New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி...


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி...
Permalink  
 


சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி...

 

 
valmiki.gif
தமிழக முதலமைச்சர் இராம பிரானைக் குறித்து பேசியுள்ளது அவரது பகுத்தறிவைக் காட்டுவதாக நினைத்து பேசியிருக்கலாம். ஆனால் உண்மையில் அது பகுத்தறிவின்மையைத்தான் காட்டுகிறது. இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தவரும் 'இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சியாளர்' என கருதப்படுபவருமான பி.பி.லால் இராமாயணம் விவரிக்கும் இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தினார்.
rama_journey.gif
இந்த ஆராய்ச்சிகளின் முடிவினைத் தெரிவிக்கும் லால்,"இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் இராமாயணம் கற்பனை கதை அல்ல மாறாக வரலாற்று உண்மை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதெனவே கருத வேண்டும்." என கூறியுள்ளார். அயோத்தி கோவில் இருந்த இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ராமர் பெயர் பொறித்த முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (அவுட்லுக் ஜூன் 2003)
ram_stone.gif
முதலமைச்சருக்கு இந்த அகழ்வாராய்ச்சி உண்மைகள்தான் தெரியவில்லை, சிலப்பதிகாரம் கூடவா தெரியவில்லை?

 

illango.gif
இளங்கோ அடிகள் கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுகையில் 'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' என இராமரைப் பிரிந்த அயோத்தியை அல்லவா உதாரணம் காட்டுகிறார்! அதுமட்டுமல்ல ஸ்ரீ ராமன் குறித்து நம் நற்றமிழ் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என காணலாம்.
ram_ram.gif
புறநானூற்றிலும் சரி அகநானூற்றிலும் சரி ஸ்ரீ ராமகாதை குறிப்பிடப்படுகிறது. இன்று பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள பகுதிக்கு அருகே அமைந்த பாண்டியர்களுக்குரிய பழமையான கோடிக்கரையில் ஸ்ரீ ராமபிரான் ஒரு படர்ந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இராணுவ ஆலோசனை நடத்துகிறார். அப்போது பறவைகள் ஒலி அதிகமாக ஒலிக்கவே ஸ்ரீ ராமன் அவற்றினை அமைதியாக இருக்க சொல்கிறார். பறவைகளும் ஸ்ரீ ராமன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன.மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது:
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16)
ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராமன் எனமட்டும் புகழவில்லை ஸ்ரீ இராமன் கூறும் வார்த்தை 'அருமறை' என்றே சொல்கிறது. தமிழரின் வீரத்துக்கு இலக்கிய ஆவணமாக திகழும் புறநானூற்றில் ஸ்ரீ இராமபிரான் 'கடுந்தெறல் இராமன்' என ஊன் போதி பசுங்குடையார் (புறம் 70:15) பாடியிருக்கிறார். தமிழ்-தமிழர் பண்பாடு என்றெல்லாம் பேசும் கருணாநிதிக்கு இதுவுமா தெரியவில்லை?
sethucoin.gif
ஜாப்னா இலங்கை தமிழ் வம்ச நாணயங்களில் சேது

 

mahatma.gif
இராமர் சேதுவை பொறுத்தவரையில் அது இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு அப்பால் இந்த தேச ஒற்றுமையின் அடையாளம். இதனை மகாத்மா காந்தியே 'இந்திய சுவராச்சியம்' எனும் தம் நூலில் கூறியுள்ளார். மகாத்மா காந்தி கூறுகிறார்;
"நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். " (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)
அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் திமுக எனும் இனவாத க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.

ஸ்ரீ ராமரைப் பொறுத்தவரையில் அவர் இந்த தேசதர்மத்தின் சின்னம். சத்குரு நானக் ராஜா ராமர் தென்னிலங்கைக்கு பாலம் கட்டி சென்று அரக்கக் கும்பலை அழித்ததை பக்தியுடன் பாடியுள்ளார். புனித குரு கிரந்த சாகேப்பில் ஸ்ரீ ராமபிரானின் திருநாமம் 3533 முறை பெருமைப்படுத்தப்படுகிறது. (மிக அதிக அளவில் இறை நாமமாக குரு கிரந்த சாகேப் புகழுவது ஹரி எனும் திருநாமத்தைதான். 8344 முறை).

nanak_guru.gif
மேலும் சத்குரு நானக் ரரமேச்வரம் வந்து அங்கிருந்து இலங்கை சென்றார், இன்றைக்கும் சத்குருநானக்கின் புனித வருகையை நினைவுகூறும் குருத்வாரா அங்கு உள்ளது. மேலும் குரு கோவிந்த சிங் தம்மை ஸ்ரீ ரரமபிரானின் வழித்தோன்றல் என கூறியுள்ளார்.
gurugovind.gif
எனவேதான் அவுரங்கசீப்பின் முன் தர்மம் காக்க முன்வந்த சீக்கிய வீர குரு தேஜ்பகதூரை ஒப்ப
bitta1.gif
நவீன விஷப்பல் கொண்ட அரக்க சக்தியின் சவாலை ஏற்று ஸ்ரீ ராமன் பெருமையை விவாத மேடையில் ஏற்றுப் பேச முன்வந்துள்ளார் பாஞ்சால சிங்கமும் அகில பாரத பயங்கரவாத எதிர்ப்பு தலைவருமான பிட்டா. அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"ராமர் பாலத்தைக் காக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்....ராமர் உண்மை என நான் கருணாநிதியிடம் நேரடியாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அதில் தோற்றுவிட்டால் உயிரை விடவும் தயார்!"

 

karunai.gif
ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவதார புருஷர் அய்யா வைகுண்டர் ஸ்ரீ ராம பக்தர்களை அவமானப்படுத்தும் அரக்க அல்பர்கள் எத்தகைய தண்டனையை பெறுவார்கள் என கூறியுள்ளார்:
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி (அகிலத்திரட்டு அம்மானை (1179-11185)

மேலே இருப்பதை எந்த அரசியல்வியாதியையும் மனதில் வைத்து சொல்லவில்லை. ஆனால் சாதியக்கொடுமைகளையும் அன்னிய மதமாற்றிகளையும் எதிர்த்து குரல் கொடுத்த ஒரு அவதார புருஷர் இராமபக்தர்களை அவமானப்படுத்தி அன்று அரசாண்ட ஒரு அரக்க அரசனுக்கு இடப்பட்ட சாபத்தை இங்கு சொல்லி இருக்கிறது. தீயவர்கள் அழிய விரும்புபவர்கள் இவ்வாறே வேண்டலாம்.


அய்யாவழி மக்களின் திருநாமம் தாங்கிய காவிக்கொடியான அன்புக்கொடி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பாலபிரஜாபதி அடிகளார் கூறியுள்ளதாவது:

ayya.gif
சேது சமுத்திர திட்டமானது ஊழல் செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும். கடலில் செலவழிக்கிறோம் என்று பலகோடி ரூபாயைக் கொள்ளை அடிப்பதற்கென்றே இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது....இராமர் தன் கைகளால் இந்த பாலத்தைக் கட்டினார் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் கை வைப்பது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மிகப்பெரிய சாபமாகவே அமையும்.பாலம் இடிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மாற்றுவழியில் இந்த திட்டத்தை ஊழல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை....காந்தியடிகள் தற்போது உயிருடன் இருந்தால் ராமர் பாலத்தை காப்பாற்றும் இது போன்ற போராட்டன்களுக்கு அவரே தலலமை பொறுப்பேற்றிருப்பார். ராமரைப் பின்பற்றி தன்னன மகாத்மாவாக்கியவர் காந்தியடிகள். சாதிய சமத்துவத்தை விரும்பியவர் இராமர்....இந்தியாவில் ராமரை தோற்கடிக்க நினைத்த யாரும் வெற்றி பெற்றதில்லல. இராமர் பாலத்தை இடிக்க நினனத்தால் இந்தியா முழுவதும் இன்னொரு புரட்சி உருவாகும்."


__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

தமிழர் தெய்வ வழிபாட்டை கேவலமாகப் பேசி தான் காட்டுமிராண்டி எனக் காட்டிக் கொள்கிறார்.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Ramayana in Thailand and Indonesia are different, they do have Ayothya, Seetha and Lanka characters
I would say that they follow the original version of the Ramayana

If someone read the Indian History carefully, after 3rd century, there was a Political change in India due to which Buddhism and Prakrit got eliminated from India and moved towards south east Asia, the stories of Ramayana did exists in those region.

So, original Ramayana was written in Prakrit, one can easily conclude that Valmiki has translated from Prakrit to Sanskrit, since Prakrit was destroyed, his translation becomes base version in India

Later, Kamber did the translation into Tamil

Today, Lanka is following Buddhism and not Hinduism, not sure whether Ramar was following Hinduism or Buddhism

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Why do you speculate all these from your mind like a drunkard blabber. 

 

Buddhist copied Ramayan and Mahabaratha and made it look like their book, these are proven, Rama Krishna coins beloning to BCE ARE AVAILABLE

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா "மேதை"?

 

 
சில நாட்களாகவே எழுத வேண்டுமென்று நினைத்து நேரம் கிடைக்காமல் இப்போதுதான் எழுத முடிந்தது. கிழக்கு ஷோ ரூம் ஒன்றில் "மேதை" "Prodigy" என்கிற கிழக்கு நடத்துகிற இரண்டு குழந்தைகள் இதழ்களுக்கும் சந்தா சேர்ந்திருந்தேன். அங்கு வைத்து மேலோட்டமாக பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது. போன மாதம் (ஏப்ரல் 2010) அந்த இதழ் வந்த போது அதில் தமிழக வரலாறு குறித்த ஒரு தொடர் வருவதைக் கண்டேன்.
prodigy.jpg

ச.ந.கண்ணன் என்கிறவர் எழுதுகிறார். அதில் பார்த்த சில முத்துக்கள்:


இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தமிழ் மன்னர்கள் ஆரியக்குல நெறியில் ஆட்சி செய்து வந்தார்கள். இதனை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுக்காக்க வந்தவர்களாகக் களப்பிரர்கள் அறியப்படுகிறார்கள்...தமிழகத்துக்குள் நுழைந்த களப்பிரர்கள் ஆரியர்களின் செல்வாக்கைத் தகர்க்கும் விதத்தில் வேள்விக்குடியைக் கைப்பற்றி, தங்களுடைய ஆளுமையை இங்கு நிறுவ ஆரம்பித்தார்கள்.


அடக் கொடுமையே....

ஆரியர்கள் என்கிற காலனிய உருவாக்கமே அகழ்வாராய்ச்சி மூலமும் மானுடவியல் மூலமும் உடைந்து பட்டுவிட்டதே...தமிழகத்தின் ஆக பழமையான இலக்கியங்களிலேயே பாரதத்தின் பண்பாட்டொருமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே...சிலப்பதிகாரமும் கூட அத்தகைய சமுதாய சித்திரத்தை அல்லவா அளிக்கிறது. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நாட்டை புறநானூற்றுப் புலவர் இவ்விதமாக வர்ணிக்கிறார்:

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த 
தீயொடு விளங்கும் நாடன் (புறம்: 397:20-21)


புறநானூற்றை ஆரிய ஆதிக்கத்தை போற்றும் நூல் என தள்ளிவிடலாமா? அதிகமான் நெடுமானஞ்சி (புறம் 99:1, 350:1), பாரி வள்ளல் (புறம் 122), கரும்பனூர் கிழான் (புறம் 384) ஆகியோர் வேத வேள்விகள் செய்திருக்கிறார்கள். தென்னவன் மறவன் பண்ணி செய்த வேள்வியை அகநானூறு குறிக்கிறது (அகம் 13:11-12) அதிகமானையும் பாரியையும் ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்த தமிழ் மன்னர் என சொல்லிவிடலாமா? அகநானூற்றையும் அவ்வாறே தள்ளிவிடலாமா? பார்ப்பனர்களைக் குறித்து சங்க இலக்கியம் விரிவானதொரு சித்திரத்தை அளிக்கிறது. எந்த இடத்திலும் தமிழின் இந்த தொன்மையான இலக்கிய நினைவானது அவர்களை அன்னியர்களாகவோ வந்தேறிகளாகவோ காட்டவில்லை. மாறாக தமிழகத்தின் பண்பாட்டுடனும் மக்கள் வாழ்க்கையுடனும் இயைந்தவர்களாகவே காட்டுகிறது. 

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் தன் வெஞ்சினம் மிக்க சூளுரையிலும் கூட கண்ணகி 

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு 
தீத்திறத்தார் பக்கமே சேர்க


என அக்கினி தேவனைப் பார்த்து சொல்கிறாள். கண்ணகியும் ஆரிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவள்தானா?

பிரச்சனை என்னவென்றால், காலனிய காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் எவ்வித பண்பாட்டு பார்வையும் இல்லாமல் ஒரு தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதிகள் இல்லாத திராவிட பொற்காலமொன்று இருந்ததாகவும் அதனை ஆரிய பிராம்மணர் தந்திரமாக கெடுத்து சூழ்ச்சி செய்துவிட்டதாகவும் ஒரு வரலாற்று கட்டமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்புக்கு காலனிய ஆட்சியினரின் ஆதரவும் அன்னிய மதமாற்றிகளின் ஆதரவும் இருந்தது. அன்று வேலைவாய்ப்பு இத்யாதிகளால் நகரிய அபிராம்மணர் மனதில் உருவாகியிருந்த/உருவாக்கப்பட்டிருந்த பிராம்மண வெறுப்பு இந்த பொய்யான வரலாற்றுக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு ஒரு இனவாத வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த போலி வரலாற்று பொய்மையானது பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாச பிரச்சாரங்களுடன் பவனி வந்தது. ஆனால் தமிழ் இலக்கியத்தை படிக்கும் எந்த அறிஞருக்கும் உண்மையான வரலாறு இந்த போலி பம்மாத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதது என எளிதில் தெரிய வரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தமிழ் மன்னர்கள் ஆரிய ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு விட்டதாக பொய் பிரச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. வரலாற்று தெளிவுகள் அற்ற களப்பிரர் காலம் இவர்களுக்கு தோதாக வாய்த்தது. அக்கால கட்டத்தை எவ்விதமாகவும் கட்டமைத்து வித்தை காட்டமுடியும். எஎனவே இந்த காலகட்டம் தமிழர்களின் பொற்காலமாக இருந்ததாக அடுத்த பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. இதிலெல்லாம் பலியாவது உண்மையான தமிழக வரலாறுதான். காலனிய கருத்தாக்க சுமைகள் இல்லாமல் நம் பாரம்பரிய வரலாற்றை அணுகக் கூடிய திறனை நாம் இழந்துவிடுகிறோம். இதனால் நம்முடைய மரபு குறித்த ஒரு முழுமைப்பார்வை இல்லாமல் போகிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இனவாதமே பொய்த்துப் போயுள்ளது. இதற்கு நம்முடைய அகழ்வாராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

இந்த ஆரியர்-ஆரியரல்லாதவர் என்கிற எளிய அரசியல் தன்மை கொண்ட இருமை-சட்டகம். இது பாமரத்தனமான வெறுப்பு அரசியல் நடத்தத்தான் உதவும். இந்த பார்வை சட்டகம் அகன்றால்தான் நம் வரலாறும் அதன் பண்பாட்டு இயக்கங்களும் பண்பாட்டு சமூக மாற்றங்களும் எத்தனை நுட்பமும் சிக்கலும் நிறைந்தவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். துரதிர்ஷ்டவசமாக வக்கிரமான அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த ஆரிய இனவாதம் உயிருடன் வாழ வைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளாவது அவர்களது மனதில் இந்த இனவாதக் கோட்பாட்டின் இருள் விழாமல் வளர வேண்டும் என்று நினைத்தால் கிழக்கு போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் குழந்தைகள் இதழ்களில் இந்த வக்கிர வரலாற்றுப் பொய்யை விதைத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 

படிக்க:
பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard