New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் -அந்தணர் யார்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறள் -அந்தணர் யார்?
Permalink  
 


திருக்குறள் -அந்தணர் யார்?

 

திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் - வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.

மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

 

நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.

 

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

 

பரிபாடல்2:

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க, 
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
 


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, 
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை 
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, 
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, 
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80 

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், 
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, 
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் 
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் 
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85 

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, 
வையை! நினக்கு மடை வாய்த்தன்று. 
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து, 
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர் 
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90 

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? 
நீ உரைத்தி, வையை நதி!
 


மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர். 
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய். 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது. 

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் 
தலைவன் கூற்று 
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

தணிவின்று, வையைப் புனல். 50


தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

என ஆங்கு-


பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு.

'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'

ஐயர், வாய்பூசுறார், ஆறு.

-பா¢பாடல்-திரட்டு 2:50-63 
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது. 


மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மதுரைக் காஞ்சி

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலமமர் வையத் தொருதா மாகி . . .470


உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

``தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656

 

திருமுருகாற்றுப்படை

2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்
,

4. திரு ஏரகம்

அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180


மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் 
பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து 
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

 

பெரும்பாணாற்றுப்படை

செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு 499

 

பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
 . . . .300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்

அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.

 

பதிற்றுப்பத்து

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்'' - 24)

 

பாட்டு - 74

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

 

அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

 

அந்தணர் - பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.

நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அனால் திருவள்ளுவரோ

குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது

விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.

குறள் 413: கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது

வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.

வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன்தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.

அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.

வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, 
நாகம் நாணா, மலை வில்லாக, 
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, - 25 


மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் 
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் 

உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு - 30
(Paaaripādal, Chapter 5)

 

மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொல்காப்பியம்-செய்யுளியல்480

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே 2மந்திரம் என்ப.

என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

 

உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது."புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்

திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்

சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.

Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss. ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry, 
And Brahmans' sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

 

குறள் 1066:

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.

 

மு.வ உரை:

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! 
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார்,முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......

என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.

திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

மறை (37) in Sangam Liturature
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - திரு 186
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் - பெரும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் - பெரும் 301
மறை அலர் ஆகி மன்றத்தஃதே - குறு 97/4
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி - பரி 2/63
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை/ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் - பரி 3/14,15
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி 21/4
மறை ஆடுவாரை அறியார் மயங்கி - பரி 24/29
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப - பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை - கலி 25/23
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை/பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் - கலி 25/23,24
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் - கலி 42/28
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து - கலி 52/1
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட - கலி 84/10
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் - கலி 86/28
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி - கலி 103/38
பாட மறை நின்று கேட்டனன் நீடிய - கலி 131/42
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை - கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை - கலி 133/12
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் - அகம் 48/24
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி - அகம் 62/6
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை/அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று - அகம் 98/24,25
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென - அகம் 136/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே - அகம் 136/29
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து - அகம் 303/1
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய - புறம் 35/20
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் - புறம் 60/11
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை/நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/12,13
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு - புறம் 243/5


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

அந்தணர் (28)
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
அந்தணர் காணும் வரவு - பரி 2/68
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20
அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

 மேல்
 
    அந்தணர்க்கு (3)
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5

 மேல்
 
    அந்தணரதுவே (1)
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே/வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4

 மேல்
 
    அந்தணன் (8)
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7

 மேல்
 
    அந்தணாளர் (1)
ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9

 மேல்
 
    அந்தணாளன் (1)
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12

 மேல்
 
    அந்தணிர் (1)
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்/நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2

 மேல்
 
    அந்தணீர் (2)
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி 9/4,5


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கற்பின் (33)
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் - திரு 6
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் - சிறு 30
சிறு_மீன் புரையும் கற்பின் நறு நுதல் - பெரும் 303
மாசு இல் கற்பின் மடவோள் குழவி - நற் 15/7
முல்லை சான்ற கற்பின்/மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே - நற் 142/10,11
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4
விளங்கு நகர் அடங்கிய கற்பின்/நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே - குறு 338/7,8
அருந்ததி அனைய கற்பின்/குரும்பை மணி பூண் புதல்வன் தாயே - ஐங் 442/4,5
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் - பதி 16/10
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்/குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் - பதி 31/24,25
உலகம் தங்கிய மேம்படு கற்பின்/வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து - பதி 59/8,9
காமர் கடவுளும் ஆளும் கற்பின்/சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ - பதி 65/9,10
மீனொடு புரையும் கற்பின்/வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே - பதி 89/19,20
ஆறிய கற்பின் தேறிய நல் இசை - பதி 90/49
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் - பரி 5/46
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என - அகம் 6/13
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் - அகம் 9/24
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய - அகம் 33/2
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் - அகம் 106/11
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்/அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் - அகம் 114/13,14
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் - அகம் 198/12
முல்லை சான்ற கற்பின்/மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே - அகம் 274/13,14
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/5
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ - புறம் 3/6
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி - புறம் 122/8
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் - புறம் 163/2
மறம் கடிந்த அரும் கற்பின்/அறம் புகழ்ந்த வலை சூடி - புறம் 166/13,14
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்/மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே - புறம் 183/9,10
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/13
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை - புறம் 249/10
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் - புறம் 361/14

 மேல்
 
    கற்பினாட்கு (1)
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் - கலி 9/22

 மேல்
 
    கற்பினாள் (3)
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் - கலி 2/13
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்/தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை - கலி 2/21,22
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்/நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என - கலி 16/20,21

 மேல்
 
    கற்பினின் (1)
கற்பினின் வழாஅ நன் பல உதவி - அகம் 86/13

 மேல்
 
    கற்பு (5)
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் - பதி 70/15
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை - பரி 9/81
காமம் கள விட்டு கை கொள் கற்பு_உற்று என - பரி 11/42
காணிய வம்மோ கற்பு மேம்படுவி - அகம் 323/7
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல - புறம் 383/13


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யுகமாயினி : டிசம்பர் 2007 இதழில் (பக்கங்கள் 20-24) வெளியான என் கட்டுரையின் சுருக்கப்படாத மூல வடிவம்
அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
"இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவகசிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம்.."
மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப்பூசி விட்டனர்' என்று கொள்கிறேன். திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.
அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே!
இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண / தமிழ் அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.
1. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்காத சமணர்தம் அத்திநாத்தி வாதம் என்ற ('உளது இலது' என்று ஐயம் தொனிக்கும்) ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது.
2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சுட்டுவதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சி ஆங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவரே அல்ல என்பது தெளிவு.
3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.
4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மன்னன் முறை தவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.
6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி *அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன் உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள் செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533
கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்* நல்லான் அடக்கமுடையான் நடுச்செய வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554
இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன:
தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.
‘எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், ‘எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர். அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் இந்தக் பாவுக்கு (குறள்-9) உரையெழுதுகிறார்.
8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும்.
காட்டாய்: 'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245) என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை,
'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே' என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே, 'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு' என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.
9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற் சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* தொடர்புடைய குறள்: மெய்யுணர்தல் - 367
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டின தொன்றுமே வேண்டுவது - வேண்டினது வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
* தொடர்புடைய குறள்: அவாவறுத்தல் - 362
சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும். இது மட்டுமின்றி சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடியதெனப் போற்றப்படும் 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:
'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)
10. இறுதியாய் ஒன்று. அகிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அகிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதும் விட்டேம் என் பார்க்கும் நிலை’ என்று சமணம் முதலிடத்தில் வைக்கும் துறவறத்தை தொழில் செய்வோர்க்குப் பின்னேயே வைக்கிறார்.
வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்லவில்லை.
புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?
'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே.
அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.
புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும்.
ஆயின் அவர் பெரும்பான்மையினரா?
என்றுமில்லை. அவரே சொல்கிறார்:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!
பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம். தமிழர் பரவிய பண்டைத் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை இன்றும் காண்கிறேன்; குறிப்பாய் உணவுப் பழக்கங்களில்.
காட்டாய் ஒன்று:
'சாடே' என்னும் பண்டம் நிணத்தைத் தீயில் வாட்டிச் செய்வது. தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் மிகப் பிரபலமானது. இதன் மூலம் தமிழ்தான்.
இதன் செய்முறையை சேக்கிழார் பெருமான் பாடுகிறார்:
வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவ சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகிலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவார் ஆனார்
இப்படி, ‘கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்கு அழலுறு பதத்திற் காய்ச்சி’ ஆக்கும் இந்தப் பண்டம், இப்பகுதிகளில் பண்டைத் தமிழர் அறிமுகப்படுத்தியது என்பதற்குச் சான்றாய் 'சாடே' (மூலம் 'சதை' ) என்ற பெயரிலேயே இன்றும் வழங்கப் படுகிறது.
'சாடே' மட்டுமின்றி இன்னும் பல பண்டங்கள் இருக்கின்றன. நம்மூரில் கணபதிக்குப் படைக்கும் மோதகம் என்ற கொழுக்கட்டை கூட 'புகிஸ்' (Google: Kue bugis) என்ற பெயரில், மாவினில் தேங்காய், வெல்லம் கலந்து செய்த பூரணத்தை வாழையிலையில் சுருட்டி வேகவைத்து ஆக்கப்படும் பண்டம். இன்றும் பண்டிகைக் காலத்தில் ஜாவானியர் வைக்கும் படையலில் முதன்மைப் பண்டமிது.
திருக்குறளுக்குத் திரும்புவோம்.
ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, அதி அகிம்சை சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.
காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)
அன்புடன்,
ஜாவா குமார்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

அந்தணர் (2)THOL KAAPPIYAM
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் - பொருள். கற்:5/15

 மேல்
 
    அந்தணர்க்கு (1)
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - பொருள். மரபி:70/2

 மேல்
 
    அந்தணாளர்க்கு (2)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு - பொருள். மரபி:72/1
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே - பொருள். மரபி:82/1

 மேல்
 
    அந்தம் (5)
இ என அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல். கிளவி:4/4
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் - பொருள். கற்:5/16
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் - பொருள். கற்:6/24
அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் - பொருள். பொருளி:49/1
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே - பொருள். மரபி:3/4


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்ச்சொல்

March 4, 2009

”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து, இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.

”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,

 “வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,

 ”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.

”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 ”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.

 ”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,

“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.

”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நான் வள்ளுவன்பால்  ஈடுபாடு கொள்ள முக்கிய காரணங்கள், உயர் கருத்துக்களை ஏழே வார்த்தைகளில் சொல்ல முடிந்த Communication Skill மற்றும் மொழியின் ஆளுமை.

”ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு” (குறள் 190)
என்ற அறத்துப்பால் குறளிலும்

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”  (குறள் 383)
என்ற பொருட்பால் குறளிலும்

“தஞ்சம் தமரல்லர் ஏதிலர் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி” (குறள் 1300)
என்ற இன்பத்துப்பால் குறளிலும் உள்ள கருத்து எந்நாட்டவர்க்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை வாய்ந்தவை.

வள்ளுவன் எந்த சமயத்தையும் தழுவாது எல்லா சமயத்துக்கும் பொருந்தும்படியே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், திருக்குறள் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

இதையே, மாமூலர் திருவள்ளுவமாலையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”.

அதாவது, திருக்குறள் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி உலக முழுமைக்கும் பொருந்தும் என்ற பொருளில் பாடுகிறார் மாமூலர்.

உலகில் எந்த சமயத்துக்கும்,எந்த நாட்டினர்க்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கிய நூலை வள்ளுவன் இயற்றிய காரணத்துக்காகவே, பாரதி ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்று மார்தட்டுகின்றான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வாய்மொழி (23)

இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774

வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9

காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5

வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2

நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12

வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68

மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11

வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12

வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64

வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25

வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16

கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11

மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9

நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17

வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8

வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5

வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10

வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5

வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 

 வாய்மொழியால் (1)

 

பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

டெல்லி பல்கலைக்கழக முன்னாள்தமிழ்த்துறை தலைவர் முனைவர் டாக்டர் சிவப்பிரியா அம்மாவின் "நெற்றியடி" பதிவு

யார் தமிழர் ? யார் தமிழர் விரோதி ?

பார்ப்பன வாகை (தொல்காப்பியம்) என பார்ப்பனர்களது வெற்றியைப் பாடுவதற்கு என்றே தனித்துறை வைத்துப் பிராமணர்களைப் போற்றிப் பாடுபவர்தான் தமிழர். 
பார்ப்பனர்களைத் தூற்றுபவர் தமிழர் விரோதி.

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறிகிலையே (புற நானூறு) 
என்று பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்காதவர்தான் தமிழர். பார்ப்பனர்களைத் தாக்கிப் பழிப்பவர் தமிிழர் விரோதி.

கோயிலொடு நிறீஇ, 
நல்லானோடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசுபதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை) .

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர் (புறநானூறு) .

என கோயில் கட்டியும் பசுக்களையும் காளைகளையும் பாதுகாத்தும் வேதம் ஓதும் வேதியர்களின் புகழ் பரவச் செய்தும் தான தர்மங்கள் செய்தும் இறந்த முன்னோர்க்கு திவசம் செய்தும் புண்ணியத்திலிருந்து தவறாத பக்தி வாழ்க்கை வாழும் தங்கமான மனிதர்தான் தமிழர்.

கோயிலையும் வேதம் ஓதும் வேதியர்களையும் தூய அர்ச்சகர்களையும் அடியார்களையும் மிகக் கீழ்த்தரமாகத் தாக்கிப் பழித்து சல்லிக்கட்டு நடத்திக் காளைகளைத் துன்புறுத்தி நாத்திகச் சாக்கடையில் மூழ்கிப் பாவ வாழ்வு வாழ்பவர் தமிழர் விரோதி.

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் (திருக்குறள்) 
என உலகத்தவர் உண்டு என்று சொல்லும் கடவுளை இல்லை என்று மறுப்பவர் தமிழர் அல்லர் மனிதர் அல்லர். 
தமிழரோடு மனிதர்களோடு வாழ முடியாத பேய்களே.

கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான் தாளை வணங்காத்தலை (திருக்குறள்)

என எட்டு சிறந்த குணம் உள்ள ஈசனை வணங்காத நாத்திகத் தலை கண் காது உள்ளிட்ட ஐம்பொறி உள்ள தமிழர்த் தலை அல்ல, இவை எதுவும் இல்லாத பொம்மைத் தலையே.

அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் (சம்பந்தர்) .

செந்தீ முதல்வர் அற நினைந்து வாழ்தலும் --- திங்கள் மும்மாரிக்கு வித்து (திரிகடுகம்) .

என வேத மந்திரம் ஓதி யாகம் செய்து மழை பொழியச் செய்து உலகத்திற்கு நன்மை செய்யும் பார்ப்பனர்களின் அறச் செயலை எண்ணி வாழ்பவர் தமிழர். 
பார்ப்பனர்களைத் தூற்றுபவன் தமிழர் விரோதி நாட்டில் நல்லது செய்ய விடாமல், மழை பொழிய விடாமல் கெடுக்கும் தேசதுரோகி.

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி (சம்பந்தர்) ,

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தற்கு (சுந்தரர்),

தென் தழிழ் விளங்க வந்த திருக்கழுலத்தான் ( சேக்கிழார்) ,

என சம்பந்தர் என்ற கௌணிய கோத்திர பிராமணர் தோன்றி ஊர் ஊராக கிராமம் கிராமமாகச் சென்று இன்னிசை பாடித் தமிழ் வளர்க்கவில்லை என்றால் தமிழும் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சார மரபுகளும் என்றோ அழிந்திருக்கும்.

இன்று தமிழ் மொழியும் இருந்திருக்காது இசை நடனம் முதலிய தமிழர்ப் பண்பாட்டுக் கலாச்சாரமும் இருந்திருக்காது.

தமிழ் துரோகிகளெல்லாம் தமிழர் தமிழர் என்று வாய் கிழியப் பேசி அலற முடியாது.

இன்று தமிழ் மொழி வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் சம்பந்தர் மற்றும் மாணிக்க வாசகர் ,சுந்தரர் ஆகிய சிவாச்சாரிய குலத்தவர்களே. அர்ச்சகர் குலத்தவர்களே.

அன்றிலிருந்து இன்று வரை தழிழைக் காப்பவர் பிராமணரே.

பொதியில் முனிவன் தமிழ்ச்சங்கம் (கம்ப ராமாயணம்)
என அன்று மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் அகத்தியர் என்ற வட நாட்டு ஆரிய மொழிப் பிராமணரே.

சங்க நான்மறையவர் நிறை தர (சம்பந்தர்)
பொய்ம்மை இல்லாத் தமிழ்ச் சங்கம் அதில் கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர் (நம்பியாண்டார் நம்பி) .
என சங்கத்தில் நிறைந்திருந்த கபிலர் முதலிய சங்கப் புவர்கள் அனைவரும் வேதம் ஓதும் பிராமண குலத்தவர்களே. சங்க காலத் தனிப்பாடல் தொகுப்பான பத்துப்பாடு எட்டுத்தொகையில் மிக அதிகமான கவிதைகளை இயற்றிய பாரி நண்பர் கபிலர் முதலியோரும் அந்தணர்களே.

சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே, 
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (திருமந்திரம்),

என தமிழில் வேத ஆகம நூலை எழுதிய திருமூலர் வடநாட்டிலிருந்து வந்த ஆரிய மொழிப் பிராமணரே.

தமிழும் தமிழர்ப் பண்பாடும் பாதுகாத்த வளர்த்த தேவாரத் திருமுறைகளைச் சமணர்கள் தேடித்தேடி அழித்தபோது அவற்றைப் பாதுகாத்தவர்கள் தில்லைவாழ் அந்தணர்களான அர்ச்சகர்களே.

தேவாரத் திருமுறைகளைத் தேடி எடுத்து உலகிற்கு அளித்தவர் நம்பியாண்டார் நம்பி என்ற அந்தணரே அர்ச்சகரே.

தமிழ்ச் சுவடிகளை யெல்லாம் தேடி எடுத்து அச்சேற்றியவர் உ.வே. சாமிநாத ஐயர் என்னும் பிராமணரே.

தமிழின் பெருமை பாடி தேச பக்தி வளர்த்த பாரதியாரும் பிராமணரே.

ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் (சம்பந்தர்) 
என அன்றும் இன்றும் ஆரியம் மற்றும் தமிழின் பெருமை அறியாமல் அந்நியருக்கு அடிமையாகும் மொழிக் குருடர்கள் மொழி வெறியர்கள் தமிழ் விரோதிகள் கள்ள உறவு கொள்ளும் காமுகர்கள் வேசியர்கள்.

வேசியர்களுக்குப் பிறந்தவர்கள் வேசியருக்குப் பிறந்த அந்நிய மதத்தை போற்றிக் கொண்டாடுபவர்கள் முப்பது வயது வரையிலும் மூளை வளராமல் முதுமை சாவு முதலிய சர்வ சாதாரணச் செய்தியும் அறியாத பிறவிப் பைத்தியமான வட நாட்டு மதத்தை போற்றுபவர் ,

கிழ வயதில் இளம் பெண்ணை மணக்கும் சமூக விரோதியை மகா தேவ மொழியாகிய தழிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பழித்துத் தெய்வீகத் தமிழ் இலக்கியங்களையெல்லாம் குப்பை என்று தூற்றிய தமிழ்துரோகியை அவரைக் கொல் இதை இடி என்ற கொடிய பயங்கரவாதியைப் "தலைமேல் வைத்து " கொண்டாடும் கயவர்கள் எல்லாம் கொச்சைத் தமிழ் நூல்களைப் பாடமாக வைத்துத் தழிழை அழிக்கின்றனர்.

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கொலை செய்கின்றனர். தமிழ் துரோகிகளான இவர்கள் தங்களைத் தமிழர் தமிழர் என்று குடிகாரப் பைத்தியம் போல் பிதற்றித் தமிழர் அனைவரையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகின்றனர்.

சிவார்ப்பணம் .



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 யாரெல்லாம் பூணூல் அணியலாம் ?

.
.
.
.
கேள்வி-1: பூணூல் பிராமணர்கள் மட்டுமே அணிய வேண்டியதா?

பதில்: இல்லை. இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும்அணிந்திருந்தனர்.

கேள்வி-2: பூணூல் ஏன் பிராமணர்களிடையே மட்டுமே அணியும் வழக்கமாக இருக்கிறது?

பதில்: இது ஈவெரா ஏற்படுத்திய குழப்பத்தால் ஏற்பட்ட நிலை. பிராமணர்கள் ஆசிரியராகவும், இறைப்பணியிலும் இருந்த அந்தணர்கள் ஈவெராவினால் விழைந்த குழப்பத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நமது பாரம்பரியத்தை இன்னும் இறந்த பாரம்பரியமாக மியூசியம் சென்று விடாமல் காக்கின்றனர்.

செட்டியார், ஆசாரியார் என பிராமணரல்லாதவர்களும் பூணூல் அணிகின்றனர்..
.
கேள்வி-3: பூணூல் எனும் அடையாளம் சொல்வது என்ன?

பதில்: பூணுல் என்பது மூன்று நூல் ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படுகிறது. இந்த முடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும். பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும். முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல் கயிறுகள் உபநயனத்தின் போது அணிவிக்கப்படுபவருக்கு அவரால் தப்பிக்க முடியாத, மூன்று பிரிக்க முடியாத சமூக பந்தங்களையும், அதற்குச் செய்நன்றி காட்ட வேண்டிய கடமையையும் அந்த நபர்க்கு உணர்த்துவது.

பூணூலின் முதல் நூல் கயிறு: வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் இரண்டாம் நூல் கயிறு: தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் மூன்றாம் நூல் கயிறு: தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இந்த மூன்று விதமான நன்றிக் கடன்களை ஒருவன் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும்?

குருபரம்பரைக்கான நன்றிக்கடனை அவர்கள் அருளிய வேதம், வாழ்வியல், உபநிடத்தத்துவங்களைக் கற்று அறிந்து சமூகத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்து கொண்டு வழி வழியாக இந்த நல்ல நெறிகள் தழைக்க தானும் இரு கருவியாகப் பயன்படுவதன் மூலம் குரு பரம்பரைக்கான நன்றி திருப்பிச்செலுத்தப்படுகிறது..
.
குலப் பரம்பரைக்கான நன்றிக்கடனை முன்னோர்கள், பெற்றோர் நற்சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலமும், முறையான வகையில் தன் சந்ததியைப் பெருக்குவதன் மூலமும் சமூகத்தில் நெறியான வாழ்வு வாழ்ந்து காட்டுதல் மூலமும் கருவியாக ஒருவன் செயல்படுவதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது. மூன்றாவதான தேவதை (இயற்கை) களுக்கான நன்றிக்கடனை நதி, குளம், ஏரி என நீரை, ப்ராணவாயு நிறைந்த காற்றை, பூமியை, ஆகாசத்தை, நெருப்பு சக்தியை அசுத்தப்படுத்தாமல் பயன்படுத்தி அடுத்ததலைமுறைக்கு நீர், நில, காற்று, வெளி,வளங்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் வண்ணம் வனம் அழிக்காது மரம் வைத்து என பஞ்ச பூத தேவதைகளிடமிருந்து தான் பெற்று வாழ்ந்ததை தான் உருவாக்கிய அடுத்த தலைமுறை அதே செறிவோடு பயன்படுத்த தர ஒருவன் தன்னைக் கருவியாக்கிச் செயல்படுவதால் தேவதைகளுக்கான நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

ஆக பூணூல் அணிவது எனும் சடங்கு மூலம் பாலகனாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு அவனுக்கான கடமைகள் என்ன என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வான உபநயனத்தில் பாலகன் எனும் பிறப்பு முடிந்து இந்தச் சமூகக் கடமைகள் கற்பிக்கப்பட்டு ஒருவன் புதிய பிறப்பு எய்துகிறான்.

பூணூல் என்பது சாதி அடையாளம் என்று அறியப்பட்டிருப்பது கேவலமான திரிபு. மெய்யாகப் பூணூல் என்பது ஒரு நபரின் சமூகக் கடமையை தினமும் நினைவூட்டும் இந்து தருமப்படியிலான அணியக்கூடிய செயல்பாட்டு ரிமைண்டர். காயத்ரி மந்திரம் என்பது ஒருவனுக்கு சீர்தூக்கிப்பார்க்கும் சிந்தனையை, அறிவைத் தரும்படி சூரியக்கடவுளிடம் வேண்டும் மந்திரமே. சிந்தனை செறிவோடு இருந்தால் தான் கடமைகள் செவ்வனே சமுதாயத்தில் ஆற்ற முடியும்..
.
ஏழுமுதல் பதிமூன்று வயதுக்குள் உப நயனம் செய்யப்பட வேண்டும் ஒரு நபருக்கு. ஏழு வயதில் போட்ட பூணூல் அப்படியே இருந்துவிட முடியாது. உடல் வளர்ச்சியாலும், நூல் பழையதாவதாலும் உபநயனம் நடத்திப் போட்ட பூணூலைக் கழற்றி எறிந்து விட்டு பூணூல் அடையாளமாக நினைவூட்டும் கடமைகளை மறந்து விடக்கூடாது என்பதால் ஆவணி அவிட்டம் என்று வருடம் ஒருநாள் பூணூல் மாற்றி அதன் மூலம் ஒருவன் தனக்குப் புகட்டப்பட்ட கல்விவழி அறிந்த கடமைகள், நன்றிக்கடன் திருப்பிச் செய்தலை நினைவில் புதுப்பித்துக் கொள்கிறான்.

பூணூலின் மூன்றாம் நூல் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தல் என்பதில் ஓசோன் படல ஓட்டை, கியாட்டோ புரோட்டோகால், க்ரீன்ஹவுஸ் வாயுக்கள், க்ளோபல் வார்மிங், கூவம், அடையாறு நதிகள் சாக்கடை ஆக்கம், பொதுவில் எங்கும் சிறுநீர் கழிப்பது, ரயில்வே டிராக் பக்கம் எங்கும் மலம் கழிப்பது, சென்னைக் காற்றில் கார்பன் துகள்கள், முகமூடி, முழுநீளக்கையுறைத் தேவைகள் என பஞ்சபூதங்களை சுயநலமாக நசித்து அடுத்த தலைமுறைக்கு பஞ்சபூதங்களின் பஞ்சம் பூதாகாரமாக ஆக்கிய சுயநலமனிதச் செயல்பாடுகள் உள்ளடங்கி இருப்பது சனாதன தருமம் எவ்வளவுக்கு இயற்கையைத் துதித்துப் பாதுகாக்கச் சொல்லுகின்ற மிக உயர்ந்த சுற்றுச்சூழல் புரோட்டோகால் என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஆக பூணூல் என்பது இந்து தருமத்தைப் பின்பற்றும் எல்லோராலும் பாகுபேதமின்றி அணியப் படவேண்டியது. சனாதன தருமப் பாரம்பரியம் என்பது சரியாகப் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் அவரால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும்..
.
ஆக ஆவணி அவிட்டம் ஒரு பண்டிகையா? பூணூல் 8ம் நம்பர் நூலுக்கு இவ்வளவு மரியாதையா? என்றெல்லாம் சவுண்டு விடும் பகுத்தறிவுகளுக்கு : ஆவணி அவிட்டம் உண்மையில் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய சமூக வாக்குறுதி நினவூட்டல் திருவிழா!

எனவே அனைவரும் வாருங்கள்... இந்து தருமத்தில் இருப்போர் அனைவரும் பூணூல் அணிவோம்... புவனம் காப்போம்!இந்து தருமப்படி 🙏🙏

🤗🤗🤗ஆச்சாரியன் திருவடிகளே சரணம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழமொழி நானூற்றில் இடம் பெற்றுள்ள செய்திகள்:

* பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து 
(பா.258) - இராமாயணம்

* அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் 
(பா235) - பாரதம்

* பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா 
(பா.357) - பாரதம்

* ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் 
(பா.184) - மாவலி

* உலகந்தாவிய அண்ணலே 
(பா.178) - உலகம் அளந்த வாமனன்

[ஆதாரம்: தமிழ் விகி]

Gopinath R

பழமொழி நானூறு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திருக்குறள், ஏலாதி, சிறுபஞ்ச மூலம், நாலடியார், நான்மணிக்கடிகை போல. பழமொழி நானூற்றை எழுதியவர் முன்றுறை அரையனார் என்பவர். கடைசி வரி பழமொழியாகக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டது. கிட்டத்தட்ட திருக்குறள் போலவே இருப்பதால் சமகாலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். பொயு 5ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள் எப்படியும் 1500 வருட பழமையானது தான், சங்கம் மருவிய காலத்தை சேர்ந்தது. அதில் வரும் இந்த 257 வது பாடல் இப்படிச் சொல்கிறது-
"பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்திறை யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்."

பொன்மயமான மாலையினையுடைய ராமனுக்கு துணையாக சென்ற இலங்கை அரசனான ராவணனின் தம்பியாகிய விபீஷணன் இலங்கைக்கே அரசனாகும் உரிமையை பெற்றான், அதனால் பெரியவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு நிச்சயம் பயன் உண்டு அவர்களால் பயன் பெறாதவர் இல்லை என்கிறது. கம்பனுக்கு முன்பேயே ராமாயணக்கதை தமிழகம் எங்கும் பரவிச் சாமானியரும் அறிந்ததாகத்தான் இருந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்று -
"பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோ(டு)
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோ டாடார் கவறு."

மகாபாரதக் கதையில் பந்தயப்பொருளை வைத்து தாயமடி நூற்றுவரான கௌரவரும், ஐவரான பாண்டவர்களும் எதிரிகளாகிப் போர் செய்து மாண்டார்கள்; ஆதலால் அன்புடையவர்கள் இடையே விளையாட்டாகக்கூடச் சூதாடுதல் கூடாது என்று இன்னொரு பாடல் கூறுகிறது.

தேவைப்பட்ட இடத்தில் எல்லாம் சங்ககால, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் ராமாயண-பாரதக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. அது தேவாரம் முதற்கொண்டு பின்னாலும் தொடர்ந்திருக்கிறது.

பாண்டியர்களின் வேள்விக்குடி, சின்னமனூர் உள்ளிட்ட செப்பேடுகள் பாரதத்தை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததைப் பெருமையாகச் சொல்கின்றன, ’பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்று புலவர் ஒருவர் இருந்ததை நாம் அறிவோம். இந்தப் பரந்த நிலமெங்கும் இதிகாச புராணக் கதைகள் அனைத்து மாந்தரிடத்திலும் பரவி இருந்தன என்பதற்கு வேறென்ன ஆதாரங்கள் வேண்டும்?

Image may contain: indoor


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.tamilvu.org/slet/l2800/l2800aru.jsp?song_no=7&book_id=37&head_id=37&sub_id=1015

7அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"

(குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"

(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
 
21ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.            இன்னா நாற்பது

(ப-ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு கொடுத்தல், இன்னா துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா துன்பமாம் எ-று.

ஈந்த வென்பது வலித்தலாயிற்று. உவவாதார்க் கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு' என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ ஓத்து - ஓதப்படுவது; வேதம்.



-- Edited by Admin on Friday 22nd of June 2018 09:33:50 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நல்நெஞ்சம்
சிந்திக்க, கேட்க செவி

”குறள் கூறுவது என்ன?”

சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறினர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால் சமணத்தின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் மாறாக இருப்பதாகவே தெரிகிறது.

சீவக சிந்தாமணி காட்டும் முதலும், மூப்புமற்ற உலகும் [மூவா முதலா உலகு], வள்ளுவம் காட்டும் முதல் கொண்ட உலகும் [ஆதிபகவன் முதற்று உலகு] அளவற்ற அடிப்படை முரணமைந்த துணிபுகள்.

சமணத்தின் மையமான கோட்பாடுகள் -

1) தீவிரமான இறை மறுப்பு
2) தீவிரமான இன்னா செய்யாமை
3) தீவிரமான துறவு

Life is spirit, not physical matter.
Jainism is life-affirming, but world-denying.
Jains reject a materialistic lifestyle.

In general, Jainism is a study in extremes:

1. extreme atheism
2. extreme ahimsa
3. extreme asceticism

இதற்கு முரணாக வள்ளுவம் இறையை ஒப்புக்கொள்கிறது. ஒறுத்தலை வற்புறுத்துகிறது.
”நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்” என்பதிலுள்ள உவமை சமணத்தின் தீவிரமான கொல்லாமை நெறிக்கு முரணானது.
சமணத்தின் அதீதமான உலகியல் மறுப்புக்கு மாறாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலை வள்ளுவம் சொல்கிறது.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்தலை, கொண்ட பெண்டிர் மக்கள் சுற்றத்தோடு நல்ல பதத்தால் மனைவாழ்தலைச் சொல்லும் சமயக் கருத்துகளுக்கு அணுக்கமாகத் திருக்குறள் விளங்குகிறது.

பஶ்யேம ஶரத³​: ஶதம்
ஜீவேம ஶரத³​: ஶதம்
ஶ்ருʼணுயாம ஶரத³​: ஶதம்
ப்ரப்³ரவாம ஶரத³​: ஶதம்

புலன்கள், மேலானவற்றில் ஈடுபட்டிருக்கும் நீடித்த, தரமான, வளமான உலக வாழ்க்கையைக் கோரும் மறை மொழிகளையும் பார்க்கிறோம்.

நெடுமால், தாமரையாள், தவ்வை, இந்திரன், உலகியற்றிய நான்முகன், அவியுணவு, அதை ஏற்கும் அமரர்கள், அதை அளிப்போர், மறை ஓத்து, திங்களைப் பாம்பு கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் சொல்லும் குறள் 63 சலாகா புருஷர்களில் ஒருவரைப் பற்றியும், ஒரு இடத்திலும் பேசவில்லை. 'என்பும் உரியர் பிறர்க்கு’ எனும் குறட்பா தொடர் ததீசி முனிவர் முதுகெலும்பை இந்திரனுக்கு அளித்ததைச் சொல்கிறது. புராண நிகழ்வுகளோடு ஒட்டியதாக அமையும் குறட்பாக்கள் பல.

சமணத்தின் தேவர்கள் புலன்களை வென்றதால் மேலுலகத்தில் வாழும் தகுதி பெறுகின்றனர்; சமணம் அவர்களைப் புலன்களை வென்றோராகவும் - முக்தி அடைந்தவர்களைப் போற்றி, தீர்த்தங்கரர்களுக்கான ஸமவசரணத்தை அமைக்கும் பணி செய்வோராகவும் காட்டுகிறது. அமரருலகில் முப்பது பகுப்புகள்; அமரர்கள் நான்கு வகையினர் என்று சமணம் சொல்கிறது.

வேத சமயத்தில் அமரர்கள் புண்ணியச் செயல்களால் தேவருலகை அடைந்தோராவர். அவர்களுக்கான பொறுப்புகள் வேறு; அவர்கள் போகத்தில் ஆழ்ந்திருப்பவர். அமுதம் பருகி, அவியுணவை ஏற்றுப் புண்ணிய பலன்களின் மிகுதியால் போகத்தில் ஆழ்ந்திருக்கும்
அவர்களுக்கு பிரமதேவர் ஒருமுறை புலனடக்கம் குறித்து அறிவுறுத்தியதாகவும் அறிகிறோம் [ப்ருஹதாரண்யக உபநிஷத்]. வள்ளுவம் ஓர் இடத்தில் புலனடக்கம் இல்லாத அமரர்களைச் சொல்கிறது.

மயிலையாரின் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பேயே இலங்கைப் பெரும்புலவரான 'புலோலி தில்லைநாத நாவலர்', வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

’மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்’ என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும், ‘ஏடாயாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், ‘போதகந்தோறும் புரிசடையானடி’ என்று திருமூலர் திருமந்திரத்தாலும்,‘மனனகமலமற மலர்மிசை யெழுதரும்’எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலாலும், இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகரைக் கூறினார் என்பது பொருந்துமா பார்க்க வேண்டும்.

"அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்.." என்று சூடாமணி நிகண்டும், "அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்" என்று பிங்கல நிகண்டும் பேசும்.

அருகக் கடவுளுக்கு ’அறவாழி வேந்தன்’ என்பதன்றி, ’அறவாழி அந்தணன்’ என்பது பெயரன்மையால் கடவுள் வாழ்த்து ஆதி தீர்த்தங்கர ஸ்வாமிக்கானது என்பதும் பொருந்தாது.

ஈசனின் எண்குணங்களை வாகீசர் வழுத்துகிறார்; பரிமேலழகரும் ஏற்கிறார்.

சமணத்தின் முக்தி கடுமையான உலகியல் மறுப்பால், புலனடக்கத்தால் விளைவது; அருகரைப் போற்றினால் முக்தி கிடைக்காது. பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு அருக வழிபாடு, பொருள்சேர் புகழ் புரிதல் விதிக்கப்படவில்லை தொன்மையான அருக நூல்களில். அருகர் என்பது வழிகாட்டும் அடையாளம் மட்டுமே.

சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வள்ளுவத்தையும் ஒப்பு நோக்கினால் பல உண்மைகள் புலப்படும்.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது.

ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால்தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும், 
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு ’வகுத்தான்’ என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இது அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் [ச்ரமண] என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பவுத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார் எனினும் இல்லறத்தையே பெரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் 
(குறள் – 46)

துறந்தான் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்
(குறள் – 159)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 
(குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவை யாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை மட்டும் இரு அறத்தார்க்கும் பொதுவாகவும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
( குறள் 1121)

சமணருக்குத் தேன் விலக்கப்பட்ட உணவு; வள்ளுவப் பெருந்தகை சாவக நோன்பினராயினும் (அணுவிரதியாயினும்), மாவிரதியாயினும் தேனைச் சுவைத்திருக்க வாய்ப்பில்லை; எப்படி அதை உதாரணம் கூறுகிறார் ? சமணரில் சாவக நோன்பினர் மருந்துக்கும் தேனைச் சேர்த்துக் கொள்வதில்லை.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் ’யதிதர்மம்’ என்பர். அவற்றை 
1. உலோசம், 
2. திகம்பரம். 
3. நீராடாமை, 
4. தரையிற் படுத்தல், 
5. பல் விளக்காமை, 
6. நின்று உண்ணல், 
7. ஏக புக்தம் என்பர். 
வள்ளுவம் இவற்றிற்கு மாறானது. காழிப் பிள்ளையாரும் இவற்றைக் கண்டிக்கக் காண்கிறோம்.

திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல’ (1012) என்றும், ‘உடுக்கை இழந்தவன் கைபோலும்’(788) என்றும் உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் ’புறந்தூய்மை நீரான் அமையும்’ (298) என்று கூறுவதையும், சமணம் கூறும் நீராடாமையும் ஒப்பிடுதல் வேண்டும்.

நின்றவாறே உணவேற்றல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்), புரண்டு படுக்காமல் ஒரே புறமாகத் துயிலும் நோன்பு இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். புறத்தூய்மையை வலியுறுத்தும் அவர், துறைகளில் ஆழ்ந்து அமிழ்ந்து நீராடுதலை மறுக்கும் சமணத்தைச் சொல்கிறார் என்பதை ஏற்க இயலுமா?

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
(குறள் 360)

ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்திய வள்ளுவர் சமணரின் முக்கியக் கோட்பாடான ரத்ந த்ரயத்தை விளக்கினார் அல்லர்; ‘ரத்ந த்ரயம்’ என்பது நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவையாகும். சமணரின் முக்கியக் கோட்பாடான அநேகாந்த வாதமும் குறளில் எங்கணும் காணப்படவில்லை.

சமணர் இன்னா செய்யாமையை எல்லை கடந்து வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உள்ளிழுத்தால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதால் மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலையும், பூமியைத் தோண்டுவதால் உயிர்கள் மடியும் என்பதால் சுரங்கத் தொழிலையும் அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தொழிலுக்கும் சமணத்தில் இரண்டாம் நிலை இடமே அளிக்கப்படுகிறது. ஐம்பெரும் பூதங்களுக்கும் உயிர் உண்டு என்பது சமண நெறியின் நம்பிக்கை. அவை அனைத்துக்கும் தொடு உணர்ச்சி உண்டு
என்பர் சமணர்.

‘பஹ்வந்நம் குர்வீத’ என்று அருமறை, வேளாண்மையைச் சமூகக் கடமையாக்குகிறது, அதுவும் தூய ஆன்மிகம் பேசும் உபநிடதப் பகுதியில். மனுநூலும் உழுதொழிலின் உயர்வு கூறுகிறது.வள்ளுவம் மறை கூறியதற்கிணங்க உழு தொழிலையே உயர்ந்ததாகப் போற்றுகிறது -

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

அறநுட்பங்களின் எல்லை உணர்ந்து பேசும் பொய்யாமொழிப் புலவர் வீடுபேற்றை விட்டு வைப்பாரா ? கீதை புநராவர்த்தி ரஹிதமான நிலையைச் சொல்லிற்று. திருவள்ளுவ தேவ நாயனார் மற்றீண்டு வாரா நெறியைச் சுட்டினார்.

வைதிக நூல்கள் பெரிதும் வலியுறுத்தும் ‘த்ரிவர்க’ கோட்பாடு [அறம், பொருள், இன்பம்] வள்ளுவத்தோடு மிகவியல்பாய் ஒட்டுகிறது. வைதிக அறநூல் பாக்களுக்கும், குறட்பாக்களுக்கும் சிறந்த ஒற்றுமை காண முடிகிறது. சமணரின் அண்டவியலில் [cosmology] அளறு உள்ளது; ஆனால் தென்புலத்தோர்க்காக வரையறை செய்யப்பட்ட உலகைக் காண இயலவில்லை என்பது மிக முக்கியமான குறிப்பு.

பின்வரும் குறட்பாவுக்குச் சமணர் என நம்பப்படும் மணக்குடவர் செய்த உரை சமணக் கோட்பாட்டுக்கே முரணாக அமைந்துள்ளது-

”வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”

மணக்குடவர் உரை:
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை ஈட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

[விதி செய்யும் விதாதா சமணத்தில் இல்லை]

முடிவாகச் சில வினாக்கள்:

சமணர் அமரர்க்கு அவியுணவு அளிப்பார்களா?
சமண முனிவர் தென்புலத்தார் ஓம்பச் சொல்கின்றனரா?
சமணம் உழுதொழிலை வற்புறுத்தியுள்ளதா ?
சமணம் இல்லறத்தை வலியுறுத்துகிறதா?

[இதைச் சமண எதிர்ப்பாகக் கருத வேண்டா; தெளிவுதரும் நோக்கில் சமணக் கருத்துகள் வள்ளுவக் கருத்துகளோடு ஒப்பிடப் பட்டுள்ளன]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புலப்படாததில் {பரம்பொருளில்} இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை} உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம் உண்டாகிறது. ஆகாயம் காற்றை உண்டாக்குகிறது.(27)

காற்று வெப்பத்தை உண்டாக்குகிறது. வெப்பம் நீரை உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை} உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28)

இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29)

காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30)

ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31)

சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)

தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33)

- ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல்

https://mahabharatham.arasan.info/…/Mahabharatha-Santi-Parv…

சாந்தி பர்வம் 210:27-33

#பீஷ்மர் #யோகம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அரசனால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் பாவங்களைச் செய்த மனிதர்கள், குற்றம் நீங்கி சொர்க்கத்தைச் சென்று அடைகிறார்கள், புண்ணியம் செய்த நல்லோர்களைப் போல.

- மனுஸ்மிருதி 8.318 **

தர்மத்தின் வழி செங்கோல் ஆட்சி செய்யும் அரசன் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையளிப்பது அவனது கடமை என்பதால், அதில் உள்ள ஹிம்சை அவனுக்குப் பாவத்தைத் தராது என்பது நேரடியாகவே விளங்கும். குற்றம் செய்தவரின் விஷயத்திலும் பாவத்திற்கான தண்டனை அப்போதே கிடைத்துவிட்டது. எனவே, அந்தப் பாவம் கர்மவினையில் சேர்ந்துமறுமையில் தொடராது என்பது மட்டுமல்ல, தண்டனையே பிராயச்சித்தமாக அமைந்து அந்த உயிரை சொர்க்கத்திலும் சேர்க்கும் என்று மனு கூறுகிறார். தண்டநீதி என்ற விஷயத்தில், எந்தவிதத்திலும் யாருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அழுத்தமாக மனதில் பதியவைப்பதற்காகவே இக்கருத்து கூறப்பட்டது என்று தோன்றுகிறது.

திருக்குறளும் இக்கருத்தை அடியொற்றியே செல்வதைக் காணமுடியும்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பரிமேலழகர் உரை: "வடுவன்று - வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.. தன் கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்".

அரசனது தண்டனை குற்றவாளியை குற்றத்திலிருந்து நீக்கித் தூயவராக்குகிறது என்ற உரைக் கருத்து மேற்சொன்ன ஸ்மிருதியிலிருந்தே பெறப்பட்டது.

** மூலம்:

राजभि: कृतदण्डास्तु कृत्वा पापानि मानवा: ।
निर्मला: स्वर्गमायान्ति सन्त: सुकृतिनो यथा ॥



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

‘நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.

 

 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு 231

இந்தக்குறள் வரும் புகழ் அதிகாரம் ஈகை மற்றும் ஒப்புரவு அதிகாரங்களுக்குப் பிறகு வருவதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த   புரிதலுக்கான வாசிப்பு

கு.அழகர்சாமி

1.முன்னுரை:

திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள். அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும்; அதன் அவசியம் விளக்கப்படும்; விளைவுகள் சொல்லப்படும். அதாவது அறங் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால் சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் (empirical method) கையாளப்படும்.( குறள்கள் 37,114,169 போன்ற குறள்களை நோக்குக)சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.

2.திருக்குறள் வாசிப்பு- ஒரு அதிகாரத்தில் குறட்பாக்கள் அளவில்:

இப்படி ஒவ்வொரு அறக்கருத்தையும் பத்துக் குறட்பாக்களில் வாசிக்கும் போது சில சமயங்களில் ஒரு அதிகாரத்தில் பேசப்படும் அறக் கருத்தின் கட்டமைப்பும் உன்னதமும் இப்போது இருக்கும் நிரல் முறையில் அல்லாமல் வேறு நிரல்முறையில் இருந்தால் இன்னும் உன்னதம் கூடி நிகரற்று விளங்குமோ என்று தோன்றும். இது உள்வயமானது (subjective) என்று சிலர் புறந்தள்ளலாம். இப்போது இருக்கும் ஒவ்வொரு குறட்பாக்களின் நிரல் முறையும் உள்வயமானதென்று இருக்கும் போது இன்னொரு நிரலில் அமையும் உள்வயமான வாசிப்பு ஒரு அறக்கருத்தைக் கூடுதலாய்ப் பட்டை தீட்ட முடியமென்றால், திருக்குறள் என்ற நிகரற்ற படைப்பு வாசகனுக்குத் தரும் வாசிப்பு சுதந்திரம் அது. அரவிந்தர் திருக்குறளின் கடவுள் வாழ்த்தையும் , வான் சிறப்பின் ஐந்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தை அரவிந்தர் மொழி பெயர்த்துள்ள விதம் போப், சுத்தானந்த பாரதி போன்ற மற்ற மொழி பெயர்ப்பாளர்களிடமிருந்து வித்தியாசமாக மூலத்தின் உண்மையையும், உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.(Usha Mahadevan(Jan(2009)) அதற்கு அரவிந்தருடைய ஆன்மீக அனுபவம் காரணமாய் இருக்க வேண்டும். ஆனால் சுவாரசியமானது என்னவென்றால் கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களை மொழி பெயர்க்கும் போது அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை. வழக்கமாக கடவுள் வாழ்த்தில் நாம் வாசிக்கும் பத்துக் குறட்பாக்களின் நிரல் முறையை, 1,2,3,4,5,6,7,8,9,10 என்பதற்குப் பதிலாக 1,2,3,7,8,4,5,6,10,9 என்று மாற்றியமைக்கிறார். இந் நிரலை1,2,3,6,7,8,4,5,10,9 என்று சிறிது மாற்றியமைத்தால் இன்னும் வாசிப்பு அனுபவம் மிகைப்படும். சொல்லப்படும் முறையிலும், கருத்தாக்கதிலும் மூன்றாவது ஆறாவது குறள்கள் இயைபுடைத்தாயிருக்கின்றன. இந்த இரு குறள்களை வாசித்துப் பாருங்கள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்.

இதே போன்று ஏழாவது எட்டாவது குறள்களும், நான்காவது ஐந்தாவது குறள்களும் முறையே இயைபுடையதாகி வாசிப்பு அனுபவத்தைக் கூட்டுகின்றன. இறைவனைச் சார்ந்தோருக்குச் சேரும் நலன்களைச் சொல்லும் நான்காவது, ஐந்தாவது குறள்களோடு பத்தாவது குறள் அடையும் நலன்களின் மலையடுக்குகளில் இறுதி உச்ச அடுக்கைச் சொல்வது போல் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று குறள்களையும் ஒரு சேர வாசித்துப் பாருங்கள்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்.

திருக்குறளின் இந்த ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் வாசிக்கும் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்காம், ஐந்தாம் குறள்கள் அறத்தை வரையறுக்கின்றன.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

இவற்றை முதல் இரு குறட்பாக்களாக வாசித்துப் பார்க்கலாம். அறத்தின் சிறப்பை ஒன்றாம் இரண்டாம் ஒன்பதாம் குறள்கள் பேசுகின்றன. ஆறாம், எட்டாம் குறள்கள் அறம் செய்ய வேண்டிய காரணங்களைச் சொல்கின்றன. மூன்றாம், பத்தாம் குறள்கள் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு நடை முறை உண்மையைச் சொல்வதாய் ஏழாவது குறள் அமைகிறது. கீழ் சொல்லப்படும் இந்த ஏழாம் குறளைப் பத்தாவது குறளாக வாசித்துப் பார்க்கும் போது ஒரு முத்தாய்ப்பு போல் ஒரு ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஆக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் எனது வாசிப்பு அனுபவத்தில் 4,5,1.2,9,6,8,3,10,7 என்று குறள்களை நிரல் மாற்றி வாசிக்கும் போது அறன் வலியுறுத்தல் என்ற கருத்தாக்கத்தின் முழுப் பரிமாணமும் ஒருங்கிணைந்த வாசிப்பாய் மனத்தில் பிடிபடுகிறது. இன்னொருவருக்கு, இது வேறு விதமாகவும் அமையலாம். இங்கு வலியுறுத்தப்படுவது வழக்கமான நிரல் முறை வாசிப்பில் திருக்குறளின் மகோன்னதம் முழுதும் மனத்தில் பிடிபடாமல் போய் விடும் சாத்தியம் இருக்கிறது என்பதைத் தான். இது ஒரு அதிகாரத்தின் கீழ் வரும் பத்துக் குறட்பாக்களின் வாசிப்பை விட , அடுத்த தளத்தில் அதிகார முறைமையில் வாசிக்கும் போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

3.திருக்குறள் வாசிப்பு- அதிகார அளவில்:

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும், துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல் துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை. இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவிறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் , துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானது என்பது கண்மூடிய நிலைப்பாடாகத் தான் இருக்கும். இந்தக் கருத்துக்கள் இல்லறவியலுக்கும் இல்லறத்தின் நடைமுறைக்கேற்ற அளவில் பொருத்தமானவை தாம். அதே போல் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் போன்ற கருத்தாக்கங்கள் இல்லறவியலுக்கு மட்டுமே உரித்தானவை என்ற நிலைப்பாடும் அறிவுக்கு முழுதும் ஒப்புடையதாய் இல்லை. துறவற நிலையினும் இந்த அறக்கருத்துக்களுக்கு ஒரு பொருத்தம் இருக்கிறது. ஆக துறவறவியல், இல்லறவியல் என்ற பகுப்பு பல்வேறு அறக்கருத்துக்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மறுதலிக்கிறது. ஆனால் அதிகாரங்களின் வரிசைக்கு, சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஒப்புடையதாக இல்லை. சில அதிகாரங்களின் வரிசைக் கிரமத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலிந்து நியாயங்கள் கற்பிக்கப்பட்டது போல் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து பிறனில் விழையாமை என்ற அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேல் அழகரின் உரை தரும் காரணம் விசித்திரமாக இருக்கிறது. ”அஃதாவது காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இஃது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது” என்பது பரிமேல் அழகர் உரை தரும் விளக்கம். அடுத்து பொறையுடைமை அதிகாரம் பிறனில் விழையாமை அதிகாரத்தின் பின் வைக்கப்பட்ட முறைமைக்குப் பரிமேல் அழகரின் உரை தரும் விளக்கத்தைப் பாருங்கள். “அஃதாவது காரணம் பற்றியாதல், மடமையானாதால் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன் கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்பதற்கு, இது பிறன் இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.” இந்த மாதிரியான வைப்பு முறையில் இன்னொரு சிக்கலும் ஏற்படுகிறது. ஒரு அதிகாரம் விளக்கம் பெறும் போது அதன் பெற்றி தாழ்வுறுவ்து போல் அதற்கான வைப்பு முறை விளக்கம் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக நடுவு நிலைமை அதிகாரத்திற்கான விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ”அஃதாவது பகை நொதுமல்,நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இஃது நன்றி செய்தார் மாட்டு அந்நன்றியினை நினைத்த வழிச் சிதையுமன்றே? அவ் இடத்துஞ் சிதையலாகாது என்றதற்கு செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது.” நடுவுநிலைமை என்ற கருத்தாக்கத்தின் தன்னளவிலான உயர்ச்சி அதற்கான அதிகார வைப்பு முறையில் சேர்த்துக் காணப்படும் போது உயர்ச்சியிலிருந்து தாழ்வுறுகிறது.

இந்த அதிகார முறைமை பற்றி ஏன் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். திருக்குறளின் பல் வேறு அறக்கருத்துக்களை உதிர்ந்த மணிகள் போல் பொறுக்கிக் கொள்ளலாமா? அல்லது பல் வேறு அறக்கருத்துக்களிடையே ஒரு தத்துவக் கோர்வை இருக்குமா என்று ஒரு மணிமாலையைக் கோர்த்துக் கொள்ளலாமா? இந்த இரு கேள்விகளில் நாமெடுத்துக் கொள்ளும் தெரிவைப் பொறுத்துத் தான் திருக்குறளில் பேசப்படும் அறத்தை நாம் மனத்தில் அகப்படுத்திக் கொள்ளும் திறனும் தீர்க்கமும் அமைகின்றன. தம்மபதத்தில் சினம், பேராசை, பயம், எண்ணம், பற்று போன்ற கருத்துக்களை வாசிக்கும் போது தம்மளவில் தனித்தனியாய் இருந்தாலும் அவை புத்தரின் போதனைகள் என்ற பிண்ணனியில் புத்தரின் தத்துவாக்கங்களான எண்பிரிவு வழி, நான்கு வாய்மைகளோடு பொருத்திப் பார்க்கப்படும் நீர்மையான் தம்முள் இயைபும் முழுமையும் பெறுகின்றன. இதையொட்டி, திருக்குறளுக்கும் ஒரு சமயப் பிண்ணனி தேடி ஆய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கருத்துக்கள் திருக்குறளில் உள்ளதாக வாதிடுகிறார்கள். ஜைன சமய சித்தாந்தத்தின் படி திருக்குறளை இயற்றியவர் குந்த குந்த ஆசாரியர் என்பவராவர். திருக்குறளுக்கு ஜைன உரை இருக்கிறது. இந்தக் கட்டுரையில் முயற்சிப்பது என்னவென்றால் திருக்குறளில் பேசப்படும் கருத்துக்களில் ஒரு தத்துவக் கோர்வையை நம்மால் நெய்து கொள்ள முடியுமென்றால் அது திருக்குறளில் பேசப்படும் அறத்தினை நாம் மேலும் வளமும்,முழுமையும் கூடிப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான். இந்தத் தத்துவார்த்தப் புரிதலுக்குத் தான் திருக்குறளின் தற்போதைய வைப்பு முறையிலிருந்து விலகி நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.

அறத்தை மொழி, மெய், மனம் சார்ந்து புரிந்து கொள்வது ஒரு தத்துவார்த்த முறை. வாழ்வின் பரிசுத்தத்தையும் மொழி, மெய், மனம் சார்ந்த பரிசுத்தங்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம். திருக்குறளில் அறத்துப்பாலில் பேசப்படும் அதிகாரங்களை இந்த தத்துவார்த்த அடிப்படையில் நிரல் படுத்திப் புரிந்து கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி. மொழி சார்ந்த அறங்களாக இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை போன்ற அதிகாரங்கள் அடங்குகின்றன. இங்கு புத்தரின் மொழி சார்ந்த பரிசுத்தத்தின் தன்மைகளாக பொய்மையும், பயனில் பேச்சும் என்று கூறப்படும் விளக்கத்தை நினைவில் கொள்வது பொருத்தமானது.(The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.230)).அடுத்து மெய் சார்ந்த அறங்களாக கீழ்க்கண்ட அதிகாரங்களை அடையாளம் காணலாம்- பிறனில் விழையாமை, வெஃகாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை. இவற்றை புத்தரின் மெய் சார்ந்த அறத்தின் தன்மைகளாகச் சொல்லப்படும் பண்பு நலன்களான- பிரிதொரு உயிர் கோறாமை, கள்ளாமை, தவறான புலனிச்சைகள் – என்பவற்றோடு பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியானது.( The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.229)). மூன்றாவதாக மனம் சார்ந்த அறத்தை, முன்னால் குறிப்பிடப்பட்டது போல்

’மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.’

என்று திருக்குறள் மையப்படுத்திச் சிறப்பிக்கிறது. இந்தக் குறளை அடுத்து வரும் குறள் முன்னாலே குறிப்பிடப்பட்டது தான்.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பிண்ணனியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன. எடுத்துக் காட்டாக,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

என்ற குறளுக்கு(குறள் 280) பரிமேழகர் உரையைப் பாருங்கள்-”உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின், தவம் செய்வார்க்குத் தலைமயிரை மழித்தலும், சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா”. இந்த உப்பு சப்பில்லாத உரையை விட இந்தக் குறள் வாழ்க்கையின் இரு தீவிர நிலைகளை- உல்லாசத்தில் திளைத்தல் அல்லது உடல் வருத்தி இளைத்தல்- என்பதைக் குறிப்பதாகி, இரண்டு நிலைகளும் வேண்டா என்று மத்திய வழியைச் சுட்டுவதாய்ப் பொருள் கொள்ளும் போது பொலிவு பெறுகிறது. இது புத்த உரை என்று சொல்லலாம். அதற்காக உப்பு சப்பில்லாத உரையைத் தூக்கி நிறுத்த முடியாது. அதுவும் பத்துக் குறள்களும் வயிர மணி போன்று ஒளி விடும் தவம் என்ற அதிகாரத்தின் பின் வரும் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு எப்படி இப்படியான உப்பு சப்பில்லாத உரை இருக்க முடியும். மேலும் கூடா ஒழுக்கம் அதிகாரத்தில் வரும் ஏனைய ஒன்பது குறள்களின் பிண்ணனியில் மத்திய வழியைப் பத்தாம் குறள் சுட்டுகிறது என்பது முத்தாய்ப்பாகவும் முடிவாகவும் இருக்கும் என்று அறுதியிடலாம். ஒழுக்கமுடைமையையும் ‘தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்’ என்று பரிமேல் அழகர் உரை குறிப்பிடும் போது உரைகாரரின் கால சமூக ஒழுக்கம் திருக்குறளின் மேல் திணிக்கப்பட்டு விட்டதா என்று தோன்றுகிறது.

அற ஒழுக்கத்தின் அடுத்த கட்ட மன நிலைகளாக அன்புடைமையையும் அருளுடைமையையும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த மன நிலைகளை பெளத்ததில் பேசப்படும் கருணா, மைத்ரி என்ற நிலைகளோடு ஒப்பிடலாம். கருணா எனபது சக மனிதர்களோடான அன்பாகவும், மைத்ரி என்பது சக உயிர்நிலைகளோடான அன்பாகவும் ((மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு(குறள்:244)) பரிணமிக்கின்றன. அருளுடைமை குறித்து “அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை” என்று பரிமேல் அழகர் உரையும் குறிக்கிறது. அன்புடைமை பற்றி ‘இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் இது வேண்டப்பட்டது’ என்று பரிமேல் அழகர் உரை சொல்லும் போது அன்புடைமையை இல்லறத்தாரொடு என்று பொருத்திப் பார்ப்பதை விட சக மனிதர்களோடு என்று பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. இதை அன்புடைமை அதிகாரத்தில் வரும் குறள்களை வாசிக்குங் கால் உணரலாம். மேற் சொன்ன அன்புடைமை, அருளுடைமை அதிகாரங்களை ஒட்டி ஒப்புரவறிதல், ஈகை என்ற அதிகாரங்களை வாசித்தால் செல்வத்தைக் கையாள வேண்டிய அற நிலைகளைப் (ஊருணிநீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு. (குறள்(215)),அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி.(குறள்(226)) பெரிதும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆக எதைக் கருதி மொழி,மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் ’மெய்யுணர்தல்’ அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த மெய்யுணர்தல் ‘மாசறு காட்சி (குறள்; 352; மற்றீண்டு வாரா நெறி(குறள்:356); பிறப்பென்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது(குறள்:358). இந்த மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் பத்தாம் குறள் மூன்று மாசுக்களை குறிப்பிட்டுச் சொல்கிறது.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.

புத்த கோசர் தனது “ தூய்மையுறுவதற்கான வழி(The Path of Purification) என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை(greed), வெறுப்பு(hatred), காமம்( infatuation) என்பவை. இவை சகதி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர்.(The Dhammapada, Eknath Eswaran(1996),p.150) புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்போன்’ என்று வரும் குறளில் (குறள்:346) மேலும் விளக்கம் பெறுகிறது. ‘தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்’ என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் ’தான்’ என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. ‘தான்’ ’எனது’ என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச்(cosmic consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்’(குறள்(268)) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.

4.முடிவுரை:

தொகுத்துக் கூற வேண்டுமானால், திருக்குறளில் பேசப்படும் அறத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு இணைப்பு-1 -ல் இருப்பது போல் அமையலாம். இந்தக் கட்டுரையில் மெய்யுணர்தல், மொழி, மெய், மனம் சார் அறங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற கட்டங்களுக்கு எதிரே ஏற்புடைத்தாய் அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை முடிந்த முடிபல்ல. கட்டுரையின் நோக்கம் திருக்குறளில் அறத்தை வாசிக்குங் கால் ஒருங்கிணைந்த கட்டமைப்பு அணுகு முறையை வலியுறுத்துவதே. அரவிந்தர் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும் போது, குறு வடிவில் மறை பொருட் கவிதையாக்கத்தில் (gnomic poetry) திருக்குறள் அதனது கட்டமைப்பிலும், கருத்தாக்கத்திலும், செயலாக்கத் திறனிலும் இப்படி இது மாதிரி எழுதப்பட்டதிலே மகத்தானது (Tiruvalluvar’s Kural is the greatest in plan, conception and force of execution ever written in this kind) என்பார். இந்தக் கருத்தினையொட்டி, திருக்குறளை ஒரு ஒருங்கிணைந்த தத்துவார்த்ததில் அணுகினால், அதனது படைப்பாக்கத்திற்கும் நாம் அடையும் வாசிப்பு அனுபவத்திற்கும் ஈடு இணையில்லை என்று உணரலாம்.

References

Sri Aurobindo’s translation of Thirukkural, Usha Mahadevan, IRWLE, vol,5, Jan,2009

The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar, Buddha bumi Publication, Nagpur

The Dhammapada, Eknath Eswaran(1996),Penguin books

திருக்குறள் தெளிவுரை, டாக்டர்.மு.வரதராசனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,121 ஆவது பதிப்பு, ஜுலை,1994.

இணைப்பு-1

அற நிலைகள்

அதிகாரங்கள்
மெய்யுணர்தல்
பொறையுடைமை, அழுக்காறாமை,வெகுளாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை,அடக்கமுடைமை, ஈகை, ஒப்புறவறிதல்,ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம், தீவினையச்சம்,நடுவு நிலைமை
மனம் சார் அறங்கள்
பிறனில் விழையாமை, வெஃகாமை,புலால் மறுத்தல்,கள்ளாமை,இன்னா செய்யாமை, கொல்லாமை
இனியவை கூறல்,புறங் கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை
நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல்

மொழி சார் அறங்கள்
மெய் சார் அறங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு.பழனியப்பன்,

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை,

திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. திருக்குறளின் இரு அடிகளை விரிக்கலாம். ஒரு அடியை விரிக்கலாம். ஒரு சொல்லை விரிக்கலாம். இப்படி விரிந்து கொண்டே போகின்றபோது திருக்குறளுக்கு தரப்பெறுகின்ற பொருள் கடல்போல் விரிந்து படிப்பவர் முன் நிற்கின்றது.

திருக்குறள் கருத்துக்களை உளவியல் அடிப்படையில் விரித்துக் காண முனைவர் அர. வெங்கடாசலம் முயன்றுள்ளார். அவரின் திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை என்ற நூல் இத்தகு முயற்சியில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. உளவியல் அடிப்படையில் அமைந்த விரிவுரை என்ற அடிப்படையை அர. வெங்கடாசலம் அவர்கள் இந்நூலில் சுட்டியிருந்தாலும் வள்ளுவ ஆன்மீகம் என்ற தனிப்பாதையை அவர் இந்நூலுக்குள் கொண்டு வந்துச் சேர்த்திருக்கிறார்.

~~திருவள்ளுவர் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் காலம் என்று கூறுகிறார். எதைப் பற்றிய பயிற்சி? மனிதனின் ஆன்மாவைப் கடவுளர் உலகு புகுவதற்குப் பக்குவப்படுத்தும் பயிற்சி. மனிதனின் உயிர் அல்லது ஆன்மா கடவுளர் உலகினை அடைந்து பேரானந்தத்தை அடைய வேண்டுமெனில் அது அதற்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். திருக்குறள் முழுவதும் கூறப்படும் அறவழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால் ஒருவனுடைய ஆன்மா அவ்வாறான செம்மையை எய்தும். இவ்வுலகமும் பொருள்களும் அப்பயிற்சிக்கான களங்களும் பொருள்களுமாகும். || (ப.134) என்று வள்ளுவ ஆன்மீகத்தைத் தெளிவுபடுத்துகிறார் அர. வெங்கடாசலம்.

மனிதன் பயிற்சிக் காலத்தில் வாழ்கிறான். அவன் பயிற்சிக்காலத்தில் பயிலவேண்டிய நூல், பாத்திட்டம் திருக்குறளாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மனித ஆன்மா தற்போது உள்ள நிலையைவிட மேன்மையான நிலையை அடையும் என்பதே இந்நூல் தரும் உண்மையாகும். அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் ~~விண்ணுலக வாழ்க்கைக்குத் தகுதிபெற மண்ணுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் களம்! திருக்குறளில் வரும் 1330 குறட்பாக்களும் பயிற்சிக்கான சிலபஸ். இதுதான் திருக்குறளின் பொருள்.|| (ப. 136) என்பது இந்நூலாசிரியரின் வாய்மொழி.

திருக்குறளை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஆசிரியர் எண்ணுகிறார். ~~திருக்குறள் வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கும் ஓர் அற்புதமான நூல். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகக் கல்வியைத் தரும் நூல். தமிழ் இளைஞர்களுக்கு மிகச் சிறுவயதிலேயே திருக்குறளோ நெருங்கிய உறவை ஏற்படுத்திவிட்டால் அவ்வுறவு அவர்களை அறவழியில் நடத்தும்||( ப. 149)

இவ்வகையில் திருக்குறள் காட்டும் ஆன்மீக வாழ்வினை திருக்குறளில் இடம்பெறும் ஐநூறு திருக்குறள்களுக்குமேல் எடுத்துக்காட்டி இவர் திருக்குறளைச் செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின் வழியில் இந்தச் சமுகம் திருக்குறளை எண்ணினால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற எல்லையில் படிப்போர் அனைவரும் வள்ளுவக்குடியினராக ஆகிவிடுவோம். தமிழ் மொழி அழியும் தருவாயில் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறும்போது மனம் வருந்துகிறது. ஆனால் சாதியும் மதமும் இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று கணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றபோது உள்ளம் இப்போதே மகிழ்கிறது. அப்படி ஒரு சாதி, சமய மற்ற சமத்துவ சமுதாயத்தைக் கொண்டு வருவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் திருக்குறளைத் தவிர நிலையான நியாயமான நூல் தமிழர்க்கு இல்லை என்பதை ஏற்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

பேராசிரியர் அர. வெங்கடாசலம் ஏறக்குறைய பாதியளவில் திருக்குறள்களை எடுத்துக் கொண்டு உரை கண்டுள்ளார். மீதப்பாதியை விடுத்ததற்கான காரணம் படிக்கும் வாசகரை அவ்வழியல் தூண்டி அவரை எழுதச் செய்ய, நினைக்க செய்ய வேண்டிய கடப்பாடாக இருக்கலாம்.

குறிப்பாக திருக்குறளின் முதல் குறளை விடுத்துள்ளார். கடவுள் வாழ்த்துப் பகுதியில் பல குறள்களை விடுத்துள்ளார். இந்த விடுதல்கள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அவரின் தேர்ந்தெடுத்தல் முறையில் அவருக்கான விடுதலை இருக்கிறது என்று அமைதி கொண்டாலும், வள்ளுவ ஆன்மீகத்தில் மதக்குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றிற்கு இடமில்லை என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் கடவுள் வாழ்த்தில் பல பகுதிகளை விட்டதற்கான காரணம் புலப்படுகிறது.

பல அதிகாரங்களை அப்படியே பத்துக் குறள்களுக்கும் விளக்கம் தந்து முழுமைப் பத்தியுள்ளார். இப்பத்துக் குறள்களும் விடமுடியாத அளவிற்கு பெருமைக்கு உரியன என்பது இதன்வழி தெரியவருகின்றது. ஒழுக்கமுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, கண்ணோட்டம், வினைத்தூய்மை, வினை செயல்வகை, தெரிந்துவினையாடல், வெருவந்த செய்யாமை போன்ற பல அதிகாரங்கள் இவ்வகையில் முழுமையான இவரின் உரை வீச்சுக் களமாகியுள்ளன. இவ்வதிகாரங்களே இன்றைய நிலையில் அதிகம் வேண்டத்தகுவன என்பது இங்குப் பெறத்தக்கக் குறிப்பாகும்.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு (351)

என்ற குறளுக்கு ~~ஈகோவிற்குத் தீனி போடும் ஐம்புலன்களின் நுகர்பொருளை அவற்றின் பயன்பாடென்ன என்ற அடிப்படையில் அவை நம் ஏவல்களென்பதை மறந்து அவற்றையே பற்றுக் கோடாக நம் எஜமானர்களாக உண்மைப் பொருள்களாகக் கொண்டு இயங்கும் போக்கு இப்பிறப்பே இழிவான பிறப்பு என்று கருதுமளவுக்கு மீளமுடியாத துன்பங்களுக்கு இடம் கொடுத்து விடுகின்றது|| என்று உளவியல் சார்;ந்த உரையை வெங்கடாசலம் தருகின்றார்.

அங்காங்கே ஈகோ, சூப்பர் ஈகோ ஆகியன முளைவிட்டு உரையில் கிளம்புகின்றன. இருப்பினும் ஆன்மீகத் தேடல் என்பது இந்நூல் முழுவதும் உலவுகின்றது.

குடிசெயல்வகை என்ற அதிகாரத்தில்

~~குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும் (1023)

என்ற குறள் இடம்பெற்றுள்ளது. இதற்குப் பொருள் அளிக்கிறார் வெங்கடாசலம். ~~ என் குடும்பத்திற்கு ஆவன செய்வேன் என்று முனைந்து முயல்பவனுக்குக் கடவுள் தானே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்து உதவி செய்வான் என்று பொருள் கூறப்படுகிறது. ஆனால் நான் ஊழ் அதிகாரத்தில் கடவுள் தலையிடுவதில்லை. ஆனால் வேண்டியதைச் செய்து வைத்து உள்ளார் என எடுத்துக் கொள்ளவேண்டும். கண்ணோட்டம், ஒப்புரவு, நடுவுநிலைமை, அருளுடைமை ஆகிய பண்புகளை மனித இனத்திற்கு வழங்கி உள்ளார். அவை செயல்படுவதன் மூலம் குடும்பத்தைக் காத்தே தீர்வேன் என்று சூளுரைக்கும் ஒருவனுக்கு உதவி வந்து சேரும். அக்குடும்பத்தில் இருப்பவர் யாரேனும் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்வர். அது கடவுளின் உதவி என்றே கொள்ள வேண்டும்.

இவர் தரும் இவ்வுரையில் முன் உரையெழுதியவர்கள் உரையை இவர் கற்றுள்ளார் என்பது தெரியவருகிறது. சில இடங்களில் மற்ற உரையாளர்களின் உரையை மறுத்துள்ளார். அதற்கும் சான்றுகள் உள்ளன. (வெள்ளத்து அனைய மலர்நீட்டம் குறளுக்குத் தரப்பட்ட உரை) சில இடங்களில் மரபு உரைக்கு உறுதியளித்தல் என்ற பாங்கும் செயல்படுகிறது. அதற்கு மேற்குறள் சான்று.

மனம் அமைதி கொள்ளும் வகையில் பல உரைப்பகுதிகள் அமைந்துள்ளன.

~~ அதிகமான பொறுமையினாலோ அல்லது ஆணவத்தினாலோ ஒருவர் நமக்கு அளவு கடந்து தீங்கு செய்துவிட்டபோதிலும் நாம் அந்தத் தீங்கு நம்மைக் கீழ்மைப்படுத்திவிட்டதாக எடுத்துக் கொள்ளாமல் அவருடைய தவறு என்று எடுத்துக்கொள்வதின் மூலம் பொறுமை காத்து அவரை வென்றுவிடலாம். நம்முடைய தகுதி என்பது மற்றவர்களுடைய கூற்றால் நிர்ணயிக்கப்படுவதன்று. நம்முடைய செயல்களாலும் அடைவுகளாலும் நிர்ணயிக்கப்படுவது என்பதில் உறுதியாக நின்று பிறறால் அவமானப் படுத்தப்படும்போது நாம் அதை மனதளவில் ஏற்கமறுத்தால் நம்மால் பொறுமை காக்கமுடியும்.நம்முடைய பொறுமையினால் எதிராளி தம் நோக்கத்தைக் கைவிட்டுச் சில வேளைகளில் நம்மிடம் மன்னிப்புகூடக் கேட்கலாம் என்ற இந்த உரை ஆழமான பொறுமைக்கான உரையாக அமைகின்றது. இப்பகுதி மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவிடல் என்ற குறளுக்கு வரையப் பெற்ற உரையாகும். மனம் சார்ந்த இந்த உரை மின்னல் படிப்பவர்க்குப் புத்தொளி தருவது.

இதுபோன்ற பற்பல மின்னல் கீற்றுக்கள் இவ்வுரையில் உண்டு. திருக்குறள் சார்ந்து இயங்குபவர்கள், திருக்குறளைப் பரப்பும் நண்பர்கள், தோழர்கள் இந்நூலைப் படித்து இன்னும் பயன் பெறலாம். முடிந்தால் பேராசிரியர் அர. வெங்கடாசலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவரிடம் பழகலாம். கலந்துரையாடலாம். அவரை நம் ஊருக்குப் பேச அழைக்கலாம் . தொண்டுகள் செய்யக் காத்திருக்கும் அவரை நாம் இனம் காணுவோம். பயன்படுத்துவோம். வள்ளுவக்குடியில் செயலாற்றுவோம். (தொடர்பிற்கு – பேராசிரியர் அர. வெங்கடாசலம்> ஏ. 19. வாஸ்வானி பெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்சன், பெங்களுரூ. 560048

prof_venkat1947@yahoo.com 9886406695



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திகள் உண்டெனக் கூறப்படுகின்றது. இந்தப் பதினெட்டு ஸ்மிருதிகளும் இருபிறப்பாளர் அனைவருக்கும் பொதுவானவையா? அல்லது ஒவ்வொரு ஸ்மிருதிக்கும் இருபிறப்பாளர்களில் ஒவ்வொரு பிரிவினர் உரிமையுடையவரா? அதில் கூறப்பட்ட ஒழுக்கங்கள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? அல்லது அவை வெறும் அடையாளக் குறியா?
ஸ்மிருதி ஒழுக்கநூலேயன்றி ஞான நூலாகுமா? ஸ்மிருதி இருபிறப்பாளரைப் பிறரிடமிருந்து பிரித்து உயர்த்திக் கூறுகின்றது. வேதம் அவ்வாறு கூறுவதில்லை எனக் கூறப்படும் கருத்துப் பற்றி உங்கள் கருத்தென்ன? 
“மறையுடன் ஏனை நூல்களை எச்சந் தன்னுடன் மற்றைநல் வினையைக்
கறையறும் பாற்ப்பா ரோடுஞ்சூ திரரைக் காஞ்சியி னொடும்பிற நகரைப்
பிறைமுடிக் கட்வு ளோடரி யயனை ஒப்பெனப் பேசற்க பேசிற்
குறைவரு நிரயக் குழியில்நீ டூழு குளிப்பதற் கையமொன் றிலையே” (காஞ்சிப் புராணம். இது மிருதி வழக்குப் பற்றியது).’சிவ’ எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாள்னாயிருப்பினும் அவனைக் காணின் , அவனோடு கலந்து பேசுக; அவனோடுறைக;அவனோ டுண்ணுக” என்பது முண்டகோபநிஷத்து வாக்கியம் என்றும்,, இது சிவாத்துவைத பாடியம் 4-ஆம் அத்தியாயத்து 1-ஆம் பாதத்துப் 15ம் பாஷியத்தில் வருகிறது. இக்கால முண்டகோபநிஷத்துப் பிரதிகளில் இவ்வாக்கியம் இல்லை என்பதும் அறியப்படுகின்றது. இதனால் வேதம் பல்வருணத்தார்க்கும் பொது என்றும்மிருதி அவ்வாறு அன்று எனவும் பெரியோர் கருதுவர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் .

செய்யக் கூடாதாவற்றை செய்தால் கேடு வரும் . நீர்நிலைகளான ஏரி குளம் மற்றும் விளைநிலங்களில் வீட்டுமனை போட்டு கட்டடம் எழுப்பினால் மழைக்காலத்தில் தெருவுக்கு வரனும் . சில நேரம் வீட்டுக்குள் வரவும் போகவும் முடியாது .

செய்ய வேண்டியதை செய்யாமல் போனாலும் கேடுதான் . மழைக்கு முன்பே வடிகால் போக்கு வரத்தை சரிசெய்யாமல் விட்டால் தண்ணீரில் மிதக்கும் நமது நகரம் .



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Gopinath R தன்னுடைய நிலையைப் புதுப்பித்துள்ளார்.

"குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க: 
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் 
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது

தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை

இந்திர சிறுவன் சயந்தன் ஆக என 
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்"

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் மனையறம் படுத்த காதையில் கண்ணகியை அங்கங்களை விவரிக்கும் போது அவளுடைய முன் நெற்றி சிவன் தன் தலையில் அணிந்த பிறையை போலவும் புருவங்கள் மன்மதனின் கரும்பு வில் போலவும் இடை இந்திரனின் வஜ்ஜிராயுதத்தின் நடுப்பகுதியை போல் இருப்பதாகவும் அவளின் கண் முருகனின் வேலை ஒத்ததாக இருப்பதாகவும் கோவலன் புகழ்கிறான் வேலை முருகன் அன்னையிடம் இருந்து பெற்றதாகவும் அமிழ்தம் தோன்றும் முன்னரே இந்திரன் தோன்றியதாகவும் வஜ்ஜிராயுதம் இருபக்கமும் சூலமும் இடையில் பிடியும் உடையது என்றும் மன்மதன் கரும்பு வில் உடையவன் என்றும் சொல்வது புராண செய்திகள் பழந்தமிழ் நாட்டில் எவ்வளவு தெளிவாக உலவின என்பதை கூறுகிறது.

அடுத்தது அரங்கேற்று காதையில் வரும் இந்த வரிகள் அகத்திய முனிவரின் சாபத்தினால் ஜெயந்தன் மூங்கிலானதும் ஊர்வசி தேவதாசி ஆனதும் சாபம் நிவர்த்தி ஆக அந்த மூங்கில் தலைகோலாகி ஊர்வசி கையில் அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டு மாதவி ஊர்வசியின் வடிவினள் எனவே அவள் தலைக்கோல் பெற்றதால் சாபம் நீங்கப்பெற்றது இந்த மாதவி அந்த மாதவியான ஊர்வசியின் மரபிலே வந்தவள் குன்றாத சிறப்பினை உடையவள் என்று இந்த பாடல் கூறுகிறது. இந்த பாடலின் செய்தி வாயு புராணத்தில் வருவது. வாயு புராணம் கிபி 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே இந்த செய்திகள் கதைகள் தொன்மங்கள் பாரதமெங்கும் பரந்து விரிந்திருக்கும் அதனால் தான் 1500 ஆண்டுகள் முற்பட்ட ஒரு பழந்தமிழ் இலக்கியத்தில் இந்த புராண செய்திகள் பெரிய விளக்கமெல்லாம் இன்றி அப்படியே போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.
The Vayu Purana narrates a tale wherein Jayanta is cursed and turned into a bamboo. This tale is also told in context of devadasi lore with some variation. Once the sage Agastya arrived in Indra's court and was welcomed by Indra, by organizing a dance performance of the apsara Urvashi. In the performance, Urvashi and Jayanta looked in each other's eyes in love. The distracted Urvashi missed the beat and the dance went haywire. An agitated Agastya cursed Urvashi to be born on earth as a devadasi and Jayanta to be a bamboo tree in the Vindhya mountains. The duo bowed in reverence and prayed for mercy. The sage said that the curse will end when Urvashi will be presented with a talaikole (a bamboo staff, Jayanta) on her dance debut (Arangetram). As ordained, the lovers were released from the curse and returned to heaven, when Urvashi got united with Jayanta as the bamboo staff



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே.

நற்றிணை 216, மதுரை மருதன் இளநாகனார் எழுதியது குறுகு என்னும் பறவைகள் வாழும் கழனியின் கரையில் உள்ள வேங்கை மரத்தின் அடியில் அமைந்த மேடையில் அந்நியன் ஒருவனால் பாதிக்கப்பட்டு ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணி என்னும் பெண்தெய்வம் அமர்ந்திருக்கிறது அவள் கதையை பலர் கேட்டிருந்தாலும் அவளுக்காக வருந்துவோர் உண்மையில் அவளை தொழுவோர் மட்டுமே.இந்த பாடல் தான் பிற்கால சிலப்பதிகார கதைக்கு மூலம் என்கிறார்கள் உண்மையிலேயே சங்க காலத்தில் இப்படி ஒரு பெண் தெய்வம் இருந்திருக்கிறது ஆனால் சங்க பாடல்களில் எங்குமே இந்த பெண்தெய்வ பெயர் கண்ணகி என்றோ அதை பற்றிய வேறு குறிப்போ இல்லை பத்தினி தெய்வத்துக்கு கோயில் எடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் செங்குட்டுவனை பற்றிய பத்தின் தொகுப்பு பாட்டு கூறுகிறது ஆனால் அதன் காலம் இன்னும் ஒரு 200 ஆண்டுகள் கழித்து இருக்கலாம் அதில் கூட கண்ணகி என்னும் பெயர் வரவில்லை ஆனால் திருமாவுண்ணி என்னும் இந்த பெயரை பார்த்தால் கேரள சேர வாடை வீசுகிறது பிற்பாடு இந்த நாட்டார் கதையை மெல்ல பண்படுத்தி இலக்கியமாக்கியது தான் சிலப்பதிகாரம் போல.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kalavai Venkat Jataayu B'luru Gopinath R Java Kumar நான் சங்க இலக்கியங்கள் எனக் கருதுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. நான் சொன்ன 24 குறள்கள் இடம்பெறுவதும் இவற்றில்தான். இவற்றைப் பேராசிரியர் இராசமாணிக்கனார், கி. வா. ஜ. வின் திருக்குறள் ஆராய்ச்சியுரையில் பக்கம் 152-157-ல் குறிப்பிடுகிறார். இத்தொகைகள் திருக்குறளை சுட்டிக்காட்டுகின்றனவா அல்லது திருக்குறள் இவற்றினைச் சுட்டிக்காட்டுகிறதா என்ற வாதத்திற்கு வருவோம். 

மணிமேகலை, "பொய்யில் புலவன் பொருளுரைதேறாய்" என்று திருவள்ளுவரைப் பற்றிக் கூறுகிறது. இதிலிருந்து, ஒரு சாதாரணப் பார்ப்பனியான மருதியும் திருவள்ளுவர் பற்றி அறிந்திருக்கவேண்டுமென்று இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். மணிமேகலை ~ 170 CE வாக்கில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கொள்ளக் காரணங்கள் பல. V . R. இராமச்சந்திர தீக்ஷிதர் சிலப்பதிகாரத்திற்கு இட்ட உரைக்கால வாதங்கள் மணிமேகலைக்கும் பொருந்தும். மேலும், இந்திரவிழா, இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்தில் கொண்டாடப்படவில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. மன்னர் ஆதரவின்றி இதைக் கொண்டாட இயலாது. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின், மூவேந்தராட்சி முடிந்து களப்பிரராட்சி அமைந்ததால் இந்த விழாவும் மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிட்டது. சில நூற்றாண்டுகள் முன்பே வழக்கொழிந்த விழாவைப்பற்றி சாத்தனார் சொன்னால் யாருக்கு விளங்கியிருக்கும்? மணிமேகலையில், அன்று வழக்கிலிருந்த சித்தாந்தங்கள் பற்றிய நீண்ட விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, ஆஜீவிகம் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. ஆஜீவிகம் மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே வழக்கொழிந்துவிட்டது. ஆறாம் நூற்றாண்டில் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட பக்தி மார்க்கங்கள் பற்றிய விவாதங்கள் இல்லையென்பதும் மணிமேகலை அதற்கு மிக முற்காலத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மணிமேகலையில், புகார் பற்றிய விளக்கங்களுண்டு. அது இயற்றப்பட்டக் காலத்தே புகார் செழிப்பான நகரமாக இருந்ததும் தெரிகிறது. சங்க காலத்திற்குப் பின்னால், அதாவது ~ 250 CE-க்குப் பின், புகாருமிருக்கவில்லை அங்கு மையம் கொண்ட யவன வாணிகமும் நின்றுவிட்டது. எனவே, மணிமேகலை ~ 170 CE வாக்கில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கொள்ளவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் முன்பாவது திருக்குறள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

இலக்கியங்களின் பரிணாம வளர்ச்சியில் பொதுவாக மத, கடவுள்கள், தேவர்கள், மன்னர்கள், மற்றும் வரலாற்று விஷயங்களே முதலில் சொல்லப்படுகின்றன. சாதாரண மக்களின் கதைகள் பாடலாக இடம்பெறுவது அதற்குப் பின்னரே. இதற்கு முக்கியக் காரணம் உண்டு. இலக்கியம், சினிமா, நாடகம் எதுவானாலும், அது முதல் முறையாக மக்களுக்கு முன்னால் மேடையேறும்போது மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்த, அவர்கள் மனக்கண் முன் கொண்டு நிறுத்த இலகுவாக இருப்பது இவையே. மேலும், தமிழகம் 5-ம் நூற்றாண்டு BCE வரை நவீன கற்காலத்தில் இருந்தது. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் இலக்கியங்கள் மலர்ந்துவிடுகின்றன. அவை பரிணாம வளர்ச்சியடையவில்லை. இதிலிருந்து அவை வடக்கிலிருந்து உள்ளே வந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகளே என்று கொள்ளலாம். பாண்டியர்களும் தம்மை குஜராத்திலிருந்து வந்தவர்கள் என்று சங்கம் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

திருக்குறள் அவ்வாறு நாகரீகத்தை உள்ளே கொணர்ந்த நூல். எனவேதான் அது வடமொழி நூல்களைத் தழுவியமைந்திருக்கிறது. அதனால்தான் அதில் வடசொற்கள் கையாளப்படுகின்றன. திருக்குறள் 250 BCE-லிருந்து 100 CE-க்கு இடையே இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்பது என் கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மணிமேகலை சிலப்பதிகாரம் எல்லாம் தெளிவாக 8ஆம் நூற்றாண்டு காலத்தியது ராஜமாணிக்கனார் செய்தது எல்லாம் ஆய்வே அல்ல. மணிமேகலை சங்க பாடல் அல்ல அது பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூலும் அல்ல திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தைகளை சங்க காலத்தில் வேறு யாரும் ஏன் பயன்படுத்தவில்லை என்பதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் நகைப்பை வரவழைக்கின்றன. நான் பைபிளை தமிழில் மொழிபெயர்தால் அதில் நான் பயன்படுத்திய சொற்களை யாரும் பயன்படுத்த மாட்டார்களா. எந்த பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் குறள் குறிப்பிடப்படுகிறது சொன்னால் நலம். ‌

 ஐயா மணிமேகலைக்கு முந்தைய சிலப்பதிகாரம் திருவெண்காட்டின் சோம குண்டம் சூரிய குண்டம் இவற்றை பற்றி கூறுகிறது சங்க பாடல்களில் விலங்கு பகையல்லாது கலங்கு பகையறியா புகாரை பற்றி பல பாடல்கள் வந்து விட்டன இந்த சூரிய குண்டம் சோம குண்டம் பற்றி எந்த பாடல் கூறுகிறது என்று சொல்லுங்கள் வேண்டாம் சோம சூரிய என்று மதியையும் கதிரையும் விவரித்த பாடலை காட்டுங்கள் சம காலம் தானே. நான் பேசுவது மொழியியல் அது என்ன என்பதை தெரிந்து பேசுங்கள் நன்றி.

Kalavai Venkat Jataayu B'luru //சங்க இலக்கியத் தொகுப்பு முழுவதுமே களப்பிரர் காலத்திற்குப் பிறகு பொயு 5-6ம் நூற்றாண்டுகளில் செய்யப் பட்டது.// 

இதை ஏற்பதற்கில்லை. தென்னிந்தியாவில், காற்றில் ஈரம் அதிகமிருப்பதால், ஓலைச்சுவடிகள் விரைவிலேயே மோசமடைந்துவிடுகின்றன. பொதுவாக 
75-100 ஆண்டுகள் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயம். இதனால்தான், உ.வே.சா. அவர்கள் தேடிப்பிடித்த ஓலைச்சுவடிகளில், மிகக்குறைவானவையே 400 ஆண்டுகள் பழையனவாக இருந்தன. அவையும் மிக சேதமடைந்திருந்தன. அந்தக்காலத்தில், ஓலைச்சுவடிகளை நகலெடுப்பது நிறைய செலவாகும் செயல். நகலெடுக்கும் ஆட்களும் குறைவே. களப்பிரர் காலம் 250 வருஷம் நீடித்தது. திருக்குறள், காவியங்கள், அல்லது மதம் சார்ந்த விஷயங்களை வைசியர்கள் மற்றும் நிலச்சுவான்தார்கள் காசுகொடுத்து நகலெடுப்பார்கள். ஏனென்றால், அவை மரபு சார்ந்த விஷயங்கள். பல சங்கப்பாடல்கள், சாதாரண மக்கள் வாழ்வைப்பற்றியன. அவை களப்பிரர் காலத்திற்கு முன்பே திரட்டப்பட்டிருக்காவிடில், அவற்றை மரபு சார்ந்ததாகக் கருதியிருக்கமாட்டார்கள். நகலுமெடுத்திருக்கமாட்டார்கள். அதிலும், பாணர்-விறலியர் வாழ்வுமுறை ஜைனர்கள் சித்தாந்தத்திற்கு முரணானது. அதனால்தான், அவர்கள் சமூக நிலையும் வீழ்ந்தது. களப்பிரர் காலத்தில் அந்தப்பாடல்கள் யாவும் நகலெடுக்கப்படாமல் அழிந்திருக்கும். அவ்வாறு நடக்கவில்லை. 

களப்பிரர் காலத்திற்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்பாவது பாடல்கள் திரட்டப்பட்டு, அறம் புறமென வகைப்படுத்தப்பட்டிருந்தால்தான், மரபு தோன்ற அவகாசம் கிட்டியிருக்கும். அப்போதுதான், களப்பிரர் காலத்திலும், வைசியர்கள் மற்றும் நிலச்சுவான்தார்கள் காசுகொடுத்து நகலெடுத்துத் திரட்டுக்களைப் பாதுகாத்திருப்பார்கள். பொது சகாப்தத்திற்கு முன்பே (அதாவது 2,000 ஆண்டுகள் முன்பே) பாடல் வகைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், அந்த வகைகளுக்கேற்ப கவிஞர்கள் பாட்டெழுதி பரிசு பெற்றார்கள் என்பதும் என் கருத்து. வகைப்படுத்தப்பட்ட பொழுதோ அல்லது திரட்டப்பட்ட பொழுதேனும் 
கடவுள் வாழ்த்துக்களும் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

 

Kalavai Venkat Gopinath R நீங்கள் பேசுவது மொழியியலல்ல. சொற்பிறப்பியல் கூட அல்ல. சொற்பிரயோக கடன்வாங்கலைப் பற்றியே பேசுகிறீர்கள். உங்கள் ஆட்சேபனைக்கு நான் ஓரிரு முறைகள் பதில் சொல்லியிருக்கிறேன். இன்னொரு முறை சொல்கிறேன். திருக்குறள் சங்கப்பாடல்களினும் முன்னதாக இருந்தாலும் அதில் ஏன் வடமொழி சொல் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை விளக்கியிருக்கிறேன். தயவுசெய்து படியுங்கள். அதற்கு இன்னொரு உதாரணமிடுகிறேன். ஜோதிடம் கிரேக்கத்திலிருந்து நம் நாட்டினுள் வந்தது. பழைய வடமொழி நூல்களில், பௌலீஷ சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அதை உட்கொணர்ந்தவர் பௌல் (Paul) என்கிற கிரேக்கராக (அல்லது யவனராக) இருந்திருக்கவேண்டும். சிம்மம் என்று இராசிப்பெயர் தோன்றுவதுற்கு முன் சமஸ்க்ரித நூல்களில் கூட லியோபேஷம் என்ற கிரேக்கப் பெயரை அப்படியே கையாண்டிருக்கிறார்கள். எங்கிருந்து அறிவு அமைப்பு வருகிறதோ, அந்த ஊர் சொற்கள்தான் பழையை நூல்களில் எதிர்பார்க்கவேண்டும். எனவே, வடமொழி சொல் தாக்கம் அதிகம் இருக்கும் திருக்குறள் போன்ற நூல்களே பழமையானவை. காரணம் நாகரீகம் வடக்கிலிருந்து தமிழகம் வந்ததே. 

இராசமாணிக்கனார் எழுதியதைப் படிக்காமலேயே எப்படிப் புறந்தள்ளுகிறீர்கள்? மேலும் அவரிடாத என் சொந்த வாதங்களையும் விட்டிருக்கிறேன். அவற்றையும் கவனமாகப் படியுங்கள். உங்கள் பிரதிவாதங்களை இடுங்கள்.

Gopinath R 'அச்சமே கீழ்களது "ஆசாரம்" எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது' இந்த ஆசாரம் என்கிற வடமொழி வார்த்தை குறளில் இருக்கிறது சங்க பாடல்களில் இருக்கிறதா? அல்லது 12ஆம் நூற்றாண்டு வரை குறளை யாரும் படிக்கவில்லையா?

குறள் 5ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு பின் அதற்கும் பிற்பட்டது சிலப்பதிகாரம் மணிமேகலை. சங்க இலக்கியங்களில் கலித்தொகை பரிபாடல் திருமுருகாற்றுப்படை போன்றவை பொதுவான சங்க காலம் என்று சொல்வதற்கு பிற்பட்டவை அதே போல் சில அகம் புறம் பாடல்களும் உண்டு.

Kalavai Venkat Gopinath R நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யும் பிழை சமகாலத்திய நூல்களில் ஒரேவிதமாக சொற்கள் கையாளப்படவேண்டுமென்று சொல்வது. வை.மு.கோ., கடலங்குடி போன்றோர் நடைகளில் கையாளப்பட்டிருக்கும் பல சொற்கள் மறைமலை அடிகள், பாரதிதாசன் போன்றோர் நடைகளில் கையாளப்பட்டிருக்காது. அவர்கள் சமகாலத்தவரே. அதே போல, வை.மு.கோ. வாழ்ந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆனாலும், வைணவ வழி வந்தோர் தவிர மற்றோர் எழுத்துக்களில் அவர் பிரயோகம் செய்த பல சொற்கள் இருக்கமாட்டா. எழுத்துச் சாயல்கள் காலத்தைவிட மரபு சார்ந்தே அமையும்

Kalavai Venkat மணிமேகலையும், சிலப்பதிகாரமும் ஏழாம் நூற்றாண்டு நூல்களே என்ற வாதத்தை முதலில் வைத்தவர் ஏ. எல். பஷம். தமிழ் வரலாற்றை கிறிஸ்தவத்திற்குப் பிற்காலத்தானதே என்று நிறுவுவதில் ஈடுபட்டவர். இவருக்கு முன்னால் இதைப்பற்றி ஆராய்ந்த கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், திக்நாகரின் பிரமாண சமுச்சயத்தைப் பற்றி விரிவாக எழுதுகையில், அதில் உள்ள கோட்பாடுகளின் பழமையான பதிப்பே மணிமேகலையில் காணப்படுகிறது என்று வாதிட்டார். இதற்கு பிரதிவாதமிட்ட பஷம், "புகழ்பெற்ற பௌத்த நியாயவாதியான திக்நாகர், ஊர்பேர் தெரியாத அனாமதேயமான சாத்தனார் எழுதியதை எங்காவது கையாள்வாரா?" என்று வியக்கிறார். 

இது அபத்தமான வாதம் மட்டுமில்லை அறியாமையில் தோய்ந்ததுமாகும். சாத்தனார் ஒன்றும் புதியதான பௌத்த தத்துவத்தை இடவில்லை. ஏற்கெனவே இருப்பதைத்தான் சுருக்கித் தருகிறார். திக்நாகரும் புதியதான பௌத்த தத்துவத்தை இடவில்லை. இருப்பதை செம்மைப்படுத்துகிறார். 

ஆனால் பக்ஷத்தின் அபத்தவாதம் வேதவாக்காக மாறிவிட்டது! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் ஆஜீவிகர்களின் கடுந்தவம் பற்றியும், மதுரையில் அவர்களிருந்த பெரும் ஆஸ்ரமம் பற்றியும், கண்ணகியின் வாழ்வு முற்றியபின் அவள் தந்தை ஆஜீவிகரானதுபற்றியும் கூறுகின்றன. இதெல்லாம் ஏழாம் நூற்றாண்டு நடப்புகள் என்பது உளறல். சைவ மற்றும் வைணவ பக்தி திளைத்த காலமது. ஜைனர், பௌத்தர் பற்றி சொன்னவர்கள் ஆஜீவிகர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இல்லை சாத்தனார் பக்தியைக் கண்டுகொள்ளவில்லையா? இல்லை, நாடே மாலின்மீதும், சிவன்மீதும் பாடலிடுகையில், இவர் மட்டும் யாருக்கும் புரியாத இந்திரவிழாவை 28 நாட்கள் கொண்டாடியதாகப் பிதற்றுகிறாரா? புகார் துறைமுகம்தான் இருந்ததா? 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Ramachandran Kalavai Venkatஐயா,பட்டினப்பாலை சமகால நிலவரத்தைப்பதிவு செய்துள்ளது. அதனை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாம் தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பெரும்பாணாற்றுப்படையையும் இயற்றியுள்ளார். தொண்டைமான் வம்ச ஆட்சித் தொடக்கம் குறித்து மணிமேகலை கடல்கோளோடு தொடர்பு படுத்திப்பேசுகிறது (மணிமேகலை தொண்டைமான் என்ற பெயரைக்குறிப்பிடவில்லை என்பது உண்மையே. ஆனால் அந்தத் தொன்மம் பல இலக்கியச்சான்றுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது) எனவே சிலம்பும் மணிமேகலையும் பழங்கதை நிகழ்வுகளையும் புனைவையும் கலந்து துல்லியமான பின்புலத்துடன் பதிவு செய்கின்றன என்றே கொள்ளவேண்டும்.

 

Jataayu B'luru // வடக்கிலிருந்து உள்ளே வந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகளே என்று கொள்ளலாம். பாண்டியர்களும் தம்மை குஜராத்திலிருந்து வந்தவர்கள் என்று சங்கம் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருக்குறள் அவ்வாறு நாகரீகத்தை உள்ளே கொணர்ந்த நூல். எனவேதான் அது வடமொழி நூல்களைத் தழுவியமைந்திருக்கிறது. அதனால்தான் அதில் வடசொற்கள் கையாளப்படுகின்றன. // இது மிகவும் வேடிக்கையான, நகைப்பிக்குற்ரிய கருத்து. திருக்குறள் நாகரீகத்தை "உள்ளே கொணர்ந்த" நூலெல்லாம் அல்ல. அது உருவாவதற்கான சூழல் அதற்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் உருவாகியிருந்ததாலேயே அது தோன்றியது Kalavai Venkat. இராசமாணிக்கனார் நல்ல தமிழறிஞராக இருக்கலாம்.. ஆனால் ஒரே மாதிரியான சொல்/பொருள் கோவைகள் குறளிலும் சங்க இலக்கியங்களிலும் இருப்பதால் குறள் முற்பட்ட நூல் என்பாரானால், அவரது வரலாற்று முறைமையே தவறானது.

 

Jataayu B'luru // பொதுவாக மத, கடவுள்கள், தேவர்கள், மன்னர்கள், மற்றும் வரலாற்று விஷயங்களே முதலில் சொல்லப்படுகின்றன. சாதாரண மக்களின் கதைகள் பாடலாக இடம்பெறுவது அதற்குப் பின்னரே // சங்க இலக்கியங்களில் வெறும் "சாதாரண மக்களின் கதைகள்" என்று யார் சொன்னது? ஒவ்வொரு சங்கப் பாடலிலுமே நீங்கள் கூறும் எல்லா அம்சங்களும் உள்ளன என்பதை அவற்றைக் கற்றவர்கள் யாவரும் உணர முடியும். ஊருக்கு வழி சொல்லும் பாடலில் வேதம் ஓதுவது பற்றி இருக்கும், காதலி தனது ஏக்கத்தைக் கூறும் பாடலில் செவ்வேள் முருகன் அசுரரை வென்ற காதை இருக்கும், மன்னனது வள்ளன்மை பற்றி புகழும் பாடலில் கடவுளர் குறிப்பு இருக்கும்.. இப்படித் தானே எல்லா பாடல்களும் உள்ளன Kalavai Venkat. திருக்குறளில் வரும் கனகச்சிதமான இறைமாட்சி, ஒற்று, அமைச்சு போன்ற அரசநீதி சமாசாரத்திற்கும் சங்கப் பாடல்களில் வரும் ஊருக்கு ஊர் நடக்கும் போர்கள், எரிபரந்தெடுத்தல் போன்றவற்றுக்கும் எவ்வளவு கலாசாரத் தொலைவு உள்ளது என்று பாருங்கள்.Gopinath R கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

Gopinath R சங்க பாடல்கள் கோதை என்று பூமாலையை குறிக்கின்றன ஆனால் அது ஆழ்வார்கள் காலத்தில் பெண்ணை குறிக்கும் சொல்லாக மாறுகிறது இதே அர்த்தத்தில் தான் சிலம்பும் அதை பயன்படுத்துகிறது இதோடு வர்ணம் சாதி போன்ற பல பிற்காலத்திய வடமொழி சொற்கள் அதில் பெருமளவு நிரவி இருக்கின்றன நான் வாயுபுராண கதை ஒன்றை வேறு அதிலிருந்து எடுத்து காட்டியிருக்கிறேன் பேராசிரியர் சங்கர நாராயணன் பஞ்சதந்திர கதையில் சொல்லப்படும் தண்ணீர் குடத்துடன் வரும் பார்ப்பனத்தி ஒருத்தி தான் வளர்த்த கீரிப்பிள்ளையை கொன்று விடும் கதையை பற்றி கூறி 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை என்று தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Gopinath R Kalavai Venkat நான் எங்குமே இல்லை என்கிறேன் நீங்கள் இவர் போல அவர் இல்லை என்கிறீர்கள் வைரமுத்து போல நா.முத்துக்குமார் எழுதவில்லை அது எனக்கும் தெரியும்.நீங்கள் மொழிக்கூறுகளின் அடிப்படைகளையே புரிந்துகொள்ளவில்லை. காமம் என்கிற வடமொழி சொல் இன்று வரை அதே பெயரில் தான் தமிழில் கையாளப்படுகிறது சங்க காலத்திலும் அப்படியே ஆனால் சங்கு சக்கரம் இவை இரண்டும் பெருமாளை குறிக்கும் பாடல் ஒன்றில் நேமி என்றும் வளை என்றும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது இது சங்க காலம் முழுக்க தொடர்கிறது சக்கரம் என்ற சொல்லும் சங்கு என்கிற சொல்லும் தமிழில் வருமானால் அது சங்க காலத்தை சேர்ந்த மொழிப்பயன்பாடு அல்ல என்பது தான் பாலபாடம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Jataayu B'luru எந்த மொழியிலும் ஆரம்பகால இலக்கியம் என்பது பலர் எழுதிய பழைய பாடல்களின் தொகுப்பாகவே இருக்கும். பல ரிஷிகளின் நிறைமொழிகளின் தொகுப்பே வேதங்கள். அதே போல பல புலவர்களின் பாடல்கள் தொகுப்பு எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும். இந்தப் பாடல்களில் உள்ளவை நேரடியான வாழ்க்கைச் சித்தரிப்புகள், இயற்கை வர்ணனைகள் மற்றும் சில நெறிகள் சார்ந்த கருத்துக்கள். இவற்றில் பல பாடல்கள் தமிழ் நிலத்தில் சீரான முடியாட்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தவை என்பது கண்கூடு. ஆனால் திருக்குறள் கச்சிதமான கட்டுமானமும் தெளிவான நீதி சார்ந்த பார்வையும் கொண்ட நூல். அது சங்கப் பாடல்களுக்கு முற்பட்டதாக இருக்க எந்த சாத்தியமும் இல்லை. // பல குறள்கள், சங்கத்திரட்டில் இடம்பெற்றிருக்கின்றன எனவே, திருக்குறள், சங்கத்திற்கு முற்பட்டதொரு படைப்பாக இருக்க வாய்ப்புக்கள் மிக அதிகம் // என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட சொல்லடைவு இரண்டிலும் இருந்தால் அது சங்க நூலிலிருந்து திருக்குறளுக்கு வந்திருக்கீறது என்றே கொள்ள வேண்டுமே அன்றி எதிர்த்திசையில் அல்ல. மேலும் சங்கத் திரட்டில் உள்ள பாடல்கள் ஒரே காலத்தியவை அல்ல. அவற்றில் மிக முந்தையதற்கும் மிகப் பிந்தியதற்கும் 600 ஆண்டுகால இடைவெளி உள்ளது. மிகப் பிந்திய காலத்தவை திருக்குறளின் சமகாலத்தவையாகவோ அல்லது சிறிது பிற்பட்டவையாகவோ இருக்கலாம். ஆனால் அதைவைத்து ஒட்டுமொத்த தொகுப்புக்கும் முந்தையதாக திருக்குறளைக் கொண்டு போவதற்கு எந்த ஆதாரமுமில்லை. எனக்குத் தெரிந்து எந்த பொருட்படுத்தத் தக்க அறிஞரும் இவ்வாறு கூறியதில்லை. // எனவேதான் அது வடமொழி நூல்களின் சாராம்சமாக அமைகிறது // என்பது சரியல்ல Kalavai Venkat. டாக்டர் இரா.நாகசாமியின் 
Abridgement of Shastras என்ற அந்தக் கருதுகோளின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதுபற்றித் தனியாக எழுதுவேன்

 

Gopinath R திருக்குறளில் ஒரு குறள் தும்மலை பற்றியது, யாரோ நினைத்ததால் தும்முகிறோம் என்கிற ரீதியில் செல்லும் அந்த குறள் காமசாஸ்திரத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று வையாபுரி பிள்ளை கூறுகிறார் பல காமத்துப்பால் பாடல்கள் சங்க அகப்பாடல்களை ஒத்து இருக்கிறது அதோடு நீதிசதகம் உள்ளிட்ட நூல்களில் இருந்தும் குரல் தன்னுடைய கருத்துக்களை எடுத்துக்கொண்டுள்ளது.

Ramachandran பொ. யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமலை பிராமிக் கல்வெட்டில் மெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. ( புள்ளி பற்றிய சுவையான கல்வெட்டுச் செய்தி: சிரவண பெளகோளாவில் கொமடேஸ்வரர் சிற்பத்தின் கீழுள்ள தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டில் செய்வ்வித்தான் என்ற சொல்லில் "செ" புள்ளி வைத்து எழுதப்பட்டுள்ளது- குறில் என உணர்த்துவதற்காக. இது தொல்காப்பிய விதிப்படி அமைந்தது)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kalavai Venkat Gopinath R //திருக்குறள் 5-6 ஆம் நூற்றாண்டு காலத்தில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்// 

சங்கத்தமிழ் நூல்களில் மட்டும் 24 இடங்களில் குறள்களை சுட்டிக்காட்டுகிறார்கள். இதைத் தவிர மணிமேகலை போன்ற நூல்களிலும் குறள்கள் இடப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்கள்
 ~ 225 CE-க்கு முன்பாகத்தான் இடப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை மேலே இட்டிருக்கிறேன். எனவே, திருக்குறள் அதற்கு முற்பட்டதே.

//அதன் பல சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்று வராததே அது பிற்காலத்திய நூல் என்பதற்கு சான்று//

இது ஒரு வாதமே அல்ல. திருக்குறள் வடமொழி நூல்களை சுருக்கித் தருகிறது. எனவே, அது எந்தக் காலத்தில் எழுதப்பட்டதாக இருந்தாலும், அதில் வடமொழி சொற்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம்? ஒரே காலத்தில் எழுதிய நூல்களில் ஒரே போன்ற நடையோ சொற்பிரயோகமோ இருக்கவேண்டிய அவசியமில்லை. கடலங்குடி எழுத்துக்களும், ஈ.வெ. ரா. எழுத்துக்களும் ஒரே போலவா இருக்கின்றன? சொற்பிரயோகத்திலும் நடையிலும் எவ்வளவு வேற்றுமை? வேளுக்குடி உரைகளும், வைரமுத்து உரைகளும் ஒரே போலவா இருக்கின்றன? சொற்பிரயோகத்திலும் நடையிலும் எவ்வளவு வேற்றுமை? ப்ராஹ்மணத் தமிழிலும், கவுண்டர் தமிழிலும் பல வேற்றுமைகள் - அவர்கள் ஒரே ஊரில் வசித்தாலும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Gopinath R "கற்புத்தான் இலள்; நற்றவ உணர்விலள்;

வருணக் காப்பு இலள்; பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்;
இதுவோ அன்னாய், காமத்து இயற்கை?
இதுவே ஆயின் கெடுக தன் திறம்" சங்க பாடல் ஒன்று நாற்பால் என்று நான்கு வர்ணத்தை கூறுகிறது அதற்கு பல காலம் பின் வந்த மணிமேகலை நேரடியாக வர்ணம் என்கிற வடமொழி சொல்லை பயன்படுத்தி விடுகிறது இதை சிலம்பும் சொல்கிறது அது போக சாதி என்கிற வார்த்தையை அதே பதத்தில் பயன்படுத்துகிறது இது தான் மொழி கலாசார மாற்றம் இவை தான் கால நிர்ணயத்தில் பெரும் பங்காற்றுகிறது. சிலம்பும் மணிமேகலையும் கதை மாந்தர் உட்பட நூற்றுக்கணக்கான வடமொழி தொன்மங்களையும் சொற்களையும் கொண்டுள்ளது அது குறளுக்கும் பொருந்தும் ஆனால் நற்றினை குறுந்தொகை போன்றவற்றில் அந்த பயன்பாடு வெகு சில ஆக அவற்றின் காலம் இன்னும் மூத்தது.

Gopinath R பகவான் என்ற சொல்லை திருவள்ளுவர் மட்டுமே பயன்படுத்தினார் அவருக்கு பின்பு எழுதப்பட்ட நூல்களில் அந்த வார்த்தையை பயன்படுத்த ஏனோ யாருக்கும் தோன்றவில்லை என்பதெல்லாம் வாதம் அல்ல. மொழியியல் அப்படி உருவாவது அல்ல. திருவள்ளுவர் மது, புலால் மறுப்பு பற்றி பேசுகிறார் சங்க பாடல்களில் அவை கொண்டாடப்படுகிறது சம காலத்தில் உருவான நூல்கள் அல்ல இவை. மணிமேகலை சிலப்பதிகாரம் பற்றி வையாபுரி பிள்ளை எழுதியதை படியுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Gopinath R தொல்காப்பியம் ஒட்டகத்தை குறிக்கிறது பொயு 9ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவிலேயே ஒட்டகம் இருந்ததாக தெரியவில்லை அதோடு நீங்கள் சொன்ன புள்ளி எழுத்து வடிவம் இவை அதன் காலத்தை 7-12 ஆம் நூற்றாண்டிற்கு தான் கொண்டு செல்கிறது. யாப்பருங்கல காரிகை, நன்னூல், தொல்காப்பியம் மூன்றும் சம காலத்தவையாக இருக்கலாம்.

Dev Raj அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய....... சங்க இலக்கியத்தில் ஒட்டகம் இடம் பெறுகிறது

Gopinath R காய்ந்த வெள்ளை எலும்பு ஒட்டகத்தின் பசி தீர்க்கும் என்று வருகிறது ஒட்டகம் என்று எலும்பை தின்றது. இது குறிப்பிடும் ஒட்டகம் எது. தென்னிந்தியாவில் ஏது ஒட்டகம் அதுவும் 8ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்தியாவிலேயே ஒட்டகம் கிடையாதே. இந்த ஒட்டகத்தை தான் தொல்காப்பியம் குறிக்கிறதா.

Gopinath R "ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்" இது சிறுபாணாற்றுப்படை ஒய்மா நாட்டு நல்லியக்கோடனை நந்தத்தனார் பாடியது திருமுருகாற்றுப்படை உடன் இதன் காலமும் ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு ஆனால் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டது இது குறிக்கும் ஒட்டகம் தான் தொல்காப்பியம் கூறுவது நந்தத்தனார் வடவர் அவர் ஒட்டகத்தை அன்று அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு.

Gopinath R திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றி குறிப்பிடுகின்றன.

Gopinath R ‌"விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்" இந்த வேலூர் சிறுபாணாற்றுப்படை குறிப்பது இன்றைய வேலூர் தானே.

Gopinath R " தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த" பெரியாழ்வார் வரிகள் காலம் எட்டாம் நூற்றாண்டு. இதற்கு முன்னர் தங்கை என்ற சொற் பிரயோகம் இல்லை என்று நினைக்கிறேன் அது சிறுபாணாற்றுப்படையிலும் பயின்று வருகிறது அதே அர்த்தத்தில் "உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை" ஆக இது கட்டாயம் சம காலத்தை சேர்ந்ததே.

Gopinath R சங்க பாடல்களில் மிக பழைய பாடல்கள் ராவணனை அரக்கன் என்று குறிக்கும் பாடல்கள் கூட இலங்கையை ஈழம் என்று தான் அழைக்கிறது. முதலில் தொன்மா இலங்கை, நன்மா இலங்கை என்று நல்லியக்கோடனை பாட்டுடைத் தலைவனாக கொண்ட சிறுபாணாற்றுப்படையும் அதே ஒய்மா நாட்டு வில்லியாதனை பாடும் புறம் 379 ம் தான் மாவிலங்கை என்கிற திண்டிவனம் அருகில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊர் பற்றி பேசுகிறது. இவை சங்க பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும் பொதுவாக சங்க காலம் என்று நம்பப்படும் காலத்தை சேர்ந்தவை அல்ல.

Ramachandran Gopinath R ,உப்புவேலூர் என்ற ஊர். மரக்காணம் பகுதியில் உள்ளது.

Ramachandran Gopinath R அக்கை மூத்தவள். அங்கை இளையவள். தமக்கை என்பது போல் தமங்கை. தங்கை எனத்திரிந்தது.

Gopinath R சங்க காலம் பொயுமு 3ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது என்பதும் தவறு. சேர மன்னர்களில் மூத்த உதியன் சேரல் பொயு முதலாம் நூற்றாண்டு தான். அதிக பட்சமாக பொயுமு முதல் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் துவங்கி இருக்கலாம். மாமூலனார் நந்தர்கள் மௌரியர்களை குறறிப்பிடுவதை வைத்து பேசக் கூடாது அவை சமகாலத்தியது அல்ல அதோடு அசோகன் குறிப்பிடும் சேர சோழ பாண்டியர் தமிழ் மன்னர்கள் அல்லர் அவர்கள் வடக்கிருந்து வந்து இங்குள்ள சிறுகுடி மன்னரை அடக்கி பேரரசை நிறுவினர் அசோகர் காலத்தில் அவர்கள் தமிழில் பேசினரா என்பதே கேள்விக்குறி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kalavai Venkat Jataayu B'luru மிக சரியாகக் கூறியிருக்கிறீர்கள் . மேலும் சில கருத்துக்கள்:

1. தமிழகத்திற்கும், யவனர்களுக்குமான வியாபாரத்தொடர்பு ~ 225 CE-ல் முடிந்துவிட்டதாக நாணயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கருதலாம். மேலும், அதற்குப்பின் வந்த களப்பிரர் தமிழிலக்கியங்
களைப் பேணிக்காத்ததற்கான ஆதாரமில்லை என்பதாலும், இசைவாணர் மரபிற்கு எதிரான நிலை கொண்ட ஜைனத்தை ஆதரித்தார்கள் என்பதாலும், இசைவாணர் மரபு சங்க இலக்கியங்களின் முக்கிய அங்கமென்பதாலும், சங்ககாலம் ~ 225 CE-ல் முடிந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

2. தொல்காப்பியமும் களப்பிரர் காலத்திற்குப் பின்னரே இயற்றப்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே 5- அல்லது 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இதைத் திட்டவட்டமான நிலையாகக் கொள்ளக்கூடாது. ஜைனர்களுக்கும் இலக்கணம் முக்கிய அங்கம். எனவே ஆதரித்திருக்கலாம். மேலும், யாரேனும் ஒரு வணிகர் ஆதரித்திருந்தாலும், அதற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில், அதைத் தொல்காப்பியர் இயற்றியிருக்கலாம். ஆனால், 1- அல்லது 2-ம் நூற்றாண்டிற்கு முன் கொண்டுசெல்வது கடினம். 

3. தொல்காப்பியம் அதைவிடப் பழமையானது, ஆனால், லிபி சார்ந்த விஷயங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன என்ற வாதம் ஓரளவு சாத்தியம். அதே போல, கல்வெட்டு ஆதாரத்தை மட்டுமே கொண்டு புள்ளி எழுத்தின் பரிணாமத்தைத் திட்டவட்டமாகக் காலவரையறுக்கமுடியாது. அதற்கு முன்னரே, ஓலைச்சுவடிகளில் அது இடம்பெற்றிருக்கவேண்டும். இல்லையேல், கல்வெட்டு யாருக்குப் புரியும்? எனவே இதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, தொல்காப்பியம், 1- அல்லது 2-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு, அதில் புள்ளி எழுத்தைப் பற்றிக் கூறப்பட்டது என்றும், ஆனால், கல்வெட்டு சில நூற்றாண்டுகள் கழித்தே செதுக்கப்பட்டன என்பதும் சாத்தியமே. 

4. பல குறள்கள், சங்கத்திரட்டில் இடம்பெற்றிருக்கின்றன. காவியங்களிலும் இடம்பெறுகின்றன. எனவே, திருக்குறள், சங்கத்திற்கு முற்பட்டதொரு படைப்பாக இருக்க வாய்ப்புக்கள் மிக அதிகம். எனவேதான் அது வடமொழி நூல்களின் சாராம்சமாக அமைகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அறம் = வேத வழி

திருக்குறள் = வேத வழி நூல்

குறள் 28: ஒரு இடத்தின் பெருமையை அந்த இடத்தில் ஓதப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் வழியான மந்திரங்களை வைத்து அறிந்துகொள்ளலாம்.

குறள் 259: அஹிம்ஸை என்று வைதீக நூல்கள் போற்றும் வழிப்படி, உயிர்களைக் கொல்லாமல் மாமிசம் உண்ணாமல் வாழ்வது, ஆயிரம் வேத வேள்விகளைக் காட்டிலும், உயர்ந்தது.

குறள் 413: எழுதாக் கிளவி எனப் போற்றப்பட்டு, காதினால் கேட்கப்படும் கேள்வியாக இருப்பவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள். அந்த வேதங்களைக் காதினால் கேட்பவன் அடையும் உயர்வானது, வேதங்கள் ஓதித் தரப்படும் வேள்விகளின் உணவை உண்ணும் தேவர்களின் உயர்வுக்கு இணையானது.

குறள் 543: ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைச் சரியாக ஓதச் செய்ய வழிவகுப்பதாக அரசனின் ஆட்சி இருக்க வேண்டும்.

குறள் 560: அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் ஏற்படும் மிகப் பெரிய கேடுகளில் ஒன்று, பிராமணர்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை கற்காமல், கற்பிக்காமல் போய்விடுவார்கள் எனும் கொடும் நிலை.

குறள் 847: ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மையை உணர்ந்து அதன் வழி நடக்காவிட்டால், நாசமாகப் போய்விடுவாய்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவள்ளுவருக்கு சமஸ்கிருத மொழியும் அதில் இயற்றப்பட்ட பகவத் கீதையும் அத்துபடி என்பதற்கு ஒரு சான்று இருக்கிறது.

கீதையில்:

“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)
என்று ஒரு ஸ்லோகம் வருகிறது.

இதே போல உபநிஷதத்தில்

“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –என்று ஒரு மந்திரம் வருகிறது.

இதே ‘ஸ்டைலில்’ -- திருவள்ளுவரும்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை --- (குறள் 12) என்று பாடுகிறார்.

இதற்கு முன் தமிழில் எவரும் இப்படி ஒரு செய்யுள் இயற்றியதில்லை.

அதே போல ...

கீதையில் தானம், தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் 
(கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14-ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம் ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது).

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின் 
(குறள் எண்: 19)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை
(குறள் எண்: 295)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது 
(குறள் எண்: 29)

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
(குறள் எண்: 118)

என்று துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மண்மிசை அவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5

ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக    10

பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்


 

முருகா! துளசி மாலையும் கருடக் கொடியும் உடைய திருமாலும், எருதில் ஊரும்சிவபெருமானும், தாமரையில் தோன்றிய ப்ரம்ம தேவரும்,அவரிலிருந்து தோன்றி, உலகின் இருளைப்போக்கும் பன்னிரு ஆதித்யர்களும், மருத்துவர் இருவரும், அஷ்ட வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், அஷ்டதிக்குப் பாலர்களும், பிற தேவர்களும், அஸுரர்களும், வேதத்தில் சிறந்த முனிவர்களும், உன்னைத் தரிசிக்கும் பொருட்டு, இம்மண்ணுலகில் உனக்கேற்ற இடமாக இருக்கிறது உன் திருப்பரங்குன்றம்.  அதனால் அது இமயமலைக்கு ஈடாயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

குணரீதியான பிராமணியம் பேசும் "ஆரிய "புத்தர் போலத்தான்" தமிழ்" திருவள்ளுவரும். இது திருவள்ளுவர் சாதி, குலம் ஒழித்த கதை. இதோ, "அய்யன் "வள்ளுவர் சொல்கிறார்.

"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்."
-----திருக் குறள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

वेदोखिलो धर्ममूलं!!

நாலாரணப் பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகுமென்று பாராட்டுமே - நூலாய்ந்த
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந்து ஓதும் உலகு.
-'கவிமணி' தேசிக விநாயகம்பிள்ளை

Jataayu B'luru

வேதம் பசு; அதன் பால் மெய்யாகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதமிகு
நெய்யின் உறுசுவையா நீள் வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்.

- மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் நூலுக்கான பாயிரத்தில் உள்ள வெண்பா

[போதமிகு - ஞானம் நிறைந்த; நீள்வெண்ணெய் - திருவெண்ணெய்நல்லூரைக் குறித்தது]

சைவநெறி வேதமார்க்கம் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் இந்த அழகிய வெண்பாவைப் பார்த்த உடனே பகவத்கீதைக்கான பாரம்பரிய தியான சுலோகம் தான் நினைவில் வருகிறது (வைஷ்ணவீய தந்த்ரஸாரம் என்ற நூலில் உள்ளது).

ஸர்வோபனிஷதோ³ கா³வோ
தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ன꞉।
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர்போ⁴க்தா
து³க்³த⁴ம்ʼ கீ³தாம்ருʼதம்ʼ மஹத் ॥

உபநிஷதங்கள் அனைத்தும் பசுக்கள்
கறப்பவனோ ஆயர்குலச் செல்வன் கோபாலன்.
கன்றுக்குட்டி பார்த்தன்.
கறந்த பால் – புவியில் நல்லறிவுடையோர் அனைவரும் அருந்தும் கீதையெனும் பேரமுதம்.

வேதப்பசு என்ற இதே உருவகத்தை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை திருக்குறளுக்கும் கூறுகிறார்.

நாலாரணப் பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகுமென்று பாராட்டுமே - நூலாய்ந்த
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந்து ஓதும் உலகு.

[நாலாரணம் - நால் +ஆரணம், நான்கு வேதங்கள்; மறுவில் - குற்றமில்லாத]

மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று பாடல்கள். ஒரேவிதமாக, வேதங்களையே ஞானத்தின், அறிவுப்பாரம்பரியத்தின் ஊற்றாகக் கூறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

நாவினில் வேதமுடையள் - கையில்
நலந்திகழ் வாளுடையாள்

என்று பாரத அன்னையையும்,

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு

என்று தமிழ்நாட்டையும் பாரதியார் ஒரே விதமாகப் புகழ்ந்து பாடுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

#நினைவோடையில்

#திருக்குறளும்_இந்துமதமும்:

//"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே." //

-என்று அப்பர் இறைவனின் திருவடி எப்படிபட்டது என்று விளக்குகிறார் சைவ நெறியிலும் சரி வைணவ நெறியிலும் சரி திருவடி சமர்ப்பணம் மிக முக்கியமானது.

அதே போல பிறவி என்பது ஒரு தொடர் செயல்பாடு வினையின் நீட்சி அது.பிறவியை பெரிய கடலாக ஒப்பிடும் தன்மையே இந்த மரபில் உள்ளது.அப்பர் இதை பாடுகிறார்.

//மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.//

மனம் என்கிற தோணியில் சினம் என்கிற பண்டத்தை ஏற்றி பெரிய கடலில் போகிறேன் அங்கே காமம் எனும் பாறை தாக்கி அந்த தோணி இடர்படும் போது உன்னை மறக்காமல் என் மனத்தை நீ பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.மிகத்தெளிவாக இறைவனின் திருவடியையும் பிறவிக்கடலையும் விரித்து பாடுகிறார் அப்பர் இதை ஒட்டியே எழுகிறது குறளும்,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவ னடிசேரா தார்".

என்ற வரிகளின் வழியே முதலில் பிறவியை ஏற்றுக்கொண்டது வள்ளுவம் அதோடில்லாமல் அந்த பிறவியை கடலாகவும் அதில் நீந்தி வெற்றி பெறுபவரே இறைவனின் அடி சேர்பவர் என்றும் அடித்துக் கூறுகிறது.அந்த திருவடிகளை சேராதாராக ஆகிவிட கூடாது என்றே அப்பர் மேலே பாடுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிறவி என்ற பொது சுட்டலோடும் குறள் நிற்கவில்லை அடுத்தது சொல்கிறது.

//எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு// -

தன் துன்பத்தை நீக்கினவரது நட்பை ஏழ்பிறப்பும் மறக்க மாட்டார்கள் என்று ஏழு பிறவிகள் பற்றிய வைதீக கோட்பாட்டை முன்னிறுத்துகிறது வள்ளுவம்.

பிறவியை பற்றி இதோடும் நிற்கவில்லை பிறாவாமை என்னும் முக்தி நிலையை பற்றியும் பேசுகிறது.

அது பிறப்பினை பேதைமை என்கிறது இதையே காரைக்கால் அம்மையார் கேட்கிறார் பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என.

//பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.//

என்கிற இந்த குறளில் காணும் செம்பொருள் எதுவென்று மாணிக்கவாசகர் சொல்கிறார் பாருங்கள்..

"வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!"

செம்பொருள் துணிவே என்று இறைவனை அழைக்கிறார்.சைவ சித்தாந்தம் "சதசத்து" என ஒரு தத்துவத்தை முன் வைக்கிறது எப்படியாயின் உயிர் தனித்தியங்காது இறை,தளை என்பதில் ஏதேனும் ஒன்றை பற்றியே நிற்கும்.

சுத்த நிலையில் இறைவனை சார்ந்தும் கேவல நிலையில் மலங்களை சார்ந்தும் நிற்கும்.அது எதை சார்கிறதோ அதன் வண்ணமாகிவிடும் என்கிறது விதி "சார்ந்ததன் வண்ணமாதல்" என்பதே சதசத்து.

பரம்பொருளான சத்து அசத்தை அனுபவிக்காது உயரிய இடத்தில் இருக்கும்.அசத்தோ அறிவின்மையால் சத்து(பரம்பொருளை) உணராது.இறைக்கும்-தளைக்கும் இடைப்பட்ட உயிரே இவ்விரண்டையும் உணரும்.

சிவாஞானபோதம் ஒரு விதி சொல்கிறது "யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே யறியாது அசத்திலது அறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா" என்றுரைக்கிறது.இதை வள்ளுவம் நேரடியாக சொல்கிறது.

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்
-மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்" - குறள்

எதை பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து தேவையற்ற பற்றுகளை அகற்றி நாம் நடந்தால் அந்தப்பற்றினால் வருந்துன்பம் நன்மைகளையழித்து நம்முடன் வராது.

துல்லியமாக பதி/பசு/பாசத்தை பேசுகிறது.அடுத்து முத்தாய்பாக குரு மரபை பற்றியும் ஒரு குறள் சொல்கிறது யாதாயின்

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி." - குறள்

பொருள்:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படி குறள் முழுக்க பல உதாரணங்கள் தெளிவாக உள்ளது இது இந்து மதத்தின் ஆதார விதிகளை பேசுகிறது என்று. ஆனால் திருக்குறள் ஒரு சமணநூல் என்ற கருத்தாக்கம் திருக்குறளை கற்றறிந்து நாம் அடைந்ததல்ல விடாமல் நம் சிந்தனையில் ஏற்றி ஓடவிட்ட ஒரு செய்தி.

நாம் சமணத்தையும் கற்கவில்லை வேறெந்த சித்தாந்தத்தையும் கற்கவில்லை இதை பெரும்பாலும் சொல்பவர்களுக்கும் எந்த சித்தாந்த பயிற்சியும் இருக்காது.

தமிழிலக்கியத்தில் இந்து மதமில்லாமல் எதுவுமே இல்லை அப்படி இல்லையென்று சொல்பவர்கள் எதையுமே படிக்கவில்லை அல்லது வேண்டுமென்றே சிக்கியவர்கள் லாபம் என்ற நோக்கத்துடன் வலையை வீசுகிறார்கள் என்று அர்த்தம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

April 28, 2019 - இந்துசமய நூல்கள்

திருக்குறள் சனாதன தர்மம் -விளக்கம்!!

இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம்.

திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு.

திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே.

திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை.

உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை ,மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் கருத்துகளுக்கு மாறானது.

“இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறள் வினைப்பயனே இல்லை என்பவர்களுக்கும், வினைப்பயனை வகுத்து வழங்க இறைவன் வேண்டாம் என்போருக்கும் மாறானது.


சுருங்கச் சொன்னால், இறைவனே நமது செயல்களின் பயனை தொகுத்து வழங்கிறான் என்ற இந்துமதக் கருத்தை இப்பாடலில் திருவள்ளுவர் கூறுகிறார்.
திருக்குறளில் கடவுள், ஏழுபிறவிகள், வினைப்பயன் , பாவப் புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஊழிக்காலம் ( யுகம்) என்ற இந்துமதக் கருத்துக்களே நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. வானுலகம் ,தேவர்கள்,இந்திரவிழா போன்ற இந்துமதக் கருத்துக்களை திருவள்ளுவர் கூறுகிறார்.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குத் துய்த்தல் அரிது” ஊழைத் தொகுத்து வழங்கும் இறைவனால் அன்றி முயன்று கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்தவருக்கும் அவற்றை அனுபவிக்க முடியாது என்பதே இக்குறளின் பொருள்.


கோடிக்கணக்காகச் செல்வத்தைச் சேர்த்தாலும் அதை அனுபவிக்க உனது ஊழ்வினைப்பயனைத் தொகுத்து வழங்க இறைவன் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஊழ்வினை என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும்
கூறுவதில்லை. “ஊழ்” என்றே ஒரு அதிகாரம் அமைத்து பாடியுள்ளார் திருவள்ளுவர்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”

ஊழ்வினையைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. ஊழை விலக்கும் பொருட்டு இன்னொரு வழியைத் தேடினால் அங்கும் ஊழே முன்நிற்கும் _
என்பதே இப்பாடலின் பொருள்.


ஊழ்=பழவினை,தலைவிதி(பூர்வஜென்ம புண்ணியம்)
பூர்வ புண்ணியம் எனப் பேசுவது இந்துக்களின் மரபு எனச் சொல்லத் தேவையில்லை.
ஒருவன் தான் தேடிய செல்வத்தை அனுபவிக்கவும் இறைவனின் அருள் வேண்டும் என்ற திருவள்ளுவரின் கருத்து புத்தம், சமணம் போன்ற சமயங்களுக்கு மாறுபட்டது.
சமண முனிவரின் நாலடியார்
‘ வினைப்பயனை ,வினைசெய்தோருக்கு கொண்டு சேர்க்க இறைவன் என ஒரு முதல்வன் வேண்டாம் ‘ என்கிறது.எனவே திருக்குறள் புத்த,சமண மத நூலல்ல என்பது தெளிவு. எனவே
‘வகுத்தான் வகுத்த வகையல்லால்’
என்ற பாடல் கூறும் கருத்து இந்துக்களுடையதே என்பது உறுதி
இந்திரலோகம் ,வானோர்,அமரர் உலகு, இந்திரவிழா _ என திருக்குறளில் பலப்பாடல்களில் வருகின்றன. இவை இந்துமதக் கருத்துக்களே.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்
விசும்புளார் கோமகன்
இந்திரனே சாலுங் கரி”

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் தேவர்களுக்காக நடைபெறும் விழாவும் நடைபெறாது என்பதே இப்பாடலின் பொருள்.
மழை பொழிய வேண்டுமென்று இந்திரனுக்கு விழா எடுப்பது இந்துக்களின் மரபு.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு”
புத்தேள் உலகு= தேவர்கள் உலகு.
இதுவும் இந்துமதக் கருத்தே.

ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

ஊழிபெயரினும் என வள்ளுவர் கூறுவது யுக வேறுபாடே. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரயுகம்,கலியுகம் என இந்துக்களின் வேதங்கள் கூறுவதையே திருவள்ளுவரும் கூறுகிறார். செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா சொர்க்கத்திற்கோ, இருள் உலகமான நரகத்திற்கோ செல்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே கருத்தையே வள்ளுவர் தனது குறளில் கூறியுள்ளார். “அருள்சேர்ந்த நெஞ்சினார்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்”

புண்ணியம் செய்தவர்கள் நரகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்;திருமூலரின் திருமந்திரமும் இதையே உரைக்கிறது. கீதை கூறும் அத்வைதக் கருத்தைப் பல பாடல்களில் திருவள்ளுவரும் கூறுகிறார். “யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” __ யான்,எனது என்ற ஆணவம் இல்லாதவன் உயர்ந்த உலகத்தை அடைவான் என்கிறார் திருவள்ளுவர்.

கீதையில் கண்ணன் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு”
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைப் போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்_ என்பதே இப்பாடலின் பொருள்.
‘ ஒழுக்கத்தில் நின்று பற்று விடுவது என்பது பகவத் கீதை கூறும் வழியாகும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையவர் அற்றாக அற்றது இலர் திருவள்ளுவர் கூறும் பற்றின்மை கீதையின் சாராம்சமே. “மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாவிய தெல்லாம் ஒருங்கு” சோம்பலில்லாத மன்னனுக்குத் திருமால் தாவி அளந்த உலகெல்லாம் கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் “மலர்மிசையோன்” எனப் பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா என்பதே இதன் பொருள். திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்கிறார். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” “அறவாறி அந்தணன் ” என்கிறார்திருவள்ளுவர். இவ்வாறு பிரம்மாவையே கூறுவர். “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது” “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

இவ்வாறு பிறவியைப் பெருங்கடலாக இந்துக்கள் மட்டுமே கூறுவர். புத்த , சமண ,இஸ்லாமியரோ, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்வந்த கிருஸ்தவர்களோ இவ்வாறு கூறமாட்டார்கள். “எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு”

“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு டைத்து” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு கழந்தும் அளறு” _ இவ்வாறு ஏழு பிறவிகள் உண்டென்பதை பலபாடல்களில் கூறுகிறார் திருவள்ளுவர். ஏழுபிறவிகள் உண்டென்பது இந்துக்கள் மட்டுமே நம்புவதாகும். அனைத்துயிர்க்கும் காவலாகிய தவநெறியை சிவனது நெறியாகக் கொண்டு வழிபடுவது தமிழ் நெறி வழக்கம். “தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே”(புறநானூறு_1) “அருந்தவ முதல்வன்”

(கலித்தொகை100 :7) “ஆல்கெழு கடவுள்(திருமுருகாற்றுப்படை) _ என பழந்தமிழ் இலக்கியங்கள் தவக் கோலம் கொள்வதைச் சிவபெருமானின் அடையாளமாகக் கொள்கின்றன.
திருவள்ளுவ நாயனாரும் சிவனின் தவக்கோலத்தைக் குறித்தே
“பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றார்
“கோளில் பொறியிற் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
இதில் இறைவனின் எட்டு குணங்கள் எவையென பரிமேலழகர் பொருள் எழுதும்போது சைவ ஆகமங்களின்படியே பொருள் கூறுகிறார்.

தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல்,
இயற்கை உணர்வினனாதல்,முற்றும் உணர்தல்,இயல்பாகவே பாவங்களை நீக்குதல்,பேரருளுடைமை,முடிவில்லா ஆற்றலுடைமை
_ என்பவையே அவை. இவை சிவனின் குணங்களாகும்.
” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.

திருவள்ளுவரோ “அடிசேர்தல்”,”தாள்தொழல்” என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறான
சொல்லாட்சிகள் இந்துக்களுக்கே உரியது. எனவே திருக்குறளின் அடிநாதமாக விளங்குவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமேயாகும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிராமணர்கள் எக்காலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவோ அதிகாரத்திலே இருந்த சாதியாவோ இல்லை என்பதற்கு இன்றைக்கு கோவில் குருக்கள் படும் பாடே போதுமான எடுத்துக்காட்டு.

கோவில் நிர்வாகமோ அதிலே யாரை உள்ளே விடவேண்டும் விடக்கூடாது என்பதற்கான அதிகாரமோ பிராமணர்கள் கையிலே இந்த த்ராவிட் பாடையிலே சொல்லவேண்டும் என்றால் மணியாட்டுபவர்கள் கையிலோ இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தேடி வேறு எங்கும் போகவேண்டாம் இன்றைக்கு எதேனும் ஒரு கோவிலுகு போய் அங்கே பூசை செய்யும் பட்டரோ சிவாச்சியாரோ நம்பூதிரியோ எப்படி நடத்தப்படுகிறார் என பார்த்தால் போதுமானது.

ஆனால் ஏன் பார்பானியா ஆதிக்கம் என பருப்பு வடை சுடுகிறார்கள் என பிராமணர்களே கேட்பதில்லை. அது தான் ஆங்கிலேயன் மற்றும் அவனின் அடிவருடிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆங்கிலேயன் தமிழ்நாட்டிலே செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

நிலங்களை பட்டா போட்டுக்கொடுத்தது தான்.

அதுக்கு முன்னாடி வரைக்கும் சாதிக்கும் குழுவுக்கும் தான் நிலம். தனிமனிதனுக்கோ அரசுக்கோ நிலம் சொந்தம் அல்ல.

அந்த ஊரிலே இருந்து விவசாயமோ அல்லது தொழிலோ அல்லது குடியோ இருந்தால் தேவைக்கு ஏற்ப நிலத்தை பயன்படுத்திக்கலாம். ஊரைவிட்டு போனா நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது.

பேருந்திலே ஏறி இடம் பிடிச்சா இறங்கும் இடம் வரும் வரை அந்த இடத்திலே உக்கார அனுமதி போல இருந்தது.

விளைவு பஞ்சமில்லை பசியில்லை ஒருத்தரை ஒருத்தன் அடிச்சி பிடுங்கவேண்டிய அவசியமில்லை. நிலம் தரிசாகவும் கிடக்கவேண்டிய அவசியமில்லை.

இன்றைக்கும் பல நிலங்கள் முன்பு எந்தெந்த சாதிக்கு உரிமையாக இருந்ததோ அதே சாதிபெயராலேயே அழைக்கப்படுகின்றன.

உள்ளூரிலே குருக்கள் போன்றோருக்கு நிவந்தம் இருந்தது. வாழ்வியலை சுயமரியாதையோடு யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்ந்து வந்தார்கள்.

ஆங்கிலேயன் வந்த பட்டா போட்டு தருகிறோம் எழுதி தருகிறோம் என்றவுடனே எல்லா சாதிகளும் ஆகா என்றன. அத்தோடு முடிஞ்சது சோலி.

புறம்போக்காக அதாவது ஏழை எளியோர் ஆடு மாடு மேய்க்கவும் வெளியூரிலே இருந்து பிழைக்க வருபவர்கள் தங்கவும் இருக்கும் இடங்கள் எல்லாம் பட்டா போடப்பட்டது.

இத்தோடு கூடவே ஒவ்வொரு சாதியிலும் சில பல ஆட்களை பிடித்து அவர்கள் தான் உசத்தி சாதி என பரப்புரை செய்யவைத்தான். எல்லா சாதியிலும் துரோகிகள் இருக்குமே. இதன் விளைவை எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

1500-1800 வருடமாக இல்லாமல் இருந்த சாதிச்சண்டை ஆங்கிலேயன் வந்த பின்பே ஆரமிக்கிறது என்றால் ஏன் என புரியவேண்டாமா?

இந்த பழியை தூக்கி அப்படியே பிராமணர்கள் மேலே போட்டாச்சு. ஆனா அதான் பிராமணர்களை உசத்தி சாதின்னு ஆங்கிலேயனே சொல்லிட்டானே அதிலே இருந்த பலருக்கு மகிழ்ச்சி.

இது எதிலே வந்து நிற்கிறது. இதுக்கெல்லாம் சம்பந்தம் இல்லாத கோவில்குருக்கள் இன்றைக்கும் அவமானப்படுவதிலே வந்து நிற்கிறது.

எங்கே நிலம் வைத்திருக்கும் வேறூ எந்த சாதியையாவது இப்படி நடத்தவிட முடியுமா?

அத்தோட நின்னா பரவாயில்லை.

ஆங்கிலேயனால் தாங்கள் தான் உசத்தி சாதி என மூளைச்சலவை செய்யப்பட்ட சில பல பிராமண சாதியினர் இன்றைக்கும் மரபு கிரபு மண்ணாங்கட்டி என நெம்பவும் பொங்குவதிலே இருக்கிறது.

முன்பு இருந்த மரபையும் இத்யாதியையும் கொண்டு வரமுடியுமா முடியாது. யாருமே இன்றைக்கு சொத்தை விட்டு கொடுக்கமாட்டாங்க.

சரி இருக்கட்டும் திரும்பவும் சாதிகள் கையிலேயே கோவிலை கொடுத்துவிடலாம் என பெரீய்ய அகுடியா கொடுக்கறாங்க எதுக்கு ? முழுசா உடைச்சு வெளிநாட்டிலே வித்துவிடவா?

எளிமையான வழி ஒன்னே ஒன்னு தான்.

மரியாதை கிடைச்சா அங்கே கடவுளுக்கு வழிபாடு செய்யலாம் இல்லாட்டி விட்டுட்டு வெளியே வந்திடலாம். எல்லாத்தையும் நடத்தும் இறைவனுக்கு அதையும் நடத்த தெரியாதா?

கோவிலுக்கு ஆளில்லாத இடங்களிலே யார் வருகிறார்களோ அவர்களே செய்யட்டும். அது தனிநபர் முயற்சியாக இருந்தாலும் சரி உள்ளூர் ஆதரவாக இருந்தாலும் சரி. அவர் எந்த சாதியாக இருந்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி. பக்தியே முக்கியம்.

ஏற்கனவே இருக்கும் கோவில் குருக்கள் மதிப்பும் மரியாதையும் நடத்தபடவும் அவர்களும் எல்லோரையும் இறைவன் முன் சமமாக பார்க்கவும் செஞ்சால் போதும்.

ஆனா இந்த தீடீர் குப்பீர் சாஸ்த்ர வித்துவான்கள் என்ன சொல்றாங்கன்னா மரபு எப்போதும் மீறப்படக்கூடாதாம். இவிங்களும் செய்ய மாட்டாங்க. செய்யறவிங்களையும் விடமாட்டாங்க.

வேற மாதிரி சொன்னா வைக்கப்போரிலே நாய் படுத்த மாதிரி.

இந்த கமிட்டி ஊர் கூடி தேரிழுப்பது எல்லாம் நடக்காத காரியம் அதுவும் தமிழ்நாட்டிலே நடக்கவே நடக்காத காரியம்.

திருப்பணின்னு கோவிலை உடைச்சு வித்ததையும் அதிலே முக்காத புள்ளிகள் பிணையிலே இருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

தர்ம போராளிகளும் தர்மாத போராளிகளும் மொரட்டு இந்துத்துவாவினரும் கோவில் சிலை திருடு போவதை பற்றி ஒரு முக்கல் முனகல் கூட செய்யாததையும் பார்த்துட்டு தான் இருக்கிறோம்.

ஒரே வழி தான்.

அவிங்க அவிங்களால முடிஞ்சதை செஞ்சா போதும். முடியாட்டி விட்டுட்டு உங்க பொழைப்ப பாருங்க. ஈசனுக்கு அவனோட பூசைய நடத்திக்க தெரியும்.

சாதி வெறியையும் அப்பட்டமான வெறுப்பையும் மனசுக்குள்ளே வைச்சுட்டு பொங்கி நுரைச்சு எழுந்து எந்த பலனுமில்லை.

பால் பொங்கினா பலனுண்டு பச்சத்தண்ணி பொங்கினா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

7.6.2006 தேதியிட்ட துக்ளக்கில் ஆசிரியரின் தலையங்கம்.

அர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின் மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியாக படிப்பு இருக்கிறது. சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதிமுறை களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆழ்ந்த சம்ஸ்கிருத அறிவு தேவை. இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வரவேண்டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும்” -

நாளை ஒரு அரசு 'அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று ஏன் உத்தரவிட முடியாது? .. பிற மதத்துக்காரர் ஒருவர் அர்ச்சகர் ஆக பணிபுரிய விரும்பி, அதற்கான பயிற்சியைப் பெற்று, அர்ச்சகர் ஆகி கோவில் பணி முடிந்தவுடன், தன் சொந்த மதத்தின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே?...

.. நாளையே ஒரு அரசு, கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன், கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது, இது இன்டீஸன்ட் எக்ஸ்போஷர், அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ஷர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிடமுடியாதா...

.. கோவிலில் நைவேத்யமாகப் படைப்பது, அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் இனி எல்லா கோவில்களிலும் அசைவ உணவு நைவேத்யம் செய்யப்படலாம். .. சிக்கன் மட்டன் கருவாடு போன்றவையும் தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யப்படலாம்..

.. பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாமே? சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பது கொடுமை அல்லவா.. முழுவதும் இல்லாவிட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத் தான் இருக்கவேண்டும்.. இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாட்களிலும் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்...

...ஆகமங்களை மாற்றுகிற உரிமை யாருக்கு இருக்கிறது.

ஆத்திகர்களுக்கே, ஆச்ச்சார்யர்களுக்கே மாற்றுகிற அந்த உரிமை கிடையாது...

இந்த மாதிரி மாற்றங்களைச் செய்ய ஒரு மதச்சார்பற்ற அரசு முனைவது அரசியல் சட்ட விரோதமானது. ஆத்திகத்துக்கு எதிரானது.

அப்படி ஆகமத்தில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றால், அது மதத் தலைவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களால் எடுத்துக்கூறப்பட்டு, ஆத்திக சமூகம் ஏற்று பின்னர் வரலாம்...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் போராட்டத்தின் மூலம் மிரட்டி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொள்வது போல, பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலையிடக் கூடாது; அவர்கள் ‘சமாதி’க்கு மாலை வைக்கக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்பி போராட்டம் நடத்தினால், ஏற்றுக் கொள்வார்களா?

'பிராம்மணர்கள்தான் அர்ச்சகர் ஆகலாம் என்பது இப்போதுள்ள நிலை' என்கிற எண்ணம் தவறானது. ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் அன்றும் சரி, இன்றும் சரி பிராம்மணர்கள், அர்ச்சகர்கள் ஆக முடியாது. சொல்லப் போனால், கர்ப்பகிரஹத்தினுள்ளேயே நுழைய முடியாது. விக்ரஹத்தை தீண்ட முடியாது. அப்படி நடந்தால் அது ஆகம விதிமுறை மீறல்.”

சிவாச்சார்யார்கள்..

"சிவாச்சார்யார்கள் என்கிற பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும். இது ஆகம விதி. (இவர்களுக்கும், மற்ற பிராம்மணர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறவர்களுக்கும் இடையே திருமண சம்மந்தம் வைத்துக் கொள்ளப்படுவதில்லை. அந்த அளவிற்கு, இவர்கள் பொதுவான பிராம்மணர்களிலிருந்து, தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.)"

வைணவக் கோவில்களில்..

"வைஷ்ணவக் கோவில்களில், இரண்டு வகை உண்டு. ஒன்று - வைகானஸ முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; மற்றொன்று - பாஞ்சராத்ர முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; இதில் வைகானஸ முறை கோவில்களில் வைகானஸ பிரிவினர்தான் அர்ச்சகர்கள் (வைஷ்ணவ கோவில்களில், இவர்கள் பட்டாச்சாரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்) ஆக முடியும். பாஞ்சராத்ர வழிமுறையில் அமைந்துள்ள கோவில்களில், அந்த ஆகமம் மூன்று நிலைகளைக் கூறுகிறது; இவற்றில் மூன்றாவது நிலையில் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் தகுதி பெற்று பூஜை செய்யலாம்; முதல் இரண்டு நிலைகளில் முடியாது….."

மற்ற கோவில்களில்..

"... ஆங்காங்கே வேறு சில வழிமுறைகளைப் பின்பற்றுகிற கோவில்களும் பல உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் 'பதஞ்சலி பூஜாஸூத்ரம்' விதிக்கிற வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; அங்கு தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கர்ப்பக்கிரஹத்தினுள் போக முடியாது; மத குருமார்களாக இருந்தாலும் சரி, பெரிய ஆச்சார்யராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் அனுமதி கிடையாது. மேல்மலையனூர் கோவிலில் பிராம்மணரல்லாத 'பர்வத ராஜ' குலத்தினர்தான் அர்ச்சகர்கள்; மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. கேரளத்தில், 'பரசுராம கல்பஸூத்ரம்' என்ற நூல் விதித்திருப்பவைதான் வழிமுறை...."

ஆகமமும் சிவாச்சாரியார்களும்..

"..... ஆகம சாத்திரத்தின்படி பிரதிஷ்டை நடந்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ஆகம விதிமுறைகளின் படியே பூஜைகள் நடத்தப்படுகிற கோவில்களில், ஆகமத்தில் சொல்லியுள்ளபடி சிவாச்சார்யார்களே அர்ச்சகர்கள் ஆக முடியும்; மற்றவர்கள் யாராவது - ""பிராம்மணர்கள் உட்பட"" - கர்ப்பக்கிரஹத்தினுள் நுழைந்தாலும் சரி, விக்ரஹத்தைத் தீண்டினாலும் சரி, பூஜை நடத்தினாலும் சரி, புனிதம் கெடும்; பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டும்.....

அர்ச்சகர் பெற்றிருக்கிற உரிமை 'பரார்த்த பூஜை'; அதாவது மற்றவர்களுக்காக செய்கிற பூஜை. இதைச் செய்ய சிவாச்சார்யார்கள் தவிர, வேறு எவருக்கும் - அவர் எவ்வளவு உயர்ந்த கல்வி, வேத ஞானம், சாத்திர அறிவு, பக்தி எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் சரி - உரிமை கிடையாது. இது ஆகம விதி.

சிவாச்சார்யார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது; ஸ்ம்ஸ்க்ருத அறிவு; வேதங்களைப் பயின்றிருத்தல்; ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; தர்ம சாத்திரம், மற்றும் கிரியா சாத்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம்; சைவ சித்தாந்த தத்துவ ஞானம்; ஆசாரங்களை கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல்; சைவ மந்திரம், முத்திரைகள், கிரியை முதலியன பற்றிய அறிவு; மீமாம்ஸை, வியாகரணம், தர்க்க சாத்திரம் ஆகியவை பற்றிய அறிவு.... என்று பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும். இவை அனைத்தையும் பெற்றிருந்தாலும், சிவாச்சார்யார் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது.....

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிமுறைப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால் - அது ஆகம விரோதமே.

ஆனால், ஆகம விதிமுறைகளின்படி அல்லாமல், பிரதிஷ்டை நடந்து, பூஜைகளும் நடக்கிற கோவில்கள் பல உண்டு. அவற்றில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது ஆகம விரோதம் அல்ல...

#சோ_நினைவலைகள் ....

Pugal Machendran Pugal பதிவிலிருந்து



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. பிராமணர்களை மதிக்கும் அனைவருமேகூட
படிக்கலாம் துவேஷம் இன்றி.
++++++++++++++++++++++++++
பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

பாரத தேசத்தில் பல குலங்கள் உள்ளன. பல அமைப்புகள் உள்ளன. இவர்களுள் பிராமணர்கள் யார்? இவர்களின் தோற்றம் எப்போது நிகழ்ந்தது? பிராமணர்களால் உலகிற்கு என்ன நன்மை? இவை பற்றி சில விஷயங்களை நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதைப் பற்றி கூறும் முன்பு சில கேள்விகளை கேட்டுக் கொள்வோம். இவற்றுக்கான பதில்கள் அனைவம் அறிந்ததே!.

முதல் கேள்வி – உலகின் முதல் புத்தகம் எது? பைபிளா? இல்லை. ராமாயணமா? இல்லை. குரானா? இல்லை. மகாபாரதமா? இல்லை. மகாபாரதம் முதல் புத்தகம் இல்லை என்பதால் பகவத் கீதையும் முதல் புத்தகம் இல்லை.

பிரபஞ்சத்தில் முதன் முதல் மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே ஒரு நூல் தோன்றியது. அதன் பெயர் வேதம். அந்தப் புத்தகத்தின் பெயர் ருக் வேதம். மீதி நூல்களுக்கு நம்மால் உடனே கால நிர்ணயத்தைக் கூறிவிட முடியும். பைபிள் 2013 ஆண்டுகள் பழமையானது. நியூ டெஸ்டமெண்ட். ஓல்ட் டெஸ்டமெண்ட் மோசஸ் ஆப்ரஹம் காலத்தைச் சேர்ந்தது. குரான் 1400 ஆண்டுகள் பழமையானது. பகவத்கீதை கிமு 3000 ஆண்டுகள்.

ருக் வேதத்தின் காலம் என்ன? யாராலும் சரியான பதில் அளிக்க முடியாது. வேதம் எப்போது பிறந்தது என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்வதற்காக சில முயற்சிகள் நடந்தன. ஆனாலும் கண்டறிய முடியவில்லை.

வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உள்ளது. ஸ்ரீராமர் வேதத்தை வசிஷ்டரிடம் பயின்றார். வேதம் முதன்மையானதா? ராமாயணம் முதன்மையானதா? வேதத்தின் காலம்தான் புராதனமானது. ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி என்ற ருஷியின் ஆசிரமத்தில் வேத அத்யயனம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. அதனால் வேதத்தின் காலம் ஸ்ரீகிருஷ்ணருக்கும் முற்பட்டது. அதனால் உலகில் முதல் நூல் எது என்றால் அது ருக் வேதமே!

அடுத்த கேள்வி – வேதங்கள் எத்தனை? மொத்தம் நான்கு. ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு. வேதங்களில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இவற்றுக்கு த்ரயி என்றொரு பெயர் உண்டு. த்ரயி என்றால் மூன்று என்று பொருள். வேதங்கள் மொத்தம் நான்கல்லவா? த்ரயி என்று எவ்வாறு பெயர் வந்தது? த்ரயி என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு.

ருக் வேதம் செய்யுள் வடிவில் உள்ளது. யஜுர் வேதம் உரைநடை வடிவம் கொண்டது. சாமவேதம் பாடல் வடிவம் கொண்டது. அதனால் செய்யுள் உரைநடை கானம் என்று மூன்று விதமாக இருப்பதால் இவற்றுக்கு த்ரயி என்று பெயரிட்டார்கள் என்பது ஒரு விளக்கம். இதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

அடுத்த கேள்வி – பிராமண குலம் எதற்காக ஏற்பட்டது? வேதங்களை பாதுகாப்பதற்காகப் பிறந்தது. சோமகாசுரன் என்பவன் வேதங்களை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு வேதங்களை இரட்சித்தார். இது மத்ஸ்யாவதாரத்தில் உள்ள ஒரு புராணக்கதை. இக்கதையின் பொருள் என்ன? வேதங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது சமுதாயத்தில் துயரம் நிலவும் என்பதால் வேத ரட்சணைக்காக பகவான் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது தசாவதாரங்களின் பிரதானமான காரணம்.

பிராமண சமூகம் முதலில் எதற்காகத் தோன்றியது? வேதங்களை இரட்சித்து போற்றி பாதுகாத்து பரப்புவதற்காக. இது எந்த சந்தேகமுமற்ற பதில். இதில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை. நம் முன்னோர்கள் இந்த வேலையைத்தான் செய்து வந்தார்கள்.

புருஷ சூக்தத்தில் ஒரு மந்திரம் உள்ளது.
“ப்ராஹ்மணோ அஸ்ய முகமாஸீத்
பாஹூ ராஜன்ய: க்ருத: I
ஊரு ததஸ்ய யத் வைஸ்ய:
பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: II
சந்த்ரமா மனசோ ஜாத:
சக்ஷோ சூர்யா அஜாயத II” – இது ஒரு குறியீட்டு விளக்கம்.
அதாவது அலங்காரம். யாருடைய அலங்காரம்? சமுதாய புருஷனை ஒரு மனிதனாக உருவகப்படுத்தியுள்ளார்கள்.

நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன. அவற்றுள் முகம் என்பது அறிவின் இடம். முழு நரம்பு மண்டலமும் தலையில் உள்ளது. காலில் முள் குத்தினால் செய்தி தலைக்குச் செல்கிறது. அதனால் அறிவுக் கூர்மை உடையவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.

ஒரு கம்பெனியையோ அமைப்பையோ எடுத்துக் கொண்டால் அதில் நான்கு பிரிவுகள் இருக்கும். திட்டமிடல் பாதுகாப்பு பொருளாதாரம் தயாரிப்பு. இவையே பிராமணர் சத்திரியர் வைசியர் மற்றும் சூத்திரர். இவ்விதம் முழு சமுதாயத்தையும் நம் முன்னோர் திட்டமிட்டு வகுத்தார்கள். ஒரு Symmetrical சமச்சீரான அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது சீரழிந்து விடும். பொருளைத் தயாரிக்க பொறியியல் திறமை வேண்டும். மூளை வேலை செய்ய வேண்டும். பின்னர் அதனை சீராக விநியோகிக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் நம் மூதாதையர் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு சமூகங்களை புராதன காலத்தில் ஏற்படுத்தினார்கள். இந்த மந்திரத்திற்கு இதுதான் பொருள்.

இவர்களில் யார் உயர்ந்தவர்கள்? கால்கள்தான் உடலைத் தாங்குகின்றன. அவை சரியாக வேலை செய்யாவிட்டால் சரீரம் சரியாக உபயோகமாகது. அதனால் கால்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். தொடைகளின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். புஜங்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். மொத்த உடலுக்கும் ஸ்கீமிங் மற்றும் பிளானிங் தலையில் உள்ளது. அதனால் மூளையின் ஸ்தானத்தில் பிராமணர்கள் உள்ளார்கள். இது புராதன காலத்தில் ஏற்பட்ட ஒரு சிஸ்டம்.

இந்த சிஸ்டம் பாரத தேசத்தில் மட்டுமல்ல. உலகனைத்திலும் உள்ளது. கிரேக்க தேசத்தில் கூட இவ்விதமே உள்ளது. பழைய கிரேக்க நூல்களில்… இலியட் போன்றவற்றில்…. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களின் நூல்களில் இதே போன்ற வகைப்படுகளே கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. நாகரீகம் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இத்தகைய திட்டமிடல், சமச்சீரான வகைப்பாடு காணப்படும்.

மந்திரம் படிக்கும் பொது இறுதியில் ஆசீர்வசன மந்திரம் ஒன்று வரும்.
“சர்வே ஜனா: சுகினோ பவந்து
ஸர்வே ஸந்து நிராமயா I
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மாகச்சித் துக்க: பாக்பவேத் II” – என்று கூறி இன்னொரு மந்திரமும் கூறுவோம்.

“கோ ப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து II”
– என்ற இந்த மந்திரத்தில் பசு மாடுகளும் பிராமணர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்று வருகிறது.

ஆயின் பிற விலங்குகள் சுகமாக இருக்கத் தேவையில்லையா? பிராமணர்கள் மட்டும் சுகமாக இருக்க வேண்டுமா? பிற சமூகத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டாமா? என்று ஒரு வினா கிளம்புகிறது. இதற்கு பதில் என்னவென்றால் பசுவும் பிராமணனும் பாதுகாப்பற்ற சமூகமாக தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளார்கள். புலியும் சிங்கமும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடியவை. பசு தன்னைத் தானே காத்துக் கொள்ள இயலாத ஸாதுப் பிராணி. எனவே பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசு இனத்தைக் காப்பாற்றினால் அனைவருக்கும் பால் கிடைக்கும்.

பிராமணன் என்பவன் வேதங்களை ரட்சித்து பாதுகாக்கப் பிறந்தவன். பிராமணன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வலிமையற்றவன் என்பதால் மீதி உள்ள சமுதாயம் அனைத்தும் சேர்ந்து அவனை பாதுகாக்கவேண்டும். பாலும் வேதமும் அனைவருக்கும் பயன்படுவது. பிராமணன் தர்மப் பிரச்சாரம் செய்பவன். அதனால் அவனை சரியாக பாதுகாக்கா விட்டால் சமுதாயத்தில் தர்மப் பிரசாரம் நடைபெறாமல் சமுதாயம் சமச்சீர் நிலையை இழந்து விடும். வேத பிரச்சாரத்திற்காக பிராமணன் பாதுகாக்கப்படவேண்டும்.

சிலரின் ‘சர்நேம்’ எனப்படும் வீட்டுப் பாரம்பரிய பெயர்களைப் பார்த்தால் அதன் மூலம் சில விவரங்கள் புரியும். வட இந்தியாவில் சிலர் ‘த்விவேதி’ என்ற சர்நேம் கொண்டிருப்பார்கள். அவர்கள் இரண்டு வேதங்களில் சிறந்து விளங்குபவர்கள். ‘த்ரிவேதி’ மூன்று வேதங்களை அறிந்த குடும்பங்கள். ‘சதுர்வேதி’ நான்கு வேதங்களில் சிறந்த குடும்பங்கள். ‘உபத்ரஷ்டா’ என்ற குடும்பத்தார் யாகங்களை நடத்துபவர்கள். இவ்விதம் வீட்டுப் பெயர்களைக் கொண்டே இவர்களின் பூர்வீகர்கள் வேதங்களை எவ்விதம் காத்து வந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. ‘வேதம்’ என்னும் சர்நேம் கொண்டவர்களும் உள்ளார்கள்.

இவ்விதம் பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஒரு சமுதாயம் பாரத தேசத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புக்குப் பிறகு நம் சமுதாயம் முழுவதும் பிரஷ்டமாகிவிட்டது… வீழ்ச்சியடைந்து விட்டது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம். இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு கலெக்டர் இருந்தார். இது மதராஸ் அல்லது மதுரையில் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு தாசில்தார் எதிர்ப்பட்டார். அவர் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். கலெக்டரின் அருகில் ஒரு குமாஸ்தா இருந்தார். கோப்புகளைச் சுமந்துகொண்டு கலெக்டரின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். முதலியாரும் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் பணிபுரிபவர். கலெக்டர் முதலியாரைப் பார்த்ததும், “ஹௌ டூ யு டூ, மிஸ்டர் முதலியார்?” என்று அவரோடு கைகுலுக்கினார். “ஐ ஆம் ஓகே சார்!” என்று கூறி முதலியார் கலெக்டருக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தார். அதன்பின் முதலியார் செய்த செயலைப் பார்த்து கலெக்டருக்கு மூளை கலங்கியது கலெக்டரின் அருகிலிருந்த குமாஸ்தாவைக் கண்டதும் முதலியார் சாலையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பாத நமஸ்காரம் செய்தார்.

கலெக்டர் வினவினார், “மிஸ்டர் முதலியார்! நான் உன்னுடைய பாஸ். இவர் என்னுடைய கிளர்க். ஆனால் நீ எனக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தாய். ஆனால் இவர் முன்னால் மண்டியிட்டாய். ஏன்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதலியார் கூறிய பதில் அந்த ஆங்கிலேயரை யோசிக்க வைத்தது.

“சார்! நாங்கள் இப்போது ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பணியாளர்களாக சேர்ந்துள்ளோம். வயிற்றுப் பிழைப்புக்காக உங்களிடம் வேலை செய்கிறோம். நீங்கள் எங்கள் பாஸ். ஆனால் இந்த கிளார்க் எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய குரு. இவர் ஒரு பிராமணர். இவர்களின் மூதாதையர் எல்லோரும் எங்கள் மூதாதையர்களுக்கு சம்பிரதாயமாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாதங்களில் நாங்கள் விழுந்து வணங்குவது எங்களின் சம்பிரதாயம். நீங்கள் வெறும் பாஸ் மட்டுமே. அதனால் ஷேக் ஹேண்ட் கொடுத்தேன்.இது எங்கள் பாரதிய கலாச்சாரம்” என்றார்.

உடனுக்குடன் அந்த கலெக்டர் இந்த சம்பவத்தைப் பற்றி லார்டு மேக்காலேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். “பிராமண சமூகம் பாரத தேசத்தில் மதிக்கப்படும் வரையில் நாம் இந்தியாவில் நாம் அரசாட்சியை நிறுவ முடியாது. நம் வேர் இங்கு தரையைத் தாண்டி கீழே பாயாது. பிராமணர்கள் பிற சமூகத்தால் மதிக்கப்பட்டால் நம்மால் இந்துத்துவத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இயலாது” என்று எழுதினார்.

இந்தக் கடிதம் லண்டனிலிருந்த மேக்காலேவுக்கு பிப்ரவரி 2 , 1835 அன்று கிடைத்தது. உடனுக்குடன் பதில் வந்தது. “இந்திய சமுதாயத்தை அழிப்பதற்கு வழி தேடுங்கள்! பாரதிய கலாச்சாரத்தையும் ஹிந்துக்களின் வாழ்க்கை வழி விதங்களையும் எவ்வாறு அழிப்பது என்று யோசியுங்கள்! அவசரமாக முதலில் பிராமண வகுப்பை இந்தியாவிலிருந்து அழித்து ஒழிக்க வேண்டும்” என்ற பதில் பிரிட்டனிலிருந்து வந்தது.

அதன் பின் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்நாட்டில் பிராமண இனத்தை அழிக்கத் தொடங்கினர். அது இந்தியாவின் பிற இடங்களுக்கும் தொடர்ந்து. இதுவே பிராமண இனத்தின் அழிவிற்கு வித்திட்ட நிகழ்ச்சி!

தற்போது நாம் எல்லாம் ஏதோ கொஞ்சம் பிராமணர்களாக வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பலருக்கு சாப்பாட்டுக்கு குறையில்லை.

ஆனால் பிராமணர்கள் அனைவரும் அவ்வாறு அல்ல. பிறரிடம் கையேந்தும் நிலையில் பலர் உள்ளனர். மிக மிக ஏழ்மையில் வாடுகிறார்கள். பிராமணன் என்றால் சமையல்காரன் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அது ஒரு கௌரவமான வேலைதான்… உணவளிக்கும் பணி.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் முங்கொண்டா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிராமணக் குடும்பங்கள் நிரம்பியிருந்தன. அனைவரும் வேத பண்டிதர்கள். இன்று அங்கு சென்று பார்த்தால் அவர்களைக் காண முடியவில்லை. என்ன ஆனார்கள்? வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடி சென்று விட்டார்கள். பறவைகளைப் போல் கூட்டமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கே போனார்கள்? வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.

இன்று அனைத்து வெளிநாடுகளிலும் பிராமணர்கள் அதிகளவில் காணப்படுகிறார்கள். நியூஜெர்சியில் ஒரு மில்லியன் பிராமணர்கள் உள்ளார்கள். ஒருவரல்ல… இருவரல்ல! இதனை ‘ப்ரெயின் ட்ரெயின்’ என்பார்கள்.

நம் மேதமைச் செல்வங்கள் எல்லாம் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டன.

நம் தேசத்தை ஊழல் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இதுதான் நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை.

எல்லா புத்திசாலி பிள்ளைகளும் பாரத தேசத்தை விட்டு சென்றுவிட்டனர். அவர்கள் ஒரு டாலரில் உணவு உண்டு இன்னொரு டாலரை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அதனைக் கொண்டு இந்தியாவில் உள்ள பெற்றோர் உயிர் வாழ்கிறார்கள். இன்று பிராமணர்களிடம் உடுத்திக்கொள்ள இரண்டாவது உடை இல்லை. நீங்கள் கோதாவரி மாவட்டம் சென்று கோனசீமா எனப்படும் இடத்தைப் பார்த்தால் அத்தகைய ஏழ்மை நிலையில் பிராமணர்கள் வசிப்பதைக் காண முடியும். இது உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? இது யோசிக்க வேண்டிய விஷயம். வரலாறு தொடங்கிய நாள் முதல் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த பிராமணர்கள் இன்று அவல நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாச சுவாமி. ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குரு மகா மந்திரி திம்மரசு. இவர் ராயலசீமாவில் குத்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தி கூர்மையால் முழுமையான பேரரசாக விஜயநகர சாம்ராஜ்யம் எழுந்து வளர்ந்தது.

வெளிநாட்டில் ஒரு சமூகம் உள்ளது. அவர்கள் ஜூஸ். யூதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். கடின உழைப்பாளிகள். இவர்களை ஹிட்லர் என்ன செய்தான்? 60 லட்சம் யூதர்களை ஒரே நாளில் கொன்று குவித்தான். அவர்கள் மேல் அத்தனை வெறுப்பு அவனுக்கு. அவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் மேதமை வாய்ந்தவர்களாக… புத்திசாலிகளாக இருந்ததுதான்!

அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள் எல்லாம் யூதர் சமூகத்திலிருந்து வந்தவர்களே! காரல் மார்க்ஸ் ஒரு யூதர். ஐன்ஸ்டீன் ஓர் யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் ஒரு யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் கிறிஸ்தவர் அல்ல. அவரைக் கொண்டு உருவாக்கிய மதம் கிறித்தவ மதம்.

யூத மதம் எங்கிருந்து உருவானது? அது ஹிந்து மதத்தில் இருந்து பிறந்தது. ஹிந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் பிற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த போது மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை பெற்றார்கள். இவர்கள் யாதவர்கள். கிருஷ்ணனின் உறவினர்கள்.

யது என்ற சொல்லே யூதர் என்றானது. மகேசா என்ற சொல் மோசஸ் என்று மாறியது. ப்ராஹ்மண் என்ற சொல் ஆப்ரஹாம் என்று மாறியது. ஓம் என்பது ஆமென் ஆனது. ஆமீன் என்றானது. ஆமீன் என்றால் சாந்தி. ஓம் சாந்தி என்று பொருள். இவர்கள் பிற்காலத்தில் தாம் பாரதியர்கள் என்பதை மறந்து போனார்கள். ஹிந்துக்கள் மீது படையெடுத்தார்கள். ஒரே மனித இனத்தில் ஏற்பட்ட வரலாற்று பரிணாமங்கள் இவை.

சாணக்கியரைப் பற்றி சிறிது பார்க்க வேண்டும். சாணக்கியர் சந்திர குப்தனின் குரு. சந்திரகுப்தன் ஒரு சக்கரவர்த்தி. சாணக்கியர் ஒரு பிராமணர். மிக எளிய ஆடையோடு இருப்பவர்.

ஒரு கிரேக்க தூதர் சந்திரகுப்தனை சந்திக்க வந்தார். தான் வந்த காரணத்தை கூறி சில ஓலைகளைக் கொடுத்தார். ஆனால் சந்திரகுப்தன் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் தன் குருவிடம் சென்று கொடுக்கும்படி கூறினான். ஒதுக்கமாக காட்டில் ஒரு குடிசையில் வசித்த சாணக்கியரைப் பார்த்து அந்த தூதர் வியந்து போனார். அப்போது சாணக்கியர் வறட்டி தட்டி காய வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி.

தன் சமையலுக்கான ஏற்பாடுகளை தானே செய்து கொண்டிருந்தார். கிரேக்க தூதருக்கு ஒன்றும் புரியவில்லை. சக்கரவர்த்தியான சந்திரகுப்தனுக்கு இந்தப் பைத்தியக்கார பிராமணனா குரு? என்று விளங்காமல் விழித்தார். வந்த விஷயத்தைக் கூறி ஓலைச்சுவடிகளை அளித்தார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டார் சாணக்கியர். வந்தவரை உபசரித்து அமர வைத்தார். இருட்டத் தொடங்கியது. குடிசைக்குள் ஒரு சிறு கை விளக்கு எரிந்தது. மாலை சந்திரன் உதயமானான். சந்திரோதயம் ஆனவுடனே சாணக்கியர் அந்த விளக்கை அணைத்து விட்டு, “வெளியில் போய் அமரலாம், வாருங்கள்!” என்றார்.

தூதருக்கு ஒரே வியப்பு. “இருந்த ஒரு விளக்கையும் ஏன் அணைத்தீர்கள்?” என்று கேட்டார். “இந்த விளக்கை ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் வேண்டும். சந்திரகுப்தனிடம் சென்று கேட்டு வாங்கவேண்டும். அரசாங்க கஜானாவை துர்விநியோகம் செய்ய எனக்கு உரிமை இல்லை. சிக்கனமாக இருக்க வேண்டும்” என்றார்.

அதுதான் தேசபக்தி. அதுதான் தேசியவாதம். அதுதான் சாணக்கியர். அதுதான் பிராமணர்கள் தேசத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு. அவர்கள் காட்டும் மனிதாபிமானம். அதற்காகத்தான் சாணக்கியரை நாம் இன்றளவும் போற்றுகிறோம்.

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் தம்மை ‘போஸ்டன் பிராமின்ஸ்’ என்று கூறிக் கொள்கிறார்கள்.

பிராமணியம் என்பது தூய்மையின் குறியீடு. முழுமைக்கான அடையாளம். சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. பிராமணர்கள் சத்துவ குணச் செல்வர்கள். சத்திரியர்கள் ரஜோ குணம் நிறைந்தவர்கள். க்ஷாத்திரம் ராஜன் போன்ற சொற்கள் ராஜஸ குணத்தின் அடையாளங்கள்.

இன்றைய சமுதாயத்தில் க்ஷாத்திரம் இல்லை. வீரம் இல்லை. அனைவரும் பலவீனர்கள் ஆகிவிட்டார்கள். பிராமணனைப் போட்டு அடிக்கிறார்கள். அதில்தான் வீரம் காட்டுகிறார்கள். இன்று சமுதாயத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. இத்தகைய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?

ஏனென்றால் பிராமணர்கள் இரண்டு முக்கியமான தெய்வீக சக்திகளை இழந்து விட்டார்கள். நம் முன்னோர்களிடம் பரம்பரையாக இருந்து வந்த சக்திகள் இரண்டு. முதலாவது சாபம் கொடுப்பது. இரண்டாவது அனுகிரகம் செய்வது.

சத் பிராமணன் ஒருவனுக்கு மனம் நோகுமானால் எதிரில் இருக்கும் தீயவன் அழிந்து போவான். பிராமணன் ஆசி கூறி அனுக்கிரகம் செய்தால் அது அப்படியே நிறைவேறும்.

இன்று எத்தனையோ பிராமணர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவை பலவும் நிலைப்பதில்லை. காரணம் என்ன? பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தின் அருளை இழந்துவிட்டார்கள். யாரும் காயத்ரி மந்திர ஜபத்தை சரியாகச் செய்வதில்லை.

இன்று ஒரு கேள்வி எழலாம். எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று பலரும் நினைக்கலாம்.

முன்பிருந்த சமூகச் சூழல் வேறு. இன்று அவசர யுகம் என்று கூறலாம். வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்தே உடலும் மனமும் சோர்ந்து போகிறது என்று கூறலாம்.

ஆனால் டிவி சீரியல் பார்ப்பதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கு இன்று நேரமும் மனமும் உள்ளது. அவற்றை பார்க்கா விட்டால் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் காயத்ரியை ஜபம் செய்யா விட்டால் நஷ்டம் உண்டு.

‘கய்’ என்றால் உயிர் என்று பொருள். ‘த்ரா’ என்றால் ரட்சணை. நமக்கு பத்து பிராணன்கள் உள்ளன. அவை பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என்பவை. இவை பஞ்சப் பிராணன்கள்.

இவற்றைத் தவிர ஐந்து உப பிராணன்கள் உள்ளன. நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன்.

இந்த பிராண சக்திகள் நம் உடல் முழுவதும் பரவி உள்ளன. இவை இல்லாவிட்டால் சிவம் சவமாகிவிடும். பிராண சக்திகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றுதானே நாம் விரும்புவோம்? பின் அவற்றை காத்துக் கொள்ள வேண்டாமா? காயத்திரி மந்திரத்தால் அவற்றை இரட்சித்துக் கொள்ள வேண்டும்.

மந்திரம் உச்சரித்தால் உயிர் எவ்வாறு பாதுகாக்கப்படும்? மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால் தானே உயிர் பாதுகாக்கப்படும்? என்று கேட்கலாம்.

நம் உடலில் கால் முதல் தலை வரை மின்காந்த அலைகள் பரவியுள்ளன. பிராமணர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? காலையிலேயே துயிலெழுத்து காயத்ரி ஜபம் செய்து தம் உடலில் இருக்கும் மின்காந்த சக்தி அலைகளை உறுதியாக்கிக் கொண்டார்கள். அக்காரணத்தால் அவர்கள் உடல் முழுவதும் தெய்வீக சக்தி இருந்தது.

“ஓம் பூ: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I
தியோ யோந: ப்ரசோதயாத் II” என்று காயத்ரியை பிரார்த்தனை செய்தார்கள். “என் அறிவைத் தூண்டுவாயாக!” என்று காயத்ரி மாதாவை பிரார்த்தனை செய்தார்கள். அறிவு தூண்டப்பட்டு பாதுகாக்கப் படாவிட்டால் என்ன ஆகும்? நம் மூளை கூர்மையடையாது. எதிலும் முன்னேற்றத்தை காண முடியாது.

அதனால் நம்முடைய முதலும் முக்கியமானதுமான கடமை பிராமணர்களைப் பாதுகாப்பது. பசுக்களைப் பாதுகாப்பது. ‘கோ’ என்ற சமஸ்கிருதச் சொல் ‘கௌ’ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியது. ஆங்கிலம் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட மொழி அல்ல. சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த ‘பேத்தி’ என்று கூறலாம். லத்தீனும் கிரேக்கமும் சமஸ்கிருதத்தின் சகோதரிகள். டோர் என்றால் கதவு. இது த்வார் என்ற சொல்லிலிருந்து உருவானது. நக்தா என்றால் சம்ஸ்கிருதத்தில் இரவு. அது நைட் ஆனது. எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் வேர்ச் சொல் சம்ஸ்கிருதமாக இருக்கும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்.

இன்று நாம் சமஸ்கிருதத்தைக் காப்பாற்றுகிறோமா? போகட்டும்… கௌரவ மரியாதையாவது அளிக்கிறோமா? சமுதாயத்தில் யாராவது பிராமணனை மதிக்கிறார்களா? யாருமில்லை.

இந்து மதத்திற்கும் பிராமணர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இன்று யாரும் மதிப்பளிப்பதில்லை. பின் சமுதாயத்தை யார் பாதுகாப்பார்கள்?

பாரத தேசத்தில் ஐந்து ‘க’ காரங்கள் உள்ளன. இந்த ஐந்தும் பாதுகாக்கப் பட்டால் இந்தியா பாரத தேசமாக… புண்ணிய பூமியாக விளங்கும்.

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

“நான் இந்தியாவில்தான் வசிக்கிறேன். ஆனால் பிராமணர்களின் மேல் எனக்கு மதிப்பு கிடையாது. நான் வேதங்களை மதிக்க மாட்டேன். அது ஏதோ பழைய நூல். தற்காலத்திற்கு உதவாது. அவற்றை ஏன் படிக்க வேண்டும்?” என்று கேட்பவன் ஹிந்து அல்ல.

“பசுமாட்டை நான் மதிக்க மாட்டேன். கோமாதாவை வணங்கமாட்டேன். பிற விலங்குகளைப் போல அவற்றையும் கொல்லலாம். தவறல்ல. அது எந்த விதத்தில் சிறந்தது? ஆடு தாழ்ந்தது….மாடு மட்டும் உயர்ந்ததா? ஏன் இந்த வேறுபாடு? நாய் தாழ்ந்ததா? அது மனிதனைக் காவல் காக்கிறது. அதனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பேன். மடியில் வைத்து சோறூட்டுவேன். நாயை அன்போடு வளர்ப்பேன். பசுவைக் காலால் உதைப்பேன்” என்பவர்களிடம் ஒரு கேள்வி.

நாயின் சிறு நீரைக் குடிக்கலாமா? அது மருத்துவ குணம் கொண்டதா? ஆனால் பசு மாட்டின் சிறுநீரை அருந்தலாம். நம் முன்னோர்கள் பஞ்சகவியம் காலையில் அருந்தி வந்தார்கள். இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் சிறுநீர் சிறிது அருந்தி வந்தால் நோயின்றி வாழமுடியும். விடியலில் எழுந்து குளித்து விட்டு சிறிது பசுஞ்சாணி அருந்த வேண்டும். இது தற்போது சாத்தியமா? சாத்தியம்தான்! அதனால் என்ன நன்மை? அல்சர் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது. சர்க்கரை நோய் நெருங்காது. கேன்சர் வராது. இது உண்மை. எந்த ஆரோக்கியக் கேடும் அருகில் நெருங்காது. நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கூறியவை இவை!

பசுமாட்டின் உடலில் பதினான்கு புவனங்களும் உள்ளன என்பதால் அதனை வணங்குகிறோம். காலையில் பசுமாட்டைச் சுற்றி வந்து பிரதட்சணம் செய்து வணங்கினார்கள் நம் முன்னோர். இன்று அந்த கலாச்சாரம் கிராமங்களில்கூட தென்படுவதில்லை. காணாமல் போய்விட்டது.

கங்கையில் நாம் சேர்க்கும் கழிவுகளைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். கல்கத்தா ஹூக்ளி நதி முழுவதும் சேறாக உள்ளது. நம் இந்திய கலாச்சாரம் போலவே நதிகளும் நாசமடைந்து விட்டன. ஊழல் நிறைந்த சமுதாயத்தில் வாழும் நாம் புண்ணிய நதிகளை பாழ் செய்து விட்டோம். நம்மை நாம் பிராமணர்கள் என்று எவ்வாறு அழைத்துக் கொள்வது?

பிராமணர்களுக்கும் பிறருக்கும் என்ன வேறுபாடு? சாணக்கியர் தன் தவ சக்தியால் ஒரு பெரிய அரசாங்கத்தை அடக்கியாளக் கூடியவராக இருந்தார்.

தங்குடூரு பிரகாசம் பந்துலு ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். குள்ளமாக சிவப்பாக இருப்பார். எப்போதும் ஒரு மேலங்கி அணிந்திருப்பார். வெயிஸ்ட் கோட். ஏனென்றால் உள்ளே அணிந்திருந்த கிழிந்த சட்டையை மறைப்பதற்காக. அவ்விதம் உயர்ந்த மனிதர்கள் எளிமையை விரும்பி ஏற்றார்கள்.

இன்று ஒரு பஞ்சாயத்துபோர்டு அதிகாரியின் அறைக்குச் சென்றால் கூட அறை முழுவதும் ரூபாய் நோட்டுக் கட்டுகளை பார்க்க முடியும். மிகப் பெருஞ் செல்வம் முடங்கிக் கிடக்கிறது. இந்தியா ஏழை நாடல்ல. இந்தியா மிகப் பெரும் செல்வம் நிறைந்த நாடு. ஆனால் பொதுமக்கள் ஏழைகள். அரசியல்வாதிகள் செல்வந்தர்கள்.

வேதத்தில் உள்ளவை வெறும் பாரத தேச மக்களுக்காக கூறப்படவில்லை. முழு மனித இனத்திற்குமான சொத்துக்கள் அவை. ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒரு மந்திரம் உள்ளது.

“சம் கச்சத்வம், சம் வதத்வம், சம் வோ மனாம்ஸி ஜானதாம், தேவா பாகே யதா பூர்வே…..”

இதன் பொருள் என்ன?

சம் கச்சத்வம் – மனித இனம் முழுவதும் ஒற்றுமையாக சேர்ந்து நடப்போம். ஓ உலக மனிதர்களே! அனைவரும் ஐக்கியமாக சேர்ந்து நடப்போம்.

சம் வதத்வம் – நாம் அனைவரும் ஒரே சிந்தனையோடு ஒரே கொள்கையில் நிற்போம்.

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – நாம் அனைவரும் மனம் ஒருமித்து இருப்போம். நம் அனைவர் மனமும் ஒன்று கலந்து இருக்கட்டும்.

தேவா பாகே யதா பூர்வே – நம் புராதன புண்ணிய புருஷர்கள் எவ்வாறு கூறினார்களோ நாமும் அதேபோல் வாழ்வோம்.

இந்த மந்திரத்தின் தேவை இன்றைக்கும் உள்ளதைக் காண முடிகிறது. இந்த மந்திரங்களை எழுதி எத்தனையோ கோடி வருடங்கள் கடந்துவிட்டன. இன்றைக்கும் அதற்கான தொடர்பு காணப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படும் மந்திரங்கள் இவை.

பிராமணன் காயத்ரி மந்திரத்தின் சக்தியைப் பெற்றானாகில் துஷ்ட சக்திகள் அழிந்து போகும். ஆனால் தற்காலத்தில் அத்தகைய தெய்வீக சக்தி பிராமணனிடம் அரிதாகி விட்டது. தற்போது நேர்மறையான சக்தி வாய்ந்த அலைகள் பிராமணனால் சமுதாயத்திற்கு வழங்கப் படுவதில்லை. காயத்ரி மாதா நமக்கு சக்தி அளிப்பதில்லை. ஏனென்றால் நாம் அவளை வணங்குவதை நிறுத்தி விட்டோம்.

இளைய சமுதாயம் இனியாகிலும் வேதத்தை மதித்து காயத்திரி ஜபம் செய்யக் கற்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து காயத்ரியை வணங்கி அவள் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உண்மை எப்போதும் வெல்லும். ருதா என்ற சமஸ்கிருதச் சொல்லிருந்து ட்ரூத் என்ற சொல் பிறந்தது. சத்தியமே பேச வேண்டும். சமுதாய நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராமணன் செய்யும் தவம் அவனுக்கு மட்டுமல்ல. அனைத்து குலத்தவருக்கும் சென்றடையும். தேசம் தலமாக விளங்கும். பிராமணர்கள் தங்களின் தாழ்ந்த நிலைமைக்கு யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. நாமே நம் நண்பர்கள். நாமே நம் பகைவர்கள். பிராமண தர்மத்தைப் காப்பாற்றிக் கொண்டே அவரவர் உத்தியோகங்களைச் செய்து வர வேண்டும். இன்றைக்கு நாம் ஓரளவாவது நலமாக இருக்கிறோம் என்றால் நம் பூர்வீகர்கள் செய்த தவமே காரணம்.

அறிவுக்கூர்மை மிகுந்த யூதர்களை ஹிட்லர் வேட்டையாடிக் கொன்றது போலவே தற்போது பிராமணர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஏனென்றால் பிராமணர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். பொறாமையும் அசூயையும் நிறைந்தவர்களுக்கு அறிவுத் திறன் மிக்கவர்களைப் பார்த்தால் பொறுக்க இயலாது.

இரண்டாயிரம் ஆண்டுகள் யூதர்கள் தமக்கென்று ஒரு நாடு இன்றி மேற்கத்திய நாடுகளால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் வாடினார்கள். 1948ல் அவர்களுக்கு ஒரு சிறிய நாடு கிடைத்தது. அதுவே இஸ்ரேல். அது தெலுங்கானா மாநிலம் அளவு நிலப்பரப்பு கொண்டது. இப்போது அவர்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். அரபு நாடுகளை எல்லாம் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பிராமணர்களின் மீது பல திசைகளிலிருந்தும் தாக்குதல் நடக்கிறது. பிராமணர்களை அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. பகவத்கீதை மீதும் பிராமணர்கள் மீது மட்டுமே குறிவைத்து எதிர்ப்பு கிளம்புகிறது. பசுமாடுகள் கொல்லப்படுகின்றன. இந்த அழிவு சக்திகளிடமிருந்து பாரத தேசத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம் புராதான கலாசார செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்! தர்மப் பிரசாரம் நடக்க வேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!! (POST NO.3344)

 a3ad9-laws-of-manu.jpg?w=600

WRITTEN by London Swaminathan  Date: 11 November 2016 Time uploaded in London: 20-18  Post No.3344

 Pictures are taken from various sources; they are representational only; thanks.   contact; swami_48@yahoo.com

  வரி விதிப்பது எப்படி? மனு, காளிதாசன், வள்ளுவன் அணுகுமுறை

 வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இவர்களில் மனு சொல்லும் விஷயஙகள் வியப்பைத் தரும் முதலில் அதைக் காண்போம்:-

 மனுதர்ம சாத்திரத்தில் ஏழாவது அத்தியாயத்தில் சொல்கிறார்:-

 ஒரு அரசன் பசியினால்  இறந்து போக நேரிட்டாலும், வேதத்தை மனப்பாடமாக வைத்திருக்கும் பிராமணனிடத்தில் வரி வாங்கக்கூடாது. அவர்களைப் பசியினால் வாடவிடக்கூடாது (7-133)

 வேதம் அறிந்த பார்ப்பான் பசியினால் மயக்கமடைந்து விழுந்தால் அந்த அரசாட்சியும் வீழும் (7-134)

 இதைப் பார்த்தவுடன் பலரும் இது நியாயமில்லாத ஒரு விதி என்று எண்ணலாம். ஆனால் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை), தேவதானம் (கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை) ஆகிய அனைத்தையும் இறையிலி (வரியற்ற) நிலங்களாகவே அறிவிக்கின்றன. ஆக, தமிழ் மன்னர்கள் மனு நீதியைப் பின்பற்றியது தெளிவு.

 இப்போது இந்த இடத்தில் பிராமணர்கள் என்பதற்குப் பதிலாக அறிஞர்கள் என்று போட்டுவிட்டால் பொருள் நன்கு விளங்கும். அதாவது புத்தியுடையோர், அறிவாளிகள் வறுமையில் வாடக்கூடாது என்பதே பொருள். நிறைய சம்பாதிக்கும் அறிஞர்கள் இதில் வாரார். பிராமணர்கள் மூன்று நாட்களுக்கு மேலான செல்வம் வைத்திருக்கக்கூடாது என்பது விதி. எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுதானம் செய்து பொருள் பெற வேண்டும் என்பதற்கே இந்த விதி!

3bf4c-manu2bskt.jpg?w=600

 அட்டை போல உறிஞ்சு!

 மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

 ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

 அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப்பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

 பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

cfdcf-manu2b3.jpg?w=494&h=659

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

 வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

 காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

 சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard