New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : சொல்வது கனிமொழி!

மார்ச் 17, 2010 by vedaprakash
‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : பெண்களுக்கு கனிமொழி அட்வைஸ
மார்ச் 17,2010,00:00  IST

Latest indian and world political news information

‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : சொல்வது கனிமொழி! : சன் குழுமம்,  கலைஞர் டிவி மற்றும் பல சினிமா நிறுவனங்கள், கம்பெனிகள் நடத்திவரும் குடும்பத்தில் உள்ளவர் தான் கனிமொழி.  அந்நிறுவனங்களில் தனக்கு ஆதாயம் இல்லை என்று அவர் சொல்ல முடியாது. ஆகவே, “”பெண்கள் “டிவி’யில் சீரியல் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில் ஒரு பிரயோசனமும் ஏற்படாது,” என்று கனிமொழி எம்.பி., கூறினார் என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. மாநில தி.மு.க., மகளிரணி, தொண்டரணி, பிரசாரக்குழு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் சென்னையில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

கனிமொழியின் நீளமான அறிவுரை! விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி., பேசியதாவது:

  • “பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை.
  • ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது.
  • பெண்கள் முன்னேற வேண்டுமானால் சுற்றி நடக்கும் விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும்.
  • நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
  • சமூகத்தில் பெண்கள் உயர்வதற்கு மனபலம்,அறிவு பலம் வேண்டும்.
  • ஆண்களை விட பெண்கள் ஒருபடி கீழே தான் என்ற நிலை மாற வேண்டும்.
  • ஆண்களுக்கு, பெண்கள் சமமானவர்கள் தான் என்ற நிலை அமைய வேண்டும்
  • பெண்கள் அறிவை வளர்த்துக் கொள்ள சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்ள வேண்டும்.
  • நிறைய படிக்க வேண்டும்.
  • நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • நாம் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் என உலகத்திற்கு காட்ட வேண்டும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.விழாவில் தமிழக அமைச்சர்கள் பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி ரவிக்குமார், ஹெலன்டேவிட்சன் எம்.பி., கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக துணை வேந்தர் அருணாசிவகாமி அனந்தகிருஷ்ணன், சக்தி மசாலா உரிமையாளர் சாந்திதுரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாநில தி.மு.க., மகளிரணி தலைவி நூர்ஜகான்பேகம் வரவேற்றார், தொண்டரணி செயலர் காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.

நித்யானந்தா நீலப்படம் பார்ப்பது பிரஜோனமா? வேடிக்கை என்னவென்றால் சன் டிவிதான் டிவி-சீரியல்களை ஒளிபரப்புகிறது. சமீபத்தைய நித்யானந்த நீலப்படத்தையும் ஒளிபரப்பி-பரப்பி  தமிழச்சிகளை உசுப்பிவிட்டது. பரீட்சை நேரத்தில் மாணவி-மாணவர்களை இதைப் பார்க்க செய்தது! கனிமொழி தன்னுடைய அப்பா, அம்மா, அண்ண, மைத்துனர் ………..முதலியோர்களை ஏன் கண்டிக்கவில்லை?

புதன்கிழமை, அக்டோபர் 15, 2008, 15:42[IST]
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இலங்கைத் தமிழர் பிரச்னை: எம்.பி., பதவியை ராஜிநாமா செய்தார் கனிமொழி

kanimozhi.jpg

சென்னை: மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரான கனிமொழி பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியிடம் நேற்று அளித்தார்.

பின்தேதியிட்டு இக்கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ராஜிநாமா கடிதம்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் எதையும் தி.மு.க. தலைமையகம் தெரிவிக்கவில்லை.

இலங்கைப் போரை இரண்டு வார காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்க்ள தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கடிதம் கொடுத்துள்ளார். தன்னுடைய தந்தையும், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் இந்தக் கடிதத்தை அவர் அளித்தார்.


இலங்கைப் பிரச்னைக்கு தீர்வுகாண கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே கனிமொழி ராஜிநாமா கடிதம் கொடுத்தது தமிழகஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

7 அமைச்சர்கள் உள்பட 14 லோக்சபா திமுக எம்பிக்களும் ராஜினாமா

சனிக்கிழமை, அக்டோபர் 18, 2008, 9:54[IST]
இலங்கையில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த 14 லோக்சபா எம்பிக்களும் இன்று ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினர்.

இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு 2 வாரத்துக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடுவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் 29ம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார் கனிமொழி.

அவரைத் தொடர்ந்து திமுக ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் நேற்று முன் தினம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்தனர்.

இந் நிலையில் நேற்று லோக்சபா எம்பிக்கள் 14 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் அளித்தனர்.

நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி, நிதியைமச்சர் அன்பழகன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு ராஜினாமாக் கடிதங்கள் தரப்பட்டன.

இரவு சுமார் 9 மணியளவில் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் வரிசையில் நின்று ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.

மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தனது ராஜினாமா கடிதத்தை முதலில் கொடுத்தார். அந்தக் கடிதம் 29.10.08 என்ற பின் தேதியிட்டு இருந்தது.

அதே தேதியிட்ட கடிதங்களை மத்திய அமைச்சர்கள் ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், வெங்கடபதி, ரகுபதி, ராதிகா செல்வி, பழனி மாணிக்கம் ஆகிய 7 பேரும் கொடுத்தனர்.

பின்னர் திமுக எம்பிக்கள் செ.குப்புசாமி, கிருஷ்ணசாமி, கே.சி.பழனிச்சாமி, ஏ.கே.எஸ்.விஜயன், பவானி ராஜேந்திரன், சுகவனம் ஆகியோர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

கருணாநிதி பேட்டி:

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

திமுகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளும், எம்.பிக்களும் தாமாகவே முன்வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள கடிதங்கள் என்னிடம்தான் உள்ளன.

வேணுகோபால் எம்.பி. தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பதற்காக வந்து கொண்டு இருக்கிறார் . நாளை (இன்று) அவர் அந்தக் கடிதத்தைத் தருவார். (இவரைச் சேர்த்து தான் 14 எம்பிக்கள்)

தயாநிதி மாறன், காதர் முகைதீன் ஆகியோர் ராஜினாமா கடிதம் தரவில்லை.

மத்திய அரசுக்கு கெடுவாக கொடுக்கப்பட்ட நாள் வரை இவர்கள் அனைவரும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்கள். ராஜினாமா கடிதம் அங்கு கொடுக்கப்பட்டால், எம்பி பதவி மட்டுமல்ல மந்திரி பதவியும் போய் விடும் என்றுதான் அர்த்தம் என்றார் கருணாநிதி.

மக்களவையில் திமுகவுக்கு தயாநிதி மாறன் உள்பட 15 எம்பி்க்களும் மாநிலங்களவையில் 4 எம்பிக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. (காதர் மொய்தீன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் அதிகாரப்பூர்வமாக திமுக எம்பி என்றே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

29ம் தேதி வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் இந்தக் கடிதங்களை முதல்வர் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும், மாநிலங்களவை துணைத் தலைவருக்கும் அனுப்புவார் எனத் தெரிகிற


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முதல் ஆளாக கனிமொழி எம்.பி., பதவி ராஜினாமா
அக்டோபர் 16,2008,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : முதல்வரின் மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி இலங்கைப் பிரச்னையை வலியுறுத்தி, தனது எம்.பி., பதவி ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இலங்கைப் பிரச்னையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. "இரண்டு வாரங்களுக்குள் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வார்கள்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மார்க்சிஸ்ட் தமிழக செயலர் வரதராஜன், முதல்வர் கருணாநிதியை நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இப்பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வரிடம், "எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கும் பொருந்துமா' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், ""ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கும் சேர்த்து தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்,'' என பதிலளித்தார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக முதல்வரின் மகளும், ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யுமான கனிமொழி, தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் கொடுத்து விட்டதாக நேற்று காலை தகவல் பரவியது.


இதுகுறித்து கனிமொழியிடம் கேட்டதற்கு, ""இம்மாதம் 29ம் தேதியிட்ட எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளேன். இலங்கைத் தமிழர்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தின் பேரில் இந்த கடிதத்தை கொடுத்துள்ளேன். எனது கடிதத்தை ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பவில்லை; தி.மு.க., தலைவருக்கு தான் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.அனைத்துக் கட்சி கூட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு முன்னோட்டமாக கனிமொழியின் ராஜினாமா அமைந்துள்ளது.


"ம.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும் இப்பிரச்னைக்காக ராஜினாமா செய்ய தயங்க மாட்டார்கள்' என அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் தெரிவித்துள்ளபடி ராஜ்யசபா எம்.பி.,க்களும் ராஜினாமா செய்வது என்றால், ராஜினாமா செய்யும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ராஜ்யசபாவில் தமிழகத்தின் சார்பில் அ.தி.மு.க., - 7, தி.மு.க., - 4, காங்கிரஸ் - 4, பா.ம.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒன்று என மொத்தம் 18 எம்.பி.,க்கள் உள்ளனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் என்ற அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தைச் சேர்ந்த 50 எம்.பி.,க்கள் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர்


__________________
Michael Grigori

Date:
Permalink  
 

How about our CM's Unnaviratham Drama 
Karunanidhi - Fasting by israeli.agent

karuna-fasting.jpgkaruna%2B3hr%2Bfastimg.jpg0427105541_0.jpgkarunanidhi_fast_20090608.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா?

April 15, 2010 by vedaprakash
தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைதுஏப்ரல் 15,2010,00:00  ISThttp://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17813பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை: பஞ்சாங்கத்தையே நம்பாத பரதேசிகளுக்கு, பஞ்சாங்க வாசிப்புப் பற்றி ஏன் கவலை? முதலில் நாத்திகம் பேசும் இந்த கேடு கெட்ட திமுக-திக வகையறாக்களுக்கு “நம்பிக்கையாளர்களை” ஆளவே தகுதியில்லை. இந்து விரோதியக இருந்து, ஏற்கெனெவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருக்கின்ற நிலையில், வெட்கம்-மானம்-சூடு-சுரணை இல்லாமல் முதல்வராக ஆட்சி செய்து கொண்டு, தொடர்ந்து இந்துக்களை, இந்துக்களின் மனங்களை புண்படசெய்து வஎஉவது கருணாநிதி. ஏற்கெனவே கோவில் மண்டபங்களை இடித்தாகி விட்டது; கோவில் நிலங்களை பட்டாப் போட்டு விற்றாகி விட்டது;…………………….இத்தகைய கேடு கெட்ட நிலையில், இதெல்லாம் தேவையா?இந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.இந்துக்கள் வழக்குத் தொடர வேண்டும்: தங்களது மத நம்பிக்கைகளில் தலையிடும் கருணாநிதியின் மீதும், அரசு மீதும் வழக்குத் தொட்ரவேண்டும். மடாதிபதிகள் உடனடியாக, இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிவுரை வழங்கவேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோடிகளை குவிக்கும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது: காங்கிரஸ்

First Published : 21 Apr 2010 04:24:21 AM IST

Last Updated : 21 Apr 2010 05:37:17 AM IST

சென்னை, ஏப். 20: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் காயத்ரி தேவி கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.
இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50 ஆயிரத்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்றுகூறி அனுப்பி விடுகிறார்கள். இந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடு, 100 நோயாளிகளுக்கு 1 செவிலியர் போன்ற பிரச்னைகளால் அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை. 
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்? எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும். அதுபோல தமிழகத்தில் மக்கள் தொகையை கணக்கிடும்போது 62 ஆயிரம் செவிலியர்கள் தேவை. ஆனால் 20 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியர் உதவியாளர் பணிக்கு 6 மாதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 மாதத்தில் எதனையும் கற்றுக் கொள்ள முடியாது. எனவே, இதுபோன்ற பயிற்சிகளை தடை செய்ய வேண்டும். மருத்துவமனை வசதிகள் சட்டத்தினை கொண்டு வந்து மருத்துவக் கருவிகளை இயக்குபவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் முறையாக பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் பாரபட்சம் கூடாது. அதுபோல தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வழங்க வேண்டும்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: இப்பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அதற்கேற்ப அரசு முடிவெடுக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முல்லை பெரியார் ஐவர் குழுவில் தமிழக அரசு: முதல்வர்
ஏப்ரல் 21,2010,12:39  IST

Top world news stories and headlines detail

சென்னை: முல்லை பெரியார் ஐவர் குழு கமிட்டியில் தமிழக அரசு இடம் பெறும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் 110விதியின் கீழ் இந்த அறிவிப்பி‌னை முதல்வர் வெளியிட்டார். 

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவர் என்றும் இந்த குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகம் மற்றும் கேரளா சார்பில் தலா ஒருவரும், மத்திய அரசின் சார்பில் இருவரும் இடம் பெற வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடியது. சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முல்லை பெரியாறு ஐவர் குழு கமிட்டியில் தமிழக அரசு இடம் பெறும். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக குழுவில் இடம் பெறுவார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?'

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010, 10:32[IST]

 

சென்னை: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் காயத்ரி தேவி கூறுகையில்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரண கட்டணம்:

இந்த திட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரணமான கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வகை கட்டணம் பெறுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.

பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை.

மக்கள் எப்படி வருவார்கள்?:

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றும் புரியாத மருத்துவ படிப்புகள்:

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத மருத்துவ உதவியாளர் பயிற்சியை (பிசிஸியன் அசிஸ்டெண்ட் கோர்ஸ்) சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்துகிறார்கள். அதேபோல மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் 6 மாத உதவி செவிலியர் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? நாடித் துடிப்பை பற்றி அறிந்து கொள்ளக் கூட இந்த 6 மாதம் போதாதே? ஏன் இந்த பயிற்சி இதுபோன்ற ஒன்றும் புரியாத பாடப்பிரிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்களூரை நம்பியிருப்பது ஏன்?:

திசு சோதனை, நரம்பு நுண் சோதனை போன்ற அதிமுக்கியமான சோதனைகளுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையை நம்பியிருப்பது ஏன்?. நிமான்சுக்கு இணையாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை தமிழகத்தில் இந்திரா காந்தி பெயரில் உருவாக்க வேண்டும்.

தனியார் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேசஸ்' பயிற்சி பெற அனுமதி மறுப்பது ஏன்? அதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பது வேதனைக்குரியதாகும் என்றார் காயத்ரி தேவி.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சையா?:

அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் பேசுகையில், தண்ணீரில் கலப்படம், உணவில் கலப்படம், இப்போது மருந்திலும் கலப்படம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம். இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

(கலைஞர்) காப்பீட்டுத் திட்டமும் சட்டமன்ற கட்டிடம் போல அவசரக் கோலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காகத் தான்.

71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை?.

காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது. அந்த 3 பேர் கதி என்ன?.

இடையில் ஒரு புரோக்கர் ஏன்?:

அதேபோல ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்? என்றார்.

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?:

பாமக எம்எல்ஏ டாக்டர் நெடுஞ்செழியன் பேசுகையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்காக `பேச்சலர் ஆப் ரூரல் மெடிசின் சர்வீஸ்' (பி.ஆர்.எம்.எஸ்.) என்ற மூன்றரை வருட படிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

மருந்து சாப்பிட்டால் நோய் வரும் ஆட்சி:

பிரேமா (அதிமுக): போலி டாக்டர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கருக்கலைப்பு போன்றவற்றை செய்கின்றனர். அதேபோல, வயிற்றில் பெண் சிசு எனத் தெரிந்ததும் கருக்கலைப்பு செய்கின்றனர். இதற்கு சில ஸ்கேன் சென்டர்கள் துணை போகின்றன. இவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப்பேறு உதவித் திட்டம் பெற மொபைல் போன், சைக்கிள், டிவி வைத்திருக்கக் கூடாது என்கின்றனர். இவை எல்லாம் வாழ்வில் அவசியமாகிவிட்டவ. இந்த நிபந்தனைகளை நீக்க வேண்டும்.

நோய் வந்தால் மருந்து சாப்பிடலாம். ஆனால், மருந்து சாப்பிட்டால் நோய் வரும் என்பது உங்கள் ஆட்சியில் நிச்சயம் நடக்கும் என்றார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

kani.bmp
கலைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றும் தி.மு.க. தென் மண்டல செய லாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வெளிப்படையாக பேச... அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கீரனிடம் சொன்ன கருத்தும் உன்னிப்பாக கவனிக் கப்படுகிறது. இந்த சூழலில் கலைஞர் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராகவும், தி.மு.க.வின் டெல்லி முகமாகவும் இருக் கின்ற எம்.பி.கனிமொழியின் நிலை என்ன என்பதை அறிய அவரிடம் பேசி னோம். கேள்விகளை முழுமையாக உள் வாங்கி பிறகு தன் பதிலை பதிவு செய்த கனிமொழியின் பேட்டியிலிருந்து...

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான முட்டுக் கட்டைகள் தொடர்கின்றனவே? மசோதா நிறைவேற தி.மு.க. எடுக்கும் முயற்சி என்ன?

கனிமொழி எம்.பி. : பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா லோக்சபாவில் நிறைவேறுவதற்கு முன் நிறைய சவால் களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ப தாகத்தான் தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறை வேற்றப்பட்ட போது காண் பித்த முனைப் பை இப்போதும் காட்டவேண்டி யது அவசிய மாகிறது. இந்த மசோதா நிறை வேற வேண்டும் என்று தொ டர்ந்து குரல் கொடுத்துவருகிறார் தலைவர் கலைஞர். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று தன்னை அணுகி பேசுபவர் களிடம் பெண்கள் இடஒதுக்கீடு என்பது எங்களின் கொள்கை ரீதியான முடிவு. இதில் இருந்து நாங்கள் விலக முடியாது என்பதோடு அவர் களிடமும் மசோதா நிறைவேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். மசோதா தொடர்பான கூட் டத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு தலைவரின் கருத்துக்களை வலியுறுத்தி பேசியதோடு மற்ற தலைவர்களிடமும் ஒத்த கருத்தினை உரு வாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தொடர் முயற்சிகளின் மூலம் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான தனிமனித தாக்குதல்தானே பெண்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. அரசியலுக்கு வரும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்வது?

கனிமொழி எம்.பி. : இந்த பிரச்சனை அரசியலுக்கு வரும் பெண் களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. வீட்டு வாசலை விட்டு வெளியே வேலைக்கு போகின்ற அத்தனை பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. பொதுவெளியில் செயல்படக்கூடிய அத்தனை பெண்களுக்கு எதிராகவும் இந்த சமூகம் அல்லது ஆணாதிக்கம் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் இந்த தனிமனித தாக்குதல்தான். இதை ஒதுக்கித் தள்ளிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர இதற்கு பதில் கூறிக்கொண்டோ அல்லது இதற்காக பயந்து முடங்கிப்போவதோ கூடாது. எல்லா பெரிய அரசியல் தலைவிகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் இது. அதனால் பெண்கள் குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்கள் இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதலைத்தான் முதல் ஆயுதமாகவும், முடிவான ஆயுதமாகவும், முழுமையான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஏசுநாதர் சொன்னது போலத்தான்... கல்லெறியும் தகுதி இருப்பவர்கள் எறியலாம். பெண்களுக்கு எதிராக இந்த கல்லை எறியும் யாருக்கும் அந்த கல்லை எறியும் தகுதி இல்லை. எனவே பெண்கள் இதை எல்லாம் புறம் தள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டிற்கு உலகத்தமிழறிஞர்களின் ஆதரவு... குறிப்பாக ஈழத்தமிழ் அறிஞர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?

கனிமொழி எம்.பி. : ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தம்பிதான் ஆய் வரங்கத்தின் தலைவராக செயல்படுகிறார். அவரை விட ஈழத்தமிழர்கள் மீது அக்கறையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றித்தான் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கமே நடைபெற இருக்கிறது. கிட்டதட்ட 85 தமிழறிஞர்களுக்கு மேல் சிறப்பு விருந்தினர்களாக தலைவர் அழைப்பை ஏற்று வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். 6 ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் வந்திருக்கிறது. எந்த மாநாட்டுக்கும் வராத அளவிற்கு கட்டுரைகள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதில் இருந்தே கோவை செம்மொழி மாநாட்டிற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் உறுதியான கட்சியாக இருக்கின்றது தி.மு.க. ஆனால் சமீபகாலமாக நடக்கின்ற நிகழ்வுகள் இந்த உறுதித் தன்மையை குலைத்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள் தொண்டர்கள். அவர்களின் கவலையைத் தலைவர்கள் புரிந்துகொண்டிருக் கிறார்களா? கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிப்படையாகவே அறிவித் திருக்கிறாரே?

கனிமொழி எம்.பி. : சொல் லப்படக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக் கும் நாம் ஒரு அர்த்தம், பரபரப்பு எல்லாம் உருவாக்கிக் கொண்டோம் என்றால் எல்லாமே குழப்பமாகவே நம் கண்களுக்குத் தெரியும். சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்களை சாதா ரணமாகவே புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து, சொல்லப்பட்ட வார்த் தையை, சூழலை விட்டு தனியே எடுத்து அர்த்தம் கற்பித்தால் அது பத்திரிகை களுக்கு பரபரப்பு தீனியாக அமையுமே தவிர... உண்மையின் பிரதிபலிப்பாக இருக்காது.

அழகிரி - ஸ்டாலின் இரு வருக்கும் இடையிலான உரசல்கள் பற்றி கலைஞரே வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?

கனிமொழி எம்.பி.: கட்சிக்கு எது முக்கியம், நான் எதை முக்கியமாக நினைப்பேன் என்பதை இரண்டு பேருமே புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அதனால் அதன்படி செயல்படுவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையைத்தான் தெரிவித்திருக்கிறார்.

அழகிரியும், ஸ்டாலினும் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்று நக்கீரனில் சொன்னார் கலைஞர். அவரின் வலியை இரண்டு அண்ணன்களும் உணர்ந்திருக்கிறார்கள் என நம்புகிறீர்களா?

கனிமொழி எம்.பி.: எனக்கான வலியை அறியாதவர்கள் அல்ல என்றுதான் தலைவர் சொல்லியிருக்கிறார். அறிந்துகொள்ள வேண்டும் என்ற சொல்லவில்லை. அறிந்தவர்கள் என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். தலைவருக்கு இருக்கின்ற நம்பிக்கை தி.மு.க.வில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் உங்க ளிடம் பாசத்தை வெளிப்படுத்துவதில் முதன்மையானவர் யார் என்று நினைக் கிறீர்கள்?

கனிமொழி எம்.பி.: வெளிப்படுத்து வது என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். இதில் முதன்மையானது, இரண்டாவது என்றெல்லாம் எப்படி வரிசைப் படுத்த முடியும்.

சரி...நீங்கள் விரும்புவது அதிரடி அரசியலையா? அமைதி அரசியலையா?

கனிமொழி எம்.பி.: தலைவர் பல நேரங்களில் அமைதியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். பல நேரங்களில் அதிரடியான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார். நான் இரண்டையுமே ரசிக்கிறேன். அவரைப் போலவே இரண்டுவித மாகவும் இருக்கவே விரும்புகிறேன்.

தி.மு.க.வின் டெல்லி முகமாக நீங்கள் அனுப்பி வைக்கப்பட்டீர்கள். உங்களுடைய பணி யை நீங்கள் எந்த அளவு சரியாக செய்திருப்ப தாக நினைக்கி றீர்கள்? நீங்கள் பரபரப்பாக செயல்படுவ தில்லை என் கிற கருத்து உள்ளதே?

கனிமொழி எம்.பி.: எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை, ஒவ்வொரு முறையும் நான் சரியாகவே செய்திருக்கிறேன். இக்கட்டான சூழல்களிலும், தலைவரின் கருத்துக்களை சரியாக செய்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதேநேரத்தில் தலைவருக்கும் அது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பதை மீடியாவில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொள்ள விரும்பியது இல்லை. ஏனென்றால் பல காரியங்கள் மிகுந்த சென்சிட்டிவானதாகவும் இருந்திருக்கிறது. இப்போதும் பெட்ரோல் உயர்வாகட்டும், பெண்கள் இடஒதுக்கீடு ஆகட்டும் எல்லாவற்றிலும் நான் என் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். கட்சிக் கான சந்திப்புகளையும், கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் வெளிச்சம்போட்டு நான்தான் செய்தேன் என்று ஒவ்வொரு முறையும் பறை சாற்றிக்கொள்வது அவசியம் அல்ல என்பது என்னுடைய எண்ணம்.

குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தனக்கு லாபமாக நினைப்பார் முதல்வர் என்கிறாரே சோ?

கனிமொழி எம்.பி. : குழப்பம் தலைவருக்கு லாபமாக போவது என்பது தமிழ்நாட்டிற்கு லாபம்தான். அது சோ போன்றவர்களுக்கு லாபமாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் இவரைப் போன்றவர்கள், கலைஞர் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் வராதா? தி.மு.க.வில் குழப்பம் வராதா? அந்தக் குழப்பத்தை வைத்து குளிர் காயலாமா என்று காத் திருப்பவர்கள். இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த குழப்பத்தை வைத்து தனக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்காதா என நினைப்பவர்கள் சரியான நேரத் தில் மக்களால் ஒதுக்கப்படுவார்கள். தலைவருக்கும், கட்சிக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்பதை புரிந்தவர் களாகவே மக்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர், அழகிரிக்கு மத்திய அமைச்சர், திரும்பி வந்த தயாநிதிக்கு கேபினட் என பதவிகள் கொடுத்த கலைஞர் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் கொடுக்காதது பற்றி வருத்தப்படு கிறீர்களா? விரைவில் ஓய்வு பெறப்போகிறேன் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் உங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டிருக்கிறதா?

கனிமொழி எம்.பி.: தலைவர் கலைஞர்தான் முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என என்னை அழைத்து வந்தார். ராஜ்யசபா எம்.பி. ஆக்கியதும் அவர்தான். எத்தனையோ பேரின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய தலைவரே என்னுடைய எதிர் காலத்தையும் முடிவு செய்வார். அதனால் என் அரசியல் எதிர்காலம் பற்றி நான் எந்தக் கவலையும் படவில்லை. shockan


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேபிள் சாம்ராஜ்யத்தில் யுத்தம்!

d.jpg
shockan.blogspot.com

தமிழக கேபிள் சாம்ராஜ்யம் மீண்டும் ஒரு முறை பரபரப்பாகி இருக்கிறது!

சித்திரை 1-ம் தேதி அண்ணா நகரில் மத்திய அமைச்சர் அழகிரி தொடங்கி வைத்த ஜேக் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்தின் எம்.எஸ்.ஓ. புதிதாக சென்னை மாநகர எல்லையில் கால் பதிக்க உள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தின் எஸ்.சி.வி. தனிப்பெரும் நிறுவனமாக சென்னையில் இயங்கி வரும் நிலையில் ஜேக் உதயமாகியிருக்கிறது. புதிய நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவராக அழகிரியின் மகன் துரை தயாநிதி பொறுப் பேற்றுள்ளதால் இந்த விவகாரம்... கேபிள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தயாநிதி மாறனுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக சொல்லப்படுவதும் இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. 

ஜேக் கம்யூனிகேஷன்ஸ் எம்.எஸ்.ஓ.வை அழகிரி தொடங்கி வைக்கப்போவதாக செய்தி வந்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களோடு பேச்சு வார்த்தையை தொடங்கியது எஸ்.சி.வி. ஆனால் பேச்சுவார்த்தை களில் சமரச முடிவு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் அழகிரியின் நண்பரும் ஜேக் நிறுவனத்தின் தலைவருமான ஜெயராமனுடன் தயாநிதி மாறனே பேசியிருக்கிறார். அவ ரிடமும் பிடிகொடுக்காமல் ஜெயராமன் பேச... ""என் தம்பியை (அழகிரி மகன் துரை தயாநிதியைத்தான் இப்படி சொல்கிறார்) வைத்தே எங்களுக்கு எதிராக கூர்சீவப் பார்க்கிறீங்களா?'' என்று கூறியிருக்கிறார் அமைச்சர் தயாநிதி. ஆனால், கலைஞர் குடும்பத்தின் சீனியர்கள் பேசியும் ஜேக் எம்.எஸ்.ஓ.வைத் திறந்து வைப்பதில் தீவிரமாக இருந்தார் அழகிரி. 

புதிய பிசினஸ் தொடங்கிய மகிழ்ச்சி யில் இருந்த துரை தயாநிதி, ""மக்களுக்கு நல்ல சேவையைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆரோக்கியமான போட்டியால் வாடிக்கையாளர் களுக்கு பயன் கிடைக்குமே? நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என உற்சாகமாக சொன்னார். 

பெரிய புள்ளிகள் போட்டி போடும் அளவிற்கான கேபிள் சாம்ராஜ்யத்தில் யார் கொடி பறக்கிறது? 

""சென்னையில் மட்டும் 18 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. இந்தியன் ரீடர்ஷிப் சர்வேயின் 2009-ம் ஆண்டு கணக்குப்படி தமிழகம் முழுவதும் ஒரு கோடி இணைப்புகள் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை மேலும் பல லட்சங்கள் கூடியிருக்கின்றன. தமிழகத்தின் மொத்த கேபிள் மார்க்கெட்டில் எஸ்.சி.வி.யிடம் சுமார் 50 சதவீத இணைப்புகள் இருக்கின்றன. தமிழக எம்.எஸ்.ஓ. அசோசியேஷன் அமைப்பில் இடம்பெற்றுள்ளவர் களிடம் 35 சதவீத இணைப்புகள் உள்ளன. இந்த அசோசியேஷனை கடந்த அக்டோபரில் நுங்கம் பாக்கத்தில் அழகிரிதான் தொடங்கி வைத்தார். எஞ்சியிருக்கிற 15 சதவீத இணைப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த 600 ஆபரேட்டர்களிடம் உள் ளன''’என்று மார்க்கெட் நில வரத்தை விளக்கினார்கள் நீண்ட நாள் ஆபரேட்டர்கள். 

""சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 5 இடங்களிலும் எஸ்.சி.வி.தான் கேபிள் இணைப்புகளை கொடுத் துள்ளது. தமிழ்நாடு எம்.எஸ்.ஓ. அசோசியேஷனில் அங்கம் வகிக்கும் ஜேக் நிறுவனம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களி லும், அழகிரியின் ஆர்.சி.வி. மதுரையின் பாதி இடங்களிலும், பாலிமர் நிறுவனம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், முன்னாள் அமைச்சர் ராஜாவின் கிங் கேபிள் ஈரோடு பகுதியிலும், மத்திய அமைச்சர் காந்தி செல்வனின் கேபிள் நிறுவனம் நாமக்கல் மாவட்டத்திலும், ஆகாஷ் கேபிள் நிறுவனம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட் டங்களிலும் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள்'' என கேபிள் சாம்ராஜ்ய ஆளுகை பற்றியும் விவரித்தார்கள் ஆபரேட்டர்கள். 

இவற்றில் சென்னைதான் பெரிய மார்க்கெட் என்பதால் அங்கே காலூன்ற விரும்புகிறது ஜேக். சென் னையில் கேபிள் இணைப்பு கொடுக்கும் உரிமையை எஸ்.சி.வி. தவிர, ஹாத்வே, அரசு கேபிள், இண்டஸ் இண்ட், ஜேக் ஆகிய நிறுவனங்கள் பெற்றிருக் கின்றன. ஹாத்வே கடந்த ஆண்டு தன்னுடைய சென்னை அலுவலகத்தை மூடிவிட்டது. மற்ற இரண்டு பேரும் பிசினசை தொடங்கவே இல்லை . 2008-ம் ஆண் டில் லைசென்ஸ் பெற்ற ஜேக் இப்போது எஸ்.சி.வி.யின் மார்க்கெட்டை பிடிக்க தீவிரமாக கள மிறங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் 100 ரூபாயில் 50 ரூபாய் லோக்கல் ஆபரேட்டருக்கு போய்விடும். 30 ரூபாய் கட்டண சேனல்களுக்கு போய்விடும். எஞ்சியிருக்கும் 20 ரூபாய்தான் எம்.எஸ்.ஓ.க்களுக்கு கிடைக்கும். மாதாந்திர வருமான வருவாயைத் தவிர கேபிள் டி.வி.யின் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடிக்க சேனல்கள் கோடிக்கணக்கில் எம்.எஸ்.ஓ.க்களுக்கு கொட்டி கொடுக்கும். அப்படி வருகிற வருவாயே ஆண்டுக்கு 100கோடிக்கு மேல் இருக்கும். நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை கணக்கிடும் டேம் மீட்டர்கள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எம்.எஸ்.ஓ.க்கள் விரும்புவார்கள். அதனால்தான் சென்னையில் ஜேக் கேபிள் தொடங்குவதை எஸ்.சி.வி. விரும்பவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

எஸ்.சி.வி. தரப்பிலோ, ""இதற்கு முன்பும் எங்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அப்போதும் பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் எங்கள் பக்கமே இருந்தார்கள். தொழில் நுட்ப ரீதியாக நாங்கள் உயர்ந்த சேவையை அளிக்கிறோம். மக்களும் விரும்பி பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த இதுவரை நடந்த 3 முயற்சிகளிலுமே சிறு சேதாரம் கூட ஏற்படாமல் இயங்கி கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான போட்டி என்றால் வரவேற்கலாம். திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் சிலரின் முயற்சி இது. ஆனாலும் எங்களுக்கு இதனால் கவலை இல்லை''’என அழுத்தமாக சொல்கிறார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

""அழகிரியை மையமா வச்சு கேபிள் சர்ச்சை சுழன்றடிக்குதே?''
Reporter shockan.blogspot.com

shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... சட்டமன்றக் கட்டிடத்தைக் கட்டித் திறப்பதில் கலைஞர் எப்படி வேகம் காட்டினாரோ, அதுபோலவே சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வரு வதிலும் தன்னோட வேகத்தைக் காட்டி, தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதைக் கவனிச் சீங்களா?''

""மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி யோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்குதே!''

""ஆமாங்க தலைவரே... தீர்மானத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிர்ப்பாக 61 வாக்குகளும் பதிவாச்சு. அ.தி.மு.க.வால் ஓரங்கட்டப்பட்ட ரவிச்சந்திரனையும் ராஜேந்திர னையும் ஓட்டுப்போட வரவேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். அ.தி.மு.க. சி.வி. சண்முகமும் சந்திராவும் சட்டமன்றத்துக்கே ஆப்சென்ட்டாம். உடல்நிலை சரியில்லாததால நத்தம் விஸ்வநாதனால வரமுடியலை. ஆதரவு நிலை எடுத்த பா.ம.க. எம்.எல்.ஏ. கலியவரதன் ஓட்டுப்போடுறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால பாத்ரூம் போயிருக்காரு. அவரு திரும்பி உள்ளே வர்றதுக்குள்ளே எல்லா கதவுகளையும் சாத்திப்புட்டாங்களாம்.''

""பா.ம.க.வின் ஆதரவு இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமானதா இருந்திருக் குன்னு சொல்லு.''

""அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி. பதவிக் காலம் முடிவடைவதால், மீண்டும் அந்தப் பதவி யைத் தக்க வைத்துக்கொள்ள தி.மு.க.வின் ஆதரவை எதிர்பார்த்து பா.ம.க தலைமை தொடர்ந்து செயல்பட்டுகிட்டிருக்குது. பென்னாகரம் இடைத்தேர்தலில் இதைத் தான் கலைஞரும் சூசகமா, ராமதாஸ் என்கிட்டே போனில் பேசிய தொனி வேறுன்னு இரண்டு முறை சொன்னார். மேலவையைக் கொண்டுவரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கணும்னு அன்பு மணியிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்ததால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதின்னு அவுங்க தரப்பில் பேசிக்கிறாங்க. மேலவை யைக் கொண்டு வர சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பாராளு மன்றமும் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி யின் கையெழுத்தை வாங்கணும். மீண்டும் மேலவையைக் கொண்டுவர தமிழக பா.ஜ.க. ஆதரவுக் குரல் கொடுத்திருப்பதால் பார்லி மெண்ட்டிலும் காங்கிரஸ்- பா.ஜ.க. எம்.பி.க் களின் ஆதரவோடு ஓ.கே. ஆயிடும் சூழல் நிலவுவ தால், மேலவை மீண்டும் அமைவ தில் பிரச்சினையில்லை. புதிய சட்ட மன்றத்தின் நடுக்கூடத்தில் மேலவை செயல் படும்னு கலைஞர் அறிவித்திருக்கிறார்.''

""மேலவையைக் கொண்டுவருவது பற்றி ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க. அறிவித்தாலும், இந்த முறை பொதுத்தேர்தல் நெருங்கி வர்ற நேரத்திலே இத்தனை வேகம் காட்டியதற்கு என்ன பின்னணியாம்?''

""ஓட்டெடுப்பில் கலந்துக்கிட்ட தி.மு.க. தரப்பினரிடம் பேசினேங்க தலைவரே.. .. வரும் தேர்தலிலும் தி.மு.க.வே ஜெயித்து மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்குது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தால், மு.க. ஸ்டாலின் முதல்வராயிடுவார். அப்ப கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டார், கோ.சி.மணி, வீரபாண்டியார், துரைமுருகன் போன்ற கட்சியின் சீனியர்கள் எந்தப் பொறுப்பில் இருப்பதுங்கிற சிக்கல் ஏற்படக்கூடாதுங்கிறதுக்காகத்தான் மேலவை கொண்டு வரப்படுதாம். தி.மு.க. சீனியர்களுக்கு மேலவை. இளையவர்களுக்குப் பேரவை.''

""தன் பெயரில் பேரவை அமைத்து செயல்படக்கூடாதுன்னும், அப்படி செயல்படு கிறவர்கள் மேலே தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கும்னும் மு.க.அழகிரி திடீர்னு அறிக்கை விட்டதோட பின்னணி என்ன?''

""அழகிரி தனி ஆவர்த்தனம் நடத்திக் கிட்டிருப்பதா ஸ்டாலின் தரப்பில் வருத்தம் இருந்தது. தென்மண்டல அமைப்புச் செய லாளரின் கட்டுப்பாட்டுக்குள் மேலும் சில மாவட்டங்களைக் கொண்டுவர அழகிரி கொடுக்கும் நிர்பந்தத்தை அனுமதிக்கக்கூடாதுங் கிறதில் ஸ்டாலின் தரப்பு உறுதியா இருந்ததைப் பற்றி போன முறை நாம பேசியிருந்தோம். அழகிரி பேரவையும் ஸ்டாலின் தரப்புக்கு ஒரு நெருக் கடியான விஷயமாகவே இருந்தது. கட்சித் தலைமை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லைன்னு கேள்வி எழுப்புனாங்க. இந்த நிலையில், அழகிரி பேரவை பற்றி நிறைய புகார்கள் தலைமைக்கு வந்ததால் கலைஞரும் வருத்தத்தில் இருந்தார்.''

""பேரவை சார்பில் எக்கச்சக்கமா பேனர்கள் வைக்கப்பட்டபோதே, நடவடிக்கை எடுக்கப் படும்னு கலைஞர் சொல்லியிருந்தாரே?''

""பேரவைன்னு பெயரை சொல்லிக்கிட்டு, நிறைய வசூல் நடப்பதாகவும் புதுப்புகார்கள் வந்ததையடுத்து, அழகிரியிடம் கனிமொழி பேசியிருக்கிறார். கலைஞரின் மனவருத்தத்தை எடுத்துச்சொல்லி, பேரவை செயல்பாடுகளுக்கு எதிரா அழகிரியிடமிருந்தே அறிக்கை வெளி வரணும்னு கலைஞர் விரும்புவதை கனிமொழி எடுத்துச்சொல்ல, அதையடுத்துதான் அழகிரி யிடமிருந்து இந்த அறிக்கை வெளிவந்திருக்குது. அதுமட்டுமில்லீங்க தலைவரே... அழகிரி தன்னோட ஆதரவாளர்கள்கிட்டே, நான் சொல்ல விரும்பியதையெல்லாம் பேட்டியா சொல்லிட் டேன். இனி எதுவும் பேசப்போவதில்லைன்னு சொன்னதோடு, கட்சிக்காரர் வீட்டு கல்யாண விழாவில்கூட பேச மறுத்துட்டாராம்.''

""அழகிரியை மையமா வச்சு கேபிள் சர்ச்சை சுழன்றடிக்குதே?''

""ஏப்ரல் 14-ந் தேதியன்னைக்கு ஜேக் கம்யூனிகேஷன்ஸ்ங்கிற கேபிள் நிறுவனம் தொடங்கப்படுது. இதில் அழகிரி மகன் துரைதயாநிதியும், அழகிரியின் நண்பர் ஆவடி ஜெயராமனின் மகன் ஜேக் ஜெயராமனும் பங்குதாரர்கள். கேபிள் நெட்வொர்க்கை வலிமையா வைத்திருக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனம் சார்பில் ஜெயராமன்கிட்டே, சென்னையில் மட்டும் உங்க பிசினஸை தொடங்க வேணாம்னு சொல்லியிருக்காங்க. அவர் முடியாதுன்னதாலே, அழகிரிகிட்டே பேசியிருக்குது சுமங்கலி தரப்பு. அழகிரியோ உறுதியா இருந்துட்டாராம். தன் நண்பர் தரப்பிடம், திட்டமிட்டபடி ஆரம்பிச்சடுங்கன்னு அழகிரி சொல்ல, அழைப்பிதழும் ரெடியா யிடிச்சி. மதுரையிலிருந்து அழகிரி உட்பட கட்சி பிரமுகர்கள் திரளா சென்னைக்கு திங்கள் இரவே கிளம்பிட்டாங்க. சுமங்கலி கேபிள் விஷனின் உரிமையாளரான தயாநிதி மாறனுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு சப்போர்ட்டாக இருக்கிற நிலையில், ஜேக் ஜெயராமனை வைத்து அழகிரி தரப்பில் கேபிள் நிறுவனம் தொடங் கப்படுவது பதட்டத்தை உண்டாக்கியிருக்குது.''

""அடுத்த மேட்டர்?''

""சட்டீஸ்கர் மாநிலத்தில் 76 சி.ஆர்.பி.எஃப். போலீசாரை மாவோயிஸ்ட்டுகள் தாக்கி அழித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, ராஜினாமா செய்வதா உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் கொடுத்த விவகாரம், போன வெள்ளிக்கிழமையன்னைக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திடிச்சி. ப.சியின் ராஜினாமா விவகாரம் தொடர்பா டெல்லியிலிருந்து இன்னொரு தகவலும் கிடைச்சிருக்குங்க தலைவரே... இந்த தாக்குதலுக்கு யார் பொறுப் புன்னு மீடியாக்களில் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு விவாதம் நடந்தது. அதுபோல, இதே கேள்வியைக் கேட்க எதிர்க்கட்சி களும் ரெடியாயி டிச்சின்னு மத்திய அரசுக்கு தகவல் வர, பிரதமர் அலுவல கத்திலிருந்து ப.சியைத் தொடர்புகொண்டு, ராஜினாமா கடிதம் கொடுங்கன்னு கேட்க, அதன்படி ப.சி.யும் கடிதம் கொடுக்க, சம்பவத் துக்குப் பொறுப் பேற்று ப.சி. ராஜி னாமா செய்ததாக வும், அதை ஏத்துக் கலைன்னு மத்திய அரசு ஒரு டிராமா நடத்தியிருக்காம். ராஜினாமா கடித விவகாரத்தால் டென்ஷனில் இருந்த ப.சி, பாண்டிச்சேரிக்கு வந்து காங்கிரஸ் மந்திரிகளை ஒரு பிடி பிடிச்சிட்டார்.''

""அரசியலில்தான் உள்குத்துகள் சகஜமாச்சே.. அ.தி.மு.கவிலும் ஒரு உள்குத்து விவகாரம், வெளிக்குத்து அளவுக்கு சீரியஸாகியிருக்குது. அ.தி.மு.க. எம்.பி. ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்ட வழக்கில், இன்னைக்கு வரைக்கும் முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவா இருக்கிறார் ர.ர.வான வாய்மேடு பழனியப்பன்.''

""எங்கே மறைந்திருக்கிறாராம்?''

""முத்துப்பேட்டையில் அலையாத்திக் காடுகள் நிறைந்திருக்கும் பகுதியில் மறைந்திருக்காராம். அவரையும் அவரோட ஆளான, ஆயக்காரன்புலம் கவுன்சிலர் வீரபாண்டியனையும் ஓ.எஸ்.எம். தரப்பு ஆட்கள் தேடி அலைஞ்சிக்கிட்டிருக்காங்க. பெயில் கிடைத்த வீரபாண்டியன், நடுசேத்தி அருள்மணி வீட்டில் தங்கி, தன் செல் போனில் பழனியப்பனிடம் பேசிக்கிட்டிருந்த நேரத்தில், மாஜி சி.பி.ஐ. ஒ.செ.வும் மாஜி கவுன்சிலருமான இளங்கோவனின் மகன் பகத்சிங்கும், அவரது அண்ணன் மகன் நக்கீரனும் வீரபாண்டியனோட கழுத்தை குறிவைத்து அரிவாளைப் போட, அது போன் பேசிக்கொண்டிருந்த வீரபாண்டி யனோட கையை வெட்டிடிச்சி. மறுபடியும் அவரை வெட்ட முயற்சித்தபோது, ஆட்கள் வந்ததால விட்டுட்டு ஓடிட்டாங்க. வெட்டுப் பட்ட வீரபாண்டியன் தலித் இனத்தவர். வெட்டியவங்க ஓ.எஸ்.மணியனோட சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. அதனால இந்த உள்கட்சி மோதல் இப்ப ஜாதி ரீதியான பதட்டத்தை நாகை மாவட்டத்தில் உருவாக்கியிருக்குது. ஓ.எஸ்.எம் தரப்பும், வாய்மேடு பழனியப்பன் தரப்பும் ஒருத்தர் மீது ஒருத்தர் வெறிகொண்டு ஆயுதங் களோடு அலைஞ்சுக்கிட்டிருக்காங்க.''

""பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரியின் சென்னை விசிட் பற்றி சொல்றேம்ப்பா. மயிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதின் கட்காரி ரொம்ப உற்சாகமா பேசினார். அதற்கப் புறம் கட்சி நிர்வாகிகளோடு நடந்த ஆலோ சனையில், யாருடன் கூட்டணி வைக்கலாம்னு சொல்லுங்கன்னு கட்காரி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு தமிழக பா.ஜ.க தலைவர்களுக்குத் தெரியலை. தி.மு.க, அ.தி.மு.க 2 கட்சிகளுமே நமக்கு சாதகமா இல்லைங்கிறதை எப்படி அகில இந்தியத் தலைவர்கிட்டே சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருந்தாங்க.''

""அ.தி.மு.க. ஏரியா தகவல்கள்?''

""ஜெ. வீட்டில் பி.ஏ.வா வேலைபார்த்த கார்த்திகேயனை மன்னார்குடிக்கு அனுப்பிட்டு, மன்னார்குடியில் கணக்கு பார்த்துக்கிட்டிருந்த கிருஷ்ணமூர்த்திங்கிறவரை பி.ஏ.வாக் கியிருக்காங்க. சிறுதாவூரில் நடந்த ஆலோசனையின் போது கார்த்திகேயன் மேலே கட்சி நிர்வாகிகள் புகார்களை அடுக்கியிருக்காங்க. ஜெ.வுக்கு அனுப்பப்படும் முக்கிய கடிதங்களை மறைச்சிட்டார்னும், நிர்வாகிகள் நியமனத்தில் பணம் வாங்கிட் டாருன்னும், ஜெ.வின் மூவ்கள் பற்றி வெளியே சொல்றாருன்னும் புகார்கள் சொல்லப்பட்டி ருக்கு. ஜெ.வின் விசாரணையிலும் இதெல்லாம் உண்மைன்னு தெரிஞ்சதாலதான் கார்த்திகேயன் விரட்டப்பட்டு கிருஷ்ணமூர்த்தியை பி.ஏ.வாக்கியிருக்காங்க. இவர் சசிகலாவின் சிபாரிசாம்.''

""கார்டன் சம்பந்தமான ஒரு தகவலை நான் சொல்றேன். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு காரணம், போயஸ் கார்டன் வீட்டில் வாசல் சரியில்லாத துதான்னு ஆஸ்தான ஜோதிடர் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு வாஸ்து நிபுணர் இதுபற்றி சொன்னப்ப, எங்கம்மா சந்தியா வைத்த வாசல் இது. மாற்றமாட்டேன்னு ஜெ. சொல்லியிருந்தார். இப்ப ஆஸ் தான ஜோதிடரும் சொன்ன பிறகு, கார்டன் வீட்டின் வாசலை கொஞ்சம் தள்ளி வைக்கும் வேலை கள் நடந்துக் கிட்டிருக்கு.''

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்டாலின் மீது என்ன கோபம்? அழகிரி பதில்!

rang.jpg
""ஹலோ தலைவரே... .... தமிழக அரசியல் போக்கு, நம்ம நக்கீரனில் வெளியாகும் பேட்டிகளின் அடிப் படையில்தான் டர்ன் எடுக்குது.''

""ஆமாப்பா... ஸ்டாலினும்-அழகிரியும் உரசிக்கொண்டால்னு கலைஞர் கொடுத்த பேட்டியையடுத்து, கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவேன்னு அழகிரி ரியாக்ட் பண்ணி னார். அதையடுத்து, மு.க.ஸ்டாலின் நம்ம நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், அதிரடி அரசியலில் தனக்கு நம்பிக்கையில்லைன்னு அழுத்தமா சொல்லியிருந்தார்.''

""இந்த பேட்டி சம்பந்தமாகவும் ஏர்போர்ட்டில் அழகிரியை ஏகப்பட்ட மீடியாக்கள் சூழ்ந்து, ஸ்டாலின் பேட்டிக்கு என்ன ரியாக்ஷன்னு கேட்க, அவர்கிட்டேயே கேளுங்கன்னு சொல்லிட்டார். கலைஞர் குடும்பத்தில் இப்ப சீனியரா இருப்பவங் களில் முக்கியமானவர் முரசொலி செல்வம். கலைஞர் மகள் செல்வியின் கணவர். அவரோட மகள் எழிலரசியின் வீணை இசை அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு சென்னையில் நடந்தது. 3 மாதத்தில் வீணை பயிற்சி முடித்து நடைபெற்ற அரங் கேற்றத்தில் எழிலரசியின் வீணை இசை, கலைஞர் உள்ளிட்ட எல்லோரையும் கவர்ந்திடிச்சி. சமீபகாலத்தில் கலைஞர் குடும்பத்தினருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி தந்த விழா இது.''
rang3.jpg
அந்த விழாவில் பேசிய கலைஞர், "என்னுடைய குடும்பம் கலைக் குடும்பம். கலையாத குடும்பம், கலைக்க முடியாத குடும்பம்-அவ்வாறு இது திகழவேண்டும் என்பதுதான் கடவுள் நம்பிக்கை இல்லா விட்டாலும் என்னு டைய பிரார்த்தனை யாகும்'னு நெகிழ்ச்சியா சொல்லியிருக்கிறாரே!''

""இந்த விழாவில் கலைஞருக்கு ஒரு பக்கம் அழகிரியும் கனிமொழியும் உட்கார்ந்திருந்தாங்க. இன்னொரு பக்கம் ஸ்டாலினும் தயாநிதி மாறனும் உட்கார்ந்திருந்தாங்க. நிகழ்ச்சி முடிந்து கிளம்புற வரைக்கும் ஸ்டாலினும் அழகிரியும் எதுவும் பேசிக்கலை. ஆனா, அதற்கப்புறம் அழகிரி தனக்கு வேண்டியவங்ககிட்டே, நடப்பு அரசியல் நிகழ்வுகள்பற்றி மனம் திறந்து பேசியிருக்காரு. அப்ப, உங்க சொந்த தம்பி ஸ்டாலின் மீது அப்படி என்ன கோபம்னு அவருக்கு வேண்டியவங்க கேட்டிருக்காங்க.''

""என்ன சொன்னாராம்?''

""நம்ம நக்கீரனில் ஏற்கனவே சொன்ன விஷயம்தான். பென்னாகரம் இடைத்தேர்த லுக்கு தன்னைப் பிரச்சாரத்துக்கு வரும்படி ஸ்டாலின் கூப்பிடலைன்னு கலைஞரிடம் அழகிரி சொல்லியிருந்ததையும், அதுபற்றி ஸ்டாலின்கிட்டே கலைஞர் கேட்டப்ப, ஸ்டாலின் சொன்ன பதில் கலைஞருக்கு திருப்தி தரலைன்னும் எலெக்ஷன் சமயத்திலேயே சொல்லியிருந் தோம். பென்னாகரத்தில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் இருந்தப்ப, அழகிரி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தார். தனக்குரிய மரியாதையை ஸ்டாலின் தருவதில் லைன்னு தனக்கு நெருக்கமானவங்க கிட்டே அழகிரி சொல்லியிருக்கிறார்.''

""கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளரா இருக்கிறவர் அழகிரி. அவர் மண்டலத்தில் இடைத்தேர்தல் நடக்கும்போது ஸ்டாலின் போய் பிரச்சாரம் செய்கிறார். அதுமாதிரி இவரும் வந்து பிரச்சாரம் செய்தால், கட்சிக்கு பலம்தானே!''

""அழகிரிக்கு வேண்டியவங்க அது பற்றியும் அவர்கிட்டே கேட்டிருக்காங்க. அதற்கு, நான் என் அப்பா மாதிரி பிடிவாதக்காரன். அந்தப் பிடிவாதத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அழையா விருந்தாளியா எங்கேயும் போகமாட் டேன். கூப்பிட்டாதான் போவேன். மதுரைக்கு ஸ்டாலின் வந்தா என் ஆட்கள் வரவேற்க வருவதில்லைன்னு சொல்றாங்க. அவர் முன்கூட்டியே சொல்லிட்டு வந்தாதானே ஆட்களை அனுப்ப முடியும். மதுரைக்கு வந்த பிறகு சொன்னால் எப்படின்னு சொன்னவர், அதன்பிறகு சொன்ன விஷயங்கள் ரொம்ப முக்கியமானவை. ஸ்டாலினே முதல்வராகி, பதவியில் இருக்கட்டும். எனக்கு மத்திய மந்திரி பதவியெல்லாம் வேணாம். இந்த பார்லி மெண்ட் கூட்டத் தொடர் முடிஞ்சதும் என்னோட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திடுவேன். வெறும் எம்.பி.யா தென்மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிக் கூட்டங்களை நடத்தப்போறேன். எம்.எல்.ஏ தேர்தலில் என் பங்குக்கு 60 தொகுதிகளை ஜெயித்து தர்றேன்ங் கிறாராம் அழகிரி.''

""தென்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை லம்ப்பா ஜெயித்துக்காட்டுறேன்ங்கிறார்.''

""அதோடு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் தன் பொறுப்பில் கொடுத்தால் இன்னும் 30 தொகுதிகளைச் சேர்த்து 90 தொகுதி கள் வரைக்கும் ஜெயித்து தர்றேன்னு பிட்டு போடுகிறார். அதாவது, மெஜாரிட் டுக்குத் தேவை 118 தொகுதிகள். தன்னோட 90 போக, 30 தொகுதிகளை நீங்க கவனம் செலுத்தினா போதும்ங்கிறதுதான் அழகிரியோட கணக்கு. இதையெல் லாம் சொல்ல வேண் டிய இடத்தில் சொல் லுங்கண்ணேன்னு அவரோட ஆதரவாளர்கள் சொல்லியிருக் காங்க. கலைஞர்கிட்டேயே இதைப் பற்றி பேசிட்டேன்னு அழகிரி சொல்லியிருக்காரு.''

""தி.மு.க ஏரியாவிலேயே டிராவல் பண்ணிக்கிட்டிருக்கியே.. அ.தி.மு.க பக்கம் வாப்பா.. சிறுதாவூர் பங்களாவில் அ.தி.மு.க நிர்வாகிகளோடு ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு ஜெ ஆலோசனை நடத்தியிருக்காரே... பென்னாகரம் முடிவுகள் பற்றித் தானா?''
rang1.jpg
""ஆமாங்க தலைவரே... ... ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தம்பிதுரை, ஜெயக்குமார் இவங்களையெல்லாம் சிறுதா வூருக்கு வரவைச்ச ஜெ.வின் முகம் கோபத் தில் கடுகடுன்னு சிவந்திருந்திருக்குது. சிறுதாவூர் பங்களாவில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில்தான் டிஸ்கஷன். ஜெ கையில், பென்னாகரத்தில் பூத்வாரியா அ.தி.மு.க வாங்கிய ஓட்டு விவரம் இருந்திருக்குது. பா.ம.க., தே.மு.தி.க.வெல்லாம் ஓட்டு வாங்கி யிருக்குது. அதெல்லாம் நம்மைவிட பெரிய கட்சியா? தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி சொன்னபடி நாம டெபாசிட் இழந்திருக் கோம். தோல்வியைக் கூட நான் தாங்கிக்கு வேன். துரோகத்தை ஏற்கமாட்டேன்னு கோபமா சொல்லியிருக்கிறார்.''

""கட்சி நிர்வாகிகளின் பதில் என்ன?''

""அவங்க, நாங்களும் எவ்வளவோ போராடினோம். பா.ம.க 4 மாசமா கேம்ப் போட்டு ஜாதி ஓட்டுகளை குறி வச்சி செயல்பட்டது. தி.மு.க. 3 மாசமா அங்கேயே சுற்றி சுற்றி வந்துக்கிட்டிருந்தது. நாம வெறும் 15 நாள்தான் வேலை பார்த்தோம். இருந்தா லும், இன்னும் ஒரு 2000 ஓட்டுகள் வாங்கி நீங்க சொல்றமாதிரி டெபாசிட் இழக்காம தப்பிச்சிருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. இனி, கட்சியை எப்படி பழைய கட்டுக் கோப்புக்கு கொண்டுவருவதுன்னு சிறுதா வூரில் டிஸ்கஷன் நடந்திருக்குது.''

""என்ன முடிவெடுத்தாங்களாம்?''

""மே 1-ந் தேதியன்னைக்கு நெய்வேலியில் எம்.ஜி.ஆர் சிலையை ஜெ. திறக்கிறார். அதற்கான இடம், விழா அமைப்பு பற்றியெல்லாம் பேசியதோடு, தொண்டர்கள்கிட்டே இனிமே நெருக் கமா இருக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றியும் பேசியிருக்காங்க. 2004-ல் கொளப்பாக்கத்தில் கிளைவாரியா கட்சிக்காரர்களை சந்தித்ததுபோல சந்தித்துப் பேசலாம்னு ஆலோசிக்கப்பட்டிருக்குது. இந்த சந்திப்பு முடிவானால், ஒரு கிளையிலிருந்து 4 பேர் வரணும். ஒரு ஒன்றியத் துக்கு 1200 பேர் வருவாங்க. இவங்களுக்கெல்லாம் ஒ.செ. தான் பஸ் ஏற்பாடு, தங் க இடம், சாப்பாடுன்னு செலவு செய்யணும். கணக்கு போட்டா, ஒரு ஒ.செ.க்கு 5 லட்சத்துக்கு குறையாம செலவாகுமேன்னு யோசித் திருக்காங்க. 96-ல் ஜெ. உள்பட அ.தி.மு.க.வினர் தோற்றபிறகு, டான்சி நிலத்தில் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். அதற்கப்புறம் 2001-ல் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதுபோல இப்பவும் கட்சியினரை சந்திக் கணும். அவங்களை ஒரு இடத்துக்கு வரவைக்கலாமா அல்லது ஜெ ஒவ்வொரு மாவட்டமா பயணம் செய்து சந்திக்கலாமான்னு ஆலோசனை நடந்திருக்குது. இன்னும் முடிவெடுக்கலையாம்.''

""பென்னாகரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அ.தி.மு.க தரப்பிலிருந்து பா.ம.க. வுக்கு அழைப்பு வந்ததாகவும், அ.தி.மு.க சார்பில் வேட் பாளரை நிறுத்தாமல் பா.ம.க.வை ஆதரிப்பதுன்னும், ராஜ்யசபா சீட் தருவதுன்னும், சி.வி.சண்முகம் போட்ட வழக்கை வாபஸ் வாங்குவதுன்னும் சொன்னதாகவும், கார்டனுக்கு வரும்படி அழைத்ததாகவும் இதையெல் லாம் பா.ம.க ஏற்கலைன்னும் எலெக்ஷன் முடிந்து ரிசல்ட்டெல்லாம் வந்தபிறகு கோ.க.மணி சொல்லி யிருக்கிறார். அதுக்கு ஜெயலலிதாவிடமிருந்து அதிகாரபூர்வமா எந்த பதிலும் இல்லையே?'' rang2.jpg

""அ.தி.மு.க. தரப்பில் விசாரிச் சப்ப அவங்க தரப்பைச் சொன் னாங்க. அதாவது இடைத் தேர்தல் நேரத்தில் பா.ம.க தரப்பிலிருந்து எல்லா கட்சிகளையும் தொடர்பு கொண்டு பேசினாங்க. அப்ப அ.தி.மு.க சைடில் டாக்டர் வெங்கடேஷ், செங்கோட்டையன், ஆர்ட்டிகல்ச்சர் கிருஷ்ண மூர்த்தி இவங்களெல்லாம் பா.ம.கவோடு காண்டாக்ட் டில் இருந்தாங்க. அவங்க மூலமா, பா.ம.க வுடனான கூட்டணி பற்றிய பேச்சு ஜெ.விடம் போக, அவரோ... அவங்க வரட்டும். பேசட்டும். நம்மை ஆதரிக்கட்டும்னு சொல்லியிருக்காங்க. பா.ம.க தரப்புக்கு இதை கன்வே பண்ணிய மூவரும், கார்டனுக்கு மேடம் வரச்சொன்னாங் கன்னு மட்டும் சொல்லியிருக்காங்க. இந்த ராங் கன்வேதான் இப்ப அரசியல் பரபரப்பாகி யிருக்குது. பா.ம.கவோ அ.தி.மு.க அழைத்தும் நாங்க போகலைன்னு தி.மு.கவுக்கு சிக்னல் காட்டுவதாக சொல்றாங்க.''

""ஆமாப்பா... இடைத்தேர்தல் சமயத்திலேயே கலைஞரிடம் ராமதாஸ் போனில் பேசியிருக்காரே!''

""அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தேவைப்படுவதால் பா.ம.க இந்த மூவ் பண்ணுதுங்கிறதுதான் அரசியல் வட்டார கணிப்பு. தி.மு.க தரப்பில் விசாரித்தேன். அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. போனால் அந்த அணி பலமாயிடும். அதனால தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வை வச்சுக்க கலைஞர் நினைப்பார்னு ஒரு தரப்பு சொல்லுது. அதனாலதான், கோ.க.மணி மீது போடப்பட்ட தீண்டாமை வழக்கு கை விடப்பட்டிருக்குன்னு சொல்றாங்க. இன்னொரு தரப்போ, வழக்கை வித்ட்ரா பண்ணியதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்வ தோடு, இப்ப சட்டமன்றம் நடந்துக்கிட்டிருக்கிற நிலையில், கோ.க.மணி மீதான தீண்டாமை வழக்கை பா.ம.க பெரிய இஷ்யூவாக்க திட்டம் போட்டிருந்ததுன்னும், அதனால ஏற்கனவே மந்திரி சுரேஷ்ராஜன் மீது இதுமாதிரியான வழக்கு விவகாரம் வந்தபோது, அடிப்படை முகாந்திரம் இல்லாததால் கைவிட்டதுபோல, இப்பவும் அடிப்படை முகாந்திரம் இல்லாததால் கைவிடப்பட்டிருக்குன்னும் சொல்லுது.''

""தே.மு.தி.க.வின் மா.செ.க்கள்-மாநில நிர்வாகிகளோடு விஜயகாந்த் ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?''
rang4.jpg
""அது ஒன் மேன் ஷோ போல நடந்ததுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க தலைவரே... ... அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், நான்தான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 20 வருஷத்துக்கு நான்தான் முதல்வரா இருப்பேன். வில்லனாக நடிக்கத்தான் வந்தேன். ஹீரோ வாயிட்டேன். அப்புறம் நடிகர் சங்கத் தலைவரானேன். நான் நினைப்பதெல்லாம் நடக்குது. என் படம் கஜேந்திராவை ரிலீஸ் பண்ண விடாம தடுத்தாரு ராமதாஸ். கட்சி ஆரம்பித்து அவரோட ஏரியாவிலேயே போட்டி போட்டு ஜெயித்தேன். என் குணத்தை யாருக்காக வும் மாத்திக்க மாட்டேன். என்கிட்டே பணம் இல்லை. கேப்டன் டி.வி.யை கடனில்தான் ஆரம்பிக்கிறேன். நீங்களும் நிறைய கஷ்டப்படு றீங்கன்னு தெரியும். கட்சி ஆரம்பித்த 4 வருஷத்திலேயே கூட்டணி வச்சி எம்.எல்.ஏ. மந்திரின்னு ஆயிடும்னு நினைக்கிறீங்க. அவ்வளவு சீக்கிரமா முடியாது. கட்சியை விட்டுப் போறதுன்னா போங்க. நான் கவலைப்படலை. என்கூட இருந்தா, நான் முதலமைச்சராகிறப்ப நீங்க மந்திரியாவீங்க. நானும் நல்லா இருப்பேன். நீங்களும் நல்லா இருப்பீங்க. அ.தி.மு.க இப்ப ஸ்ட்ராங்கா இல்லை. தி.மு.க.வில் ஸ்டாலின்- அழகிரி மோதல் பெருசாகி எலக்ஷன் நேரத்தில் நமக்கு சாதகமா அமையும்னு சொல்லியிருக்காரு.''

""நித்யானந்தர் தகவலோடு நான் லைனில் இருக்கேன். பெங்களூரில் பாலகங்காதர சுவாமிகள்ங்கிறவரோட ஆசிரமம் இருக்குது. இவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். டெல்லியிலிருந்த நித்யானந்தா இப்ப இந்த ஆசிரமத்திற்கு வந்துதான் ரகசியமா தங்கியிருக்கிறாராம். நித்யானந்தரின் சீடரான சதானந்தாங்கிற தனசேகரன் தினமும் ரகசியமா இந்த ஆசிரமத்துக்கு வந்து நித்யானந்தரை சந்திச்சிட்டுப் போறாராம். தன் விசிட் யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுங்கிறதுக்காக தாடியை எடுத்துட்டு, மொட்டை அடிச்சிருக்காராம் சதானந்தா. கர்நாடக அரசின் சப்போர்ட்டால் நித்யானந்தா இப்போது பத்திரமாக இருக்கிறார்.''

மிஸ்டுகால்

பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் டெபாசிட் இழப்புத் தோல்வியை தாங்கமுடியாமல் தீக்குளித்த தொண்டர் தங்கவேலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஜெ., அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும் செய்தார். 70%க்கு மேல் தீக்காயமடைந்த தங்கவேல், சிகிச்சை பலனின்றி திங்களன்று மதியம் மரணமடைந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அவர் மீது நில சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, அவர் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் விலகியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு, அவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு தெரிவித்துள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டத் திட்டமிட்டிருப்பதால், உடுமலைப்பேட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தி வைகோ தலைமையில் ஏப்ரல் 2-ந் தேதியன்று அமராவதி சோதனைச்சாவடியில் ம.தி.மு.க.வினர் திரண்டு மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை சென்னைவரை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மே 15-ந் தேதிவரை நடைபெறவுள்ள பட்ஜெட் விவாத கூட்டத்திற்காக ஏப்ரல் 5-ந் தேதி தமிழக சட்டமன்றம் கூடியது. முதல்நாளில், மின்வெட்டைக் கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து வந்தனர் சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள். மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.ஐ. கட்சியினருடன் சேர்ந்து இவர்களும் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க.வினர் மீது வழக்குப் போடப்படுவதைக் கண்டித்துப் பேச அனுமதிக்காததால் பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அடுத்தவர் சொத்தை அபகரிப்பவருக்கு...

otherland.jpg

shockan.blogspot.com

தஞ்சையின் பிரபலப் புள்ளிகளில் ஒருவரும்... தொழிலதிபருமான ஆர்.கே. குமாரை நில மோசடி விவகாரத்தில் போலீஸ் கைது செய்ய... பவர்ஃபுல் புள்ளிகளைத் தாண்டி இந்த கைது அதிசயம் நடந்தது எப்படி என மூக்கில் விரலை வைக்கிறார்கள் நகரவாசிகள்.

யார் இந்த ஆர்.கே.குமார்?

""தஞ்சைல ஒயின்ஸ் ராமநாதனைத் தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. மதுவிலக்கு அமலில் இருந்த காலத்திலேயே.. பாண்டிச்சேரி சரக்கைக் கொண்டு வந்து வித்து கல்லா கட்டியவர். பிறகு அரசியல் தாதாவான ஜோதியோட கைகோர்த்து தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கள்ளச்சாராய பிஸ்னஸைப் பண்ணி ஓஹோன்னு வளர்ந்தார். இவருக்கு லோக்கல் அமைச்சர்களான உபயதுல்லா, பழனிமாணிக்க மெல்லாம் ரொம்ப நெருக்கம். அப்படிப்பட்ட ஒயின்ஸ் ராமநாத னோட சொந்தத் தம்பிதான் இந்த ஆர்.கே. குமார்''’என்று காதைக் கடித்தார் லோக்கல் புள்ளி.

ராமநாதன் கதை கிடக்கட்டும். இந்த ஆர்.கே.குமார் மீது என்ன புகார்?

புகார் கொடுத்த ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை டி.டி.யான டாக்டர் வேதாசலத்திடமே கேட்டோம்.

""எங்க பிளாட்டுக்கு பக்கத்து பிளாட்டை வாங்கிய வீ.கே.பாண்டியன் என் பவர்... அப்ப இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு எங்க பிளாட்டையும் தன் பிளாட்டோட சேர்த்து பட்டா போட்டுக்கிட்டு பிரச்சினை பண்ணினார். இந்த நிலையில் தான் ஆர்.கே.குமார் அந்த இடத்துக்கு பவரை வாங்கிக்கிட்டு... எங்க இடத்தை அபகரிச் சிட்டார். 50 லட்ச ரூபா இடம் இது. இது சம்பந்தமா புகார் கொடுத்தப்ப போலீஸ் கண்டுக்கலை. அப்புறம்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டேன். கோர்ட்டுதான் நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டது. எஸ்.பி.செந்தில்வேலன் நேர்மையா ஆக்ஷன் எடுத்து கைது பண்ணிட்டார்''’ என்றார் உற்சாகமாக.

ஆர்.கே.குமாரோடு போலி பட்டா தயாரித்த வி.ஏ.ஓ.கிருஷ்ண மூர்த்தி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோரும் கைது செய்யப்பட் டார்கள். பெரும்புள்ளிகள் சிபாரிசுக்கு வரவில்லையா? என காக்கிகள் தரப்பில் கேட்டபோது

""ஏன் வரலை? எங்க டி.எஸ்.பி.யே குமாருக்கு சப்போர்ட்டா வந்தார். அப்புறம் பழனிமாணிக்கம் தரப்பில் வந்தாங்க. உபயதுல்லா தரப்பில் சேர்மன் தேன்மொழி கணவர் ஜெயபால் வந்தார். ஆனா எஸ்.பி. தெளிவா இருotherland1.jpgந்தார்''’’ என்கிறார்கள் மீசையை முறுக்கிவிட்ட படியே.

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் தொழிலதிபர் ஆர்.கே.குமாரோ ""டாக்டர் வேதாசலம் மருமகன் ஸ்ரீதர்பாபுவின் கிளாஸ்மேட் எஸ்.பி. செந்தில்வேலன். அமைச்சர்கள் பேசியும் அவர் என்னை விடலை. அவர்மீது நான் சட்ட ரீதியா நடவடிக்கை எடுப்பேன்''’ என்றார் காரமாய்.

இந்தப் புகார் குறித்து எஸ்.பி.செந்தில் வேலனிடம் நாம் கேட்ட போது... ""அவர் சொல்ற ஸ்ரீதர்பாபு யார்ன்னே தெரியலை. உயர்நீதிமன்றம் சொன்னபடி முறைப்படி விசாரிச்சிதான் நடவடிக்கை எடுத்திருக்கோம். இதில் யாரோட சிபாரிசையும் நாங்க கேட்கலை''’என்றார் புன்னகையோடு.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசின் அடுக்கு மாடி அபாயம்!

govtquarters.jpg
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து 12 பேர் பலியான சம்பவத்தையே இன்னும் கோவை மக்கள் மனதிலிருந்து புரட்டிப் போட முடியவில்லை.

அதற்குள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை அம்மன்குளத்தில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 18 அடுக்கு மாடி குடியிருப்பு களில் இரண்டு கட்டிடங்கள் ஒன்றரை அடி புதையுண்டு போனதையடுத்து, இதில் குடியேறினால் உக்கடத்தில் வசித்த மக்களுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் நேருமோ என்ற அச்சம் அடிசனலாய் மனதில் குடி கொண்டு விட்டது அம்மன் குளத்து வாழ் ஏழை மக்களுக்கு.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பொங்கலூர் பழனிச் சாமி, கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து புதை யுண்டு போன கட்டிடத்தை பார்வையிட பரபரப்பில் நிரம்பி யிருக்கிறது அம்மன்குளம்.

ஓட்டமும் நடையுமாய் தாங்கள் குடியேற இருந்த அக்கட்டிடங்கள் புதையுண்டு போயிருப்பதை ஏக்கமும், கோபமுமாய் வந்து வந்து பார்த்துவிட்டுப் போகும் அம்மன் குளப்பகுதி மக்களுக்கிடையே நம்மிடம் பேசிய ருக்குமணி... ""இந்த அம்மன் குளத்துல 40 வருஷத்துக்கு மேலா நாங்க குடியிருக்கறோம்ங்க. எப்ப மழை பெஞ்சாலும் தண்ணி தேங்கி நிக்குற இந்த குளத்துல கொசுக்களோட கொசுக்களா நாங்க வசிச்சிட்டிருந்தபோது எங்கள மாதிரி ஏழை பாழை களுக்கு கவுருமெண்டு வீடு கட்டித் தர்றாங்கன்னு சொன்னதும் நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

முதல்ல தனித்தனி வீடா (தொகுப்பு) கட்டி தருவாங்கன்னுதான் நெனச்சோம். ஆனா தண்ணி நின்னுட்டிருக்கற இந்த குளத்து மண்ணுல இம்மாம் பெரிய நாலு மாடி கட்டிடத்தை கட்டுனா தாங்குங்களா? சும்மா பேருக்கு மணலைப் போட்டு நிரப்பி அஸ்திவாரம் போட ஆரம்பிச்ச போதே, இதுல தப்பு நடக்கும்னு தெரிஞ்சுதான் நாங்க அப்பவே எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனா ஏழைங்க சொல் அம்பலத்துல ஏறாதுங்கறது போலதான் யாரும் எங்க குரலை கேட்கவேயில்லை. இப்ப பாருங்க நாங்க நினைச்சதுதான் நடந்திருக்கு. இதுல நல்ல விஷயம் என்னன்னா யாரும் குடி போகாத போதே இப்படி நடந்ததுதான். ஒருவேளை குடிபோய் ஏதாவது ஆயிருந்துச்சுன்னா?'' என்கிறார் பயம் நிரம்பிய கண்களோடு.

""மொத்தம் இங்க 936 வீடுகளும், உக்கடத்துல 2094 வீடுகளும் கட்டிட்டு இருக்கறாங்க. இதுக்காக 118 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கறாங்க. கட்றதுக்கு முன்னாலேயே மண் பரிசோதனையை சரியான முறையில செஞ்சுருந்தா இப்ப பிரச்சினையிருந்துருக்காது'' என்கிறார் அம்மன் குளப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத் தலைவரான செல்வராஜ்.

ஆனால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாகப் பொறியாளரான கோபியோ...

""சென்னையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில்தான் இவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டது. மண் பரிசோதனையில் கட்டிடம் கட்ட ஏற்ற பகுதி என்று அப்பரிசோதனை மையத்தால் தெளிவாய் தெரிந்த பின்புதான் கட்டிடங்களை கட்டத் துவங்கினோம். அஸ்திவாரம் மட்டுமே மூன்றரை மீட்டர் ஆழத்துக்கு போட்டு இந்த கட்டிடங்களை மிக உறுதியாக கட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது எஸ்.பி. சுந்தரசாமி அன்கோ நிறுவனம். ஆனால் ஏதோ சில காரணங்களால் கட்டிடம் உள் இறங்கி விட்டதால் எங்கள் மீது தவறு இருப்பதாக பழி போடுகிறார்கள்'' என்கிறார் டென்ஷனாய்.

ஒருவேளை இந்த மண் நான்கு மாடி கட்டிடங்களை தாங்குவதற்கு திறன் அற்றவை என்று தெரிய வந்தால் இங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே இடிக்கப் படுமா என்ற பயத்தை எல்லோர் மத்தியிலும் உண்டாக்கி விட்டிருந்த நிலையில் இந்த கட்டிடங்களின் கதி என்ன என்று அறிய சென்னை அண்ணா பல்கலையின் முன்னாள் தலைவரும், குடிசை மாற்று வாரியத்தின் ஆலோசகருமான ஏ.ஆர்.சாந்த குமார் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.சாந்தகுமாரிடம்... ""ஏற்கெனவே மண் பரிசோதனை செய்யப்பட்டுத்தான் கட்டிடம் கட்டப்பட்டதென்றால் கட்டிடங்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்னவாயிருக்கும்'' என்றோம். ""நிச்சயமாக குடியி ருப்புகள் கட்டுவதற்கு ஏதுவான பகுதி என்று தான் முன் செய்யப்பட்ட மண் பரி சோதனை உறுதி செய்திருந்தது. இங்குள்ள மண் கட்டிடத்திற்கு ஏற்ற முறம் மண் வகையைச் சேர்ந்ததுதான்.

ஆனால் 40 சென்டிமீட்டருக்கு இந்த இரண்டு கட்டிடங்கள் மட்டுமே புதையுண்டு போயிருப்பதால் கட்டிடத்தின் தரை தளத்துக்கு கீழ் ஏதாவது தப்பு நடந்து இருக்கலாம் என்றே நினைக்கிறோம். இங்கே கட்டப்பட்டிருக்கும் மற்ற கட்டிடங்களின் உறுதியையும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம். சாய்ந்திருக்கிற இந்த கட்டிடங்கள் இனிமேற்கொண்டு சாயாது என்பதற்கு உறுதி கொடுக்கலாம்.

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தின் அருகே துளை யிட்டு சுண்ணாம்பு கலவை அல்லது சிமெண்ட் பாலை அத்துளையில் செலுத்தி கட்டிடத்தை நிச்சயம் உறுதியாக்கி விடுவோம். சாய்ந்த தற்கான சரியான காரணங்கள் இந்த முறம் மண்ணின் மாதிரி களை சென்னைக்கு அனுப்பிய பின்னரே தெரிய வரும். அந்த ஆய்வறிக்கையை உடனே தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம்'' என்கிறார் பொறுப்பாய்.

சம்பவ இடத்தைப் பார் வையிட்டு அங்குள்ள மக்களை சந்தித்த தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன்... ""இந்த இடம் சுண்ணாம்புக்கல் நிறைந்த பகுதியென்பதால் கற்கள் கரைந்து மண்ணின் உறுதி தன்மையை குறைத்திருக்கலாம். இது என் யூகம்தான். ஆனால் பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்தக் குறை உடனே சரி செய்யப்பட்டு விடும். வல்லுநர்கள் கொடுக்கும் ஆய்வ றிக்கையின்படி உடனடி நடவடிக் கையும் எடுக்கப்படும்'' என்கிறார் உறுதியாய்.

இக்கட்டிடங்கள் புதைந்து போனதற்கு மண்ணின் தன்மை பொருந்தவில்லையோ என்னவோ பெரும் மனித உயிர்ச்சேதம் நிகழவிருந்ததை இந்த சம்பவம் முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது.

இதை மனிதத் தன்மையோடு உணர்ந்து இங்கே வசிக்கப் போகும் மக்களின் உயிர்களுக்கு அதிமுக்கியம் தந்து குறை களை களைய வேண் டும் ஆள்வோர்களும், அரசு அதிகாரிகளும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஓட்டுக்கு தங்கக்காசு! இளைஞர் காங்கிரஸ் தேர்தல்...

youthcongress.jpg
மிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்பது ராகுல்காந்தியின் கனவு. இதற்கு தமிழகத்தில் பலகீனமாக இருக்கும் காங்கிரஸை வலிமையாக்க வேண்டுமானால் இளைஞர் காங்கிரஸை வலிமையுள்ளதாக மாற்ற வேண்டுமென்பது அவரது திட்டம். இதற்காக இளைஞர் காங்கிரஸில் உள்கட்சித் தேர்தலை வெளிமாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களை வைத்து நடத்துகிறார். உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த இறுதிக்கட்ட தேர்தலில் வெற்றி பெற பேரங்கள், உல்லாச உற்சவங்கள், இழுப்பு வேலைகள் என ஒரு பொதுத் தேர்தலுக்கான அத்தனை ‘ அம்சங்களும்' அரங்கேறிக்கொண்டி ருக்கிறது.

பஞ்சாயத்து வார்டு, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்காக நடத்தப்பட்ட முதல்கட்டத் தேர்தலில் சுமார் 1 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்கள் மூலம் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்டத்தேர்தல் சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலைவர், துணைத் தலைவர் உள்பட 20 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் 4680 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், சில தொகுதிகளில் 20 நிர்வாகிகளுக்கு பதிலாக 16, 18, 19 என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் 4300 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள்.

இந்த 4300 பேர் ஓட்டு போட்டு மாநில நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இறுதிக் கட்ட தேர்தல் 11-ந் தேதி திருச்சியில் நடக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ""இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் சுமார் 2 லட்சம் போலி உறுப்பினர்கள் களையப் பட்டு கடைசியில் 12 லட்சம் பேர் உறுப்பினர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் 12 லட்சம் பேரும் ஓட்டுப்போட வரவில்லை. 40 சதவீதம் தான் ஓட்டுக்கள் பதிவானது.அதாவது 12 லட்சத்தில் 5 லட்சம் பேர்தான் ஓட்டுப்போட வந்தனர். அதனால் ராகுல்காந்திக்கு இந்த தேர்தல் முழு வெற்றியைக் கொடுத்திருப்பதாக சொல்லமுடியாது '' என்கிறார் அதிரடியாக.

தேர்தல் அதிகாரியின் அதிர்ச்சியளிக்கும் இந்த கூற்று பற்றி காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ""காங்கிரஸில் கோஷ்டிகளை ஒழித்து புதிய சக்தியை உருவாக்குவேன். அதனை இளைஞர் காங்கிரஸிலிருந்து துவக்குகிறேன் என்று சொல்லி தேர்தலைக்கொண்டு வந்தார் ராகுல். ஆனால் கோஷ்டிகள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க களத்தில் இறங்கியதால்தான் 12 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது. கோஷ்டித் தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டிருந்தால் ஆயிரக்கணக்கில்தான் உறுப்பினர் களைச் சேர்த்திருக்க முடியும். அந்த நிலையில் தேர்தலே நடந்திருக்காது.
youthcongress2.jpg
12 லட்சம் உறுப்பினர்களையும் தேர்தலில் ஓட்டளிக்க வைத்திருந்தால் ராகுல்காந்தி மீது தமிழக இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் 5 லட்சம் பேர் மட்டும்தான் ஓட்டுப்போட்டுள் ளனர். இதிலும் 2 லட்சம் ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள். தி.மு.க., அதி.மு.க.வினரைக் கொண்டு வந்துகூட ஓட்டுப்போட வைத்தனர். 40 வயசு, 50 வயசு முதியவர்கள் எல்லாம் இளைஞர் தேர்தலில் ஓட்டுப் போட்டனர். அதனால் பதிவானது 3 லட்சம் ஓட்டுகள் என்று சொல்வதுதான் சரி. இதிலும் ஒரு 50 ஆயிரம் இளைஞர்கள் வேண்டுமானால் தானாக பூத்துக்கு வந்திருப்பார்கள். மற்றபடி ஒவ்வொரு கோஷ்டியும் பணத்தை தண்ணீராக இறைத்து இரண்டரை லட்சம் பேரையும் கூட்டிக்கொண்டு வந்துதான் ஓட்டளிக்க வைத்தனர். அதனால்தான் தேர்தல் அதிகாரி அப்படி சொல்லியிருக்கிறார். எல்லா குரூப்பையும் ஒழிப்பேன் என்கிறார் ராகுல். அந்த குரூப் இல்லைன்னா தேர்தலே நடந்திருக்காது. ஆக இந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலால் ராகுல்காந்தி போடுகிற திட்டம் பலிக்காது என்பதுதான் எதார்த்தம்'' என்கிறார் சீரியஸாக.

இந்தத் தேர்தலில் வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, பிரபு, ஜெயந்தி நடராஜன், மணிசங்கர்அய்யர், செல்லக்குமார் என அனைத்து கோஷ்டிகளும் களமிறங்கினாலும் வாசன், சிதம்பரம் தரப்பை தவிர மற்றவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பொதுவாக தனக்கென்று ஒரு கோஷ்டியை உருவாக்க நினைக்காத சிதம்பரம், இளைஞர் காங்கிரஸில் வலிமையைக்காட்ட நினைத் தார். சிதம்பரத்தை விட இதில் அதிதீவிரம் காட்டியவர் அவரது மகன் கார்த்திசிதம்பரம்தான்.

தேர்தலில் பெரும் பான்மையை பிடிக்க, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, ஒய்.வீ.ஆர், ராஜூ உள்பட 120-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர் களை நியமித்து களத்தில் இறக்கினார். இவர்களின் திட்டத்தை அறிந்த வாசன், அதேபோல 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்ததுடன் தனது ஆதரவாளர்களான 5 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க் களிடமும் பொறுப்புகளைக் கொடுத்தார். இப்படி இந்த இரண்டு கோஷ்டிகள்தான் தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தன.

தற்போது 234 சட்டப்பேரவை தொகுதிகளில் தலைவர் பொறுப்பை வாசன் தரப்பு 125 இடங்களையும் சிதம்பரம் 71 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இளங்கோவன் 10, தங்கபாலு 9, பிரபு 8, கிருஷ்ணசாமி 5, மாணிக்தாக்கூர் 5, ஜெயந்தி 4, மணிசங்கர் அய்யர் 3 என கைப்பற்றியுள்ளனர். இவர்களைத் தவிர 10-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் ஜெயித்துள்ளனர். அதே போல சட்டப்பேரவை தொகுதிகள் மூலம் சுமார் 4 ஆயிரம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில், வாசன் தரப்பு 1500, சிதம்பரம் 1200, இளங்கோவன் 400, பிரபு 300, கிருஷ்ணசாமி 200, தங்கபாலு 100 என்கிற எண்ணிகையில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சைகளும் கணிசமான எண்ணிக்கையில் ஜெயித்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்துள்ள இரண்டுக்கட்ட தேர்தலிலும் வாசனுக்கு போட்டியாக சிதம்பரம் தரப்பு வந்திருப்பதால் தனது ஆதரவாளர்களிடம் ஏகத்துக்கும் கோபப்பட்டிருக்கிறார் வாசன். அதிலும் வாசனின் செல்வாக்கு உயர்ந்துள்ள தஞ்சை மண்டலத்தில் மன்னார்குடி, ஒரத்தநாடு, நாகை, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளை சிதம்பரம் தரப்பு கைப்பறியதுதான் வாசனின் கோபம் எக்கச்சக்கத்தில் அதிகரித்து பொறுப் பாளர்களை பொரிந்து தள்ள வைத்துள்ளது.

""மூப்பனார் கோட்டையிலேயே நாங்கள் ஜெயித்திருப்பதற்கு கார்த்திசிதம்பரத்தின் திட்டமிடல்தான் காரணம். தஞ்சை மண்டலத் தில் நமக்கு எதிராக இளைஞர்கள் போய்விடுவார் களா? மூப்பனாரின் செல்வாக்கு பலமாக இருக்கிறது என்கிற மித மிஞ்சிய நம்பிக்கையில் வாசனும் அவரது சித்தப்பா ரெங்கசாமி மூப்ப னாரும் இருந்ததாலும் வாசன் அணியில் உள்ள ஏகப்பட்ட கோஷ்டிகளாலும் நாங்கள் ஜெயித் தோம்'' என்கிறார்கள் சிதம்பரம் ஆதரவாளர்கள். youthcongress1.jpg

11-ந் தேதி திருச்சியில் நடைபெறப்போகும் தேர்தலில் அந்த இடங்களை கைப்பற்ற வாசன் தரப்பும் சிதம்பரம் தரப்பும் மட்டுமே முடியும் என்பதால் இரண்டு தரப்பும் கச்சை கட்டுகின்றன. இரண்டு தரப்பும் 400, 300, 200 ஓட்டுகளை வைத்திருக்கும் மற்ற கோஷ்டி தலைவர்களிடமும் அவர்களது ஆதரவாளர்களிடமும் பேரங்களை துவக்கியிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் 1 லட்ச ரூபாய் தரவும் ரெடியாக இருக்கிறது ரெண்டு தரப்புமே. இது தவிர வெற்றி பெற்ற தங்களது ஆட்கள் எதிர்தரப்பிடம் விலை போய் விடக்கூடது என்பதற்காக தங்களின் நேரடி கஸ்டடியில் வைத்து பாதுகாக்கிறது அனைத்து கோஷ்டிகளும். மேலும் வெற்றி பெற்ற நிர்வாகி களை ஊட்டி, கொடைக்கானலுக்கு அனுப்பி "உல்லாச உற்சவத்தை' அனுபவிக்கவும் ஏற்பாடு செய்தனர். இதனால் கோடை வாசஸ்தலங்களில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ்காரர்கள் 20 பேர் 30 பேர் கூட்டம் கூட்டமாக சுற்றுவதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் மாநில தலைவருக்கு யாரை நிறுத்துவதென்கிற குழப்பம் வாசன் மற்றும் சிதம்பரம் அணியில் மனுதாக்கலுக்கான நாள் வரை இழுத்துக்கொண்டேயிருந்தது. மனு தாக்க லுக்கு 7-ந் தேதி கடைசி நாள் என்பதால் 5-ந் தேதி இரவு, வரதராஜன் என்கிற இன்ஜினியரிங் இளைஞரை தேர்வு செய்தது ப.சி. தரப்பு.

""மாநிலத் தலைவருக்கு போட்டியிட நல்ல இளைஞர்கள் யாரும் சிக்காததால்தான் கடைசிநாள் வரை இரண்டு கோஷ்டிகளும் தடுமாறியது'' என்கிற இளங்கோவன் ஆதரவா ளர்கள், ""பொதுத்தேர்தலில் நடக்கும் அத்தனை அடாவடி களும் முறைகேடுகளும் இந்தத் தேர்தலிலும் நடந்தது. ஓட்டுக்கு 2000 பணம், தங்கக்காசு, தேர்தல் அதிகாரிகளுக்கு சொகு சான வசதிகள், பிரியாணி விருந்து, கள்ள ஓட்டுகள் என தூள் பறந்தது. இந்தத் தேர்தலில் எல்லா கோஷ்டிகளும் செல விட்ட தொகையை கணக்கிட்டால் 15 கோடியைத் தாண்டும். மேலும் கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிஸம் செய்துகொண்டிருந்த பல இளைஞர் கள் நிர்வாகிகளாக வந்திருப்பதுதான் துரதிர்ஷ்டம். இளைஞர் காங்கிரஸில், எந்த கோஷ்டியையும் சேராத ஒரு புதிய மாஃபியா கும்பல் இப்போது நுழைந்திருப்பது கவலை தருகிறது'' என்கின்றனர்.

இளைஞர் காங்கிரஸில் இதுவரை எந்த ஒரு வலிமையும் இல்லாத ப.சி.தரப்பு, தற்போதைய தேர்தலில் வாசன் அணிக்கு போட்டியாக உருவெடுத்திருப்பது பற்றி வாசன் தரப்பில் கேட்டபோது... ""சிதம்பரம் தரப்பினரின் கள்ள ஓட்டுகளும் தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டதும் தான் காரணம். பல இடங்களில் தேர்தல் முடிந்ததும் ரிசல்ட்டை அறிவிக்க விடாமல் அதிகாரிகள் மிரட் டப்பட்டு, பிறகு பதிவான வாக்குகளை சரிபார்த்து அதில் தங்கள் தரப்பில் ஓட்டுகளை அதிகப்படுத்தி பதிவு செய்தனர் சிதம்பரம் ஆட்கள். இதுதான் உண்மை. இறுதிகட்ட தேர்தலில் சிதம்பரம் ஆட் களை மண்ணைக் கவ்வ வைக்கிறோம் பாருங்கள்'' என்கின்றனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க... தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்று அனைத்துத் தரப்பி னரிடமும் விசாரித்தபோது, ""தலைவர் பதவிகளில் வாசன் அணி அதிகமாக கைப்பற்றியுள்ள இடங் களில் நிர்வாகிகளை அதிகம் பிடித்துள்ளது ப.சி. தரப்பும் மற்ற அணியினரும். அதேபோல, தலைவர் பதவிகளில் சிதம்பரம் அணி ஓங்கியுள்ள இடங்களில் வாசன் தரப்போ நிர்வாகிகளில் மெஜாரிட்டியாக இருக்கிறது. இதனால் இளைஞர் காங்கிரஸின் எந்தக் கூட்டமும் ஒழுங்காக நடக்காது. எந்தத் தீர்மானமும் நிறைவேற்ற முடியாது. எல்லா கூட்டங்களிலும் அடி-தடி, மோதல்கள்தான் வெடிக்கும். ராகுல்காந்தி திட்டமிட்டு நடத்திய இந்தத் தேர்தலின் பலன் இதுவாகத்தான் இருக்குமே தவிர, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கிற கனவெல்லாம் நனவாகாது'' என்கிறார்கள் கோஷ்டி வித்தியாசமில்லாமல் ஒரே குரலில்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்!

kalanidhi%2B%2520dayanidhi%2520Maran.jpg
shockan.blogspot.com
பெங்களூர்:  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

""அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' -துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!

mkstalininterview.jpg
shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.

பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?

மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?

மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?

2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?

மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.

இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.

ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?

மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.

மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.

அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?

மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?

மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.

மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?

மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.

அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?

மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.

கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான்நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மனம் திறந்து பேசுகிறார்! ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்..? முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி

kalaingarinterview.jpg
shockan.blogspot.com
தமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.

2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.
இந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன? தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன? என்பதைkalaingarinterview9.jpgதமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...!

5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;

அதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் ""மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;

இதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;

தனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

கலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-

""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -

""யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.





செம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே?

கலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.



தி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்?

கலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா?





தி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள்! அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார்? யார்? என்று பட்டியல் இடுங்களேன்?

கலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே?



அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்?

கலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.





கிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது?

கலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.





தமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது? பிடிக்காதது?

கலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.

குளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்?

கலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.

இடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.





மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

கலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.





எல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.

கலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.





தி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம்? எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்?

கலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.





உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்?

கலைஞர் : ""இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே?'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.


முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

கலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.


கட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா? எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

கலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.


இலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன?

கலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்!


72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி?

கலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அண்ணன்-தம்பி மோதல்! கலைஞர் போட்ட போடு!

rang.jpg
shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இந்தியா முழுக்கவே உன்னிப்பாக பார்க்கப் படுகிற அரசியல் கட்சி, தி.மு.க. இப்பவும் அந்தக் கட்சி விவகாரத்தைத்தான் நேஷனல் மீடியாக்கள் உன்னிப்பா கவனிக்குது.''

""ஆமாப்பா... கலைஞரும் அவரோட குடும்பத்தினரும் அரசியலில் இருப்பதால் நேஷனல் மீடியாக் கள் எப்பவும் கண்காணிப்போட இருக்கும். கட்சியிலோ குடும்பத்திலோ சின்ன பிரச்சினை என்றாலும் அது ஹெட்லைன்ஸா ஹைலைட்டாவது வழக்கம்தானே! மத்திய அமைச்சரவை யில் தி.மு.க.வுக்கு போதிய அமைச்சர் பதவி ஒதுக்காமல் போனதும், இதன்பிறகு டெல்லியில் நடந்த பதவியேற்புவிழாவில் கலந்துக்காம கலைஞர் திரும்பி வந்ததும்கூட ஏதோ இந்தியாவுக்கே பாதகம் உண்டாக்குற விஷயம்போல தேசிய சேனல் களெல்லாம் முக்கியச் செய்தியா வெளியிட்டதே!''

""தி.மு.க விஷயம்னாலே வெறும் வாயை மெல்லும் மீடியாக்களுக்கு அவல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சரும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் கலைஞரின் மகனுமான மு.க.அழகிரி.''

""தி.மு.க தலைவர் பதவி பற்றி அவர் சொன்னதைச் சொல்றியா?''

""ஆமாங்க தலைவரே... கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவரா ஏற்க மாட் டேன்னும், அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லைன்னும் அழகிரி சொல்ல, அது நேஷனல் இஷ்யூவா பத்திக்கிடிச்சி. தி.மு.க யுத்தம்னு இங்கிலீஷ் சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க.''

""அழகிரி சொன்னதில் எந்த தப்பும் இல்லையே? கலைஞரைப்போல பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் தி.மு.கவில் மட்டுமில்லை, இந்தியாவில் வேறெந்த கட்சியிலுமே இல்லையே.. அண்ணா காலத்திலேயே தி.மு.க.வை கிராமம் கிராமமா கஷ்டப்பட்டு வளர்த்தவர் கலைஞர்தான்ங்கிறதை சீனியர் கட்சிக்காரர்கள் இன்னமும் சொல்வாங்க. அண்ணாவைவிட ஃபீல்டு ஒர்க்கில் கலைஞர் ரொம்ப பாடுபட்டதையும், நெருக்கடி நிலை உள்பட எல்லா காலத்திலும் அவர் கட்சியைக் கட்டிக்காப்பாற்றி இன்றைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியா மாற்றியிருப்பதை யும் எல்லாரும் ஒத்துக்குவாங்களே.. இத்தனை தகுதியும் ஆற்றலும் உள்ள கலைஞருக்குப் பிறகு, அதே திறமைகளுடன் இன்னொரு தலைவர் யார் இருக்கிறார். அதைத்தானே அழகிரியும் சொல்றார்?''

""தலைவரே.. அழகிரி சொல்வதை மேலோட்டமா பார்த்தீங்கன்னா இதைத்தான் சொல்றாருன்னு தோணும். ஆனா, அவர் எந்த நேரத்தில் சொல்லியிருக்கிறாருங்கிறதையும் கவனிக்கணும். செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதா கலைஞர் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கிறார். அதாவது, அவர் முதல்வர் பொறுப்பை விட்டுவிடப்போகிறார். கட்சித் தலைவர் பதவி பற்றி அவர் எதுவும் சொல்லலை. முதல்வர் பொறுப்பிலிருந்து கலைஞர் விலகினால், அந்த பதவி மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும்ங்கிறதுதான் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், அழகிரி அம்பு விட்டிருப்பது ஸ்டாலினை நோக்கித்தான். ஸ்டாலினை ஏற்கமாட்டேங்கிறதைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக் கிறார்.''

""அவரோட கணக்கு என்ன?'''

""அழகிரியை சந்திக்கும் ஒரு சில மந்திரிகளும், கட்சி நிர்வாகிகளும், அண்ணே... நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி. தேர்தலில் எப்பவுமே உங்களுக்கு வெற்றிதான். நீங்கதான் தி.மு.க.வுக்கு தோல்வியே இல்லைங்கிற வரலாற்றைப் படைத்திருக்கீங்கன்னு உசுப் பேற்றி விட்டுக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே அழகிரி, நான் ஸ்டாலினை முதல்வரா ஏற்கமாட்டேன். வேற யார் வேண்டுமானாலும் முதல்வரா வரட்டும். ஸ்டாலின் வரக்கூடாதுன்னு சொல்றாராம்.''

""தம்பிக்கு அண்ணன் முட்டுக்கட்டை போடுவதற்கு என்ன காரணம்?''

""அந்த தகுதி தனக்குத் தான் இருப்பதா அழகிரி நினைக்கிறாராம். அழகிரி கிட்டே பேசும் சில மந்திரி களும் கட்சி நிர்வாகிகளும் ஸ்டாலின் கிட்டேயும் பேசிக் கிட்டிருக்காங்க. அங்கே ஒருவிதமாகவும் இங்கே ஒருவிதமாகவும் உசுப்பேத்தி விட்டுக்கிட்டிருக்காங்க. ஸ்டாலினிடம், உங்களைத் தான் மக்கள் ஏத்துக்கிட்டிருக் காங்க. அழகிரியை மக்கள் ஏத்துக்கலை. பெண்கள் கூட்டம் உங்களுக்குத் தான் அலைமோதுது. உங்களைத் துணை முதல்வர்னு சொன்னாலும் இப்ப நீங்க முதல்வராகவே ஆயிட்டீங்க. அவரு வெறும் கனவு கண்டுக்கிட்டிருக்கிறார்னு சொல்றாங்களாம்.''

""என்னப்பா இது... அண்ணனும் தம்பியும் ஒரே கட்சியில்தான் இருக்காங்க. இரண்டு பேருமே பொறுப்புகளில் இருக்காங்க. இருதரப்பிலும் உசுப்பேத்தி விட்டு, மோதிக்க விட்டால் கட்சியோட எதிர்காலம்தானே பாதிக்கும்? கட்சியோட எதிர்காலம் பாதிச்சா, இவங்களுக்கும்தானே பாதிப்பு?''

""இதைத்தாங்க தலைவரே நானும் அவங்ககிட்டே கேட்டேன். அட போப்பா... குடும்பத்திலே அண்ணன்- தம்பிக்குள்ளே சண்டை இருந்தாதான், நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்னு சொல்றாங்க. கூட்டணி பலம், நலத்திட்டங்கள்னு ஸ்ட்ராங்கா இருக்கும் தி.மு.க.வுக்கு, உள்ளுக்குள்ளேயிருந்து பூதாகர மான பிரச்சினைகள் வெடிக்கும்ங்கிறதுதான் எதிர்க் கட்சிகளோட எதிர்பார்ப்பு. நம்ம நக்கீரனில், ஸ்டாலின்- அழகிரி மீது ஜெ. வைக்கும் நம்பிக்கைன்னு அட்டைப் படக் கட்டுரையே வந்தது. எதிர்க்கட்சிகள் எதிர் பார்க்குறபடி தி.மு.க.வுக் குள் சர்ச்சைகள் வெளிப் பட்டிருக்குது.''

""ஆஸ்திரேலியப் பயண நேரத்தில், அழகிரி இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டுப் போக என்ன காரணம்?''

""முடிசூடா மன்னர்னு ஸ்டாலின் பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. ஸ்டாலினே தன்னை புரமோட் பண்ணிக்கிறதுக்காக பத்திரிகைகளை பயன்படுத்திக்கிறதா நினைக்கும் அழகிரி, இதற்கெல்லாம் செக் வைக்கணும்னு சொல்லிட்டுத்தான் தன்னோட கருத்தை வெளிப்படுத்தினாராம். அழகிரியோட கருத்துக்கு கலைஞர் எப்படி ரியாக்ட் பண்ணப் போறாருன்னு ஸ்டாலின் தரப்பு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தது. பென்னாகரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிய கலைஞர் கிட்டே பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமா கேட்டாங்க.''

""அவர் சொன்ன பதிலை நானும் படிச்சேம்ப்பா... ... உங்களுக்கு பிறகு யாரையும் தலைவரா ஏத்துக்க மாட்டேன்னு அழகிரி சொல்லியிருக்கா ரேன்னு கலைஞர் கிட்டே கேட்டப்ப, அதைப் பற்றி அவரையே கேளுங் கன்னு பதில் சொன்னார். உங்களுக்குப் பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதைப் போல அழகிரி சொல்லி யிருக்காரேங்கிற கேள்விக்கு, எனக்குப் பிறகுங்கிறது எந்த ஆண்டு முதல்னு எனக்கே தெரியாதுன்னு ஒரே போடா போட்டிருக்காரே!.''

""தி.மு.க தொண்டர்கள் என்ன சொல்றாங்கன்னு நான் சொல்றேன்... ... .. இந்த வயதிலும், முழுமூச்சா இருந்து சட்டமன்றக் கட்டிடத்தை கட்டி முடிக்கிறார். பென்னாகரம் தொகுதிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இப்படிப்பட்ட தலைவரை சந்தோஷமா வச்சுக்க இவங்க ளுக்குத் தெரியலையே... கலைஞருக்குப் பிறகுங்கிற பேச்சு இப்ப எதுக்கு வரணும்? பெரியார் வயதைவிடவும் அதிக வயது கலைஞர் வாழ்வார். இப்படிப்பட்ட சர்ச்சைகளை தனக்கேயுரிய ராஜதந்திரத்தோடு அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும். வருவார்னு நம்பிக்கையோடு சொல்றாங்க.'


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜெகத் கஸ்பர் இந்திய உளவாளி -சீமான்

default.jpg
caspar.jpg

கனடாவில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்ற திரைப்பட இயக்குநரும், `நாம் தமிழர்' இயக்கத் தலைவருமான சீமானை கனடா போலீஸார் பேசவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

27-ம் தேதி சென்னை திரும்பிய சீமானிடம் பேசினோம்.

கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்?

``கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர்.

நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். `இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?' என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `தட் இஸ் பாலிடிக்ஸ்' என்றார். `கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்' என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். `ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்ற அவரிடம், `நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?' என்றேன்.''

அங்கு ஒரு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காகவே நீங்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறதே?

``புதன்கிழமை (25-ம் தேதி) பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். நிச்சயம் அந்தப் பேச்சுக்காக என்னைக் கைது செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் பேசிவிடக் கூடாது என்றே என்னைக் கைது செய்து திருப்பி அனுப்பினார்கள்.''
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உங்கள், `நாம் தமிழர்' இயக்கத்தினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?


``இந்தக் கைதின் மூலம் எங்கள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்போல் ஜோடிக்கப் பார்க்கிறார்கள். பெரும் திரளான இளைஞர்கள் என் பின்னால் திரண்டு வருவதைத் தடுக்கும் வேலைதான் இது. கனடாவில் இருந்து நான் விமான நிலையத்துக்கு வரும்போது, அதிகாலை (27-ம் தேதி) ஒன்றரை மணி. இரண்டரை மணிக்கு வெளியே வந்தேன். விருகம்பாக்கம் அருகே வரும்போது எங்களுடன் வந்த இரண்டு வாகனத்தை காவல்துறையினர் மறித்து அழைத்துச் சென்றனர். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் என்னருகில் இருந்த தம்பிகளிடம், `என்னவென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தேவையென்றால் நான் வருகிறேன்' என்றேன். அப்படி விசாரிக்கப் போன அந்த மூன்று தம்பிகள்தான் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்திருந்த ஊடகவியலாளர்களின் காணொளியில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருப்பது பதிவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எங்கிட்டுப் போய் குண்டு வைத்திருக்க முடியும்? மீனம்பாக்கம் எங்கிருக்கிறது? என் அலுவலகம் எங்கிருக்கிறது? ஈ.வி.கே.எஸ். அவர்களின் வீடு எங்கிருக்கிறது? குண்டு வீசவும், கொலை செய்யவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும் `நாம் தமிழர்' இயக்கத்தை நான் தொடங்கவில்லை. மிக உயர்ந்த லட்சியமும், நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது.
இதே ஈ.வி.கே.எஸ். பிறந்தநாள் சுவரொட்டியை என் அலுவலக வாசலில் ஒட்டிவிட்டு, என் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாரதிராஜா அப்பா அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கும், தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்ட என் தம்பிகளுக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். குண்டு வீசியதாகச் சொல்லப்படும் நேரத்தில் அந்தத் தம்பிகள் என்னுடன் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.''


இளங்கோவனுக் கும், உங்களுக்கும் அப்படியென்ன பிரச்னை?


``ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. பிரபாகரன் படத்தை அவர் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? அவருடன் வந்த ஒரு பெண், பிரபாகரன் படத்தை மிதித்திருக்கிறார். அதை அவர் அனுமதித்திருக்க வேண்டியதில்லை. இங்கே பிரபாகரனின் படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவரைப் பற்றி கட்டுரை எழுதாத பத்திரிகைகளே இல்லை. அவரைப் பற்றி பேசினால் மட்டும் கைது செய்வார்கள் என்றால், எழுத்துச் சுதந்திரம் இருக்கும் அளவுக்கு இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா?''


என்னுடைய அறையில் தான் உங்களுடைய `நாம் தமிழர்' இயக்கம் உருவானது. சீமான் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டேன்' என்று ஜெகத் கஸ்பர் கூறியிருக்கிறாரே?

``ஜெகத் கஸ்பருக்கும், எனக்குமான உறவு துண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன். அவர், `சீமானுக்கு என்ன நாணயம் இருக்கு?' என்றும் பேசியிருக்கிறார். யாரைக் கேட்டு `மௌனத்தின் வலி' என்ற அவருடைய புத்தகத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டார்? அவருக்கு என்ன நாணயம் இருக்கு?
எங்களுடைய `நாம் தமிழர்' இயக்கத்துக்கு இவர்தான் பெயர் வைத்தாராம். மதுரையில் கூட்டம் நடத்த `நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அனுமதி கோரலாம் என்றவர், வழக்கறிஞர் காமராஜ். அது விவாதிக்கப்பட்டது, இயக்குநர் மணிவண்ணன் அப்பா வீட்டில். இவர், அரசியல் கட்சியா தொடங்க வந்தார்? தொண்டு நிறுவனம் போல் பேசினார். அறக்கட்டளை நிறுவி, அதற்கு `ஜஸ்டிஸ் ஃபண்ட்' திரட்டலாம்' என்றார். திடீரென `நான் பின்னால் இருந்து இயங்குகிறேன்' என்றவர், மருத்துவர் எழிலனுடன் வந்து ஆர்வமே இல்லாமல் பேசிவிட்டுச் சென்றார். என் ஓட்ட வேகம் வேறு. அவரது ஓட்ட வேகம் வேறு. `நாம் தமிழர்' என்று அவர்தான் பெயர் வைத்தாரென்றால், அந்தப் பெயரில் அவரும் ஒரு இயக்கத்தை நடத்தட்டும்; ஒரு கூட்டம் போடட்டும். நானும் கூட்டம் போடுகிறேன். மக்கள் எங்கே வருகிறார்கள் என்று பார்க்கலாம். `ஜெகத் கஸ்பர் இருந்தால் இந்த இயக்கத்தில் சேர மாட்டேன்' என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள்.''


கஸ்பர் உங்களையும், புலிகளையும் விமர்சிக்கும் நோக்கம் என்ன?

``முழுக்க முழுக்க அவர் இந்திய உளவுத்துறையின் ஆள். நான் அலைபேசியில் யார் யாருடன் பேசுகிறேன் என்று ஜெகத் கஸ்பர் ஒட்டுக் கேட்கிறார். அவரது நிஜமுகம் புரிந்ததும், அவரைவிட்டு விலகி விட்டேன். அமைதிப் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் பிரபாகரன் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்று கஸ்பர் எழுதுகிறார். அதை பிரபாகரன் களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது அவர் ஏன் எழுதவில்லை? பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டுவிட்டார்; அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று, பிரபாகரனுக்கு இன்று பாடம் நடத்துபவர், அவரைச் சந்தித்தபோதே ஏன் சொல்லவில்லை? பிரபாகரனைச் சந்தித்த ஒருசில வினாடிகளைப் பெரிதுபடுத்தி, சுயவிளம்பரம் தேடுவதாக இவர் மீது எழுந்த விமர்சனத்துக்கு இன்று வரை பதிலில்லையே!''


தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் கலந்துகொண்டதற்கு உங்கள் இயக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிதே?


``முத்துராமலிங்கத் தேவர் என்ன மராட்டியரா? மார்வாடியா? குஜராத்தியா? மலையாளியா? அவர் தமிழர் இல்லையா? இந்த மாதிரி பழிபோடுவதை நான் மதிக்கிறேன். இதை நான் தொடர்ச்சியாகச் செய்வேன். நான் என் முன்னோர்களை மதிக்கிறேன். இம்மானுவேல் சேகரனுக்கும், அம்பேத்கருக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத சாதியம், முத்துராமலிங்கத் தேவரிடம் மட்டும் ஏன் வந்தது?
தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும் வீர வணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா? மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால் அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று சொல்வீர்களா? அங்கே போய் `தேவரின மக்களே திரண்டு வாருங்கள்' என்றா அழைத்தேன்? `முத்துராமலிங்கத் தேவரைவிட சிறந்த தலைவர் இந்த மண்ணில் இல்லை' என்று அங்கே பேசிவிட்டு வரவில்லை. நான் அனைத்து மக்களையும் தமிழர்களாகவே பார்க்கிறேன். என் முன்னால் நிற்பவர்களில் இவன் பள்ளர், பறையர், சக்கிலியர், நாடார், முதலியார் என்று பார்க்க மாட்டேன். என் பின்னால் வந்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதேபோல் தேவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிகள் என்னால் இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இருபெரும் மோதல் சக்தியாக இருக்கிறவர்களை இணைப்பது யார்? என்னால்தானே அது நடந்தது.


அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரௌலட் சட்டம் என்கிற வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு குற்றப் பரம்பரை என்று அறிவித்து வைத்திருந்ததை எதிர்த்துப் போராடிய முத்துராமலிங்கத் தேவரை ஏன் போராளியாகப் பாாக்க மறுக்கிறீர்கள்? அவர் என்ன, மொத்த சாதி அடையாளத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறாரா? வேறு எவன்கிட்டயும் சாதி இல்லையா என்ன? பேனா இருக்கு, பேப்பர் இருக்கு, அரிப்பு இருக்கு என்பதற்காக சீமான் சாதியத்தைக் கையில் எடுத்துவிட்டார் என்று எழுதுவதை நிறுத்துங்கள்! நான் சாதி வெறியனா இல்லையா என்பதை காலம் சொல்லும்.''


பிரபாகரன் சொல்லித்தான் `நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினீர்களாமே?

``அண்ணன் (பிரபாகரன்) சொன்னபோது எனக்கு ஆர்வம் இல்லை. தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அங்கே இருந்த போராளிகள் கூட `திருமாவளவன் மீது எங்களுக்கு நல்ல புரிதலைக் கொண்டு வந்தீர்கள்' என்றார்கள். அந்த மண்ணில் திருமாவளவன் போய் நின்றிருந்தாலும் அவரைப் பற்றி அங்கே அதிகமாக நான்தான் எடுத்துப் பேசியிருக்கிறேன். இங்கே இருக்கிற அரசியல் இயக்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், ஓர் அரசியல் இயக்கத்தின் தேவை அப்போது ஏற்படவில்லை.''
பிரபாகரன் சொல்லித்தான் இயக்கம் தொடங்கினீர்கள் என்றால், தமிழக அரசியலில் பிரபாகரன் தலையிடுகிறார் என்கிற இந்திய அரசின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டதே?
``அவர் தலையிட வேண்டும் என்பது இல்லை. அவர் சொல்லித்தான் இதைச் செய்யணும் என்பதும் இல்லை. இந்த மண்ணில் எங்கள் மக்களுக்கு ஓர் அரசியல் இயக்கம் வேண்டும் என்று தோன்றியது. அதைக் கட்டமைக்கிறோம். அவர் சொல்லித்தான் ஒவ்வொன்றையும் செய்யணும் என்பது இல்லை.''


தமிழினம், மொழி என்று பேசுவதால் உங்கள் இயக்கத்தின் மீதும், உங்கள் மீதும் பிரிவினைவாதிகள் என்ற பார்வை விழாதா?


``நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள். இலங்கை தேசிய ராணுவத்தில் தமிழர்களை அந்நாடு சேர்த்துக் கொள்ளுமா? அந்த உரிமையை இந்தியா பெற்றுத் தருமா? இந்த மண்ணில் நாங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு இந்த நாடு பதிலே சொல்லவில்லை. தனித் தமிழீழம் ஏன் கேட்கிறோம் என்று, இப்படியான காரணங்களை எங்களால் அடுக்க முடியும். தங்கள் மொழியை உயர்த்திப் பிடிப்பதால் பால்தாக்கரேவும், ராஜ்தாக்கரேவும் பிரிவினைவாதிகள் அல்ல. தமிழர்களுக்கு உரிமை உள்ள தண்ணீரைத் தர மறுப்பதால் மலையாளிகளும், கன்னடர்களும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்று ஆகிவிடுமா? தமிழன் மட்டும் தேசிய உணர்வோடு இருக்கணும். மற்றவர்கள் எல்லாம் அவரவர் மொழியுணர்வோடு இருக்கலாம் என்பது சரியா? விடுதலைக்குத் தமிழனும் சேர்ந்துதான் போராடினான். ஆனால், இந்தி மட்டும் ஆட்சி மொழியானது எப்படி?
சுதந்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டோம். மொத்த அதிகாரத்தையும் அவன் எடுத்துக்கொண்டான். இலங்கையிலும் தமிழனும், சிங்களவனும் போராடி விடுதலை பெற்றார்கள். அதன்பிறகு, சிங்களம் மட்டும் ஆட்சி மொழி; சிங்களவன் மட்டும் அதிபர் என்று திருத்திக் கொண்டான். அதேதான் இங்கேயும் நடக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இன்னும் அனுமதி இல்லையே.''

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?

``கருணாநிதி எப்போதும் இதைத்தான் சொல்லி வருகிறார். அவரது கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டதே இந்திய உளவுத் துறைதான். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொன்னார்கள். புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை மாற்றுக்குழுவிடம் கொடுத்து, புலிகளுக்கு எதிராக உசுப்பிவிட்டு, தாக்குதலை நடத்த வைத்தது, இந்திய அரசுதான். கருணா என்கிற துரோகியைக் கொல்லாமல் விட்டதால்தான், இந்த மிகப்பெரிய பின்னடைவைப் புலிகள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது!'' என்று முடித்தார், சீமான்.
நன்றி குமுதம்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சினிமா தியேட்டரில் டாக்டர்கள்!

govtdr.jpgமதியம் தாத்தா வீட்டில் பிரி யாணி விருந்து. 3 வயது யாஷிகாவுக்கு அது பெரிய விஷயமில்லை. வெளியே கிளம்புகிறோம் என்பதில்தான் சந் தோஷம். காரைக்குடியின் பிரபல லாரி அதிபர் ஜஹாங்கீர் குடும்பம் அக்டோ பர் 25 அன்று மாருதி ஆம்னியில் புறப் பட்டது. ஜஹாங்கீர், மனைவி ஜெரினா, யாஷிகா, ஜஹாங்கீரின் அண்ணன் மகள்கள் 7 வயது ஹசீனா, 5 வயது ஹாஜிரா ஆகியோர் மேலூரில் உள்ள தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டனர்.பயணம் தொடங்கிய 28-வது நிமிடம். நாச்சியார்புரத்தில் மாருதி ஆம்னி வேன் போய்க்கொண்டிருந்த போது மதுரையிலிருந்து மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் மோத, ஆம்னி வேன் நொறுங்கியது. ஜஹாங் கீரும் அவரது அண்ணன் மகள்களும் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறந் தனர். ஸ்பாட்டில் உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த ஜெரினாவையும் குழந்தை யாஷிகாவையும் நாச்சியார்புரம்அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஜெரினா மட்டும் இங்கே இருக்கட்டும்.. குழந்தையை மதுரைக்கு கொண்டுபோனாதான் காப்பாத்த முடியும் என நாச்சியார்புரம் மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவிக்க, 108 ஆம்புலன்ஸ் யாஷிகாவுடன் மதுரை விரைந்தது. அங்கே அரசு பொதுமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டு நம்பர் 99 முன் வண்டி நின்றது. பிறகு 108 ஆம்புலன் ஸில் சேவை செய்யும் ஜான் பெரியசாமி, அதன் பின் நடந்த கொடுமைகள் பற்றி பேசுகிறார். ""ஞாயித்துக்கிழமை பகல் 12.45 மணி. குழந்தையை அட்மிட் செய்யாம, அதோட அப்பா வந்திருக்காரா? அம்மா இருக்காங்களா? சொந்தக்காரவுக எங்கேன்னு கேள்வியா கேட்டுக்கிட்டிருக்காங்க. 2 மணி நேரமா குழந்தை வலியால துடிச்சுக்கிட்டே இருக்குது. குடும்பமே விபத்தில் சிக்கிக்கொண்டதை சொல்லி, சிகிச்சை தரச்சொல்றேன். அதுக்கும் நர்சுகள் கேட்கலை. முதலுதவிகூட செய்யாம, வார்டு வாசலிலேயே குழந்தையை துடிதுடிக்க விட்டுட்டாங்க.

govtdr1.jpg3 மணிக்கு யாஷிகாவின் பெரியப்பா சையது வந்து கையெழுத்து போட்டபிறகுதான் அட்மிட் செஞ்சாங்க. ஆனா, டாக்டர்கள் யாரும் இல்லை. டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களும் ரெஸ்ட்டுக்குப் போயிட்டாங்க. ஜி.ஹெச்சில் குழந்தைய வச்சிருந்தா, ட்ரீட்மெண்ட் கொடுக்காம கொன்னுடுவாங்கன்னு பயந்து,பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போக நினைச்சாரு பெரியப்பா. நானும் ஒரு சக மனுஷன்ங்கிற முறையில் அப்பல்லோ இருக் குன்னு சொன்னேன். அங்கே தூக்கிக்கொண்டு ஓடினாங்க'' என்றார் வேதனையுடன். அந்த நேரத்திலும் அரசு மருத்துவமனை ஊழியர் கள் சில பேர், ""இவ்வளவு நேரம் இங்கே குழந்தையை வச்சிருந்தீங்கள்ல.. 300 ரூபாய் கொடுங்க'' என்று லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.அதன்பின், அப்பல்லோவில் என்ன நடந் தது என்பதை விவரிக்கத் தொடங்கினார் சையது. ""அங்கே 5 டாக்டர்கள் இருந்தாங்க. குழந்தைக்கு நுரையீரலில் காயம்பட்டிருப்ப தால் ரத்தம் அடைபட்டிருக்கு. அதற்கான மருந்து ஸ்டாக் இல்லைன்னு சொல்லி மதுரை முழுக்க தேடினாங்க. அப்புறம் டாக்டர் ஜஹாங்கீர் நியூயார்க்கிலிருந்து வாங்கி வந்தி ருந்ததை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லி, 1 லட்சத்து 40ஆயிரம் கட்டச் சொன்னாங்க. எப்படியாவது காப்பாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடு மொத்த பணத்தையும் கட்டினோம். இரண்டு நாள் ஐ.சி.யு.விலேயே வச்சிருந்தாங்க. யாரையும் அனுமதிக்கலை. மூணாவது நாள் நாங்க, குழந்தையை பார்த்தே ஆகணும்னு சண்டை போட்டோம். அப்பதான், குழந்தை செத்துப்போச்சு. மீதி பில்லை க்ளியர் பண்ணுங்கன்னு குண்டை தூக்கிப் போட்டாங்க. 2 நாளா எங்க யாஷிகா உயிரோடு இருந்தாளா? ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்களா? ஆபரேஷன் செஞ் சாங்களா? எதுவும் தெரியலை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியின் அலட்சியமும், பிரைவேட் ஆஸ்பத்திரியின் பணத்தாசையும் எங்க குடும்பத்து வாரிசை கொன்னுடுச்சி'' என்றார் கண்ணீருடன்.மதுரை அரசு மருத்துவமனை டீன் வரை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என சையது கூறியதால், பொறுப்பு டீன் சிவகுமாரிடம் பேசினோம். ""அந்த குழந்தைக்கு நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. டூட்டியில் இருந்தவங்களை எச்சரித் திருக்கேன். டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் சங்கங்கள் இருக்குதே'' என்றார். நம்மிடம் பதிலளித்தபின் விசாரணையை தீவிரமாக்கி யிருக்கிறார் டீன். ஞாயிறன்று டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களை நவம்பர் 2-ந் தேதியன்று தனது அறைக்கு விசாரணைக்கு அழைத்தார் டீன் சிவகுமார். பயிற்சி டாக்டர்களோ, ""நாங்க ஜூனியர்ஸ். நர்சுகளெல்லாம் எங்களைவிட சீனியரா இருக்காங்க. வந்தோமா.. ட்ரெயினிங் எடுத்தோமா.. போய்க்கிட்டே இருக்கணும்னு சொல் றாங்க. சீனியர் டாக்டர்கள்கிட்டே புகார் கொடுத்தால், நர்சுகள் சொல்றபடி நடந்துக்குங்கன்னு சொல்றாங்க'' என்று புலம்பி யிருக்கிறார்கள். கடுப்பான டீன், சீனியர் டாக்டர் ஒருவருக்கு போன் போட்டிருக்கிறார். அவர் ஆதவன் பகல் ஷோ பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த டாக்டரின் வார்டில் உள்ள நர்சை செல்போனில் தொடர்புகொள்ள அவரும் அதே தியேட்டரில் ஆதவன் பார்த்துக் கொண்டிருந் திருக்கிறார். நொந்துபோன டீனிடம் பயிற்சி டாக்டர்கள், ""பெரும்பாலும் இப்படித்தான். பயிற்சிக்கு வரும் லேடி ஹவுஸ் சர்ஜன்களோடும் நர்ஸ்களோடும் பகல் ஷோ போவதுதான் சீனியர் டாக்டர்களின் ஹாபியா இருக்குது. சாயங்காலம் தங்கள் கிளினிக்குக்கு பேஷண்டுகளை வரச்சொல்லிடுறாங்க'' என்றிருக் கின்றனர். தலையிலடித்துக்கொண்ட டீன், வார்டில் யார், யார் இல்லை என கணக்கெடுத்திருக்கிறார். நவம்பர் 2-ந் தேதி மட்டும் 6 டாக்டர்கள் 9 நர்சுகள் மட்டம் போட்டி ருக்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்-நர்சுகளின் கடமையுணர்ச்சி, ஊசலாடும் உயிர் களை எமலோகத் திற்கு அனுப்பி வைக்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

mottai.jpgகோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழக அரசு மனம் மாறியது : முல்லை பெரியாறு குழுவில் ஏ.ஆர்., லட்சுமணன் இடம் பெறுகிறார்
ஏப்ரல் 21,2010,12:39  IST

Top world news stories and headlines detail

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் பிடிவாதம் விலகியது. இது தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழுவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதி இடம் பெறுவார் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்., லட்சுமணன் பிரதிநிதியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவர் என்றும் இந்த குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் மற்றும் கேரளா சார்பில் தலா ஒருவரும், மத்திய அரசின் சார்பில் இருவரும் இடம் பெற வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.

 

தி.மு.க., செயற்குழுவிலும் தீர்மானம் : இந்த கமிட்டியில் தமிழக அரசு சார்பில் யாரும் இடம் பெற மாட்டார்‌கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சமீபத்தில் கூடிய தி.மு.க, செயற்குழு கூட்டத்திலும் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே கமிட்டி ஆய்வு செய்து விட்டதால் இது தேவையற்றது என்றும், எனவே இந்த கமிட்டி தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இந்த பிரச்னையில் மன மாற்றம் அடைந்துள்ளது.

 

முடிவில் ஏன் மாற்றம் ? : இன்று ( 21 ம் தேதி)  தமிழக சட்டசபை கூடியது. சட்டசபையில் , விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்; இந்த குழு தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கூறப்பட்டும் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. மீண்டும் மத்திய அரசும் குழுவில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. இது தொடர்பாக தமிழக தலைமை வக்கீலிடம் ஆலோசித்து கருத்து கேட்கப்பட்டது. எனவே வழக்கின் முடிவு முக்கியம் என்பதை கருதி இந்தக்குழுவில் தமிழக அரசும் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ. ஆர்., லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக குழுவில் இடம் இவ்வாறு அவர் அறிவித்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை!: நிலைகுலைந்த இளைஞருக்கு உதவ மறுப்பு

ஏப்ரல் 21,2010,00:00  IST

 

கோவை: கோவை, ரேஸ்கோர்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் 'டிமாண்ட் டிராப்ட்' எடுக்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென கையில் இருந்த பணம் மற்றும் சலானை உதறிவிட்டு வெறித்தபடி நின்றார். அருகில் இருந்தோர் கூறியும், காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க,  வாங்கும் நிலையில் அவர்  இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.


உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார். அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல  மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன.


எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.


தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில்  எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமைச்சர் அழகிரி எங்கே? பார்லியில் சரமாரி கேள்வி
ஏப்ரல் 23,2010,00:00  IST

 

Front page news and headlines today

மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி பார்லிமென்டிற்கு வராதது குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியும் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. இணையமைச்சர் பதில் அளிக்க விதிகள் அனுமதிக்கின்றன என்றும், அவர் பார்லிமென்டிற்கு தொடர்ந்து வருகிறார் என்றும் அமைச்சர் பிரணாப் அளித்த விளக்கத்தை ஏற்காமல், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


லோக்சபாவில் நேற்று அவை துவங்கியதும், கேள்வி நேரம் ஆரம்பித்து வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தது. வரிசையாக கேள்வி மற்றும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் 386வது கேள்வி வந்தது. அது, உரத்துறை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்த கேள்விக்கு பதிலளிக்க உரத்துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜனா எழுந்தார். பா.ஜ., மூத்த எம்.பி., யஷ்வந்த் சின்கா கடும் ஆட்சேபம் தெரிவித் தார். கேபினட் அமைச்சர் எங்கே என்று சின்கா விடாப்பிடியாக கேட் டபடி நிற்க, அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களும் குரல் கொடுத்தனர். திக்விஜய் சிங் என்ற எம்.பி., எழுந்து, 'அமைச்சரின் முகத்தையே கூட பார்க்க முடியவில்லை' என்றார். இதற்கிடையில் இணையமைச்சர் பதிலளிக்க முயன்று கொண்டிருக்கவே, அமைச்சர் எங்கிருக்கிறார்; இந்தியாவிலா அல்லது வெளிநாட்டிலா? பார்லிமென்ட் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அமைச்சர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள அவைக்கு உரிமை உள்ளது' என்றார்.


அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை மற்றும் செம்மலை ஆகியோர், 'அமைச்சர் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அனுமதி பெற்றுச் சென்றுள்ளாரா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்றபடி நின்றனர். இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு எழுந்து, 'இவ்வளவு கீழ்த்தரமாக சின்கா நடந்து கொள்வார் என்று எதிர்பார்க் கவில்லை. சபை விதிகள் தெரியாதது போல பேசுகிறார்' என்றார்.


இந்த கூச்சலுக்கு மத்தியில் அமைச்சர் பிரணாப் எழுந்து, 'அமைச்சர் வெளிநாட்டில் இருக்கிறார்; அதனால் தான் அவைக்கு வர முடியவில்லை. எம்.பி.,க்களின் கவலையும், உணர்வும் அரசாங்கத்திற்கு புரிகிறது. கேள்வி நேரத்தின் போது இணையமைச்சர் பதில் அளிப்பது வழக்கமான ஒன்று. எனவே, அவை நடக்க ஒத்துழையுங்கள்' என்றார். சின்காவும் விடாமல், 'அமைச்சர் அரசு முறைப்பயணமாகவா மாலத்தீவுக்கு சென்றுள்ளார்' என்று கேட்டார். ஹரின் பதக் என்ற எம்.பி.,யும், 'வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள சபாநாயகர் அனுமதியளித்தாரா' என்று கேட்டார். உடனே பிரணாப் முகர்ஜி, இதுபோன்று கேள்விகளை கேள்வி நேரத்தின் போது கேட்க அனுமதிக்க முடியாது' என்றார்.


எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும் போது, 'கடந்த ஒரு ஆண்டாகவே அமைச்சரை அவையில் பார்க்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார். இந்த அவை அமைச்சரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறது' என்றார். இதை மறுத்துப் பேசிய பிரணாப், 'அதுபோல அல்ல. அவர் தொடர்ந்து அவைக்கு வருகிறார். ஒருவேளை அவ்வாறு தொடர்ந்து வரவில்லை என்றால் உறுப்பினராக நீடிக்கவே முடியாது. எனவே, தவறான தகவலை கூற வேண்டாம்' என்றார். சபாநாயகர் மீரா குமார் குறுக் கிட்டு, 'இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜனா பதிலளிக்க அனுமதிக்கிறேன்' என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபடி இருந்தனர். இந்த கூச்சல், குழப்பத்தால் அவையில் அமளி காணப்பட்டது. இந்த விவகாரம், 11.40 மணிக்கு துவங்கியது. கேள்வி - பதில் நேரம் முடியும் 12 மணி வரை இருபது நிமிடங்கள் நீடித்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எங்கே அழகிரி? நாடாளுமன்றத்தில் அமளி

First Published : 24 Apr 2010 01:47:52 AM IST

alagiri.jpg
புதுதில்லி, ஏப். 23: நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி பங்கேற்காதது தொடர்பாக  இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பின.

 

 

மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இப் பிரச்னையை எழுப்பினார். அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரியிடம் அழகிரி அனுமதி பெற்று வெளிநாடு சென்றாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவைத் தலைவர் மீராகுமார்,"அமைச்சர் மு.க. அழகிரி எங்கே போனார்' என்பது எனக்கே தெரியாது என்று செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் கூறினார்.

 

 

அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே  குற்றம்சாட்டி வருகின்றன.

 

அழகிரி வராதது தொடர்பான பிரச்னை மக்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை மாநிலங்களவையிலும் இப் பிரச்னை எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

 

 

ரசாயனத்துறை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எதிர்ப்புத் தெரிவித்தார். உங்களிடம் (அன்சாரியிடம்) அழகிரி அனுமதி பெற்றாரா என்று கேட்டார். ஆனால் அதற்கு அன்சாரி பதிலேதும் கூறாமல், தொடர்ந்து கேள்விகளை கேட்குமாறு மைத்ரேயனைக் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தை எனது அறைக்கு வந்து விவாதிக்கலாம். இப்போது கேள்வியைக் கேளுங்கள் என்று அன்சாரி மீண்டும் கேட்டுக்கொண்டார்.

 

 

ஆனால் மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், ருத்ர நாராயண் பானி, வினய் கட்டியார் ஆகியோர் பேசினர்.

 

 

அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் டி சிவா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

 

 

அழகிரி அவைக்கு வராதது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லியும் குறை கூறினார். எல்லா அமைச்சர்களும் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் அழகிரி மட்டும் விதிவிலக்கு என்று கூறினார்.

 

 

இது குறித்து பின்னர் விவாதிக்கலாம். தற்போது கேள்வி நேரத்தை தொடரலாம் என்று அவைத் தலைவர் அன்சாரி கூறினார். இதை ஏற்காமல் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

 

 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் மீராகுமார், அழகிரி விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தார். அழகிரி எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அவர் வெளிநாடு செல்வது தொடர்பாக அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டார். அழகிரி வந்த உடன், "உங்களுக்கு ஏதாவது பிரச்னையா சொல்லுங்கள் என்னால் தீர்க்க முடிந்தால் உதவுகிறேன் என சொல்லப் போகிறேன்' என்றார் மீராகுமார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Where is Alagiri? Meira, VP curious


First Published : 23 Apr 2010 02:53:37 PM IST
Last Updated : 23 Apr 2010 05:08:56 PM IST

NEW DELHI: A day after Opposition raised questions over "perpetual" absence of Union Minister M K Alagiri from Parliament, Lok Sabha Speaker Meira Kumar today said that even she had not received any communication about his whereabouts.

 

"We have received no communication from him. Whenever he (Alagiri) comes, I will ask him whatever is his problem I will try to resolve... I am here to resolve," the Speaker told reporters here.

 

She indicated her unhappiness over the behaviour of the Union Chemical and Fertiliser Minister saying that Parliament runs on courtesy and decorum.

 

"Prime Minister Manmohan Singh and other ministers are very particular about it (courtesy and decorum). Whenever they go, they always inform my office."

 

The opposition had yesterday created ruckus in the Lok Sabha during Question Hour and did not allow Alagiri's junior Srikant Jena to reply to a question.

 

Sushma Swaraj had led the attack saying "we haven't seen Alagiri for a year. He is perpetually absent from Parliament.

 

And as far our knowledge he also does not attend the Cabinet meetings.

 

"We want to know where is Alagiri," Swaraj had said.

 

It is believed that the DMK minister is shying away from Parliament as he is not comfortable speaking in English or Hindi and wants to speak in Tamil.

 

The matter came up in the Rajya Sabha also as the Opposition stalled the Question Hour for some time over Alagiri's absence.

 

One of the members in Rajya Sabha went to the extent of saying that it has been a year since the UPA came back to power but Alagiri has never come to the House.

 

Leader of the Opposition Arun Jaitley pointed out that "week after week the Opposition has been raising this issue.

 

"All ministers are accountable to Parliament. However, in this case, are we are accepting the position that one minister is not accountable to Parliament. If this is the case, then we can proceed with Question Hour," the BJP leader said.

 

To this, Chairman of Rajya Sabha Hamid Ansari said, "This is a wider issue which needs to be discussed, but not during Question Hour."

 

Jaitley, however, said that "at some stage the Chairman will have to see the fact that one minister is not accountable to the House".

 

Earlier story (IANS):

 

Alagiri absence now rocks Rajya Sabha

 

NEW DELHI: A day after the issue disrupted the Lok Sabha, the absence of Chemicals and Fertilisers Minister M.K. Alagiri rocked the Rajya Sabha Friday when he failed to show up during question hour.

 

So vociferous were the protests led by V. Maitreyan and other AIADMK members that Chairman Hamid Ansari even threatened to adjourn the house if they did not resume their seats.

 

Trouble erupted when Minister of State for Chemicals and Fertilisers Srikant Jena rose to answer a question relating to the performance of Hindustan Insecticides Limited.

 

Maitreyan and his fellow AIADMK members immediately protested. "The house is in session and the minister is not present. The minister of state is replying. Has he taken your permission to go on a private visit?" he asked Ansari.

 

"If you want to know the answer, come to my chamber and I will give it," the chairman replied.

 

As other opposition members also raised their voices and the treasury benches attempted to defend Alagiri's absence, an exasperated Ansari said: "If these altercations continue, I will be forced to adjourn the house."

 

Leader of Opposition Arun Jaitley of the Bharatiya Janata Party then rose to say: "The entire ministry is accountable to parliament. Is the government taking the position that one minister is not accountable?"

 

Ansari noted that this was a "valid question but not to be taken up during question hour".

 

"We can proceed (with question hour) but how can one minister be non-accountable? The chair will have to take this up," Jaitley said.

 

Minister of State for Parliamentary Affairs Prithviraj Chavan interjected to say that the reply was being given "as per procedures" even as A. Raja, the minister for communications and information technology, demanded of Jaitley: "How can you say that the minister is non-accountable?"

 

Raja was restrained and question hour then continued.

 

When a similar issue arose in the Lok Sabha Thursday, Finance Minister Pranab Mukherjee said Alagiri was abroad and the rules permit the minister of state to answer questions related to the ministry.

 

Alagiri has been absent for many days during the budget and winter sessions of parliament.

 

The son of Tamil Nadu Chief Minister M. Karunanidhi, he had sought Lok Sabha Speaker Meira Kumar's permission to answer questions in Tamil as he is not comfortable speaking in English or Hindi.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

LS boils over ‘perpetually absent’ Alagiri


First Published : 23 Apr 2010 02:19:00 AM IST
Last Updated : 23 Apr 2010 03:40:54 PM IST

NEW DELHI: While DMK leader and Union Chemicals and Fertilisers Minister M K Alagiri is finding ways to beat the summer in Maldives, ally Congress was seen sweating it out in Parliament defending his absence during Question Hour.

 

In the Lok Sabha, Leader of the House Pranab Mukherjee had a tough time convincing the BJP-led Opposition that Alagiri’s junior minister Srikant Jena was capable of handling queries.

 

Trouble began when a question about the overpricing of medicines came up.

 

As soon as Minister of State for Chemicals and Fertilisers Srikant Jena rose to answer, the Opposition, led by the BJP, was up on its feet, complaining about the Cabinet minister’s absence.

 

Although Speaker Meira Kumar said she had granted permission to Jena to answer questions, the Opposition was not satisfied. Disruptions lasted till the end of Question Hour.

 

Pranab came to Alagiri’s defence saying the minister was abroad and junior ministers could always step in. However, Leader of Opposition Sushma Swaraj argued, “He is perpetually absent from the House.” She said he had failed to attend even Union Cabinet meetings. Others who joined the chorus included Yashwant Sinha, Sharad Yadav and CPM leader Basudeb Acharia.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Alagiri betraying people'


First Published : 24 Apr 2010 06:27:00 AM IST
Last Updated : 24 Apr 2010 11:46:08 AM IST

THOOTHUKUDI: Union Minister for Fertilisers and Chemicals, M K Alagiri has been shirking his duties as a Union Minister and as an elected representative by not being present even during the Cabinet meetings, said CPM State secretary G Ramakrishnan. Speaking to reporters in Thoothukudi, he said that the Union Minister was betraying the people who elected him and pointed to his recent visit to Maldives during the ‘Question Hour’ in Parliament.

 

“A nationwide general strike against price rise will be conducted on April 27 in which 13 non-UPA and non-NDA parties will be actively taking part”, he said and pointed out that a cut motion would be moved in the Parliament on the same day and listed the protests to be conducted by the non-UPA and non-NDA parties to condemn various issues.

 

On power cuts, he said that MNCs in the State were getting uninterrupted power supply and only the common man and farmers especially were put to hardships.

 

While welcoming the reopening of SPIC on May 1, he pointed out that as naphtha was costlier, LNG supply to Thoothukudi should be expedited.

 

G Ramachandran also informed that the State Executive Council Meeting of CPM would be held on May 23 at Pallipalayam in Erode district. K Kanagaraj, CPM district secretary was also present.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3 நாள்களுக்கு ஒரு முறை அழகிரி விமானப் பயணம்

First Published : 26 Apr 2010 01:57:58 AM IST

azhagiri.jpg

புதுதில்லி, ஏப். 25: அமைச்சரான பிறகு மூன்று நாள்களுக்கு ஒரு முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி.
தகவல் அறியும் உரிமை மனுவுக்கு அளித்த பதிலில் ரசாயனத் துறை அமைச்சகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
அவர் பதவியேற்ற முதல் 6 மாதத்தில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 61 முறை விமானத்தில் பறந்துள்ளார். 2009 ஆண்டு மே 29 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை உள்ளூர் விமானங்களில் 61 முறையில் சர்வதேச விமானங்களில் 6 முறையும் அவர் பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களுக்கான மொத்த கட்டண தொகை ரூ. 14.5 லட்சம் ஆகும்.
அமைச்சர் அழகிரி தில்லியில் உள்ள தனது அமைச்சரக அலுவலகத்துக்கு எத்தனை நாள் வருகை தந்துள்ளார். அவர் கலந்து கொண்ட மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் எத்தனை என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
அமைச்சருடன் எத்தனை பேர் சென்றுள்ளனர். அவர் தனது பயணங்களின் போது தங்குவதற்கான செலவுகள் எவ்வளவு என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.  
அவர் அமைச்சரான பிறகு துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களுக்கு அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார் என்ற கேள்விக்கும் மெüனமே பதிலாக உள்ளது.
÷இது குறித்து அமைச்சரின் கருத்தை அறிந்து கொள்ள பிடிஐ நிறுவன செய்தியாளர் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. தில்லியில் உள்ள அழகிரி வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்க யாரும் இல்லை. செல்போனிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தற்போது மாலத் தீவுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே  குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தப் பிரச்னை கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
÷ரசாயனத்துறை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.
÷இதற்கு அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எதிர்ப்புத் தெரிவித்தார்.÷ மக்களவைத் தலைவர் மீராகுமார், அழகிரி விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தார். அழகிரி எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அவர் வெளிநாடு செல்வது தொடர்பாக அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டார். அழகிரி வந்த உடன், "உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? சொல்லுங்கள் என்னால் தீர்க்க முடிந்தால் உதவுகிறேன் என சொல்லப் போகிறேன்' என்றார் மீராகுமார். பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் அமைச்சர் அழகிரியின் முகத்தைக் கூட பல உறுப்பினர்களால் பார்க்க முடியவில்லை. அவர் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது தொடர் நிகழ்வாக உள்ளது என்று உறுப்பினர்கள் புகார் கூறினர்.
அழகிரிக்கு பதில் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் சேனா பதிலளிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே இதற்கு முன்பு அவர் பதிலளித்து உள்ளார்.
÷உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல்தான் மத்திய அமைச்சர் அழகிரி அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அவைத் தலைவர் மீராகுமாரிடம் அமைச்சர் அழகிரி அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜெயலலிதாவை மன்னிப்புக்கேட்கக்கோரி கனிமொழி வக்கீல் நோட்டீஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 08:52.18 AM GMT +05:30 ]
dmk_kanimozhi.jpgஇந்தோனேசியாவில் எனக்கு நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக தவறான, அவதூறான தகவலைக் கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி யின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி சார்பில் பி.ஆர் ராமன் அனுப்பியுள்ள நோட்டீஸில், 

கவிதை மற்றும் கலையில் காட்டிய ஆர்வத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், புகழையும் பெற்றுள்ள கனிமொழி எம்.பி., தமிழ் கலைகள் மற்றும் கலாசார மேம்பாட்டு பணியில் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகளாக சென்னை சங்கமம் என்ற கலை நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவிலும் கனிமொழி இருக்கிறார். அரசியலிலும் அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். 

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வெளியான ஆங்கில பத்திரிகை ஒன்றில், `நிர்வாக திறமையின்மையாலும், ஊழலாலும் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் நீங்கள் பேசிய விவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. 

இந்தோனேஷியாவில் நிலக்கரி நிறுவனங்களை தி.மு.க. அமைச்சரின் சகோதரர் ராமஜெயத்துடன் சேர்ந்து கனிமொழி சொந்தமாக வாங்கி இருக்கிறார் என்று நீங்கள் பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கனிமொழி சப்ளை செய்வதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறீர்கள். 

மேலும், நிலக்கரி டன் ஒன்றுக்கு 21 அமெரிக்க டாலர்களை லஞ்சமாக கருணாநிதியின் குடும்பம் பெறுகிறது என்றும் கூறி இருக்கிறீர்கள். கனிமொழியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் நீங்கள் இப்படி பேசி இருக்கிறீர்கள். இந்தோனேஷியாவில் அவருக்கு சொந்தமாக நிலக்கரி சுரங்கம் இருக்கிறது என்று நீங்கள் கூறிய தகவல் முற்றிலும் தவறானது. 

இந்தோனேஷியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த பகுதியிலும் கனிமொழிக்கு நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி வெட்டி எடுப்பது, அவற்றை வர்த்தகம் செய்வது போன்றவற்றில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் நீங்கள் தவறாக, பொய்யான தகவலை உள்நோக்கத்தோடு கூறியுள்ளீர்கள். 

மேலும், தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்துடன் தொழில் பங்குதாரராக கனிமொழி இருப்பதாக நீங்கள் கூறி இருப்பதும் தவறு. கனிமொழி; ராமஜெயம் மற்றும் கே.என்.நேரு ஆகியோருடன் எந்த தொழில் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. 

இதுமட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற முறையில் நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து கனிமொழி ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மற்றொரு கடுமையான, முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டை கூறி இருக்கிறீர்கள். 

பொது சேவை மற்றும் கலை, கலாசார சேவையில் கனிமொழி தன்னை அர்ப்பணித்துள்ள சூழ்நிலையில் இப்படி பேசி இருக்கிறீர்கள். அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பெயர், புகழ் உள்ளது. அவற்றை கெடுப்பதற்காக உள்நோக்கத்தோடு நீங்கள் தவறாகவும், அவதூறாகவும் கனிமொழி பற்றி பிரசாரம் செய்திருக்கிறீர்கள். 

அவரது அரசியல் மற்றும் சமூக சேவை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிகை மற்றும் டி.வி. மூலம் கனிமொழி பதில் கூறலாம். ஆனால் கனிமொழியின் பெயரை, புகழை கெடுக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதன் மூலம் நீங்கள் இழைத்த குற்றத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். 

எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் கனிமொழியிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டு உங்களது தவறான பேச்சை திரும்பப் பெறாவிட்டால், உங்கள் மீது சட்டப் பூர்வமாக கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.//
Madam-Kalanithi Maran threatened J during Election and He did not file any case?

How about your threat? Another Serial


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Maran threatens to file criminal case against Jaya.



Dismissing the charge as ''false'', he said in a statement here that Ms Jayalalithaa had made the charge during electioneering, based on ''half-baked'' information. 

Ms Jayalalithaa, while addressing a poll meeting, had alleged that Mr Maran had misused








his official position, when he was the Union IT and Communications Minister to set up a telephone exchange and had used the lines for promoting the interests of Sun TV. 

Mr Maran said that after he had stepped down from the Union Ministry, someone had sent a letter to the Central Bureau of Investigation (CBI





), levelling charges against him. The CBI had referred the same to the Telecom department, which after an inquiry, declared that there was not an iota of truth in the allegation



This was the only base for Ms Jayalalithaa's charge, he said, adding he had availed only one telephone connection while he was a Minister and had no outstanding dues as on date. 

To fortify






his argument, Mr Maran produced a copy of the letter by Ms V Meenalochiny, General Manager, Chennai Telephones, who had stated that only a telephone connection was allotted



to him at his residence, when he was the Union Minister. 

As a Member of Parliament, Mr Maran was eligible for 1,50,000 metered unit calls an year and out of 4,50,000 eligible metered call units for three years, Mr Maran had used only 1,73,698 calls from December 2006 to March 2009. This showed he had not exceeded his eligible metered call units, Ms Meenalochiny said. 

She made it clear that ''there are no outstanding dues as on date''. Former Union Minister Dayanidhi Maran, who is seeking re-election from South Chennai Lok Sabha constituency, today threatened to file a criminal case against AIADMK General Secretary J Jayalalithaa for her charge that he had secured 323 telephone connections and used them for Sun TV, while in office. 

Dismissing the charge as ''false'', he said in a statement here that Ms Jayalalithaa had made the charge during electioneering, based on ''half-baked'' information. 

Ms Jayalalithaa, while addressing a poll meeting, had alleged that Mr Maran had misused his official position, when he was the Union IT and Communications Minister to set up a telephone exchange and had used the lines for promoting the interests of Sun TV. 

Mr Maran said that after he had stepped down from the Union Ministry, someone had sent a letter to the Central Bureau of Investigation (CBI), levelling charges against him. The CBI had referred the same to the Telecom department, which after an inquiry, declared that there was not an iota of truth in the allegation. 

This was the only base for Ms Jayalalithaa's charge, he said, adding he had availed only one telephone connection while he was a Minister and had no outstanding dues as on date. 

To fortify his argument, Mr Maran produced a copy of the letter by Ms V Meenalochiny, General Manager, Chennai Telephones, who had stated that only a telephone connection was allotted to him at his residence, when he was the Union Minister. //

WHY NO CASE

As a Member of Parliament, Mr Maran was eligible for 1,50,000 metered unit calls an year and out of 4,50,000 eligible metered call units for three years, Mr Maran had used only 1,73,698 calls from December 2006 to March 2009. This showed he had not exceeded his eligible metered call units, Ms Meenalochiny said. 

She made it clear that ''there are no outstanding dues as on date''. 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

M Karunanidhi threatens legal actionagainst Sun TV
Friday - Sep 05, 2008

Amidst a worsening turf war over cabletelevision operations in Tamil Nadu, chief minister M Karunanidhi on Thursday accused the Sun TV Network run by his grand-nephews of defaming the state-owned ArasuCable TV corporation and threatened legalaction against them.

In a statement occasioned by the ongoing war of words between the Sun group of the Maran brothers and the Royal Cable Vision floated in Madurai by his elder son M K Azhagiri, Karunanidhi said Sun TV had made remarks to the effect that Arasu would not start operations in Madurai to benefit RCV.

"This is a planned campaign against the state-owned corporation, and those engaged in this defamatory propaganda will have to be countered by legal measures. Arasu would begin operations from Sept 15 inMadurai, Tirunelveli and Chennai," Karunanidhi said.

Karunanidhi's warning came alongside indications from the Arasu corporation that it would move the Telecom Disputes Settlement Appellate Tribunal (TDSAT) against the denial of channels from the Sun TV group to Arasu, which functions as a multi-system operator.

Karunanidhi castigated Sun TV for accusing the government of 'lying', when it said the Sun was refusing to share its feed with the Arasu corporation. Sun TV itself had admitted that it was engaged in talks with officials, which meant that its channels were not being shared with the state run network. "They take 10 days to write a letter and 10 more days to hold a meeting. These are nothing but dilatory tactics to deceive."

The chief minister also said other channels run by political parties like Jaya TV and Makkal TV were cooperating with Arasu by sending their feeds, and it was Sun TV alone that was refusing to do so despite a legalobligation.

Meanwhile, Brajeshwar Singh, managing director, Arasu Cable Corporation, said that the government-run MSO planned to move the "competent legal authority" to enforce its right to avail itself of signals from SumangaliCable Vision run by the Maran brothers.

According to existing rules, signals should have been provided within 60 days from the date of request. However, with more than two months having elapsed, Arasu is planning to approach the Telecom Dispute Settlement and Appellate Tribunal (TDSAT) for redress. Singh said Arasu is likely to roll out its operations in Madurai along with Tirunelveli before September 15.

Later, Sun TV said in a statement that it was unable to give pay channels distributed by it to the Arasu Cable Corporation without getting to know the exact number of connections. It was the corporation that had sought time during talks to get these details and there was no delay on Sun TV's part.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Cable wars: Now, Alagiri son takes on Maran firm in Chennai.


Chief Minister M Karunanidhi’s grandson Dhayaanidhi Alagiri made his entry into the crowded media bazaar of Tamil Nadu with the launch of the Chennai operations of a satellite TV distribution network he is co-promoting. This makes Dhayaanidhi, Union Minister M K Alagiri’s son, a direct competitor of his uncles, the Marans.

 

 

Meanwhile, actor-politician Vijayakanth’s DMDK became the fifth political outfit in Tamil Nadu that directly owns a channel with the launch of Captain TV at Vanagaram near Chennai on Wednesday.

 

 

Alagiri and his wife Kanthi were present on Wednesday morning when Dhayaanidhi announced the expansion of the operations of JAK Communications into Chennai. The foray into the Chennai metropolitan region will make JAK a direct competitor to the Maran-owned Sumangali Cable Vision (SCV), presently the monopoly distributor. “There will be competition because there is a monopoly at present. It will be tough but in the long run, we might succeed,” said Dhaayanidhi Alagiri after the launch on Wednesday.

The firm, now a local cable network that is popular in neighbouring district Tiruvallur, had recently become a multi-system operator (MSO). The group also runs few local channels with entertainment-related content. From the present owner JAK Jayaraman, the reins have formally changed hands to his son Kamalesh Jayaraman and Dhayaanidhi, friends who now turned partners.

 

 

At the height of the feud between Karunanidhi family and the Maran brothers, Alagiri had launched Royal Cable Vision in Madurai, while the state government made the initial arrangements to begin the operation of a Government-run cable distributor. However, SCV and the Marans came out on top after a tough fight and subsequent patch up. Incidentally, Dhayaanidhi and the Marans are already competitors in the film production arena, running Cloud Nine Pictures and Sun Pictures respectively.

According to industry sources, the entry of new financially-sound players in the tightly-controlled cable distribution market will be beneficial for the local operators and subscribers who are currently dependent on the monopoly operator. “The new operator has the latest technology and equipment, making their service one of the best in city right now. The real advantage will be the possible reduction of set-top box prices from about Rs 3,000 plus to just a few hundred rupees. Also, to take on the Marans, you need some one like this on the other end,” quipped a cable operators’ association leader.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வட்டார வாரிசுகளுக்கு பதவிகள் கூடாது – அன்பழகன்

மே 11, 2007

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என வாரிசை வட்டார அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டார ஆதிக்கத்தைக் கொண்டு பதவிகளை நியமிக்கவும் கூடாது என்றுநிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், பாசத்தை வெளியிட அமைச்சர் பதவி போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழ்நாட்டில் பதவிகள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக கொடுக்கப்படும் பதவிகளில் வட்டார ஆதிக்கம் அதிகம் தலை தூக்குகின்றன.

இப்படி கொடுப்பதால் வாரிசு பலவாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் வாரிசு சிறந்த வாரிசு என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதே நல்ல வாரிசு என்ற நிலையும் ஏற்படலாம்.

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என தமிழ்நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் உறவுகளைக் கொண்டு பதவி அமைக்கக் கூடாது. அதுபோன்ற வட்டார உறவுகள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழ்நாட்டில், குழப்பமில்லாமல் அரியணைக்கட்டிலில் ஏற்ற வேண்டும்.

வாரிசு இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.

வாரிசு படங்களிலேயே சுவாரசியமான படம் எது என்றால் அது ‘அக்னி நட்சத்திரம்’தான். அந்தப் படத்தை வாரிசுத் தாத்தா கருணாநிதி ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களை செயலாக்கினார்.

அதை நிகழ்வுக்கு கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார்! நேரு, ஜார்ஜ் புஷ்ஷைக் காட்டிலும் மக்களை இந்த நிகழ்வு மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த பதவி அமைந்துள்ளது என்றார் அன்பழகன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

The Royal Combat – Azhagiri’s Royal Cable Visison vs Sun TV’s SCV – more head ache for Sun TV’s Sumangali Cable Vision in Madurai

by nandhini on 13/06/08 at 7:26 am --

The Royal Combat - Azhagiri's  Royal Cable Visison vs Sun TV's SCV - more head ache for Sun TV's  Sumangali Cable Vision in MaduraiThis is yet another blow to Sun TV group. Right from the date of clash between the Marans and Chief Minister M. Karunanidhi’s family, more and more problems have started coming to Sun TV and the latest is surly to affect Sun TV’s TopLine this year. After slugging it out in over personal and political issues, Karunanidhi’s elder son M.K. Azhagiri has taken the fight to the last mile, the very delicious cable distribution arena, which the Sun TV Group was dominating over through its Sumangali Cable Vision (SCV).

It is said that, Azhagiri’s Royal Cable Vision (RCV), has formed a pact with Cable Operators in Madurai, by which most of the them are going to move out of SCV and join RCV. Also, RCV has briefed out plans to these cable operators for profit sharing in the ratio of 51:49 or 60:40. Today, blootics.com noticed that in RCV has announced monthly cable tariff cuts for those who are willing to move out of SCV.

The Royal Combat - Azhagiri's  Royal Cable Visison vs Sun TV's SCV - more head ache for Sun TV's  Sumangali Cable Vision in Madurai

Azhagiri’s Royal Cable Vision (RCV) was launched on Monday at a low-key function in Madurai, where the media was kept out. But the effect was felt soon after: soon after the launch, hundreds of households reported a blackout of Sun Group’s channels, which include 20 channels in four regional languages. The Sun Group, with its popular channels—Sun TV, Sun News, and movie and music channels—ruled over the TV ratings, while its distribution network, SCV, has been the unquestionable leader, though not always through fair means. Now, the group is feeling the pinch of the spat in the first family that left the Maran brothers, Kalanidhi and Dayanidhi, in the opposite camp of Azhagiri.

The Royal Combat - Azhagiri's  Royal Cable Visison vs Sun TV's SCV - more head ache for Sun TV's  Sumangali Cable Vision in Madurai

The poaching by Royal Cable Vision (RCV) into Sumangali Cable Vision (SCV) territory increased to a staggering 70 per cent in Madurai city forcing more number of viewers to miss Sun TV’s bouquet of channels. With SCV refusing to give its Sun network signals to RCV, the cable war is only building up by the day. ”We have not compelled anyone to shift from SCV to RCV. The cable operators, who were suffering at the hands of the SCV until now, have grabbed the opportunity after the launch of RCV. Cut up by SCV’s monopoly, the cable operators have volunteered to come under the RCV fold,” RCV officials said.

The Royal Combat - Azhagiri's  Royal Cable Visison vs Sun TV's SCV - more head ache for Sun TV's  Sumangali Cable Vision in Madurai

With 30 head-end operators and 450 link operators, the city has two lakh cable connections. After chief minister M. Karunanidhi’s son Azhagiri launched RCV in the city on Monday, the monopoly of Maran-owned SCV has suffered a severe setback within 74 hours. Despite SCV refusing to relay its pay channels through RCV, the cable operators are increasingly moving towards the latter unmindful of the viewers who have been denied the opportunity to watch their favourite programmes on Sun.

The Royal Combat - Azhagiri's  Royal Cable Visison vs Sun TV's SCV - more head ache for Sun TV's  Sumangali Cable Vision in Madurai

But the cable operators seem to be happy now. ”They (SCV) have been dictating terms thus far. And we have all along obliged them. Now, it is a turnaround situation where we have been invited by RCV management to share even its profits,” A. M. Kannan, General secretary, Madurai Cable TV Operators Association, said. Azhagiri has asked the operators to collect charges ranging from Rs 100 to Rs 130 for a cable connection depending upon the locality. An SCV official said that RCV’s blackout of Sun TV channels has only resulted in a huge demand for Sun Direct. “We are moving additional equipment and technicians to Madurai to meet the demand, which only proves that people want to watch Sun TV at any cost,” he said.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sun TV moves HC for action against Royal Cable Vision



Monday - Jul 21, 2008
Televisionpoint.com Correspondent | Chennai
The Sun TV network has moved the Madras High Court, for a direction to the state police to accept its complaint against the Madurai-based Royal Cable Vision (RCV), and take action against the RCV authorities.

A writ petition, filed by L Jyotheeswaran, authorised signatory of Sun group, contended that RCV and a group of 11 local cable television networks had been illegally tapping the signals of Sun TV and distributing them to viewers.

Claiming that police stations and higher-ups in Madurai were not taking cognisance of its complaint, Sun wanted the court to direct the home secretary to instruct the police authorities to receive the complaints of illegal tapping of signals, register cases and take action.

The petitioner also wanted an order restraining RCV and other cable operators from illegally tapping Sun TV signals for distribution.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

M K azhagiri- Man of the Moment

Azhagiri_Bday.jpg

azhagiri1.jpg

AZHAGIRI’S POLITICAL AMBITIONS have always been a subject of debate. Many believe he has always harboured hopes of succeeding his father as the DMK chief. But Stalin hogged the limelight as the secretary of the party’s youth wing for nearly three decades. Stalin steadily rose in the party ranks, becoming an MLA first and then getting elected as the Chennai mayor. He was made a minister in 2006 and is now tipped to take over the reins of the party. On the other hand, it has been a rough ride for Azhagiri, who has not held any party post till very recently. Over the years, he established himself as the backroom boy with control over the southern districts, and made Madurai his stronghold.
Azhagiri.jpg

In 2000, the DMK charged Azhagiri with undermining party discipline. General secretary K. Anbazhagan issued a diktat to the party cadre asking them not to have any links with Azhagiri. His fortunes hit a low after he was arrested as an accused for the murder of T. Kiruttinan, a former state minister and a senior DMK leader, in 2003. But it was the attack on the daily Dinakaran’s and Sun TV Network’s office last year in Madurai by Azhagiri’s alleged supporters that changed his equations with the party high command. The paper had carried a survey that said 70 percent of those polled in a state-wide opinion poll favoured Stalin as the DMK chief's political heir. Only two percent of those polled favoured Azhagiri. The incident was a marker in the DMK’s intra-party affairs, resulting in the Marans falling out of favour with the DMK chief, the entry of Karunanidhi’s daughter Kanimozhi into politics and the re-emergence of Azhagiri as a high profile player in party affairs.
Azhagiri+in+Chennai.jpg

M.K.Azhagiri, was born in 30Th January 1950 and is the eldest son of Karunanidhi and his second wife Dayalu Ammal. His educational Qualification is a Bachelors in Arts degree and he was an ex bank employee. He is the in charge of Madurai edition of Murasoli, a Tamil daily and the South Zone Organizing Secretory of DMK.
Azhagiri_avatar.jpg

M.K.Azhagiri's rise has been systematic and his position of Strength today is because of he being Instrumental in winning Three consecutive By elections for DMK from the South, the last being the infamous Thirumangalam. He won the Madurai constituency by 1, 40, 985 Votes  and was largely responsible for the alliance sweeping the south in the recent Lok Sabha Elections. Except Tenkasi, they won all seats from South.

top1.jpg
M.K.Alagiri has recently launched his own website - www.mkalagiri.com and http://mkalagiri.org/
One of the ridicule recently being floated in Delhi is that he cannot converse in English and Hindi,, which are the Languages of Delhi.  In fact Sonia would have been washing Utensils in a Italian Bakery if not for K.Kamaraj because of whom Indira came to power. And it is because Rajiv was son of Indira, she is enjoyed the fruits of Dynasty. K.Kamaraj did not even know A or B or C or D of English but was still a King Maker.

M.K. Alagiri has no administrative experience nor did he occupy any imminent political position and so was Rajiv before he became the Prime Minister of India.








16may_azhagiri_a.jpg
One day before the results were announced Madurai was splashed with posters telling the world that from tomorrow Madurai will be remained as Alagiriar District. Such is the belief the DMK cadres have in him. some party functionaries remember seeing him riding an old Lambretta scooter when he landed in Madurai. He was those days leading a spartan life in a rented house. Now, he is brimming with several business interests, besides properties in various places like Kodaikanal. It is said ‘nothing moves without his consent’ in Azhagiri’s turf.



In his affidavit filed before electoral authorities, Azhagiri declared he had bank Deposits  of about Rs.5.51 Crore with a Land Rover SUZ  worth Rs.1,20,000 and a Honda city car worth Rs.1,40,000. He has also declared that he has invested Rs.96 lakh in Dayanidhi Diagnostics,and 85gms of gold worth Rs.1.10lakh. Apart from Cash on hand to the tune of Rs.One lakh,he has immovable properties including agricultural lands worth Rs.75,17,000 and Non-agricultural land valued at about Rs.1.83 crore. He has a house and two flats worth Rs.94 lakh with no loans , the affidavit said. His wife has deposits, cash, jewels and properties worth Rs 2.92 crore. His son Dayanidhi has invested in DTV to the tune   of rs.80000 as a partner and owns a Skoda  worth Rs.Seven lakh.He a;so has shares in Dhaya cyber park Pvt led worth rs.1.03crore,and Royal cable vision worth Rs.Three lakh.Azhagiri said he had no pending cases against him.



Azhagiri has three children: Kayalvizhi, married to Venkatesan, Anjugaselvi and Durai Dayanidhi. All of them live in Chennai. Both Kayalvizhi and Durai have political aspirations. Kayalvizhi’s initiation into politics was at a recent conference of the party’s women’s wing in Cuddalore recently, when she made a speech with papa watching her performance from the crowds.

Durai, a regular at top city pubs, can be spotted at hot spots. He was a student of Anna University.

After the spat with the Marans, Azhagiri started a Cable TV network in Madurai called Royal Cable Vision and through his son started Film distribution Business also.
dina.jpg
A year ago on May 9th, Three persons were burnt alive as a Tamil newspaper office was set ablaze by rampaging followers of Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s son, M. Azhagiri, in Madurai Trouble started  after  Dinakaran, a daily owned by Sun TV headed by Kalanidhi Maran, elder brother of union minister for IT and telecommunications Dayanidhi Maran, carried a poll survey indicating Karunanidhi’s heir. The survey stated that while 70 per cent of the readers favoured Karunanidhi’s younger son M.K. Stalin, Tamil Nadu minister for local administration, only two per cent preferred the elder son, M.K. Azhagiri.
610x.jpg
Angered DMK workers loyal to Azhagiri took to the streets damaging vehicles and burning buses. The mob targeted the office of Dinakaran and set fire to the building. While some employees were able to escape, three were charred to death inside the building before fire engines could rush to the spot to douse the fire. The Case is pending with the CBI.
money.jpg
With in a month on June 10th he launched Royal Cable Vision, a cable network . RCV targeted the Sumangali Cable Vision (SCV) of the Maran brothers, which has been reigning supreme in most parts of the state till then.

In the recent Cabinet Turmoil it is rumored that Congress was interested in having Maran as IT minister and did not want Baalu and Raja. Raju is in Kanimozhi camop and Baalu in Maran camp and in the midst of the tussle Azhagiri and Kanimozhi have joined to minnow the Maran yet again- Rumours.
alagiri.JPG




Among the major promises made by MK Alagiri to Madurai  are assurances that he would turn the city airport into an international terminus after consulting conglomerates in this sector. He added that flights  would be scheduled to central and east Asian countries through Saudi Arabia which would help ‘Haj pilgrims’ in the city and youth hailing from the Southern districts who were working in Gulf Nations. He has also promised to clean up the Kiruthumal River and Anupanadi channel, thereby ensuring a mosquito free Madurai.
He would fix the traffic congestion in the city by relocating the transport corporations from the city to the outskirts after consulting the police and the transport authorities.
The manifesto added that he would construct elevated highways in Goripalayam, Kalavasal, Palanganatham and South Gate areas to reduce the traffic congestion further.
In order to tackle the high demand for drinking water, he said that he would convert seawater into drinking water which would be brought to Madurai through huge pipes from Ramanathapuram. He also planned to ensure that water ran perennially in the Vaigai River by linking it with the Cauvery. In addition, he said he would sign an MoU with the World Bank to deepen the tanks in and around Madurai to make irrigation facilities available throughout the year.
He also promised to increase the price of paddy and sugarcane for the benefit of the farmers.
He promised weavers that he would get extra funds from the Khadi And Village Industries Board to increase the subsidy given to them, also adding that he would increase the ceiling limit on electricity usage.
On sports, he said that he would invest crores to set up a facility in Madurai. This academy would also train the physically challenged and is expected to facilitate their participation in world competitions.
Azhagiri also promised to set up a suburban circular train service along the lines of the Chennai Metro. This service, he said, would connect Dindigul and Virudhunagar with Madurai.


Azhagiri’s Son - M K DURAI DAYANIDHI (son, 22) :
2009051754700401.jpg

Political Experience: None so far
Strengths: My parents. They encourage me in everything. Even if I make a mistake, they pinpoint and keep correcting me till I become perfect.
Talents: I gel with all kinds of people. I have acquired my father’s organisational skills. Like him, I want to be a perfect organiser.
Social Habits: I hang out with my friends more than my family. I have friends everywhere as bonding comes naturally to me.
Gadgets: I keep changing my mobiles every two months. At present, I have a Nokia E-90 communicator. I carry around a Sony VAIO notebook and an iPod.
Fitness: After a major accident three years back, I am not focussing on fitness. I used to play badminton and I still play cricket as an opening batsman.
Religion: I am an atheist from the beginning.
Dress Code: Anything that fits properly. I like formals. No loyalty to any brand.
Holidays: Every New Year, I am out of the country with a select group of friends. Every May, we are in Kodaikanal. The family is addicted to Kodai.
Ambition: None in particular. Would like to excel in any business I do.
Politics: Like my father, I would prefer to be behind the scenes and help people. Everyone wants me to get into politics. But I want Dad to get into active politics and help more people.
Azhagiri’s Daughter - M K KAYALVIZHI (daughter, 33) :
kayal.jpg
Her name last year, did the rounds as a possible Rajya Sabha candidate. Didn’t come through, but don’t rule out a political future .
Strengths: My family. Apart from my father and husband, Dayalu Amma, my grandmother who brought me up is my greatest strength.
Talents: Writing, mostly unpublished. I do have a collection of poetry and stories. I don’t force myself to write. At times, when I feel like writing, I leave all other work and take time to be alone and write spontaneously. Maybe, I should get it published. Was a hockey and basketball player in college (Lady Doak, Madurai).
Social Habits: Enjoy going out with friends for a walk or for fresh juices. I like to teach my son in the evenings. I do attend functions — basically social, not political — on invitation.
Gadgets: Nokia N91 8GB. For the music part of it. I have always preferred Nokia. Plug into my iPod while going out.
Fitness: Walks in Thiruvanmiyur beach and Theosophical Society. I love cooking and am good at preparing fish curry.
Religion: Every person has a belief. If people want to pray, let them pray. Individuals are free to follow any religion.
Dress Code: I like traditional costumes and jewellery. I prefer wearing sarees to western clothing. Maybe because I spent my childhood under the care and guidance of grandma (Dayalu Amma).
Holidays: Last year, we went to Switzerland and had a great time. Would like to travel to Australia. In India, appa used to take us to Kodaikanal, Thekkady and Top Slips often. Kodai is my favorite.[Source:Tamilinfoservice, Tehelka, the Hindu, New India Express, rediff, self]



azha.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

It’s RCV for Madurai
rapidrepair.info — Amidst chanting of vedic hymns, chief minister M. Karunanidhi’s son and DMK strongman in the south M.K. Azhagiri launched his family-owned Royal Cable Vision (RCV), touted as an archrival to the Maran-owned Sumangali Cable Vision (SCV), here on Monday.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Periyarites see Veeramani doing an MK


First Published : 17 Oct 2009 03:38:00 AM IST

CHENNAI: The recent appointment of Dravidar Kazhagam (DK) president K Veeramani’s son, Anburaj, as the headquarters secretary of the organisation has caused anger and resentment among the acolytes of Periyar E V Ramasamy, who feel that the social movement was getting the hues of a political party through dynastic succession.

 

“How many agitations has Anburaj participated in over the years and how many meetings has he addressed to take the ideals of Periyar to the common people?” asks writer Tamilarivi Manian and calls him a “novice”.

 

Pointing out that there was a parallel between Veeramani and DMK chief Karunanidhi, he says while DMK founder C N Annadurai never promoted his adopted children in politics, his successor Karunanidhi did it by giving party posts and also MP seats to two of his two children - M K Alagiri and Kanimozhi. Veeramani is doing what Periyar never did, he says.

 

The DK is not a mutt and Veeramani cannot act like a Shankaracharya, enjoying the right to annoint his successor. In a social movement, unilateral selection of successors is unacceptable, particularly when the very act goes against what Periyar stood for, he points out.

 

Viduthalai Rajendran, a long-time member the DK who broke away in 1996 to form the Periyar Dravidar Kazhagam, says Periyar, despite involving his family members in protests and agitations, never anointed any of them as his successor. Even Maniammai, whom Periyar married much later, came into the movement as an ordinary worker and Veeramani was neither related to Periyar nor Maniammai.

 

That Veeramani, after inheriting the leadership of the DK from Maniammai, is making a bid to hand over the entire organisation that owns properties and educational institutions all over the State, to his son, who is a failed businessman, has also caused a murmur within the DK, though the activists are reluctant to speak out about it.Veeramani surprised them at the party meet in Thanjavur on October 10 by making the announcement about his son’s appointment unilaterally.

 

However, Veeramani has been surprising many old-timers of the DK for more than a decade by giving priority to running the self-financed institutions of a trust he operates in the name of Periyar rather than promoting the rationalistic ideology.

 

His penchant to blindly support whoever is in power in Tamil Nadu - be it Jayalalithaa or Karunanidhi - and his placing legal hurdles in the initiative to bring out a collection of writings and speeches of Periyar have already earned the ire of many traditional DK supporters.

 

Since he is hell bent on stopping the publication of Periyar’s works, old time followers of Periyar accuse Veeramani of having a dog in a manger attitude.

 

But his latest move to suddenly bring in his son, who had so far been living an independent life least concerned about the activities or programmes of the Dravidar Kazhagam, has earned their wrath as they see in it a clear attempt to hand him over the properties and funds of the party.

 

But as Tamilarivi Manian puts it: “Dynasty in political parties is curable but in a social movement it is incurable.”

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி!

vedaprakash எழுதியது

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா இன்று தெரிவித்தாலும், அதிலுள்ள மர்மங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ரு தெரியவில்லை.

Raja-Niraradia-spectrum-controversyRaja-Niraradia-spectrum-controversy

 

ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை காரணமாக நாடாளுமன்றத்தில்நேற்று கடும் அமளி ஏற்பட்டது.

Neera-Raidia-Raja-telecom-scamNeera-Raidia-Raja-telecom-scam

 

நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது.

 

மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான்!

மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது.

சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன.

அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்?

அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது.

முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிர்கு என்ன தொடர்பு?

பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது.

raja-kanimozhi-nexus

 

raja-kanimozhi-nexus
நீரா-ராடியா-ராஜா-சம்பந்தப்பட்ட-பெண்

 

நீரா-ராடியா-ராஜா-சம்பந்தப்பட்ட-பெண்

இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை.

சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

http://www.scribd.com/doc/30674787/CBI-IT-Letters-on-Spectrum-Scam

இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நேற்று இப்பிரச்னையை எழுப்பி அதிமுக, பா.ஜனதா உறுப்பினர்கள் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் ஒளிவு, மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை குறித்த தகவல்கள் அனைத்தும் அமைச்சகத்தின் இணையதள முகவரியிலேயே வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் ஏல நடவடிக்கைகள் பூர்த்தி அடையும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Raja-with-spectrum-alottee-kapurRaja-with-spectrum-alottee-kapur

 

The above photo shows, Sanjay Kapoor (right), the man who floated five companies which are shortlisted for BSNL’s WiMax allotment, with Telecom Minister A Raja at his birthday celebration on October 26, 2008, at the Minister’s official residence in New Delhi – Cortesy: J. Gopikrishnan’s blog:

http://jgopikrishnan.blogspot.com/2009_05_01_archive.html

1,00,000 கோடிகள் என்றால் எங்கே போவது? கூட்டுக் கொள்ளை என்பதனால், குறிப்பாக பரஸ்பர உதவி, ஆதாயம், லாபம் முதலியவை உள்ளதால் காங்கிரஸ்-திமுக-கம்யூனிஸ்ட் காரர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

இவ்விஷயங்களை மறைக்க திமுகவிற்கு அடிக்கடி ஸ்ரீலங்கா பிரச்சினை, செம்மொழி என்று தமிழர்களை கவனத்தைத் திருப்பி விடுவர்.

காங்கிரஸைக் கேட்க வேண்டாம் – பல விஷயங்கள் உள்ளன – மோடியிலிருந்து, காஷ்மீர் வரை………….. – நடு-நடுவே மாயாவதி-கம்யூனிஸ்டுகள்……………………., இல்லையென்றால் மாவோயிஸ்டுகள்……………., நடு-நடுவே ஹிந்து-தீவிரவாதிகள்…………..இப்படி காலம் தள்ளிக் கொண்டே போகும்




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Raja-Niira Radia links go back 4 years

May 2, 2010 by devapriyaji


Niira Radia
J Gopikrishnan | New Delhi

Telecom Minister A Raja had offered to help a woman public relations lobbyist, Nira Radia, four years ago get CCEA clearance for starting an airline — a proposal that was shot down by other Ministers. But it was just the beginning. Later, Raja helped her get environmental clearance for some housing projects launched by two corporate giants. The telephone intercepts of Radia, as reported by The Pioneer on Wednesday, show that she was in touch with Raja regarding the 2G spectrum deal too.

Radia first got in touch with Raja through a woman politician in January 2006, when he was the Environment Minister. The woman who introduced Radia to Raja later became a Rajya Sabha member. Radia reportedly wanted Raja’s support for lobbying with the Cabinet members in CCEA for getting approval to start an airlines company, known as Magic Airlines.

According to sources, Raja contacted three members of the CCEA to help out Radia. But they refused to back him. “It was a funny project. A real non-transparent project. There were lots of discrepancies in the mode of foreign investment,” one such Minister told The Pioneer on Wednesday.

According to Environment Ministry sources, Radia became a frequent visitor and struck a big deal by getting environmental clearance for the pan-India project of housing development for the two big companies. This deal onwards, Radia’s clout increased in the Environment Ministry.

Due to the unceremonious exit of Dayanidhi Maran in May 2007, Raja landed in Telecom Ministry and Radia become a power centre as most of her big clients were key players in the sector. According to sources, the CBI investigated her role in the 2G spectrum scandal on the basis of confession of top DoT officials.

Sources said the CBI had evidence that just a few days before the spectrum allotment on January 10, 2008, a “criminal conspiracy” took place involving Radia and Raja. Of the allotted nine companies, four were served by Radia.

“The meeting between Raja and Radia along with the woman MP took place at Taj Mansingh hotel. The room was booked in the name of Radia. According to log book details of the official car and as per confessional statements by top DoT officials, the Minister’s arrival at the hotel has been proven,” said a senior CBI official.

The CBI sought permission to interrogate Radia after tapping her phone for over 300 days, but it was not allowed to do so by “highest authorities”, said sources. Fearing her arrest, Radia left for London in February this year.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kanimozhi & seven dwarfs-By Aditya Sinha

May 2, 2010 by devapriyaji

(The Editor-in-Chief of The New Indian Express and is based at Chennai)

22 Nov 2008 01:00:00 AM IST
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Kanimozhi+&+seven+dwarfs&artid=8j|oxJJOh04=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=HuSUEmcGnyc=&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==&SEO=

Actually, the fairytale of Kanimozhi, d/o Mr Kalaignar, is a bit different from that of Snow White, a beautiful princess who was abandoned by her stepmother in a forest where she met seven lovable midgets, and where she went into coma after biting a toxic apple. For one thing, in Snow White’s tale, there is no global economic crisis, and general elections are not around the corner. Another difference is that while Snow White’s step-mother always had the King’s ear and thus the upper hand, Kanimozhi’s step-mother has long lost control of Mr Kalaignar. And while Snow White’s seven friends were biological dwarfs, Kanimozhi’s are sized by their moral stature.

Take communications minister A Raja, who is akin to Dopey among Snow White’s dwarfs. He and Kanimozhi took over from Dayanidhi Maran when Mr Kalaignar banished the latter from his kingdom in April 2007. Dayanidhi and brother Kalanidhi had become too ambitious, holding popularity contests in their newspaper; so it was burnt down. Prior to his downfall, Dayanidhi served dual roles in distant Delhi: as minister in a financially-busy ministry, he was also Mr Kalaignar’s pointsman in the Capital. After Dayanidhi’s departure, Raja assumed the first role, Kanimozhi the second.

Raja was focused on his task from the start; this July, the Express reported his underselling of 2G spectrum (a designated part of the airwaves for use by mobile phone operators) which caused a loss of Rs 22,466 crore. Turns out we were wrong by around Rs 37,500 crore. Now the Left and the BJP want Raja’s head; the central vigilance commission is deep into its investigation; and the Delhi High Court has admitted a public interest litigation against the allotment.

The scam, briefly: Raja did not auction the spectrum, but sold it on a first-come-firstserve basis. And not at 2007 prices; he charged the 2001 price of Rs 1,650 crore. That would have been okay, except he did not give any genuine operator time to react; in effect, the sale announcement came at the start of a weekend, and it closed after the weekend was over. Foreign players did not get time to mobilize their Rs 1,650 crore – which again would be okay, if it weren’t for the fact that two operators who did get the Spectrum, Unitech and Swan (realty players who do not even own a simple telecom asset like a network tower), effectively and profitably resold their spectrum to foreign players.

Raja not only undersold, but blocked genuine foreign players, who came in anyway, after enriching someone other than the Government of India. Was it just the Delhi responsibilities that Kanimozhi shared with Raja? Or should she share culpability as well? Then there is T R Baalu, who’s like the dwarf Sleepy, considering his accomplishments in nearly five years as surface transport minister in the UPA government. The highways programmes of the NDA government have all but come to a halt. And now that the world is in an economic slowdown, it ought to be a time when India pumped money into this sector of infrastructure – but private companies are getting cold feet because bank credit has dried up. Some economists think India can be among the first to recover from the global recession; that might have been true had Baalu done his job and kept performance high. Instead, Sleepy has been fruitlessly pursuing the Sethusamundram Canal project, and he has tried to divert cheap gas to companies owned by his sons.

Back home in Tamil Nadu, there is the electricity minister Arcot Veeraswamy, possibly the dwarf Happy. He has reigned over a deteriorating power situation which makes a mockery of the UPA’s hopes that India will help pull the globe out of recession.

Ask any industrialist in the state that has been among the most industrialized in the country. Factory owners in Sriperumbudur lament the open extortion by “rowdies”; they lament the money they spend on private generators due to power rationing; they lament the drying up of the US market. One reason it is so bad is Veeraswamy’s great interest in monitoring the rise of actorturned politician Vijaykanth, a man with no ideas, no neck, but lots of supporters, as a recent rally in Chennai demonstrated.

Kanimozhi’s two step-brothers, Stalin and Azhagiri, can be likened to Snow White’s Sneezy and Grumpy. These guys are certainly not the Brothers Karamazov. If they were, nobody would spend their time wondering what lies in store for the DMK after Mr Kalaignar departs from the scene.
A_Raja_300.jpgconnectionCenter.jpgKanimozhi_300.jpgBy protocol, Stalin as a senior minister in the state government would appear to be the natural heir. But Azhagiri, the elder brother who is more straightforward than subtle, has been ruling the roost in the southern part of the state, and has of late turned his gaze to the Capital.

Kanimozhi seems to have taken a liking for Grumpy. And in doing so, her well-wishers may have displayed a bit of ruthlessness as well. For, back in June there were a bunch of mysterious rumours about Stalin, saying that he had returned from a London trip with some dreaded disease which would cut his life short and which had forced Mr Kalaignar to reconsider his succession. It was a false rumour. Stalin found that he had sarcoidosis, a node in the lung that is easily curable. At worst, he is simply, well, Sneezy.

The rumours, however, are an example of how absurd the fallout of sibling rivalry can get.

The last two in Kanimozhi’s troupe would be her rivals for Mr Kalaignar’s mantle: PMK founder S Ramdoss and film icon Rajnikanth.

Ramdoss, whose son is the health minister in Delhi (so we can call him Doc), thinks he is the natural successor. He overplayed his hand recently, however, and finds falling between both the DMK’s and Ms J Jayalalithaa’s stools. But he is a potent force, demonstrated by the fact that Baalu visited him at his house in Tindivanam two weeks back – some say to request Ramdoss not to raise the 2G spectrum controversy in the state. Perhaps his silence will be his price for his return to the DMK-led front.

Rajnikanth is a force greater than a tsunami, and was almost lured into politics by the late G K Moopanar. The talk is that he will start his own party – but only after Mr Kalaignar goes. Naturally, of Snow White’s dwarfs, he should be Bashful.

None of this can be good for Kanimozhi, who, if you’ve noticed, has been unable to live up to her responsibility as Mr Kalaignar’s pointsman in Delhi, as evidenced by her lack of handling of the Sri Lankan Tamils’ issue and the 2G spectrum controversy.

It’s probably because she spends all her time in Chennai, rushing from one local function to the next, keeping her visibility high, and feeding her obscenely growing ambition. Unlike Snow White, however, she has enviable maternal support, and it looks as if more than her, it will be the residents of Tamil Nadu who will be biting the poisoned apple and slipping into coma, with no prince charming to rescue us in sight

editorchief@epmltd.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

  1. TAPPED and TRAPPED

    J Gopikrishnan | New Delhi

    Govt taps PR honcho’s phone, gets clinching evidence against Raja

    The cat is finally out of the bag. The CBI has acquired clinching evidence showing that a high-profile woman public relations lobbyist acted as powerbroker in the mutli-crore 2G spectrum scam and that she was in regular touch with Telecom Minister A Raja.

    The investigating agency unearthed damning evidence of wheeling-dealing in the spectrum scam by authorised tapping of telephones of several persons, including Nira Radia, who runs several public relations and consultancy companies — like Vaishnavi Corporate Consultants, Noesis Strategic Consulting Services, Vitcom Consulting and Neucom Consulting.

    All these companies are filled with retired bureaucrats, who ostensibly lobby with the Government on behalf of different companies. Radia is an NRI, who landed in India in early 2000 for some liaison work for aviation companies. Of the nine companies that benefited from the dubious spectrum allocation by Raja, the CBI found that four companies were “serviced” by Radia.

    Highly-placed sources said the CBI was denied permission by top authorities to interrogate Radia even though the telephone intercepts clearly exposed her role in the scam, which cost an estimated Rs 1,00,000 crore to the exchequer.

    A communication between the Income Tax Department and the CBI shows that nine phone lines were tapped by the I-T Department’s investigation wing. The first phase

    of 120 days of tapping started on August 20, 2008, and the second phase of 180 days on May 11, 2009.

    Sources in the CBI said that in addition to Radia’s, the telephone lines of several other influential businessmen, politicians and advertising professionals were tapped for uncovering the extent of lobbying in the scam.

    Sources said that the first-phase conversation tapping, lasting 120 days, exposed the parking of ill-gotten money from the spectrum scam in the form of real estates holdings, company shares and derivates within the country and in tax havens like Mauritius.

    Documents available with The Pioneer show that Central Bureau of Investigation DIG Vineet Agarwal had on November 16, 2009, sought call detail records of Nira Radia from Director General of Income Tax (Investigation) Milap Jain. “It has been reliably learnt that certain middlemen, including one Ms Nira Radia of M/s Noesis Consultancy, were actively involved in the above-mentioned (spectrum scam) criminal conspiracy,” Agarwal’s letter to Jain, seeking the detailed call records, stated.

    On November 20, 2009, as per Jain’s instructions, Joint Director of Income Tax Ashish Abrol provided the details of conversation between Radia and key players in the spectrum scam, including A Raja.

    “There are some direct conversations between Ms Radia and the Telecom Minister. In some other conservations, Ms Radia boasts of having helped some of the telecom operators in their efforts to obtain licences/spectrums. Ms Radia has also been in regular touch with Shri Chandolia,” confirmed Abrol to the CBI. RK Chandolia was Raja’s private secretary during the time of spectrum allocation and has since been elevated as an economic adviser in the Department of Telecommunication.

    “On the basis of specific information received from CBDT, the telephone lines of Ms Nira Radia and some of her associates were put under observation after obtaining permission from the Home Secretary,” Abrol wrote to Agarwal in a letter, marked “Strictly confidential and top secret”.

    “The intercept provides the conversation of the target and associates indicating laundering and structured payoffs, transactions and liaison for projects of telecom, petroleum and also the media,” the I-T Department communication to the CBI stated.

    Radia’s companies are involved in consulting in telecom, power, aviation and infrastructure. These entities not only managed the media but, as per the recorded conversations, apparently tried to influence policy changes and decisions of various Government departments to suit the commercial requirements of their clients, confirmed the Income Tax Department’s investigation wing to the CBI after analysing the telephone conservations.

    “From these conversations, it appears that Ms Nira Radia might have had some role with regards to the award of telecom licences. In a conversation, she guided a new telecom operator on the need to delay the inflow of funds from the overseas investor and not to give the impression to the Government that there has been any ‘windfall’ profit,” the letter added.

    In the conversation details available with The Pioneer, Radia was talking about arranging huge money from abroad for Unitech Wireless, which is a major beneficiary in the spectrum scam.

    According to CBI sources, Radia got information about the agency’s moves against her from her vast network in the South and North Blocks and left for London in February to avoid arrest for criminal conspiracy in the spectrum scam.

    “The detailed telephone transcripts of Radia clearly show how our politicians and bureaucrats were hand in glove with the corporates in looting the public exchequer,” a top CBI official said.

     



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Noesis Strategic Consulting Services is focused on offering consultancy and advisory services which help clients take confident decisions towards achieving their objectives.
http://www.noesis.in/nira.htm

Ms. Nira Radia : Director

Ms. Nira has been an entrepreneur for more than 25 years, with extensive consultancy experience in the Aviation, Travel, Tourism and the Communication industry.

She has conducted business with some of the most prestigious and leading brand names in the Aviation and Travel businesses besides a host of corporate companies. Her client list spans some of the world’s largest aircraft leasing companies of which some are ILFC, Singapore Airlines and AAR. She has also worked with manufacturers and service providers, like AAR, Airbus and Venada Avtec, etc. She has represented various international and domestic airlines including SIA, KLMuk and Sahara Airlines.

She began her consultancy career in the filed of Aviation, Infrastructure and Telecommunications Projects. She is one of the few professionals in the country, who can boast of such wide depth of understanding and domain expertise in the area of Strategic Business Communications and the business environment in general. In the early 1990s, she identified India as an important business destination and decided to establish her base in India. Having advised the likes of Airbus and over the years and many projects later, she admirably executed one of her most well known business consulting mandates, as an advisor to the Singapore Airlines – Tata Consortium on the Air India divestment process. As a founder promoter to India’s leading communications consultancy firm, Vaishnavi Corporate Communications, she has continued to be engaged with prestigious clients such as the Tata Group companies, the likes of TCS, Tata Steel, Tata Motors, VSNL, Tata Teleservices, Indian Hotels, Trent International, Titan, Sun Microsystems, ITC, GMR Frapport, Star Group, Nortel, Siemens, Kotak Mahindra, Invista Inc., HIAL, Channel V, eBay, Raymonds, Areva Power, CII, to name a few.

Under her direction the company has striven to enhance the value add to its clients and pioneered new areas of development. Whether it is specific issues which have short term implications on the client business or those that impact the long term objectives of the client, at each front she has consistently and significantly demonstrated and won accolades for her advisory contribution.

As an individual, complete in all aspects, she has always aspired to value add to whatever work she has been involved with, and to the lives of people who come in touch with her.

NOESIS STRATEGIC CONSULTING SERVICES
Address
5th Floor, Dr. Gopal Das Bhawan, 28, Barakhamba Road, New Delhi- 110001.
Phone :+91 11 42393500, 23704051/55
Fax :+91 11 23704070
E-Mail : info@noesis.in
Web : http://www.noesis.in



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' கேட்கிறார் கனிமொழி

kanimoli1.jpg

'இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' கேட்கிறார் கனிமொழி


அவர் எதை கேட்கின்றார் என முழு விபரம் அறிய இன்றைய செய்தித்தாளை பார்க்கவும் .

*இவர்களால் சுனாமிக்கு இந்தியாவிலே அதிகமான நிதி திரட்ட முடியும் .


*அனைவருக்கும் இலவசமாக தொலைகாட்சி கொடுத்து மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை டி.ஆர்.பி ரேடிங்கில் முதல் இடம் கொண்டு செல்ல தெரியும்.


*சன் டிவி யாக இருந்தாலும் சரி, ஸ்டார் டிவி யாக இருந்தாலும் சரி எதாவது உருப்படியான நிகழ்ச்சியாக இருந்தால் தூக்கு கலைஞர் டிவி க்கு, வரவில்லையா அடி காபி.


*உளியோசை என்ற மிக அற்புதமான திரைப்படத்திற்கு விருது கொடுத்து அதை தானே பெறவும் தெரியும்.


* புதிய படங்களுக்கு ரைட்ஸ் வாங்கி இந்திய தொலைக்கட்சிகளில் திரைக்கு வந்து இண்டெர்வல் வரையே ஓடிய புத்தம் புதிய திரைப்படம் என்று விளம்பர வசூல் பார்க்க தெரியும்.


*இளைய சமுதாயம் விழிப்புணர்வு அடையும் போது கல்லூரிகளை இழுத்து மூட தெரியும்.


*பிரச்சினை எல்லை மீறும் போது பத்திரிகைகள் வாயை மூடத் தெரியும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.


சரி சரி இவையெல்லாம் இவர்களது குடும்ப பிசினஸ் ..அதில் நாம் ஏன் தலையிட வேண்டும். இலங்கை பிரச்சினையின் போது இதை விட எப்படி கலைஞர் நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்று கேட்கிறார்? மனசாட்சியோடு தான் பேசுகிறாரா?


அகதிகளின் நிலையை நேரில பார்த்த பிறகு எப்படி சோறு சாப்பிட மனசு வருகிறது.?


*தமிழை செந்தமிழ் ஆக்கி இங்கு எத்தனை தமிழன் பயன் அடைந்தான். அட அது கூட உங்கள் விருப்பம். தமிழை உலக மொழி கூட ஆக்குங்கள். ஒரு தமிழ் இனமே நசுக்கப்படும் போது அந்த மொழி இருந்து யாருக்கு என்ன லாபம்.


*உண்ணா விரதம் இருந்து நெருக்கடி கொடுத்தாராம். இவர் உண்ணா விரதம் இருந்த அழகை அனைவருமே கண்டு ரசித்தனர். குடும்பத்தோடு அதாவது மனைவிகள் இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் அருகில் அமர்ந்திருக்க, பின்னால் குளிர்விப்பான் காற்று வீச காலை உணவுக்கு பின், மதிய உணவிற்கு முன் இருந்து முடித்தார் உண்ணா விரதம்.


*இது கூட பரவாயில்லை வயதானவர் அவரால் உண்ணாவிரதம் இருப்பது கடினம். தேர்தல் முடிந்து அந்த தள்ளாத வயதில் மகனுக்கும் மகளுக்கும் மத்தியில் இடம் வாங்க டெல்லியில் காவல் இருந்தார் .இதெல்லாம் முடியும் ஒரு அளவுக்கு மேல் நெருக்கடி கொடுக்க இயலாதாம் . ஏனென்றால் இது அயல் நாடு பிரச்சினையாம்.


*அப்போ எதுக்கு பேச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் குடி பெருங்குடி, தமிழர்கள் என் மக்கள் என்று நாடகம் ஆடனும்.


*நீங்கள் அறிவித்த சலுகைகளும் இலவசங்களும் படிக்காத மக்கள் இருக்கும் வரைதான். அடுத்த வளரும் தமிழ் சமுதாயம் இனியும் ஏமாறாது.



**கனிமொழி இடத்தில் வேறு ஒரு தமிழன் சென்றிருந்தால் ராஜ பக்ஷேவிடம் இப்படி ஒரு கேள்வி யாவது நறுக்கென்று கேட்டிருப்பான் .


*ராஜபக்ஷே நீ ராவணனின் மறு பிறவியா ?


*என் மக்கள் மீது அப்படி என்ன உனக்கு பகை ?


*உனக்கு எப்படி நிம்மதியாக உறக்கம் வருகிறது ?


*நீ நல்லவனா கெட்டவனா? ( தெரியலியேப்பா நு மட்டும் சொன்ன ...மவனே )


***உங்கள் மேல் (அனைத்து திராவிட கட்சிகளும்) ஒரு லட்சம் தமிழர்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது . அந்த கறை என்றும் அழியாது . தயவு செய்து தமிழர்களை எமாற்றதிர்கள் . அமைதியாக இருக்கும் தமிழன் கடைசிவரை அடி வாங்கிக்கொண்டே இருக்க மாட்டான். தயவு செய்து ஆட்சியில் இருக்கும் போது ஒரு சமுதாயத்திற்கு உருப்படியாக ஒரு காரியமாவது செய்யுங்கள் .


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

http://suthumaathukal.blogspot.com/2009/07/blog-post_2517.html

கோடிகளை புரட்டும் தி.மு.க -லேடி---டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ்...

p4.jpg

hyhj1a.jpg


டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ்...

ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப் பினர் என்றும் முன்னாள் கதர் வாரிய மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் என்றும் இவரது கறுப்பு - சிவப்பு பெயரோடு சொல்கிறது விசிட்டிங் கார்டு'! பளிச்சென்று முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த விசிட்டிங் கார்டில் புன்னகை பூக்கிறார்கள். எம்.ஏ., எம்.ஃபில் முடித் திருப்பதாகவும் சொல்கிறது இவரது கார்டு.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்தில் தான் இவருக்கு வீடு என்றாலும்,

காயத்ரி ஸ்ரீனிவாஸ் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ளஅவருடைய பங்களாவில்!

''ஆளுங்கட்சியின் பெயரால்... மத்திய - மாநில அமைச்சர்களிடம் சொல்லி காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கி றார்கள். அவர்களில் டாப் மோஸ்ட் புள்ளிதான் சத்தமில்லாமல் செயல் படும் காயத்ரி ஸ்ரீனிவாஸ்...'' என்று தொடர்ந்து பல மாதங்களாக நமக்கு வந்துகொண்டிருந்த தகவல்களை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டிருந்த சமயத்தில்தான், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கான்ட்ராக்ட் கள்எடுத்துக் கொடுக்கும் இடைத்தரகர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார்.

''அநியாயம் நடக்குதுங்க. முந்தியெல்லாம் காசு கொடுத்தா, அது போக வேண்டிய இடத்துக்கு முழுசா போயிடும். வேலையும் முடிஞ்சிடும். இப்போ நடுவில் உள்ள நந்திகளுக்கு தீனி போட்டே எங்க சொத்து அழிஞ்சுடும் போலிருக்கு. அதிலும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் மூலமா போனா, ரெட்டிப்பு செலவு ஆகுது. என்ன பண்றது? வேற யார் மூலமா போனாலும் காரியம் நடக்காதுனு கட்சிக்காரங்களே சொல்றாங்களே...'' என்று சலித்துக் கொண்டார் அந்த இடைத்தரகர்

அப்போதும் நாம் நம்பத் தயாராக இல்லை. ஜூ.வி-க்கு மிக நம்பகமான ஒரு நபர், ''ரகசிய வீடியோ பதிவாகவே ஒரு பேரம் நடத்திப் பார்த்துவிட்டால் என்ன?'' என்று முன்வர... அடுத்தடுத்து நடந்தன வேகமான ஏற்பாடுகள். இடைத்தரகர் அளித்த விவரங்களை மிக கவனமாக உள்வாங்கிக் கிரகித்துக்கொண்டபின்.... இரண்டு பேராக இந்த ஆபரேஷனைச் செய்வது என்று முடிவானது. அதாவது, இடைத்தரகர் போல நடிக்க ஒருவர்.... மத்திய அரசின் கான்ட்ராக்டைப் பெற விரும்பும் ஆந்திர மாநிலத்துக் கம்பெனியின் அதிகாரியாக ஜூ.வி. நபர் ஒருவர்...!
p5.jpg
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை சாலைகளில் பதிப்பதற்காகத் தொலைத் தொடர்புத் துறையின் - பி.எஸ்.என்.எல்-லின் டெல்லி தலைமையகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த டெண்டர் அறிவிப்புதான் இந்த இருவர் டீமின் 'பொறி'!

காயத்ரி ஸ்ரீனிவாஸை தொடர்பு கொள்ளக்கூடியது என்று நம்மிடம் அளிக்கப்பட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார் 'இடைத்தரகர்' (அதாவது இடைத்தரகராக நடிக்க முன்வந்தவர்). ஏற்கெனவே இன்னொரு நபர் மூலம் கான்ட்ராக்ட் தொடர்பான விவரங்களை காயத்ரி ஸ்ரீனிவாஸ் காதுக்கு அனுப்பி வைத்துவிட்டு... அதன்பிறகுதான் செல்போனில் விஷயத்துக்கு வந்தார். அந்த ஆடியோ பதிவு இதோ ('இடைத்தரகர் தொடர்புகொண்ட செல் நம்பர் 9442578555. தொடர்பு கொண்ட தேதி ஜூலை 23, வியாழன் மதியம் சுமார் 3 மணி) -

இடைத்தரகர்: ''மேடம்... அவங்க என்ன சொல் றாங்க... இப்ப... அதாவது... டெண்டர் டேட் ஆகஸ்ட் ஏழாம் தேதி தள்ளி வச்சிருக்காங்க.''

எதிர்முனை பெண் குரல்: ''சரி!''

இடைத்தரகர்: ''இப்ப டெண்டர் ஃபைல் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு நைட் கிளம்பி சனிக்கிழமை காலையிலே உங்களை பார்க்கட்டுமா?''

எ.மு.பெ.கு: ''எங்கே வந்து பார்க்கறீங்க?''

இடைத்தரகர்: ''கோயமுத்தூர்ல?''

எ.மு.பெ.கு: ''ரைட்டு! அவங்க (டெண்டர் எடுக்க விரும்பும்) கம்பெனியோட ஜி.எம்-மையும் ஒருதடவை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணுவாரு...''

இடைத்தரகர்: ''அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணு வாரு... இன்பிட்வீன் உங்களுக்கு என்ன சேரவேண்டியதோ அதை பேசிட்டு ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி த்ரீ டேஸ்ல குடுக்கச் சொல்லிடறேன். ஏன்னா... நாள் நெருங்கிதான் இருக்கு!''

எ.மு.பெ.கு: ''ஆகஸ்ட் ஏழுன்னா ஃபுல் டீடெயில் ஸையும் கொண்டாந்துடுங்க.. அவரு(?) சி.எம்.டி-யை (பி.எஸ்.என்.எல். அதிகாரி?) வச்சுப் பேசுவாரு. சனி, ஞாயிறு மெட்_ராஸ்ல இருப்பாருனு நினைக்கிறேன்... இல்லேன்னா ஊட்டி வந்திடுவாரு. அப்படி ஊட்டி வந்தார்னா, நீங்க கோயமுத்தூர் வரும்போது ஊட்டிக்குப் போய் பார்த்துடலாம்.''

இடைத்தரகர்: ''ஓ.கே... ஓ.கே. உங்களை முதல்ல பார்த்துட்டோம்னா அவங்களுக்கு சேட்டிஸ்ஃபை ஆயிடும்!''

எ.மு.பெ.கு: ''ரைட்டு!'

இடைத்தரகர்: ''ஏன்னா... மேடம்னாலேதான் எல்லாம் முடியும்னு நான் சொல்லி வச்சிருக்கேன்!....''

p6.jpg


இவ்வாறாக நீளும் அந்த தொலைபேசி உரையாடலின் பதிவை முதலில் பத்திரப்படுத்திக் கொண்டோம். ''மீடி யேட்டரே இதுல கிடையாது... டைரக்டா அவரே(?)தான் பேசுவாருங்க'' என்பது போன்ற டெல்லி தொடர்புகள் தவிர, வேறு பல விஷயங்களும் அந்த உரையாடலில் பேசப்படுகின்றன. இப்போதைக்கு அவை இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாததால் வாசகர்களின் பார்வைக்கு அளிக்கவில்லை!

ஜூலை 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு கோவையில் பீளமேடு அண்ணாநகர் வீட்டில் காயத்ரி ஸ்ரீனிவாஸ் எதிரில் இடைத்தரகராக ஒரு நபரும் ஜூ.வி. நபரும் ஆஜராகிவிட்டார்கள். நேராக அந்த வீட்டுக்குப் போய்விட முடியவில்லை. பக்கத்துத் தெருவிலேயே நம்மை நிற்கும்படி செல்போனில் உத்தர விட்டார்கள்!

நாமும் அங்கே இனோவா காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க... 'ராஜேஷ்' என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு நபர் அங்கே வந்து காரில் ஏறிக்கொண்டு காயத்ரி ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வழி காட்டினார் (நமது வீடியோ கேமரா பதிவு முழுவதும் இவரும் வருகிறார். விவரமறிந்த தி.மு.க. வட்டாரத்தில் இவர் உருவத்தைக் காட்டி விசாரித்தபோது, ''ராஜேஷ்னா சொன்னாரு? இவர் பேரு சந்திரமோகனாச்சே... அருப்புக்கோட்டை பக்கத்துல பாளையம்பட்டிதான் இவரோட சொந்த ஊரு. அருப்புக்கோட்டையில் கேபிள் ஆபரேட்டரா கஷ்டப்பட்டு ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார் சந்திரமோகன்... செஞ்சியார் மத்திய அமைச்சரா இருக்கும்போது சி.பி.ஐ. வழக்கில் அவரோட உதவியாளர் பாபு மாட்டுனாரே ஞாபகம் இருக்கா..? பாபுவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா சந்திரமோகன் ஆயிட்டாருன்னு பிறகு சொன்னாங்க. இப்ப கோவை ஏரியாவில் காரு, பங்களானு ஜம்முனு இருக்கிற சந்திரமோகன், தன்னை காயத்ரி ஸ்ரீனிவாஸோட உதவி யாளர்னு சொல்லிக்கிறாரு'' என்று நமக்கு வேறுவிதமான விளக்கம் 'ராஜேஷ்' பற்றி கிடைத்தது!).

நிற்க....

'ராஜேஷ்' என்கிற சந்திரமோகன் இனோவா காரில் ஏறிக்கொண்டதோடு இடைத்தரகரிடமும் ஜூ.வி. நபரிடமும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு திருப்தி ஆனவுடன்தான், காயத்ரி ஸ்ரீனிவாஸின் பங்களா வுக்கு அழைத்துச் சென்றார். மேற்கொண்டு நடந்ததை ஜூ.வி. நபர் இங்கே விவரிக்கத் துவங்குகிறார் -

வீட்டுக்குள் போன 'ராஜேஷ்', அங்கிருந்த வேலைக் காரரிடம், ''பீமா எக்கட?'' (பீமா எங்கே) என்றார். கொஞ்ச நேரத்தில் கொழுகொழுவென்று ஒரு கறுப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி ஓடி வந்தது.

''அது எதுவும் செய்யாதுங்க. எங்க மேடமுக்கு எல்லாமே இந்த பீமாதான்'' என்றபடி எங்களை சோபாவில் அமரச் செய்த 'ராஜேஷ்' கலை நயம்மிக்க ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டு ஹாலின் ஷோகேஸில் ஸ்டாலின், ஆற்காட்டார், அன்பழகன் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் காயத்திரி ஸ்ரீனிவாஸ் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் அழகாக, வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தன் மகனோடு தானும் சேர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனியாக தொங்க விட்டிருந்தார் காயத்ரி.

பீமா, ஹாலைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து பெட் ரூமுக்குள் போனபிறகு காயத்ரி பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு பிரசன்னமாகி, எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டார்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ்: ''என்ன மேட்டர்? செப்பண்டி!''

இடைத்தரகர் : ''ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் டெண்டர்தான், மேடம்... தமிழ்நாட்டுல இருநூறு கிலோ மீட்டருக்கு கேபிள் பதிக்க (என்னைக் காட்டி) இவங்க கம்பெனி பிளான் பண்ணுது!''

காயத்ரி: ''என்ன பர்ப்பஸ்?''

காரில் அந்த வீட்டை அடையும்போதே 'ராஜேஷ்' வசம் இடைத்தரகர் முழு விவரம் சொல்லி, டெண்டர் காப்பியும் கொடுத்திருந்ததால்... அவரே காயத்ரியிடம் எல்லாம் விளக்குகிறார், தெலுங்கில்!

இடைத்தரகரைப் பார்த்து காயத்ரி: ''ராஜா(?) சேஸ்தாரு... ராஜாதான் செய்வாரு!''

இடைத்தரகர்: ''மேடம் பத்தி சொன்னாங்க. கேள்விப்பட்டுதான் உங்களைப் பிடிச்சு இந்த வேலையைச் செய்யலாமுன்னு....''

காயத்ரி: ''பை எலெக்ஷன் வருது... எப்படியும் (கட்சியில் எனக்கு) புரோக்ராம் கொடுத்துடுவாங்க. தொகுதிக்குப் போகணும். அதில்லாம பீமாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். டெல்லிக்கு, சென்னைக்குப் போனாலும்கூட பீமாவையும் கூட் டிட்டுப் போயிடுவேன். போன வாரம் மினிஸ்டர்(?) இங்கதான் தங்கியிருந்தாரு!''

இடைத்தரகர்: ''இந்த வீட்டுலயா?''

காயத்ரி: ''குன்னூருக்குப் போனவர், போன வேகத்துலயே இறங்கிட்டாரு. அவருக்கு குளிர் ஒத்துக் காது. கோயம்புத்தூர் வந்து ரெஸிடன்ஸியில அவரு தங்கிட்டாரு. அமைச்சரை ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அவங்க ஒய்ஃப் எங்க வீட்டுல தங்குனாங்க. உங்க மேட்டரை அமைச்சர்கிட்ட சொல்லிடறேன். உங்களை இந்த வேலைக்காக யார் முன்னால உட்கார வைக்கிறேங்கறதுதான் இங்க முக்கியம்! இதைப் போலத்தான் பி.எஸ்.என்.எல். கான்ட்ராக்ட் ஒண்ணை முடிச்சுக் கொடுத்தேன். இதோ இவரோட ('ராஜேஷ்' பக்கம் கைகாட்டி) ஃபிரெண்டுக்குதான் முடிச்சுக் கொடுத்தோம். அது பி.எஸ்.என்.எல். விளம்பர கான்ட்ராக்ட்...''

இடைத்தரகர்: (ஏற்கெனவே விவரம் தெரிந்தவராக) ''செஞ்சியார் பி.ஏ-வா இருந்த பாபுவுக்கா?''

காயத்ரி: ''ஆமா...!''

இடைத்தரகர்: ''ராஜாவுக்கு வேணுங்கறதை நாங்களே தரணுமா?''

காயத்ரி: ''அவர் வாங்க மாட்டார். என்ன பண்ணணுங்கறதை அவரே சொல்லுவார்!''

ராஜேஷ்: ''அதையெல்லாம் ஸ்பிளிட் பண்ணி பிரிச்சுடுவாங்க...''
p7.jpg
காயத்ரி: ''நீங்க உங்க மேட்டரை மினிஸ்டரை வெச் சிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணணும். சி.எம்.டி-யெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. என்ன பண்ணணுமோ அதை அவர் பார்த்துக்குவாரு. (டெல்லி?) சஞ்சார் நிகம் ரிசப்ஷன்ல உங்களை உட்கார வெச்சு, மேலே அனுப்பிடுவேன். என் பேர்கூட (விசிட்டர் புக்கில்?) வராது. மினிஸ்டரே கூப்பிட்டாதான் உங்களால அந்த கட்டடத்துக்குள்ள போகமுடியும். அவரோட பி.ஏ. செந்திலியாவும் அங்கே இருப்பார். உங்களுக்கு மினிஸ்டர் பர்ஸனல் சிட்டிங் கொடுப்பார். அதுக்கெல்லாம் நான் கியாரண்டி! ஆனா ஒண்ணு.. நாங்க ஃபிளைட் சார்ஜ் போட்டு டெல்லிக்கு வர மாட்டோம். என்கூட ஒருத்தர் வருவாரு. பெரிய புராஜெக்ட்னாத்தான் மினிஸ்டர் வருவாரு...''

ராஜேஷ்: ''இந்த மாதிரி விஷயமெல்லாம் ஒரே சேனல்லதான் நீங்க மூவ் செய்யணும்!''

காயத்ரி: ''நான் ரொம்பவும் வெளியில வரமாட்டேன். தமிழ்நாட்டுல இ.பி. விவகாரங்களையெல்லாம் இவருதான் (ராஜேஷ்) பார்த்துக்குவாரு. மேட்டூர் தெர்மல் பிளான்ட்ல ஆஷ் எடுக்கறதுக்கெல்லாம் இவர்தான் போவாரு. ஸ்டேட்ல இ.பி., ஹெல்த், டிரான்ஸ்போர்ட், ஹைவேஸ் எதுனாலும் நம்ம வேலையை முடிச்சுக்கிடலாம்.''

ராஜேஷ்: ''ஆமா... நாலும் நைன்ட்டி நைன் பர்சன்ட் முடிச்சிடலாம்!'''

காயத்ரி: சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்?) நம்ம பையன் தான். என் சொந்த முயற்சியிலதான் மினிஸ்டர் ஆனான். இ.பி-யிலும் பெரிய லெவல்னா சொல்லுங்க. நீட்டா முடிச்சுடலாம். எங்க இருந்தாலும் என்னோட பாலிஸி என்ன தெரியுமா? சம்பந்தப்பட்ட அமைச்சரோடவே டைரக்ட் சிட்டிங் ஏற்பாடு செஞ்சிடுவேன். சக்சஸ்தான் எனக்கு முக்கியம்!''

இடைத்தரகர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிப்பது பற்றி சொல்லச் சொல்ல... காயத்ரி சிறு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 244 கிலோமீட்டருக்கு வை-மேக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதிப்பதற்கான கான்ட் ராக்ட் என்றும், இந்த மாநிலத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கான விவகாரம் என்றும் ராஜேஷ§டன் உரை யாடல் நடக்கிறது. 3-ஜி மற்றும் வை-மேக்ஸ் பற்றி விளக்கமாகவே கேட்டுக் கொள்கிறார் காயத்ரி.

''தமிழ்நாட்டுல மட்டும்தான் கான்ட்ராக்ட் எடுப் பீங்களா? ஆந்திரா, கர்நாடகாவுலகூட எடுக்கலாமே..?'' என்றும் என்னிடம் (ஜூ.வி. நபர்) கேட்டபடியே கையடக்க நோட்டில் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

என்னை (ஜூ.வி. நபர்) கான்ட்ராக்ட் பெற விரும்பும் கம்பெனியின் ஜி.எம். என்று அறிமுகப்படுத்தியிருந்ததால் இடையிடையே சில விவரங்களை 'ராஜேஷ்' கேட்டு செக் பண்ணிக்கொண்டே இருந்தார். உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, 'ராஜேஷ்' வைத்திருந்த செல்போனை வாங்கி யாருக்கோ டயல் செய்தார் காயத்ரி. படுஅந்நியோந்நியமாக அவர் பேசியதன் விவரம் இதுதான் -

p43.jpg


''நான்தான் காயத்ரி ஸ்ரீனிவாஸ்! நேத்து நைட் வந்துட் டீங்களா? (இடைவெளி) ஊட்டிக்கு வர்றீங்களா? (இடை வெளி) எப்ப டெல்லிக்குப் போறீங்க? (இடைவெளி) அப்படியா, சரி நான் நேர்ல வந்து உங்களைப் பார்க் கறேன்!''

போனை கட் செய்தவர் எங்கள் பக்கம் திரும்பி, ''இந்த வீக் அவர் ஊட்டிக்கு வரலையாம். திங்கள்கிழமை டெல்லிக்குக் கிளம்புறாராம். அவர் ஊட்டிக்கு வந்தார்னா இப்பவே உங்களை இவருகூட ('ராஜேஷ்' என்கிற சந்திரமோகன்) அனுப்பி வச்சிருப்பேன்!''

இடைத்தரகர்: ''நீங்க எப்ப அரசியலுக்கு வந்தீங்க, மேடம்?''

காயத்ரி: சிரித்துக் கொண்டே.. ''ஆச்சு, இருபது வருசமாச்சு..! நான் அரசியலுக்கு வந்ததே பிஸினசுக்காகத்தான்... வேற எதுக்கும் இல்ல!''

மீண்டும், பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் கேபிள் பற்றி விலாவாரியாகப் பேசினார். திரும்பவும் சந்திரமோகன் டெண்டர் குறித்த விஷயங்களை காயத்ரிக்கு தெலுங்கிலும் தமிழிலுமாக விளக்கினார்.

''மொத்த கான்ட்ராக்டையும் உங்க ஒருத்தருக்கே தரமாட்டாங்க புரிஞ்சுதா?'' என்றும், ''உங்க கான்ட்ராக்டுக்குள்ளே இன்னொருத்தர் யாராச்சும் ஒரு பார்ட் எடுத்து செய்யறதா இருந்தா, அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும், புரிஞ்சுதா?'' என்றும் காயத்ரி எங்களிடம் கேட்டு உறுதி வாங்கிக்கொண்டார்.

இடையிடையே தி.மு.க-வின் பெருந்தலைகள், குடும்பங்கள் பற்றி சில 'புள்ளி'விவரங்கள் வந்து விழுந்தன. அவையெல்லாம் இந்த விவகாரத் தோடு தொடர்பில்லாதவை என்பதாலும், தேவையில்லாமல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதாலும் இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறோம்.

ராஜேஷ்: ''கேபிள் பதிக்கிற கான்ட்ராக்ட் மட்டும்தான் நீங்க எடுக்கப் போறீங்களா..? இல்லாட்டி அதுக்கான கேபிளும் சப்ளை பண்ண விரும்பறீங்களா?''

இடைத்தரகர்: ''கேபிள் பதிக்கறதுக்கு மட்டும்தான் நாங்க டெண்டர் கேட்கலாமுன்னு இருக்கோம். மொத்த புராஜெக்ட் காஸ்ட் எப்படியும் இருநூறு கோடிக்கு மேல வரும்னு சொன்னாங்க...''

காயத்ரி: ''கோடின்னா அந்த வீடு(?) கண்டிப்பா உள்ளே வந்துடும், புரியுதுங்களா, அதான்... சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளே வரும். (அடுத்தடுத்து ஆளுங்கட்சியில் சில பெரிய பெயர்களாகச் சொல்லி) .......... பிரஷ்ஷர் வரும். இப்படித்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு சம்பந்தமா பி.எஸ்.என்.எல் விளம்பர கான்ட்ராக்டை பாபு கேட்டப்ப, அமைச்சர் தரலை. 'நீ பாகிஸ்தான் மேட்ச் வரும்போது விளம்பரம் கேளு, தர்றேன்'னாரு. சொன்னபடியே தந்தாரு. ஏன்னா எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி அவர் போயாகணும். அவர் உட்கார்ந்திருக்கற இடம் அந்த மாதிரி. தனக்கு சிம்மாசனம் கொடுத்த(?) இடத்துக்கு ஏதாவது கொடுத்தாகணும்ங்கறது அவரோட பாலிஸி. சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ஒரு இணை அமைச்சரை தனியா போட்டு இதையெல்லாம் வாட்ச் செய்வாங்க. அதிகாரிங்க ஒரு லாபி பண்ணுவாங்க. நம்ம அமைச்சர் அவங்களை மறுத்துப் பேச மாட்டார். ஏன்னு உங்களுக்குப் புரியுதா? நாமளா இருந்தா... 'நான்தான் மந்திரி! மூடிட்டு கையெழுத்துப் போடு'னு (அதிகாரிகளிடம்) சொல்லுவோம். அவர் அப்படியெல்லாம் இல்லை!''

இடைத்தரகர்: ''இவ்வளவு யதார்த்தமா பேசறீங்க... இவ்ளோ தூரம் இன்ட்ரடியூஸ் பண்றீங்க. உங்களுக்கு ஒரு ட்வென்ட்டி லேக்ஸ் (இருபது லட்சம்) வரைக்கும் கொடுக்கலாம்னு இவங்ககிட்டே (என்னைக் காட்டி) சொன்னேன், மேடம்!''

காயத்ரி: ''பணத்தை முதல்ல வாங்க மாட்டோம். முதல்ல டெல்லிக்குப் போவோம். நானும் உங்களைப் புரிஞ்சுக்கணும் இல்லையா... நீங்க டெல்லிக்கு வாங்க. அங்கே ரிசப்ஷன் எப்படி இருக்குனு பாருங்க. அப்புறமா பார்த்துக்கலாம். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. இந்த புராஜெக்டை சக்ஸஸ் பண்ணிக் காட்டுறேன். அப்புறம் நீங்களே பார்த்துக் கொடுங்க! அந்தக் குடும்பமே(?) தலையிட்டாலும் பரவாயில்லை. ஆற்காட்டாரை வெச்சு முடிச்சுத் தரேன்!''

ராஜேஷ்: ''இங்கதான் பெரிய குடும்பம்... பிரஷ்ஷர்னு இருக்கும். வேற ஸ்டேட்லயெல்லாம் இப்படியெல்லாம் இல்ல!''

காயத்ரி: ''மேட்டர்னு பெத்தாயின முந்தட்டுல பெட்டுத்தோம். (விஷ யத்தை பெரியவர் முன்னாடி வெப்போம்) சக்சஸ் சேஸ்தாம். நீங்க மினிஸ்டரைப் பார்க்கும்போது நல்லா விளக்கமா புரியுறமாதிரி பேசிடணும். இல்லைன்னா அவர் தன்னோட பி.ஏ-வைப் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாரு. எப்ப டெண்டர் முடியுது? டெண்டர் போட்டுத்தான் இதைப் பண்ணணுமா? மினிஸ்டரே பண்ணிடக் கூடாதா?''
p42.jpg
உடனே, இடைத்தரகர் முதலி லிருந்து அந்த டெண்டர் பற்றி விவரிக்கும் காட்சிகளும், அதை காயத்ரி குறிப்பெடுத்துக் கொள்வதும் நாங்கள் கொண்டு போன ரகசிய வீடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

காயத்ரி: ''மினிஸ்டர் தொகுதிக்கு வந்தா இதைப் பத்திப் பேச முடியாது. இந்தப் பொம்பளை இங்க ஏன் வந்தாங்கன்னு தொகுதியில பார்ப்பாங்க. அவரும் நம்மளை பார்க்க மாட்டாரு. நாம் டெல்லிக்கு போய்த்தான் இந்த மேட்டரை முடிக்கணும். புதன்கிழமை டெல்லிக்குப் போயிடணும். வியாழக்கிழமை காலையில மினிஸ்டர் வீட்டுக்குப் போய் நேர்ல உங்க விஷயத்தைப் பத்திப் பேசிடுவேன். அப்புறம் நிகம் (தொலைத் தொடர்பு டெல்லி அலுவலகம்) வந்து பார்த்திடுவாரு...''

இடைத்தரகர்: (என்னைக் காட்டி) ''நான்தான் இந்த கம்பெனிக்காரங்களை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கேன். ரொம்ப நாளா உங்க அப்பாயின்ட் மென்ட் கிடைக்காம கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்க வெச்சிட்டேன். எனக்கு இதுல என்ன பங்குங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க, மேடம்...''

காயத்ரி சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார்.

ராஜேஷ்: ''அம்மா யாரையும் விட்டுர மாட்டாங்க. நீங்க கேக்கவே வேண்டியதில்லை. அவங்களை

நம்புங்க...''

மீட்டிங் முடியும் தருணத்தில் திரும்பவும் அறைக்குள் இருந்து பீமா வருகிறது. நாம் கொண்டு போயிருந்த ஸ்வீட் பாக்ஸை வாயால் கவ்வி காயத்ரியிடம் கொடுக்கிறது.

காயத்ரி: ''எதுன்னாலும் இது என்கிட்டதான் கொடுக்கும். எனக்குப் பிடிச்சதை கொடுக்கும். என் மனசு இதுக்குப் புரியும்!'' என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே இடைத்தரகர் தயார் செய்து எடுத்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல். தொடர்பான டெண்டர் கோப்புகளை பீமா சட்டென்று கவ்விக்கொண்டு ஓடவும்....

காயத்ரி: ''பார்த்தீங்களா... பீமா கவ்வியாச்சு. இந்த வேலையை பீமா செய்யச் சொல்லுது!'' என்றபடியே வாசல் வரை வந்து எங்கள் இருவருக்கும் விடை கொடுத் தார்.

அடுத்தநாள், ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 'இடைத்தரகராக' நடித்தவருக்கு போன் செய்தார் 'பிரகாஷ்' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர். அழைப்பு வந்த செல் நம்பர் 9842299722.

''மினிஸ்டர்கிட்டே பேசியாச்சு... நாங்க அந்த கம்பெனி ஜி.எம்-கிட்டே அர்ஜென்ட்டா பேசணும். முக்கியமா மேடம்தான் பேசணும்னு சொன்னாங்க. அவரைப் பேசச் சொல்லுங்க'' என்கிற ரீதியில் அடுத்தடுத்து போன் வந்துகொண்டே இருந்தது.

'ராஜா' என்றும் 'மினிஸ்டர்' என்றும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் கூறுவது மத்திய அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவருமான ஆ.ராசாவை குறிப்பிட்டுத்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சரின் பெயரால் நடக்கும் இந்த பேரத்தின் மூலம் நிஜமாகவே கான்ட்ராக்ட்டுகளை முடிக்க முடியுமா... அப்படி இதற்குமுன் முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டு பிடிக்கும் பொறுப்பை மத்திய - மாநில அரசுகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த ஆபரேஷனுக்குப் பிறகு நமது இருவர் டீம் பதிவு செய்து கொண்ட விவரங்களையும், எந்த இடத்திலும் அளிக்கத் தயாராகஇருக்கிறோம்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்கிற இந்தப் பெண்மணி ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்! அவரிடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரே விசாரணை நடத்தினால் எதிர்க்கட்சிகளாலும் மற்றவர்களாலும் அது ஒருதலைபட்சமாக பார்க்கப்படும் என்று முதல்வர் கருதினால்... பேசாமல் இதை சி.பி.ஐ. விசாரணைக்கேகூட விட்டுவிடலாம்.
p44.jpg
இதுவரை காயத்ரி பேசிய தொலைபேசி எண்கள்... இதுவரை அவர்மூலம் முடிக்கப்பட்ட(?) கான்ட்ராக்ட் தொடர்பான தகவல்கள்.... அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்.... இப்படி எல்லா விவரங்களையும் சி.பி.ஐ. மூலமாக வெளி உலகத்துக்குக் கொண்டு வந்து 'அக்னிப் பிரவேசம்' செய்ய தி.மு.க. அரசு தயங்காது என்றே நம்புவோம்!

ஜூனியர் விகடன்




ஆ.ராசா பேரால் பகீர் பேரம்! - ஜூனியர் விகடனின் ரகசிய கேமரா பதிவுகள்' ரிப்போர்ட் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் படிக்க இயலாத வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட பலரது வேண்டுகோளுக்கு இணங்க,

இந்த அதிரடி ரிப்போர்ட்டின் ஆங்கில வடிவம் இதோ...



To read this article in English


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் சில தொங்கு சதைகள்…?

APRIL 14, 2010
by அ.நம்பி

`மீண்டும் பழைய குப்பையா?’ என்னும் தலைப்பில் `விடுதலை’ நாளேடு ஒரு தலையங்கம் (திங்கள் – 12.04.2010) வெளியிட்டிருந்தது.

அந்தத் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:

……தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

pts05இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும் சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை (Supplements) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத் தக்கதுமாகும்……

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால்எந்தக் குப்பையையும் கொட்டி பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல் இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும் – இது ஓர் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.அதற்கு எதிராக மக்களை மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது தவறல்ல! 

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக் குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

இந்தத் தலையங்கம் வெளிவந்த அன்றே (12.04.2010) `தமிழ் முரசு’ மாலை நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது.

pts02

மறுநாள் (செவ்வாய் – 13.04.2010) `தமிழ் முரசு’ நாளிதழில் ஆறாம் பக்கத்தில் (முழுப்பக்கம்) `ஆண்டு பலன்கள்’ இடம்பெற்றிருந்தன.

pts07 pts01

`தமிழ் முரசு’ நாளிதழ் சன் குழுமத்தின் வெளியீடு; சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன்; நிருவாக இயக்குநரும் அவரே.

pts04 pts06

`உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு’ (அடேயப்பா!) என்று சொல்லிக்கொள்ளும் `விடுதலை’ நிருவாகத்தினருக்குச் சில கேள்விகள்:

1. கலாநிதி மாறன் பார்ப்பனரா, `பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் தொங்கு சதையா?’

2. சன் குழுமத்தினர் பார்ப்பனர்களா, `பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் தொங்கு சதைகளா?

3. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில்’ நடந்துகொள்வதன்வழி `சட்ட விரோதமாகச்’ செயல்படுகிறார்களா?

4. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடைபோடும் அற்பத்தனத்தில்’ஈடுபடுகிறார்களா?

5. `தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை வெளியிடுவது அசல் வெட்கக்கேடானது’ என்று கலாநிதி மாறனுக்கும் சன் குழுமத்தினருக்கும் `விடுதலை’ நிருவாகத்தினர் எடுத்துச் சொல்வார்களா?

6. தமிழ் முரசின் இந்த `வெட்கக்கேடான போக்கை’ `விடுதலை’ நிருவாகத்தினர் கண்டிப்பார்களா?

7. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `குப்பையைக் கொட்டிப் பத்திரிகையாக்கிப் பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி’செய்கிறார்கள் என்று அவர்களுக்கு `விடுதலை’ நிருவாகத்தினர் அறிவுறுத்துவார்களா?

8. `மக்களை மூடக் குழியில் தள்ளும்’ தமிழ்முரசு நாளிதழை வெளியிடும் கலாநிதி மாறன்மீதும் சன் குழுமத்தினர்மீதும் `விடுதலை’ நிருவாகத்தினர்`சட்டப்படியான நடவடிக்கை’ எடுப்பார்களா?

9. `மக்களைக் குழப்பும் சக்திகளான’ கலாநிதி மாறனையும் சன் குழுமத்தினரையும் `தமிழ் உணர்வாளர்களும் பகுத்தறிவாளர்களும்’அம்பலப்படுத்துவார்களா?

10. பத்தாவது கேள்வி அ. நம்பிக்கு: `விடுதலைப் பருப்பு எங்கே வேகும், எங்கே வேகாது’ என்று `விடுதலை’ நிருவாகத்தினருக்குத் தெரியும்; அதனை அறியாமல் இவ்வாறு அப்பாவித்தனமாகக் கேள்விகள் கேட்கலாமா? நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர், அ. நம்பி?




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சட்டமன்றம் என்பது ஊரை ஏமாற்றும் இடமா?

APRIL 25, 2010
by அ.நம்பி

klr12 klr11

`செம்மொழி மாநாட்டுக்காகக் கோவில்களில் அர்ச்சனை நடைபெறுகிறது’ என்று சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் சொல்கிறார்.

`அரசு சார்பில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை; தனியார் சிலர் அர்ச்சனை செய்கின்றனர்’ என மறுமொழி கூறுகிறார் அமைச்சர்.

klr08 klr07

klr04

ஆனால் நாளிதழ்களில் `வேறு விதமாகச்’ செய்திகள் வெளிவந்துள்ளன.

klr10

klr01

klr03

`இந்து சமய அறநிலையத்துறை’ என்பது தனியார் நிறுவனமா?

klr09

கே. ஆர். பெரியகருப்பன் என்பவர் தனியார் நிறுவனத்தின் நிருவாக இயக்குநரா?

யாரை ஏமாற்றுவதற்காகச் சட்டமன்றத்தில் உண்மையை மறைத்துப் பேசுகிறார் அமைச்சர்?

சட்டமன்றம் என்பது ஊரை ஏமாற்றும் இடமா?




__________________
Page 1  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard