைத்துத் தாக்கிப் பிரசாரம் செய்தனர். 1852இம் ஆண்டில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் நடத்தி வந்த "நன்கொடை" எனும் இதழில் "கந்தசாமி கோயிற் திருவிழா" எனும் தலைப்பில் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டை இகழ்ந்து கட்டுரை வெளிவந்தது. எழுத்தில் மட்டுமன்று பேச்சிலும் இகழ்ந்து வந்தனர். இந்த சைவ சமய வெறுப்புப் பிரசாரத்தை முறியடிக்க 1853-ல் நாவலர், "சுப்பிரமணிய போதம்" எனும் நூலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.

கந்தபுராணத்தில் ஆன்மீக மேன்மையை பலவாறாக சைவ சித்தாந்த நோக்கில் தமது நாவன்மையால் விளக்கி வந்தார்.

1861-ல் நாவலருடைய கந்தபுராண வசனம் மதிப்புக்கு வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் கந்தபுராணச் சொற்பொழிவுகள் பெரும் செல்வாக்கு பெற்றன.

'கந்தபுராண கலாசாரம்' என்றால் என்ன? என்பதை விளக்கி கலாநிதி பேராசிரியர் க.கைலாசபதி எழுதியதாவது:

"தத்துவத்தையும், பணபாட்டையும் இலக்கியத்துடன் இணைத்துக் காணும் நிலைக்கும் பொருத்தமான குர்ரயீடாக "கந்தபுராண கலாசாரம்" என்னும் தொடர் கச்சிதமாக அமைந்துள்ளது எனலாம்". நாவலருக்கு பெரிய புராணத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. 1851-இலேயே பெரியபுராண வசனத்தைப் பதிப்பித்து விட்டார்.

சைவ ஆகம நெறி காவலர்:

இந்தியாவில் ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்தர். "வேதகாலத்திற்கு திரும்புங்கள்" என்று முழங்கியதுபோல, நாவலர் "சிவாகமங்கள் காலத்திற்கு திரும்புங்கள்" முழங்கினார். வேதத்தைக் காட்டிலும் ஆகமம் சிறந்தது என்று சாற்றினார். சிவாகமங்களையும், சிவ தீட்சைகளையும் வலியுறித்தினார். சைவ ஆகமங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முரைகளக் கண்டித்தார். தமிழக சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் சிவாகமம் புறக்கணிக்கப்பட்டு, வேதாகமம் பின்பற்றப்பட்டு வந்ததை நாவலர் கடுமையாகச் சாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண சைவ சமயத்தில் அத்வைத வேதாந்த எதிர்ப்பு வீறு பெற்றது.

1897-ல் வேதாந்தச் சிங்கமாக சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வெற்றியுலா நிகழ்த்திய போது ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"சுவாமி விவேகாநந்தரின் போதனைகளும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செய்தியும் இலங்கைத் தமிழ் இந்துக்களை வேதாந்ததை ஒப்புக் கொள்ளச் செய்யாவிட்டாலும் பெரும்பாலோரின் னூர்ருக்ய நோக்கையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளரச் செய்தது."

சைவ சமய சீர்திருத்தவாதி:

உயிர்ப் பலியுடன் கூடிய சிறுதெய்வ வழிபாடுகளை கைவிட வேண்டும் என்று பிரசாரம் செய்தார், நாவலர். திருக்கோயில் விழாக்களில் தேவதாரிகள் நடனம், வானவேடிக்கைகள், ஆபாசமான சித்திரங்கள் முதலானவை விலக்கப்பட்வேண்டும் என்றும் வாதிட்டார். சைவ சமயப் பிரசாரங்கள் போலன்று பொது அறிவும், சமய அறிவும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோயில்களில் நிரிவாகத்தினரின் ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். இவ்வழியில் தமது கருத்துகளை அவருடைய "யாழ்ப்பாணச் சமயநிலை" (1872), நல்லூர் கந்தசாமி கோயில் (1875), மித்தியாவாத் தரிசனம் (1876) முதலான கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

தேசிய உணர்ச்ச்சிக்கு வித்திட்டவர்:

சைவர்களிடையே தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர் என்பதும் அவரைப் பற்றிய பிற்கால மதிப்பீடுகளில் ஒன்றாகும். சைவ சமயத்தை தேசிய சமயமாக முதன்மைப்படுத்தியதால் இந்த மதிப்பீடு தோன்றுயது. தமிழ் மக்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்ட நாவலர் பணி பயன்படுகின்றது.

சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் எனும் கருத்தை நாவலர் தமது "யாழ்ப்பாண சமயநிலை" எனும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"சைவ சமயத்தத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகின்றார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷையின் பெயர்."

பௌத்த சமயத்தையும், சிங்களத்தையும் இணைத்து 'இலங்கை தேசிய'த்தை உருவாக்கியவர், அநகாரிக தர்மபால எனும் பௌத்த சமயத் தலைவர். ஆனால் நாவலர் தொடக்கி வைத்த சைவத் தேசிய உணர்வு "தற்காப்பிற்கானது. அது பிறருடன் அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதல்ல. தமிழர் தேசியம் இதுவரை சமயச் சார்பற்றதாக இருந்து வருவதற்கு நாவலரது செல்வாக்கும் ஒரு காரணமாகலாம் என்று யாழ்ப்பாணத் தமிழ் ஆய்வாளர் க. அருமைநாயகம் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்கால மீளாய்வில் 'தேசியத்தின் தந்தை நாவலர்' எனும் மதிப்பீடு மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்வித் தொண்டு:

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1845-ல் அவர் தோற்றூவித்த சைவப் பிரகாச வித்யாசாலை, சைவ சமய கல்வி இயக்கத்தின் தலையுற்றாகும். கத்தோலிக்க, புரட்டஸ்தந்த் பாடசாலைகளுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவி சைவ சமயத்த்னால் நடத்தும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று நாவலர் வாதாடினார். கிறிஸ்துவரின் எதிர்ப்பால் சைவப் பிரகாச வித்யாசாலை இருபத்தி இரண்டு ஆண்டுகள் அரசு நிதியுதவி பெறாமல் அல்லல்ப்ட்டது. கிறிஸ்துவ வேதாகமத்தை ஆங்கிலப் பாடநூலாக ஆக்கிய பின்பே 1870-ல் சைவப் பிரகாச வித்யாசாலைக்கு நிதியுதவி கிடைத்தது. அக்காலத் தேவையாக விளங்கிய ஆங்கிலக் கல்விக்காக நாவலர் தமது கல்வி இயக்கத்தில் இடமளித்தார். 1872-ல் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார். சைவ சமயத்தினர் இந்த ஆங்கிலப் பாடசாலையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நான்காண்டுகளில் இந்தப் பாடசாலை மூடப்பட வேண்டியதாயிற்று.

உரையாசிரியர் - பதிப்பாசிரியர்:

1849-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில் வித்தியாநு பாலன யந்த்திரசாலை" என்னும் பெயரால் ஓர் அச்சகத்தில் நிறுவினார். இதன் வழியே பல நூல்களை வெளியிட்டார்.

கோயிற் புராணம், சைவ சமய நெறி, நன்னூற் காண்டிகை, சிவ தருமோத்தரம், மருதூரந்தாதி, திருமுருகாற்றுப் படை முதலிய இலக்கண, இலக்கிய, சமய நூல்களுக்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். கொன்றை வேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நன்நெறி எனும் நீதிநூல்களுக்கும் நாவலர் உரையெழுதியுள்ளார்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம்பலம் கோவையுரை, சுருக்க சங்கரக உரை, சேதுபுராணம் முதலிய சுவடிகளை ஆய்ந்து மதிப்பித்துள்ளார், நாவலர். இவருடைய பரிமேலழகர் உரைப்பதிப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார். யாழ்ப்பாணம் பேரறிஞர்களுள் ஒருவரான சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குரிய சேனாவரையர் உரையப் பதிப்பித்தார்.

இவ்வாறு அவருடைய உரை நூல்கள், பதிப்பு நூல்கள் பற்றிய ஆய்வு, தனி ஆய்விற்கு உரியது. அக்காலத் தமிழ்ப் பதிப்புலகில் 'பதிப்பு' என்றால் நாவலர் பதிப்புத்தான் நிகரற்று விளங்கியது. தமிழ் உரைநடையின் ஆதிகர்த்தாக்களுள் ஒருவராகவும் புகழ் பெற்றவர் நாவலர்.

சமூக நோக்கு:

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார்.'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

தமிழக உறவில் நாவலர்:

சென்னையில் சுமார் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சைவ சமய எழுச்சிக்குப் பாடுபட்டார், நாவலர். சிதம்பரத்தில் 1864-ல் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார். இந்த வித்தியாசாலையும், சென்னை தங்கசாலையில் இவர் நிறுவிய வித்யாநுபாலன யந்திரசாலையும் சைவ சமயப் பணியுடன் தமிழ்ப் பணியும் செய்து வந்தன.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் 'நாவலர்' எனும் சிறப்புப் பட்டமும் அளிக்கப்பட்டது.

1860-ல் நாவலர் தமது தமையனாருக்கு எழுதிய கடிதத்தில் "இச்சென்னைப் பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்ததென்று" குறிப்பிட்டுள்ளார். தமிழக அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

vallalaar.gif
தமிழக வாழ்க்கையில் நாவலர், இராமலிங்க சுவாமிகளுடன் கடுமையாக மோதி வள்ளலார் பாடல்களை அருட்பாவாக ஏற்க மறுத்து, மருட்பாவாகப் பழித்துரத்தது, சற்று கசப்பான வரலாற்றுச் செய்தியாகும்.

1868 முதல் சென்னையிலும், சிதம்பரத்திலும் மாதந்தோறும் வியாழக் கிழமைகளில் திவருட்பா, போலியருட்பா ஆகிய விஷயங்கள் பற்றி, உரையாற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட "போலியருட்பா மருட்பா மறுப்பு" (1869)எனும் கண்டன நூலாகும்.

கடலூர் மஞ்சகுப்ப்ப நீதிமன்றத்தில் இராமலிங்க சுவாமிகள் மீது "மானபங்க படுத்தியமை" எனும் குற்றச்சாட்டு நாவலரால் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் சிதம்பரம் சபா நடேச தீட்சிதர் ஒருவரும் எதிரியாகக் குறிப்பிடப்பட்டார். இவ்வழக்கின் முடிவில் சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இராமலிங்க சுவாமிகள், நீதிமன்றத்தில் தாம் நாவலரை அவதூறாகப் பேசவில்லை என்று கூறியதால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் மூலச் சான்றுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையும் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளே கிடைத்துள்ளன.

நாவலர் மரபு:

ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும் நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது. 29.4.1888-ல் யாழ்ப்பாணத்தில் நிறுவப் பெற்ற "சைவ பரிபாலன சபை'யும் அதன் பிரசார முடிவாக 11.09.1889-ல் வெளிவந்த "இந்து சாதனம் - Hindu Organ" எனும் இதழும் நாவலர் மரபின் வரலாற்றை விளக்கவல்லன.

தமிழ் மரபில், நாவலர் மரபிற்கு சிறந்த இடம் உள்ளது.

நன்றி: http://www.ambalam.com



-- Edited by Admin on Monday 13th of April 2015 12:20:53 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

கல்வி[தொகு]

ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம்நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும்உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன்சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

 

The Bible trembled : the Hindu-Christian controversies of nineteenth-century Ceylon

Author:Richard F YoungS Jebanesan
Publisher:Vienna : Inst. für Indologie der Univ. Wien, 1995.
Series:

Publications of the De Nobili Research Library, 22; Publications of the De Nobili Research Library, 22

Subjects


-- Edited by Admin on Monday 13th of April 2015 12:22:12 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021114.htm

 1.4.1நாயக்கர் கால உரைகள்

 

நாயக்கர் காலத்தில் உரைகள் மூலம் உரைநடை வளர்ந்தது. நிரம்ப வழகிய தேசிகர் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகிய திருவருட்பயனுக்கு அழகிய எளிய நடையில் உரை வகுத்தார். மயிலேறும் பெருமாள் கல்லாடத்திற்கு உரை வகுத்தார். இலக்கணவிளக்க ஆசிரியர் வைத்தியநாததேசிகர், இலக்கணக் கொத்து சாமிநாததேசிகர், பிரயோக விவேகம் சுப்பிரமணிய தேசிகர் ஆகிய மூவர் நடையும் பண்டைய இலக்கிய நடையினை ஒட்டியன. சிவப்பிரகாசர் தருக்க பரிபாஷை எனும் உரைநடை நூல் யாத்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை ஓங்கி வளர்ந்தது. விரைந்து சிறந்தது. இதற்குரிய காரணங்கள்: 

 

1)  நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. 

 

2)  கிறித்தவ மதம் பரப்ப எண்ணற்ற நூல்களை மிஷனரிகள் வெளியிட்டன.

 

3)  இதுகண்டு விழிப்புற்ற இந்துக்கள் தங்கள் இதிகாச புராணங்களை

வசனங்களாக வடிக்கத் தொடங்கினர். 

 இந்நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுகநாவலர். உரைநடைக்கு ஒரு வடிவினை அருளியவர். இலக்கண வழுவில்லாத ஓர் எளிய இனிய தெள்ளிய நடையைத் தந்து வழிகாட்டினார். வழக்கில் பயின்ற சொற்களைக் கொண்டே சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிவான தமிழில், இலகுவான நடையில் எழுதினார். குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி மக்கள் உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் சான்ற அருமையான தமிழில் எழுதியும் பேசியும் நாவலர் நடை என ஒரு தனி நடையையே உண்டாக்கினார். இதனால் இவர் தமிழ்க் காவலர் எனவும், தற்காலத் தமிழ் உரையின் தந்தை என்றும் ஏத்தப் பெற்றார். 

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே  எனத் தாமோதரம் பிள்ளை ஏத்துகிறார். 

 

வசன நடை கைவந்த வல்லாளர்  என்பார் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்). 

 

 



-- Edited by Admin on Monday 13th of April 2015 12:16:56 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: கிறிஸ்துவர்களை வெட்கப்பட வைத்த ஆறுமுக நாவலர்
Permalink  
 


http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2009-09-19-08-16-58/2012-04-14-14-56-09

திருமதி. கீதா சாம்பசிவம்

 

 

நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார்.  யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார்.  இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார்.  நல்லூரில் உள்ள  கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார்.  படிப்பு முடிந்ததும் ஜஃப்னாவில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.  கூடவே பள்ளியின் நிறுவனரின்  வேண்டுகோளுக்கு ஏற்ப கிங் ஜேம்ஸ் பைபிளையும் மற்றக் கிறிஸ்துவ இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வந்தார்.  1841-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரையிலும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டார்.  அதிலும் அப்போது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரங்களால் மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது.  மொழிபெயர்ப்புக்காக பெர்சிவல் பாதிரியுடன் சென்னைக்கு வந்து பைபிளை அச்சிட்டுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார்.

 

வேதம், ஆகமம், புராணங்கள் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நாவலர் சைவர்களுக்குத் தங்கள் சமயம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் இருப்பதையும், சரியானதொரு வழிகாட்டி அமையவில்லை என்பதையும் கண்டார்.  அதோடு வாத, விவாதங்களிலே பங்கு பெற்றுத் தம் சமயத்தைக் குறித்து ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்கும் இயலாமல் இருப்பதையும் புரிந்து கொண்டார்.  ஆகவே சைவ சமயத்திற்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொள்ள நினைத்து வெஸ்லி மிஷன் பள்ளியின் நிறுவனர் அதிகச் சம்பளத்தோடு தந்த வேலையையும் மறுத்துப் பள்ளி ஆசிரியர் வேலையையே உதறி எறிந்தார்.  திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நிச்சயித்துக்கொண்டு தம் குடும்பத்தையும் துறந்து சொத்து சுகங்களையும் துறந்தார்.  தம் நான்கு சகோதரர்களிடமும் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.   அன்றிலிருந்து இறுதி வரையிலும் அவருடைய கொள்கைகளில் உறுதியும், உண்மைத்தன்மையும் இருப்பதாய்க் கருதும் நபர்களிடமிருந்து மட்டுமே தேவையான உதவிகளைப் பெற்றார்.  கோயில்களுக்குச் சென்று தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார். இவருடைய முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் நடந்தது.  1847-ஆம் ஆண்டு நடந்த இதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் இவ்வாறு சைவ சமயத்தைக் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் பேசிச் சொற்பொழிவாற்றி வந்தார். யாழ்ப்பாணத்து சைவ மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.   பைபிளின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததால் அதிலுள்ள கேள்விகளுக்கும் சரியான மறுமொழியை இவரால் தர முடிந்தது.  சொல்லப் போனால் பைபிளின் மூலம் நடந்து வந்த பிரச்சாரத்திற்கு ஒரு மாற்றாகவே இவருடைய பிரசாரம் அமைந்தது. 

 

1848-ஆம் ஆண்டு பெர்சிவல் எனப்படும் வெஸ்லி பள்ளித் தலைமை ஆசிரியரைப் பிரிந்து தம்முடைய சொந்தப் பள்ளியை நிர்மாணித்தார். வண்ணார்பண்ணையில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.  அதுவரை மத்திய கல்லூரியில் 3 பவுன் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியராக இருந்ததையும் தூக்கி எறிந்து முழுநேர சமயப்பணியைத் துவக்கினார்.   பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்கள் அச்சிட யந்திரம்தேவையாக இருந்தது.  ஆகவே 1949-ஆம் வருடம் மீண்டும் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார்.  வந்த சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமயச் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார்.  அங்கேதான் அவருக்கு நாவலர் பட்டமும் வழங்கப்பட்டது.  சிலகாலம் இந்தியாவில் சென்னையில் தங்கி சூடாமணி நிகண்டுரையும், செளந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதிப்பித்தார்.  பின்னர் யாழ்ப்பாணம்  திரும்பினார்.  தமது இல்லத்திலேயே வித்தியா அனுபாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார்.  மாணாக்கர்கள் பயன்பெறும் விதத்தில் பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்றவைகளும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை  போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.  திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார்.

 

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.”

மேலும் தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

 

தமிழ்நாட்டில் இருந்தது போல் ஆதீனங்கள், மடங்கள் ஆகிய எதுவும் இலங்கையில் இல்லை.  மதமாற்றம் என்பது ஆளவந்தவர்களால் தீவிரமாக்கப்பட்டதொரு சூழ்நிலையில் நாவலர் தன்னந்தனியராக இருந்து அவரே ஓர் அமைப்பாக இயங்கினார்.  சைவசமய நூல்களைச் சரியானபடி போர்க்கலன்களாக இயங்கும்படி படைத்தார்.  அப்படி அவர் படைத்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை சைவ சமய தூஷணப் பரிகாரம், 1854-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் சுப்பிரபோதம் 1853 இலும் வெளிவந்து அனைவரின் பேராதரவைப் பெற்றது என்று சொல்வதை விட மாற்றுச் சமயத்தினரும் வியந்து பாராட்டத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பெற்றது என்பதே உண்மையாகும்.  கிறிஸ்தவப் பாதிரிமார்களே இவருடைய கிறிஸ்தவமதக் கண்டனங்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால் இவரின் எழுத்தாற்றலைக் குறித்து என்ன சொல்ல முடியும்! 

 

அதன் பின்னர் சைவ சமய வழிபாட்டு முறைகளை விளக்கும் நூல்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டார்.  நித்ய கர்ம அனுட்டான விதி, ஆலய தரிசன விதி போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.  யாழ்ப்பாணத்து நல்லூரின் சைவ சமயம் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் கிறிஸ்துவப் பாதிரிமார்களோ சுப்பிரமணியர் வழிபாட்டையும் நல்லூரில் இருந்த கந்தசாமிக் கோயிலையும் குறித்து இழிவாகப் பேசி வந்தனர்.   இதை முறியடிக்க நாவலர் சுப்பிரமணிய போதம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.  கந்தபுராணத்துக்கு இவர் எழுதிய உரையும் வெளிவந்தது.  இவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகளும் பெரும் ஆதரவைப் பெற்றன.  உயிர்ப்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடுகளை முற்றிலும் எதிர்த்தார்.  ஆகமவழியான கோயில்களில் முறைப்படி ஆகமம் கற்றவர்களே வழிபாடுகள் செய்யத் தக்கவர்கள் எனக் கூறினார்.  தேவதாசிகள் முறை, வாணவேடிக்கைகள், கோயில்களில் ஊழியர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவற்றையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.

 

இவர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். சென்னையைத் தம் சென்மபூமியிற் சிறந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் சைவத் தொண்டுகள் செய்யவெனச் சென்ற நாவலர் அங்கே ஓர் பாடசாலையையும் ஆரம்பித்தார்.  1864-ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரில் தொடங்கினார்.  சென்னை தங்கசாலையில் வித்தியாநுபாலன யந்திரசாலையும் நிறுவிப் புத்தகங்களை அச்சிட்டார். தமிழ்ப்பணி வேறு, சைவ சமயப்பணி வேறு என வலியுறுத்தி வந்தார்.  சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக் காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  படிப்பறிவில்லா ஜனங்களே சைவ சமயத்தைத் தமிழ்ச்சமயம் எனவும், சைவக்கோயிலைத் தமிழ்க்கோயில் எனவும் கூறுவதாகவும் தமிழ் என்பது சமயம் அல்ல எனவும் அது ஒரு மொழி எனவும் தெளிவுபடக் கூறினார்.  சிதம்பரத்தில் இவர் தங்கி இருந்த சமயம் வள்ளலார் வடலூரில் பிரபலம் அடைந்திருந்தார்.  சிதம்பரம் கோயிலில் வள்ளலாரால் பாடப்பட்ட திருஅருட்பா நாவலருக்கு உகந்ததாக இல்லை.  அதைத் தீவிரமாக எதிர்த்தார்.

ஆறுமுக நாவலருக்கெனத் தனி இணைய தளம் உள்ளது. அவரின் சிலையும், மண்டபமும் யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலர் நினைவாலயம்

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

navalar.gif

ஆறுமுக நாவலர் நூல்கள் 
(ஆறுமுக நாவலர் நூல்கள் - மின்புத்தக வடிவில், தேடும் வசதியுடன்!)

http://www.tamilnool.com/navalar/index.html

நூற் பெயர்முழுதாக/பகுதியாகபக்கங்கள்தேடும் வசதியுடன் படிக்கதரவிறக்க
சைவ வினாவிடை முதலாம் புத்தகம் (சிங்கள மொழிபெயர்ப்பு)முழுமையாக36சைவ வினாவிடை முதலாம் புத்தகம் (சிங்கள மொழிபெயர்ப்பு)சைவ வினாவிடை முதலாம் புத்தகம் (சிங்கள மொழிபெயர்ப்பு)
சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்முழுமையாக161சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்
திருவிளையாடற் புராணம்முழுமையாக318திருவிளையாடற் புராணம்திருவிளையாடற் புராணம்
சிவதத்துவ விவேகம்முழுமையாக16சிவதத்துவ விவேகம்சிவதத்துவ விவேகம்
திருத்தொண்டர் புராணம - சூசனம்முழுமையாக135திருத்தொண்டர் புராணம - சூசனம்திருத்தொண்டர் புராணம - சூசனம்
தருக்க சங்கிரகம்முழுமையாக79தருக்க சங்கிரகம்தருக்க சங்கிரகம்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 http://archives.dailynews.lk/2006/06/24/fea03.asp

Cutting edge of Hindu revivalism in Jaffna

 

 

 

 

Colombo%20Diary.jpg

HINDUS: After about 300 years of intense persecution under the Portuguese and the Dutch, the Hindus of Jaffna heaved a sigh of relief when the British took over at the fag end of the 18th century.

The era of forcible conversions to Catholicism (under the Portuguese) and to Protestantism (under the Dutch) was over.

In the liberal atmosphere created by the British, most converts reverted to their traditional religion, namely, Hinduism.

Daniel Poor, a pioneer of the American Ceylon Mission (ACM) noted that with the Dutch yoke off their shoulders, the Hindus of Jaffna returned to "sweet idolatory" and temple building was resumed at a frenetic pace.

As Dr Murugar Gunasingam says in his book, Sri Lankan Tamil Nationalism: A Study of its Origins (MV Publications, Sydney 1999), there were as many as 329 Hindu temples in Jaffna in 1814. Many had come up in the first few years of British rule.

Earlier, the Portuguese had destroyed as many as 500 temples. In Dutch times, temples were in disuse, as the Brahmin priests had been chased out.

Threat from a new quarter But British rule did not turn out to be an unmixed blessing.

It had created a new danger, the danger of conversion through education and systematic propaganda through the use of the new print medium.

The new political and economic order established by the British was creating employment opportunities for the Hindus of Jaffna, which necessitated an education.

And the Hindu Tamil youth of Jaffna were eager to seize these opportunities and acquire an English education for that purpose.

Seeing a potential in this for gaining converts, the new Protestant missions which followed the British flag, set up schools and boarding houses, including some for girls.

Printing presses were established to churn out easily accessible Christian literature on a large scale.

The new British rulers handed over government-run schools to the missionaries, and gave grants-in-aid to non-government schools. The latter was a great help to missionary-run schools.

The missionary-run schools and medical missions, with their dedicated and selfless staff, presented a very new and beguiling face to the people of Jaffna, who, under Portuguese and Dutch rule earlier, had been dragooned into accepting Christianity and economically exploited thereafter by the state-backed missionaries.

Missions fail to make headway However, despite possessing all the necessary tools for mass conversion, the Protestant missionaries did not make much headway.

According to Dr Gunasingam determined evangelisation by the American Ceylon Mission (ACM) from 1816 to 1839 had yielded only 492 converts.

Success eluded the Wesleyan Mission and the Church Missionary Society (CMS) also. Gunasingam says that conversion was low because, unlike the Portuguese or the Dutch, the British did not make conversion a necessity for obtaining government jobs or state patronage.

The British had also declared that they would not allow forcible conversions.

Missionaries create insecurity But many Jaffna Hindu Tamils, mainly of the elite Vellala, Chettiar and Brahmin castes, felt that the power of the missionaries was insidious.

They feared that if the Hindus, mainly Saivite, were not careful, they could be overwhelmed by the missionaries armed with all the tools of modern propaganda then available, namely, a virtual monopoly over the educational system and the printed word.

The liberal education, which the mission schools provided, had created awareness among the Saivites and sharpened their critical faculties.

While the missionaries hoped that education would make the young Saivites see the truth of Christianity and the falsehood of Saivism, it had the opposite impact, notes Gunasingam.

Often, education made the student critical of Christianity and see the danger that it posed to his own indigenous religion.

But this, by itself, did not make the Saivites take measures to assert their faith and oppose the proselytising activities of the missionaries.

What triggered active resistance was the stepping up of vile anti-Saivite propaganda by the missionaries.

According to Gunasingam, the missionaries started attacking Saivisim and Saivite practices viciously because they were frustrated with the poor rate of conversion.

In his article entitled Arumuga Navalar and the Hindu Renaissance Among the Tamils in the book "Religious Controversy in British India" edited by Kenneth W Jones, D Dennis Hudson gives a particularly telling example of the missionary view of Saivism.

He quotes the Protestant periodical Morning Star as saying: "There is nothing in the peculiar doctrines and precepts of the Saiva religion that is adapted to improve a man's moral character or fit him to be useful to his fellow men".

"If the world were to be converted to the Saiva faith, no one would expect any improvement in the morals or the happiness of men." "Everyone might be a great liar and cheat, as great an adulterer, as oppressive of the poor, as covetous, as proud, as he was before without the purity of faith."

The "Skandapuranam" one of the most sacred texts of Saivism, was denounced as a set of "extravagant fictions many of which are of immoral tendency."

The Morning Star and other publications were also making disparaging remarks against the famous Kandaswamy temple in Nallur, saying that it was a den vice.

The attacks on this temple, which was the nerve centre of Saivisim in the Jaffna peninsula, was seen as a frontal assault on Tamil culture and Tamil pride.

Rise of Hindu protest The first to protest against such characterisations and write against Christianity was Muthukumara Kavirajar (1780-1851).

His works, which were printed later, became an important weapon in the armoury of the Saivites.

The first collective action on the part of the Saivites of Jaffna was a meeting held by a group drawn from the elite Vellala, Brahmin and Chettiar communities, at the Siva temple at Vannarpannai in September 1842.

Among the leading lights present were Sathasiva Pillai, Swaminatha Iyar, Viswanatha Iyar, Arumuga Pillai, Kandaswamy Pillai and Arumuga Chettiar.

The group decided to set up a "Veda-Agama" School to teach children the Vedas, the Agamas (temple worship) and the elements of Saivisim.

The plan was to discourage parents from sending their children to Christian mission schools.

It was also decided to purchase a printing press to counter the media war unleashed by the missionaries.

Though the purchase of a printing press took time, the Veda Agama school started functioning in 1842.

Enter Arumuga Navalar It was at this time that Arumugam Pillai (1822-1879) entered the scene with a bang. As Arumuga Navalar or simply as Navalar, he was to become Sri Lanka's foremost Saivite or Hindu revivalist; the harbinger of Tamil nationalism; and the cutting edge of the long, and successful campaign against Christian proselytising.

Navalar was unique among the campaigners for Saivism in Jaffna in as much as he was into it full time.

He had stubbornly remained unmarried to retain his independence.

Having been a student of, and a teacher in, the Wesleyan School, where he was the favourite of the Missionary cum Principal, Peter Percival, Navalar, came with a good grounding in Christianity. This helped him argue against it authoritatively.

He took to Christian methods of preaching which had been effective. Like the Christian pastors, he preached in the places of worship.

On December 18, 1847, Navalar set the ball rolling with a lecture at the Vaideeswara temple in Vannarpannai. He lectured there every Friday. And he went from place to place together with his devoted colleague and assistant, Kartikeya Aiyar of Nallur.

Taking the cue from the Christian missionaries, Navalar made his religion relevant to real life.

In his lectures, he would stress, apart from the theological and liturgical aspects of Saivism, the evils of adultery and drunkenness; the virtue of non-killing; the need to treat women with respect; the importance of giving alms; and the need to protect the cow.

Navalar gave a new interpretation to Saivisim which instilled in his audiences pride in their traditional faith. Simultaneously, he sought reform of Hindu society.

His endeavours helped blunt the Christian missionaries' criticism of Hinduism and Hindu practices.

Drew similarities between Saivism and Christianity Hudson notes that Navalar took a very novel approach to Saivism and and Christianity.

He drew similarities between them and used them to argue that the Christian missionaries had no right to criticise Saivism and paint it in lurid colours.

Navalar noticed striking parallels between the liturgies of the temple in Jerusalem and the temples of Siva in Sri Lanka and India.

He pointed out that the Israelites, who were chosen by God as his own children, believed that the Lord dwelt in the ark made of wood and lived between the cherubim. And He had bestowed grace upon them.

Likewise, the Saivites believed that God dwelt in the idol of Siva and bestowed grace on them.

The Israelites made a sanctuary for the worship of God. The Saivites built temples.The Isrealites worshiped the cherubim and the bronze serpent. The Saivites worshiped images made of gold and silver.

The Israelites displayed bread and wine in their temples. The Saivites kept fruits as prasadam. Both Israelites and Saivites burnt incense. The Israelites burnt the heifer (cow) and took its ashes for use.

The Saivites used the ashes from the dung of the heifer as "Tiruneer" or "Vibhuti".

Navalar wondered why the missionaries approved what the Israelites did, and disapproved a similar thing done by the Saivites.

If they could justify the Israelite rituals as a means to absorb the thoughts of God, the Saivities could justify their rituals too, he argued.

Navalar pointed out that Christ and the early Christians followed the rites and ceremonies of the temple.

The bible had said that it was the duty of every Christian to observe them. How then could the missionaries now abandon them, he asked.

In Navalar's view, the proselytizing Christians were a blessing in disguise, because he believed that Lord Siva was using the Christian missionaries to awaken Saivites to the truths of Saivism as contained in the Agamas.

Need for comprehensive written scripture Navalar's familiarity with Christianity led him to feel that Saivism required a written and revealed set of scriptures that would parallel the Bible's comprehensive authority.

And he believed that the Agama scriptures would serve the purpose because they eliminated the unsavory practices in popular Saivism, even as they gave a sophisticated justification of temple worship.

Writing on Navalar's view of the Agama scriptures, Husdson writes: "On the one hand, the Agama scriptures eliminated some of the popular Shaiva culture, such as animal sacrifices and the worship of malevolent deities and demons, that the missionaries attacked ceaselessly and that had no scriptural basis".

"On the other hand, they provided a sophisticated and profound theological interpretation of temple worship and of the Puranic stories of the gods that nullified the sneers of the missionaries."

"Arumuga Navalar believed that the Sanskrit and Tamil scriptures of Agamic Shaivism purified popular and Puranic religion, elevated the ignorant, and inspired the literati."

Changes character of Hindu schools With the aid of wealthy persons in both Sri Lanka and Tamil Nadu ( with which he was in close touch), Navalar started many schools.

These schools taught Saivism as well as modern subjects to make them relevant to the needs of the modernising world.

He discouraged learning by rote, which had been the traditional method in schools, especially religious schools.

He put difficult Saivite poems and commentaries into easily understandable prose, which would also be as elegant and thought provoking as the original. He designed a graded Saivite curriculum.

The other most important contribution of his was the establishment of a Saivite press with a machine he brought at Madras.

The press, which started functioning in 1850, churned out Saivite literature and commentaries, and Navalar's own writings in a big way.

According to Hudson, the most dramatic use of the press was the publication of anti-Christian literature between 1852 and 1854. In 1954, came a booklet for effectively countering Christian propaganda, entitled "Abolition of the Abuse of Saivism."

Commenting on this booklet, a missionary wrote in Morning Star that Navalar had shown an "intimate and astonishing" acquaintance with the Holy Bible and that he had "cunningly" defended the rituals, practices and lingam worship of the Saivas "on the authority of our own writings!" The missionary then concluded that it could not be denied that the booklet had "great effect" in favour of Saivisim and against Christianity.

Navalar's tireless work, which included ceaseless traveling, writing, and speaking, had a telling impact on Tamil society in Jaffna.

It revived pride in the traditional religion, reinforced ties with Hindu India, reined in the marauding state-backed missionaries, and sowed the seeds of Tamil nationalism.

Bishop Sabhapathi Kulendran had no option but to admit that it was largely due to Navalar that Christian conversions in Jaffna did not live up to the promise they showed in the early part of the 19th century.

PK Balachandran is Special Correspondent of Hindustan Times in Sri Lanka

Courtesy: www.hindustantimes.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard