New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பழைய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?
Permalink  
 


   Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible 

Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin 
of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். 

இந்நூல்  தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள். 

1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல. 

2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் 
கட்டுக்கதை. 

3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது. 

4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. 

5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள். 

6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். 

7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை. 



-- Edited by Admin on Thursday 3rd of May 2012 08:11:48 AM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்னுமொரு நூல் – 

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors 
John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York. 

How was Hebrews living during OT times. 

The small Corner of the Eastern Mediterranean, we have to keep 
reminding ourselves that it take up only Lower Third of that coast- 
particularly speaking was the Whole World to them. 

Page-77 

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில்
புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறுபகுதியே அவர்கட்கு முழு உலகமும்.

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the 
Roman Period occupied more area than that of an American University 
Football Stadium, most Villages were hardly bigger than the Playing 
Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured 
about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed 
together according to no particular pattern, leaving room for Passages 
but not for Streets. Before the Greek Period there were no Public 
Building of the Kind that we take for granted, provided by the 
Municipal Government. 

Pages- 87,88 

ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை. 

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies 
of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a 
Slightest interest is shown in them. 

Page-77 

The Best Opportunity for Economic Development, it might seem was One 
they never took; Commerce by Sea with Mediterranean always at their 
door, the Israelites stubbornly remained a Land Locked People. They 
were effectively Shut off from the Coast at first by the Philistines, 
but the warfare between the two, more had to do with the Philistines 
attempt to expand toward the east than with any desire of the 
Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no 
natural Harbors south of Carmel, this need not have been a Permanent 
Obstacle. 

The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians 
conduct their Merchant Shipping for them, almost as though they 
Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of 
Land and Nothing Further. 

It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to 
them, had no significant part to Play in their Thought. 

Pages 86-87. 

வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை. 

பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. 

இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் 
வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட 
நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர். 

பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது என கதை புனைகின்றது விவிலியம். 

உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக் வரலாற்று கணக்கு 

சந்ததி பிறந்த ஆதாமிய வருடம் வாழ்நாட்கள் இறந்த ஆதாமிய வருடம் 
ஆதாம் ——————-000——————-930—————930 
சேத்————————-130————————912—————1042 
ஏனோஸ் —————–235————————-905—————1140 
கேனான்——————–325———————–910—————1235 
மகலாலெயேல்————395———————–895—————1290 
யாரேத்———————-460————————962—————1422 
ஏனோக்கு——————622————————-365————–987 
மெத்தூசலா—————-687————————-969————–1656 
லாமேக்கு ——————874————————-777————–1651 
நோவா———————-1056———————-950—————2006 
சேம்————————–1556———————-600—————2156 
அர்பக்சாத்——————1658———————-438—————2096 
************************************************************************ 
சாலா————————-1693———————433—————2122 
ஏபேர்————————1723———————-464—————2187 
பேலேகு———————1757———————–239————–1996 
ரெகூ————————-1787———————–239————–2026 
செரூகு———————–1819———————–230————–2049 
நாகோர்———————1849————————148————–1997 
தேராகு———————-1878————————-205————-2083 
ஆபிராம்———————1948————————175————-2123 
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து 
எடுக்கப்பட்டுள்ளது. 
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார். 

லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன். 

நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர். 

தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன். 

நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக. 

யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு 
வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் 
புனைகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பைபிளின் வரலாற்று முரண்

 

கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு என்பது பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்டவேதங்களின் தொகுப்பு ஆகும். உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகம், யாத்திராகம், லேவியராகமம்,எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால்எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்றாத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுறுவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப்பாருங்கள்.

 

1.        பின்புமோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும்பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்அப்பொழுது கர்த்தர்அவனுக்குதாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2.       நப்தலி தேசம் அனைத்தையும்எப்பிராயீம் மனாசே என்பவர்களின்தேசத்தையும்கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3.       தென்புறத்தையும்சோவாவரைக்குமுள்ள பேரீச்சமரங்களின்பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகியசமனான பூமியையும் காண்பித்தார்.

4.       அப்பொழுது கர்த்தர்அவனை நோக்கி: நான்உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இது தான். இதை உன் கண் காணும்படிசெய்தேன்ஆனாலும்நீ அவ்விடத்திற்குக் கடந்து போவதில்லை என்றார்.

5.       அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசேமோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்.

6.       அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ளபெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள் வரைக்கும்ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

7.       மோசே மரிக்கிற போது நூற்றிருபது வயதாயிருந்தான்அவன் கண் இருளடையவுமில்லைஅவன் பெலன் குறையவுமில்லை.

8.       இஸ்ரவேல் புத்திரர்மோவாபின் சமனானவெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;மோசேக்காகஅழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

9.        மோசேநூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின்ஆவியினால்நிறையப்பட்டான்இஸ்ரவேல் புத்திரர்அவனுக்குக் கீழ்ப்படிந்துகர்த்தர்மோசேக்குக் கட்டளையிட்டபடியேசெய்தார்கள்.

10.   மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும்அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும்அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படிகர்த்தர்அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

11.   அவன் இஸ்ரவேலர்எல்லாருக்கும்பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும்மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

12.   கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போலஒருதீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்றுவிளங்கும். (மோசே எனும்தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமகத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)

 

மோசே எழுதிய இந்தஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும் அவரை அடக்கம் செய்த விபரமும் மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும்மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பதுநாட்கள் துக்கங் கொண்டாடிய செய்தியும் மோசேவுக்குப்பிறகு யோசுவா என்பவர் அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?

 

இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தமம் இல்லைஎன்பதை அறிவுடையோர்உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும்என்பது இதிலிருந்து உறுதியாகின்றதுமேற்கண்ட பைபிள் வசனங்களில் "மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில்தோன்றியதில்லை!” என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

 

பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும்தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகுமோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரைவாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதைஅறிந்வர் தாம் இப்படிச் சொல்ல முடியும்.மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயேஇந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Devapriya said...

அப்போஸ்தலர் .5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.
ராமின் -சற்றே பைபிள் படியுங்கள் - புனைந்துள்ள கதைப்படி இருந்தது 2 தலைமுறை மட்டுமே.
எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்.
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர். அதுவும் எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. மேலும் ஆதாரம் வேண்டும் என்றாலும் தரப்படும்.

June 17, 2012 8:18 PM

Devapriya said...

அப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம் 

பவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம் 

ஆதி 46:27 ல் யாக்கோபினர் 66 பேர் மட்டும் மற்றும் ஜோசப் குடும்பம் 4 உடன் 70 பேர் எனக் கதை சொல்கிறது, ஆனால் உள்ள வேறு கதைப்படி 2 தலைமுறை தான் -மேலும் ஆதாரம் வேண்டும் என்றாலும் தரப்படும்.
ராபின் பைபிளில் புனைந்துள்ளவை உள்ளது உள்ளபடி தான் தந்துள்ளோம், நீங்களே பைபிளை சரி பார்த்து தவறு இருந்தால் சொல்லவும்.

http://aatralarasau.blogspot.in/2012/06/18.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கருப்பையா said...



தேவப்ரியா சாலமன் கொடுத்த வசனங்கள்- எகிப்தில் 400 வருடம் என்றும் 430 வருடம் எனச் சொல்வது கண்டோம். பைபிள் காலத்தில் ஒரு தலைமுறை 40 வருடம் என நம்பினர்; ஆனால் உண்மையில் 25 வருடம் என்பர்.

400 என்றால் 16, 430 - 17 + ஆகும்.

2 தலைமுறை என்பதற்கு பைபிள் ஆதாரம் தரமுடியுமா

 

சார்வாகன் said...

வணக்கம் சகோ க‌ருப்பையா 

ச‌கோ தேவ‌ப்பிரியா இரு த‌லைமுறைக‌ள் என் எந்த‌ புத்த‌‌க்த்தில் இருந்து கூறினார் என்ப‌து என‌க்கு தெரிய‌வில்லை.

எனினும் 17 த‌லைமுறைகளில் 430 வருடங்களில் எனில் 70 பேர் 30 இல‌ட்ச‌ம் ஆவதற்கு தலைமுறைக்கு 87% ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பு வீத‌ம் இருந்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.இதற்கு ஒவ்வொரு பெண்ணும் 4 குழந்தைகள் பெற வேண்டும்.வ‌ருட‌ம் 2.51% அதிக‌ரிப்பு போதும்.சாத்திய‌ம் எனவே தோன்றுகிற‌து.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேதாகமத்தில் இறைப் பெயர்கள்

 

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.

 

jesusearth.jpg

 

பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான முற்பகுதி நூல்களின் மூலமொழி யூதர்களின் மொழியான எபிரேயம் ஆகும். ஒருசில பிற்பகுதி நூல்கள் எபிரேயத்தின் கிளை மொழியான அரமேயத்தில் எழுதப்பட்டவை. இஸ்ரவேல் மக்கள் பழைய ஏற்பாடடில் உள்ள நூல்களையும் தள்ளுபடி ஆகமத்தில் காணப்படுகின்ற சில நூல்களையும் சேர்த்து தேவன் தங்களுக்கு மட்டுமே தந்த வேதம் என்று கருதுகிறார்கள். இந்த யூதர்களின் வேதம் தானக் (Tanakh) என்றழைக்கப்படும். இது தோரா (Torah =Teaching or Law), நெவிம் (Neviim = Prophets), கெட்டுவிம் (Ketuvim = Writings) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இயேசுவானவர் படித்த வேதமும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்ட வேதமும் இதுதான். இதனை ஹிபுரு பைபிள் (Hebrew Bible) என்றும் அழைப்பர். 

இதில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம் ஏல் (El) என்பதாகும். இதன் கருத்து ‘வல்லமையுள்ளவர்’ என்பதாகும். இதிலிருந்து ‘எல்கானா’, ‘சாமுவேல்’, ‘இஸ்ரவேல்’, ‘பெத்தேல்’ என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரவேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பல முறை இந்த ‘ஏல்’ பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, ஏல் ஷாடை (El Shaddai) ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ (எண் 24:4), ஏல் எலியோன் (El Elyon) ‘உன்னதமான கடவுள்’ (ஆதி 14:18), ஏல்ரோய் (El Roi) ‘அரணான கடவுள்’ (ஆதி 16: 13), ஏல்ஓலம் (El olam) ‘என்றுமுள்ள கடவுள்’ (ஏசாயா 40: 28-31). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம், ஏலோஹிம்(Elohim) ‘ஆற்றல்மிகுந்த கடவுள்’ (ஆதி 1:1) என்பதாகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் யாவும் கடவுளின் காரணப் பெயர்களாகும். 

இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் (Proper name) அல்லது இடுகுறிப் பெயர், எபிரேய மொழியில் யாவே (YHWH / Yahweh), அதாவது, ….. இருக்கிறவராக இருக்கிறேன் (யாத்தி 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. 

எலியா தீர்க்கத்தரிசியின் பலியை வானத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்த போது, ஜனங்கள் எல்லாரும் முகங்குப்புற விழுந்து ‘யாவேஹூ ஏலோஹீம்’ எனச் சத்தமிட்டார்கள். ‘யாவேயே கடவுள்’ (1 இராஜா 18: 39) என்பது அதன் பொருள். ‘ ….. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக’ (யாத்தி 20: 7) என்ற மூன்றாம் கற்பனையின்படி இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது அபச்சாரம், பாவம் என்று யூதர்கள் கருதிய வழக்கத்தின் காரணமாக, அவர்கள் ‘யாவே’ என்று வருகின்ற இடங்களிலெல்லாம் அதோனை (Adonai) என்ற சொல்லை உச்சரிப்பர். இச்சொல் பழைய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ‘யாவே’ என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பதே இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில், அதாவது கி.பி. 1518ஆம் ஆண்டுக்குப் பின்பு அச்சொல் யெகோவாஎன்று உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலமொழியில் இல்லை. 

புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டு மொழியான எபிரேயமும் அரமேயமும், புதிய ஏற்பாட்டு மொழியான கிரேக்கமும் தான் வேதாகமத்தின் மூன்று மூல மொழிகளாகும். இவற்றிலிருந்து தான் உலகின் பிற மொழிகளுக்கு ‘யூத - கிறிஸ்தவ’ வேதம் கிடைத்தது. யூத வேதத்தை பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்தவ நூல்களைப் புதிய ஏற்பாடு என்றும் அழைப்பர். 

16ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த இயேசுசபைக் குரு அன்டிரிக்ஸ் கடவுளின் பொதுப் பெயராகத் தம்பிரான் (தன் + பிரான் = தன்னுடைய தலைவன்) என்ற சொல்லைத் தம் எழுத்துக்களில் பயன்படுத்தினார். 

17ஆம் நூற்றாண்டில், ராபர்ட் டி நொபிலி ஈஸ்வரன் என்ற பதத்தோடு சர்வ என்ற அடைமொழியைச் சேர்த்து உருவாக்கின சருவேசுரன் என்ற பதத்தை, ரோமான் கத்தோலிக்கர்கள் தம்பிரான் என்ற சொல்லுக்குப் பதிலாக உபயோகிக்கத் தொடங்கினர். அதற்கு எல்லாம் வல்லவர்எல்லாவற்றுக்கும் மேலானவர்என்பது பொருள்.


297 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் எபிரேய ஏலோஹிம் என்ற சொல்லை சருவேசுரன் என்றும்,யாவே என்ற சொல்லை கர்த்தர் என்றும் மொழிபெயர்த்தார். 

சைவப் புலவர் தாயுமானவரின் "பராபரக் கண்ணிகள்" கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு இசைப் பாடலும் "பராபரமே" என்று முடியும். அவரின் சமகாலத்தவரான எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக ‘பராபரமே’ என்ற பதத்தை ‘அன்’ விகுதி கொடுத்து பராபரன் என்று மாற்றி வேதத் திருப்புதலுக்குள் கொண்டு வந்தார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரிஷியஸ் ஐயரும் (Fabricius) இரேனியஸ் ஐயரும் தங்கள் மொழிபெயர்ப்புகளில், முழுமுதற் கடவுள்ஒரே கடவுள் என்று பொருள் வரக்கூடிய இடங்களில் பயன்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் இப்பதத்தை ஏனைய புராட்டஸ்தந்து சபையார் கைவிட்ட போதிலும், தமிழ் லுத்தரன் சபையார் மட்டும் இன்றும் உபயோகித்து வருகின்றனர். 

பீட்டர் பெர்சிவல் (Peter Percival) பரிசோதனை பதிப்பில், பராபரன் என்று வருகிற இடங்களில் எல்லாம் தேவன் என்ற சொல்லை பயன்படுத்தினார். இச்சொல்லை ஆறுமுக நாவலர் அறிமுகம் செய்தார். ஹென்றி பவரும் தன்னுடைய ஐக்கிய மொழிபெயர்ப்பில், தேவன் என்ற சொல்லையேப் பயன்படுத்துகிறார்.

‘தேவன்’ என்பதன் வேர்ச் சொல் ‘தே’ என்பதாகும். மிகவும் பழமை வாய்ந்த இச்சொல்லின் பொருள் ‘ஒளி’ , ‘பிரகாசம்’ என்பதாகும். ‘மனிதரினின்று உயர்ந்தது’, ‘வணங்கப்படத்தக்கது’ என்றும் பொருள்படும். சமஸ்கிருதத்தில் இச்சொல் உண்டு. கிரேக்க மொழி வேதத்தில் தியொஸ் (Theos), இலத்தின் வேதத்தில் டேயுஸ் (Deus) ஆகிய இரு சொற்களும் ‘ஒரே கடவுள்’ என்ற பொருளைத் தரும். இவற்றின் வேர்ச் சொல்லும் ‘தே’ என்பதே ஆகும். ‘தே’ என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் தான் ‘தெய்வம்’ ஆகும். தமிழ் வேதாகமத்தில் ‘தேவன்’, ‘தேவாதி தேவன்’, ‘தெய்வம்’ போன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். 

‘பராபரன்’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் சமன்பாடு ‘கடவுள்’ ஆகும். அது கட+உள் என்று விரியும். ‘அனைத்தையும் கடந்த ஆனால் உள்ளேயும் உறைகின்ற’ (transcendent and immanent) என்ற பொருளைத் தரும். 

யூதர்களின் வேதத்தில் கடவுளுடைய சொந்தப் பெயர் யாவே என்றும், அந்த சொல்லுக்குப் பதிலாக அதோனை என்ற காரணப் பெயரை லத்தீனில் Dominusஎன்றும், ஆங்கிலத்தில் Lord என்றும், ஜெர்மன் மொழியில் Herr என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். இது தமிழில் கர்த்தர் என்று பப்ரிஷியஸ் ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ‘கிறி’ (செய்கிற) என்னும் சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே ‘கர்த்தர்’ என்ற பதத்திற்கு ‘செய்கிறவர்’ என்று பொருள் - (உதாரணம் - ‘கருமகர்த்தர்’). இம் மூலத்திலிருந்து ‘கருமம்’, ‘கிரியை’ ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், ‘அதிபதி’, ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ என்னும் கருத்துக்களையும் கொடுக்கும். ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ போன்ற சொற்களை கிறிஸ்தவர்கள் ‘ஆளுகிறவர்’, ‘ஆண்டவர்’ என்று மரியாதை நிமித்தம் மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard