New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை
Permalink  
 


முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

அக்டோபர் 3, 2011

முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

 

முன்னாள் தமிழக சிமி தலைவர் கைது: கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி பிணையில்லாத கைது வாரண்ட் பிறப்பித்தபோது[1], வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா வரவில்லை. பிறகு அடுத்த நாள் சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் கோர்ட் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டார்[2]. ஏற்கெனவே குற்றாப்[ பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது[3]. வெ‌ளிநா‌ட்டி‌‌ல் இரு‌ந்து பண‌ம் பெ‌ற்றது தொட‌ர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓரா‌ண்டு ‌சிறை‌த் ‌த‌ண்டனையு‌ம், 10 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யி‌ன் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எஸ்.ஜவாஹிருல்லா, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்ட‌ன் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. பிறகு இந்த ஆணை ரத்து செய்யப்பட்டது[4].

அல்-உம்மா, சிமி தலைவர்கள் உருமாறிய விதம்[5]: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அவ்வப்பொழுது, பெயர்களை மாற்றிக் கொண்டு, புதிய அவதாரங்களுடன் செயல்பட்டு வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டப் பிறகு, அதனுடைய தலைவர்கள், உறுப்பினர்களை தங்களுடைய அடையாளங்களை, அத்தகைய புதிய இயக்கங்கள், நிறுவனங்களுடன் சேர்த்து மாற்றிக் கொண்டனர். மனித நீதி பாசறை என்ற நிருவனத்தை முன்னாள் சிமி தலைவர் எம். குலாம் அஹ்மது ஆரம்பித்தார். அவர் அதிலிருந்து நீக்கப்பட்டபோது, தாஹ்ருல் இஸ்லாமிக் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.  இன்னொரு சிமித் தலைவர் எம்.எஸ். ஜவாஹிருல்லா முஸ்லீம் முன்னேற்றாக் கழகம் என்பதின் தலைவரானார். மற்றோருவர் எஸ்.எம்.பாக்கர் தௌஹீத் ஜமாத்தின் தலைவராக உருமாறினார். வங்கிக் கணக்குகள் முடக்கப் பர்டுவதால், கண்காணிக்கப் படுவதால், அவைகளும் மாற்றப் படுகின்றன. பணம் கொடுப்பவர்களும் வேறு வடிவத்தில், உருவத்தில் கொடுக்கிறார்கள். ஆனால், அததகைய பணம், நிதியுதவி தீவிரவாதத்திற்கு உபயோகப் படுத்தப்படும் போதுதான், மனித நேயம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாலும், உண்மை வெளிப்படத்தான் செய்கிறது.

 

அனுமதியின்றி அயல்நாடுகளிலிருந்து கோடிகள் பெற்றது: கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம்சா‌ற்‌றி வழக்கு போடப்பட்டது[6]. “கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில், சட்டத்திற்குப் புறம்பாக, திட்டமிட்டு பணம் பெற்று “பேங்க் ஆப் இந்தியா” சென்னை கிளையில் பணத்தைப் போட்டு வைத்ததை கண்டுபிடித்தது[7]. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் ‌நீ‌திப‌தி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார்[8]. அந்த தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை‌த் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌த் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்[9].

வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வெற்றிப் பெற்று எம்.எல்.,ஏ ஆனது: மற்ற கட்சிக்காரர்கள் என்றால், உடனே அவர் அந்த சவழக்கில் சிக்கியுள்ளார் என்றெல்லாம் பட்டியல் இல்ல்டுக்ல் காட்டும். ஆனால், இவர்கள் விஷயத்தில் அவர்களது பின்னணி கொடுக்கப்படவில்லை. மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா ரூ.40 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது) விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல்‌ கொ‌ள்ள‌த்த‌க்கது. தண்டனை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கோர்ட்டில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தலா இரு நபர் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

 


[2] June 14 (PTI) Rameswaram MLA MH Jawahirullah and four others appeared in a court today, a day after non-bailable warrant (NBW) was issued against them in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. Additional Chief Metropolitan Magistrate, Egmore, R Killivalavan had issued the warrants against MMK President Jawahirullah and four others yesterday in a case in which they allegedly collected Rs two crore in foreign contributions in the name of ”Coimbatore Muslim Relief Fund,” in violation of laws.

[7] CBI had registered a case against Jawahirullah, representing Ramanathapuram Assembly Constituency, S Hyder Ali, H Sayed Nizar Ahmed, G M Shiek and Nalla Mohmed Kalanjim, all authorised signatories of ‘Coimbatore Muslim Relief Fund’, alleging that they entered into a criminal conspiracy to form an association to accept foreign contributions without prior permission and registration with the central government between 1997 and 2000.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard