New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அல்லாவின் பார்வையில் பெண்கள்:


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அல்லாவின் பார்வையில் பெண்கள்:
Permalink  
 


 மகனா? மகளா? நன்மை செய்வதில் யார் நெருக்கமாக இருப்பர்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றாலும் இது அல்லாவிடமிருந்துவந்த கட்டளை. அதாவது ஆணுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது, அவனே பெற்றோரை குடும்பத்தை கவனிப்பவனாக இருக்கிறான் என்பதால் அல்ல, அல்லாவின் கட்டளை என்பதால் ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணே பொறுப்பேற்பவளாக இருந்தாலும் ஆணுக்கு இரண்டு மடங்கு தான். இதில் மறுப்பதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ வழியில்லாத அளவுக்கு ஆணும் பெண்ணும் சமமல்ல என்று குரான் தெளிவாகவே கூறிவிடுகிறது. மதவாதிகள் தான் சமாளிப்பு விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

குரான் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.  மஹர் தொகை பெண்களுக்கானது என்பது முகம்மதின் நிலைப்பாடு. அதாவது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடை மணப் பெண்ணுக்கே சொந்தம். முகம்மதுவுக்கு அல்லது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் மஹர் பெண்ணுக்கு என்பது பெயரளவில் இருந்தாலும் அதை பெண்ணின் தந்தையே அனுபவித்து வந்தனர் (இதுகுறித்து தனித்தலைப்பில் விரிவாக பின்னர் பார்க்கலாம்)இதை சீர்திருத்தி முகம்மது குரானில் பெண்ணுக்கே உரியது என்கிறார். இந்த கிடக்கையிலிருந்து தான் பெண்ணின் சொத்துரிமைக்கான அங்கீகாரம் கிளைத்து வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா

 

எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.

 

புர்கா, பர்தா, துப்பட்டி, ஹிஜாப் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் பெண்களுக்கான மேலதிக ஆடை தமிழ்ச் சூழலில் 80களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை இஸ்லாமியப் பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது. எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக இஸ்லாமியர்களால் திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை இஸ்லாமியர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள். ஒன்று. புர்காவை மறுப்பவர்கள், மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக கொண்டிருக்கும் போக்கிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது. இரண்டு, புர்காவை மறுப்பவர்கள், பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பதை வரையறுத்திருக்கிறார்களா? என்பது.

 

பெண்களுக்கான இந்த மேலதிக ஆடைய அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை காக்கும் என்பது தான். பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம். ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக எண்ணாததன் வெளிப்பாடு தான். எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

 

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயியினும், வேறு பெண்களாயினும்; முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல. ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு; சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

 

பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால்; பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.

 

இஸ்லாம் ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது முஸ்லீம்களின் பிரபலமான வாதம். இது உண்மையா? குரான் 24:30,31 இப்படி குறிப்பிடுகிறது.

 

மூமீன்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்….. இன்னும் மூமீன்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தம் கணவர்கள், தம் தந்தையர்கள், தம் கணவர்களின் தந்தையர்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது……

 

இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன, முஸ்லீம்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையரை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும். இது ஆடை சார்ந்த விசயமா? அடிமைத்தனம் சார்ந்த விசயமா?

 

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் ஹிஜாப் போன்றது தான் என்று முஸ்லீம்கள் வைக்கும் வாதத்தையும் மேற்கண்ட வசனம் தகர்த்து விடுகிறது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அன்னியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.

 

முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் ஹதீஸை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குரான் வசனங்கள், ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

 

நபியே நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக…….. குரான் 33:59

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த வசனம் வந்த சூழலை புஹாரி 146 துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள். முகம்மதின் மனைவியருள் ஒருவராகிய ஸவ்தா அவ்வாறு வெளியில் செல்கிறார். அப்போது முகம்மதுடன் அமர்ந்திருக்கும் நண்பரான உமர் ஸவ்தாவே உங்களை அடையாளம் தெரிந்து கொண்டோம் என்கிறார். முக்காடிடுவது குறித்த வசனம் இறங்க(!) வேண்டுமென்பதற்காக சப்தமிட்டு இவ்வாறு கூறுகிறார்.அப்போது தான் மேற்கூறிய வசனம் இறங்குகிறது. இந்த ஹதீஸை அறிவிப்பவர் முகம்மதின் இன்னொரு மனைவியான ஆயிஷா. ஸவ்தா முகம்மதின் மனைவியரில் உயரமானவர் எனவே இங்கு முகத்தை மறைப்பது பற்றியே கூறப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு ஆடைகளையே ஹிஜாபாக கொள்ளலாம் என்றும், முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.

புர்கா குறித்த பிரச்சனை எழுப்பபட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு இஸ்லாம் ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல. போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அன்னியருக்குமுன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான். இதுமட்டுமன்றி புர்கா அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு புர்கா அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

 

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறது. பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக புர்காவை முன் தள்ளுகிறது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு நான்கு மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை புர்காக்களுக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

 

ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புர்கா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்?  சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க் கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌து போல் தைத்துக் கொள்ள‌  வேண்டும் என‌த் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

 

அல்லாவின் பெயரை உச்சரிக்கக் கேட்டுவிட்டால் முஸ்லீம்கள் அடையும் புளகம் சொல்லி மாளாது. எல்லாம் அறிந்த, எக்காலமும் அறிந்த கடவுளின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த ஒரு சராசரி மனிதனின் பார்வையைத் தாண்டி இஸ்லாத்திலோ, குரானிலோ ஒன்றுமில்லை என்பதற்கு இந்த புர்காவை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதில் அடைப்புக் குறியினுள் குறிப்பிட்ட அனைத்தும் ச()கோ இராஜாவின் கருத்துகளே
XXXXXXXXXXXXX__________________
[பதிவில் பெண்ணை ஒருவன் தவறாக பார்ப்பது ஆணின் தவறுதான்,அவள் உடை மீது அல்ல என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
அப்ப்டி எனில் எனக்கு(ச()கோ இராஜா) ஒரு சந்தேகம் ஏன் உங்கள் வீட்டை பூட்டி வைக்கிறீர்கள்? திறந்து வைத்து திருடனை தூண்டலாமே!
ஆகவே நாளையில் இருந்து உங்கள் வீட்டை பூட்ட வேண்டாம்!!!!!
முஸ்லிம் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு உண்டு.அரபு ஷேக் எப்படி உடை அணிகிறார்?.அவர் என்ன ஷார்ட்ச் அலது பெர்முடா அணிகிறாரா?

ஆகவே பொது அறிவை எழுதும் முன் பயன் படுத்துங்கள்!!!!]
___________________________-
ஆகவே
1.முஸ்லிம் பெண்கள்=வீடு
வீட்டுக்கு சிந்திக்கும்,தன்னை பாதுகாக்கும் திறன் எவ்வளவு உண்டோ அவ்வளவுதான் முஸ்லிம் பெண்களுக்கு உண்டு
2. முஸ்லிம் ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடு உண்டு.நல்ல விஷயம்தான்.இதுவும் ஆண்களின் பாதுகாப்புக்காக என்றே எடுத்துக் கொள்ளலாம்.
________________XXXXXXXXXXXXXXXX

சரி என் கருத்தை சொல்லி விடுகிறேன்

ஒரு பெண்ணின் உடல்,உடை சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு.

இதில் ஆண்(டவன்) களுக்கு உரிமை கிடையாது!!!.

மற்றபடி நண்பர் கோவியின் கருத்தே நம் கருத்து!!!!.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. ஹிஜாபின் கதையை குரான் மற்றும் ஹதீதின் ஒளியில் நாம் அறிய வேண்டாமா ?
    முகம்மதுவின் மனைவிமார்கள் ( கிட்டத்தட்ட 13 ) கழிவு வெளியேற்ற அல்-மனாசி அப்டின்னு ஒரு திறந்த வெளி புல்வெளி கழகத்துக்கு போறது வழக்கம். கூட்டமா கக்கூஸ் போறதை உமர் தினமும் நோட் பண்ணுவாராம். ( நடந்து போறதா மட்டும்னு நான் நினைக்கிறேன் )
    அப்படி நோட் பண்ணி ஒருநாள் சவுதா ( மூமீன்களின் தாய்) போகும் பொது இந்த உமர் அத பாதுட்டாறாம்.
    உடனே அத நபிகிட்ட போட்டு குடுத்த உடனே அல்லா கிட்ட இருந்து “வஹீ” வந்துருச்சாம்.
    அதுக்கு நபி, உமர் நாக்குல அல்லா இருக்குறான்னு வேற பாராட்டாம். ( அல்லா எங்கே என்று கேட்கும் நாத்திகர்களுக்கு பதில் கிடைத்து விட்டது !! சுபஹானல்லாஹ் ) .
    கேள்விகள் :
    ****************
    1 . மூமீன்களின் தாய்கள் கக்கூசு போகும் போது அவுகள நோட் பண்றது தான் உமரின் வேலையா ?
    2 . அல்லாஹ்வின் இருப்பிடம் உமரின் ஊத்த வாயா ?
    3 .சவுதாவுக்கு அன்று கக்கூசு வரலேன்ன முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட வேண்டிய அவசியமிருக்காதா?
    4 . உமர் சொல்லித்தான் அல்லாஹ்வுக்கு ஹிஜாப் பற்றி அறிவு வந்ததா ?

    This is one of those incidents that led to the revelation of the verses of Hijab. ‘Umar played an important role in it..

    Volume 1, Book 4, Number 148:

    Narrated ‘Aisha:

    The wives of the Prophet used to go to Al-Manasi, a vast open place (near Baqia at Medina) to answer the call of nature at night. ‘Umar used to say to the Prophet “Let your wives be veiled,” but Allah’s Apostle did not do so. One night Sauda bint Zam’a the wife of the Prophet went out at ‘Isha’ time and she was a tall lady. ‘Umar addressed her and said, “I have recognized you, O Sauda.” He said so, as he desired eagerly that the verses of Al-Hijab (the observing of veils by the Muslim women) may be revealed. So Allah revealed the verses of “Al-Hijab”.

     
  2. History of Hijab or Head covering

    Introduction:
    In this section we will be pondering over the history of Head covering or Hijab as general, particularly looking at the ancient times. Our focus would be:

    Whether in past history of civilizations Hijab used to exists or not?
    Whether the concept of Head covering or Hijab is purely coming from Islam Prospective?

    Hijab in Past civilizations Before Islam:

    According to Ancient civilizations, Head covering or Hijab used to be part of their customs. This custom can be found both in Ancient Iran, Jew and Hindus.

    According to a famous American Historian Will Durant:
    “If a Jew lady lacks in following the rules like for example she would go without covering her head in street or in front of other men, or even her voice get heard by other men or neighbours. In this case her husband has the right to divorce her without giving her dowry.”
    From above text it is apparent that the head covering rules in Jew was rather HARD comparing to that of Islam.
    Will Durant further refers to the ancient Persian Civilization, Volume 1 History of Civilization pg 552:

    “After Daruish the status of woman particularly women from high social background, decline in their freedom came into existence. The women from lower social background somehow could manage to keep their freedom. This was mainly because they had to leave their homes to be in society to earn money and to survive. But women in other economical or financial level were not allowed to leave their homes while in the state of menstrual.”
    These types of customs took continuation and becoame more and tougher for women. The women from high social background couldn’t dare to go out except in the stretcher (special carrier made out of wood, with four men, each man holding one side of the stretcher) which was totally covered from all four sides with curtains. The women didn’t have even the permission to openly talk to any man. Ladies who were married were not allowed to see any man, even their own father and brothers.
    Whether the concept of Head covering or Hijab is purely coming from Islam Prospective?
    Will Durant Further states: The Hijab during Ancient Persian times brought the concept of Hijab to Arab world and in particularly in Muslim nation.
    We know that Hijab in Islam has nothing to do with the customs and rules of Hijab during Ancient Persian or in Jew. In Islam woman is only not allowed to do her obligatory prayers and fasting and she is not allowed to sleep with her legal partner during the time of her menstrual. Other than this she is completely free to go out in the society or associate with public. The concept of “prison yourself at home” during menstrual time doesn’t exist in Islam at all.
    If will Durant is trying to convince us that the whole concept of Hijab was transfer to Muslim world through other civilizations like Ancient Iran or Jew. Again such statement is wrong since Verses of Quran relating Hijab were revealed before Iranian became Muslim.

    Arab society according to Will Durant:
    “Arabs women during the first century didn’t use to were Hijab, Men and women used to see and talked to each other, in street they used to walk side by side. In Mosques they use to pray together. Prophet though had made wearing of loose clothes prohibited but the Arab would take this rule as unseen. Arab women use to wear colourful loose clothes mostly half covered. They use to put a shinning belt around the waist. The hair used to be opened and not covered.”
    Will Durant Explanation about an Arab woman before Islam is no doubt true, but his opinion about the end of first century and beginning of the second century after Islam is doubtful. He talks as if during prophet time there wasn’t a smallest concept of Hijab in Arab and an Arab woman would freely go around with no Hijab or head covering. The History proof this is wrong to us, Islam did brought a lot of changes to the dress code of a woman. Most of Arab ladies used to dress according to the Islamic dress code as explained in the Quranic verses. This fact can be verified by the tradition of Prophet’s Wife like Ayesha.

    In one of the writing by Jawahir Lal Nehru the first minister of India, also believed that emergence of Hijab in an Arab nation is from other non Muslim civilization like Iran and Rome. In his book “A look into the history of world” Vol1 pg 328: after praising the Islamic civilization, He talks about the afterward changes in Islam by other civilization.

    “One big change that slowly took place in Arab society was in woman sect. In Arabia for woman there was no custom of head covering or Hijab. Arab women wouldn’t be separated in society from men. Rather an Arab woman would have public appearance, attend speeches etc. Arab nation after Islam copied different customs from empire like ancient Iran and Rome. Arab conquered empire Rome and Iran but adopt their customs and etiquettes. Therefore the custom of Hijab has come from other civilizations.”

    What Jawahir says doesn’t match with history of Islam. We can say that the relationship between Arab Muslim and Non Arab Muslim did add some different types of customs in practising Hijab or made it more strict comparing to Prophet Mohammad time, but saying that Hijab was a concept totally introduce in Islamic world by other civilizations, is incorrect.
    Conclusion:
    At the end what is apparent is that Hijab as a custom and practice was present in other civilisations. Islam didn’t bring this concept of Hijab as a whole new practice. Islam did make the concept of Hijab easier and took the harsh law which used to be practice by other culture and traditions. For example customs like: woman not associating with man in society, woman get prisoner at homes while in the state of menstrual, women voice couldn’t be heard by any man, woman not allowed even to see their own brothers and father and many more.
    Of course we can prove this by the history, Prophet Mohammad daughter like Hazrat Fatima and granddaughter Like Hazrat Zainab had gone in front of public and had given hard speeches to the ruler of that time.
    The question which arise here is about the in depth philosophy of Hijab. The philosophy and reasons of Hijab in Islam is same as the philosophy in other ancient civilization. We shall discuss in the later articles.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

24:30 வசனத்தை சுட்டி காட்டி சில ஆண்களிடம் ஒரு மாதிரியாகவும்,மற்ற சில ஆண்களிடம் ஒரு மாதிரியாகவும் பெண்களை குரான் உடை அணிய சொல்வது அடிமைத்தனம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் இது ஆணிற்கும் பொருந்த கூடிய சட்டம்தான்.ஒரு ஆணும மகரம் இல்லாத பென்னிடதிலே ஒரு மாதிரியும்,மகரமான பென்னிடதிலே ஒரு மாதிரியும்தான் நடக்க குரான் சொல்கிறது.இது ஆண் அடிமை தனம் என்று நீங்கள் சொல்ல தயாரா?ஒரு சஹாபி ஒரு பெண்ணுடைய முகத்தை ஒரு விதமாக பார்த்து விட்டதற்காக அவருடைய முகத்தை அந்த பெண்ணுடைய முன்னால் வைத்தே ரசூல் (ஸல்) அவர்கள் திருப்பி விட்டதாக கூறும் ஹதீசெல்லாம் உங்கள் பார்வையில் ஆண் அடிமை தனத்தை பலமாக ஆதரிக்கிறதே!!!! (நவூதுபில்லாஹ்).ஏன் உங்கள் கொள்கையில் முரண்பட்டு கூறுவது போல ,எங்கள் கொள்கையிலும் முரண்பாடு கற்பிக்க பார்க்கிறீர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மற்றப்படி ஆடை என்பதே அலங்காரம் தான் என நானாக கூறவில்லை அதையும் குரான் தான் கூறுகிறது.

ஐயமிருந்தால் 7:26 ஐ பார்த்துக் கொள்ளுங்கள்.

007:026. மனுஷபுத்திரனே, உங்களுடைய உடம் புகளை மூடுவதற்காகவும், வசதிக்காகவும் நாம் ஆடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால் ஆடைகளில் சிறந்தது நன்னெறியின் ஆடையே ஆகும்.

007:026.O Children of Human being, We have sent down for you garments to alleviate your bodies, and feathers; and the garment of righteousness is the best.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நண்பர் அப்துல்லா
விவாதத்தை திசை திருப்புவதில் மதவாதிகளுக்கு நிகர் அவர்கள்தான்.ஏன் தலை முதல் கால் வரை மூடிய கருப்பு அரேபிய அங்கி அணிகிறாய் என்றால்,நிர்வாணமாக் செல்லுதல்,ஆபாச உடை,நாகரிகம்,கண்ணியம் என்பர்.

ஏன் 4 மனைவிகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள அனுமதி இருக்கிறது என்றால் இரண்டாம் கல்யாணம் நிபந்தனை சூழ்நிலை என்று மழுப்புவர்.
இப்பிரச்சினையில் குரானில் சொன்னது என்ன? அது எவாறு நடைமுறை படுத்தப் படுகிறது என்பதை பார்ப்போம்.நான் கூறியது போல் ஆணாகிய அப்துல்லா பெண்கள் அண்யும் ஃபர்தாவிற்கு வக்காலத்து வாங்குவதால் அவ்ர் கருத்து விவாதத்திற்கு உரியதாகிறது.

குரானில்[குரான் 24:30,31 ] சொல்லி இருப்பது என்ன?

1.வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

2. தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது.

3.முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.

4._____..இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.

a)முதலில் இவைகளுக்கு பொருள் ஃபர்தா எனப்படும் அரேபிய கருப்பு அங்கிதான் என்பதை நிரூபியுங்கள்.

b)ஃபர்தாவில் பல வகை உண்டு அதில் எதை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?
(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆடைக்குமேல் இன்னொரு ஆடை அதாவது ஆடைக்குமேல் புர்கா என்றுதான் குரான் கூறுகிறது. அதற்கு அவ்வசனம் இறக்கப்பட நேர்ந்த சம்பவமே சான்று. இதை செங்கொடி அவர்களும் தெளிவாகவே குறிப்பிட்டும் இருக்கிறார். ஆனால் கம்யூஸ்டாகிய செங்கொடியாகிய கலிலுர் ரஹ்மானை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அப்துல்லா என்ற ஈமான்தாரி தனது வீண் விதாண்டாவாதத்தின் மூலம் அல்லாவிற்கே மாறு செய்ய (சுடிதார் போதும் புர்கா தேவையில்லை என்பதின் மூலம்) இஸ்லாமிய பெண்களைத் தூண்டும் விதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இல்லை, குரான் சுடிதார் போன்ற உடலை முழுதும் மறைக்கும்படியான ஆடையைப் பற்றிதான் பேசுகிறது என்றால் சவ்தா அவர்கள் அணிந்திருந்த ஆடை அரைகுறையானது என்ற கருத்து உருவாக நேரிடும். அல்லாதான் சவ்தாவையும் காப்பத்தனும், அப்துல்லாவையும் காப்பத்தனும்.

புஹாரி 146 – ”கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள்.” என்ற இந்த ஹதீதிலிருந்து ஒரு சந்தேகம் எழுகிறது. பெண்கள் செல்லக்க் கூடிய அந்த நேரத்தில், அவ்விடத்தில் உமருக்கென்ன அங்கு வேலை.

”மொத்த மனித இனத்தையே அதுவும் ஒரு மிருக இனம்தான் என்று சொல்வதுதான் உங்கள் கோட்பாடு”

அப்துல்லா! இதை செங்கொடி மட்டும் கூறவில்லை. இதற்கு முன்பு நடந்த விவாதங்களில் சகோ.கள் ஆணின் காமவெறியை விலங்கினங்களிடமிருந்துதான் பொதுமைப் படுத்தினார்கள் என்பதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

சகோ.தரர்களின் விவாதத்திலிருந்து ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஆணின் பாலியல் உணர்வு கட்டுக்கடங்காதது. அதை அல்லாவாலும் தடுக்கமுடியாது. ஆனால் பொதுவெளியில் ஆண்கள் மார்கழி மாத வெறிநாயைப் போல நடந்து கொள்ளாமல் இருக்க இந்த புர்கா என்னும் மேலாடையை அல்லா பரிந்துரை செய்திருக்கிறார், என்பதைத் தவிர இஸ்லாம் மனிதனை நல்வழிப்படுத்துகிறது, நேர்வழிப்படுத்துகிறது, தூய்மைப் படுத்திகிறது என்று விளங்கிக் கொள்வதற்கு அதில் ஒன்றும் இல்லை. இது அல்லாவின் தவறான புரிதலுக்கு ஒரு சான்று. மேலும், இஸ்.சகோ.களின் வாதம் புர்கா போடாத கலாச்சாரத்தையுடைய பெண்களையும் ஆண்களையும் கொச்சைப் படுத்துவதாக உள்ளது. பரிசீலனை செய்யவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்களுக்கு நான்கு திருமணமும் எத்தனை அடிமைப் பெண்களையென்றாலும் அனுபவிக்கலாம் என்று ஆண்களின் பலதார வேட்கையை அங்கீகரித்து சட்டமாக்கியுள்ள குரான் அதற்கு மேலும் ஆண்கள் அலைபாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பெண்களை கவசமணியச் சொல்கிறது. இது ஆணாதிக்கமா இல்லையா ?

ஒருவனுக்கு ஒருத்தி

004:003.

And if you fear that you cannot be just to the orphans,
then you may marry those who are agreeable to you of the women: two, and three, and four.

But if you fear you will not be fair,
then only one,
or whom you maintain by betrothal.

This is best that you do not face financial hardship.

————————————————————————————
குரான் குறிப்பிட்ட சிலரிடம் குறைந்தபட்ச ஆடையும் தவிர பிறரிடம் அதனினும் சற்று ஆடையில் பேணுதலையும் வலியுறுத்துகிறது.

007:026.

We have sent down for you garments
to alleviate your bodies,as feathers*;

024:030.

Tell the men to lower their gaze and keep covered their private parts, for that is better for them.

024:031.

And tell the females
to lower their gaze and keep covered their private parts,
and that they should not reveal their beauty except what is apparent,
and let them put forth their shawls over their cleavage.
And let them not reveal their beauty except to their husbands,
or their fathers, or fathers of their husbands,
or their sons, or the sons of their husbands,
or their brothers,
or the sons of their brothers,
or the sons of their sisters,
or their women,
or those by betrothal,
or the male servants who are without need,
or the child who has not yet understood the composition of women.
And let them not strike with their feet* in a manner that reveals what they are keeping hidden of their beauty.
*catwalk

033:059.

Tell your wives,
your daughters,
and the women of the believers that they should lengthen upon themselves their outer garments.
That is better so that they will not be recognized and harmed.

quranist@aol.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்று சமூகம் பொதுவுடமை சமூகமாய் இருந்தது. அது மாறி தனியுடமை கொண்டுவரப்பட்ட போதோ ஆணின் தலைமையில் பெண் அடிமையாக்கப்பட்டாள். இந்த நிலை இன்றுவரை பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை. ஆனால் வரலாற்றின் சிற்சில போதுகளில் பெண்களுக்கு ஆதரவாக சில சில்லரை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  அந்த வகையில் இஸ்லாமும் சில சீர்திருத்தங்களை பெண்களுக்காக செய்திருக்கிறது. வரலாற்றின் வழியில் நடைபெற்று வந்த மாற்றங்களூடாகத்தான் இவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஆண் பெண் சமத்துவம் என்று விதந்தோதுவது வழக்கமாக இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சார உத்தி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

பெண்ணின் சொத்துரிமை குறித்து குரான் கூறுவதென்ன?

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் ….. பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் அவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு) …. குரான் 4:11

…. உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்கு பாதி பாகம் உண்டு.அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்கு கால் பாகம் தான். ….. உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்கு கால் பாகம் தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்….. குரான் 4:12

….. அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. …. அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால் அவள் சகோதரன் அவள் விட்டு சென்ற சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். குரான் 4:176



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மேற்கண்ட குரான் வசனங்கள் கூறுவதை சாராம்சமாக பார்த்தால் ஆணுக்கு வழங்கப்படுவதில் பாதி பெண்களுக்கு. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? இதற்கு மதவாதிகள் ஒரு ஆயத்தப் பதிலைக் கூறுவார்கள். இஸ்லாம் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியிருக்கிறது, அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் வழங்குகிறது என்று.  இன்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் இருக்கிறது என்பதால், ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், பெற்றோர்களையும் உற்றோர்களையும் கவனிக்காமல் புறந்தள்ளும் ஆணுக்கு அதிக பாகம் இல்லாமல் பெண்களுடன் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொள்வதற்கு ஏதுவாக குரானில் வசனம் உண்டா? இன்று பெற்றோரை கவனிப்பதில், பாதுகாப்பளிப்பதில் ஈடுபடும் எத்தனையே பெண்களை, குடும்பங்களைக் காணலாம் இது போன்ற குடும்பங்களில் ஆணைவிட பெண்ணுக்கு இரண்டு மடங்கு சொத்து பகிர்ந்தளிக்க முடியுமா குரான் வசனங்களைக் கொண்டு?

ஆணுக்கே அதிக பொறுப்பு எனவே அவனுக்கே அதிக சொத்து என்பது மதவாதிகளின் சமாளித்தல்களே அன்றி வேறில்லை. இதையும் குரானே தெளிவுபடுத்தி விடுகிறது. மேற்கண்ட குரான் வசனம் 4:11 இதை தனியாக குறிப்பிடுகிறது.

…… இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆகையினால் அல்லாவிடமிருந்து வந்த கட்டளையாகும். ….



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மஹரின் நிர்ப்பந்தத்தினால் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய முகம்மது மிகக் கவனமாக அது பெண்களிடம் தங்கி விடாமல் ஆண்களிடம் வந்து சேரும்படியான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார்.  வசனம் 4:12 ஐ கவனித்துப் பார்த்தால் இது விளங்கும். கணவன் இறந்த பின்னர் மனைவிக்கு குழந்தை இருந்தால் எட்டில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் நான்கில் ஒருபங்கும்; மனைவி இறந்த பின்னர் கணவனுக்கு குழந்தை இருந்தால் நான்கில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் இரண்டில் ஒருபங்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது போல்தான் தோன்றும் ஆனால் ஆணுக்கு நான்கு திருமணம் வரை அனுமதி என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழலாம். என்னைருந்தாலும் இஸ்லாம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கிறதல்லவா? என்று. முகம்மதுவிற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு அறவே சொத்துரிமை இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அடிமைகள் இருந்ததை சில ஹதீஸ்கள் பதிவு செய்திருக்கின்றன. ஷீபா நாட்டு அரசியாக ஒரு பெண் திறம்பட ஆட்சி புரிந்ததாக குரான் குறிப்பிடுகிறது.  முகம்மதின் முதல் மனைவியாகிய கதீஜா சொந்தமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்தார். எனவே இல்லாத ஒன்றை புதிதாக முகம்மது பெண்களுக்கு வழங்கிவிடவில்லை. நடப்பில் இருந்ததைசில மாற்றங்களுடன் அங்கீகரித்திருக்கிறார், அவ்வளவு தான்.

பல்வேறு வகைகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆணாதிக்கத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமையின் பின்னணி இது தான். மேலோட்டமான அனுபவ ரீதியான வசனங்களுக்குள் அறிவியலை அடித்து இறக்கிய அனுபவத்தில், ஆண்குழந்தைக்கு பெண்குழந்தையாய் வேடமிடுவது போல ஆணாதிக்கத்தையே பெண்ணுரிமையாய் உருமாற்றிவிட்டார்கள் மதவாதிகள் என்பதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

//கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?///
எந்த ஒரு சொத்துவிலும் பெண்களுக்கு குறைவான அளவே கிடைக்கும் பொழுது நான்கு மனைவிகளுக்கும் தலா எப்படி 100ரூபாய் அளவுக்கு எப்படி சொத்து வரும்? உமது கணக்கை திருப்பி போட்டு பார்த்தால் ஒவ்வரு மனைவிக்கும் 6 25 அளவிலோ அல்லது 3 .15 அளவிலோதான இருக்க வேண்டும் .

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தேவையென்றால் பின்னர்
குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் என்பதுல் ஆண்டுகள் என்பதை விட்டிவிட்டேன் திருத்திக் கொள்ளவும் by abdulhakkimhttp://neermarkkam.blogspot.com

  1. மார்க்க சகோ abdulhakkim

    //குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்//

    இதனை படித்து நெஞ்சம் வெடிக்கிறது! ஆதாம் தோன்றி 10 நூற்றாண்டுகளுக்கு பின்னர் நூஹ் நபி தோன்றினார் என்று நமது கண்ணுமணி நபிஹல் நாயஹம் சொல்லியிருக்கும்போது, நூஹ் நபியின் கப்பல் கிடைத்திருக்கும்போது, அந்த கப்பல் 4800 வருடங்கள் பழையது என்று நமது ஹாரூன் யாஹ்யாவே உறுதிபடுத்தியிருக்கும்போது மனிதர் தோன்றி 5800 வருடங்கள்தானே ஆகிறது? எப்படி நீங்கள் கண்ணுமணி நபிஹள் நாயஹம் சொன்னதை மறுத்து , மனிதன் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன என்று ஈமானை இழந்து இப்படி பேசுகிறீர்கள்? இதுதான் ஈமானா?

    இவ்வாறு ஒவ்வொரு ஈமாந்தாரிகளாக இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதையும் நபிஹள் நாயஹம் பொய்யர் என்று சொல்லுவதையும் பார்க்கையில் என் நெஞ்சம் வெடிக்காமல் என்ன செய்யும்?

    ஒருவேளை நபிஹள் நாயஹம் தீர்க்கதரிசனமாக சொன்னதுபோலவே இஸ்லாம் ஒரு பாம்பு போல சுருண்டு மீண்டும் மெக்கா மெதீனாவில் மட்டுமே இருக்கும் மதமல்ல மார்க்கமாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

    ஆ அல்லாஹ்

     
  2. குரான் வசனங்களும் , ஹதீஸும் என்ன சொல்கிறது என்றும் அதில் முகமதுவின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

    அடிமை முறை என்பது இன்றளவும் முஸ்லிம்களால் பின் பற்றப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களிடம் கேட்டால் , அவர்கள் சொல்லுவது இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்தது என்று கூறுவார்கள்.. இதில் எது உண்மை என்று பார்ககலாம்….

    முதலில் அல்லா என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் ….

    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்.

    அடிமையை கொல்லலாம்…… அடிமை என்பவர் முஸ்லிம்களுக்கு , அவர்கள் வைத்திருக்கும் ஒரு பொருளே!!!!!!!.

    2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர்அடிமைப் பெண்நிச்சயமாக மேலானவள் ஆவாள்; .

    அல்லா சொல்வது என்னவென்றால் . ஹிந்து, கிறிஸ்தவ,யூத பெண்கள் முஸ்லிம் அடிமைப்பெண்ணைவிட ( அதாவது அடிமையாக இருக்கும் போது முஸ்லிமாக மாறியவள்) மட்டமானவள். .. இது மற்ற பெண்களை மதம் மாற்ற கூறப்பட்டது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் (ஒருவேளை முஸ்லிம் ஆண்கள் பிற பெண்களை மோகத்தால் மணந்து இவன் மதம் மாறி விட்டால் என்ன செய்வது என்று பயந்து அல்லா(முகமது) கூறியது ) போனா போகுது அடிமைப்பெண்ணை மணந்து கொள்… முஸ்லிம்கள் சொல்வார்கள் அடிமைப்பெண்களை மணப்பதின் மூலம் அடிமைத்தனத்தை ஒழிக்க அல்லா கூறியது தான் என்று கூறுவார்கள்……. பொருமையாக இருங்கள்…… கீழே இதை விலாவாரியாக அலசி ஆராய்வோம்…

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

    இதில் அல்லா சொல்வது உன்னால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளிம் நியாயமாக( நியாயமாக நடப்பது என்றால் என்ன என்று அல்லா சொல்லவில்லை?) நடக்கமுடியாது என்று நினைத்தால் . ஒரே ஒரு சுதந்திரமான பெண்ணை மணந்துகொள். அல்லது உன்னிடம் இருக்கு அடிமைப்பெண்ணிடம் சுகம் தேடிக்கொள்(கற்பழித்துக்கொள்).

    3. 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்,ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

    இது தான் அல்லாவின் மிக உயர்ந்த கருத்து……… இந்த வசனம் நாம் நினைப்பது மாதிரியான திருமணமல்ல … அந்த அடிமைப்பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்,அவளுக்கு கணவன் இருந்தாலும் அவளை அனுபவிக்கலாம்(அடிமைப்பெண்ணின் திருமணத்தைப்பற்றிய வசனம் அடுத்து வருகின்றது). இந்த வசனத்தில் நம்ம தமிழ் முஸ்லிம்களின் ப்ரேக்கெட் உள்ளே இருப்பதை எடுத்துவிட்டு பார்ப்போம்… :) இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து கொடுத்துத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். [இதற்கு பெயர் முட்டா திருமணம்.. அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.. உதாரணத்துக்கு .. நீங்கள் ஒரு வேலையாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து அங்கு ஒரு பெண்ணை 3 நாட்களுக்கு மணந்து கொண்டு எல்லா காரியமும் செய்யலாம்... அந்த 3 நாள் முடிந்து ஊர் திரும்பும் போது பேசிய தொகையை ..மன்னிக்கவும் வரதட்சனையை குடுத்தால் போதும்.. அதன் பின் அவளுக்கும் உங்களூக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இந்த வழக்கத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது இல்லையா?] அதுமட்டுமல்ல ( எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது) அதாவது முஸ்லிமுக்கு முழு சந்தோஷம் வரும் அளவில் அந்த பெண் நடக்கவில்லை என்றால் பேசிய தொகையில் இருந்து குறைவாக கொடுக்கலாம். அதே மாதிரி ரொம்ப சந்தோஷம் அடைந்தால் பேசிய தொகையை விட அதிகமாக கொடுக்கலாம்.(அல்லாவின் தீர்க்க தரிசனத்தை இதில் காணமுடிகிறது. பர்தா போட்டு மூடியிருக்கும் போது அந்த பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது. நல்ல ஒரு தொகையை பேசி முடித்த பின் , அவள் அட்டு ஃபிகராக இருந்தால் பாவம் அந்த முஸ்லிம் ஏமாற்றம் அடைவான் அதனால் இந்த குறைத்து கூட்டி கொள்ளும் உரிமை, வல்லாஹி , அதனால் இது கட்டாயமாக கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும்) முஸ்லிம்கள் இது இஸ்லாமில் கிடையது முகமது இதை தடை செய்துவிட்டார் என்று கூறுவார்கள்…
    புஹாரி- 889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக்
    கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

    ஆனால் நாம் பார்க்கவேண்டியது இதில் என்னவென்றால்.. அல்லா பெரியவனா முகமது பெரியவனா என்று தான்.. அல்லா கூறியதை முகமதால் மாற்ற முடியுமா.. இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

    4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினானஅடிமைப்பெண்களைஅவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்…………உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;

    இந்த வசனத்தை தான் நாம் நன்றாக அலசி ஆராய வேண்டும்……..
    இதில் முதலில் அல்லா கூறுவது சுதந்திரமான முஸ்லிம் பெண்ணை மணக்க முடியாதவர்கள் , வசதியில்லாதவர்கள் , அடிமைப்பெண்ணை மணம் புரியலாம்.. [அவனிடம் இருக்கும் அடிமைப்பெண்ணைப்பற்றி இல்லை இந்த வசனம் , அவனிடம் அடிமைப்பெண் இருந்தால் அவன் அல்லாவை கேட்காமலே அவளை அனுபவிக்கலாம் -- அந்த வசனங்கள் கீழே வருகின்றது] இது ஒரு பெண் அடிமையாக மற்றொரு முஸ்லிமிடம் இருக்கும்போது(உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்) அந்த மற்றொரு முஸ்லிம் எஜமானனிடம் அனுமதி பெற்று திருமணம் செய்யலாம். அதிலும் அல்லா கூறுவது என்னவென்றால் .. உன்னால் பொத்திக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்றால் , கள்ள … போய்விடுவாய் என்று பயந்தால் ….. இந்த மாதிரி அடிமைப்பெண்ணை மணந்துகொள் . அப்படி உன்னால் உன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருக்க முடியும் என்றால் அடிமையை திருமணம் செய்யாமல் இருந்து கொள் என்கிறான்.(ஏனென்றால் அடிமைப்பெண்ணூக்கு பிறக்கும் குழந்தை அந்த எஜமானனையே சேரும், மேலும் அந்த அடிமைப்பெண் அடிமையாகத்தான் இருப்பாள்). அதாவது அல்லா சொல்வது , நீ பஞ்ச பரதேசியாக காசிலாமல் இருந்து சுயகட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால்முஸ்லிமாக இருக்கும் அடிமையை மணந்து கொள்..(இதில் அல்லாவுக்கு அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை ,மேலும் திருமணம் செய்தாலும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் ) முஸ்லிம்கள் நான் இந்த வசனத்தை தவறாக கூறுகிறேன் என்று சொல்வார்கள் ..அதனால் …(கீழே உள்ள இணைப்பில் போய் படித்துக்கொள்ளவும்)

    http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=681&Itemid=59
    [Allah said, those who do not have, (the means), financial capability,
    (Wherewith to wed free believing women) meaning, free faithful, chaste women.
    (They may wed believing girls from among those whom your right hands possess,) meaning, they are allowed to wed believing slave girls owned by the believers.
    (and Allah has full knowledge about your faith; you are one from another.) Allah knows the true reality and secrets of all things, but you people know only the apparent things. Allah then said,
    (Wed them with the permission of their own folk) indicating that the owner is responsible for the slave girl, and consequently, she cannot marry without his permission. The owner is also responsible for his male slave and they cannot wed without his permission.
    A Hadith states,
    (Any male slave who marries without permission from his master, is a fornicator.) When the owner of the female slave is a female, those who are allowed to give away the free woman in marriage, with her permission, become responsible for giving away her female slave in marriage, as well.
    A Hadith states that
    (The woman does not give away another woman, or herself in marriage, for only the adulteress gives herself away in marriage. [ என்னயா இது தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது .. இந்த ஹதிஸ்ல பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறது])

    4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

    என்னடா அல்லா திடீர் என்றூ பல்டி அடிக்கிறானே என்று பார்க்கிறீர்களா? அல்லாவைப்பொருத்தவரை அவனுக்கு இணைவைப்பது மிகப்பெரிய பாவம். அவர்களை கொன்றாலும் தவறில்லை… இந்த வசனம் அடிமையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு. ( முஸ்லிம் அடிமையைத்தான் விடுவிக்கமுடியும் அதனால் பிடித்து வரப்பட்ட அடிமை முஸ்லிமாக மாறாமலா இருப்பான் ). மேலும் அடிமையாக இருப்பவனுக்கு சோருபோடாமல் அவன் மண்டையைப்போட்டால் யாருக்கு நஷ்டம்.? அதனால் கொஞ்சம் பரிவு அவ்வளவு தான்.

    4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;………

    இதோ வந்து விட்டதே இந்த வசனத்துக்கு முன்னால் நான் கூறியது சரி என்று நிருபிக்க :) அடிமை முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விடுதலை ….

    5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்,அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லதுஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;

    இந்த வசனத்தில் . முதலில் , 10 ஏழைகளுக்கு உணவு அல்லது ஆடை அணிவிக்க வேண்டும் (அம்மனமாக வாக இருப்பார்கள் :) ) , அப்படி இல்லை என்றால் ஒரு அடிமையை (முஸ்லிமை) விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம்கள் என்ன அந்த அளவுக்கு மடையர்களா , முதல் இரண்டில் ஒன்றை செய்யாமல் அடிமையை விடுவிக்க ….

    16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்:பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும்(அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ,நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான்? . இவ்விருவரும் சமமாவாரா

    இது அல்லாவின் வாக்கு … அல்லா தன்னையும் , சிலையையும் ஒப்பிட்டு அதற்கு கூறும் உதாரணம் .. சுதந்திரமானவன் – முஸ்லிம் (அல்லவை நம்புபவன்) மாதிரியாம் . அடிமை என்பவன் ஒரு அதிகாரமும் (ஒன்றும் செய்ய முடியாத) இல்லாதவன் அதாவது அல்லா மீது நம்பிக்கையில்லாதன் போல்… இந்த இருவரும் ஒன்றாகுமா என்று கேட்கிறான்…. ஒரு கடவுளே இந்த மாதிரி கேட்டா , பாவம் அடிமை என்ன செய்யமுடியும்……

    16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யானஅடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் – இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?

    மேலே குடுத்த விளக்கமே இதற்கும்.

    23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

    கருணைமிக்க அல்லா கூறுகிறான். முஸ்லிம்கள் அவர்களின் மனைவியிடமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைப்பெண்களிடமும் உடலுறவு கொண்டால் தப்பில்லை…….
    ( இது அடிமைப்பெண்ணை கற்பழிப்பது இல்லாமல் வேறு என்ன ?) அவள் என்ன ஆசைப்பட்டா வருவாள். மேலும் இதில் திருமணமாகாத அடிமைப்பெண் என்று சொல்லவில்லை .. அதானால் அவளுக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவளை கற்பழிக்கலாம் , அதானால் தான் கருணைமிக்க அல்லா முஸ்லிம்கள் அடிமைப்பெண்ணை திருமணம் செய்யாமல் கட்டுப்பாடுடன் இருக்கும் படி அறிவுருத்துகிறான். மாஷா அல்லா . அல்லாவின் ஞானமே ஞானம். இந்த மாதிரியான கருணையை பெண்களிடத்தில் யார் காட்ட முடியும் அல்லாவைத்தவிர.

    24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

    அல்லா மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன்… மேலே அடிமையை மணம் செய்யாமல் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்று கூறுகிறான்… அப்படி கூறும் போது எவன் அடிமையை மணக்க முன்வருவான். (ஒரு வேளை அடிமைகளுக்குள்ளேயேவா?) அதுமட்டுமல்ல முஸ்லிம் அந்த அடிமையை நினைத்த போது படுக்க கூப்பிடலாம் என்னும் போது ..எவன் அவளை திருமணம் செய்ய முன்வருவான்? ஒரு முக்கியாமான பாய்ண்ட். திருமணம் ஆனாலும் அவர்கள் அடிமைகளே. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளே.

    24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் – அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை – அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில்(அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் – அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை – அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக – விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    இதில் அல்லா சொல்வது வழக்கம் போல் அடிமைப்பெண்ணை மணம் புரியவேண்டாம்( அதாவது கொள்ளை அடித்து காசு சம்பாதிக்கும் வரை அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்). அதன் பின்பு அந்த அடிமையை விடுவிக்க வேண்டுமானால் ,, அந்த அடிமை திரும்பவும் காசை ஒழுங்காக குடுப்பான் என்று முஸ்லிம் நம்பினால் மட்டும், அந்த அடிமையை விடுதலை செய்யலாம். (அந்த மாதிரி அடிமை விடுதலை செய்யப்பட்டு அவன் சம்பாதிக்கும் சொத்துக்கு வாரிசு யார் தெரியுமா? அந்த அடிமையை விடுதலை செய்தவர் – இது சூப்பர் இல்லையா).இதற்கு பின் வருவது தான் அதைவிட சூப்பர் . அடிமைப்பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்தபடுத்தி காசு சம்பாதிக்காதே(கட்டாயப்படுத்தி மாமா வேலை செய்யாதே). அப்படி நீ செய்தால்…….. அதனால் பரவாயில்லை அல்லா உங்களை மன்னித்துவிடுவான்….. இதில் இன்னும் ஒன்று பார்க்க வேண்டும்.. அந்த பெண்ணே விபச்சாரம்(கற்பை பேணிக்கொள்ள நினைக்காவிடில்) செய்ய நினைத்தால் ….செய்து கொள்ளலாம். நம்ம மாமா முஸ்லிமும் காசு பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல — அடிமையை விடுதலை செய்தாலும் அந்த முன்னாள் அடிமையின் வாரிசாக ஆவதினால் ஒரு லாபம். மேலும் முகமது அந்த நாட்களில் தொடர்ந்து மற்ற மக்களை தாக்கி, அவர்களை அழித்து பெண்களையும் சிறுவர்/சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்ததினால்.. முஸ்லிம்களுக்கு ஏராளமான அடிமைகள் எளிதாக கிடைத்தனர்.(அடிமைகிடைக்கும் என்று போருக்கும் வருவார்கள்) மேலும் முஸ்லிமாக மாறியவர்களே விடுவிக்கப்பட்டதினால் இஸ்லாமும் வளரும்.. இதில் அல்லா ஒரே கல்லில் ,இரண்டு மாங்கா, இல்லை மூன்று மங்கா, இல்லை நான்கு மாங்கா அடிக்கிறான்(.மைக்கேல்,மதன காம ராஜனில் வரும் வசனம் போல்)

    அதனால் மாமாவேலை செய்தபின் -வருத்தப்பட்டால் அல்லா மன்னித்துவிடுவான். ( அல்லாஹ் மன்னிப்பவனாகவும்- மன்னிப்பு என்பது எப்போது வரும்? தவறே செய்யவில்லை என்றால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த அடிமைபெண்கள் நிர்பந்திக்கப்பட்டதினால் அவர்கள் மேல் தவறில்லை என்பது நமக்கே தெரியும் போது கடவுளுக்கு தெரியாதா? பின் எதற்காக மன்னிப்பு என்று கூறவேண்டும். இது அந்த பெண்களுக்கு அல்ல , அந்த மாமாவுக்கு அதாவது முஸ்லிமகள் என்ன செய்தாலும் அல்லா மன்னித்துவிடுவான்.)

    33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் ; அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் ; இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்);மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
    இந்த வசனம் முகமது தனக்கு தானே ,மன்னிக்கவும் . அல்லா முகமதுக்கு கூறியது .. அதாவது முகமது யார்கூட எல்லாம் படுக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறான். இது திருமணத்தைப்பற்றி அல்ல… ஏனென்றால் மனைவியரையும், அடிமையையும் படுக்கவைப்பது ஹலால். இதில் மனைவியைப்பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் இது திருமணத்தைப்பற்றி கூறுகிறது என்று சொல்லலாம்.. மனைவியை திரும்ப மணம்புரியவேண்டியது இல்லை.. எந்த முஸ்லிம் பெண் வந்து முகமது கூட படுக்க ஆசைப்பட்டாலும் …. இந்த வசனம் முடிவது , மத்த முஸ்லிம்கள் மனைவி மற்றும் அடிமைப்பெண்ணுடன் படுப்பது பற்றி.. அதானால் இது திருமணம் பற்றி அல்ல…. அதாவது இதிலும் அல்லா கூறுவது அடிமைப்பெண் கற்பழிப்பை பற்றி தான் (போரில் எளிதாக கிடைத்த பெண்கள் -அதாவது கணவனை, தந்தையை,சகோதரர்களை கொன்ற பின் அனாதரவாக இருக்கும் பெண்களை அன்று இரவே படுக்கவைப்பது ). இதிலும் அல்லா கருணை மழை பொழிகிறான்.. முகமதுக்கு எந்த ஒரு சங்கடமும் வந்து விடக்கூடாது என்று அவனுக்கு மட்டும் விதிவிலக்கு — அதாவது யார் கூட வேண்டுமானாலும் படுக்கும் உரிமை.

    33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹலால் இல்லை – மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
    இது என்னடா திரும்பவும் அல்லா குழப்புகிறான். மேலே தான் ஊரில் இருக்கும் அனைவருடனும் படுக்கும் உரிமையை வழங்கினான்.. சரி, இதில் அல்லா என்ன சொல்லவருகிறான் என்றால் முகமது அவனின் மனைவிகள் , மற்றும் அடிமைப்பெண்கள் உடன் மட்டும் படுக்கலாம்(அடிமையை கற்பழிக்கலாம்). அதைதவிர வேறுயாராக இருந்தாலும் திருமணம் செய்த பின் தான் படுக்க முடியும்…

    58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
    58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
    [ அல்லாவின் இந்த வசனம் தான் சரியான காமெடி…..
    கீழே ஆங்கிலத்தில் உள்ளதை படியுங்கள்…. அல்லாவின் ஞானத்தை பற்றி தெரியவரும்…

    இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து பார்கவேண்டும்.. முதலில் அல்லா யோசிக்காமல் உளறிவிட்டான்.. அதன் பின் பார்த்தால் . (இந்த சம்பவம் நடந்தபோது) இது யாருக்காக அருளப்பட்டதோ அவரிடம் அடிமையே இல்லை .. அதானால் இந்த இரண்டாவது வசனம்…
    மேலும் “எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால்,” இந்த மாதிரி யாராவது வந்தால் அடிமை விடுதலை,அப்படி வசதியில்லை என்றால் 2 மாதம் நோம்பு…. இதிலும் அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை அல்லாவுக்கு… தெரியாமல் உளறியதால் தான் இது…

    70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
    மீண்டும் அதே கற்பழிப்பு (அடிமைப்பெண்களை)…இப்படி செய்ய அல்லாவே கூறும் போது யார் அந்த பெண்களை திருமணம் செய்வார்கள். (அதனால் தான் அல்லா முஸ்லிம்களிடத்தில் கருணை கொண்டு அடிமைப்பெண்களை திருமணம் செய்யவேண்டாம் என்று வலியிருத்துகிறான்.http://periyarnaathigan.blogspot.com.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)

     
  2. ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது. பின்வரும் நபிமோழியைப்படியுங்கள். (புகாரி 5230)
    மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது.
    அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, “ஷிஹாம் பின் முஃகிரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹலுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஓரு பாதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்” என்று சொன்னாரக்ள்.
    இந் நபிமொழியை புகாரி அவர்கள் எந்த தலைப்பின் கீழ் பதித்துள்ளார்கள் தெரியுமா? “ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும் நீதிகோரி வாதிடுவதும்.” என்ற தலைப்பில் கூறுகிறார்.
    இந்த நபிமொழியிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்வது? முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா? அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா? முகம்மதுநபி காலத்திலும்கூட தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள விரும்பியதில்லை என்பதும் தெரிகிறது.
    இச் சட்டத்திற்கான நலம் விரும்பிகளின் வாதங்களும் சில விளக்கங்களும்:
    1. விடியல் வெள்ளி என்ற இஸ்லாமிய மாத இதழின் ஜனவரி 2002ல் வந்துள்ள தலையங்கத்தின் தலைப்பு ˜சரவணபவனுக்கு சரியான பாதை அது கூறும் செய்தி பின்வருமாறு.
    ‘விதிவிலக்காக ஒரு சிலருக்கு ஒரு மனைவியைக் கொண்டு தங்கள் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரு சராசரியான உலக நிகழ்வு’என்றும்
    ‘நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை’ என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை கூறுகிறது
    அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும் காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.
    காம இச்சை கூடுதலாக உள்ளதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. ஒரு மூடை சுமக்கும் தொழிலாளிக்குள்ள உடல் வலிமையைவிட உட்கார்ந்து தின்பவனுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏழையாக உள்ளவனுக்கு காம இச்சை கூடிவிட்டால் என்ன செய்வது? பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது? என்றெல்லாம் கேள்வியை நாம் கேட்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
    2. ஆணின் காம உணர்வு பெண்களைவிட அதிகம் என்றும், ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள் என்றும், பெண்ணின் மாதவிடாய் காலங்களில் ஆணுடையக் காமத்தேவை நிறைவேற்ற பிற மனைவிகள் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
    ஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விபச்சார விடுதிகள் நிரம்பி வழிவதையும், சினிமாத் துறையில் சீரழிவதையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
    அதே நேரத்தில் 4 பொட்டாட்டி சரீயத் சட்டம் பேசும்போது பல்டி அடித்து ஆணுக்குத்தான் காம சக்கி கூடுதல் என்கின்றனர். அப்படிச் சொல்லும் போதும் சொற்களிலும் கூட நயவஞ்சகத்தனம். ஆணுக்குத்தான் காம “சக்தி” கூடுதலாம், பெண் “காமவெறி” பிடித்து அலைகிறாளாம். எது உண்மை? 50, 60 வயதானாலும் பிற பெண்களைக்கண்டு பல்லிளிப்பதும், விபச்சார விடுதிகளுக்கு ஓடுவதும் ஆண்களா, பெண்களா?
    டில்லி சத்தர்பஜார், மும்பை கிராண்ட் பஜார், கொல்கத்தா சோனாகாஞ்ச். இந்தியாவின் பிரபலமான விபச்சார பகுதிகள், இங்குள்ள ஒரு பெண் தினந்தோறும் குறைந்தது 6,7 பேர்கள் தம்மை புணர்வதால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவர்கள். (ஒரு சில மணிநேரங்களில் கூட 6,7 பேர்கள் இவர்களுடன் உறவுகொள்கின்றனர்) இப்படி ஒரு ஆண் ஒரு சில மணிநேரங்களில் 2, 3 பெண்களிடம்கூட உறவுகொள்ள முடியாது.
    உடல் வலிமை என்பது உண்மையில் பெண்ணுக்குத்தான் அதிகம். ஆணாதிக்கம் தன்னிடமுள்ள இயலாமையை அல்லது காமவெறியை மறைக்க பெண்களால் முடியாது என்று பெண்கள்மீது பழியைப் போடுகிறது. சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா? அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா? ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா?
    திருமணமான புது இளம் ஜோடிகளிடம் வேண்டுமானால் ஒருசில மாதங்கள் வரை நாளொன்றுக்கு சிலதடவைகள் உடலுறவு கொள்ளும் ஆர்வமும் சக்தியும் இருக்கலாம். இயல்பான குடும்ப வாழ்க்கையில் 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பதே முடியாத ஒன்றே. காம உணர்வு என்பது அவரவர் உடல் திறன் (ஊட்டச் சத்து) மற்றும் பருவம் சார்ந்தது. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.
    அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?
    3. மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால் மணமகன் கிடைக்காத பிரச்சனையை தீர்க்க 4 மனைவிகள் சட்டமே தீர்த்துவைக்கும் என்று கூறுகின்றனர்.
    இது உண்மையாக வேண்டுமானால் திருமணமாகாத 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணும், 24 வயதுக்கு மேல் உள்ள ஆணும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று திருமணம் செய்ய முயற்சித்தால் இந்த எண்ணிக்கைப் பிரச்சனையாகலாம். இப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா? உங்கள் ஊரில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? தாம் விரும்பும் தகுதியில் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. வரதட்சினையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
    மக்கள்தொகைப் புள்ளிவிபரம் மணமக்களைப் பிரித்து திருமணத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறதா? இதனடிப்படையில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுவது எதையாவதுச் சொல்லி ஏமாற்றுவதாகும். அப்படி அது உண்மையானால் ஆண்கள் அதிகம் என்றும், பெண்கள் குறைவு என்றும் புள்ளுவிபரம் கூறும் நாடுகளில், ஒரு பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சரீயத் சட்டத்தை மாற்றிடலாமா?
    4. இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.
    “பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.’
    மரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது டிஎன்ஏ சோதனை மூலம் அறிந்து கொள்ளவேண்டுமானால் பொருளாதார வசதி வேண்டும். அது எல்லோராலும் முடியாது. முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் புலம்புகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைதான் இனி காரணம் என்றால் பொருளாதார வசதியுள்ளப் பெண் 4 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு தவறாகிவிட்டால்…. கற்பழிப்பு வழக்குகளில் எல்லாம் டிஎன்ஏ சோதனையை ஏற்றுக்கொள்வார்களாம். இதற்கு மட்டும் முடியாதாம்
    ஒரு குழந்தைக்கு தந்தை யார் என்று பெரியவேண்டிய அவசியம் என்ன? 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக “தந்தை” என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன? ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன? பெண்ணின் தலையிலேயே பெரும்பாலும் பொறுப்பாக்கப்டுகிறது. உறவினர்களோ முகத்தைக்கூட திருப்புவதில்லை.
    அனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா? தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு?
    குழந்தைகளற்ற பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றனர். அப்படியிருக்க தன் குழந்தை என்று அடையாளம் தெரியாத குழந்தையின் நலத்தையும் பேண மனப்பக்குவமே தேவை. தந்தையின் பெய்ர் தேவையில்லை. இந்த மனப்பக்குவத்தை வளர்த்தால் குழந்தைகளுடன் மறுமணம் செய்துகொள்ளும் இளம் விதவைகளின் வாழ்வு இனிமையாக இருக்கும்.
    இதன்பொருள் பெண்கள் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் வாதிட வரவில்லை. பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.
    கொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இன்றைய மனமொன்றிய காதல் வாழ்க்கை தன் மனைவியை வெறும் உடலுறவுக்கான தேவை என்று பார்பதில்லை. சவூதிபோன்ற சில நாடுகளைத் தவிர வேறு எங்கும் இனிமேல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.
    அதனல் இசுலாமியப் பெண்களே! உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஹிஜாப் (கோஷா- ஆண்களுக்கு முன் தோன்றாமல் திரைமறைவில் இருக்கும் நிலை) முறை அமலக்கப்பட்ட நிகழ்சி

தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்பை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக முஹம்மது நபி அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

புகாரி ஹதீஸ் : 4791

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனைப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) சாடை காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள்….

அவர் மணமகள் (மருமகள்?) இருக்கும் அறையை நோக்கிச் செல்கிறார். அனஸ் அவரை பின் தொடர்து செல்கிறார். ஆனால் திரையிட்டு அவரை (அனஸ் வீட்டினுள் செல்வதை) தடை செய்கிறார்.

புகாரி ஹதீஸ் ஹதீஸ் : 4791

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.

இவைகளை கண்ட அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை. உடனே வஹியை இறக்கி விட்டான்.

முஃமீன்களே உணவுக்காக உங்களுக்கு அறிவிக்கப்படாதவரை-அதன் தயாரிப்பை எதிர்பார்த்தவர்களாக- நபியுடைய வீடுகளில் நீங்கள் பிரவேசிக்க வேண்டாம்; எனினும் நீங்கள் (உண்பதற்கு) அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பிறகு உணவு அருந்தி முடிந்ததும் பேசுவதில் ஈடுபடாதவர்களாக களைந்து சென்றுவிடுங்கள்; நிச்சயமாக அது நபிக்கு நோவினை செய்வதாக இருக்கிறது (எனினும்) உங்களிடம் (அதனைச்) சொல்ல வெட்கப்படுகிறார்; அல்லாஹ்வோ உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்.…

( குர் ஆன் 33.53)

அல்லாஹ்வின் வஹி எவ்வளவு விளையாட்டாக இருந்திருக்கிறது. இந்த வசனம் முஹம்மது நபி அவர்களின் வஹீ விளையாடலுக்கு ஒரு உதாரணம். மேலும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதி முற்றிலும் வேறொரு செய்தியை கூறுகிறது அதாவது அனஸ் வீட்டினுள் செல்வதை திரையிட்டு தடுக்கப்பட்டதன் காரணம்,

…(நபியின் மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் கேட்பதானால் திரைக்கு பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் உடைய ரசூலை நீங்கள் நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அவருக்குப் பின் எப்பொழுதுமே அவருடைய மனைவியரை நீங்கள் மணம் செய்து கொள்வதும் கூடாது- நிச்சயமாக அது அல்லாஹ் விடத்தில் (பாவத்தால்) மகத்தானது ஆகும்.

( குர் ஆன் 33.53)

புகாரி ஹதீஸ் : பாகம் 7, எண் : 7421

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.

பர்தா தொடர்பான வசனம் ஜஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (வலீமா விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்…

மேற்கண்டவசனத்தின் இறுதிப்பகுதி நபியின் மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருமகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற நபியின் கவலையை அல்லாஹ் வஹியின் முலம் சரிசெய்தான்.

சரி…ஜைத் என்ன ஆனார்?

முஹம்மது – ஜைனப் திருமணம் நிகழ்ந்த அதே ஆண்டு, கிபி 629 ல் சுமார் 3000 பேர் கொண்ட சிறிய படையை முத்தா என்ற (தற்பொழுதைய ஜோர்டான்) பகுதிக்கு, சுமார் 200000 படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரும் ரோமானியப்படையை எதிர்கொள்ள அனுப்பினார். போரில் கொடியை பிடித்து படையை வழி நடத்தும் பொறுப்பை ஜைத்திடம் ஒப்படைத்திருந்தார். முஸ்லீம்கள் தோல்வியடைந்த அப்போரில் முதலில் கொல்லப்பட்டவர்களில் ஜைத்தும் ஒருவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. பர்தா போடுவதற்கு இஸ்லாமியர் சொல்லும் அடிப்படையே தவறு.
    //33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. … எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.//

    மேலேயுள்ள மேற்கோள்களை வாசித்தால், பர்தா ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை; ஆனால் பெண்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத்தான் என்பது புரியும். பெண்ணை அப்படித்தான் இஸ்லாமும், குரானும் பார்க்கிறது.

    இன்னொரு கேள்வி: பெண்ணின் முகத்தை மட்டும் பார்த்தாலே காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா?பர்தாவைப் பற்றிய விவாதங்கள் இன்னும்நடந்து கொண்டே இருக்கின்றன. 1992-ல் ஈரானில் நடந்தவைகள் பற்றி New York Times தினசரியில் குறிப்பிடப்படும் செய்தி: பெண்களின் நிலை பற்றிய விவாதங்களில் அவர்கள் அணியும் துணிமணிகளே அதிக இடம் பெறுகின்றன. ஈரானின் 13 ஆண்டுகால போராட்டத்தில் இதற்கே அதிக இடம் கிடைத்தது. எது சிறந்த பர்தா என்பதே முக்கிய கேள்வி.போராட்டத்தின் ஆரம்பத்தில் தலைமையேற்ற Abod-Hassan Banisadr என்பவர் ஆராய்ச்சியின் முடிவில் பெண்களின் தலைமுடியில் இருக்கும் பிரகாசம் ஆண்களை மயக்கக் கூடியது என்றார். ( பெண்களின் கூந்தலுக்குத் தனி வாசனையிருக்கிறதா என்ற நம் சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னனின் கேள்விக்கு இவரிடம் பதில் கேட்டிருக்கலாம்! ) இப்போராட்ட்த்தில் பல பெண்களுக்கு அவர்களின் ‘ஹிஜாபை’ வைத்து பலவித தண்டனைகள் கொடுக்கப்பட்டன.

    33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. அடிப்படைவாதிகள் இது எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் சொல்லப்பட்டது என்றும், மித வாதிகள் அந்த வசனம் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் சொல்லப்பட்டது என்றும் வாதிப்பதுண்டு. இதன் போக்கிலேயே, Ghawji என்ற அடிப்படைவாதி எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார். முகமதுவின் வசனம் ஒன்றில், ‘ஆணும் பெண்ணும் பேசும்போது ஷைத்தான் இருவருக்கும் நடுவில் தீயவற்றை வைத்து விடுவான்’ என்கிறார். (ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் sex தவிர வேறு ஒன்றுமேயில்லை போலும்!)

     
  2. இஸ்லாம் பெண்களுக்கு எதிரான ஒரு சமயம். பெண்களை எல்லா வகையிலும் – உடல், அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிலும் கீழானவர்களாகவே மதிப்பிட்டு வந்துள்ளது. குரானின் வசனங்களும், ஹதீத்துகளிலும் இந்தக் கருத்துக்களே உள்ளன. (293)

    முகமது பெண்களைப் பற்றிச் சொல்லும் வசனம் : ’பெண்களை நல்லுறவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வளைந்த நெஞ்செலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்; ஆனால் அந்த எலும்பு வளைந்த ஒன்று. அதை நேராக்க நினைத்தால் ஒடிந்து விடலாம்’. ஆனால் ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் எப்போதும் வளைந்தே இருக்கும்.’(295)

    பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குரான் வசனங்கள் இவை:

    4 : 117; ….ஷைத்தானை அவர்கள் வணக்கத்துக்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்.
    43 : 15 – 19;
    52 : 39;
    37 : 149-150;
    53 : 21 – 22
    53 : 27
    (43: 15-19; 52:39; 37: 149-150 – இந்த வசனங்களில் ‘…பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை …?)

    பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள்:
    2 : 228; ஆண்கள் ஒரு படி பெண்களை விட உயர்ந்தவர்கள்.
    2 : 282: ஒரு ஆண் அல்லது இரு பெண் சாட்சி சொல்ல வேண்டும்.
    4 : 3; ‘…உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள்.’
    4 : 11: இரண்டு பெண்களுக்குச் சமமாக ஒரு ஆண் …
    4 : 34: ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்; ஆண்களை அல்லா உயர்வை அளித்துள்ளான்.
    4 : 43: ’…நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் …உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.’
    5 : 6 ’… பெண்களைத் தீண்டியிருந்தால்..தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்.’ ( ஏன் ஒரே விதமான கட்டளைகள் இரு இடத்தில் ..? ஜிப்ரேல் / அல்லா மறந்து இரு முறை சொல்லியதோ? )
    33 : 32, 33 நபியின் மனைவியருக்குத் தனிக்கட்டளைகள் ..
    35 : 53 ‘… நபியின் மனைவியரிடம் ஏதும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.’ (அடக் கடவுளே … நபியின் மனைவியர், மற்றைய ஆண்கள் – யார் மேலும் அல்லாவுக்கு நம்பிக்கையில்லை போலும்!)
    33 : 59 ‘நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் … தங்கள் துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும்.’ (ஓ! பர்காவின் ஆரம்பம் இங்குதான், இப்படித்தான் போலும்! )

    – ஒரு மனைவி கணவனுக்கு எப்போதும் …. மறுக்கவே கூடாது, அவள் குதிரையில் மேலே இருக்கும்போது கூட!! ( அடப்பாவமே ! இது ’புல்லானாலும் புருஷன்’ என்ற “உயர் தத்துவத்தை’ விடவும் மிகவும் ‘உயரத்தில்’ அல்லவா இருக்கிறது!!)

    – முகமது நரகத்தைக் கனவில் எட்டிப் பார்த்த போது அது முழுவதும் கற்பு தவறிய பெண்களால் நிறைந்திருந்தது. ( அப்போ .. அவர்களோடு தங்கள் கற்பைத் தவற விட்ட ஆண்கள் எங்கே?)

    – வீடு, பெண், குதிரை – இந்த மூன்றும் அபசகுனங்கள்.(நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)

    இஸ்லாமிய மத நூல்கள் மட்டுமல்ல இஸ்லாமிய கலிஃபாக்கள், மதக் குருமார்கள், தத்துவ மேதாவிகள் எல்லோருமே பெண்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளார்கள். சான்றுகள்:

    ஒமார், இரண்டாம் கலிஃப்:
    – பெண்களை எழுதப் படிக்க அனுமதிக்காதீர்கள். ( கலிப் சொன்னதை இப்போது இவர்கள் ஏன் மீற ஆரம்பித்து விட்டார்கள்.)

    அலி, முகமதுவின் உறவினரும், நண்பரும் :
    – பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை.

    – பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (ஓ! பர்கா போடுவது பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்பதால்தானா??! நல்லது. ) அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள். ( no chat ..நோ கடலை …ப்ளீஸ் !)

    – ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.

    – பெண்களுக்குக் கல்வி தருவது தீமையோடு கவலையைச் சேர்ப்பது போன்றது. (299)

    முகமதுவிற்குப் பின் வந்த மிகப் பெரிய இஸ்லாமியர் எனக் கருதப்படும் al-Ghazali (1058 – 1111) என்ற இஸ்லாமியத் தத்துவ அறிஞரின் The Revival Of The Religious Sciences என்ற நூலிலிருந்து இரு மேற்கோள்கள்:

    – பெண்கள் பெரிய ஏமாற்றுக்காரர்கள்; தவறானவர்கள்; கெட்ட குணம் நிறைந்தவர்கள்; தாழ்ந்த மனதுக்காரர்கள்.

    – ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் பெண்களிடமிருந்தே வரும். (300)

    இஸ்லாம் பெண்களை அறிவு, பண்பு, உடல்கூறு இவைகளில் மிகவும் பலவீனமானவர்கள் என்கிறது. ( ஓ! இதனால் தான் அடிக்கடி நம் பதிவர்கள் பெண்கள் உடலளவில் மிகவும் பலவீனமானவர்கள் என்று அடிக்கடி எதிரொலிக்கிறார்களோ! )
    முகமது ‘ பெண்கள், அடிமைகள்’ இருவருமே ‘பாவப்பட்டவர்கள்’ என்கிறார்.

    பெண்களைத் தாழ்த்தும் இன்னும் சில ஹடீத்துகள்:

    – ஒரு பன்றி தன்மேல் உரசிச்செல்வதை அனுமதித்தாலும், ஓர் ஆண் தான் அனுமதிக்காத ஒரு பெண்ணின் முழங்கை கூட தன் மேல் படுவதை அனுமதிக்கக் கூடாது.

    – கறுப்பு நாய், ஒரு பெண், ஒரு கழுதை இதில் எது வந்தாலும் உங்கள் தொழுகையை நிறுத்திக் கொள்ளுங்கள். (301) (நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)

    பாலினத்து வேறுபாடுகள்:

    இஸ்லாம் ஒரு பாலின மையம் கொண்ட மதம். ஆனால் இதில் அவளது பாலினத் தேவைகள் கணக்கில் இல்லை. இஸ்லாமியக் குரு ஒருவர், திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் மேல் முழு ஆதிக்கம் ஒரு ஆண் செலுத்த முடியும் என்கிறார். ஆனால், அவனது உறுப்புகள் அதுபோல் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தானதல்ல. சுரா 4:3-ல் ஆணுக்குப் பல பெண்களை குரான் அளிக்கிறது.

    4 : 129 — ”மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது.” இப்படி உண்மையைச் சொன்னாலும் ஏன் குரான் பலதார மணத்தை ஒத்துக் கொள்கிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில், பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில இனத்தவரின் பழக்க வழக்கங்களும், பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது நபி சில உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.

ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான் படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண், ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள் என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.

குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம். தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம் தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது. தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே பெண்கள் தங்கள் கணவன் பலதார மணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.

அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூற முடியும்?

இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பெண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தனைக்கும், குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்துவிடப் படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத் தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது அவருக்கு ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது. சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். முகம்மது நபி கல்லால் அடித்துக்கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.

இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.

இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில் எட்டு வயதுச் சிறுமி தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள். பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.

இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?

மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன – இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இப்போது ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

“அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்? இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே. நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!

அவர்கள் என்ன சொன்னார்கள்?

அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!”

ஆஹா…!

இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!! படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!! என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து

விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது. இஸ்லாம் இதில் பெண்களை ஆண்களுக்கு கீழாகவே வைத்திருக்கிறது என்பது வெளிப்படை.

 

பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் ‘தலாக்’ எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு ’குலாஃ’ அல்லது ’குலாஉ’ என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாத்திற்கு முன்பு அரேபியாவின் குடும்ப அமைப்பில் ஆணே தலைமைப் பொறுப்பில் இருந்தான் என்றாலும் பெண்ணிற்கான முதன்மைத்தனம் முற்றிலுமாக குலைந்து விடவில்லை. பெண்ணின் மறுமணம், விவாகரத்து போன்றவை அங்கு நடைமுறையாகவே இருந்தது. முகம்மதின் முதல் மனைவி ஹதீஜா என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஹதீஜாவுக்கு முகம்மது முதல் கணவரல்ல மூன்றாவது கணவர். அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தின் வாசலை ஒரு திசையிலுருந்து வேறொரு திசைக்கு மாற்றி வைப்பதன் மூலம் தன் கணவனை விவாகரத்து செய்து விட்டதாக பெண்கள் ஆண்களுக்கு அறிவிப்பது அங்கு வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழியில் தான் இஸ்லாமும் பெண்களுக்கான விவாகரத்தை அங்கீகரித்திருக்கிறது.

 

இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்வது குறித்து பல வசனங்களில் விரிவாக விளக்கும் குரான், பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வது குறித்து எந்த இடத்திலும் தனித்த வசனமாக பேசவில்லை. மாறாக ஓரிரு வசனங்களில் மேம்போக்காக சொல்லிச் செல்கிறது. ஆதலால் குலா விவாகரத்து குறித்து பேசும்போது ஹதீஸ்களை மட்டுமே மேற்கோள் காட்டி பேசுவார்கள்.

 

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் அவர்களின் துணைவியார் நபி அவர்களிடம் வந்து ……… தோட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒரு முறை தலாக் கூறிவிடுங்கள் என்றார்கள். புஹாரி 5273

 இது போன்று இன்னும் சில ஹதீஸ்களும் இருக்கின்றன. இது குறித்து கூறும் குரான் வசனங்கள்,


…….. கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீதும் பெண்களுக்கு உரிமையுண்டு …….. குரான் 2:228

 

……. அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சினால் அவள் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவதில் குற்றமில்லை …….. குரான் 2:229

 

வசனம் 2:229 ல் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவது என்பதற்கான பொழிப்புரையாகத் தான் புஹாரி 5273 சுட்டப்படுகிறது.  அதாவது திருமணத்தின் போது பெற்ற மஹரை திருப்பிக் கொடுத்துவிடுவது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வசனம் 2:229 ல் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவது என்பதற்கான பொழிப்புரையாகத் தான் புஹாரி 5273 சுட்டப்படுகிறது.  அதாவது திருமணத்தின் போது பெற்ற மஹரை திருப்பிக் கொடுத்துவிடுவது.

 

ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் குலா பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.

ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது. (இதை நடைமுறையில் யாரும் காணலாம்) ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.

 பொதுவாக விவாகரத்து பெறும் பெண்களுக்கு எதிர்காலம் என்பது இருண்டதாகவே இருக்கும். காரணம், இந்த ஆணாதிக்க உலகில் பெண் எல்லாவிதத்திலும் ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டியதிருக்கிறது. மண உறவுகள் விலகிவிட சொந்த உறவுகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவளுக்கு எதிர்காலம். இல்லையென்றால் அவளுக்கு இந்த உலகம் நரகமாகவே இருக்கும். இது தான் பெண்களை கணவன் என்ன செய்தாலும் அதை சகித்துப் போக வைக்கிறது. இது மாற வேண்டுமென்றால் பெண்ணுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் வேண்டும். ஆனுக்கு சமமாக பெண்ணை உலவவிட எந்த மதமும் சம்மதித்ததில்லை, இதில் இஸ்லாமும் விலக்கில் இல்லை.  எனும்போது பெண்ணை ஆணுக்கு கீழானவளாக இருத்தி வைத்துவிட்டு விவாகரத்து உரிமை வழங்கியிருக்கிறோம் என்பதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாமியர்களின் புண்ணிய பூமியான சவுதியில் வட்டி வங்கிகளில் வழங்கப்படுகின்றது என்றால் சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
Calculate interest rate

http://www.alrajhibank.com.sa/en/personal/personal-finance/pages/personal-finance.aspx

http://www.bebas-hutang.com/personal-loan-with-al-rajhi-bank/

பிச்சை எடுப்பது இஸ்லாமின் படி தவறு என்றால் சவுதியில் பிச்சை எடுப்பது (பெண்கள் அதிகமாக்)எல்லா இடங்களிலும் உள்ளதை அனைவரும் அறிவோம்.
பல ஹஜ் செல்லும் பயணிகளே செலவை ஈடு கட்ட அங்கேயே பிச்சை எடுப்பதாக்வும் கேள்வி.ஆக‌வே சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
Despite laws, begging on the rise
By MD HUMAIDAN | ARAB NEWS
Published: Jul 21, 2011 00:25 Updated: Jul 21, 2011 00:25
JEDDAH: The number of beggars in the country exceeds the estimated figure of 150,000 quoted by government statistics, researchers say.

http://www.arabnews.com/saudiarabia/article475414.ece

ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை ஹிஜாப் அணிந்தால் அல்லாவுக்கு வெற்றி என்றால் கவர்ச்சிக்கன்னி முஸ்லிமாக்களான ஷகிலா ஷர்மிலி,கத்ரினா கைஃப்,குஷ்பு,…ஆகியோரால் அலாவுக்கு தோல்விதானே?
ஷகிலா ஹிஜாப் அணிந்தால் தடுப்பது ஏன்?அவரும் முஸ்லிமா ஆக துஆ செய்யுங்கள்.

இரஹ்மான் ஒரு தர்காவாசி ஆகவே அவர் சவுதி மதம் சேர்ந்தவர் அல்ல‌

சேஷாசல பெரியார்தாச சித்தார்த்த அப்துல்லா இன்னும் தன் இணை வைக்கும் மனைவியோடு வாழ்வது இஸ்லாமின் படி தவறு.ஆகவே அவரும் நரக வாசியே.மண விலக்கு செய்து நபி வழியில் ஒரு (சிறு வயது )முஸ்லிமாவை மண முடித்து அவரை முஸ்லிம் ஆக்குங்கள்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர்.

அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இந்த அசிங்கத்தை மறைக்க, மெஹர் என்பது பெண்ணை கண்ணியப்படுத்த அல்லாஹ் செய்த வழிமுறை, அந்த பெண்ணை பாதுகாக்க ஆண் கொடுக்கும் பணம் என்றெல்லாம் பீலா விடுவார்கள் நமது மூஃமின்கள்.

ஆனால் அல்குரான் மெஹரை ஏன் திரும்ப எடுத்துகொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லுகிறது.

4:20 நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

4:21 அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள். இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் (அ) ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. எந்த பெண்ணாவது முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். இது உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இல்லாத தனிப்பட்ட சலுகை முஹம்மதுவிற்கு மட்டும் அல்லாஹ் கொடுத்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக முஹம்மது சில பெண்களை விரும்பிய பின்னரும் அப்பெண்கள் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துள்ளனர்.

கீழ்கண்ட புகாரி ஹதீஸை படிக்கவும், அதன் கீழே சில கேள்விகள் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்படுகிறது.

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்

இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?

2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?

3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?

4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?

6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?

7) அரசி யார்? இடையன் யார்?

8) தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?

9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?

10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு “ஆம்” சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் “முஹம்மதுவை இடையன்” என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?

18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?

19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?

20) இந்த பெண் புத்திசாலித்தனமாக “முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்” முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து “நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்” உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?

25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?

இந்த திருமண ஒப்பந்தம், மற்றும் முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?http://periyarnaathigan.blogspot.com/

சிந்தியுங்கள்….
உங்கள் இஸ்லாமிய ஆதாரமாகிய சஹீஹ் புகாரி ஹதீஸிலிருந்து ஒரு துகள் இது…

இவரையா பின்பற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்…?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த கூத்தை கேளுங்கள்.
முகமது இறந்த பிறகு அவருடைய மனைவிகளை மணக்க கூடாது என்று அல்லாவே கூறிவிடார்..
33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்
இதில் முகமதுவின் சந்தேக புத்தி தெளிவாக புரிகிறது. அது ஏன் என்று ஒரு விளக்கம் பண்ணைக்காரன் கொடுத்த இணைப்பில் இருந்தது. அது என்ன படியுங்கள்
Allah’s Messenger (pbuh) said: ‘[In the Paradise,] a woman will be with her last husband.’ (Tabaqaat Abu Shaikh p.270. Albani classified it as Sahih in Silsala Sahiha H. 1281)
அதாவது சொர்க்கத்தில் முஸ்லிமாக்கள் தங்கள் இறுதி கணவருடன்(ஒரே ஆள்தான்) இருப்பார்களாம்.முகமதுவுடன் இருக்க விரும்பிய அவர் மனைவிகள் வேறு திருமணம் செய்யவில்லையாம்.இது அனைத்து முஸ்லிமாக்களுக்கும் பொருந்தும்.

Huzaifa (Prophet’s Companion) said to his wife, ‘If you wish to be my wife in the Heaven do not marry anyone after me for a woman will be with last of his husbands and for this reason Allah forbade it for the wives of the Messenger (pbuh) to remarry after him.’ (Mushkil Al-Athaar 2/147 Hadith 552)

http://www.letmeturnthetables.com/2009/10/why-were-wives-of-holy-prophet-pbuh-not.html#comment-form

ஆகவே மறுமணம் செய்யும் முஸ்லிமாக்கள் தங்கள் இறந்த கணவருடன் சொர்க்கத்தில் இருக்க விரும்பாதவர்களே.

அல்லது தங்கள் இறந்த கணவரை வெறுக்கும் பெண்கள் மட்டுமே மறுமணம் புரியலாம்.வாழ்க இஸ்லாமின் பெண்ணுரிமை super



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நண்பர் பண்ணைக்காரன்
மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.நீங்கள் என்ன்வென்றால் இந்து மத கோட்பாடாகிய ஒரே கணவன் காலத்துக்கும் என்று இஸ்லாமுக்கு விரோதமாக் பேசுகிறீர்கள்.இன்னும் குரான்[ விளக்கம்] அடிமைப் பெண்களின் விரக தாபத்தை போக்கவே, அவர்களை அன்பு காட்டவே அவர்களிடன் உடலுறவு என்கிறது.

சொர்க்கத்தில் ஒரு ஆண் 4(அல்லது அதற்கும் மேலா)+72 ஹூரிகள்+பல சிறுவர்கள் என்று குஜாலாக இருக்க .மனைவி மட்டும் ஒரே இறுதி கணவனுடன் வாழ சொல்லும் அல்லாவின் சிந்தனையை என்ன சொல்வது?

http://www.letmeturnthetables.com/2009/10/what-islam-says-regarding-physical.html
வரதட்சனையையும் மஹரையும் ஒப்பிடுவோம்

வரதட்சனை என்பது பெண்ணின் த்ந்தை தாய் வழி சொத்து,சொத்துரிமை,இது கட்டாயமும் இல்லை.இதில் கணவனுக்கு உரிமை இல்லை.வரதர்சனை என்பது இந்திய சட்டப்படி குற்றம்.

ஆனால் மெஹர் என்பது முஸ்லிம் ஆண் கன்டிப்பாக கொடுக்க வேண்டும்.
______________-
ஒரு வேளை விவார ரத்து ஆனால் வரதட்சனை பெண்ணிடமே திருப்பி அளிக்கப் பட வேண்டும்.சூழலுக்கு தக்க அவளுக்கு ஜீவனாம்சம் அளிக்கப் படவேண்டும்.

இஸ்லாமில் ஆண் பெண்ணை விலக்கு செய்தால் மஹரை அவளே வைத்துக் கொள்ளலாம்.பெண் ஆணை விவாக ரத்து செய்தால் மஹரை திருப்பி அளிக்க வேண்டும்.ஜீவனாம்சம் கிடையாது
இந்த ஆண்கள் ஆண்கள் நன்றாக விளையாடலாம்.முதல் மனைவியின் அனுமதி இன்றியே 2,3,4, திருமணம் +எண்ணற்ற வலக்கரம் சொந்தமாக்கிய பெண்கள்(வைப்பாட்டி) வைத்துக் கொள்ளலாம்..அபோது விவாக இரத்து அவசியம் இல்லை.முதல் மனைவி வெறுத்து போய் விலகினால் மஹர் திருப்பி ஆணுக்கு வந்து விடும் அவன் இன்னொரு பெண்ணை இதை கொடுத்து திருமணம் செய்ய்லாம். ஒரு சம்யத்தில் மொத்தம் 4 மனைவி மட்டும்தான் சுழற்சிமுறையில் வானமே எல்லை.
இதில் இஸ்லாமில் கூட பெண்களுக்கு வரதட்சனை நகைகள் மூலம் அளிக்கப் படுகிறது. குறைந்த பட்சம் 5 பவுன் இல்லாமல்[1 இலட்சம்] திருமணம் நடப்பது இல்லை.மஹர் என்று 500 அல்லது 1000 ரூ மட்டுமே பேருக்கு கொடுக்கிறார்கள்.இதுவும் இந்துக்களின் பரிசப் பணம் போன்றது.
இஸ்லாமில்?[விவகரத்து ஆனால் அல்லது ஆகா விட்டால்]

கணவனின் சொத்தில் மனைவிக்கு எவ்வளவு பங்கு வரும்

மனைவியின் சொத்தில் கணவனுக்கு எவ்வளவு பங்கு வரும்?

ஒப்பீடு பார்ப்போமா?
நணப்ர் பண்ணைக்காரனுக்கு தேவைப்பட்டால் அளிக்கலாம்.அவரின் விருப்பமே முக்கியம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று “தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொல்கிறார்.

அதற்கு முகமது, “வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து ” உன் மனைவியை விவாகரத்து” செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை “நாம் செய்தோம் ” என்றுச் சொல்கிறார்.

இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?
ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, “நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

“உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை. எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி “உன் மனைவியை நீயே வைத்துக்கொள் ” என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?
முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

    சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

    நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது ‘அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்’ என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்’ என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

    நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது ‘திஹ்யா’ என்ற நபித்தோழர் வந்து ‘இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டார். ‘நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்’ என்றார். அப்போது ‘அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் ‘நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்’ என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

    இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், ‘அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?’ என்று கேட்டதற்கு ‘அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்’ எனக் கூறினார்.

    நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து ‘உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் ‘வலீமா’ எனும் மணவிருந்தாக அமைந்தது” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

    “அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்” என இக்ரிமா கூறினார்

    1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

    2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

    3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

    4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

     
  2. கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

    இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் “அல்லாஹு அக்பர்” என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, “ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்” என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது “நல்லது” என்றார். (அல் தபரி சரித்திரம் – The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said “God is the Greatest.” He had a sword with him; he said to the Prophet, “O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you.” The Prophet laughed and said “Good”. (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

    2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

    3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

    5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

    6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

    7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

    8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

    9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

    10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

    11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

    12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?

    இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

    சரி,

    ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
    இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
    இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

    அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.

     
  3. பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.

    நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ‘அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு ‘நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது’ என நாங்கள் பேசிக் கொள்வோம்’ என அனஸ் (ரலி) கூறினார்” என கதாதா அறிவித்தார்.

    மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).
    இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் – அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை – இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் – தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.

    இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:
    ஆயிஷா (ரலி) அறிவித்தார்

    இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .
    முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை – முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?

    கவனிக்கவும் – மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.

    முகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ் ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதி தொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.

    தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு(sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.
    இதன் விளைவுகள்:

    இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், ‘ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான” ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

    இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?

    இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?

    முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.

     
  4. முகமது ஏன பல(4க்கு மேல்) திருமணங்கள் செய்தார்?
    எப்ப‌டி எல்லாம் திரும‌ண‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று முஸ்லிம்க‌ளுக்கு புரிய‌ வைக்க‌ நான் சொல்ல்ல‌ வில்லை ப‌ண்ணைக்கார‌னின் குரு வாக்க‌ர் கூறுகிறார் .சிரிக்காம‌ல் ப‌டிக்க‌ வேண்டும்.
    http://www.letmeturnthetables.com/2008/06/why-prophet-muhammad-married-more-times.html

    very important
    ….
    3-He married young and intelligent ‘Aisha bint Abu Bakr (RA) so that she remembers and continues to teach the masses all matters relating to married life and even the rest. This marriage also aimed at fostering his friendly relations with Abu Bakr (RA) and also to refute the baseless Arab tradition of not marrying the daughter of the called-not real brother. It was also a practical manifestation that one can marry a virgin.
    ….
    8-He married Zainab bint Jahsh (RA) to uproot the baseless Arab tradition of not marrying the divorcees of adopted-not-real sons.Islam holds that no matter how much dear no one can just as one’s son from his own loins. Montgomery Watt writes;

    ” … a social motive may have outweighed the political one in her case – to show that Muhammad had broken with old taboos.” (Muhammad at Medina p.288, pub. Oxford, 1956)

     
  5. இறை தூதருக்கு சிறப்பு சக்திகள் இல்லை!சரி அதனால் அவருக்கு மக்கா மதினா தவிர வேறு இடம் தெரியாது!ஆனால் அவர் மூலமாக வேதம் இறக்கிய இறைவனுக்கு உலகமே தெரியாதா?குரானில் யூதர்கள் பற்றியும் மக்க மதினா அரபு மக்கள் பற்றி மட்டுமே குர்ப்பிடபட்டுள்ளதே?ஏன் மற்ற இடங்கள் பற்றி சொள்ளவ்ல்லை?
    அடுத்து ஒரு இறைதூதரை தெரியாமல் கொலை செய்தால் கொலை செய்தவன் ஒரு இறை நம்பிக்கை உள்ள அடிமையை விடுவிக்க வேண்டும் என குரான் கூறுகிறது!இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் அடிமைகள் என்றும் குரான் சொல்லுது!ஆக இறைவனின் அடிமையாக இருக்கும் ஒருவன் எப்படி தனி மனிதனுக்கு அடிமையாக இருக்க முடியும்?அது நியாயமானதா?எல்லா மனிதர்களும் சமம இல்லைன்னு சொல்றாங்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. பெண்ணின் தலைமுடி உட்பட சிற்றின்ப வேட்கையை தூண்டிவிடமுடியும் எனும் மதக் கோட்பாடே புர்க்காவை அணிந்து கொள்வதற்கான அடிப்படை, அதாவது பெண் உடல் பாலுறுவுக்கு அழைப்புவிடக்கூடியது என்று பெண்ணை தன் உடலை புர்க்கா போட்டு மூடச் சொல்கிறது. பெண் உடல் பாவத்தின் சின்னம் என்று மநு ஸ்மிருதி ஒரு விதமாக சொல்கிறது, குரான் வேறு விதமாக சொல்கிறது, பைபிள் வேறுவிதமாக சொல்கிறது அவ்வளவுதான். “கன்னிகள் பூப்படைவதுதான் தேவதூதர்களின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று டெர்ர்டுலின் எனும் கிறத்தவ பாதிரியார் சொல்லியிருக்கிறார். “ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார். ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை.

     
  2. விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!

    புஹாரி ஹதீஸ் : 6837

    அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.

    ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

    மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

    அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.

    http://periyarnaathigan.blogspot.com/ குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.

    இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24)

    இந்த வசனம் முஹம்மதுவிற்கும், மற்றும் எல்லா முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதினால், முஹம்மதுவும், இதர இஸ்லாமியர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த அல்லது தங்களிடம் அடிமைகளாக இருக்கும் திருமணமான இதரபெண்களோடு விபச்சாரம் செய்ய (உடலுறவு) கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு.

    ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் தன் இறைத்தூதர் தன் அயலானின் மனைவி மீது ஆசைக் கொள்ள அனுமதித்துள்ளார் இதனால் அவர் தன் உள்ளத்தில் விபச்சாரம் செய்துள்ளார்.(உண்மையில் இந்த பெண் முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியாவாள்). இதுமட்டுமல்லாமல், அல்லாஹ் முஹம்மதுவோடு கூட, இதர இஸ்லாமியர்களும் (இன்றைய இஸ்லாமியர்களும்) தங்களுக்கு போரில் கிடைக்கும் திருமணமான பெண்களோடு அல்லது அடிமைப்பெண்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

 

தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.

 

மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வழங்கும் தொகை. இத்தொகையை மணமகள் தான் விரும்பும் அளவுக்கு கேட்டு வசூலித்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே இதை வசூலித்து பெண் தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்வதால் இது பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். இதற்கு இந்தியாவில் நடக்கும் வரதட்சனை கொடுமைகளை துணையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

 

வரதட்சனையோ, தனதட்சனையோ இரண்டுமே தனியுடமையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம். பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. வரதட்சனை என்றாலும், தனதட்சனை என்றாலும் சமூகவியலாளர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம், ஆணுக்கு சாதகமான பெண்ணின் இடப்பெயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது என்பதும், பெண்ணை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஆண் ஏற்றுக் கொள்வதால் அதற்கான ஈட்டு என்பதும் தான். ஆக திருமணத்தின் போது ஆண் கொடுத்தலும் பெற்றாலும் அதன் பொருள் பெண் ஆணின் சொத்தாக இருக்கிறாள் என்பது தான். இதில் வரதட்சனை சமூகச் சீர்கேடு, தனதட்சனை பெண்ணுக்கான உரிமை என்று பிரித்துக் காட்டுவது உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்தியாவில் வரதட்சனைக் கொடுமைகள் பரவலானவை. திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பணமோ, பொருளோ வாங்கி வருமாறு துன்புறுத்துவதில் தொடங்கி கொலை செய்வதுவரை நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம், முப்பதைக் கடந்த பின்பும் திருமணமாக வழியின்றி முதிர்கண்ணிகளாக நிற்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு மாற்று தனதட்சனையாக இருக்க முடியுமா? எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் திருமணத்திற்கு பொருள் சேர்ப்பதற்காகவே இளமையைச் செலவழிக்கும் முதிர்கண்ணன்கள் நாற்பதைக் கடந்தும் இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவில் நிகழும் கொடுமைப்படுத்தலும், கொலை புரிவதும் அந்த நாடுகளில் இல்லை. இது வரதட்சனை, தனதட்சனை வித்தியாசத்தால் நேர்ந்ததல்ல, ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு.

 

இந்த அடிப்படைகளை அறியாமல், சமூக, கலாச்சார ஆழங்களுக்குள் இதன் அடிவேர் புதைந்திருப்பதை புரிந்து கொள்ளாமல்; வரதட்சனை கொடூரங்களையும், ஸ்டவ் வெடிப்புகளையும் சுட்டிக் காட்டி, மரபு ரீதியான அரபு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இஸ்லாமிய மஹ்ர் தான் இதன் ஒரே தீர்வு என்றும், இதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறிவிட்டது என்றும் நீட்டி முழக்குவது மதவாதிகளின் மூன்றம் தர பரப்புரை உத்தியேயன்றி வேறொன்றுமில்லை.

 பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்னிட்டே மஹ்ர் தொகையை மணப்பெண்ணே தீர்மானித்து, வாங்கி, தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இவ்வுரிமையை இஸ்லாம் வழங்கியிருப்பது சமூகப் புரட்சியில்லையா? என்பது மதவாதிகள் முன்வைக்கும் கேள்விகளில் முதன்மையானது. இதை இரண்டு விதங்களில் அணுகலாம், 1. இஸ்லாம் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா? 2. உரிமையை முன்னிட்டுத் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா?

 செமித்திய பிரிவின் அனைத்து இனங்களிலும் மணமகன் மணமகளுக்கு மணக்கொடை வழங்குவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆப்ரஹாமின் ஊழியன் ரெபேக்காளுக்கு கொடுத்த மணக்கொடை குறித்து ஆதியாகமம் 24:53 கூறுகிறது. ஹம்முராபியின் சட்டங்களில் மணக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹீப்ரு மொழியில் மொஹர் என்றும், சிரிய மொழியில் மஹ்ரா என்றும் குறிப்பிடப்படும் மஹ்ர், அரபுக்கு மட்டுமல்லாது அந்தப் பகுதியின் அனைத்து மொழியிலும் குறிப்பிடப்படும் சொல்லாக இருப்பதே அனைத்து இனங்களிலும் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகம்மதுவுக்கு முந்திய அரேபியாவில் சதாக் என்றும் மஹ்ர் என்றும் இரட்டை வழக்கங்கள் இருந்திருக்கின்றன. மஹ்ர் மணப்பெண்ணின் தந்தைக்கும், சதாக் மணப்பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. குரானின் 4:4 வசனம் மணக்கொடையை குறிப்பதற்கு ’சதக்கா’ எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. ‘ஷிகார்’ எனும் திருமண முறையை தடை செய்வதாக குரான் பேசுகிறது. கொண்டு கொடுக்கும் திருமண முறைக்குத் தான் ஷிகார் என்று பெயர். ஏன் இதை தடை செய்கிறது என்றால் இரண்டு பக்கமும் மஹ்ர் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக மஹ்ரை நீக்கிக் கொள்கிறார்கள் என்பதால், மஹ்ர் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனும் அடிப்படையில் ஷிகார் திருமணத்தை தடை செய்கிறது. இவைகளெல்லாம் முகம்மதின் காலத்திற்கு முன்பே திருமணத்தில் பெண்ணுக்கு மஹ்ர் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள். முகம்மது இதில் செய்ததெல்லாம் சதாக் என்றும் மஹ்ர் என்றும் தனித்தனியாக கொடுக்கப்பட்டு வந்ததை ஒன்றாக்கி மஹ்ர் மட்டும் என்று ஆக்கியது தான். முகம்மதின் காலத்தில் மஹ்ர் பெண்ணின் தந்தைக்கு உரியது என்பதால், இனி மஹ்ர் பெண்ணுக்கு உரியது என்பதை தனது குரானில் சற்றே அழுத்தத்துடன் குறிப்பிடுகிறார் முகம்மது. அந்த அழுத்தம் தான் பெண்ணுரிமையாக ஜோடனை செய்யப்படுகிறது.

 

மஹ்ர் என்பது எந்த அடிப்படையில் பெண்ணின் உரிமையாக பாதுகாப்பாக கருதப்படுகிறது? மணக்கொடையாக கொடுக்கப்படும் பணம் பெண்ணிடம் இருப்பதால் எதிர்காலத்தில் மணமுறிவு ஏற்பட்டாலோ, வேறு வகைகளில் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அந்த பணத்தைக் கொண்டு தன் எதிர்காலத்தை பெண் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் அடிப்படையிலேயே இதை பெண்ணுக்கான உரிமை, பெண்ணுக்கான பாதுகாப்பு என்பனபோல் விதந்து கொள்ளப்படுகிறது. ஆனால் மரபு வழி வழக்கம் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை என்பதை குரானும், ஹதீஸ்களும் தெளிவாகவே நிருவுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


 

….. அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். குரான் 4:4

…… மஹ்ரை பேசி முடித்தபின் அதை கூட்டவோ அல்லது குறைக்கவோ இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மீது குற்றமாகாது ….. குரான் 4:24

 

இந்த வசனங்களில் முதல் வசனம் மஹ்ர் கொடுத்து திருமணம் முடிந்தபின் அதை செலவு செய்வதற்கு அனுமதிக்கிறது. இரண்டாம் வசனமோ திருமணத்திற்கு முன்னரே இருவரும் பேசி தேவைப்பட்டால் கூட்டி குறைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இங்கு மஹ்ரின் நோக்கம் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பாக இருந்தால் அதை செலவு செய்வதற்கும், கூட்டிக் குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கியது என்ன பொருளில்?

 

“(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். ……. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார் “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். முஸ்லிம் 2785

 

திருமணம் முடிக்க தன்னிடம் மணக்கொடையாக எதுவுமில்லை என்று கூறும் ஒருவரிடம் முகம்மது ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாரும் எனக் கேட்க. அதுவும் இல்லை என்று தன்னுடைய ஆடையில் பாதியை கிழித்து தரட்டுமா என்றவர் வினவ, உனக்கு குரான் வசனங்கள் தெரியுமா என்று முகம்மது கேட்க, தெரியும் என்றதும் அந்த வசனங்களை இவளுக்கு கற்றுக் கொடுப்பது தான் நீ கொடுக்கும் மணக்கொடை என்று கூறி திருமணம் செய்து வைக்கிறார். இதுதான் நீண்ட அந்த ஹதீஸின் சுருக்கம். இந்த மணக்கொடையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது பெண்ணுக்கு? இது மட்டுமா? பேரீத்தம்பழம், காலணியைக் கூட மஹ்ராக கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவைகள் பெண்ணுக்கு என்னவிதமான எதிர்கால பாதுகாப்பை வழங்கும்?

 ஆக, மஹ்ர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்பது அந்தக் காலத்தில் இருந்து முகம்மதால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடைமுறை வழக்கம். இதைத்தாண்டி அதில் பெண்ணின் உரிமையோ, சமூகப் புரட்சியோ இருப்பதாக யாரும் கூறக் கேட்டால் ஒருமுறை சப்தமாக சிரித்துக் கொள்ளலாம். அதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை. எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

“The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

“பெண்களை மிகவும் பிடிக்கும்” என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
…The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”

(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கரா”வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?

எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்? நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை. அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன் நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

    நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய, ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.

     
  2. //ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய, ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.//
    உங்களுக்கு புரியுது, அவங்களுக்கு புரியவில்லையே :)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي لم يحضن واولات الاحمال اجلهن ان يضعن حملهن ومن يتق الله يجعل له من امره يسرا

Yusuf Ali: Such of your women as have passed the age of monthly courses, for them the prescribed period, if ye have any doubts, is three months, and for those who have no courses (it is the same): for those who carry (life within their wombs), their period is until they deliver their burdens: and for those who fear Allah, He will make their path easy.
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

ஆகவே நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சாமியாடி, மாதவிடாயே ஏற்படாத சிறுமிகளை விவாகரத்து செய்வதற்கு கூட என்ன செய்யணும்னு சொல்லிக்கிறார்.

ஆனால் சிறுமிகளை திருமணம் செய்வதை நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா தடை செய்தார் என்று இப்போதைக்கு நம்ம இபுராஹிம் தக்கியா செய்கிறார்.

அவருக்கு ஆறுவயசில் பொண்ணு இருக்கான்னு தெரியலை.

எது இருந்தாலும் நான் கடவுள்கிட்ட பேசறேன்.. உன் பொண்ணை எனக்கு நிக்கா பண்ணிவையின்னு யாராவது காக்காவலிப்பில் உளறினால், உடனேநம்ம இபுராஹிம் தன் பொண்ணை அந்த அறுபது வயது கிழத்துக்கு நிக்கா பண்ணி வைத்துவிடுவார். சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?
எல்லா நபிவழியில்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

 

பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது.

 

பெண்ணை ஆண் அடக்குவது ஆணாதிக்கம் எனும் தட்டையான புரிதலே பொதுவாக நிலவுகிறது. ஆனால் ஆணாதிக்கம் என்பது இன்னும் ஆழமானது. ஆணுக்கு ஆதரவாக பெண் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளும், ஒழுக்கங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும், நடைமுறை சார்ந்து செய்யப்படும் திணிப்புகளும், பெண்ணின விடுதலைக்கு எதிராக செய்யப்படும் ஆணின அடக்குமுறைகள், கற்புநெறிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது தான் ஆணாதிக்கம். இந்த வகையில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள்.  ஆனால் குடும்பத்தில் கணவனுக்கு கீழாக மனைவி இருப்பதையே ஆணாதிக்கம் என எண்ணிக் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது என்று பசப்புகிறார்கள்.  இஸ்லாத்தின் ஒட்டுமொத்த பார்வை பெண்ணை ஆணின் பதுமையாகவே பாவிக்கிறது. இதை விளக்க அதன் சில வசனங்களை வகை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் குரான் 2:282

 ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் குரான் 4:34

 கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237

 குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233

 தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

 இவைகள் குரானில் காணக் கிடைக்கும் வசனங்கள். இது போல் இன்னும் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன.  ஹதீஸ்களைத் தோண்டினாலோ மிக மட்டமாக, பெண்ணை ஓர் உயிரினமாகக் கூட மதிக்காத வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள், இட்டுக் கட்டப்பட்டவைகள் எனும் குழப்பமான இருட்டுச் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.

 முதல் வசனத்தில் சாட்சிப் பொறுப்புக்கு ஆண்களையே முதன்மையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சிக்கு கிடைக்கவில்லையாயின் ஓர் ஆணும் இரண்டு பெண்களுமாக கொள்ளலாம் என்கிறது. அப்போதும் இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லையாயின் நான்கு பெண்களுக்கு சாட்சி கூறும் தகுதி வந்துவிடாது. ஒரு மாற்று ஏற்பாடாக ஓர் ஆணுக்கு பதிலாக இரண்டு பெண்கள் என  ஏற்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏன் இரண்டு பெண்கள் என்பதற்கு ஒரு காரணத்தையும் குரான் கூறியிருக்கிறது. ஒருத்தி தவறினாலும் மற்றொருவள் நினைவு படுத்துவாளாம். ஏன் ஆண்கள் தவறவே மாட்டார்களா? அது தான் குரானின் மனோநிலை, ஆணும் பெண்ணும் சமமாக மாட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மனைவியை அடிக்கலாம் எனும் அனுமதி குறித்து மதவாதிகள் வளைத்து வளைத்து உபநிடதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். இல்லறத்தை இனிதே நடத்திச் செல்வதற்கான ஏற்பாடு என்பதில் தொடங்கி பெண்களுக்கான பாதுகாப்பு என்பது முடிய விதவிதமான வண்ணங்களில் விளக்கங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் எப்படி விளக்கமளித்தாலும் இதன் பொருள் ஆணுக்கு கீழாக பெண்ணை இருத்தி வைப்பது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. தான் இன்னொரு திருமணம் செய்ய மனைவி தடை விதிக்கிறாள் என்று ஐயமெழுப்பும் ஓர் ஆணுக்கு உன் மனைவியை அடித்து விட்டு திருமணம் செய்து கொள் என ஆலோசனை வழங்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன. மட்டுமல்லாது மனைவியை எப்படி அடிப்பது என்பதற்கும் முகத்தில் அடிக்கக் கூடாது, காயம் ஏற்படும்படி அடிக்கக் கூடாது வழிமுறைகள் வழங்கியிருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது? இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்துகிறது என்றா?

 

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பதை மேலோட்டமாக பார்த்தால் வெகு யதார்த்தமாக தெரியலாம். ஆனால், இஸ்லாம் ஆணுக்கு வழங்கியிருக்கும் கலவிச் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தான் இதன் முழுமையான பொருளாக பெண் ஆணுக்கான காமப் பதுமை என்பது விரியும்.  ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டவன், மட்டுமல்லாது அடிமைப் பெண்கள் இருந்தால் அவர்களை எண்ணிக்கை வரம்பின்றி கையாளவும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றவன். பெண்ணோ ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவள். அதாவது ஒரு மனைவி மறுத்தாலும் ஆணுக்கு கல்வி இன்பம் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடு இருக்கிறது. மனைவி அதற்காக காத்துக் கிடப்பவளாகிறாள். இந்த நிலையில் யார் அழைத்து யார் மறுக்கக் கூடாது எனும் விதி வந்திருக்க வேண்டும்? மாறாக அல்லா பெண்ணை சபிக்க உத்தரவிட்டிருக்கிறார். என்றால் அவரின் பார்வை பெண் ஆண்களுக்கான காமப் பதுமை என்பதாக இருக்கிறது என்பதல்லவா உண்மை.

 

ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதில் சமூக வயமாகவும் அறிவியல் வயமாகவும் பெண்ணின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு குழந்தையிடன் எந்த உரிமையும் இல்லை. கணவன் மனைவி ஒன்றியிருக்கும் போது பிரச்சனைக்கு இடமில்லை, இங்கு அவர்களின் குழந்தையாக இருப்பது, அவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பிரியும் நிலை வந்தால் ஆணின் உடமையாகி விடுகிறது. அதன் பிறகு அக்குழந்தை பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் தாயிடம் பாலருந்துவதற்கு தகுந்த கூலியை வழங்கி விடுமாறு குரான் ஆணுக்கு உத்திரவிடுகிறது. இதையும் குரான் பெண்ணை பெருமைப்படுத்துவதாக சில மதவாதிகள் இறும்பூறெய்துகிறார்கள். ஆனால் இதை விட பெண்ணை, தாய்மையை வேறு யாரலும் கேவலப்படுத்திவிட முடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த வசனம் ஆண்களை அல்லாவின் பாதையிலிருந்து திசைதிருப்பும் அதாவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் பொருட்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது. அந்தப் பட்டியலில் பெண்ணும் இருக்கிறாள், ஆண் குழந்தையும் இருக்கிறது. அதேநேரம் ஆண்குழந்தையையும், பெண்களையும் பட்டியலில் வைத்துவிட்டு மனிதர்களுக்கு என்று பொதுவாக பசப்புகிறது குரான். தங்கம், வெள்ளி, கால்நடைகள் குதிரை போன்ற சொத்துகளின் ஈர்ப்பு ஆணை அல்லா கூறும் நேரான(!) வழியிலிருந்து திசை திருப்பி நரகத்தின் பக்கம் கொண்டு சேர்த்து விடுகிறது என்பது இந்த வசனத்தில் அல்லாவின் அங்கலாய்ப்பு. இந்த பட்டியலில் தான் பெண்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு தான் அல்லா பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு. இதை ஆணாதிக்கம் என்பதல்லாது வேறு என்னவாக மதிப்பிடுவது?

 

இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை தோற்றுவித்தது என்பது இதன் உட்பொருளல்ல. இன்று மட்டுமல்ல இஸ்லாம் தோன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஆணாதிக்க சமூகத்தை இஸ்லாமும் அங்கீகரித்திருக்கிறது. சொத்து, விவாகரத்து போன்றவைகளும் இஸ்லாத்துக்கு முன்பிருந்தே சமூகத்தின் நிரவலில் இருந்திருந்தாலும் இஸ்லாம்தான் அதை முதலில் கொண்டுவந்தது என்று முஸ்லீம்கள் வம்படியாய் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆணாதிக்கம் குறித்தும் அதே பார்வையைக் கொள்வார்களா? அல்லது குரானை யாத்தது முகம்மது இல்லை அல்லாதான் என்றால் அல்லாவின் பார்வை ஆணாதிக்கமாக இருப்பதால் இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை வடிவமைத்தது என்பதை ஒப்புவார்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

304. ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

மேலே உள்ள ஹதீசில் பொதுவாக பெண்கள் எப்படி மட்டமானவர்கள் என சொல்கிறது. பெண்களை பற்றி பொதுவாக சொல்லும்போது “ ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;” என்று சொல்கிறது. இது குரானை அறிந்த முஹம்மதுவே சொன்னது. அப்படியிருக்கும்போது எங்கெல்லாம் சாட்சி என்று வந்து ஒரு பெண் சாட்சி சொன்னால் இருவர்தான் சாட்சி சொல்ல வேண்டும் என்று கூறும் மார்க்க அறிஞ்சர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள்.

கடவுளின் வார்த்தை தெள்ள தெளிவா அர்த்தங்களை புகுத்தமுடியாத எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது கடவுளின் வார்த்தை அல்ல. மனிதனின் உளறல். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்பது மனிதநேயத்திற்கு உகுந்ததைப் போல எறக்கிய வசனத்தை காண்பிக்கும் உத்தியாகும்.

சம்பாதிக்கும், வியாபாரத்தை அறிந்த அனுபவமுள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் சாட்சியம் ஒன்று போதுமா? இல்லாலத்தில் அவ்வாறு பெண்கள் இருக்கும்போது, அல்லா அவ்வாறு இருக்க முடியாது என்று வசனம் எழுதியது தப்புதானே. பெண்களை பற்றி கீழ்தரமான எண்ணம் கொண்டவரால்தான் அப்படி செய்ய எறக்கமுடியும்.

எல்லா வகையிலும் சமமாக இல்லாத ஏற்றத் தாழ்வுடன் ஆண்களை ஒன்றாக வைக்கும்போது, பெண்களை ஆண்களுடன் ஒன்றாக வைப்பதில் அல்லாவுக்கு என்ன குறைச்சல். அல்லாவை ஏற்படுத்திய மனிதரின் குறையா????

வியாபாரத்திற்கு மட்டும்தான் என்று சொல்லுவது ஏற்கதகுந்தது அன்று.

அட கொடுமையே!
அல்லாஹ்வையே முஸ்லீம்களுக்கு அறிமுகப்படுத்திய மொஹம்மது இப்னு அப்தல்லாவுக்கே வேட்டு வைக்கிறாரே இந்த ஹிதாயத்!

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்கி ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்கி (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவாpல் ஒருத்தி தவறினால், இருவாpல் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும் (2:282)

இதிலேர்ந்து என்னா தெரியுதுன்னா ஆணை ஞாபக மறதியில்லாம படைச்ச மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்ன அல்லாஹ் பொன்னுங்களை ஞாபக மறதியோடத்தான் படைச்சிருக்கான்னு அர்த்தம்!

இது கூட தெரியலையா? மொஹம்மத் இப்னு அப்தல்லா எத்தனை தடவைதான் சொன்னத்யே திருப்பி திருப்பி சொன்னாலும் தெரிய மாட்டேங்குதே

இபின் கதீர் சொல்கிறார்:

பெண்கள் பொதுவாக புத்தி இல்லாதவர்களாக இருப்பதினால், இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு ஈடாக ஆக்கப்பட்டது. அபு ஹரையா அவர்களின் வழியே வந்த இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்கிறார். “ஓ பெண்களே. நன்றாக பிச்சை போடுங்கள். நிறைய மன்னிப்பு கேளுங்கள். ஏனெனில், நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களே என்று பார்த்திருக்கிறேன்.” அந்த கூட்டத்தில் இருந்த ஒரு புத்திசாலி பெண் கேட்டாள், “இறைதூதரே, ஏன் அப்படி? ஏன் நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களாகவே இருக்கிறார்கள்?” அவர் சொன்னார்,”ஏனெனில் நீங்கள் நிறைய திட்டுகிறீர்கள். உங்கள் கணவனுக்கு நன்றியில்லாமல் இருக்கிறீர்கள். பொதுப்புத்தியும் உங்களுக்குக் குறைவாக இருக்கிறது. உங்களால் சரிவர மதத்தையும் பின்பற்ற முடியவில்லை. இது தவிர புத்தியுள்ளவர்களின் ஞானத்தையும் காணாமல் அடித்துவிடுகிறீர்கள்” அந்த பெண் கேட்டாள்,” எங்கள் பொதுப்புத்தியில் என்ன குறைபாடு? எங்கள் மத நம்பிக்கையில் என்ன குறைபாடு?”. அவர் சொன்னார், “ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு நிகரானது என்பது உங்களது பொதுப்புத்தியில் உள்ள குறைப்பாட்டுக்கு நிரூபணம். ரமதான் மாதத்திலும் ஒரு சில நாட்களில் (மாதவிடாய் காரணமாக) தொழுமை செய்யமுடியாது என்பது உங்கள் மதத்தில் உள்ள குறைபாடு” என்றார்.

(Tafseer Ibn Katheer, 1/336) தஃப்ஸீர் இபின் கதீர் 1/336

ஏனுங்க ஈமாந்தாரி மூமின் இதாயத்து! மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏற்கெனவேவே முஸ்லிமாக்களுக்கு ஈமானும் கம்மி அறிவும் கம்மினு ஏற்கெனவே சொல்லிட்டு போயிருக்கும்போது அவர் சொல்லவே இல்லைன்னு சாஆஅஆதிக்கிறீயளே? நாயமா?

போற போக்கை பாத்தா மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற ஒரு லூசுன்னு இந்த மூமுனுங்க பதிவெழுதிடுவானுவ போலருக்கே!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உங்களில் ஆணுக்கும் இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் கீழே உள்ள வசனத்தை புரிந்து ஆண்களையும் பெண்களையும் பொதுவாக வைத்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் பெண்களும் நான்கு ஆண்களை திருமணம் செய்து ஒரே சமய்த்தில் கணவராக வைத்து கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டும் என்றால் ஒருவரை திருமண விலக்கு செய்து இன்னொருவரை மணந்து கொள்ளலாம். இஸ்லாம ஆண்களையும் பெண்களையும் சம்மாக நடத்தும் மார்க்கம். பெண்ணடிமை என்பதே இஸ்லாத்தில் கிடையாது. அதற்கு இந்த வசனமே பொதுவாக வைத்து பார்த்தால் ஒரு மாபெரும் அத்தாட்சி.

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

##இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ##

இசுலாம் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, பெண்களுக்கும் ஆன்மா இருக்கு என்று சொன்னது போன்ற பொய்ப் பிரச்சாரங்களைக்கண்டு செங்கொடி மயங்கிவிட்டீர்கள் என்று கருதுகிறேன். முகம்மதுவின் முதல் மனைவி சொத்துடைமையாளராக இருந்து பின்னர் என்னவாக மாறினார்? அபுசுப்யானின் மனைவி பெற்றிருந்த உரிமைகள், போன்றவற்றை இவர்கள் கூறும் வரலாறிலிருந்தே அறிந்து கொள்வீர்களானாலே போதும் இசுலாம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் உரிமைகளை பறித்து வீட்டுக்குள்ளே பூட்டிவைத்த கதையை அறிந்து கொள்ளலாம். மேலும் யூதர்களும் கிறத்தவர்களும் பெண்களுக்கு வழங்கி இருந்த வரலாறுகளை அறிந்து கொள்ள முயற்சியுங்க்ள. அப்பொழுது உங்களின் ‘இதில் பொருள் இல்லாமலும் இல்லை’ இந்த வரிகளின் உண்மை புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. பொய்யின் மறுவடிவமான இபரஹீமே, நான் என்ன பீ.ஜேவா பொய் பேசுவதற்கு.

    //பெண்கள் இரண்டு திருமணங்கள் செய்ய முடியாது என்பதும் செய்யக் கூடாது என்பதும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதால்//

    எந்த குரான் வசனம் அவ்வாறு சொல்கிறது. இட்டுகட்ட வேண்டாம். உங்கள் கதை படி பெண்கள் ஆண்களை போல நான்கு திருமணங்கள் செய்யலாம்.

    இஸ்லாத்தை விளக்க ஏன் சிறுநீர் கழிப்பிடத்தை உதாரணம் சொல்கிறீர். இனம் இனத்தோடத்தான் சேருமோ

    சிறுநீர் கழிப்பிடம் என்று இரண்டுக்கு மேல் அறை இருந்தால், ஆண், பெண் என்று வகைப்படுத்தி இருப்பார்கள். வெறும் சிறுநீர் கழிப்பிடம் என்று ஓர் அறை இருந்தால் தனியாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ செல்வார்கள். இருவரும் செல்ல கூடிய இடம்.

    அந்த வசனத்தில் சிறுநீர் கழிப்பிடம் போல வகைப்படுத்தல் செய்யவில்லை என்று நீங்கள் சொன்ன ஆண் என்றால் பெண்ணுக்கும் பொருந்தும் வசனப்படி பார்த்தால் பெண்களும் ஆண்களை போல திருமணம் செய்யலாம்.

    இல்லாததை சொல்லும் பொய்யரே, எந்த இடத்தில் ஆண்கள் மட்டும் உணவ அருந்தாலாம் என்று இருக்கின்றது. ஒருவேளை டாஸ்மாகை சொல்கிறீர்களோ. அந்த மாதிரி தனியான உணவகம் இருப்பதற்கே வாய்ப்பில்லை. இருக்கின்றவற்றை உதாராணமாக காட்டுங்கள்.

     
  2. கணவன் தன் மனைவியை படுக்க கூப்பிட்டும் அவள் வர வில்லை அதனால் அவன் கோபமாக தூங்கி விட்டான் என்றால் அன்று பொழுது விடியும் வரை மலக்குகள் அவள் மீது சாபம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்றும் இருக்கிறதுஇதன் உண்மையான கருத்து பெண் என்பவள் ஆண்களின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே படைக்க பட்ட ஜீவன்அதை அவள் சொந்த விருப்பு வெறுப்புகளை பாராட்டாமல் ஒரு இயந்திரம் போல செய்ய வேண்டும் என்பதே ஆகும்இது இஸ்லாத்தின் கருத்துக்கள் அல்ல நபிகளின் கொள்கையும் அல்ல அந்த கோணத்தில் சொல்லப்பட்ட விஷயங்களும் அல்ல என்று இஸ்லாமியர்களும் அவர்களின் விசுவாசிகளும் மறுக்கலாம்அப்படி அவர்கள் மறுப்பது உண்மை என்றால் ஒரு இஸ்லாமிய மத பெரியவர் தான் தொகுத்த நூலில் இதை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?அதை பல இஸ்லாமிய பெண்களை படிக்க வைத்து வருவதின் ரகசியம் என்ன?இதற்கெல்லாம் நிச்சயமாக உறுதியான பதில்களை அவர்களால் தர இயலாது என்றே நான் கருதுகிறேன் .

     
  3. தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை….
    இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.
    இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்
    சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது

     
  4. ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார். ‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.‘: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாதுஇவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது.



__________________


Newbie

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர்.

தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.


பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை  உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும்  இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும்  தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம்.

அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.


இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும்
முக்கியமானதாகத் திகழ்கின்றது.


'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
   
கீழ் கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள்.. இந்த இஸ்லாமிய சகோதரி எவ்வளவு அருமையாக விளக்குகிறார்... ஹிஜாப் அணிவது பெண் அடிமைத்தனம் அல்ல... பெண் உடம்பை போகப்    பொருளாக பார்க்க விரும்பும் ஆண்கள் தான் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடுக்க மீடியாக்கள் மூலம் இது போன்ற தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள்...சுயமாக சிந்திக்க கூடிய அறிவாற்றல் பெற்ற எவரும் ஹிஜாப் பெண்களை காக்கும் கேடயம் என்றுதான் கூறுவார்கள்...!!
மீடியாக்களின் தாக்கத்தால் சுய சிந்தனைகளை இழந்தவர்கள் மட்டுமே இதை பெண்ணடிமைத்தனம் என்பார்கள்...
பெண் என்பவள் அவளுடைய அறிவுக்கும் பண்புகாகவும் மட்டுமே மதிக்க பட வேண்டும்... அவள் உடல் அழகை கொண்டு எடை போடுவது அவளை இழிவு படுத்தும் செயல் என்று இந்த சகோதரி கூறுகிறார்... அதுதான் உண்மை.... சிந்தியுங்கள் 
 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

போடுவது என்பதும் ஆண்கள் எவரும் அதனை அவர்கள் மீது திணிக்கவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான பொய்.
ஓ ! நெத்தியடி முகம்மதே நீர்கேளும். நீர் உமது உள்ளத்தில் உள்ளதை மறைத்து பொய் கூறுகிறீர் என்பதும், முழுப்பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க எத்தனிப்பதும் நாம் அறிந்தவற்றில் மிகத் தெளிவானதே. கீழே எழுதப்பட்டுள்ளது உமக்கல்ல. பிற பின்னூட்டக்காரர்களுக்கு.

நம்ம உமரு காலிபா இருக்காருங்களே அவர்தாங்க இந்த பர்தாவை திணிப்பதில் முழு மூச்சாக நினறாரு. அவரு பல தடவை முகம்மது நபியிடம் கட்டாயப்படுத்தினாருங்க. ஒருநாள் முகம்மதுநபி மனைவிமார்களில் ஒருத்தரான சௌதா வீட்டிலேர்ந்து வெளியே மலம் கழிக்க போனாருங்களாம் (வழமையானதே! அப்போவல்லாம் ஊட்ல கக்கூஸ் இல்லீங்க) எந்த நேரத்தில் போனாங்க தெரியுமா? கருக்கல்ல. அந்த கும்மிருட்டுள்ள போனாங்கலாம். அய்யோ இந்த உமருக்கு யார் போறதுன்ன அடையாளம் தெரிஞ்சுட்டதாம். அதனால் வம்படியா சண்டை போட்டார். முகம்மதுநபியும் மௌணமா இருந்துப்பார்த்தார். உமரு விடுவதாக இல்லை. புர்காவை கட்டாயமாகக்கிட்டாருங்க. அதிலேருந்து இது இசுலாமிய பெண்களுக்கு ஷாரியத் சட்டமுங்க. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டாத்தாங்க இசுலாமிய பெண் இல்லைன்னா சொர்க்கத்தில் இடமில்லை நரகம்தான்.

1. இன்று, புர்கா ஆண்களால் திணிக்கப்படுவதில்லை என்று கூறுவது பொய்.

என்னோட கூட பிறந்தவங்க 7பேரு. இரண்டு பேரு பெண்கள். என் தாய் இறக்கும்வரை பர்தா அணிந்ததில்லை எனது சகோதரிகளும் தனது ஏறக்குறைய 33, 35 வயதுவரை அணிந்ததில்லை. எங்களுக்கெல்லாம் மூத்தவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துவது வழக்கம் ஏன்னா தன்னுடைய 18 வயதிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பத்தில் அளப்பரிய தியாகம் செய்தவர். அவரும் தனது 35 வயதுவரை குடித்துக்கொண்டு இருந்தவர்தான். ஆனால் திடிரென்று பக்தியோ பக்தி புடிச்சிக்கிருச்சி. அதிலிருந்து எல்லாரையும் புர்கா போடச் சொல்லிட்டாரு. என்னுடைய அண்ணியர்கள் எவரும் அதுவரை புர்கா அணிந்ததில்லை. அதிலும் எங்களின் மூத்தவரின் மனைவி தலையில் முக்காடு கூட போடமாட்டார்கள். இந்த முக்காடு போடாதற்காக எங்க அண்ணி வாங்கிய அடிகளும் எங்க அண்ணன் தன்னைதானே காயப்படுத்திக் கொண்டு வருத்திக்கொண்டதும் ஏராளம்.

ஏன் எங்கள் குடும்பம் புர்கா அணியவில்லை? எங்கள் ஊரில் அது வழக்கமில்லை. தென் மாவட்டங்கள் எதிலும் இந்த பழக்கமில்லை. பொதுவாக இசுலாமியர்கள் என்று சொன்னதும் பலருக்கும் எளிதாக நினைவு வரும் ஊர் கீழக்கரை. (இந்த ஊருல அவுங்க தெருவுல அன்னிய ஆண்கள் நுழையக்கூடாதுன்னு தடை இருக்கு. ஒரு அறிவிப்பு பலகையும் உண்டு.) காயல்பட்டிணம், முத்துப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ஊர்கள் இந்த ஊர்களில் எவரும் புர்கா ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணிந்ததில்லை. வாணியம்பாடி உருது முஸ்லீம்கள் தவிர). பொதுவாக தமிழ் முசுலீம்கள் அணிவதில்லை.
கேரள பெண்கள் விஷயம் முற்றிலும் வேறு. அவர்கள் முக்காடு போட்டாலும் அங்குள்ள பண்பாட்டைச் சார்ந்து மாராப்பு போடுவதில்லை. புர்காவும் கிடையாது.

எங்கள் குடும்பம் எங்கள் ஊரில் கண்ணியமிக்க குடும்பத்தில் நம்பர் 1 இசுலாமிய சட்டங்களில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது, இந்த கழிசடை ஊர் சுற்றி சுமஜ்லா போலில்லாது (அப்படி நான் சொல்லஙீங்க. இசுலாம் சொல்லுது) பெண்கள் வீணாக வெளியில் சுற்றுவதில்லை என்பது போன்ற அனைத்தையும் கறாராக கடைபிடித்தவர்கள். எனது தாத்தா பட்டம் பெற்ற ஆலிம். எனது தந்தை பட்டம் பெறாவிட்டாலும் இமாமாகவும் அரபி போதராகவும் பணியாற்றியவர் (35 வயதுக்குமேல்)

இப்பொழுது என் சகோதரிகள் தாங்கள் விரும்பியே புர்கா அணிகிறோம்; எவரும் கட்டாயபடுத்தவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.

எனது உறவுக்காரர் ஒருவர் தனது பருவமடையாத 11வயது மகளுக்கு பர்தாவின் கண்ணியத்தை திணித்துள்ளார் என்பது இதன் புதிய பரிணாம வளர்ச்சி.பெண்கள் அவர் விரும்பியே பர்தா

2. கண்ணியம் எங்குள்ளது?

மதுரையில் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பம் கிரானைட் அவர்களது தொழில். தந்தை மகன் ஆளாலுக்கு தனிகார்களும் உண்டு. அவர்கள் குடும்பத்துடன் ஒரு சேட்டுக்கு ( கிரானைட் வியாபாரிதான்) நட்பு ஏற்பட்டது. அவர் வீட்டுக்கு வர போக இருந்தார். மகனின் மனைவிகூட அவரிடம் சகஜமாக உரையாடுவார்.

ஒருநாள் மகனின் மனைவிக்கு ஒரு தனிக்கார் வீட்டிற்கு வந்தது. அது பற்றி அவரது மனைவி “சேட் அன்பளிப்பாக” வழங்கியதாக கூறியுள்ளார். அந்த மனைவி அடிக்கடி தனது தோழிகளை காண வெளியில் செல்வாராம். இப்பொழுது காரில் செல்லலானார். அதுவும் அதிகமாகியதால் மகனின் மனதில் ச்நதேகம் தோன்றியது. கார் அன்பளிப்பு மனதை உறுத்தியது. ஒருநாள் மனைவி வெளியில் செல்லும்போது தானும் அவருன்னுடன் வருவதற்காக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவி சாக்குபோக்கு சொல்லி தடுத்துவிட்டார். அவரது மனம் நிலைகொள்ளாமல் குளம்பியது. தாங்கமுடியாத மனஉலைச்சல். ஒருநாள் மனைவி வெளியில் செல்லும் போது அவளரறியாத பின் தொடர்ந்தார். மனைவியின் கார் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைகிறது. பொருத்திருந்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டார். சில மணிதுளிகள் அவருக்கு நகர வேதனையாக நகர்கிறது. அந்த சில மணிதுளிகள் கடக்கும் வரை அவரது உடல் படபடக்கிறது. பிறகு மெதுவான வரவேற்பை அனுகி விவரம் கூறி அறை எண்ணை தெரிந்துகொண்டு வேகமாக விரைகிறார். அறையை அடைந்து கதவை தட்டுகிறார்
. தாம் இருப்பது தனது கணவருக்கு தெரியாது என்பதில் எள்ளளவும் அந்த மனைவிக்கு சந்தேகமே இல்லை. அதனால் வேறு யாரோ ஹோட்டல் தொழிலாளியாக இருப்பார் என்று அவரது மனைவி கதவை திறக்கிறாள்.

மனைவியின் அழகில் வாலிப மிடுக்கில் கிறங்கி தனது செல்வத்தினை உள்ளம் உவக்க நனையச் செய்து, தனது மும்தாஜியாக பெருமையுடன் இணைந்து உலா வந்த அந்த மகன், தன் மனைவி கதவை திறந்த்தை கண்டு சில வினாடிகளில் கண்ணாடிபோல நொறுங்கினாலும் மறுகனமே ஆத்திரம் உச்சந்தலையை சூடாக்க உள்ளே இருக்கும். சேட்டை, அந்த அயோக்கிய காஃபிரை எதிர்பார்த்து ஆவேசமாக உள்ளே நுழைகிறார்.
அங்கே அதிலும் பெரும் அதிர்ச்சி!! கல்லாக உரைகிறார்!! அங்கே காண்பது கனவா நினைவா?
ஆம்! உள்ளே இருப்பது சேட் அல்ல தாடியும் தொப்பியுமாய் சொல்லுக்குச் சொல் மாஷா அல்லாஹ் (அல்லா அற்புதமானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வின் கருனையால்) என்று சொல்லும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவரது…..
தந்தை!
மறுநாள் அந்த இசுலாமிய “மகன்” தூக்கில்தொங்கிக் கொண்டிருந்ததை நாளிதழ்கள் வெளியிட்டன.

சுமஜிலா நீங்கள் உங்கள் தந்தையின் முன்பும், மாமனார் முன்பும், வீட்டினுள் இருக்கும் போதும்கூட பர்தாவில் இருந்தால்தான் கண்ணியமாக இருக்கும்.

தவறு எங்கே உள்ளது? 
எந்த பெண் வெளியில் செல்கிறார் என்று தெரிந்தால் என்ன?
வெளியில் செல்ல தடை விதித்தலில் தவறு உள்ளது.

பெண்கள் பள்ளிவாசலில் தொழுக வந்தால் என்ன?
உமரின் சாட்டையை கேளி செய்தவர்களை விளாசித்தள்ளாதலில் தவறு உள்ளது.

பெண்கள் புர்கா அணியாமல் வெளியில் வந்தால் என்ன?
சுமஜ்லா போல் அதற்கு உண்மைக்கு புரம்பான விளக்கங்களை கூறி பெண் இனத்திற்கே துரோகம் செய்வதில் தவறு உள்ளது.

பர்தாவோ புர்காவோ ஆணின் பாலியல் வக்கிர புத்தியை அடித்து நொறுக்காதவரை பெண்கள் வன்உணர்வின் மிரட்டலில்தான் வாழ முடியும்.
<A href ="http://www.paraiyoasai.wordpress.com&quot;



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-17

 

PAEDOPHOLIA -1
நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்ததுமேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன்முஹம்மது நபி (ஸல்அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியதுஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லைஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.
For+sale.jpg

அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.
புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்அவர்கள் அபூபக்ர் (ரலிஅவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறுவயதினருமானஆயிஷா (ரலிஅவர்களைப் பெண் கேட்டார்கள்அதற்கு அபூபக்ர்(ரலிஅவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள்அதற்குநபி (ஸல்அவர்கள்அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின்அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்உங்களுடைய புதல்வி எனக்குஹலால் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.
மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறுதாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில்முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160). 
CS-1.jpg
 
புகாரி ஹதீஸ் -3894
ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது.
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்அவர்கள் என்னை மணந்துக்கொண்டார்கள்பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம்தங்கினோம்எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தனபிறகு(என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டதுநான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலிஅவர்கள் என்னிடம் வந்துஎன்னை சத்தம் போட்டு அழைத்தார்கள்நான் அவர்களிடம் சென்றேன்அவர்கள்என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாதுஅவர்கள் என்கையைப் பிடித்து (அழைத்துச் சென்றுவீட்டின் கதவருகே என்னைநிறுத்திவிட்டார்கள்நான் (வேகமாக வந்ததால்எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே,அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகுஎன்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள்அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள்இருந்தார்கள்அவர்கள்நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின)நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்கூறினர்உடனே என் தாய் என்னைஅப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத்தயார்படுத்திவிட்டார்கள்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் முற்பகல் வேளையில்திடீரென வந்தார்கள்அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர்நான்அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.
முஹம்மது நபி (ஸல்ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும்அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.
Fresh+meat.png

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திஅதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர்தனது மகளை விட பதினொரு வயது சிறிய ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.
 
CS-2.jpg

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்றஇணையதள  கட்டுரையிலிருந்து…
Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.
A. He was a Paedophile.
B. He was involved in child abuse.
Let's analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).
A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?
முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder)மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம்  சாட்டப்படுகிறார்.
Paedophile – சிறுகுறிப்பு
Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பதுவயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர்இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                                               
 Brittanica encyclopedia 2008
கண்டறியும் முறை:
      குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல்இந்த வற்புறுத்தல் காரணமாக அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார்இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.
DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3, (American Psychiatric Association).
Child abuse– சிறுகுறிப்பு
சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல்மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது.அவர்களுக்கு உணவுஉறைவிடம்மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல்.அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சிகற்கும் திறன்மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்
CS-3.jpg
விவாதம்
Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர்.ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில்ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்அவர்களை, Paedophileஎன்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள்ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லைநேர்மாறாக தோற்றத்திலும்அறிவிலும்ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார்மேலும் நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதளகட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.
முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்
 (Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 
(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால்இவளைத் திருமணம் செய்வேன்". ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபிஇறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)
Musnad Ahmad: 25636
Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, "If she grows up while I am still alive, I will marry her." 
(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால்இவளைத் திருமணம் செய்வேன்". என்று கூறினார்)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்
நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.
மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?
சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?
உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலைவாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர்.அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு 'அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.
முஸ்லீம் ஹதீஸ் எண் 2780
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன...
அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார்ஆனால் முஹம்மது நபி விபரீதமான,வினோதமான பொம்மையை வைத்து விவகாரமாக விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லைஎனவேதான் இச்சம்பவத்தை "அதிர்ச்சியளித்தார்என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.
புஹாரி ஹதீஸ் : 6130
ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,
நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள்.தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.
 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)
Islamic Q&A  எனக்கு அளித்த பதில்
". . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . ." [al-Talaaq 65:4]

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.
Al- Muhallab said: "[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman."
(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)
அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?
குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும்,அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.
திருமணத்திற்கான வயதெல்லை? 
பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின்சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும்மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமியதிருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்படநூலளவும் வாய்ப்பில்லை.
விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதிஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும்ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும்,அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).
 ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் ‘அதிர்ச்சியளித்ததாக’எந்த விதமான செய்தியும் இல்லைமிகச்சரியாக சொல்வதென்றால்ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.
 

 

CS-4.png
 
அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?
நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர்அவர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?
முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,
புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்அவர்கள் அபூபக்ர் (ரலிஅவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறுவயதினருமானஆயிஷா (ரலிஅவர்களைப் பெண் கேட்டார்கள்அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …
பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும்கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?
"ஆம்" என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)
 இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?
முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
 அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…? (எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான "அந்த" செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் "தொடைவேலைகளும்" இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்).
அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்இதில் தவறொன்றுமில்லை என்றால்அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி  அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?
(2008-ல் நேரடியாக விவாதிக்க TNTJ வின் தரப்பிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் அவர்கள் பேசிய முறைமையும், விஷயத்தை கையாண்ட விதமும் என்னை சிந்திக்கவைத்தது. எனவே ஏற்படப்போகும் விளைவுளை நினைத்து தவிர்த்துவிட்டேன்.)
          முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.
நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….
என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால்முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம்.ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான்இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.
தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும்தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும்மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும்நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.


__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard